<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Canada Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/canada/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/canada/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Wed, 25 Mar 2026 06:35:55 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>Canada Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/canada/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>லெபனானை ஆக்கிரமிக்கும் இஸ்ரேலின் திட்டத்திற்கு சர்வதேச எதிர்ப்பு &#8211; கனடா, பிரான்ஸ் கண்டனம்</title>
		<link>https://oruvan.com/canada-france-warn-israel-against-occupying-southern-lebanon/</link>
		
		<dc:creator><![CDATA[Diluksha]]></dc:creator>
		<pubDate>Wed, 25 Mar 2026 06:35:55 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[against]]></category>
		<category><![CDATA[Canada]]></category>
		<category><![CDATA[France]]></category>
		<category><![CDATA[Israel]]></category>
		<category><![CDATA[Lebanon]]></category>
		<category><![CDATA[occupying]]></category>
		<category><![CDATA[Southern]]></category>
		<category><![CDATA[warn]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=47376</guid>

					<description><![CDATA[<p>தெற்கு லெபனானை ஆக்கிரமிக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், கனடா அதற்கு வலுவான கண்டனம் தெரிவித்துள்ளது. லெபனானின் இறையாண்மையும் பிராந்திய ஒருமைப்பாடும் மதிக்கப்பட வேண்டும் என்றும் கனடா எச்சரித்துள்ளது. இந்த மாதம் தொடங்கியதிலிருந்து லெபனானில் இஸ்ரேலிய தாக்குதல்களில் சுமார் 1,072 பேர் உயிரிழந்ததுடன், சுமார் 3,000 பேர் காயமடைந்துள்ளனர். மேலும், ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இஸ்ரேல், தனது வட எல்லைக்கு அருகிலுள்ள தெற்கு லெபனானின் சுமார் 30 கி.மீ பரப்பளவை [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/canada-france-warn-israel-against-occupying-southern-lebanon/">லெபனானை ஆக்கிரமிக்கும் இஸ்ரேலின் திட்டத்திற்கு சர்வதேச எதிர்ப்பு &#8211; கனடா, பிரான்ஸ் கண்டனம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தெற்கு லெபனானை ஆக்கிரமிக்க இஸ்ரேல் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், கனடா அதற்கு வலுவான கண்டனம் தெரிவித்துள்ளது.</p>
<p>லெபனானின் இறையாண்மையும் பிராந்திய ஒருமைப்பாடும் மதிக்கப்பட வேண்டும் என்றும் கனடா எச்சரித்துள்ளது.</p>
<p>இந்த மாதம் தொடங்கியதிலிருந்து லெபனானில் இஸ்ரேலிய தாக்குதல்களில் சுமார் 1,072 பேர் உயிரிழந்ததுடன், சுமார் 3,000 பேர் காயமடைந்துள்ளனர். மேலும், ஒரு மில்லியனுக்கும் மேற்பட்ட மக்கள் இடம்பெயர்ந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.</p>
<p>இஸ்ரேல், தனது வட எல்லைக்கு அருகிலுள்ள தெற்கு லெபனானின் சுமார் 30 கி.மீ பரப்பளவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரத் திட்டமிட்டுள்ளது. இதன் காரணமாக மனிதாபிமான நெருக்கடி மோசமடையும் அபாயம் இருப்பதாக எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டுள்ளன.</p>
<p>இந்த நிலையில், கனடா அனைத்து தரப்பினரும் சர்வதேச சட்டங்களைப் பின்பற்றி, பொதுமக்கள் மற்றும் மருத்துவ அமைப்புகளை பாதுகாக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது.</p>
<p>இதேவேளை, பிரான்ஸும் இஸ்ரேல் தனது தரைவழி படையெடுப்பு திட்டத்தை கைவிட வேண்டும் என கோரியுள்ளது.</p>
<p>இஸ்ரேலின் பாதுகாப்பு அமைச்சர், லிட்டானி நதி வரை பாதுகாப்பு மண்டலம் அமைக்கப்படுமென தெரிவித்துள்ளார். அப்பகுதியிலிருந்து இடம்பெயர்ந்த லெபனான் மக்கள் உடனடியாக திரும்ப அனுமதிக்கப்படமாட்டார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.</p>
<p>இதனிடையே, தெற்கு லெபனானில் பாலங்கள் மற்றும் குடியிருப்புகள் மீது தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. தரைவழி படையெடுப்பிற்கான முன்னோட்டமாக இந்த தாக்குதல் மேற்கொள்ளப்படலாம் என லெபனான் தெரிவித்துள்ளது.</p>
<p>இதேவேளை, லெபனானிலிருந்து இஸ்ரேலுக்கு எதிராகவும் தாக்குதல்கள் நடைபெற்று வருகின்றன. அண்மையில் நடந்த தாக்குதலில் இஸ்ரேலில் ஒரு பெண் உயிரிழந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p>
