<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Australia Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/australia/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/australia/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Mon, 13 Apr 2026 07:30:31 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>Australia Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/australia/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>அவுஸ்திரேலிய இராணுவத்தின் 125 ஆண்டுகால வரலாற்றில் முதல் பெண் தளபதி நியமனம்</title>
		<link>https://oruvan.com/australia-appoints-woman-to-lead-its-army-for-the-first-time/</link>
		
		<dc:creator><![CDATA[Diluksha]]></dc:creator>
		<pubDate>Mon, 13 Apr 2026 07:02:13 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[appoints]]></category>
		<category><![CDATA[Army]]></category>
		<category><![CDATA[Australia]]></category>
		<category><![CDATA[first time]]></category>
		<category><![CDATA[Woman]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=48332</guid>

					<description><![CDATA[<p>அவுஸ்திரேலியாவின் பாதுகாப்புப் படைத் தலைமை மாற்றத்தின் ஒரு பகுதியாக, நாட்டின் இராணுவ வரலாற்றில் முதன்முறையாக  பெண் ஒருவர் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார். தற்போதைய கூட்டுத் திறன்களின் தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் சூசன் கோய்ல் (Susan Coyle), எதிர்வரும் ஜூலை மாதம் இராணுவத் தளபதியாக பொறுப்பேற்க உள்ளார். அவர், தற்போது அந்தப் பொறுப்பில் உள்ள லெப்டினன்ட் ஜெனரல் சைமன் ஸ்டூவர்ட்டுக்குப் பதிலாகப் பொறுப்பேற்கவுள்ளார். இந்நிலையில் அவுஸ்திரேலிய இராணுவத்தின் 125 ஆண்டுகால வரலாற்றில் முதல் பெண் தளபதி சூசன் கோய்ல் என [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/australia-appoints-woman-to-lead-its-army-for-the-first-time/">அவுஸ்திரேலிய இராணுவத்தின் 125 ஆண்டுகால வரலாற்றில் முதல் பெண் தளபதி நியமனம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>அவுஸ்திரேலியாவின் பாதுகாப்புப் படைத் தலைமை மாற்றத்தின் ஒரு பகுதியாக, நாட்டின் இராணுவ வரலாற்றில் முதன்முறையாக  பெண் ஒருவர் தளபதியாக நியமிக்கப்பட்டுள்ளார்.</p>
<p>தற்போதைய கூட்டுத் திறன்களின் தலைவரான லெப்டினன்ட் ஜெனரல் சூசன் கோய்ல் (Susan Coyle), எதிர்வரும் ஜூலை மாதம் இராணுவத் தளபதியாக பொறுப்பேற்க உள்ளார்.</p>
<p>அவர், தற்போது அந்தப் பொறுப்பில் உள்ள லெப்டினன்ட் ஜெனரல் சைமன் ஸ்டூவர்ட்டுக்குப் பதிலாகப் பொறுப்பேற்கவுள்ளார்.</p>
<p>இந்நிலையில் அவுஸ்திரேலிய இராணுவத்தின் 125 ஆண்டுகால வரலாற்றில் முதல் பெண் தளபதி சூசன் கோய்ல் என பிரதமர் அந்தோனி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.</p>
<p>இதேவேளை வரலாற்றுச் சிறப்புமிக்க தருணம் என பாதுகாப்பு அமைச்சர் ரிச்சர்ட் மார்ல்ஸ் கூறியுள்ளார்.</p>
<p>1987 ஆம் ஆண்டு இராணுவத்தில் இணைந்த சூசன் கோய்ல், பல முக்கிய கட்டளைப் பதவிகளில் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.</p>
<p>அவுஸ்திரேலிய இராணுவத்தின் எந்த சேவைப் பிரிவிற்கும் தலைமை தாங்கும் முதல் பெண் இவரே ஆகும்.</p>
<p>இதேவேளை, அவுஸ்திரேலிய பாதுகாப்புப் படையில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்கும் முயற்சிகளின் மத்தியில் இந்த நியமனம் இடம்பெற்றுள்ளது.</p>
<p>தற்போது அவுஸ்திரேலிய பாதுகாப்புப் படையில் சுமார் 21% பெண்கள் பணியாற்றுகின்றனர். 2030 ஆம் ஆண்டுக்குள் இதனை 25% ஆக உயர்த்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.</p>
