<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Bimal Rathnayake Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/bimal-rathnayake/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/bimal-rathnayake/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Thu, 09 Apr 2026 08:57:46 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>Bimal Rathnayake Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/bimal-rathnayake/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>நவீன வசதிகளுடன் புனரமைக்கப்படும் கொழும்பு கோட்டை ரயில் நிலையம்</title>
		<link>https://oruvan.com/colombo-fort-railway-station-to-be-renovated-with-modern-facilities/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Thu, 09 Apr 2026 08:57:46 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Bimal Rathnayake]]></category>
		<category><![CDATA[Fort Railway Station]]></category>
		<category><![CDATA[Fort Railway Station renovation]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=48200</guid>

					<description><![CDATA[<p>வரலாற்றுச் சிறப்புமிக்க கொழும்பு கோட்டை இரயில் நிலையத்தின் புனரமைப்புப் பணிகள் இன்று அதிகாரப்பூர்வமாகத் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன. இந்த முயற்சியானது, நிலையத்தின் 109 ஆண்டுகால பாரம்பரியத்தைப் பாதுகாப்பதோடு, நவீன பயணிகள் வசதிகளை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) மற்றும் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் 2,162.64 மில்லியன் ரூபா செலவில் இத்திட்டம் 15 மாதங்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இந்த அபிவிருந்த பயணிகளின் வசதியை அதிகரிப்பதோடு, நிலையத்தின் தொல்பொருள் மதிப்பையும் பாதுகாக்கும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/colombo-fort-railway-station-to-be-renovated-with-modern-facilities/">நவீன வசதிகளுடன் புனரமைக்கப்படும் கொழும்பு கோட்டை ரயில் நிலையம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>வரலாற்றுச் சிறப்புமிக்க கொழும்பு கோட்டை இரயில் நிலையத்தின் புனரமைப்புப் பணிகள் இன்று அதிகாரப்பூர்வமாகத் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளன.</p>
<p>இந்த முயற்சியானது, நிலையத்தின் 109 ஆண்டுகால பாரம்பரியத்தைப் பாதுகாப்பதோடு, நவீன பயணிகள் வசதிகளை ஏற்படுத்துவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.</p>
<p>ஆசிய அபிவிருத்தி வங்கி (ADB) மற்றும் அரசாங்கத்தின் நிதியுதவியுடன் 2,162.64 மில்லியன் ரூபா செலவில் இத்திட்டம் 15 மாதங்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.</p>
<p>இந்த அபிவிருந்த பயணிகளின் வசதியை அதிகரிப்பதோடு, நிலையத்தின் தொல்பொருள் மதிப்பையும் பாதுகாக்கும் என்று போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன தெரிவித்துள்ளார்.</p>
<p>இதன்படி, மருதனை மற்றும் கொம்பனி தெரு முனைகளில் பழைய பாலங்களுக்குப் பதிலாக, மின்தூக்கிகள் மற்றும் நகரும் படிக்கட்டுகளுடன் கூடிய நவீன பயணிகள் பாலங்கள் கட்டுதல்.</p>
<p>பயணிகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கான ஒரு புதிய மூன்று மாடி சேவைக் கட்டிடம்.</p>
<p>ஓல்கொட் மாவத்தையில் குறுக்கே உள்ள மேம்பாலம் உள்ளிட்ட விரிவாக்கப்பட்ட அணுகல் வசதிகள்</p>
<p>நுழைவு மற்றும் வெளியேற்றத்தை நெறிப்படுத்த, மின்-நுழைவாயில் வசதிகளுடன் கூடிய டிஜிட்டல் தொழில்நுட்ப அறிமுகம் என்பன முதல் கட்ட அபிவிருந்த பணிகளின் போது மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.</p>
<p>எவ்வாறாயினும், நாளாந்தம் இரயில்வே இயக்கத்திற்கு குறைந்தபட்ச இடையூறு ஏற்படும் வகையில் அனைத்து கட்டுமானப் பணிகளும் மேற்கொள்ளப்படும் என பிரதி அமைச்சர் குணசேன உறுதியளித்தார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/colombo-fort-railway-station-to-be-renovated-with-modern-facilities/">நவீன வசதிகளுடன் புனரமைக்கப்படும் கொழும்பு கோட்டை ரயில் நிலையம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பேருந்து உரிமையாளர்களுக்க அமைச்சர் பிமல் விடுத்துள்ள எச்சரிக்கை</title>
		<link>https://oruvan.com/minister-bimals-warning-to-bus-owners/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 09 Feb 2026 05:12:55 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Bimal Rathnayake]]></category>
		<category><![CDATA[Colombo]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=44745</guid>

