<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>BIA Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/bia/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/bia/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Mon, 02 Mar 2026 11:51:14 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>BIA Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/bia/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் 115 விமானங்கள் ரத்து</title>
		<link>https://oruvan.com/115-flights-cancelled-at-katunayake-airport-due-to-war-tensions-in-the-middle-east/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 02 Mar 2026 07:09:48 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[BIA]]></category>
		<category><![CDATA[Iran]]></category>
		<category><![CDATA[Iran War]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=46013</guid>

					<description><![CDATA[<p>மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சேவைகளை முன்னெடுக்க இருந்த 115 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்து, மீள் புறப்பட திட்டமிடப்பட்டிருந்த 115 விமானங்கள் இன்று (02) இரவு 9.50 மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார். இதன்படி, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள நாடுகளிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரவிருந்த ஸ்ரீலங்கன் மற்றும் பிற வெளிநாட்டு விமான நிறுவனங்களின் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/115-flights-cancelled-at-katunayake-airport-due-to-war-tensions-in-the-middle-east/">மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் 115 விமானங்கள் ரத்து</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து சேவைகளை முன்னெடுக்க இருந்த 115 விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.</p>
<p>கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்து, மீள் புறப்பட திட்டமிடப்பட்டிருந்த 115 விமானங்கள் இன்று (02) இரவு 9.50 மணி வரை ரத்து செய்யப்பட்டுள்ளதாக கட்டுநாயக்க விமான நிலையப் பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்.</p>
<p>இதன்படி, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள நாடுகளிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வரவிருந்த ஸ்ரீலங்கன் மற்றும் பிற வெளிநாட்டு விமான நிறுவனங்களின் 55 விமானங்களும், கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து அந்தப் பகுதிக்கு புறப்படவிருந்த 60 விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன.</p>
<p>கடந்த 28 ஆம் திகதி கட்டுநாயக்க விமான நிலையத்திலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்குப் புறப்பட்ட இரண்டு ஃபிட்ஸ் ஏர் மற்றும் ஏர் அரேபியா விமானங்கள் அந்தப் பகுதிக்குள் நுழைய முடியாமல் மீளவும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்குத் திரும்பியுள்ளன.</p>
<p>இந்நிலையில், மத்திய கிழக்கு பிராந்தியத்தில் உள்ள நாடுகளுக்குச் செல்லும் பயணிகளும், அந்த பிராந்தியத்தின் வழியாக வேறு நாடுகளுக்குச் செல்லும் பயணிகளும் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருவதற்கு முன்பு தங்கள் பயண முகவர்களை தொடர்புகொள்ளுமாறு கட்டுநாயக்க விமான நிலையப் பொறுப்பதிகாரி மேலும் தெரிவித்தார்.</p>
<p>மேலும், நாட்டில் தற்போது தங்கியுள்ள வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் விசா காலம் முடிவடைந்த நிலையில், விசா காலத்தை ஏழு நாட்கள் நீட்டிக்க குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறை தேவையான நடவடிக்கைகளை எடுத்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>தற்போதைய சூழ்நிலையில் பயணிகளுக்கு வசதி செய்து கொடுக்கவும், விமான இயக்கங்களை நிர்வகிக்கவும் சிறப்பு செயல்பாட்டு திட்ம் ஒன்று செயல்படுத்தப்பட்டுள்ளதாக இலங்கை சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் தெரிவித்துள்ளது.</p>