<p>மேலும், பாதுகாப்புப் படையில் பாலியல் துன்புறுத்தல் மற்றும் பாகுபாடு தொடர்பான குற்றச்சாட்டுகள் எழுந்துள்ள நிலையில், இந்த மாற்றம் முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது.</p>
<p>அத்துடன், தற்போதைய கடற்படைத் தளபதியான வைஸ் அட்மிரல் மார்க் ஹேமண்ட், அவுஸ்திரேலியா பாதுகாப்புப் படையின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.</p>
<p>அவருக்குப் பதிலாக ரியர் அட்மிரல் மேத்யூ பக்லி கடற்படைத் தலைவராக பொறுப்பேற்க உள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/australia-appoints-woman-to-lead-its-army-for-the-first-time/">அவுஸ்திரேலிய இராணுவத்தின் 125 ஆண்டுகால வரலாற்றில் முதல் பெண் தளபதி நியமனம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>அவுஸ்திரேலியாவில் துப்பாக்கிச் சூடு &#8211; மூவர் உயிரிழப்பு</title>
		<link>https://oruvan.com/2-women-among-3-killed-in-australia-shooting/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Thu, 22 Jan 2026 09:55:37 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[Australia]]></category>
		<category><![CDATA[New South Wales]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=43609</guid>

					<description><![CDATA[<p>அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள ஒரு சிறிய நகரத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டனர். ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸார் தற்போது விசாரணைகளை தொடங்கியுள்ளனர். வெளியாட்கள் அந்தப் பகுதிக்குள் நுழைய வேண்டாம் என்றும், உள்ளூர்வாசிகள் அந்தப் பகுதியை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர். அவுஸ்திரேலியா சிட்னி &#8211; போண்டி கடற்கரையில் டிசம்பரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/2-women-among-3-killed-in-australia-shooting/">அவுஸ்திரேலியாவில் துப்பாக்கிச் சூடு &#8211; மூவர் உயிரிழப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் உள்ள ஒரு சிறிய நகரத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டனர்.</p>
<p>ஒருவர் ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p>
<p>துப்பாக்கிச் சூடு குறித்து பொலிஸார் தற்போது விசாரணைகளை தொடங்கியுள்ளனர்.</p>
<p>வெளியாட்கள் அந்தப் பகுதிக்குள் நுழைய வேண்டாம் என்றும், உள்ளூர்வாசிகள் அந்தப் பகுதியை விட்டு வெளியேற வேண்டாம் என்றும் பொலிஸார் அறிவுறுத்தியுள்ளனர்.</p>
<p>அவுஸ்திரேலியா சிட்னி &#8211; போண்டி கடற்கரையில் டிசம்பரில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் 15 பேர் உயிரிழந்தனர்.</p>
<p>இந்த சம்பவம் உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்த நிலையில், தற்போது நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் துப்பாக்கிச் சூடு இடம்பெற்றுள்ளது.</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/2-women-among-3-killed-in-australia-shooting/">அவுஸ்திரேலியாவில் துப்பாக்கிச் சூடு &#8211; மூவர் உயிரிழப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இலங்கை பொலிஸாரின் விரைவான நடவடிக்கை!! நன்றி தெரிவித்த அவுஸ்திரேலிய பெண்</title>
		<link>https://oruvan.com/australian-woman-expresses-gratitude-for-sri-lankan-polices-swift-action/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 05 Jan 2026 06:44:01 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#police]]></category>