					<description><![CDATA[<p>போதைப் பழக்கத்திற்கு அடிமையான சாரதிகளை பேருந்து சாரதி பணிகளுக்கு பயன்படுத்தினால், பேருந்துகளுக்கான சாலை அனுமதிப் பத்திரம் ரத்து செய்யப்படும் என அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது. போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார். போதைப் பழக்கத்திற்கு அடிமையான சாரதிகளை எந்தவொரு வகையிலும் பணியமர்த்த வேண்டாம் என்று அமைச்சர் பேருந்து உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார். போதைப் பொருள் பாவனையின் கீழ் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் சாரதிகள் மத்தியில் தற்போது சோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது. இரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரிகளுக்கு கூடுதலாக உமிழ்நீர் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/minister-bimals-warning-to-bus-owners/">பேருந்து உரிமையாளர்களுக்க அமைச்சர் பிமல் விடுத்துள்ள எச்சரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>போதைப் பழக்கத்திற்கு அடிமையான சாரதிகளை பேருந்து சாரதி பணிகளுக்கு பயன்படுத்தினால், பேருந்துகளுக்கான சாலை அனுமதிப் பத்திரம் ரத்து செய்யப்படும் என அரசாங்கம் எச்சரிக்கை விடுத்துள்ளது.</p>
<p>போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்.</p>
<p>போதைப் பழக்கத்திற்கு அடிமையான சாரதிகளை எந்தவொரு வகையிலும் பணியமர்த்த வேண்டாம் என்று அமைச்சர் பேருந்து உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.</p>
<p>போதைப் பொருள் பாவனையின் கீழ் பயணிகள் போக்குவரத்தில் ஈடுபடும் சாரதிகள் மத்தியில் தற்போது சோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>இரத்தம் மற்றும் சிறுநீர் மாதிரிகளுக்கு கூடுதலாக உமிழ்நீர் மாதிரிகளும் பரிசோதிக்கப்பட்டு வருகின்றன.</p>
<p>இதனிடையே, போதைப் பொருள் பாவகையில் வாகனம் ஓட்டு சாரதிகளை அடையாளம் காணும் திட்டத்தை வலுப்படுத்த, கூடுதலாக இரண்டு நடமாடும் ஆய்வகங்களை இணைக்க முடிவு செய்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/minister-bimals-warning-to-bus-owners/">பேருந்து உரிமையாளர்களுக்க அமைச்சர் பிமல் விடுத்துள்ள எச்சரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>போதைப் பொருளை கட்டுப்படுத்த விளையாட்டு துறையை அபிவிருத்தி செய்ய வேண்டும் &#8211; யாழில் அமைச்சர் தகவல்</title>
		<link>https://oruvan.com/sports-sector-should-be-developed-to-control-drugs-jaffna-minister-information/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 24 Nov 2025 07:16:53 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[#oruvan #news]]></category>
		<category><![CDATA[Bimal Rathnayake]]></category>
		<category><![CDATA[Jaffna]]></category>
		<category><![CDATA[Jaffna News]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=39088</guid>

					<description><![CDATA[<p>போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் இந்த வாரத்தில் ஐக்கியத்தை ஏற்படுத்த உள்ளக விளையாட்டரங்கு போன்ற விடயங்கள் அவசியம் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார். யாழ்ப்பாணம் பழைய பூங்கா வளாகத்தில் உள்ளக விளையாட்டு அரங்கிற்கான அடிக்கல் நேற்று நாட்டப்பட்டது. இதன் பின்னர் யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்கு விளையாட்டு துறையை விருத்தி செய்வது அவசியமாகும். விளையாட்டு துறையில் ஈடுபாடு கொண்டவர்கள் போதைப்பொருளில் நாட்டம் கொள்வது [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/sports-sector-should-be-developed-to-control-drugs-jaffna-minister-information/">போதைப் பொருளை கட்டுப்படுத்த விளையாட்டு துறையை அபிவிருத்தி செய்ய வேண்டும் &#8211; யாழில் அமைச்சர் தகவல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூரும் இந்த வாரத்தில் ஐக்கியத்தை ஏற்படுத்த உள்ளக விளையாட்டரங்கு போன்ற விடயங்கள் அவசியம் என அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.</p>
<p>யாழ்ப்பாணம் பழைய பூங்கா வளாகத்தில் உள்ளக விளையாட்டு அரங்கிற்கான அடிக்கல் நேற்று நாட்டப்பட்டது.</p>
<p>இதன் பின்னர் யாழ்ப்பாணம் பிரதேச செயலகத்தில் இடம்பெற்ற நிகழ்வில் கருத்து தெரிவிக்கும் போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.</p>
<p>போதைப்பொருள் தடுப்பு நடவடிக்கைகளுக்கு விளையாட்டு துறையை விருத்தி செய்வது அவசியமாகும்.</p>
<p>விளையாட்டு துறையில் ஈடுபாடு கொண்டவர்கள் போதைப்பொருளில் நாட்டம் கொள்வது மிக குறைவு என்பது ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது.</p>