<p>இந்த மோதல் மேலும் தீவிரமடையும் அபாயம் நிலவுவதால், சர்வதேச அளவில் கவலை அதிகரித்து வருகிறது.</p>
<p>The post <a href="https://oruvan.com/canada-france-warn-israel-against-occupying-southern-lebanon/">லெபனானை ஆக்கிரமிக்கும் இஸ்ரேலின் திட்டத்திற்கு சர்வதேச எதிர்ப்பு &#8211; கனடா, பிரான்ஸ் கண்டனம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பெண்களை பொது இடத்தில் அச்சுறுத்திய இலங்கை பிரபலம் கனடாவில் கைது</title>
		<link>https://oruvan.com/sri-lankan-influencer-mohamed-askar-mohamed-razik-arrested-in-canada/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 09 Feb 2026 03:55:52 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#police]]></category>
		<category><![CDATA[Canada]]></category>
		<category><![CDATA[Mohamed Askar Mohamed-Razik]]></category>
		<category><![CDATA[Toronto]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=44734</guid>

					<description><![CDATA[<p>பெண்கள் மற்றும் பொது மக்களை பொது இடங்களில் அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்ட இலங்கையில் செல்வக்கு மிக்க நபர் ஒருவர் கனடாவின் டொராண்டோ நகரில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார். 45 வயதான முகமது அஸ்கர் முகமது-ராசிக் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். குற்றம் சாட்டப்பட்டவர் கனடா முழுவதும் பலமுறை மக்களை சங்கடப்படுத்தும் வகையில் பொது இடங்களில் அணுகி காணொளியாக பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சந்தேகநபர் கடந்த டிசம்பர் 10ஆம் திகதி கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார். தனிநபர்களை சங்கடப்படுத்தும் விதத்தில் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/sri-lankan-influencer-mohamed-askar-mohamed-razik-arrested-in-canada/">பெண்களை பொது இடத்தில் அச்சுறுத்திய இலங்கை பிரபலம் கனடாவில் கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பெண்கள் மற்றும் பொது மக்களை பொது இடங்களில் அச்சுறுத்தும் வகையில் நடந்துகொண்ட இலங்கையில் செல்வக்கு மிக்க நபர் ஒருவர் கனடாவின் டொராண்டோ நகரில் வைத்து கைதுசெய்யப்பட்டுள்ளார்.</p>
<p>45 வயதான முகமது அஸ்கர் முகமது-ராசிக் என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.</p>
<p>குற்றம் சாட்டப்பட்டவர் கனடா முழுவதும் பலமுறை மக்களை சங்கடப்படுத்தும் வகையில் பொது இடங்களில் அணுகி காணொளியாக பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>சந்தேகநபர் கடந்த டிசம்பர் 10ஆம் திகதி கைது செய்யப்பட்டு காவலில் வைக்கப்பட்டுள்ளார்.</p>
<p>தனிநபர்களை சங்கடப்படுத்தும் விதத்தில் காணொளிகளை பதிவு செய்வதில் பெயர் அவர் பெற்றவர் என்றும், விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ள நிலையில், மேலும் பல பாதிக்கப்பட்டவர்கள் இருக்கலாம் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p>
<p>கடந்த ஆண்டில் பல்வேறு சந்தரப்பங்களில் சந்தேகநபர் இவ்வாறான குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக விசாரணை அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.</p>
<p>இந்த சம்பவங்களைத் தொடர்ந்து, பொலிஸார் முகமது-ராசிக்கை சந்தேக நபராக அடையாளம் கண்டு கைது செய்தனர். அவர் மீது நான்கு குற்றவியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு புதன்கிழமை நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டார்.</p>
<p>மேலும் பல பாதிக்கப்பட்டவர்கள் இருக்கலாம் என்று விசாரணையாளர்கள் தெரிவித்துள்ளனர்.</p>
<p>அத்துடன், குற்றம் சாட்டப்பட்டவரின் படத்தையும் அதிகாரிகள் வெளியிட்டுள்ளனர்,</p>
<p>இந்நிலையில், பாதிக்கப்பட்டவர்கள் இருந்தால் தகவல் அளிக்கு முன்வருமாறு விசாரணையாளர்கள் வலியுறுத்துகின்றனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/sri-lankan-influencer-mohamed-askar-mohamed-razik-arrested-in-canada/">பெண்களை பொது இடத்தில் அச்சுறுத்திய இலங்கை பிரபலம் கனடாவில் கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>கனடாவில் இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண் பலி!</title>
		<link>https://oruvan.com/a-woman-from-jaffna-died-in-an-accident-in-canada/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Fri, 09 Jan 2026 04:47:43 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#accident]]></category>
