<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>batticaloa Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/batticaloa/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/batticaloa/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Tue, 31 Mar 2026 09:38:32 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>batticaloa Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/batticaloa/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>மட்டக்களப்பை உலுக்கிய கடத்தல் சம்பவம் &#8211; பெண் வௌியிட்ட பகீர் தகவல்கள்</title>
		<link>https://oruvan.com/kidnapping-incident-that-shook-batticaloa-shocking-information-revealed-by-woman/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Tue, 31 Mar 2026 09:38:32 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#police]]></category>
		<category><![CDATA[batticaloa]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=47711</guid>

					<description><![CDATA[<p>மட்டக்களப்பில் நகைக்காக கடந்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் வாக்குமூலம் அளிவித்துள்ளார். இது குறித்து பேசியுள்ள அவர், நான் அற்றைய தினம் காலை 10.30 மணியளவில் மட்டக்களப்பிற்குச் செல்வதற்காக, எனது குழந்தையுடன் வவுணதீவு சந்தி பேருந்து நிலையத்திற்குச் சென்றிருந்தேன். அங்கு ஒரு வயோதிபப் பெண்ணும் பேருந்துக்காகக் காத்திருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு முச்சக்கரவண்டி எங்களை எங்கே செல்ல வேண்டும் என்று கேட்டது. நான் மட்டக்களப்பு நகருக்குச் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/kidnapping-incident-that-shook-batticaloa-shocking-information-revealed-by-woman/">மட்டக்களப்பை உலுக்கிய கடத்தல் சம்பவம் &#8211; பெண் வௌியிட்ட பகீர் தகவல்கள்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>மட்டக்களப்பில் நகைக்காக கடந்தப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், அதில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் வாக்குமூலம் அளிவித்துள்ளார்.</p>
<p>இது குறித்து பேசியுள்ள அவர்,</p>
<p>நான் அற்றைய தினம் காலை 10.30 மணியளவில் மட்டக்களப்பிற்குச் செல்வதற்காக, எனது குழந்தையுடன் வவுணதீவு சந்தி பேருந்து நிலையத்திற்குச் சென்றிருந்தேன்.</p>
<p>அங்கு ஒரு வயோதிபப் பெண்ணும் பேருந்துக்காகக் காத்திருந்தார். அப்போது அங்கு வந்த ஒரு முச்சக்கரவண்டி எங்களை எங்கே செல்ல வேண்டும் என்று கேட்டது.</p>
<p>நான் மட்டக்களப்பு நகருக்குச் செல்ல வேண்டும் என்று கூறியபோது, எம்மை ஏறுமாறு கூறினர்.</p>
<p>என்னிடம் போதிய பணம் இல்லை என்று கூறியபோது, 100 ரூபா மட்டும் தருமாறு கூறினர். அதனை ஏற்று நானும் அந்த வயோதிபப் பெண்ணும் அதில் ஏறினோம்.</p>
<p>முச்சக்கரவண்டி நகரை நோக்கிச் சென்றபோது, மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு அருகில் அந்த வயோதிபப் பெண் இறங்கிக்கொண்டார். பின்னர், என்னை எங்கு விட வேண்டும் என்று கேட்டபோது, சத்தார் புடவைக்கடை வீதியில் விடுமாறு கூறினேன்.</p>
<p>அங்கு என்னை இறக்கிவிடும்போது, அந்த முச்சக்கரவண்டியில் இருந்த ஒரு பெண், தான் சேலை (Saree) எடுக்கப் போவதாகவும், அதுவரை தன்னுடன் வருமாறும் என்னைக் கேட்டுக்கொண்டார். நான் சேலை கடைக்கு முன்னால் காத்திருப்பதாகக் கூறினேன்.</p>
<p>நான் குழந்தையுடன் அருகிலிருந்த நகைக்கடைக்குச் சென்று, அடகு வைத்திருந்த தங்க மோதிரத்தை 24,000 ரூபா செலுத்தி மீட்டுக்கொண்டேன்.</p>
<p>மீண்டும் அந்தப் பெண் சொன்ன கடைக்கு வந்தபோது, அவர் முச்சக்கரவண்டி ஓட்டுநருடன் தொலைபேசியில் பேசிவிட்டு, எங்களை மணிக்கூட்டுக் கோபுரப் பகுதிக்கு வருமாறு கூறினார்.</p>
<p>நானும் அந்தப் பெண்ணும் அங்கிருந்து மணிக்கூட்டுக் கோபுரம் நோக்கிச் சென்று, மீண்டும் அதே முச்சக்கரவண்டியில் ஏறினோம்.</p>
<p>தொடர்ந்து முச்சக்கரவண்டி பொதுச்சந்தை வீதி வழியாகச் சென்று ஓரிடத்தில் நின்றது. அங்கிருந்து பிரதான பேருந்து நிலைய வீதியூடாக வவுணதீவு நோக்கிப் பயணித்தது.</p>
<p>வலையிறவுப் பாலத்தைக் கடக்கும்போது, அந்தப் பெண் மூன்று குளிர்பானப் (Juice) போத்தல்களை வாங்கினார்.</p>
<p>எனது மகளுக்கும் அவருக்கும் பச்சை நிறக் குளிர்பானத்தையும், எனக்கு விளாம்பழக் குளிர்பானத்தையும் தந்தார். நான் அதனை அருந்தினேன்.</p>