<p>இயக்குநர் ஜெனரல் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி தமிந்த ரம்புக்வெல்லா தலைமையில் இந்த சிறப்பு செயல்பாட்டுத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளதாக அறிக்கை ஒன்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>மேலும், மாற்றுப்பாதைகள் தேவைப்பட்டால் மத்தள ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையம் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.</p>
<p>இடையூறுகள் ஏற்பட்டுள்ள போதிலும், பொதுமக்கள் பீதி அடைய வேண்டாம் என்று சிவில் விமானப் போக்குவரத்து ஆணையம் வலியுறுத்தியுள்ளது.</p>
<p>இதேவேளை, மத்திய கிழக்கு பிராந்தியத்தில் தற்போதைய இராணுவ நிலைமை காரணமாக, அந்த பிராந்தியத்தில் உள்ள நாடுகள் தங்கள் சொந்த பாதுகாப்பிற்காக தங்கள் வான்வெளிகளை மூடியுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/115-flights-cancelled-at-katunayake-airport-due-to-war-tensions-in-the-middle-east/">மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக கட்டுநாயக்க விமான நிலையத்தில் 115 விமானங்கள் ரத்து</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>386 அலங்கார செடிகளை கடத்த முயன்றதாக 19 வயது இளைஞர் விமான நிலையத்தில் கைது</title>
		<link>https://oruvan.com/19-year-old-arrested-at-airport-for-attempting-to-smuggle-386-ornamental-plants/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Tue, 10 Feb 2026 05:02:13 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[BIA]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=44783</guid>

					<description><![CDATA[<p>சுமார் 600,000 ரூபாய் மதிப்புள்ள அலங்கார செடிகளை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கடத்த முயன்றதற்காக 19 வயது இலங்கை பயணி ஒருவர் இன்று (10) அதிகாலை கைது செய்யப்பட்டார். கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பல்லுயிர், கலாச்சார மற்றும் தேசிய பாரம்பரிய பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகள் மற்றும் சுங்க அதிகாரிகளின் கூட்டு நடவடிக்கையின் போது இந்தக் கைது இடம்பெற்றுள்ளது. நீர்கொழும்பு, கொச்சிக்கடை பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர், தாய்லாந்தின் பேங்காக்கிலிருந்து நள்ளிரவு 12:35 மணிக்கு தாய் ஏர்வேஸ் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/19-year-old-arrested-at-airport-for-attempting-to-smuggle-386-ornamental-plants/">386 அலங்கார செடிகளை கடத்த முயன்றதாக 19 வயது இளைஞர் விமான நிலையத்தில் கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>சுமார் 600,000 ரூபாய் மதிப்புள்ள அலங்கார செடிகளை சட்டவிரோதமாக நாட்டிற்குள் கடத்த முயன்றதற்காக 19 வயது இலங்கை பயணி ஒருவர் இன்று (10) அதிகாலை கைது செய்யப்பட்டார்.</p>
<p>கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பல்லுயிர், கலாச்சார மற்றும் தேசிய பாரம்பரிய பாதுகாப்புப் பிரிவின் அதிகாரிகள் மற்றும் சுங்க அதிகாரிகளின் கூட்டு நடவடிக்கையின் போது இந்தக் கைது இடம்பெற்றுள்ளது.</p>
<p>நீர்கொழும்பு, கொச்சிக்கடை பகுதியைச் சேர்ந்த சந்தேக நபர், தாய்லாந்தின் பேங்காக்கிலிருந்து நள்ளிரவு 12:35 மணிக்கு தாய் ஏர்வேஸ் விமானம் TG 307 மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தார்.</p>
<p>இதன் போது அவர் கொண்டுவந்த பொருட்ளை ஆய்வு செய்த அதிகாரிகள், பிலோடென்ட்ரான், அக்லோனெமா, அலோகாசியா மற்றும் மான்ஸ்டெரா இனங்களைச் சேர்ந்த மொத்தம் 386 அலங்காரச் செடிகளைக் கண்டுபிடித்தனர்.</p>
<p>சம்பவம் தொடர்பில் கட்டுநாயக்க விமான நிலைய சுங்கப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/19-year-old-arrested-at-airport-for-attempting-to-smuggle-386-ornamental-plants/">386 அலங்கார செடிகளை கடத்த முயன்றதாக 19 வயது இளைஞர் விமான நிலையத்தில் கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>துபாயில் கைது செய்யப்பட்ட குற்றக் கும்பலை சேர்தவர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்</title>