		<category><![CDATA[Canada]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=42723</guid>

					<description><![CDATA[<p>கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாணத்தை சேர்ந்த 35 வயதான பெண் ஒருவர் வியாழக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. வியாழக்கிழமை காலை எட்டோபிகோக்கில் லொறி ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது. காலை ஒன்பது மணிக்குப் பின்னர் இஸ்லிங்டன் அவென்யூ மற்றும் டிக்சன் சாலை பகுதிக்கு அவசர உதவியாளர்கள் அழைக்கப்பட்டனர். இஸ்லிங்டனில் தெற்கே பயணித்த வாகனம், டிக்சனில் மேற்கு நோக்கிச் செல்ல [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/a-woman-from-jaffna-died-in-an-accident-in-canada/">கனடாவில் இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண் பலி!</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த குடும்ப பெண் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>யாழ்ப்பாணத்தை சேர்ந்த 35 வயதான பெண் ஒருவர் வியாழக்கிழமை காலை இடம்பெற்ற விபத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>வியாழக்கிழமை காலை எட்டோபிகோக்கில் லொறி ஒன்று மோதியதில் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.</p>
<p>காலை ஒன்பது மணிக்குப் பின்னர் இஸ்லிங்டன் அவென்யூ மற்றும் டிக்சன் சாலை பகுதிக்கு அவசர உதவியாளர்கள் அழைக்கப்பட்டனர்.</p>
<p>இஸ்லிங்டனில் தெற்கே பயணித்த வாகனம், டிக்சனில் மேற்கு நோக்கிச் செல்ல வலதுபுறம் திரும்பும்போது, ​​வீதியை கடக்க முயன்ற பெண் மீது லொறி மோதியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p>
<p>சம்பவ இடத்தில் குறித்த பெண்ணுக்கு சிகிச்சை அளிக்கப்பட்ட போதிலும் அவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>எவ்வாறாயினும், லொறியின் சாரதி சம்பவ இடத்திலேயே இருந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p>
<p>இந்நிலையில், விபத்து குறித்து மேலதிக தகவல் தெரிந்தவர்கள் தம்மை தொடர்புகொள்ளுமாறு அதிகாரிகள் பொது மக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/a-woman-from-jaffna-died-in-an-accident-in-canada/">கனடாவில் இடம்பெற்ற விபத்தில் யாழ்ப்பாணத்தை சேர்ந்த பெண் பலி!</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>விடுதலைப் புலிகளை கனடா அங்கீகரிக்கவில்லை &#8211; இலங்கை அரசிடம் தூதுவர் விளக்கம்</title>
		<link>https://oruvan.com/canada-does-not-recognize-the-liberation-tigers-of-tamil-eelam-ambassador-explains-to-the-sri-lankan-government/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Tue, 25 Nov 2025 11:31:04 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[#oruvan #news]]></category>
		<category><![CDATA[Canada]]></category>
		<category><![CDATA[Colombo]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<category><![CDATA[Sri Lanka News]]></category>
		<category><![CDATA[Vijitha Herath]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=39201</guid>

					<description><![CDATA[<p>தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சின்னத்தை அங்கீகரித்தல் உட்பட இலங்கையில் பிரிவினையை தூண்டக்கூடிய விதத்திலான நடவடிக்கைகளை கனடா தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இலங்கைக்கான புதிய கனடா தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள இஸபெல் கத்ரின் மார்டின் உடனான சந்திப்பின் போது வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். இந்த சந்திப்பு நேற்று இடம்பெற்றிருந்தது. இந்நிலையில், குறித்த சந்திப்பு தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள வெளிவிவகார அமைச்சர், “இலங்கையில் பிரிவினையைத் தூண்டக்கூடிய நடவடிக்கைகளைக் கனேடிய அரசாங்கம் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/canada-does-not-recognize-the-liberation-tigers-of-tamil-eelam-ambassador-explains-to-the-sri-lankan-government/">விடுதலைப் புலிகளை கனடா அங்கீகரிக்கவில்லை &#8211; இலங்கை அரசிடம் தூதுவர் விளக்கம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் சின்னத்தை அங்கீகரித்தல் உட்பட இலங்கையில் பிரிவினையை தூண்டக்கூடிய விதத்திலான நடவடிக்கைகளை கனடா தடுத்து நிறுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>இலங்கைக்கான புதிய கனடா தூதுவராக நியமிக்கப்பட்டுள்ள இஸபெல் கத்ரின் மார்டின் உடனான சந்திப்பின் போது வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் இந்த கோரிக்கையை விடுத்துள்ளார்.</p>