<p>வவுணதீவு சந்தியில் அந்தப் பெண் இறங்கிக்கொண்டார். அதன் பின்னர், ஒரு இளைஞன் கையில் கத்தியுடன் (தாள்கத்தி) அந்த முச்சக்கரவண்டியில் ஏறினார்.</p>
<p>அவர் ஏன் கத்தியுடன் ஏறுகிறார் என்று நான் கேட்டபோது, மாட்டிற்குப் புல் வெட்டுவதற்காகச் செல்வதாகக் கூறினர். நான் என்னை தாண்டியடியில் இறக்கிவிடுமாறு கேட்டபோது, அதற்குச் சம்மதித்தனர்.</p>
<p>ஆனால், முச்சக்கரவண்டி கன்னங்குடா சந்தியூடாகத் தாண்டியடி நோக்கிச் செல்லாமல், பாவற்கொடிச்சேனை பகுதியை நோக்கிச் சென்றது.</p>
<p>ஏன் இந்த வீதியில் செல்கிறீர்கள் என்று கேட்டபோது, அந்த இளைஞனை இறக்கிவிட்டு என்னை விடுவதாகக் கூறினர். அடுத்த சில நிமிடங்களில் நான் மயக்கமடைந்தேன்.</p>
<p>நான் மயக்கம் தெளிந்து பார்த்தபோது, நான் நீரில் மூழ்கியிருந்தேன். மேலே பார்த்தபோது வானம் தெரிந்தது.</p>
<p>&#8220;வீட்டில் வெள்ளம் ஏறிவிட்டதா? ஏன் வானம் தெரிகிறது?&#8221; என்று குழப்பமடைந்த நிலையில், தப்பிப்பதற்காக நீரில் மூழ்கி எழுந்தேன்.</p>
<p>இரண்டு மூன்று முறை நீரில் மூழ்கி எழுந்த பின், &#8220;அம்மா, அம்மா&#8221; என்றும் எனது கணவரைப் பெயரிட்டும் சத்தமிட்டேன். &#8220;மீன்பிடிக்கச் சென்றவர் இவ்வளவு நேரமாக என்ன செய்கிறீர்கள்?&#8221; என்று கத்தினேன்.</p>
<p>அதன் பின்னரே எனது பிள்ளையைத் தேடி அலறினேன். அப்போது யாரோ ஒரு சிலர் வந்து எனது கையில் கயிற்றைக் கொடுத்து என்னைக் காப்பாற்றினார்கள் என தெரிவித்தார்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/kidnapping-incident-that-shook-batticaloa-shocking-information-revealed-by-woman/">மட்டக்களப்பை உலுக்கிய கடத்தல் சம்பவம் &#8211; பெண் வௌியிட்ட பகீர் தகவல்கள்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மட்டக்களப்பில் தீர்வின்றி தொடரும் யானை மனித மோதல் &#8211; ஒருவர் உயிரிழப்பு</title>
		<link>https://oruvan.com/human-elephant-conflict-continues-without-resolution-in-batticaloa-one-person-killed/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Fri, 27 Feb 2026 06:21:40 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[batticaloa]]></category>
		<category><![CDATA[human-elephant conflict]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=45899</guid>

					<description><![CDATA[<p>மட்டு முனைக்காடு கிராமத்திற்குள் அதிகாலையில் புகுந்த யானையின் தாக்குதலில் பெண் ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம். மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட முனைக்காடு கிராமத்திற்குள் இன்று (27) அதிகாலை உட்புக்குந்த காட்டு யானை ஒன்று மக்கள் குடியுருப்பு பிரதேசத்துக்குள் பிரவேசித்துள்ளது. இதன்போது வீதியால் சென்றுகொண்டிருந்த யானை திடீரென மக்கள் மனைகளுக்குள் புகுந்து அட்டகாசம் புரிந்துள்ளது அதிகாலை வேளையில் புகுந்த யானை வீட்டில் தங்களது கடமைகளை நிறைவேற்றிக்கொண்டிருந்த பெண்களை எதிர்கொண்டு தாக்கியதுடன் காட்டு யானை தாக்குதலில்75 வயது மதிக்கதக்க பெண்ணொருவர் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/human-elephant-conflict-continues-without-resolution-in-batticaloa-one-person-killed/">மட்டக்களப்பில் தீர்வின்றி தொடரும் யானை மனித மோதல் &#8211; ஒருவர் உயிரிழப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>மட்டு முனைக்காடு கிராமத்திற்குள் அதிகாலையில் புகுந்த யானையின் தாக்குதலில் பெண் ஒருவர் உயிரிழப்பு இருவருக்கு காயம்.</p>
<p>மட்டக்களப்பு கொக்கட்டிச்சோலை பொலிஸ்பிரிவுக்குட்பட்ட முனைக்காடு கிராமத்திற்குள் இன்று (27) அதிகாலை உட்புக்குந்த காட்டு யானை ஒன்று மக்கள் குடியுருப்பு பிரதேசத்துக்குள் பிரவேசித்துள்ளது.</p>
<p>இதன்போது வீதியால் சென்றுகொண்டிருந்த யானை திடீரென மக்கள் மனைகளுக்குள் புகுந்து அட்டகாசம் புரிந்துள்ளது</p>
<p>அதிகாலை வேளையில் புகுந்த யானை வீட்டில் தங்களது கடமைகளை நிறைவேற்றிக்கொண்டிருந்த பெண்களை எதிர்கொண்டு தாக்கியதுடன் காட்டு யானை தாக்குதலில்75 வயது மதிக்கதக்க பெண்ணொருவர் உயிரிழந்துள்ளார்.</p>
<p>அத்துடன் மேலும் இரண்டு பெண்கள் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.</p>
<p>மட்டக்களப்பின் நகரம் கிராமம் என அனைத்து பகுதிகளிலும் யானைகளின் அட்டகாசம் முடிவின்றி தொடர்கிறது</p>