		<link>https://oruvan.com/members-of-a-criminal-gang-arrested-in-dubai-brought-back-to-the-country/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Fri, 16 Jan 2026 04:56:07 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#police]]></category>
		<category><![CDATA[BIA]]></category>
		<category><![CDATA[Dubai]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=43239</guid>

					<description><![CDATA[<p>துபாயில் தலைமறைவாக இருந்த நிலையில், கைது செய்யப்பட்ட இரண்டு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளும், பணமோசடி வழக்கு விசாரணைக்காகத் தேடப்பட்ட ஒரு பெண்ணும் சிறப்பு காவல்துறை அதிகாரிகளால் இன்று (16) அதிகாலை கைது செய்யப்பட்டு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். இன்று அதிகாலை 5.20 மணியளவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-226 மூலம் துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அவர்கள் அழைத்து வரப்பட்டனர். இவர்களில் எல்பிட்டிய, ஊரகஹா பகுதியைச் சேர்ந்த புஞ்சா என [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/members-of-a-criminal-gang-arrested-in-dubai-brought-back-to-the-country/">துபாயில் கைது செய்யப்பட்ட குற்றக் கும்பலை சேர்தவர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>துபாயில் தலைமறைவாக இருந்த நிலையில், கைது செய்யப்பட்ட இரண்டு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளும், பணமோசடி வழக்கு விசாரணைக்காகத் தேடப்பட்ட ஒரு பெண்ணும் சிறப்பு காவல்துறை அதிகாரிகளால் இன்று (16) அதிகாலை கைது செய்யப்பட்டு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர்.</p>
<p>இன்று அதிகாலை 5.20 மணியளவில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளுக்கு மத்தியில், ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் UL-226 மூலம் துபாயிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அவர்கள் அழைத்து வரப்பட்டனர்.</p>
<p>இவர்களில் எல்பிட்டிய, ஊரகஹா பகுதியைச் சேர்ந்த புஞ்சா என அழைக்கப்படும் 52 வயதான ரவின் சமிந்த வீரசிங்க மற்றும் கந்தானை பகுதியைச் சேர்ந்த கிரில்தெனியகே டொன் ரசிக சஞ்சீவ குமார என்ற 30 வயதுடைய சுட்டி மல்லி ஆகியோர் அடங்குவர்.</p>
<p>அவர்கள் இருவரும் போதைப்பொருள் கடத்தல், மிரட்டி பணம் பறித்தல், கொள்ளை மற்றும் கொலை ஆகிய குற்றச்சாட்டுகளில் ஈடுபட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p>
<p>மேலும், அரசாங்க பண மோசடி வழக்கு தொடர்பான பொலிஸ் விசாரணைகளுக்கு தேடப்பட்டு வந்த ரத்மலானையைச் சேர்ந்த 56 வயதுடைய நிஷாமணி டி சில்வா என்ற பெண்ணும் கைது செய்யப்பட்டு கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார்.</p>
<p>இன்று காலை 06.50 மணிக்கு புஞ்சா என்கிற ரவீன் சமிந்தவை மேற்கு வடக்கு பேலியகொட பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கும், ரசிக சஞ்சீவ என்கிற சுட்டி மல்லியையும் எல்பிட்டிய பிரிவு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கும், நிஷாமணி டி சில்வாவை கொழும்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு தலைமையக அலுவலகத்திற்கும் பலத்த பாதுகாப்புடன் அழைத்துச் செல்ல நடவடிக்கை எடுக்கப்பட்டது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/members-of-a-criminal-gang-arrested-in-dubai-brought-back-to-the-country/">துபாயில் கைது செய்யப்பட்ட குற்றக் கும்பலை சேர்தவர்கள் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டனர்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சிகரெட்டுகளுடன் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தம்பதியினர் கைது!</title>
		<link>https://oruvan.com/couple-arrested-at-bia-with-smuggled-cigarettes/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 12 Jan 2026 08:27:00 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[arrest]]></category>
		<category><![CDATA[BIA]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=42992</guid>