<p>யாழ்ப்பாணத்தில் உள்ளக விளையாட்டுக்கான மைதான வசதிகள் பாரிய அளவில் இல்லை.  இதனால் மழை காலத்தில் கடும் சிரமங்கள் ஏற்படுவதாக விளையாட்டு வீரர்கள் மற்றும் பெற்றோர்கள் தெரிவித்தனர்.</p>
<p>தேசிய ரீதியிலான ஒற்றுமையை ஏற்படுத்த விளையாட்டு முக்கியமான ஒன்று எனவும், யாழ்ப்பாணத்தில் இருந்து சென்ற வியாஸ்காந் இலங்கை தேசிய கிரிக்கெட் அணியில் இணைத்துக்கொள்ளப்பட்டுள்ளார் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்</p>
<p>இங்குள்ள வீரர்களுக்கு போதிய வசதிகள் மற்றும் உதவிகள் வீரர்களுக்கு கிடைப்பதில்லை.</p>
<p>இதற்கு முடிவு கட்ட  சிறப்பான வசதிகள் கொண்ட  உள்ளக விளையாட்டு மைதானம் அமைக்க விளையாட்டு துறை அமைச்சால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>இந்நிலையில், அடுத்த ஆண்டு ஓகஸ்ட் மாதத்திற்குள் பணிகள் முடிக்கப்படும் என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/sports-sector-should-be-developed-to-control-drugs-jaffna-minister-information/">போதைப் பொருளை கட்டுப்படுத்த விளையாட்டு துறையை அபிவிருத்தி செய்ய வேண்டும் &#8211; யாழில் அமைச்சர் தகவல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி பேருந்து கட்டணங்களை செலுத்தும் வசதி இன்று முதல் அறிமுகம்</title>
		<link>https://oruvan.com/facility-to-pay-bus-fares-using-bank-cards-introduced-from-today/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 24 Nov 2025 07:00:38 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[#oruvan #news]]></category>
		<category><![CDATA[Bimal Rathnayake]]></category>
		<category><![CDATA[அமைச்சர் பிமல் ரத்நாயக்க]]></category>
		<category><![CDATA[ஒருவன்]]></category>
		<category><![CDATA[ஒருவன் செய்திகள்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=39080</guid>

					<description><![CDATA[<p>நாட்டில் முதன்முறையாக வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி பேருந்து கட்டணங்களை செலுத்தும் வசதி இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது. இதன் ஆரம்ப நிகழ்வு போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் இன்று மாகும்புர பன்முக போக்குவரத்து மையத்தில் இடம்பெற்றிருந்தது. டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் தொழில்நுட்ப ஆலோசனையுடன் செயல்படுத்தப்படும் இந்த திட்டம் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சினால் செயல்படுத்தப்படுகிறது. முதல் கட்டத்தில், வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி பேருந்து கட்டணங்களை செலுத்தும் வசதி சுமார் 20 வழித்தடங்களில் வழங்கப்பட்டுள்ளதாக டிஜிட்டல் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/facility-to-pay-bus-fares-using-bank-cards-introduced-from-today/">வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி பேருந்து கட்டணங்களை செலுத்தும் வசதி இன்று முதல் அறிமுகம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>நாட்டில் முதன்முறையாக வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி பேருந்து கட்டணங்களை செலுத்தும் வசதி இன்று முதல் ஆரம்பமாகியுள்ளது.</p>
<p>இதன் ஆரம்ப நிகழ்வு போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் இன்று மாகும்புர பன்முக போக்குவரத்து மையத்தில் இடம்பெற்றிருந்தது.</p>
<p>டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் தொழில்நுட்ப ஆலோசனையுடன் செயல்படுத்தப்படும் இந்த திட்டம் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சினால் செயல்படுத்தப்படுகிறது.</p>
<p>முதல் கட்டத்தில், வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி பேருந்து கட்டணங்களை செலுத்தும் வசதி சுமார் 20 வழித்தடங்களில் வழங்கப்பட்டுள்ளதாக டிஜிட்டல் பொருளாதார அமைச்சின் ஆலோசகர் சுமுது ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.</p>
<p>இதன்படி, மாகும்புரவிலிருந்து காலி, மாத்தறை, பதுளை நோக்கிச் செல்லும் பேருந்துக, கொழும்பு முதல் அம்பாறை வரை இயக்கப்படும் பேருந்துகள், கடவத்தை முதல் பொரளை வரை இயக்கப்படும் பேருந்துகள் மற்றும் மொனராகலை முதல் பிபில வரை இயக்கப்படும் பேருந்துகளில் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது.</p>
<p>அத்துடன், பதுளை முதல் பண்டாரவளை மற்றும் பதுளை முதல் மஹியங்கனை வரை இயக்கப்படும் பேருந்துகளிலும் இந்த வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>முதல் கட்டத்தில், தனியார் பேருந்துகளுக்கு மட்டுமே இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்று சுமுது ரத்நாயக்க  தெரிவித்துள்ளார்.</p>