<p>The post <a href="https://oruvan.com/human-elephant-conflict-continues-without-resolution-in-batticaloa-one-person-killed/">மட்டக்களப்பில் தீர்வின்றி தொடரும் யானை மனித மோதல் &#8211; ஒருவர் உயிரிழப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>திக்கோடை பகுதியில் காட்டுயானை ஒன்று உயிரிழந்த நிலையில் மீட்பு</title>
		<link>https://oruvan.com/a-dead-wild-elephant-was-rescued-in-the-dhikkodai-area/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Thu, 12 Feb 2026 07:17:53 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[batticaloa]]></category>
		<category><![CDATA[Wild Elephant]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=44962</guid>

					<description><![CDATA[<p>மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்கோடை பகுதியில் காட்டுயானை ஒன்று உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திக்கோடை புதிய வீட்டுத்திட்டப்பகுதிக்கு அருகாமையில் நேற்று இரவு (11.02.2026) உணவு தேடி வந்த யானையே மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். விளைநிலங்களைப் பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கியே இவ்வாறு உயிரிழந்துள்ளது. இச்சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்த வெல்லாவெளி பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டனர். இதன் அடிப்படையில், மின்சார வேலி அமைக்கப்பட்டிருந்த காணியின் உரிமையாளரை [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/a-dead-wild-elephant-was-rescued-in-the-dhikkodai-area/">திக்கோடை பகுதியில் காட்டுயானை ஒன்று உயிரிழந்த நிலையில் மீட்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>மட்டக்களப்பு மாவட்டத்தின் வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட திக்கோடை பகுதியில் காட்டுயானை ஒன்று உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p>
<p>திக்கோடை புதிய வீட்டுத்திட்டப்பகுதிக்கு அருகாமையில் நேற்று இரவு (11.02.2026) உணவு தேடி வந்த யானையே மின்சாரத் தாக்குதலுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p>
<p>விளைநிலங்களைப் பாதுகாப்பதற்காக அமைக்கப்பட்டிருந்த மின்சார வேலியில் சிக்கியே இவ்வாறு உயிரிழந்துள்ளது.</p>
<p>இச்சம்பவம் தொடர்பில் தகவல் அறிந்த வெல்லாவெளி பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை மேற்கொண்டனர்.</p>
<p>இதன் அடிப்படையில், மின்சார வேலி அமைக்கப்பட்டிருந்த காணியின் உரிமையாளரை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் நேற்று கைது செய்தனர்.</p>
<p>கைது செய்யப்பட்டவர் மேலதிக விசாரணைகளின் பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.</p>
<p>தற்பொழுது வனவிலங்கு அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் வெல்லாவெளி பொலிஸார் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.</p>
<p>அண்மைக்காலமாக போரதீவுப்பற்று மற்றும் அதனைச் சூழவுள்ள பகுதிகளில் மனித &#8211; யானை மோதல்கள் அதிகரித்து வரும் நிலையில், இவ்வாறான மின்சார வேலி அமைக்கும் நடவடிக்கைகள் யானைகளின் உயிருக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ளதாக சூழலியலாளர்கள் கவலை தெரிவித்துள்ளனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/a-dead-wild-elephant-was-rescued-in-the-dhikkodai-area/">திக்கோடை பகுதியில் காட்டுயானை ஒன்று உயிரிழந்த நிலையில் மீட்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மட்டக்களப்பு நகரில் நீல நிறமாக மாறிய கிணற்று நீர்</title>
		<link>https://oruvan.com/well-water-turns-blue-in-batticaloa-city/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Thu, 11 Dec 2025 10:26:45 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[batticaloa]]></category>
		<category><![CDATA[கிணற்று நீர்]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=40444</guid>