<p>இந்த சந்திப்பு நேற்று இடம்பெற்றிருந்தது. இந்நிலையில், குறித்த சந்திப்பு தொடர்பில் கருத்து வெளியிட்டுள்ள வெளிவிவகார அமைச்சர்,</p>
<p>“இலங்கையில் பிரிவினையைத் தூண்டக்கூடிய நடவடிக்கைகளைக் கனேடிய அரசாங்கம் தடுக்கவேண்டும் என அந்நாட்டு தூதுவரிடம் வலியுறுத்தினேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>மேலும், கனடாவில் வாழும் சில குழுக்களால் முன்னெடுக்கப்பட்டுவரும் சில நடவடிக்கைகள் இலங்கையில் தேசிய ஒருமைப்பாட்டைக் கட்டியெழுப்பும் முயற்சிக்கு பாதகத்தை ஏற்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளமையை சுட்டிக்காட்டியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>“எவ்வாறாயினும், விடுதலைப் புலிகள் கனடாவில் தடைசெய்யப்பட்ட அமைப்பாகும்.</p>
<p>விடுதலைப் புலிகள் அல்லது பிரிவினைவாத சித்தாந்தங்களுடன் தொடர்புடைய அத்தகைய சின்னங்களை கனேடிய கூட்டாட்சி அரசாங்கம் அங்கீகரிக்கவில்லை என தூதர் தெரிவித்துள்ளார்.</p>
<p>இலங்கையின் இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டிற்கு கனடா தொடர்ந்து உறுதிபூண்டுள்ளது.” என்று தூதுர் தெரிவித்தார் என அமைச்சர் விஜித ஹேரத் தனது எக்ஸ் தள பக்கத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/canada-does-not-recognize-the-liberation-tigers-of-tamil-eelam-ambassador-explains-to-the-sri-lankan-government/">விடுதலைப் புலிகளை கனடா அங்கீகரிக்கவில்லை &#8211; இலங்கை அரசிடம் தூதுவர் விளக்கம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>கனடாவை உலுக்கிய இலங்கை குடும்பத்தின் படுகொலை &#8211; குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை</title>
		<link>https://oruvan.com/murder-of-sri-lankan-family-that-shook-ottawa-convict-gets-life-sentence/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Fri, 07 Nov 2025 04:27:00 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[#oruvan #news]]></category>
		<category><![CDATA[Canada]]></category>
		<category><![CDATA[Court]]></category>
		<category><![CDATA[Ottawa Murder]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=37560</guid>

					<description><![CDATA[<p>கனடா &#8211; ஒட்டாவாவில் ஆறு இலங்கையர்களை கொலை செய்த சம்பவம் தொடர்பில் மற்றுமொரு இலங்கையருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்தச் சம்பவம் ஒரு குடும்பத்தை சேர்ந்த மூவரும், வீட்டில் தங்கியிருந்த மற்றுமொரு இலங்கையரும் கொலை செய்யப்பட்டனர். குறித்த வீட்டில் தங்கியிருந்த ஃபெப்ரியோ டி சொய்சா என்ற சக இலங்கையரால் இந்த கொலை செய்யப்பட்டிருந்தது. கனடாவில் கல்வி கற்று வந்த அவர், இந்த குற்றத்தைச் செய்தபோது 19 வயதைக் கடந்திருந்தார். இந்நிலையில், குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/murder-of-sri-lankan-family-that-shook-ottawa-convict-gets-life-sentence/">கனடாவை உலுக்கிய இலங்கை குடும்பத்தின் படுகொலை &#8211; குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>கனடா &#8211; ஒட்டாவாவில் ஆறு இலங்கையர்களை கொலை செய்த சம்பவம் தொடர்பில் மற்றுமொரு இலங்கையருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.</p>
<p>2024ஆம் ஆண்டு இடம்பெற்ற இந்தச் சம்பவம் ஒரு குடும்பத்தை சேர்ந்த மூவரும், வீட்டில் தங்கியிருந்த மற்றுமொரு இலங்கையரும் கொலை செய்யப்பட்டனர்.</p>
<p>குறித்த வீட்டில் தங்கியிருந்த ஃபெப்ரியோ டி சொய்சா என்ற சக இலங்கையரால் இந்த கொலை செய்யப்பட்டிருந்தது. கனடாவில் கல்வி கற்று வந்த அவர், இந்த குற்றத்தைச் செய்தபோது 19 வயதைக் கடந்திருந்தார்.</p>
<p>இந்நிலையில், குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்ட அவரருக்கு ஆயுள் தண்டனை விதித்து அந்நாட்டு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.</p>
<p>மேலும், தண்டனையில் எவ்விதமான தளர்வையும் பெறுவதற்கோ அல்லது விடுதலை பெறுவதற்கோ அவர் 25 ஆண்டுகள் கட்டாயமாகச் சிறைத் தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்று அறிவித்துள்ளது.</p>