<p>ஏழு தனியார் மற்றும் அரசு வங்கிகள் ஏற்கனவே வங்கி அட்டைகள் மூலம் பேருந்து கட்டணங்களை செலுத்தும் வசதியை வழங்குவதில் தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தியுள்ளன.</p>
<p>இது பயணிகளின் மீதமுள்ள பணத்தை வழங்குவதில் உள்ள சிக்கலுக்கு ஒரு தீர்வை வழங்கும் என்பதுடன், பேருந்து உரிமையாளர்கள் பெறும் வருமானத்தை துல்லியமாக கணக்கிட உதவும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/facility-to-pay-bus-fares-using-bank-cards-introduced-from-today/">வங்கி அட்டைகளைப் பயன்படுத்தி பேருந்து கட்டணங்களை செலுத்தும் வசதி இன்று முதல் அறிமுகம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>விடுதலைப் புலிகளை நினைவு கூர முடியாது &#8211; அமைச்சர் பிமல் ரத்நாயக்க</title>
		<link>https://oruvan.com/we-cannot-remember-the-ltte-minister-bimal-ratnayake/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 17 Nov 2025 06:38:50 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[#oruvan #news]]></category>
		<category><![CDATA[Bimal Rathnayake]]></category>
		<category><![CDATA[Colombo]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=38430</guid>

					<description><![CDATA[<p>போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்குரிய உரிமை மக்களுக்கு இருப்பதாக சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார். எனினும், அந்த உரிமையென்பது விடுதலைப் புலிகளை நினைவு கூருவதற்கானது அல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நினைவேந்தல் நடத்துவதற்கு 2024 நவம்பரில் இடமளிக்கப்பட்டது.  2025 நவம்பரிலும் அவ்வாறுதான். உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்குரிய உரிமை மக்களுக்கு உள்ளது. எனினும், அந்த உரிமை என்பது விடுதலைப் புலிகளை நினைவு கூருவதற்கானது அல்ல என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். எமது அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும் பொது இடங்களில் ஜே.வி.பி. [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/we-cannot-remember-the-ltte-minister-bimal-ratnayake/">விடுதலைப் புலிகளை நினைவு கூர முடியாது &#8211; அமைச்சர் பிமல் ரத்நாயக்க</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>போரில் உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்குரிய உரிமை மக்களுக்கு இருப்பதாக சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.</p>
<p>எனினும், அந்த உரிமையென்பது விடுதலைப் புலிகளை நினைவு கூருவதற்கானது அல்ல எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>நினைவேந்தல் நடத்துவதற்கு 2024 நவம்பரில் இடமளிக்கப்பட்டது.  2025 நவம்பரிலும் அவ்வாறுதான். உயிரிழந்தவர்களை நினைவுகூருவதற்குரிய உரிமை மக்களுக்கு உள்ளது.</p>
<p>எனினும், அந்த உரிமை என்பது விடுதலைப் புலிகளை நினைவு கூருவதற்கானது அல்ல என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>எமது அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும் பொது இடங்களில் ஜே.வி.பி. மாவீரர்களுக்கு நினைவிடம் அமைக்கவில்லை.</p>
<p>அவர்களுக்கான நினைவு தூபி எம் மனங்களில் இருந்தால் போதும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>இதேவேளை, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்துடன் பேச்சு நடத்தி பிரச்சினைக்கு தீர்வை காணலாம் என்ற எதிர்பார்ப்பு இருப்பதாலேய வரவு- செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களிக்காமல் இலங்கை தமிழரசுக் கட்சி விலகி இருந்ததாகவும் அமைச்சர் கூறியுள்ளார்.</p>
<p>அரசாங்கத்தை விமர்சிப்பதற்கு புதிய ஆயுதங்களை எதிரணிகள் உருவாக்கிக்கொள்ள வேண்டும்.</p>
<p>நாங்கள் உங்கள் மீது முன்வைத்த விமர்சனக் கணைகளையே எம்மை நோக்கி மீள செலுத்த வேண்டாம். புதிய ஆயுதம் என்பது, எம்மைவிட சிறந்த திட்டங்கள் அவசியம் என்பதாகும்.</p>
<p>எமது அரசியல் கொள்கை எவ்வளவு வலுவானது என்றால், மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் நான்கு தலைவர்கள் வரவு- செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்துள்ளனர்.</p>
<p>இந்நிலையில், தேசிய சமத்துவத்துக்காக நாம் முழு அர்ப்பணிப்புடன் செயல்படுவோம்.&#8221; என அமைச்சர் பிமல் ரத்நாயக்க  மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/we-cannot-remember-the-ltte-minister-bimal-ratnayake/">விடுதலைப் புலிகளை நினைவு கூர முடியாது &#8211; அமைச்சர் பிமல் ரத்நாயக்க</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>அமைச்சரவையில் மாற்றம் &#8211; வர்த்தமானி அறிவிப்பு வெளியானது</title>