					<description><![CDATA[<p>மட்டக்களப்பு நகர் பொற் தொழிலாளர் வீதியில் உள்ள வீடு ஒன்றின் கிணற்று நீர் திடீரென நீல நிறமாக மாறியுள்ள சம்பவம் இன்று வியாழக்கிழமை (11) பதிவாகியுள்ளது. குறித்த வீட்டில் அமைந்துள்ள கிணற்று நீரை வழமைபோல இன்று காலையில் தண்ணீர் தொட்டியை நிரப்புவதற்கு தண்ணீர் பம்பை இயக்கியவுடன் தண்ணீர் நீல நிறத்தில் வெளிவந்துள்ளது. இதையடுத்து உடனடியாக தண்ணீர் பம்பை நிறுத்திவிட்டு கிணற்றில் வாளியில் தண்ணீரை எடுத்து சோதனை செய்தபோது அது நீல நிறத்தில் கலர் மாறியுள்ளதை உறுதிபடுத்தினார். கிணற்றை [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/well-water-turns-blue-in-batticaloa-city/">மட்டக்களப்பு நகரில் நீல நிறமாக மாறிய கிணற்று நீர்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>மட்டக்களப்பு நகர் பொற் தொழிலாளர் வீதியில் உள்ள வீடு ஒன்றின் கிணற்று நீர் திடீரென நீல நிறமாக மாறியுள்ள சம்பவம் இன்று வியாழக்கிழமை (11) பதிவாகியுள்ளது.</p>
<p>குறித்த வீட்டில் அமைந்துள்ள கிணற்று நீரை வழமைபோல இன்று காலையில் தண்ணீர் தொட்டியை நிரப்புவதற்கு தண்ணீர் பம்பை இயக்கியவுடன் தண்ணீர் நீல நிறத்தில் வெளிவந்துள்ளது.</p>
<p>இதையடுத்து உடனடியாக தண்ணீர் பம்பை நிறுத்திவிட்டு கிணற்றில் வாளியில் தண்ணீரை எடுத்து சோதனை செய்தபோது அது நீல நிறத்தில் கலர் மாறியுள்ளதை உறுதிபடுத்தினார்.</p>
<p>கிணற்றை எட்டி பார்த்த போதும்  கிணற்று நீரும் நீல நிறத்தில் இருப்பதை கண்டு அதிசயமடைந்தார். இது தொடர்பாக கிராம உத்தியோகத்தருக்கு அறிவித்துள்ளதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்தார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/well-water-turns-blue-in-batticaloa-city/">மட்டக்களப்பு நகரில் நீல நிறமாக மாறிய கிணற்று நீர்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மட்டக்களப்பில் அடைமழை &#8211; வெள்ளத்தில் மூழ்கிய வீதிகள்</title>
		<link>https://oruvan.com/heavy-rain-in-batticaloa-flooded-streets/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 26 Nov 2025 09:31:14 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[#oruvan #news]]></category>
		<category><![CDATA[batticaloa]]></category>
		<category><![CDATA[weather]]></category>
		<category><![CDATA[அடைமழை]]></category>
		<category><![CDATA[ஒருவன்]]></category>
		<category><![CDATA[ஒருவன் செய்திகள்]]></category>
		<category><![CDATA[மட்டக்களப்பு]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=39321</guid>

					<description><![CDATA[<p>மட்டக்களப்பு மாவட்டத்தில் காற்றுடன் பெய்துவரும் அடைமழை காரணமாக மட்டக்களப்பு நகரத்தில் பல இடங்களில் மரம் வீழ்ந்து போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டதுடன் பல இடங்களில் வெள்ளத்தினால் வீதிகள் மூழ்கியுள்ளன. இன்று (26) அதிகாலை முதல் பெய்த இடைவிடாத பலத்த காற்றுடனான மழையினால் மட்டக்களப்பு நகர் பகுதியில் உள்ள பார் வீதியில் பாரிய மரமொன்று சரிந்து விழுந்துள்ளதனால் வீதி போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன், சில பகுதிகளில் மின்சாரமும் தடைப்பட்டுள்ளது. மட்டக்களப்பு மாநகர சபையினால் முறிந்து விழுந்த மரங்கள் வெட்டி அகற்றப்பட்டுள்ளதுடன், மின்சார சபையினால் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/heavy-rain-in-batticaloa-flooded-streets/">மட்டக்களப்பில் அடைமழை &#8211; வெள்ளத்தில் மூழ்கிய வீதிகள்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>மட்டக்களப்பு மாவட்டத்தில் காற்றுடன் பெய்துவரும் அடைமழை காரணமாக மட்டக்களப்பு நகரத்தில் பல இடங்களில் மரம் வீழ்ந்து போக்குவரத்துகள் பாதிக்கப்பட்டதுடன் பல இடங்களில் வெள்ளத்தினால் வீதிகள் மூழ்கியுள்ளன.</p>
<p>இன்று (26) அதிகாலை முதல் பெய்த இடைவிடாத பலத்த காற்றுடனான மழையினால் மட்டக்களப்பு நகர் பகுதியில் உள்ள பார் வீதியில் பாரிய மரமொன்று சரிந்து விழுந்துள்ளதனால் வீதி போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன், சில பகுதிகளில் மின்சாரமும் தடைப்பட்டுள்ளது.</p>
<p>மட்டக்களப்பு மாநகர சபையினால் முறிந்து விழுந்த மரங்கள் வெட்டி அகற்றப்பட்டுள்ளதுடன், மின்சார சபையினால் மின் துண்டிக்கப்பட்ட பகுதிகளின் மின் இணைப்புக்கள் சீர் செய்யப்பட்டது.</p>
<p>மட்டக்களப்பின் நகர்ப்பகுதியான கூழாவடி, திசவீரசிங்கம் சதுக்கம், இருதயபுரம், கறுவப்பங்கேணி, பூம்புகார், புதூர், திமிலைதீவு, சேற்றுக்குடா உட்பட பல இடங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதை காணமுடிகின்றது.</p>