<p>குறித்த இளைஞர் மீது நான்கு முதலாம் நிலை கொலைக் குற்றச்சாட்டுகளும், இரண்டு இரண்டாம் நிலை கொலைக் குற்றச்சாட்டுகளும், ஒரு கொலை முயற்சி குற்றச்சாட்டுகளும் சுமத்தப்பட்டிருந்தன.</p>
<p>இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தையும் ஃபெப்ரியோ டி சொய்சா ஒப்புக்கொண்டார்.</p>
<p>இந்த சம்பவத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தாயான தர்ஷனி பண்டாரநாயக்க (35), இனூக்க விக்கிரமசிங்க (07), அஷ்வினி விக்கிரமசிங்க (04), ரினியானா விக்கிரமசிங்க (02), கெலி விக்கிரமசிங்க (02 மாதம்) ஆகியோர் கொல்லப்பட்டனர்.</p>
<p>மேலும், அந்த வீட்டில் இருந்த காமினி அமரகோன் (40) என்ற நபரும் கொல்லப்பட்டதுடன், குழந்தைகளின் தந்தை படுகாயமடைந்தார்.</p>
<p>இந்தச் சம்பவம் அப்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/murder-of-sri-lankan-family-that-shook-ottawa-convict-gets-life-sentence/">கனடாவை உலுக்கிய இலங்கை குடும்பத்தின் படுகொலை &#8211; குற்றவாளிக்கு ஆயுள் தண்டனை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>கனடாவில் வேலை வாய்ப்பு பெற்று தருவதாக மோசடி கூறி &#8211; ஒருவர் கைது</title>
		<link>https://oruvan.com/man-arrested-for-fraud-claiming-to-get-job-in-canada/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Fri, 10 Oct 2025 11:06:23 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[arrested]]></category>
		<category><![CDATA[Canada]]></category>
		<category><![CDATA[Man]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=34975</guid>

					<description><![CDATA[<p>கனடாவில் வேலை வாய்ப்பு பெற்று தருவதாக கூறி 1.49 மில்லியன் ரூபா மோசடி செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினரால் சந்தேகநபர் நேற்று (9) கைது செய்யப்பட்டார். இவர் நிரந்தர வதிவிடத்திற்காக கனடாவில் குடியுரிமை பெற்றவர் என தெரிவிக்கப்படுகிறது. சந்தேக நபர் இதனை தமக்கு சாதகமாக பயன்படுத்தி பலரிடமிருந்து பணம் பெற்றுள்ளார். குறித்த நபரிடம் பணம் கொடுத்த சுமார் 10 பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் முறைப்பாடளித்துள்ளனர். இந்நிலையில் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/man-arrested-for-fraud-claiming-to-get-job-in-canada/">கனடாவில் வேலை வாய்ப்பு பெற்று தருவதாக மோசடி கூறி &#8211; ஒருவர் கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>கனடாவில் வேலை வாய்ப்பு பெற்று தருவதாக கூறி 1.49 மில்லியன் ரூபா மோசடி செய்த ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p>
<p>இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் விசேட புலனாய்வுப் பிரிவினரால் சந்தேகநபர் நேற்று (9) கைது செய்யப்பட்டார்.</p>
<p>இவர் நிரந்தர வதிவிடத்திற்காக கனடாவில் குடியுரிமை பெற்றவர் என தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>சந்தேக நபர் இதனை தமக்கு சாதகமாக பயன்படுத்தி பலரிடமிருந்து பணம் பெற்றுள்ளார்.</p>
<p>குறித்த நபரிடம் பணம் கொடுத்த சுமார் 10 பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் முறைப்பாடளித்துள்ளனர்.</p>
<p>இந்நிலையில் பணியகம் நீதிமன்றத்தில் முறைப்பாடளித்தைத் தொடர்ந்து சந்தேக நபருக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இந்நிலையில், சந்தேகநபர் நேற்று பணியகத்திற்கு வரவழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்ட பின்னர், அங்கீகரிக்கப்படாத வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஆட்சேர்ப்பிற்காக பணம் மோசடி செய்தல் மற்றும் மோசடி குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்டார்.</p>
<p>சந்தேக நபரை கடுவெல நீதவான் நீதிமன்றத்தில் இன்று (10) முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/man-arrested-for-fraud-claiming-to-get-job-in-canada/">கனடாவில் வேலை வாய்ப்பு பெற்று தருவதாக மோசடி கூறி &#8211; ஒருவர் கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>காலிஸ்தான் பயங்கரவாத குழுக்களுக்கு கனடா நிதியுதவி &#8211; உளவு அமைப்பு வெளியிட்ட தகவல்</title>
		<link>https://oruvan.com/canada-funding-khalistan-terror-groups-intelligence-agency-releases-information/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sun, 07 Sep 2025 05:07:39 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[Canada]]></category>