					<description><![CDATA[<p>வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக கொண்டு வர முயன்ற இரண்டு இலங்கை பயணிகள், கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) கைது செய்யப்பட்டுள்ளனர். விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் குறித்த இருவரும் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட்டுகளின் பெருமதி 15 மில்லியன் ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது. நீர்கொழும்பைச் சேர்ந்த திருமணமான தம்பதிகளான இந்த சந்தேக நபர்கள், அதிகாலை 2.30 மணியளவில் எதிஹாட் ஏர்வேஸ் EY-394 விமானத்தில் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/couple-arrested-at-bia-with-smuggled-cigarettes/">சிகரெட்டுகளுடன் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தம்பதியினர் கைது!</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளை சட்டவிரோதமாக கொண்டு வர முயன்ற இரண்டு இலங்கை பயணிகள், கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) கைது செய்யப்பட்டுள்ளனர்.</p>
<p>விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் குறித்த இருவரும் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட்டுகளின் பெருமதி 15 மில்லியன் ரூபா என அறிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>நீர்கொழும்பைச் சேர்ந்த திருமணமான தம்பதிகளான இந்த சந்தேக நபர்கள், அதிகாலை 2.30 மணியளவில் எதிஹாட் ஏர்வேஸ் EY-394 விமானத்தில் அபுதாபியிலிருந்து வந்த சிறிது நேரத்திலேயே கைது செய்யப்பட்டனர்.</p>
<p>39 வயதான கணவர் சுற்றுலாத் தொழிலில் ஈடுபட்டுள்ளதாகவும், அவரது மனைவிக்கு 29 வயது என்றும் கூறப்படுகிறது.</p>
<p>தம்பதியரிடம் 500 அட்டைப் பெட்டிகளில் அடைக்கப்பட்ட சுமார் 100,000 வெளிநாட்டுத் தயாரிப்பு &#8220;பிளாட்டினம்&#8221; சிகரெட்டுகள் அடங்கிய ஆறு சூட்கேஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p>
<p>சந்தேக நபர்கள் பின்னர் பொலிஸ் பிணையில் விடுவிக்கப்பட்டனர், ஜனவரி 14 ஆம் திகதி நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளதுடன், தொடர் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p>
<p>The post <a href="https://oruvan.com/couple-arrested-at-bia-with-smuggled-cigarettes/">சிகரெட்டுகளுடன் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் தம்பதியினர் கைது!</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>187 பேருடன் அவசரமகாத தரையிறக்கப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்</title>
		<link>https://oruvan.com/srilankan-airlines-flight-makes-emergency-landing-with-187-people-on-board/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Fri, 09 Jan 2026 03:39:33 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[BIA]]></category>
		<category><![CDATA[Kattunayaka]]></category>
		<category><![CDATA[SriLankan Airlines]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=42717</guid>

					<description><![CDATA[<p>கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து குவைத் நோக்கிப் புறப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான யு.எல்-229 (UL-229) இலக்க விமானம், பயணத்தின் நடுவே ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீண்டும் அவசரமாகக் கட்டுநாயக்கவில் தரையிறக்கப்பட்டுள்ளது. நேற்று (ஜனவரி 8, 2026) மாலை 6:44 மணியளவில் குவைத் நோக்கிப் புறப்பட்ட இந்த விமானம், சுமார் 2 மணித்தியாலங்கள் 21 நிமிடப் பயணத்தின் பின்னர் மீண்டும் திருப்பிக் கொண்டுவரப்பட்டது. விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, அதன் ஹைட்ரோலிக் (Hydraulic) அமைப்பில் கோளாறு [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/srilankan-airlines-flight-makes-emergency-landing-with-187-people-on-board/">187 பேருடன் அவசரமகாத தரையிறக்கப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து குவைத் நோக்கிப் புறப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்திற்குச் சொந்தமான யு.எல்-229 (UL-229) இலக்க விமானம், பயணத்தின் நடுவே ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு காரணமாக மீண்டும் அவசரமாகக் கட்டுநாயக்கவில் தரையிறக்கப்பட்டுள்ளது.</p>