		<link>https://oruvan.com/cabinet-reshuffle-gazette-notification-issued/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Sun, 12 Oct 2025 03:21:26 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Bimal Rathnayake]]></category>
		<category><![CDATA[gazette]]></category>
		<category><![CDATA[பிமல் ரத்நாயக்க]]></category>
		<category><![CDATA[வர்த்தமானி அறிவிப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=35090</guid>

					<description><![CDATA[<p>அரசாங்கத்தின் முதல் அமைச்சரவை மாற்றத்திற்கு ஏற்ப திருத்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவிகள் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி என்.எஸ். குமநாயக்க நேற்று (11) வெளியிட்டார். கடந்த 10 ஆம் திகதி காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தைத் தொடர்ந்து, மூன்று புதிய அமைச்சர்களும் 10 பிரதி அமைச்சர்களும் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றனர். அதன்படி, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/cabinet-reshuffle-gazette-notification-issued/">அமைச்சரவையில் மாற்றம் &#8211; வர்த்தமானி அறிவிப்பு வெளியானது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>அரசாங்கத்தின் முதல் அமைச்சரவை மாற்றத்திற்கு ஏற்ப திருத்தப்பட்ட அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவிகள் தொடர்பான வர்த்தமானி அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது.</p>
<p>இது தொடர்பான வர்த்தமானி அறிவிப்பை ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி என்.எஸ். குமநாயக்க நேற்று (11) வெளியிட்டார்.</p>
<p>கடந்த 10 ஆம் திகதி காலை ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவை மாற்றத்தைத் தொடர்ந்து, மூன்று புதிய அமைச்சர்களும் 10 பிரதி அமைச்சர்களும் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்றனர்.</p>
<p>அதன்படி, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சராகப் பணியாற்றிய பிமல் ரத்நாயக்கவிடமிருந்து துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்துத் துறைகள் நீக்கப்பட்டு, அதற்குப் பதிலாக நகர மேம்பாட்டு அமைச்சகம் சேர்க்கப்பட்டது, அதன்படி, அன்றைய தினம் அவர் அமைச்சராகப் பதவியேற்றார்.</p>
<p>பிமல் ரத்நாயக்கவிடமிருந்து நீக்கப்பட்ட துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சு, முன்னர் நகர மேம்பாடு, கட்டுமானம் மற்றும் வீடமைப்பு அமைச்சராகப் பணியாற்றிய அனுர கருணாதிலக்கவிடம் வழங்கப்பட்டது.</p>
<p>துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சராக அவர் பதவியேற்றார்.</p>
<p>மேலும், திரு. அனுர கருணாதிலக்கவிடமிருந்து நீக்கப்பட்ட கட்டுமானம் மற்றும் வீடமைப்பு அமைச்சர் பதவி, பிரதி அமைச்சராகப் பணியாற்றிய டாக்டர் எச்.எம். சுசில் ரணசிங்கவுக்கு வழங்கப்பட்டுள்ளது.</p>
<p>அதன்படி, காணி மற்றும் நீர்ப்பாசன பிரதி அமைச்சராக இருந்த சுசில் ரணசிங்க, வீடமைப்பு, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் அமைச்சராகவும் ஜனாதிபதி முன்னிலையில் பதவிப் பிரமாணம் செய்து கொண்டார்.</p>
<p>இதற்கு முன்னர் எந்த அமைச்சுப் பதவிகளையும் வகிக்காத கலாநிதி கௌசல்யா ஆரியரத்ன, தினிந்து சமன் குமார, நிஷாந்த ஜெயவீர மற்றும் எம்.எம்.ஐ. அர்காம் ஆகியோர் பிரதி அமைச்சர்களாகப் பதவியேற்றனர்.</p>
<p>அதன்படி, அவர்களின் அமைச்சுப் பதவிகள் குறித்த வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/cabinet-reshuffle-gazette-notification-issued/">அமைச்சரவையில் மாற்றம் &#8211; வர்த்தமானி அறிவிப்பு வெளியானது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சரவையில் மாற்றம்</title>
		<link>https://oruvan.com/cabinet-reshuffle-in-national-peoples-power-government/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Fri, 10 Oct 2025 04:24:59 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Anura Kumara Dissanayake]]></category>
		<category><![CDATA[Bimal Rathnayake]]></category>
		<category><![CDATA[Cabinet]]></category>
		<category><![CDATA[Hot News]]></category>
		<category><![CDATA[அமைச்சரவை மாற்றம்]]></category>
		<category><![CDATA[அமைச்சர் பிமல் ரத்நாயக்க]]></category>
		<category><![CDATA[பிமல் ரத்னாநாயக்க]]></category>
		<category><![CDATA[බිමල් නිරෝෂන් රත්නායක]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=34914</guid>