		<category><![CDATA[Group's]]></category>
		<category><![CDATA[information]]></category>
		<category><![CDATA[intelligence]]></category>
		<category><![CDATA[Khalistan]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<category><![CDATA[terror]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=31887</guid>

					<description><![CDATA[<p>கனடாவில் உள்ள பப்பர் கல்சா இன்டர்நேஷனல், சர்வதேச சீக்கிய இளைஞர் ஒருங்கிணைப்பு ஆகிய 02 காலிஸ்தான் தீவிரவாதக் குழுக்களுக்கு கனடாவிலிருந்து நிதியுதவி சென்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது. 2025 ஆம் ஆண்டு கனடாவில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் மற்றும் பயங்கரவாதக் குழுக்களுக்கு நிதியுதவி இடர்பாடுகள் என்ற பெயரில் இந்த ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது. கனடாவின் ஒட்டாவா உளவு அமைப்பு இந்தத் தகவலை அரசுக்கு அனுப்பியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கனடாவில் ஹமாஸ், காலிஸ்தான் தீவிரவாதக் குழுக்களான பப்பர் கல்சா இன்டர்நேஷனல், சர்வதேச [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/canada-funding-khalistan-terror-groups-intelligence-agency-releases-information/">காலிஸ்தான் பயங்கரவாத குழுக்களுக்கு கனடா நிதியுதவி &#8211; உளவு அமைப்பு வெளியிட்ட தகவல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>கனடாவில் உள்ள பப்பர் கல்சா இன்டர்நேஷனல், சர்வதேச சீக்கிய இளைஞர் ஒருங்கிணைப்பு ஆகிய 02 காலிஸ்தான் தீவிரவாதக் குழுக்களுக்கு கனடாவிலிருந்து நிதியுதவி சென்றுள்ளதாகத் தெரியவந்துள்ளது.</p>
<p>2025 ஆம் ஆண்டு கனடாவில் சட்டவிரோத பணப்பரிமாற்றம் மற்றும் பயங்கரவாதக் குழுக்களுக்கு நிதியுதவி இடர்பாடுகள் என்ற பெயரில் இந்த ஆய்வு முடிவு வெளியாகியுள்ளது.</p>
<p>கனடாவின் ஒட்டாவா உளவு அமைப்பு இந்தத் தகவலை அரசுக்கு அனுப்பியுள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.</p>
<p>கனடாவில் ஹமாஸ், காலிஸ்தான் தீவிரவாதக் குழுக்களான பப்பர் கல்சா இன்டர்நேஷனல், சர்வதேச சீக்கிய இளைஞர் ஒருங்கிணைப்பு அமைப்பு போன்ற தீவிரவாத அமைப்புகள் நிதி உதவி பெறுவதை உறுதிப்படுத்தியுள்ளதாக அந்த அறிக்கை சுட்டிக்காட்டியுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/canada-funding-khalistan-terror-groups-intelligence-agency-releases-information/">காலிஸ்தான் பயங்கரவாத குழுக்களுக்கு கனடா நிதியுதவி &#8211; உளவு அமைப்பு வெளியிட்ட தகவல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் கனடா</title>
		<link>https://oruvan.com/canada-recognizes-the-state-of-palestine/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Thu, 31 Jul 2025 06:17:11 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Canada]]></category>
		<category><![CDATA[Mark Carney]]></category>
		<category><![CDATA[Palestinian]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=28060</guid>

					<description><![CDATA[<p>செப்டம்பர் மாதத்தில் பாலஸ்தீன அரசை அங்கீகரிக்க கனடா திட்டமிட்டுள்ளதாகவும், இதுபோன்ற அறிவிப்பை வெளியிடும் மூன்றாவது G7 நாடாக இது உருவெடுத்துள்ளதாகவும் பிரதமர் மார்க் கார்னி கூறியுள்ளார். இந்த நடவடிக்கை ஜனநாயக சீர்திருத்தங்களைப் பொறுத்தது என்றும், ஹமாஸ் இல்லாமல் அடுத்த ஆண்டு பாலஸ்தீன ஆணையம் தேர்தல்களை நடத்த முடியும் என்றும் கார்னி கூறினார். இஸ்ரேல் போர் நிறுத்தம் மற்றும் பிற நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொள்ளாவிட்டால், செப்டம்பரில் பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாக இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் இதேபோன்ற திட்டத்தை வெளியிட்ட [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/canada-recognizes-the-state-of-palestine/">பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் கனடா</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>செப்டம்பர் மாதத்தில் பாலஸ்தீன அரசை அங்கீகரிக்க கனடா திட்டமிட்டுள்ளதாகவும், இதுபோன்ற அறிவிப்பை வெளியிடும் மூன்றாவது G7 நாடாக இது உருவெடுத்துள்ளதாகவும் பிரதமர் மார்க் கார்னி கூறியுள்ளார்.</p>
