<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Bengaluru Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/bengaluru/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/bengaluru/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Mon, 29 Dec 2025 03:33:49 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>Bengaluru Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/bengaluru/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>இலங்கையில் தேனிலவு &#8211; இருவேறு இடங்களில் தற்கொலை செய்துகொண்ட பெங்களூரு தம்பதியினர்</title>
		<link>https://oruvan.com/honeymoon-in-sri-lanka-bangalore-couple-commits-suicide-in-two-different-places/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 29 Dec 2025 03:33:49 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#police]]></category>
		<category><![CDATA[Bengaluru]]></category>
		<category><![CDATA[suicide]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=41834</guid>

					<description><![CDATA[<p>இந்தியாவின் பெங்களூரை சேர்ந்த புதுமணத் தம்பதியினர், இலங்கையில் தங்கள் தேனிலவை முடித்துக்கொண்டு சொந்த ஊருக்கு திரும்பிய பின்னர் இரு வேறு இடங்களில் தற்கொலை செய்து கொண்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கடந்த வியாழக்கிழமை பெங்களூரில் 26 வயதான பெண் தற்கொலை செய்து கொண்டார். கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரின் துன்புறுத்தல் மற்றும் நிராகரிப்பு காரணமாக குறித்தப் பெண் இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது. இலங்கையில் தேனிலவுக்குச் சென்றிருந்தபோது கணவர் தனது மனைவியின் கடந்தகால உறவைப் பற்றி அறிந்த [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/honeymoon-in-sri-lanka-bangalore-couple-commits-suicide-in-two-different-places/">இலங்கையில் தேனிலவு &#8211; இருவேறு இடங்களில் தற்கொலை செய்துகொண்ட பெங்களூரு தம்பதியினர்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இந்தியாவின் பெங்களூரை சேர்ந்த புதுமணத் தம்பதியினர், இலங்கையில் தங்கள் தேனிலவை முடித்துக்கொண்டு சொந்த ஊருக்கு திரும்பிய பின்னர் இரு வேறு இடங்களில் தற்கொலை செய்து கொண்டதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.</p>
<p>கடந்த வியாழக்கிழமை பெங்களூரில் 26 வயதான பெண் தற்கொலை செய்து கொண்டார்.</p>
<p>கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரின் துன்புறுத்தல் மற்றும் நிராகரிப்பு காரணமாக குறித்தப் பெண் இந்த முடிவை எடுத்ததாகக் கூறப்படுகிறது.</p>
<p>இலங்கையில் தேனிலவுக்குச் சென்றிருந்தபோது கணவர் தனது மனைவியின் கடந்தகால உறவைப் பற்றி அறிந்த பின்னர் இந்த சம்பவம் தொடங்கியதாகக் கூறப்படுகிறது.</p>
<p>இந்த விவகாரத்தில் தம்பதியிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக, திட்டமிட்ட நாட்களுக்கு முன்னதாகவே டிசம்பர் 21ஆம் திகதி பெங்களூரு திரும்பினர்.</p>
<p>வீடு திரும்பிய பிறகும், கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் அந்தப் பெண்ணை இடைவிடாது அவமானப்படுத்தி வந்ததாகக் கூறப்படுகிறது.</p>
<p>குடும்ப கௌரவம் கருதி அந்தப் பெண் விவாகரத்து செய்ய விரும்பாமல் கொடுமைகளைப் பொறுத்துக் கொண்டுள்ளார்.</p>
<p>எனினும், மன உளைச்சல் தாங்க முடியாமல் கடந்த வியாழக்கிழமை அவர் தற்கொலை செய்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>குறித்த பெண்ணிக் மரணம் தொடர்பாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்ட பின்னர், அவரது கணவர் தனது தாய் மற்றும் சகோதரருடன் நாக்பூருக்கு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.</p>
<p>எவ்வாறாயினும், பெண்ணின் கணவர் கடந்த வெள்ளிக்கிழமை நாக்பூரில் தற்கொலை செய்துகொண்டதாக கூறப்படுகின்றது.</p>
<p>மேலும் அவரது தாயாரும் தற்கொலைக்கு முயன்றார். தற்போது அவர் ஆபத்தான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p>