					<description><![CDATA[<p>தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சரவையில் இன்று முதல் முறையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதன்படி, இன்று (10) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் பல புதிய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவியேற்றனர். அரசாங்கத்தின் வளர்ச்சி இலக்குகளை விரைவுபடுத்தவும் நெறிப்படுத்தவும் 2026 வரவு செலவுத் திட்டத்திற்கு ஏற்ப அமைச்சரவை மறுசீரமைப்பை மேற்கொள்ள அரசாங்கம் முடிவு செய்துள்ளது. அதன்படி, இன்று பதவியேற்ற புதிய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளனர். பிமல் ரத்நாயக்க &#8211; போக்குவரத்து, [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/cabinet-reshuffle-in-national-peoples-power-government/">தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சரவையில் மாற்றம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சரவையில் இன்று முதல் முறையாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.</p>
<p>இதன்படி, இன்று (10) காலை ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி முன்னிலையில் பல புதிய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் பதவியேற்றனர்.</p>
<p>அரசாங்கத்தின் வளர்ச்சி இலக்குகளை விரைவுபடுத்தவும் நெறிப்படுத்தவும் 2026 வரவு செலவுத் திட்டத்திற்கு ஏற்ப அமைச்சரவை மறுசீரமைப்பை மேற்கொள்ள அரசாங்கம் முடிவு செய்துள்ளது.</p>
<p>அதன்படி, இன்று பதவியேற்ற புதிய அமைச்சர்கள் மற்றும் பிரதி அமைச்சர்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளனர்.</p>
<p>பிமல் ரத்நாயக்க &#8211; போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர மேம்பாடு<br />
அனுர கருணாதிலக்க &#8211; துறைமுகங்கள், சிவில் விமான போக்குவரத்து<br />
சுசில் ரணசிங்க &#8211; வீட்டுவசதி, கட்டுமானம் மற்றும் நீர் வழங்கல் பொறுப்பாகவும் பிரதி அமைச்சர்களாக,<br />
ஆச்சார்ய அனில் ஜயசிங்க &#8211; திட்டமிடல் பிரதி அமைச்சர்<br />
டி.பி சமன் &#8211; வீடமைப்பு, நீர் வழங்கல் பிரதி அமைச்சர்<br />
எம்.எம்.மொஹமட் மூனீர் &#8211; மதவிவகார கலாசார பிரதி அமைச்சர்<br />
வைத்தியர் மூதித ஹங்சகவிஜயமுனி &#8211; சுகாதார பிரதி அமைச்சர்<br />
அரசிந்த செனரத் விதாரண &#8211; காணி மற்றும் நீர்பாசன பிரதி அமைச்சர்.<br />
எச்.எம்.தினிது சமன் குமார &#8211; இளைஞர் விவகார பிரதி அமைச்சர்.<br />
யு.டி.திசாந்த ஜயவீர &#8211; பொருளாதார பிரதி அமைச்சர்<br />
ஆச்சார்ய கௌசல்ய ஆரியரத்ன &#8211; ஊடக பிரதி அமைச்சர்<br />
எம்.ஐ.எம். அர்கம் &#8211; மின்சக்தி பிரதி அமைச்சர்</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/cabinet-reshuffle-in-national-peoples-power-government/">தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் அமைச்சரவையில் மாற்றம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் வாகன எண் தகடுகள் &#8211; அமைச்சர் வெளியிட்ட தகவல்</title>
		<link>https://oruvan.com/vehicle-number-plates-with-new-security-features-information-released-by-the-minister/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 08 Oct 2025 07:53:54 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#oruvan #news]]></category>
		<category><![CDATA[Bimal Rathnayake]]></category>
		<category><![CDATA[Moratuwa University]]></category>
		<category><![CDATA[Number Plate]]></category>
		<category><![CDATA[ஒருவன் செய்திகள்]]></category>
		<category><![CDATA[பிமல் ரத்நாயக்க]]></category>
		<category><![CDATA[வகன இலக்கத் தகடு]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=34773</guid>

					<description><![CDATA[<p>புதிய வாகன எண் தகடுகளில் ஏழு பாதுகாப்பு அம்சங்கள் இருக்கும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார். இதில் ஆறு அம்சங்கள் ஏற்கனவே மொரட்டுவ பல்கலைக்கழகத்தால் அங்கீகாரம் பெற்றுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். ஏழாவது அம்சத்தை அங்கீகரிக்கும் திறன் மொரட்டுவா பல்கலைக்கழகத்திற்கு இல்லை என்றும், அதன் அங்கீகாரத்திற்கு சர்வதேச ஆய்வகத்தின் உதவியைப் பெற வேண்டும் என்றும் அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். எண் தகடுகள் வழங்குவது தொடர்பான கொள்முதல் செயல்முறை இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக அமைச்சர் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/vehicle-number-plates-with-new-security-features-information-released-by-the-minister/">புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் வாகன எண் தகடுகள் &#8211; அமைச்சர் வெளியிட்ட தகவல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>புதிய வாகன எண் தகடுகளில் ஏழு பாதுகாப்பு அம்சங்கள் இருக்கும் என போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இன்று நாடாளுமன்றில் தெரிவித்துள்ளார்.</p>