<p>நேற்று (ஜனவரி 8, 2026) மாலை 6:44 மணியளவில் குவைத் நோக்கிப் புறப்பட்ட இந்த விமானம், சுமார் 2 மணித்தியாலங்கள் 21 நிமிடப் பயணத்தின் பின்னர் மீண்டும் திருப்பிக் கொண்டுவரப்பட்டது.</p>
<p>விமானம் நடுவானில் பறந்துகொண்டிருந்தபோது, அதன் ஹைட்ரோலிக் (Hydraulic) அமைப்பில் கோளாறு ஏற்பட்டுள்ளதை விமானி அவதானித்துள்ளார்.</p>
<p>உடனடியாக இது குறித்துக் கட்டுநாயக்க விமான நிலையக் கட்டுப்பாட்டு அறைக்கு அறிவித்ததையடுத்து, விமானத்தைப் பாதுகாப்பாக மீண்டும் தரையிறக்குமாறு அறிவுறுத்தப்பட்டது.</p>
<p>அதன்படி செயற்பட்ட விமானி, இரவு 9:05 மணியளவில் விமானத்தைக் கட்டுநாயக்கவில் பத்திரமாகத் தரையிறக்கினார்.</p>
<p>இந்த விமானத்தில் 179 பயணிகள் மற்றும் 8 பணியாளர்கள் என மொத்தம் 187 பேர் இருந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>அதிர்ஷ்டவசமாக இந்தச் சம்பவத்தில் எவருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை.</p>
<p>தொழில்நுட்பக் கோளாறுக்கு உள்ளான விமானத்தில் இருந்த பயணிகள், மாற்று விமானங்கள் மூலம் குவைத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் ஊடகப் பேச்சாளர் தீபால் பெரேரா உறுதிப்படுத்தியுள்ளார்</p>
<p>The post <a href="https://oruvan.com/srilankan-airlines-flight-makes-emergency-landing-with-187-people-on-board/">187 பேருடன் அவசரமகாத தரையிறக்கப்பட்ட ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சிகரெட் கடத்த முயன்றதாக இலங்கை பெண் விமான நிலையத்தில் கைது!</title>
		<link>https://oruvan.com/a-sri-lankan-woman-has-been-arrested-by-airport-customs-officers-at-bandaranaike-international-airport/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Fri, 19 Dec 2025 02:55:21 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[arrest]]></category>
		<category><![CDATA[Bandarawela]]></category>
		<category><![CDATA[BIA]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=41018</guid>

					<description><![CDATA[<p>வெளிநாட்டு சிகரெட்டுகளின் பெரிய தொகுதியை நாட்டிற்குள் கடத்த முயன்றதற்காக இலங்கை பெண் ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். கிரீன் சேனல் வழியாக பயணி வெளியேற முயன்றதை அடுத்து இன்று காலை இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சுங்க அதிகாரிகள் சோதனையின் போது சட்டவிரோத சிகரெட்டுகளை கைப்பற்றினர். சந்தேக நபர் பண்டாரவளை பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய தொழிலதிபர் ஆவார். அவர் அதிகாலை 12.45 மணியளவில் துபாயிலிருந்து [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/a-sri-lankan-woman-has-been-arrested-by-airport-customs-officers-at-bandaranaike-international-airport/">சிகரெட் கடத்த முயன்றதாக இலங்கை பெண் விமான நிலையத்தில் கைது!</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>வெளிநாட்டு சிகரெட்டுகளின் பெரிய தொகுதியை நாட்டிற்குள் கடத்த முயன்றதற்காக இலங்கை பெண் ஒருவர் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் (BIA) விமான நிலைய சுங்க அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.</p>
<p>கிரீன் சேனல் வழியாக பயணி வெளியேற முயன்றதை அடுத்து இன்று காலை இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. சுங்க அதிகாரிகள் சோதனையின் போது சட்டவிரோத சிகரெட்டுகளை கைப்பற்றினர்.</p>
<p>சந்தேக நபர் பண்டாரவளை பகுதியைச் சேர்ந்த 49 வயதுடைய தொழிலதிபர் ஆவார். அவர் அதிகாலை 12.45 மணியளவில் துபாயிலிருந்து இலங்கைக்கு வந்திருந்தார்.</p>
<p>சோதனையின் போது, ​​சுங்க அதிகாரிகள் அவரது சூட்கேஸில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 23,600 &#8220;பிளாட்டினம்&#8221; பிராண்ட் சிகரெட்டுகள் கொண்ட 118 அட்டைப்பெட்டிகளைக் கண்டுபிடித்தனர்.</p>