<p>இதேபோன்று கல்லடி பகுதியிலும் மரங்கள் முறிந்ததனால் வீதி போக்குவரத்து தடைப்பட்டுள்ளதுடன், பல பகுதிகளில் வெள்ள நீர் தேங்கி காணப்படுவதுடன், பல வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளதனால் மக்களது இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.</p>
<p>அத்துடன் மட்டக்களப்பு நகரில் உள்ள இலங்கை திறந்த பல்கலைக்கழகமும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளமை காணமுடிகின்றது.</p>
<p>நேற்றைய தினம் மட்டக்களப்பு நகரில் 93.6 மில்லி மீற்றர் மழை பதிவாகியுள்ளதாக வானிலை அவதான நிலையம் தெரிவித்துள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/heavy-rain-in-batticaloa-flooded-streets/">மட்டக்களப்பில் அடைமழை &#8211; வெள்ளத்தில் மூழ்கிய வீதிகள்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>வாழைச்சேனை பிரதேசசபையின் தவிசாளர் சுதாகரன் உள்ளிட்டவர்கள் நீதிமன்றில் சரண்</title>
		<link>https://oruvan.com/sudhakaran-the-chairman-of-the-valaichchenai-pradeshiya-sabha-and-others-surrender-before-the-court/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Tue, 25 Nov 2025 09:00:42 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[#oruvan #news]]></category>
		<category><![CDATA[batticaloa]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=39167</guid>

					<description><![CDATA[<p>தொல்பொருள் இடங்களுக்குரிய பெயர்ப்பலகையினை அகற்றியது தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் அடிப்படையில் வாழைச்சேனை பொலிஸாரினால் தேடப்பட்டுவந்த வாழைச்சேனை பிரதேசசபையின் தவிசாளர் சுதாகரன் மற்றும் பிரதி தவிசாளர் உறுப்பினர் உட்பட மூன்று பேர் இன்றைய தினம் வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றில் சரணடைந்துள்ளனர். கடந்த 22ஆம் திகதி வாழைச்சேனை பிரதேச செயலகப்பிரிவுகளில் தொல்பொருள் திணைக்களத்தினால் தொல்பொருள் இடங்கள் என அடையாளப்படுத்தப்பட்ட இடங்களுக்கு பெயர்பலகைகள் பொருத்தப்பட்டிருந்தன. வாழைச்சேனை பிரதேசசபைக்குட்பட்ட வீதிகளில் தங்களது அனுமதிகள் பெறப்படாமல் குறித்த பெயர்ப்பலகைகள் இடப்பட்டதாக தெரிவித்து வாழைச்சேனை பிரதேசசபை [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/sudhakaran-the-chairman-of-the-valaichchenai-pradeshiya-sabha-and-others-surrender-before-the-court/">வாழைச்சேனை பிரதேசசபையின் தவிசாளர் சுதாகரன் உள்ளிட்டவர்கள் நீதிமன்றில் சரண்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தொல்பொருள் இடங்களுக்குரிய பெயர்ப்பலகையினை அகற்றியது தொடர்பில் முன்னெடுக்கப்படும் விசாரணைகளின் அடிப்படையில் வாழைச்சேனை பொலிஸாரினால் தேடப்பட்டுவந்த வாழைச்சேனை பிரதேசசபையின் தவிசாளர் சுதாகரன் மற்றும் பிரதி தவிசாளர் உறுப்பினர் உட்பட மூன்று பேர் இன்றைய தினம் வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றில் சரணடைந்துள்ளனர்.</p>
<p>கடந்த 22ஆம் திகதி வாழைச்சேனை பிரதேச செயலகப்பிரிவுகளில் தொல்பொருள் திணைக்களத்தினால் தொல்பொருள் இடங்கள் என அடையாளப்படுத்தப்பட்ட இடங்களுக்கு பெயர்பலகைகள் பொருத்தப்பட்டிருந்தன.</p>
<p>வாழைச்சேனை பிரதேசசபைக்குட்பட்ட வீதிகளில் தங்களது அனுமதிகள் பெறப்படாமல் குறித்த பெயர்ப்பலகைகள் இடப்பட்டதாக தெரிவித்து வாழைச்சேனை பிரதேசசபை தவிசாளரினால் குறித்த பெயர்ப்பலகைகள் அகற்றப்பட்டன.</p>
<p>இது தொடர்பில் தொல்பொருள் திணைக்களத்தினால் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவுசெய்யப்பட்டிருந்த நிலையிலும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் வழங்கிய உத்தரவுக்கு அமைவாகவும் விசாரணைகளை வாழைச்சேனை பொலிஸார் முன்னெடுத்துவந்தனர்.</p>
<p>இதன்கீழ் வாழைச்சேனை பிரதேசபைக்குள் இருந்த தொல்பொருள் இடங்களைக்குறிக்கும் பெயர்ப்பலகைகளை நேற்றைய தினம் வாழைச்சேனை பொலிஸார் கைப்பற்றியதுடன் அது தொடர்பில் ஒருவரை கைதுசெய்திருந்தனர்.</p>
<p>இது தொடர்பில் வாழைச்சேனை பிரதேசசபையின் தவிசாளர், பிரதி தவிசாளர் உறுப்பினர் ஒருவரை கைதுசெய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டிருந்தபோதிலும் இன்றைய தினம் வாழைச்சேனை நீதிவான் நீதிமன்றில் மூவரும் சரணடைந்தனர்.</p>