<p>இதில் ஆறு அம்சங்கள் ஏற்கனவே மொரட்டுவ பல்கலைக்கழகத்தால் அங்கீகாரம் பெற்றுள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>ஏழாவது அம்சத்தை அங்கீகரிக்கும் திறன் மொரட்டுவா பல்கலைக்கழகத்திற்கு இல்லை என்றும், அதன் அங்கீகாரத்திற்கு சர்வதேச ஆய்வகத்தின் உதவியைப் பெற வேண்டும் என்றும் அவர் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.</p>
<p>எண் தகடுகள் வழங்குவது தொடர்பான கொள்முதல் செயல்முறை இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாக அமைச்சர் கூறினார், மேலும் மூன்று நிறுவனங்கள் விலை மனுக்களை சமர்ப்பித்துள்ளதாகவும் கூறினார்.</p>
<p>2000ஆம் ஆண்டு முதல் கடந்த 25 ஆண்டுகளாக ஒரே ஒரு நிறுவனம் மட்டுமே எண் தகடுகளை வழங்கி வருவதாகவும், 2025 ஆம் ஆண்டில் அரசாங்கம் புதிய விலை மனுக்களை கோரியதாகவும் அவர் கூறினார்.</p>
<p>பாதுகாப்பு அம்சங்களை அங்கீகரிப்பதற்கான செயல்முறை நீண்ட நேரம் எடுத்ததாலும், ஒரே நிறுவனத்தால் நீண்ட காலமாக கையாளப்பட்டதால் ஏற்பட்ட சிக்கலான தன்மை காரணமாக, எண் தகடுகளை வழங்கும் செயல்முறை தாமதமாகி வருவதாக அமைச்சர் கூறினார்.</p>
<p>எண் தகடுகள் கிடைக்காததால், கடந்த செப்டம்பர் 30ஆம் திகதி வரை 165,512 வாகனங்களுக்கு எண் தகடுகள் வழங்கப்படவில்லை என்று அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/vehicle-number-plates-with-new-security-features-information-released-by-the-minister/">புதிய பாதுகாப்பு அம்சங்களுடன் வாகன எண் தகடுகள் &#8211; அமைச்சர் வெளியிட்ட தகவல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>கொழும்பு &#8211; கட்டுநாயக்க விமான சேவை மீள ஆரம்பம்</title>
		<link>https://oruvan.com/colombo-katunayake-flight-service-resumes/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Fri, 03 Oct 2025 06:31:38 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Bimal Rathnayake]]></category>
		<category><![CDATA[Colombo]]></category>
		<category><![CDATA[Kattunayaka]]></category>
		<category><![CDATA[Katunayake]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=34237</guid>

					<description><![CDATA[<p>போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில், பெய்ரா ஏரியை நீர் விமான நிலையமாகப் பயன்படுத்தி கட்டுநாயக்கவிற்கும் கொழும்புக்கும் இடையிலான விமான சேவைகள் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டன. உள்நாட்டு விமானப் பயணத்தை விரிவுபடுத்துவதற்கும் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் ஒரு பகுதியாக கொழும்பு-கட்டுநாயக்க விமான சேவை மீண்டும் அறிமுகப்படுத்தப்படுகிறது. ஜோன் கீல்ஸ் குழுமத்தின் துணை நிறுவனமான சினமன் ஏர்லைன்ஸ் இந்த விமானங்களை இயக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. செஸ்னா 208 விமானத்தால் இயக்கப்படும் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/colombo-katunayake-flight-service-resumes/">கொழும்பு &#8211; கட்டுநாயக்க விமான சேவை மீள ஆரம்பம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்கவின் தலைமையில், பெய்ரா ஏரியை நீர் விமான நிலையமாகப் பயன்படுத்தி கட்டுநாயக்கவிற்கும் கொழும்புக்கும் இடையிலான விமான சேவைகள் இன்று அதிகாரப்பூர்வமாகத் தொடங்கப்பட்டன.</p>
<p>உள்நாட்டு விமானப் பயணத்தை விரிவுபடுத்துவதற்கும் சுற்றுலாவை மேம்படுத்துவதற்கும் அரசாங்கத்தின் திட்டத்தின் ஒரு பகுதியாக கொழும்பு-கட்டுநாயக்க விமான சேவை மீண்டும் அறிமுகப்படுத்தப்படுகிறது.</p>
<p>ஜோன் கீல்ஸ் குழுமத்தின் துணை நிறுவனமான சினமன் ஏர்லைன்ஸ் இந்த விமானங்களை இயக்கவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>செஸ்னா 208 விமானத்தால் இயக்கப்படும் தொடக்க சேவை, கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து கொழும்பில் உள்ள சினமன் லேக்சைட் பியருக்கு பயணத்தை ஆரம்பித்திருந்தது.</p>
<p>துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து துணை அமைச்சர் ஜனிதா ருவான் கொடித்துவக்கு, சுற்றுலா துணை அமைச்சர் பேராசிரியர் ருவான் ரணசிங்க, சிவில் விமானப் போக்குவரத்து ஆணையத் தலைவர் சுனில் ஜெயரத்ன மற்றும் பிற பிரமுகர்கள் விமானத்தில் பயணித்தனர்.</p>
<p>இந்த விமானத்தை கேப்டன் இந்திகா பிரேமதாசவும், இணை விமானியாக இசுரு முனசிங்கவும் இயக்கினர்.</p>
<p>&#8220;இந்த முயற்சியின் மூலம், உள்நாட்டு விமான சேவைகளை மேம்படுத்துவதையும், பலாலி போன்ற பிராந்திய விமான நிலையங்களுக்கு செயல்பாடுகளை விரிவுபடுத்த அதிக நிறுவனங்களை ஊக்குவிப்பதையும் நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம்.</p>