<p>பறிமுதல் செய்யப்பட்ட சிகரெட்டுகளின் மதிப்பு 354,000 என மதிப்பிடப்பட்டுள்ளது.</p>
<p>இந்தச் சம்பவம் குறித்து மேலும் விசாரணைகளை விமான நிலைய சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/a-sri-lankan-woman-has-been-arrested-by-airport-customs-officers-at-bandaranaike-international-airport/">சிகரெட் கடத்த முயன்றதாக இலங்கை பெண் விமான நிலையத்தில் கைது!</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசமாக தரையிறக்கப்பட்ட துருக்கி விமானம்</title>
		<link>https://oruvan.com/turkish-plane-makes-emergency-landing-at-katunayake-airport/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 17 Dec 2025 03:01:18 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[BIA]]></category>
		<category><![CDATA[Turkish Airlines]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=40806</guid>

					<description><![CDATA[<p>துருக்கி ஏர்லைன்ஸுக்குச் (Turkish Airlines) சொந்தமான TK 733 ரக விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இன்று (17) அதிகாலை 12.28 மணியளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாக அவசரமாகத் தரையிறக்கப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ​நேற்று (16) இரவு 10 மணியளவில் கட்டுநாயக்கவில் இருந்து துருக்கி நோக்கிப் புறப்பட்ட இந்த விமானம், வானில் பறக்கத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே அதன் தரையிறங்கும் சக்கரத் தொகுதியில் (Landing Gear) கோளாறு இருப்பதை விமானி [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/turkish-plane-makes-emergency-landing-at-katunayake-airport/">கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசமாக தரையிறக்கப்பட்ட துருக்கி விமானம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>துருக்கி ஏர்லைன்ஸுக்குச் (Turkish Airlines) சொந்தமான TK 733 ரக விமானம், தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இன்று (17) அதிகாலை 12.28 மணியளவில் கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாக அவசரமாகத் தரையிறக்கப்பட்டதாக விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p>
<p>​நேற்று (16) இரவு 10 மணியளவில் கட்டுநாயக்கவில் இருந்து துருக்கி நோக்கிப் புறப்பட்ட இந்த விமானம், வானில் பறக்கத் தொடங்கிய சில நிமிடங்களிலேயே அதன் தரையிறங்கும் சக்கரத் தொகுதியில் (Landing Gear) கோளாறு இருப்பதை விமானி கண்டறிந்துள்ளார்.</p>
<p>இதனைத் தொடர்ந்து, உடனடியாகத் தரையிறங்குவது அபாயகரமானது என்பதால், விமானத்திலுள்ள எரிபொருளின் எடையைக் குறைப்பதற்காக நீர்கொழும்பு கடல் பகுதிக்கு மேலாக சுமார் 4,000 அடி உயரத்தில் இரண்டு மணித்தியாலங்களுக்கும் மேலாக விமானம் வட்டமிட்டுப் பறந்துள்ளது.</p>
<p>​விமானத்தில் இருந்த 202 பயணிகள் மற்றும் 10 ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், விமானி அதிகப்படியான எரிபொருளைக் கடலில் கொட்டிவிட்டு, விமானத்தின் வேகத்தைக் குறைத்துத் தரையிறக்கத் தயாராகியுள்ளார்.</p>
<p>இந்த அவசரத் தரையிறக்கத்தை எதிர்கொள்ள கட்டுநாயக்க விமான நிலையத்திலும் நீர்கொழும்பு களப்புப் பகுதியிலும் அவசர அம்புலன்ஸ் வண்டிகள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.</p>
<p>​மிகவும் பதற்றமான சூழலுக்கு மத்தியில், விமானியின் சாதுரியமான செயலால் விமானம் எவ்வித விபத்துகளுமின்றி பாதுகாப்பாகத் தரையிறக்கப்பட்டது.</p>
<p>இதனால் பெரும் அனர்த்தம் ஒன்று தவிர்க்கப்பட்டதாக விமான நிலைய செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்</p>
<p>The post <a href="https://oruvan.com/turkish-plane-makes-emergency-landing-at-katunayake-airport/">கட்டுநாயக்க விமான நிலையத்தில் அவசமாக தரையிறக்கப்பட்ட துருக்கி விமானம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>கட்டுநாயக்க விமான நிலையம் செல்லும் பயணிகளுக்கு விசேட அறிவிப்பு</title>