<p>இன்றைய தினம் வாழைச்சேனை பிரதேசசபையின் தவிசாளர் மற்றும் பிரதி தவிசாளர் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணியும் தமிழரசுக்கட்சியின் பதில் செயலாளருமான எம்.ஏ.சுமந்திரன் ஆஜராகியுள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/sudhakaran-the-chairman-of-the-valaichchenai-pradeshiya-sabha-and-others-surrender-before-the-court/">வாழைச்சேனை பிரதேசசபையின் தவிசாளர் சுதாகரன் உள்ளிட்டவர்கள் நீதிமன்றில் சரண்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மட்டக்களப்பில் பெயர் பலகைகளை நீக்கிய சம்பவம்  &#8211;  அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை</title>
		<link>https://oruvan.com/incident-of-removing-name-boards-in-batticaloa-action-taken-by-the-government/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 24 Nov 2025 06:58:04 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[#oruvan #news]]></category>
		<category><![CDATA[ananda wijepala]]></category>
		<category><![CDATA[batticaloa]]></category>
		<category><![CDATA[sl parliament]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=39077</guid>

					<description><![CDATA[<p>மட்டக்களப்பு &#8211; வாழைச்சேனை மற்றும் கொக்கட்டிச்சோலை பகுதிகளில் அடையாளம் காணப்பட்ட தொல்பொருள் இடங்களுக்குச் செல்லும் பாதைகளை அடையாளம் காண்பதற்காக நிறுவப்பட்ட பல பெயர்ப்பலகைகளை அகற்றியது தொடர்பான ஆதாரங்களை இன்று (24) நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொல்பொருள் திணைக்களத்தால் நிறுவப்பட்ட பெயர்ப்பலகைகள் கடந்த 22 ஆம் திகதி அகற்றப்பட்டதாகவும், பெயர்ப்பலகைகளை அகற்ற முயன்ற நபர்கள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/incident-of-removing-name-boards-in-batticaloa-action-taken-by-the-government/">மட்டக்களப்பில் பெயர் பலகைகளை நீக்கிய சம்பவம்  &#8211;  அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>மட்டக்களப்பு &#8211; வாழைச்சேனை மற்றும் கொக்கட்டிச்சோலை பகுதிகளில் அடையாளம் காணப்பட்ட தொல்பொருள் இடங்களுக்குச் செல்லும் பாதைகளை அடையாளம் காண்பதற்காக நிறுவப்பட்ட பல பெயர்ப்பலகைகளை அகற்றியது தொடர்பான ஆதாரங்களை இன்று (24) நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.</p>
<p>குறித்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.</p>
<p>தொல்பொருள் திணைக்களத்தால் நிறுவப்பட்ட பெயர்ப்பலகைகள் கடந்த 22 ஆம் திகதி அகற்றப்பட்டதாகவும், பெயர்ப்பலகைகளை அகற்ற முயன்ற நபர்கள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.</p>
<p>வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் உள்ள தேவிமலை தொல்பொருள் தளத்திற்கு செல்லும் பாதையை அடையாளம் காண நிறுவப்பட்ட ஆறு பெயர்ப்பலகைகள் அகற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.</p>
<p>வாழைச்சேனை பிரதேச சபையின் தலைவர் எஸ். சுதாகரன் மற்றும் பிரதிச் செயலாளர் பத்மநீதன் ஆகியோர் இதில் அடங்குவதாக அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.</p>
<p>அதன்படி, வாழைச்சேனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில், தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த  விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்.</p>
<p>இதேவேளை, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவில் தொல்பொருள் இடமாக அடையாளம் காணப்பட்டுள்ள சாந்தமலை கோவிலுக்குச் செல்லும் பாதையைக் குறிக்கும் இரண்டு பெயர் பலகைகள் கடந்த 21ஆம் திகதி ஒரு குழுவினால் அகற்றப்பட்டதாக அமைச்சர் நாடாளுமன்றில் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/incident-of-removing-name-boards-in-batticaloa-action-taken-by-the-government/">மட்டக்களப்பில் பெயர் பலகைகளை நீக்கிய சம்பவம்  &#8211;  அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>குருக்கள்மடம் பகுதியில் விபத்துக்குள்ளான முச்சக்கர வண்டி &#8211; இளைஞர்கள் மூவர் காயம்</title>
		<link>https://oruvan.com/three-youths-injured-in-three-wheeler-accident-in-gurukalmadam-area/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sat, 08 Nov 2025 05:19:31 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#accident]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[03]]></category>