<p>இந்த நடவடிக்கை ஜனநாயக சீர்திருத்தங்களைப் பொறுத்தது என்றும், ஹமாஸ் இல்லாமல் அடுத்த ஆண்டு பாலஸ்தீன ஆணையம் தேர்தல்களை நடத்த முடியும் என்றும் கார்னி கூறினார்.</p>
<p>இஸ்ரேல் போர் நிறுத்தம் மற்றும் பிற நிபந்தனைகளுக்கு ஒப்புக் கொள்ளாவிட்டால், செப்டம்பரில் பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாக இங்கிலாந்து மற்றும் பிரான்ஸ் இதேபோன்ற திட்டத்தை வெளியிட்ட ஒரு வாரத்திற்குப் பின்னர் அவரின் கருத்துக்கள் வந்துள்ளன.</p>
<p>எவ்வாறாயினும், இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சகம் கனடாவின் அறிவிப்பை நிராகரித்துள்ளதுடன், அதை &#8220;ஹமாஸுக்கு ஒரு வெகுமதி&#8221; என்று தெரிவித்துள்ளது.</p>
<p>பெரும்பாலான நாடுகள் &#8211; ஐ.நா.வின் 193 உறுப்பு நாடுகளில் 147 &#8211; பாலஸ்தீன அரசை முறையாக அங்கீகரிக்கின்றன. இந்நிலையில். வரவிருக்கும் ஐ.நா. பொதுச் சபைக் கூட்டத்தில் கனடா பாலஸ்தீன அரசை முறையாக அங்கீகரிக்கும் என்று கார்னி கூறினார்.</p>
<p>ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையில் இஸ்ரேலிய குடியேற்றங்களின் விரிவாக்கம், காசாவில் மோசமடைந்து வரும் மனிதாபிமான நிலைமை மற்றும் 2023 அக்டோபர் 7 அன்று ஹமாஸால் இஸ்ரேல் மீதான தாக்குதல்கள் ஆகியவை கனடாவின் வெளியுறவுக் கொள்கையில் வியத்தகு மாற்றத்திற்கான காரணங்களாக அவர் மேற்கோள் காட்டினார்.</p>
<p>&#8220;காசாவில் மனித துன்பத்தின் அளவு தாங்க முடியாதது, அது வேகமாக மோசமடைந்து வருகிறது&#8221; என்று கார்னி புதன்கிழமை செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.</p>
<p>பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பது, பாலஸ்தீன அதிகாரசபை அதன் நிர்வாகத்தை அடிப்படையில் சீர்திருத்துவதற்கும், பிரதேசத்தை இராணுவமயமாக்குவதற்கும் செய்யும் உறுதிமொழிகளைப் பொறுத்தது என்று அவர் கூறினார்.</p>
<p>பேச்சுவார்த்தை மூலம் மேற்கொள்ளப்பட்ட சமாதான முன்னெடுப்பின் ஒரு பகுதியாக இரு நாடுகள் தீர்வுக்கு கனடா நீண்ட காலமாக உறுதிபூண்டுள்ளது என்று கார்னி கூறினார், ஆனால் &#8220;இந்த அணுகுமுறை இனி நிலைநிறுத்தத்தக்கது அல்ல&#8221; என்றும் அவர் கூறினார்.</p>
<p>&#8220;பாலஸ்தீன அரசின் வாய்ப்பு நம் கண்களுக்கு முன்பாகவே அரிக்கப்பட்டு வருகிறது,&#8221; என்று அவர் கூறினார்.</p>
<p>இந்த அறிவிப்பு குறித்து புதன்கிழமை முன்னதாக பாலஸ்தீன அதிகாரசபைத் தலைவர் மஹ்மூத் அப்பாஸுடன் பேசியதாக கார்னி செய்தியாளர் கூட்டத்தில் தெரிவித்தார்.</p>
<p>பாலஸ்தீனிய ஆணையம் அப்பாஸ் தலைமையிலான ஃபத்தா கட்சி மூலம் மேற்குக் கரையின் சில பகுதிகளைக் கட்டுப்படுத்துகிறது, அதே நேரத்தில் ஹமாஸ் காசாவை நிர்வகிக்கிறது. 2006 முதல் இரண்டு பிரதேசங்களும் தேர்தலை நடத்தவில்லை.</p>
<p>எவ்வாறாயினும், கார்னியின் அறிவிப்பை இஸ்ரேலின் வெளியுறவு அமைச்சகம் விமர்சித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/canada-recognizes-the-state-of-palestine/">பாலஸ்தீன அரசை அங்கீகரிக்கும் கனடா</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>குடியேற்ற விண்ணப்பத்தை ஆதரித்தமை குறித்து முதன்முறையாக வாய்திறந்த கேரி ஆனந்தசங்கரி</title>
		<link>https://oruvan.com/carrie-anandasangari-speaks-out-for-the-first-time-about-supporting-the-immigration-application/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Wed, 30 Jul 2025 10:35:57 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[Ananda Shankery]]></category>
		<category><![CDATA[Canada]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=27995</guid>

					<description><![CDATA[<p>பயங்கரவாதக் குழு உறுப்பினரென கூறப்படும் ஒருவரின் குடியேற்ற விண்ணப்பத்தை ஆதரித்து கடிதங்கள் எழுதியபோது, தாம் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக மட்டுமே தமது கடமையைச் செய்ததாக, கனேடிய பொதுப் பாதுகாப்பு அமைச்சர்  தெரிவித்துள்ளார். இந்த விடயம் தொடர்பில்  ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு கேரி ஆனந்தசங்கரி முதன்முறையாக பதிலளித்தார். முன்னதாக தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர் ஒருவரின் கனேடிய குடியுரிமை தொடர்பில் குடிவரவு அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்ததாக கெரி ஆனந்தசங்கரி மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது. எனினும் அதனை ஏற்றுக்கொள்ளாத கனேடிய பிரதமரும் ஆனந்தசங்கரி [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/carrie-anandasangari-speaks-out-for-the-first-time-about-supporting-the-immigration-application/">குடியேற்ற விண்ணப்பத்தை ஆதரித்தமை குறித்து முதன்முறையாக வாய்திறந்த கேரி ஆனந்தசங்கரி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பயங்கரவாதக் குழு உறுப்பினரென கூறப்படும் ஒருவரின் குடியேற்ற விண்ணப்பத்தை ஆதரித்து கடிதங்கள் எழுதியபோது, தாம் ஒரு பாராளுமன்ற உறுப்பினராக மட்டுமே தமது கடமையைச் செய்ததாக, கனேடிய பொதுப் பாதுகாப்பு அமைச்சர்  தெரிவித்துள்ளார்.</p>
