<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Badulla Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/badulla/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/badulla/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Mon, 05 Jan 2026 04:08:54 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>Badulla Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/badulla/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>இயல்பு நிலைக்கு திரும்பிய பாடசாலைகள்!</title>
		<link>https://oruvan.com/schools-back-to-normal/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 05 Jan 2026 04:08:54 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Badulla]]></category>
		<category><![CDATA[Cyclone Ditwah]]></category>
		<category><![CDATA[Disaster Damage]]></category>
		<category><![CDATA[Disaster Death toll Rises]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=42364</guid>

					<description><![CDATA[<p>சீரற்ற வானிலை மற்றும் இயற்கை அனர்த்தங்களால் பெரிதும் பாதிக்கப்பட்ட பதுளை மாவட்டத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளும், புதிய கல்வி ஆண்டின் முதலாம் தவணைக்காக இன்றுமுதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது. மாவட்டச் செயலாளர் பிரபாத் அபேவர்தன இதனை தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாக நிலவிய கடும் மழை மற்றும் நிலச்சரிவு அபாயம் காரணமாக இந்தப் பாடசாலைகள் மூடப்பட்டிருந்ததுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கான தற்காலிகத் தங்குமிடங்களாகவும் சில பாடசாலைகள் பயன்படுத்தப்பட்டு வந்தன. தற்போது நிலைமை சீரடைந்துள்ளதால், அனைத்துப் பாடசாலைகளையும் கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் தயார்படுத்தியுள்ளதாக [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/schools-back-to-normal/">இயல்பு நிலைக்கு திரும்பிய பாடசாலைகள்!</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>சீரற்ற வானிலை மற்றும் இயற்கை அனர்த்தங்களால் பெரிதும் பாதிக்கப்பட்ட பதுளை மாவட்டத்திலுள்ள அனைத்துப் பாடசாலைகளும், புதிய கல்வி ஆண்டின் முதலாம் தவணைக்காக இன்றுமுதல் மீண்டும் திறக்கப்பட்டுள்ளது.</p>
<p>மாவட்டச் செயலாளர் பிரபாத் அபேவர்தன இதனை தெரிவித்துள்ளார்.</p>
<p>கடந்த சில நாட்களாக நிலவிய கடும் மழை மற்றும் நிலச்சரிவு அபாயம் காரணமாக இந்தப் பாடசாலைகள் மூடப்பட்டிருந்ததுடன், பாதிக்கப்பட்ட மக்களுக்கான தற்காலிகத் தங்குமிடங்களாகவும் சில பாடசாலைகள் பயன்படுத்தப்பட்டு வந்தன.</p>
<p>தற்போது நிலைமை சீரடைந்துள்ளதால், அனைத்துப் பாடசாலைகளையும் கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் தயார்படுத்தியுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>அதேபோல், அனர்த்த நிலைமையால் கடுமையாகப் பாதிக்கப்பட்ட மத்திய மாகாணத்திலும் பாடசாலைகளைத் திறப்பதற்கான ஏற்பாடுகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p>
<p>மத்திய மாகாணத்திலுள்ள மொத்தமான 1,507 பாடசாலைகளில், 1,494 பாடசாலைகளை நாளை முதல் வழமைப்போல் இயக்குவதற்குத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக மாகாணக் கல்வி அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.</p>
<p>எஞ்சிய சில பாடசாலைகளில் மட்டும் துப்புரவுப் பணிகள் மற்றும் பாதுகாப்பு ஆய்வுகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.</p>
<p>மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பாதுகாப்பை உறுதி செய்த பின்னரே பாடசாலைகளைத் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p>
<p>எனினும், நிலச்சரிவு அபாயம் இன்னும் முழுமையாக நீங்காத பகுதிகளில் உள்ள பாடசாலைகளுக்குச் செல்லும் மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அவதானத்துடன் இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.</p>
<p>நீண்ட இடைவேளைக்குப் பிறகு இன்று மீண்டும் பாடசாலைகள் திறக்கப்படுவதால் மாணவர்களின் கல்வி நடவடிக்கைகள் வழமைக்குத் திரும்பும் என எதிர்பார்க்கப்படுகிறது</p>