		<category><![CDATA[Australia]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=42383</guid>

					<description><![CDATA[<p>உனவதுன பகுதியில் தனது பணப்பையை திருடிய சந்தேக நபர் சில மணி நேரங்களுக்குள் கைது செய்யப்பட்டதற்கு அவுஸ்திரேலிய பெண் ஒருவர் நன்றி தெரிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஜனவரி இரண்டாம் திகதி அதிகாலை உனவதுன கடற்கரையில் உள்ள உணவகத்திற்கு அருகில் இந்த திருட்டு நடந்துள்ளது. குறித்த பெண்ணின் ஐபோன், வெளிநாட்டு நாணயம் மற்றும் வங்கி அட்டைகள் அடங்கிய கைப்பை திருடப்பட்டது. பொலிஸாரின் கூற்றுப்படி, பாதிக்கப்பட்டவர் ஜனவரி நான்காம் திகதி உனவதுன சுற்றுலா பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார். முறைப்பாடு செய்யப்பட்ட [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/australian-woman-expresses-gratitude-for-sri-lankan-polices-swift-action/">இலங்கை பொலிஸாரின் விரைவான நடவடிக்கை!! நன்றி தெரிவித்த அவுஸ்திரேலிய பெண்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>உனவதுன பகுதியில் தனது பணப்பையை திருடிய சந்தேக நபர் சில மணி நேரங்களுக்குள் கைது செய்யப்பட்டதற்கு அவுஸ்திரேலிய பெண் ஒருவர் நன்றி தெரிவித்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.</p>
<p>ஜனவரி இரண்டாம் திகதி அதிகாலை உனவதுன கடற்கரையில் உள்ள உணவகத்திற்கு அருகில் இந்த திருட்டு நடந்துள்ளது.</p>
<p>குறித்த பெண்ணின் ஐபோன், வெளிநாட்டு நாணயம் மற்றும் வங்கி அட்டைகள் அடங்கிய கைப்பை திருடப்பட்டது.</p>
<p>பொலிஸாரின் கூற்றுப்படி, பாதிக்கப்பட்டவர் ஜனவரி நான்காம் திகதி உனவதுன சுற்றுலா பொலிஸாரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.</p>
<p>முறைப்பாடு செய்யப்பட்ட சிறிது நேரத்திற்குள், பொலிஸார் சந்தேக நபரை அடையாளம் கண்டு கைது செய்தனர்.</p>
<p>தனியாக பயணம் செய்து இலங்கைக்கு வந்த பெண், பொலிஸாரின் உடனடி நடவடிக்கை மற்றும் சந்தேக நபரை கைது செய்ய எடுக்கப்பட்ட நடவடிக்கைக்கு நன்றி தெரிவித்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p>
<p>கைது செய்யப்பட்ட சந்தேக நபர் இன்று காலி நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார்.</p>
<p>சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/australian-woman-expresses-gratitude-for-sri-lankan-polices-swift-action/">இலங்கை பொலிஸாரின் விரைவான நடவடிக்கை!! நன்றி தெரிவித்த அவுஸ்திரேலிய பெண்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>போண்டி துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் துப்பாக்கிதாரிகள் பரந்த பயங்கரவாதக் குழுவைச் சேர்ந்தவர்கள் அல்ல</title>
		<link>https://oruvan.com/bondi-shooting-gunmen-not-part-of-wider-terror-group/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Tue, 30 Dec 2025 09:47:53 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[Australia]]></category>
		<category><![CDATA[Bondi Beach]]></category>
		<category><![CDATA[Bondi shooter]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=41973</guid>