		<category><![CDATA[batticaloa]]></category>
		<category><![CDATA[injured]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=37673</guid>

					<description><![CDATA[<p>மட்டக்களப்பு குருக்கள்மடம் பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இளைஞர்கள் மூவர் காயமடைந்துள்ளனர். இந்த விபத்து நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மட்டக்களப்பிலிருந்து மாங்காடு நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்தில் காயமடைந்த 03 இளைஞர்களும் செட்டிபாளையம் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், மேலதிக சிகிச்சைக்காக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/three-youths-injured-in-three-wheeler-accident-in-gurukalmadam-area/">குருக்கள்மடம் பகுதியில் விபத்துக்குள்ளான முச்சக்கர வண்டி &#8211; இளைஞர்கள் மூவர் காயம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>மட்டக்களப்பு குருக்கள்மடம் பகுதியில் முச்சக்கர வண்டி ஒன்று வேகக் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் இளைஞர்கள் மூவர் காயமடைந்துள்ளனர்.</p>
<p>இந்த விபத்து நேற்றிரவு இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>மட்டக்களப்பிலிருந்து மாங்காடு நோக்கி பயணித்த முச்சக்கர வண்டியே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.</p>
<p>விபத்தில் காயமடைந்த 03 இளைஞர்களும் செட்டிபாளையம் பிரதேச வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில்,<br />
மேலதிக சிகிச்சைக்காக களுவாஞ்சிகுடி ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர்.</p>
<p>இந்நிலையில் விபத்து தொடர்பான மேலதிக விசாரணைகளை களுவாஞ்சிகுடி பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/three-youths-injured-in-three-wheeler-accident-in-gurukalmadam-area/">குருக்கள்மடம் பகுதியில் விபத்துக்குள்ளான முச்சக்கர வண்டி &#8211; இளைஞர்கள் மூவர் காயம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ராஜபக்ச குடும்பத்தினரை மீளவும் ஆட்சிக்கு கொண்டுவரும் நோக்கம் தங்களுக்கு இல்லை &#8211; இலங்கை தமிழசு கட்சி திட்டவட்டம்</title>
		<link>https://oruvan.com/they-have-no-intention-of-bringing-the-rajapaksa-family-back-to-power-sri-lanka-tamil-party-manifesto/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 05 Nov 2025 05:59:48 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[batticaloa]]></category>
		<category><![CDATA[Shanakiyan Rasamanickam]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=37382</guid>

					<description><![CDATA[<p>தற்போதைய அரசாங்கதை தோற்கடித்து, ராஜபக்ச குடும்பத்தினரை அல்லது ரணிலை மீளவும் ஆட்சிக்கு கொண்டுவரும் நோக்கம் தங்களுக்கு இல்லை என இலங்கை தமிழசு கட்சி தெரிவித்துள்ளது. அந்தக்  கட்சியின்  மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இவ்வாறு தெரிவித்துள்ளார். இதன்படி, மக்களின் பிரச்சிகைகளை தீர்த்து வைக்க வேண்டும் எனவும் இதுவே எமது கோரிக்கையாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட வட்டாரங்களுக்கு நேற்று மாலை விஜயம் செய்த அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இவ்வாறு கூறியுள்ளார். உகண்டாவில் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/they-have-no-intention-of-bringing-the-rajapaksa-family-back-to-power-sri-lanka-tamil-party-manifesto/">ராஜபக்ச குடும்பத்தினரை மீளவும் ஆட்சிக்கு கொண்டுவரும் நோக்கம் தங்களுக்கு இல்லை &#8211; இலங்கை தமிழசு கட்சி திட்டவட்டம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தற்போதைய அரசாங்கதை தோற்கடித்து, ராஜபக்ச குடும்பத்தினரை அல்லது ரணிலை மீளவும் ஆட்சிக்கு கொண்டுவரும் நோக்கம் தங்களுக்கு இல்லை என இலங்கை தமிழசு கட்சி தெரிவித்துள்ளது.</p>
<p>அந்தக்  கட்சியின்  மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.</p>
<p>இதன்படி, மக்களின் பிரச்சிகைகளை தீர்த்து வைக்க வேண்டும் எனவும் இதுவே எமது கோரிக்கையாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.</p>