<p>The post <a href="https://oruvan.com/schools-back-to-normal/">இயல்பு நிலைக்கு திரும்பிய பாடசாலைகள்!</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>அனுராதபுரம் மற்றும் பதுளை வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் போராட்டம்</title>
		<link>https://oruvan.com/doctors-strike-at-anuradhapura-and-badulla-hospitals/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 17 Dec 2025 11:15:20 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Anuradhapura]]></category>
		<category><![CDATA[Badulla]]></category>
		<category><![CDATA[Protest]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=40874</guid>

					<description><![CDATA[<p>வைத்தியசாலை வளாகத்தில் வெற்று தோட்டாக்கள் மீட்கப்பட்டதை அடுத்து, தங்கள் தனிப்பட்ட பாதுகாப்பு குறித்து கடுமையான கவலைகளை தெரிவித்து, அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று காலை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். மூன்று நாட்களுக்கு முன்பு நடந்த இந்த சம்பவம் வைத்தியசாலையில் பாதுகாப்பு குறித்த அச்சத்தை அதிகரித்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர். இந்நிலையில், போதுமான பாதுகாப்பு வழங்கப்படும் வரை வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும் என்று அவர்கள் வலியுறுத்தினர். இந்த வேலைநிறுத்தம் சிகிச்சை பெற மருத்துவமனைக்கு வந்த நோயாளிகளுக்கு குறிப்பிடத்தக்க சிரமத்தை ஏற்படுத்தியது, [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/doctors-strike-at-anuradhapura-and-badulla-hospitals/">அனுராதபுரம் மற்றும் பதுளை வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் போராட்டம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>வைத்தியசாலை வளாகத்தில் வெற்று தோட்டாக்கள் மீட்கப்பட்டதை அடுத்து, தங்கள் தனிப்பட்ட பாதுகாப்பு குறித்து கடுமையான கவலைகளை தெரிவித்து, அனுராதபுரம் போதனா வைத்தியசாலையின் வைத்தியர்கள் இன்று காலை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.</p>
<p>மூன்று நாட்களுக்கு முன்பு நடந்த இந்த சம்பவம் வைத்தியசாலையில் பாதுகாப்பு குறித்த அச்சத்தை அதிகரித்துள்ளதாக வைத்தியர்கள் தெரிவித்தனர்.</p>
<p>இந்நிலையில், போதுமான பாதுகாப்பு வழங்கப்படும் வரை வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும் என்று அவர்கள் வலியுறுத்தினர்.</p>
<p>இந்த வேலைநிறுத்தம் சிகிச்சை பெற மருத்துவமனைக்கு வந்த நோயாளிகளுக்கு குறிப்பிடத்தக்க சிரமத்தை ஏற்படுத்தியது, போராட்டத்தின் விளைவாக வழக்கமான சேவைகள் பாதிக்கப்பட்டன.</p>
<p>இதற்கிடையில், பதுளை போதனா மருத்துவமனையில் வைத்தியர் ஒருவர் முச்சக்கர வண்டி சாரதியால் தாக்கப்பட்டதாகக் கூறப்படும் மற்றொரு சம்பவம் பதிவாகியுள்ளது.</p>
<p>முச்சக்கர வண்டி சாரதி வைத்தியரின் வாகனத்தின் பின்னால் நிறுத்தியதை அடுத்து இந்த சம்பவம் நடந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p>
<p>வைத்தியர் வாகனத்தை நகர்த்துமாறு ஓட்டுநரிடம் கோரியபோது, ​​வாக்குவாதம் ஏற்பட்டு, வைத்தியர் தாக்கப்பட்டார். காயமடைந்த வைத்தியர் சிகிச்சைக்காக பதுளை போதனா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.</p>
<p>இந்த சம்பவத்தைத் தொடர்ந்து, பணியிட பாதுகாப்பு குறித்த அதிகரித்து வரும் கவலைகளைக் காரணம் காட்டி, பதுளை மருத்துவமனையின் வைத்தியர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/doctors-strike-at-anuradhapura-and-badulla-hospitals/">அனுராதபுரம் மற்றும் பதுளை வைத்தியசாலைகளில் வைத்தியர்கள் போராட்டம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பதுளை , மீகஹாகியுல்ல பிரதேசத்தில் மீளவும் மண் சரிவு</title>
		<link>https://oruvan.com/landslides-again-in-badulla-meegahagiulla-areas/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 10 Dec 2025 04:50:06 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Badulla]]></category>
		<category><![CDATA[Cyclone Ditwah]]></category>
		<category><![CDATA[Damage caused by Cyclone Ditwah in Sri Lanka]]></category>
		<category><![CDATA[Landslide]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=40334</guid>