<p>இந்த விடயம் தொடர்பில்  ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்கு கேரி ஆனந்தசங்கரி முதன்முறையாக பதிலளித்தார்.</p>
<p>முன்னதாக தமிழீழ விடுதலைப்புலிகளின் உறுப்பினர் ஒருவரின் கனேடிய குடியுரிமை தொடர்பில் குடிவரவு அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்ததாக கெரி ஆனந்தசங்கரி மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.</p>
<p>எனினும் அதனை ஏற்றுக்கொள்ளாத கனேடிய பிரதமரும் ஆனந்தசங்கரி மீதான குற்றச்சாட்டை நிராகரித்திருந்தார்.</p>
<p>இந்தநிலையில் தேர்ந்தெடுக்கப்பட்ட எந்தவொரு நாடாளுமன்ற உறுப்பினரதும் முக்கிய பொறுப்புகளில், உதவி கோருவோருக்கு சேவைகளை வழங்குவது என கனேடிய பொதுப் பாதுகாப்பு அமைச்சர் கேரி ஆனந்தசங்கரி மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/carrie-anandasangari-speaks-out-for-the-first-time-about-supporting-the-immigration-application/">குடியேற்ற விண்ணப்பத்தை ஆதரித்தமை குறித்து முதன்முறையாக வாய்திறந்த கேரி ஆனந்தசங்கரி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>கனடிய பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது</title>
		<link>https://oruvan.com/a-37-year-old-canadian-woman-was-arrested-at-the-bandaranaike-international-airport/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Tue, 22 Jul 2025 05:46:44 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[BIA]]></category>
		<category><![CDATA[Canada]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=27254</guid>

					<description><![CDATA[<p>&#160; சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு 181 மில்லியன் ரூபா மதிப்புள்ள ஹாஷிஷ் போதைப் பொருள் கடத்த முயன்றதற்காக 37 வயது கனடிய பெண் ஒருவர் இன்று காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கை சுங்க கூடுதல் இயக்குநர் ஜெனரலும் ஊடகப் பேச்சாளருமானசிவலி அருக்கொட தெரிவித்தார். கைது செய்யப்பட்ட பெண் கனடாவின் மாண்ட்ரீலில் இருந்து தோஹா வழியாக கத்தார் ஏர்வேஸ் விமானம் மூலம் இலங்கை வந்திருந்தார். வழக்கமான சோதனையை மேற்கொண்ட சுங்க அதிகாரிகள் அவரது [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/a-37-year-old-canadian-woman-was-arrested-at-the-bandaranaike-international-airport/">கனடிய பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>&nbsp;</p>
<p>சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு 181 மில்லியன் ரூபா மதிப்புள்ள ஹாஷிஷ் போதைப் பொருள் கடத்த முயன்றதற்காக 37 வயது கனடிய பெண் ஒருவர் இன்று காலை பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.</p>
<p>இலங்கை சுங்க கூடுதல் இயக்குநர் ஜெனரலும் ஊடகப் பேச்சாளருமானசிவலி அருக்கொட தெரிவித்தார்.</p>
<p>கைது செய்யப்பட்ட பெண் கனடாவின் மாண்ட்ரீலில் இருந்து தோஹா வழியாக கத்தார் ஏர்வேஸ் விமானம் மூலம் இலங்கை வந்திருந்தார்.</p>
<p>வழக்கமான சோதனையை மேற்கொண்ட சுங்க அதிகாரிகள் அவரது பொருட்களில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 18,123 கிராம் ஹாஷிஷ் போதைப் பொருள்ளை கண்டுபிடித்தனர்.</p>
<p>இதனையடுத்து குறித்த பெண் கைது செய்யப்பட்டுள்ளதுடன், இலங்கை சுங்கத் துறையின் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு ஆரம்ப விசாரணைகளை முன்னெடுத்துள்ளது.</p>
<p>இதனிடையே, சந்தேக நபரும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருட்களும் மேலதிக விசாரணை மற்றும் சட்ட நடவடிக்கைகளுக்காக பொலிஸ் போதைப்பொருள் பணியகத்திடம் (PNB) ஒப்படைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/a-37-year-old-canadian-woman-was-arrested-at-the-bandaranaike-international-airport/">கனடிய பெண் ஒருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