		<link>https://oruvan.com/special-notice-for-passengers-going-to-katunayake-airport/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Sun, 30 Nov 2025 02:55:46 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[#oruvan #news]]></category>
		<category><![CDATA[bandaranaike international airport]]></category>
		<category><![CDATA[BIA]]></category>
		<category><![CDATA[Colombo]]></category>
		<category><![CDATA[Ditwah]]></category>
		<category><![CDATA[flood warning]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=39628</guid>

					<description><![CDATA[<p>நிலவும் பாதகமான வானிலை காரணமாக பல விமான நிலையத்திற்கு வரும் பாதைகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் (BIA) ஊடாக பயணிக்கும் அனைத்து பயணிகளுக்கும் விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) லிமிடெட் விசேட பயண ஆலோசனையை வெளியிட்டுள்ளது. இதன்படி, கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை தற்போது விமான நிலையத்திற்கு வருவதற்கு பாதுகாப்பான மற்றும் நம்பகமான வழியாக குறிப்பிட்டு, பயணிகள் மற்றும் அதிகாரிகள் குறித்த பாதையை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்த சவாலான காலகட்டத்தில் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/special-notice-for-passengers-going-to-katunayake-airport/">கட்டுநாயக்க விமான நிலையம் செல்லும் பயணிகளுக்கு விசேட அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>நிலவும் பாதகமான வானிலை காரணமாக பல விமான நிலையத்திற்கு வரும் பாதைகள் வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ளதால், பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் (BIA) ஊடாக பயணிக்கும் அனைத்து பயணிகளுக்கும் விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் (இலங்கை) (தனியார்) லிமிடெட் விசேட பயண ஆலோசனையை வெளியிட்டுள்ளது.</p>
<p>இதன்படி, கொழும்பு-கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை தற்போது விமான நிலையத்திற்கு வருவதற்கு பாதுகாப்பான மற்றும் நம்பகமான வழியாக குறிப்பிட்டு, பயணிகள் மற்றும் அதிகாரிகள் குறித்த பாதையை பயன்படுத்துமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.</p>
<p>இந்த சவாலான காலகட்டத்தில் விமான நிலைய வளாகத்தில் ஏற்படும் நெரிசலைக் குறைக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக பயணிகள் விமான நிலையத்திற்கு பார்வையாளர்களை அழைத்து வருவதைத் தவிர்க்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.</p>
<p>கடுமையான வானிலை காரணமாக தொடர்ந்து சிரமங்கள் ஏற்பட்டாலும், தடையற்ற செயல்பாடுகளைப் பராமரிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக விமான நிலைய நிர்வாகம் தெரிவித்துள்ளது.</p>
<p>மேலும், பொதுமக்களின் ஒத்துழைப்பு மற்றும் புரிதலுக்கு நன்றி தெரிவித்துக் கொள்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/special-notice-for-passengers-going-to-katunayake-airport/">கட்டுநாயக்க விமான நிலையம் செல்லும் பயணிகளுக்கு விசேட அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>விமான நிலையம் செலலும் பயணிகளுக்கு விசேட அறிவிப்பு</title>
		<link>https://oruvan.com/special-notice-for-passengers-traveling-through-the-airport/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Fri, 28 Nov 2025 04:36:57 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[#oruvan #news]]></category>
		<category><![CDATA[BIA]]></category>
		<category><![CDATA[SriLankan Airlines]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=39499</guid>