					<description><![CDATA[<p>பதுளை , மீகஹாகியுல்ல பிரதேச பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று காலை மீண்டும் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக மீகஹாகியுல்ல பிரதேச செயலாளர் நிர்மலா குமுதுனி தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும், இந்த மண்சரிவு காரணமாக உயிர் அல்லது சொத்து இழப்பு எதுவும் ஏற்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த பகுதியில் இருந்து மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், பாதுகாப்பு மையங்களுக்குச் செல்லாத ஒரு சில குடும்பங்கள் தொடர்ந்து இங்கேயே தங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது. இதனிடையே, பதுளை &#8211; மஹியங்கனை வீதியின் பல இடங்களில் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/landslides-again-in-badulla-meegahagiulla-areas/">பதுளை , மீகஹாகியுல்ல பிரதேசத்தில் மீளவும் மண் சரிவு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பதுளை , மீகஹாகியுல்ல பிரதேச பிரிவுக்குட்பட்ட பகுதியில் இன்று காலை மீண்டும் மண்சரிவு ஏற்பட்டுள்ளதாக மீகஹாகியுல்ல பிரதேச செயலாளர் நிர்மலா குமுதுனி தெரிவித்துள்ளார்.</p>
<p>எவ்வாறாயினும், இந்த மண்சரிவு காரணமாக உயிர் அல்லது சொத்து இழப்பு எதுவும் ஏற்படவில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>குறித்த பகுதியில் இருந்து மக்களை வெளியேற்றும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்ட போதிலும், பாதுகாப்பு மையங்களுக்குச் செல்லாத ஒரு சில குடும்பங்கள் தொடர்ந்து இங்கேயே தங்கியிருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>இதனிடையே, பதுளை &#8211; மஹியங்கனை வீதியின் பல இடங்களில் மண்சரிவுகள் ஏற்பட்டுள்ளதாகவும், இதனால் போக்குவரத்து ஒரு வழிப்பாதையாகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளர்.</p>
<p>இந்நிலையில், போக்குவரத்தை சரிசெய்ய வீதி அபிவிருத்தி அதிகாரசபை மண்ணை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>இதனிடையே, குறித்த வீதியில் வாகனங்களைச் செலுத்துபவர்கள் மிகவும் அவதானத்துடன் இருக்க வேண்டும் என்று பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/landslides-again-in-badulla-meegahagiulla-areas/">பதுளை , மீகஹாகியுல்ல பிரதேசத்தில் மீளவும் மண் சரிவு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பதுளையில் மண் சரிவு காரணமாக நால்வர் உயிரிழப்பு &#8211; பலர் காணாமல் போயுள்ளனர்</title>
		<link>https://oruvan.com/four-killed-in-badulla-landslide-many-missing/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Thu, 27 Nov 2025 03:05:03 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[#oruvan #news]]></category>
		<category><![CDATA[Badulla]]></category>
		<category><![CDATA[Landslide]]></category>
		<category><![CDATA[weather]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=39376</guid>

					<description><![CDATA[<p>நிலவும் சீரற்ற வானிலை காணமாக பதுளை மாவட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவுகளில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒன்பது பேர் வரை காணாமல் போயுள்ளதாகவும் பதுளை மாவட்டச் செயலாளர் பந்துக்க அபேவர்தன தெரிவித்துள்ளார். சீரற்ற வானிலை காரணமாக மாவட்டத்தில் ஆறு இடங்களில் நிலச்சரிவுகள் மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இந்த அனர்த்தங்களில் சிக்கி இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சுமார் ஒன்பது பேர் வரை காணாமல் போயுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/four-killed-in-badulla-landslide-many-missing/">பதுளையில் மண் சரிவு காரணமாக நால்வர் உயிரிழப்பு &#8211; பலர் காணாமல் போயுள்ளனர்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>நிலவும் சீரற்ற வானிலை காணமாக பதுளை மாவட்டத்தில் ஏற்பட்ட மண்சரிவுகளில் சிக்கி நான்கு பேர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>மேலும், ஒன்பது பேர் வரை காணாமல் போயுள்ளதாகவும் பதுளை மாவட்டச் செயலாளர் பந்துக்க அபேவர்தன தெரிவித்துள்ளார்.</p>
<p>சீரற்ற வானிலை காரணமாக மாவட்டத்தில் ஆறு இடங்களில் நிலச்சரிவுகள் மற்றும் மண்மேடுகள் சரிந்து விழுந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளன.</p>