<p>தற்போது, ​​கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் உள்ள அதிகாரிகள் இந்த விவகாரம் குறித்து மேலும் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/honeymoon-in-sri-lanka-bangalore-couple-commits-suicide-in-two-different-places/">இலங்கையில் தேனிலவு &#8211; இருவேறு இடங்களில் தற்கொலை செய்துகொண்ட பெங்களூரு தம்பதியினர்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பெண் பயணி ஒருவரை நடு வீதியில் தாக்கிய வாடகை மோட்டார் சைக்கிளின் சாரதி</title>
		<link>https://oruvan.com/a-rented-motorcycle-driver-attacked-a-female-passenger-in-the-middle-of-the-road-in-bengaluru/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Tue, 17 Jun 2025 06:39:19 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Bengaluru]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=23771</guid>

					<description><![CDATA[<p>இந்தியாவில் பெண் பயணி ஒருவரை வாடகை மோட்டார் சைக்கிளின் சாரதி பொது வெளியில் தாக்கிய சம்பவத்தில் காணொளி தற்போது சமூக ஊடகங்களில் மிகவும் வைரலாகியுள்ளது. பெங்களூரு ஜெயநகரை சேர்ந்தவர் ஸ்ரேயா. தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் அவர் கடந்த 13ஆம் திகதி அலுவலகத்துக்கு வாடகை மோட்டார் சைக்கிளை முன்பதிவு செய்துள்ளார். எனினும், குறித்த மோட்டார் சைக்கிளின் சாரதி மிக வேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டியதாகவும், வீதி சமிக்ஞைகளை பின்பற்றாது குறுகிய பாதை என தெரிவித்து வேறு [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/a-rented-motorcycle-driver-attacked-a-female-passenger-in-the-middle-of-the-road-in-bengaluru/">பெண் பயணி ஒருவரை நடு வீதியில் தாக்கிய வாடகை மோட்டார் சைக்கிளின் சாரதி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இந்தியாவில் பெண் பயணி ஒருவரை வாடகை மோட்டார் சைக்கிளின் சாரதி பொது வெளியில் தாக்கிய சம்பவத்தில் காணொளி தற்போது சமூக ஊடகங்களில் மிகவும் வைரலாகியுள்ளது.</p>
<p>பெங்களூரு ஜெயநகரை சேர்ந்தவர் ஸ்ரேயா. தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வரும் அவர் கடந்த 13ஆம் திகதி அலுவலகத்துக்கு வாடகை மோட்டார் சைக்கிளை முன்பதிவு செய்துள்ளார்.</p>
<p>எனினும், குறித்த மோட்டார் சைக்கிளின் சாரதி மிக வேகமாக மோட்டார் சைக்கிளை ஓட்டியதாகவும், வீதி சமிக்ஞைகளை பின்பற்றாது குறுகிய பாதை என தெரிவித்து வேறு பாதையில் சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.</p>
<p>இதனையடுத்து மோட்டார் சைக்கிள் சாரதியிடம் மெதுவாக செல்லுமாறு ஸ்ரேயா கோரிக்கை விடுத்துள்ளார். அதற்கு அந்த சாரதி எனக்கு எப்படி வாகனத்தை ஓட்ட வேண்டும் என்று தெரியும்.</p>
<p>ஐந்து ஆண்டுகளாக நான் மோட்டார் சைக்கிள் ஓட்டி வருகிறேன் என்று கூறியுள்ளார். இதனால் இரண்டு பேருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இந்த தகராறு முற்றியதில் மோட்டார் சைக்கிளின் சாரதி ஸ்ரேயாவின் கன்னத்தில் அறைந்துள்ளார்.</p>
<p>இதில் நிலை தடுமாறிய ஸ்ரேயா கீழே விழுந்தார். இதை அப்பகுதியில் இருந்த சிலர் கையடக்க தொலைபேசியில், படம் பிடித்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். தற்போது அந்த காணொளி வைரலாகி வருகிறது.</p>
<p>இந்த சம்பவம் குறித்து ஸ்ரேயா, ஜெயநகர் பொலிஸில் முறைப்பாடு செய்துள்ளார். இதையடுத்து ஸ்ரேயா, மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் ஆகியோரை பொலிஸ் நிலையத்திற்கு வரவழைத்து விசாரணை செய்துள்ளனர்.</p>
<p>விசாரணையில் ஸ்ரேயாவை, சுகாஷ் தாக்கியது உறுதியானது. இதையடுத்து மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் மீது பொலிஸார் வழக்குப்பதிவு செய்து தொடர்ந்து விசாரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/a-rented-motorcycle-driver-attacked-a-female-passenger-in-the-middle-of-the-road-in-bengaluru/">பெண் பயணி ஒருவரை நடு வீதியில் தாக்கிய வாடகை மோட்டார் சைக்கிளின் சாரதி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மறுவாழ்வு மையத்தில் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டார்; அதிர்ச்சியூட்டும் காணொளி வெளியானது</title>