					<description><![CDATA[<p>மோசமான வானிலை காரணமாக, விமான நிலையத்திற்குச் செல்வதற்கு முன் www.srilankan.com என்ற இணையதளத்தில் விமானம் தொடர்பில் அண்மை புதுப்பித்த தகவல்களை சரிபார்க்குமாறு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. அத்துடன், 1979 அல்லது +94 117 77 1979 என்ற துரித இலக்கத்திற்கு அழைத்து தகவல்களைப் பெறுமாறு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவுறுத்துகிறது. இதற்கிடையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க வந்த ஆறு விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன. கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த ஆறு விமானங்களை [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/special-notice-for-passengers-traveling-through-the-airport/">விமான நிலையம் செலலும் பயணிகளுக்கு விசேட அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>மோசமான வானிலை காரணமாக, விமான நிலையத்திற்குச் செல்வதற்கு முன் www.srilankan.com என்ற இணையதளத்தில் விமானம் தொடர்பில் அண்மை புதுப்பித்த தகவல்களை சரிபார்க்குமாறு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் பயணிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.</p>
<p>அத்துடன், 1979 அல்லது +94 117 77 1979 என்ற துரித இலக்கத்திற்கு அழைத்து தகவல்களைப் பெறுமாறு ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் அறிவுறுத்துகிறது.</p>
<p>இதற்கிடையில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க வந்த ஆறு விமானங்கள் வேறு விமான நிலையங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளன.</p>
<p>கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வந்த ஆறு விமானங்களை இந்தியாவின் திருவனந்தபுரம் மற்றும் கொச்சின் விமான நிலையங்களுக்கு திருப்பி விட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக விமான நிலைய பொறுப்பதிகாரி குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/special-notice-for-passengers-traveling-through-the-airport/">விமான நிலையம் செலலும் பயணிகளுக்கு விசேட அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>வெளிநாட்டு சிகரட்டுகளுடன் மூவர் விமான நிலையத்தில் கைது</title>
		<link>https://oruvan.com/three-arrested-at-airport-with-foreign-cigarettes/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 26 Nov 2025 06:53:30 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[#oruvan #news]]></category>
		<category><![CDATA[arrest]]></category>
		<category><![CDATA[BIA]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=39278</guid>

					<description><![CDATA[<p>பல மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளுடன் மூன்று சந்தேக நபர்கள் கட்டு நாயக்க விமான நிலைய பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் துபாயில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்கள் அளுத்கம, யட்டியாந்தோட்டை மற்றும் மாவனெல்ல பகுதிகளில் வசிக்கும் வர்த்தகர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், சந்தேகநபர்களிடம் இருந்து 595 சிகரெட் அட்டைப்பெட்டிகளை பொலிஸார் மீட்டுள்ளனர். குறித்த மூன்று நபர்களும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/three-arrested-at-airport-with-foreign-cigarettes/">வெளிநாட்டு சிகரட்டுகளுடன் மூவர் விமான நிலையத்தில் கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பல மில்லியன் ரூபாய் மதிப்புள்ள வெளிநாட்டுத் தயாரிப்பு சிகரெட்டுகளுடன் மூன்று சந்தேக நபர்கள் கட்டு நாயக்க விமான நிலைய பொலிஸ் அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p>
<p>கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களும் துபாயில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.</p>
<p>கைது செய்யப்பட்டவர்கள் அளுத்கம, யட்டியாந்தோட்டை மற்றும் மாவனெல்ல பகுதிகளில் வசிக்கும் வர்த்தகர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இந்நிலையில், சந்தேகநபர்களிடம் இருந்து 595 சிகரெட் அட்டைப்பெட்டிகளை பொலிஸார் மீட்டுள்ளனர்.</p>
<p>குறித்த மூன்று நபர்களும் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில், தலா மூன்று லட்சம் ரூபா  அபராதம் செலுத்த உத்தரவிடப்பட்டது.</p>
<p>The post <a href="https://oruvan.com/three-arrested-at-airport-with-foreign-cigarettes/">வெளிநாட்டு சிகரட்டுகளுடன் மூவர் விமான நிலையத்தில் கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