<p>இந்த அனர்த்தங்களில் சிக்கி இதுவரை நான்கு பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் சுமார் ஒன்பது பேர் வரை காணாமல் போயுள்ளனர் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>மாவட்டம் முழுவதும் பல இடங்களில் நிலச்சரிவுகள் மற்றும் மண் சரிவுகள் பதிவாகியுள்ளன. காணாமல் போனவர்களைத் தேடும் பணிகளில் நிவாரணக் குழுக்கள் தொடர்ந்து ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p>
<p>இதேவேளை, நாட்டின் சில மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய எச்சரிக்கை தொடர்ந்தும் நீடிக்கப்பட்டுள்ளது.</p>
<p>அதன்படி, பதுளை, கேகாலை ,குருநாகல், மாத்தளை , இரத்தினபுரி மற்றும் மொனராகலை ஆகிய மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை நீடிக்கப்பட்டுள்ளது.</p>
<p>மேலும், நுவரெலியா மற்றும் கண்டி ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்டுள்ள மண்சரிவு அபாய சிவப்பு எச்சரிக்கையும், தொடர்ந்து நீடிக்கப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/four-killed-in-badulla-landslide-many-missing/">பதுளையில் மண் சரிவு காரணமாக நால்வர் உயிரிழப்பு &#8211; பலர் காணாமல் போயுள்ளனர்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பதுளை , துன்ஹிந்த பகுதியில் விபத்துக்குள்ளான பஸ் &#8211; மூவர் பலி</title>
		<link>https://oruvan.com/bus-topples-in-badulla-3-deaths-and-over-20-injured/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sat, 21 Jun 2025 13:31:50 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[20 injured]]></category>
		<category><![CDATA[3 deaths]]></category>
		<category><![CDATA[Badulla]]></category>
		<category><![CDATA[bus]]></category>
		<category><![CDATA[topples]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=24266</guid>

					<description><![CDATA[<p>பதுளை &#8211; துன்ஹிந்த பகுதியில் பஸ்ஸொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்து இன்று சனிக்கிழமை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேலும் விபத்தில் காயமடைந்த 27 பேர் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.</p>
<p>The post <a href="https://oruvan.com/bus-topples-in-badulla-3-deaths-and-over-20-injured/">பதுளை , துன்ஹிந்த பகுதியில் விபத்துக்குள்ளான பஸ் &#8211; மூவர் பலி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பதுளை &#8211; துன்ஹிந்த பகுதியில் பஸ்ஸொன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் மூவர் உயிரிழந்துள்ளனர்.</p>
<p>இந்த விபத்து இன்று சனிக்கிழமை இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p>
<p>மேலும் விபத்தில் காயமடைந்த 27 பேர் பதுளை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.</p>
<h1 class=" loop-title"></h1>
<p>The post <a href="https://oruvan.com/bus-topples-in-badulla-3-deaths-and-over-20-injured/">பதுளை , துன்ஹிந்த பகுதியில் விபத்துக்குள்ளான பஸ் &#8211; மூவர் பலி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பதுளை-மஹியங்கனை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு</title>
		<link>https://oruvan.com/one-person-killed-in-vehicle-accident-on-badulla-mahiyanganaya-road/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sat, 21 Jun 2025 04:35:15 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#accident]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[Badulla]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=24197</guid>

					<description><![CDATA[<p>பதுளை-மஹியங்கனை வீதியில் 19ஆவது தூண் அருகே இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். பதுளையிலிருந்து மஹியங்கனை நோக்கிப் பயணித்த வேன் ஒன்று எதிர் திசையில் வந்த மோட்டோர் சைக்கிளொன்றுடன் மோதியுள்ளது. இதன்போது மோட்டோர் சைக்கிளில் பயணித்த இருவர் காயமடைந்த நிலையில் மஹியங்கனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சைப் பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளார். இதேவேளை வேன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/one-person-killed-in-vehicle-accident-on-badulla-mahiyanganaya-road/">பதுளை-மஹியங்கனை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பதுளை-மஹியங்கனை வீதியில் 19ஆவது தூண் அருகே இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p>