<p>மட்டக்களப்பு மாநகரசபைக்குட்பட்ட வட்டாரங்களுக்கு நேற்று மாலை விஜயம் செய்த அவர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.</p>
<p>உகண்டாவில் ராஜபக்ச குடும்பத்தினர் கொள்ளையடித்த 18 பில்லியன் டொலர்கள் உள்ளதாக சொன்னார்கள்.அவற்றில் ஒரு வீதத்தினை இந்த நாட்டுக்கு கொண்டுவந்தாலும் பல பிரச்சினைகளை தீர்க்கமுடியும் எனவும் அவர் தெரிவித்தார்.</p>
<p>இந்த சந்திப்பில் மட்டக்களப்பு மாநகரசபையின் பிரதி முதல்வர் டினேஸ் உட்பட பொதுமக்கள் பலரும் கலந்துகொண்டனர்.</p>
<p>இதன்போது சீலாமுனை பகுதி மக்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து கலந்துரையாடப்பட்டது.</p>
<p>தற்போது மழைகாலம் ஆரம்பிக்கவுள்ள நிலையில் வெள்ளம் ஏற்படாமல் தடுப்பதற்கு முன்னெடுக்கப்படவேண்டிய விடயங்கள் குறித்து கலந்துரையாடப்பட்டமை குறிப்பிடத்தக்கது</p>
<p>The post <a href="https://oruvan.com/they-have-no-intention-of-bringing-the-rajapaksa-family-back-to-power-sri-lanka-tamil-party-manifesto/">ராஜபக்ச குடும்பத்தினரை மீளவும் ஆட்சிக்கு கொண்டுவரும் நோக்கம் தங்களுக்கு இல்லை &#8211; இலங்கை தமிழசு கட்சி திட்டவட்டம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மற்றும் தங்கத்தை தேடி விசேட அதிரடிப்படையினர் அகழ்வு பணி</title>
		<link>https://oruvan.com/special-task-force-digs-up-ltte-weapons-and-gold/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 29 Sep 2025 11:01:06 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[batticaloa]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=33890</guid>

					<description><![CDATA[<p>விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மற்றும் தங்கத்தை தேடி மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள புளியடிமடு காயங்குடா பகுதியில் தனியார் காணி பகுதியில் நீதிமன்ற உத்தரவு பெற்று அகழ்வு பணியை விசேட அதிரடிப்படையினர் இன்று திங்கட்கிழமை (29) முன்னெடுத்துள்ளனர். கல்லடி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் தனியார் காணி பகுதியில் கடந்த காலத்தில் விடுதலைப் புலிகளின் முகம் இருந்துள்ளது. அந்த காலப்பகுதியில் நிலத்தில் ஆயுதங்கள் மற்றும் தங்கத்தை புதைத்து மறைத்து வைத்துள்ளதை அகழ்ந்து எடுப்பதற்காக விசேட அதிரடிப்படையினர் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/special-task-force-digs-up-ltte-weapons-and-gold/">விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மற்றும் தங்கத்தை தேடி விசேட அதிரடிப்படையினர் அகழ்வு பணி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மற்றும் தங்கத்தை தேடி மட்டக்களப்பு வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள புளியடிமடு காயங்குடா பகுதியில் தனியார் காணி பகுதியில் நீதிமன்ற உத்தரவு பெற்று அகழ்வு பணியை விசேட அதிரடிப்படையினர் இன்று திங்கட்கிழமை (29) முன்னெடுத்துள்ளனர்.</p>
<p>கல்லடி விசேட அதிரடிப்படையினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் தனியார் காணி பகுதியில் கடந்த காலத்தில் விடுதலைப் புலிகளின் முகம் இருந்துள்ளது.</p>
<p>அந்த காலப்பகுதியில் நிலத்தில் ஆயுதங்கள் மற்றும் தங்கத்தை புதைத்து மறைத்து வைத்துள்ளதை அகழ்ந்து எடுப்பதற்காக விசேட அதிரடிப்படையினர் நீதிமன்ற உத்தரவு பெற்று பெக்கோ மூலம் அகழ்வு நடவடிக்கையை இன்று முன்னெடுத்தனர்</p>
<p>இதன் போது வவுணதீவு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி, கல்லடி விசேட அதிரடிப்படை பொறுப்பாளர், கிராம உத்தியோகத்தர், பிரதேச செயலக உத்தியோகத்தர், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் கலந்து கொண்டு அகழ்வு பணியை காலை 9 மணி தொடக்கம் பகல் 1.00 மணி வரை மேற்கொண்ட போதும் எதுவும் கண்டுபிடிக்கப்படவில்லை.</p>
<p>இதையடுத்து அழ்வு பணி நிறுத்தப்பட்டு முடிவுக்கு கொண்டுவந்து அங்கிருந்து விசேட அதிரடிப்படையினர் வெளியேறினர்.</p>
<p>இதேவேளை குறித்த பகுதி கடந்த காலத்தில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் இருந்ததுடன், விடுதலைப் புலிகளின் முகாம் அமைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/special-task-force-digs-up-ltte-weapons-and-gold/">விடுதலைப் புலிகளின் ஆயுதங்கள் மற்றும் தங்கத்தை தேடி விசேட அதிரடிப்படையினர் அகழ்வு பணி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