					<description><![CDATA[<p>அவுஸ்திரேலியாவில் அண்மையில் இடம்பெற்ற மோசமான துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் துப்பாக்கிதாரிகள் பரந்த பயங்கரவாதக் குழுவைச் சேர்ந்தவர்கள் அல்ல என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர். அவர்கள் தனியாகச் செயல்பட்டதாக அவுஸ்திரேலிய மத்திய காவல்துறை ஆணையர் கிறிஸ்ஸி பாரெட் தெரிவித்துள்ளார். சிட்னி நகரின் போண்டி கடற்கரையில் கடந்த 14ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்தனர். 1996 ஆம் ஆண்டுக்குப் பிறகு அவுஸ்திரேலியாவின் மிக மோசமான துப்பாக்கிச் சூடு சம்பவமான இந்தத் தாக்குதலை, பயங்கரவாதச் சம்பவம் என்று [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/bondi-shooting-gunmen-not-part-of-wider-terror-group/">போண்டி துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் துப்பாக்கிதாரிகள் பரந்த பயங்கரவாதக் குழுவைச் சேர்ந்தவர்கள் அல்ல</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>அவுஸ்திரேலியாவில் அண்மையில் இடம்பெற்ற மோசமான துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் துப்பாக்கிதாரிகள் பரந்த பயங்கரவாதக் குழுவைச் சேர்ந்தவர்கள் அல்ல என அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p>
<p>அவர்கள் தனியாகச் செயல்பட்டதாக அவுஸ்திரேலிய மத்திய காவல்துறை ஆணையர் கிறிஸ்ஸி பாரெட் தெரிவித்துள்ளார்.</p>
<p>சிட்னி நகரின் போண்டி கடற்கரையில் கடந்த 14ஆம் திகதி இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்தனர்.</p>
<p>1996 ஆம் ஆண்டுக்குப் பிறகு அவுஸ்திரேலியாவின் மிக மோசமான துப்பாக்கிச் சூடு சம்பவமான இந்தத் தாக்குதலை, பயங்கரவாதச் சம்பவம் என்று காவல்துறை அறிவித்திருந்தது.</p>
<p>தந்தை மற்றும் மகன் இணைந்து இந்த தாக்குதலை மேற்கொண்டிருந்தனர்.</p>
<p>இதில் பொலிஸார் மேற்கொண்ட பதில் தாக்குதலில் 50 வயதான தந்தை சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 24 வயதான மகன் கைது செய்யப்பட்டு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.</p>
<p>எவ்வாறாயினும், தாக்குதலுக்கு முன்னர் குறித்த இருவரும் பிலிப்பைன்ஸுக்கு பயணம் செய்ததை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p>
<p>நவம்பர் முதலாம் திகதி பிலிப்பைன்ஸ் சென்ற அவர்கள் நவம்பர் 29ஆம் திகதி சிட்னி திரும்பியுள்ளனர்.</p>
<p>அவர்கள் பிலிப்பைன்ஸில் தங்கியிருந்த காலப்பகுதியில் தாக்குதல் நடத்துவதற்கு பயிற்சிகள் எதையும் பெற்றுக்கொள்ளவில்லை என்பதை அதிகாரிகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p>
<p>பிலிப்பைன்ஸில் துப்பாக்கிதாரிகள் நடமாட்டத்தைக் கண்காணிக்கும் சிசிடிவி காட்சிகள் அவுஸ்திரேலிய அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.</p>
<p>இந்நிலையில், தற்போது தகவல்களை மதிப்பாய்வு செய்து வருவதாக கிறிஸ்ஸி பாரெட்  தெரிவித்துள்ளார்.</p>
<p>ஆரம்ப மதிப்பீடுகளில் குறித்த நபர்கள் தனியாக செயல்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது என்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>விசாரணைகளின் அடிப்படையில் ​​புதிய சான்றுகள் அல்லது தகவல்கள் வெளிவரக்கூடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/bondi-shooting-gunmen-not-part-of-wider-terror-group/">போண்டி துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தின் துப்பாக்கிதாரிகள் பரந்த பயங்கரவாதக் குழுவைச் சேர்ந்தவர்கள் அல்ல</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>அவுஸ்திரேலியாவில் நாஜி சின்னங்களை காட்சிப்படுத்திய பிரித்தானிய நாட்டவர் நாடு கடத்தப்படும் அபாயம்</title>
		<link>https://oruvan.com/british-national-faces-extradition-for-displaying-nazi-symbols-in-australia/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 24 Dec 2025 11:35:17 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[Australia]]></category>
		<category><![CDATA[UK]]></category>
		<category><![CDATA[UK News]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=41569</guid>