		<link>https://oruvan.com/a-man-was-brutally-attacked-at-a-rehabilitation-center-shocking-video-released/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 16 Apr 2025 05:23:22 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Bengaluru]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=17527</guid>

					<description><![CDATA[<p>பெங்களூரு அருகே உள்ள ஒரு மறுவாழ்வு மையத்தில் நோயாளி ஒருவர் கொடூரமாக தாக்கப்படும் அதிர்ச்சியூட்டும் காணொளி வெளியாகியுள்ளது. சிசிடிவி காட்சிகளில், அறைக்குள் ஒரு நபர் நான்கு பேர் முன்னிலையில் ஒரு நோயாளியை அடிப்பதைக் காட்டியது. பாதிக்கப்பட்டவர் இரண்டு ஆண்களால் இழுத்துச் செல்லப்பட்டதும் பதிவாகியுள்ளது. பெங்களூருவிலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நெலமங்கலாவில் உள்ள ஒரு தனியார் மறுவாழ்வு மையத்தில் இந்த சம்பவம் நடந்தது. பொலிஸார் இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தினர், இந்நிலையில், சம்பத்துடன் தொடர்புடைய அனைத்து சந்தேகநபர்களும் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/a-man-was-brutally-attacked-at-a-rehabilitation-center-shocking-video-released/">மறுவாழ்வு மையத்தில் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டார்; அதிர்ச்சியூட்டும் காணொளி வெளியானது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பெங்களூரு அருகே உள்ள ஒரு மறுவாழ்வு மையத்தில் நோயாளி ஒருவர் கொடூரமாக தாக்கப்படும் அதிர்ச்சியூட்டும் காணொளி வெளியாகியுள்ளது.</p>
<p>சிசிடிவி காட்சிகளில், அறைக்குள் ஒரு நபர் நான்கு பேர் முன்னிலையில் ஒரு நோயாளியை அடிப்பதைக் காட்டியது. பாதிக்கப்பட்டவர் இரண்டு ஆண்களால் இழுத்துச் செல்லப்பட்டதும் பதிவாகியுள்ளது.</p>
<p>பெங்களூருவிலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் உள்ள நெலமங்கலாவில் உள்ள ஒரு தனியார் மறுவாழ்வு மையத்தில் இந்த சம்பவம் நடந்தது.</p>
<p>பொலிஸார் இந்த சம்பவத்தை உறுதிப்படுத்தினர், இந்நிலையில், சம்பத்துடன் தொடர்புடைய அனைத்து சந்தேகநபர்களும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>பாதிக்கப்பட்டவர் மற்றொரு நபருடன் இருந்த அறைக்குள் மூன்று ஆண்கள் நுழைவதிலிருந்து காணொளி பதிவாகியுள்ளது. ஒருவர், தடியை கொண்டு பாதிக்கப்பட்டவரை இரக்கமின்றி தாக்கியுள்ளார்.</p>
<p>டைம்ஸ் ஆஃப் இந்தியாவின் கூற்றுப்படி, பாதுகாவலரின் துணிகளைத் துவைக்க மற்றும் கழிப்பறையை சுத்தம் செய்ய மறுத்ததால் பாதிக்கப்பட்டவர் தாக்கப்பட்டதாக கூறப்பட்டது.</p>
<p>குறித்த காணொளில் சமூக ஊடங்களில் பகிரப்பட்ட பின்னர் பொலிஸார் மறுவாழ்வு மையத்தை சோதனை செய்தனர்.<br />
இதனையடுத்து சட்டத்தின் தொடர்புடைய பிரிவுகளின் கீழ் பொலிஸாரால் சுயமாக வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.</p>
<blockquote class="twitter-tweet">
<p dir="ltr" lang="en">A horrifying incident has come to light from a rehabilitation centre in Bengaluru, exposing the complete collapse of law and order in the area. An inmate was brutally thrashed over 30 times by staff members after he reportedly refused to wash the warden’s clothes and clean the… <a href="https://t.co/C5m3gsviEy">pic.twitter.com/C5m3gsviEy</a></p>
<p>— Karnataka Portfolio (@karnatakaportf) <a href="https://twitter.com/karnatakaportf/status/1912189789434180041?ref_src=twsrc%5Etfw">April 15, 2025</a></p></blockquote>
<p><script async src="https://platform.twitter.com/widgets.js" charset="utf-8"></script></p>
<p>The post <a href="https://oruvan.com/a-man-was-brutally-attacked-at-a-rehabilitation-center-shocking-video-released/">மறுவாழ்வு மையத்தில் ஒருவர் கொடூரமாக தாக்கப்பட்டார்; அதிர்ச்சியூட்டும் காணொளி வெளியானது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