<p>இதுபோன்ற முயற்சிகளுக்கு அதிகபட்ச ஆதரவை வழங்க அரசாங்கம் உறுதிபூண்டுள்ளது,&#8221; என்று அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்தார்.</p>
<p>ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் முன்பு 2011–2012 ஆம் ஆண்டில் நீர் சார்ந்த “ஜலதாரா” விமானங்களைத் தொடங்கியது, ஆனால் பாதுகாப்பு காரணங்களுக்காக சேவை இடைநிறுத்தப்பட்டது.</p>
<p>புதிய நிர்வாகத்தின் கீழ் ஒழுங்குமுறை சீர்திருத்தங்கள் அத்தகைய சேவைகளை மீண்டும் தொடங்க உதவியுள்ளன, இது சுற்றுலாத் துறைக்கு ஊக்கத்தை அளித்துள்ளது என்று அதிகாரிகள் குறிப்பிட்டனர்.</p>
<p>சினமன் ஏர்லைன்ஸ் ஏற்கனவே நுவரெலியா, மட்டக்களப்பு, சீகிரியா, கொக்கல, வீரவில, ஹட்டன் மற்றும் திருகோணமலை உள்ளிட்ட 10 இடங்களுக்கு விமானங்களை இயக்குகிறது.</p>
<p>பேரா ஏரிக்கு கூடுதலாக, கொழும்பு துறைமுக நகரத்தின் செயல்பாடுகளுக்காகவும், நகரில் இரண்டு புதிய ஹெலிபோர்ட்டுகளுக்கான திட்டங்களுக்காகவும் ஆய்வுகள் நடைபெற்று வருவதாக சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் அறிவித்துள்ளது.</p>
<p>தற்போது, ​​ஆய்வுகளுக்குப் பின்னர் 22 உள்நாட்டு விமான நிலையங்கள் உள்நாட்டு நடவடிக்கைகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளன.</p>
<p>இலங்கையின் விமானப் போக்குவரத்து மற்றும் சுற்றுலாத் தொழில்களை மேலும் வலுப்படுத்த சுற்றுலா மற்றும் பாதுகாப்பு அமைச்சகங்களுடன் இணைந்து விமான இணைப்பை விரிவுபடுத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக அதிகாரிகள் வலியுறுத்தினர்.</p>
<p>இந்த அறிமுக நிகழ்வில் மூத்த அரசு அதிகாரிகள், பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் ஜான் கீல்ஸ் குழுமம் மற்றும் சின்னமன் ஏர்லைன்ஸ் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/colombo-katunayake-flight-service-resumes/">கொழும்பு &#8211; கட்டுநாயக்க விமான சேவை மீள ஆரம்பம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>விரைவில் புதிய அம்சங்களுடன் கூடிய சாரதி அனுமதிப் பத்திரம் &#8211; அரசாங்கம் அறிவிப்பு</title>
		<link>https://oruvan.com/driving-license-with-new-features-coming-soon-government-announcement/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Fri, 26 Sep 2025 06:09:35 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Bimal Rathnayake]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=33608</guid>

					<description><![CDATA[<p>விரைவில் புதிய அம்சங்களுடன் கூடிய சாரதி அனுமதிப் பத்திரம் மற்றும் வாகன இலக்கத்தகடுகள் மோட்டார் போக்குவரத்து பதிவுத் திணைக்களத்தால் (DMT) வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது. நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார். அதே நேரத்தில், பல்வேறு மென்பொருள் சேவை வழங்குநர்களால் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் செயற்பாடுகள் தடைப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். &#8220;வலைதள மேம்பாட்டிற்காக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் 100 மில்லியன் ரூபா செலுத்திய சந்தர்ப்பங்கள் உள்ளன, எனினும் அதை ஐந்து [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/driving-license-with-new-features-coming-soon-government-announcement/">விரைவில் புதிய அம்சங்களுடன் கூடிய சாரதி அனுமதிப் பத்திரம் &#8211; அரசாங்கம் அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>விரைவில் புதிய அம்சங்களுடன் கூடிய சாரதி அனுமதிப் பத்திரம் மற்றும் வாகன இலக்கத்தகடுகள் மோட்டார் போக்குவரத்து பதிவுத் திணைக்களத்தால் (DMT) வழங்கப்படும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.</p>
<p>நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார்.</p>
<p>அதே நேரத்தில், பல்வேறு மென்பொருள் சேவை வழங்குநர்களால் மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் செயற்பாடுகள் தடைப்படுவதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>&#8220;வலைதள மேம்பாட்டிற்காக மோட்டார் போக்குவரத்து திணைக்களம் 100 மில்லியன் ரூபா செலுத்திய சந்தர்ப்பங்கள் உள்ளன, எனினும் அதை ஐந்து மில்லியன் ரூபா செலவில் செய்திருக்கலாம்,&#8221; என்று அமைச்சர் கூறினார்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/driving-license-with-new-features-coming-soon-government-announcement/">விரைவில் புதிய அம்சங்களுடன் கூடிய சாரதி அனுமதிப் பத்திரம் &#8211; அரசாங்கம் அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