					<description><![CDATA[<p>அவுஸ்திரேலியாவில் இருந்து பிரித்தானிய நாட்டவர் ஒருவர் நாடு கடத்தப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளார். நாஜி சின்னங்களை காட்சிப்படுத்தியதாகக் கூறி குறித்த நபரின் விசா ரத்து செய்யப்பட்டு நாடு கடத்தப்படுவதை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. குயின்ஸ்லாந்தில் வசிக்கும் 43 வயது குறித்த நபர், இந்த மாத தொடக்கத்தில் கைது செய்யப்பட்டார். நாஜி ஸ்வஸ்திகாவை இடுகையிடவும், நாஜி சார்பு சித்தாந்தத்தை ஊக்குவிக்கவும், யூத சமூகத்திற்கு எதிராக வன்முறைக்கு அழைப்பு விடுக்கவும் சமூக ஊடகக் கணக்கைப் பயன்படுத்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. தற்போது [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/british-national-faces-extradition-for-displaying-nazi-symbols-in-australia/">அவுஸ்திரேலியாவில் நாஜி சின்னங்களை காட்சிப்படுத்திய பிரித்தானிய நாட்டவர் நாடு கடத்தப்படும் அபாயம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>அவுஸ்திரேலியாவில் இருந்து பிரித்தானிய நாட்டவர் ஒருவர் நாடு கடத்தப்படும் அபாயத்தை எதிர்கொண்டுள்ளார்.</p>
<p>நாஜி சின்னங்களை காட்சிப்படுத்தியதாகக் கூறி குறித்த நபரின் விசா ரத்து செய்யப்பட்டு நாடு கடத்தப்படுவதை எதிர்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>குயின்ஸ்லாந்தில் வசிக்கும் 43 வயது குறித்த நபர், இந்த மாத தொடக்கத்தில் கைது செய்யப்பட்டார்.</p>
<p>நாஜி ஸ்வஸ்திகாவை இடுகையிடவும், நாஜி சார்பு சித்தாந்தத்தை ஊக்குவிக்கவும், யூத சமூகத்திற்கு எதிராக வன்முறைக்கு அழைப்பு விடுக்கவும் சமூக ஊடகக் கணக்கைப் பயன்படுத்தியதாக அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.</p>
<p>தற்போது குறித்த நபர் பிரிஸ்பேனில் குடிவரவு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாகவும், ஜனவரி மாதம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்படுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>யூத எதிர்ப்பு மற்றும் வலதுசாரி தீவிரவாதம் சமீபத்தில் அதிகரித்து வரும் நிலையில், தடைசெய்யப்பட்ட சின்னங்களைப் பயன்படுத்துவதை அவுஸ்திரேலியா பொலிஸார் கடுமையாக்கி வருகின்றனர்.</p>
<p>இந்நிலையில், குறித்த நபர் அவுஸ்திரேலியாவில் தங்குவதற்கு வாய்ப்பு இல்லை&#8221; என்று உள்துறை அமைச்சர் டோனி பர்க் தெரிவித்துள்ளார்.</p>
<p>&#8220;அவுஸ்திரேலியாவுக்கு விசாவில் வந்த எவரும், இங்கே ஒரு விருந்தினராக இருக்கிறார்கள்&#8221; என்று பர்க் இன்று புதன்கிழமை அவுஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திடம் தெரிவித்துள்ளார்.</p>
<p>எவ்வாறாயினும், தனது விசா ரத்து செய்யப்பட்டதை எதிர்த்து பாதிக்கப்பட்டவர் மேல்முறையீடு செய்யலாம்.</p>
<p>மேலும், தானாக முன்வந்து அவுஸ்திரேலியாவை விட்டு வெளியேறலாம் அல்லது நாடு கடத்தப்படும் வரை காத்திருக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/british-national-faces-extradition-for-displaying-nazi-symbols-in-australia/">அவுஸ்திரேலியாவில் நாஜி சின்னங்களை காட்சிப்படுத்திய பிரித்தானிய நாட்டவர் நாடு கடத்தப்படும் அபாயம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சிட்னி துப்பாக்கிச் சூடு – துப்பாக்கிதாரியின் காரில் இருந்து ஐஎஸ்ஐ கொடிகள் மீட்பு</title>
		<link>https://oruvan.com/sydney-shooting-isi-flags-recovered-from-gunmans-car/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Tue, 16 Dec 2025 05:39:23 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Australia]]></category>