<p>பதுளையிலிருந்து மஹியங்கனை நோக்கிப் பயணித்த வேன் ஒன்று எதிர் திசையில் வந்த மோட்டோர் சைக்கிளொன்றுடன் மோதியுள்ளது.</p>
<p>இதன்போது மோட்டோர் சைக்கிளில் பயணித்த இருவர் காயமடைந்த நிலையில் மஹியங்கனை வைத்தியசாலையில்<br />
அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சைப் பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளார்.</p>
<p>இதேவேளை வேன் சாரதி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/one-person-killed-in-vehicle-accident-on-badulla-mahiyanganaya-road/">பதுளை-மஹியங்கனை வீதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இன்று பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழைபெய்யும்</title>
		<link>https://oruvan.com/todays-weather-report-for-sri-lanka/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 03 Mar 2025 04:14:29 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Badulla]]></category>
		<category><![CDATA[Sri Lanka Weather]]></category>
		<category><![CDATA[Today Weather]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=12991</guid>

					<description><![CDATA[<p>கிழக்கு, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் இன்று (03) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. வடக்கு மாகாணம் மற்றும் அனுராதபுரம் மாவட்டத்தில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும். ஏனையப் பகுதிகளில், மாலை அல்லது இரவில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும். மேற்கு, சப்ரகமுவ, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/todays-weather-report-for-sri-lanka/">இன்று பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழைபெய்யும்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>கிழக்கு, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் மாத்தளை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும் இன்று (03) மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p>
<p>வடக்கு மாகாணம் மற்றும் அனுராதபுரம் மாவட்டத்தில் சில இடங்களில் மழை பெய்யக்கூடும். ஏனையப் பகுதிகளில், மாலை அல்லது இரவில் அவ்வப்போது மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும்.</p>
<p>மேற்கு, சப்ரகமுவ, தெற்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும், மாத்தளை மற்றும் நுவரெலியா மாவட்டங்களிலும் சில இடங்களில் 10 மி.மீ வரை மழை பெய்யக்கூடும்.</p>
<p>தற்காலிக பலத்த காற்று மற்றும் இடியுடன் கூடிய மழையுடன் ஏற்படக்கூடிய மின்னல் காரணமாக ஏற்படும் ஆபத்துகளைக் குறைக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு பொதுமக்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.</p>
<p>இரண்டு மாவட்டங்களில் பெய்து வரும் கனமழை காரணமாக, அந்த இரண்டு மாவட்டங்களிலும் உள்ள ஒன்பது பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>இதன்படி, பதுளை மாவட்டத்தில் உள்ள பதுளை, கந்தகட்டிய, பசறை, ஹாலி எல, சொரணத்தொட்ட, ஹப்புத்தளை, மீகஹகிவுல மற்றும் ஊவா பரணகம ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>மேலும், நுவரெலியா மாவட்டத்தில் உள்ள வலப்பனை பிரதேச செயலகப் பிரிவுக்கும் மண்சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>இதன்படி, இந்தப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் மண்சரிவு அபாயங்கள் குறித்து விழிப்புடன் இருக்கவும், மண்சரிவுக்கான அறிகுறிகளைக் கண்டவுடன் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்லவும் தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் கேட்டுக்கொள்கிறது.</p>
<p>The post <a href="https://oruvan.com/todays-weather-report-for-sri-lanka/">இன்று பல பகுதிகளில் இடியுடன் கூடிய மழைபெய்யும்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