		<category><![CDATA[Bondi Beach]]></category>
		<category><![CDATA[Bondi shooter]]></category>
		<category><![CDATA[ISIS]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=40738</guid>

					<description><![CDATA[<p>சிட்னி போண்டி கடற்கரையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள்  இஸ்லாமிய அரசால் ஈர்க்கப்பட்டதற்கான அறிகுறிகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அவுஸ்திரேலிய கூட்டாட்சி காவல்துறை ஆணையர் கிறிஸ்ஸி பாரெட் இதனை தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார். துப்பாக்கிதாரி நவீத் அக்ரம்  பெயரில் பதிவு செய்யப்பட்ட வாகனத்தில், மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனங்கள் மற்றும்  இரண்டு இஸ்லாமிய அரசு கொடிகள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், தாக்குதலை மேற்கொண்ட தந்தையும் மகனும் கடந்த [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/sydney-shooting-isi-flags-recovered-from-gunmans-car/">சிட்னி துப்பாக்கிச் சூடு – துப்பாக்கிதாரியின் காரில் இருந்து ஐஎஸ்ஐ கொடிகள் மீட்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p><strong>சி</strong>ட்னி போண்டி கடற்கரையில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஈடுபட்டவர்கள்  இஸ்லாமிய அரசால் ஈர்க்கப்பட்டதற்கான அறிகுறிகள் காணப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>அவுஸ்திரேலிய கூட்டாட்சி காவல்துறை ஆணையர் கிறிஸ்ஸி பாரெட் இதனை தெரிவித்துள்ளார்.</p>
<p>இன்று இடம்பெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை தெரிவித்துள்ளார்.</p>
<p>துப்பாக்கிதாரி நவீத் அக்ரம்  பெயரில் பதிவு செய்யப்பட்ட வாகனத்தில், மேம்படுத்தப்பட்ட வெடிக்கும் சாதனங்கள் மற்றும்  இரண்டு இஸ்லாமிய அரசு கொடிகள் இருந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>எவ்வாறாயினும், தாக்குதலை மேற்கொண்ட தந்தையும் மகனும் கடந்த மாதம் பிலிப்பைன்ஸ் பயணம் செய்ததாக ஊடகங்களில் வெளியான செய்திகளை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p>
<p>அவர்கள் ஏன் அந்தப் பயணத்தை மேற்கொண்டார்கள் என்பது குறித்து விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் காவல்துறை ஆணையர்  கிறிஸ்ஸி பாரெட் தெரிவித்துள்ளார்.</p>
<p>கடந்த ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்த தாக்குதலில் 15 பேர் உயிரிழந்துள்ளனர்.</p>
<p>போண்டி கடற்கரையில் ஹனுக்காவைக் கொண்டாடிய யூதர்களை இலக்கு வைத்து இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது.</p>
<p>பாகிஸ்தான் வம்சாவளியைச் சேர்ந்த தந்தை மற்றும் மகன் துப்பாக்கிச் சூடு நடத்தியிருந்தனர்.</p>
<p>இதில் 50 வயதான தந்தை பொலிஸார் மேற்கொண்ட பதில் தாக்குதலில் உயிரிழந்தார்.</p>
<p>எவ்வாறாயினும், 24 வயதான நவீத் அக்ரம்  கைது செய்யப்பட்டுள்ளார். தாக்குதலுக்கான காரணம் இன்னும் இதுவரை வெளியாகவில்லை.</p>
<p>இந்த தாக்குதலில் 42 பேர் காயணமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/sydney-shooting-isi-flags-recovered-from-gunmans-car/">சிட்னி துப்பாக்கிச் சூடு – துப்பாக்கிதாரியின் காரில் இருந்து ஐஎஸ்ஐ கொடிகள் மீட்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>கடுமையான துப்பாக்கிச் சட்டங்களை இயற்றுவது குறித்து பரீசிலனை &#8211; அவுஸ்திரேலியா அரசாங்கம் அறிவிப்பு</title>
		<link>https://oruvan.com/australia-government-announces-tough-gun-laws-in-paris/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 15 Dec 2025 05:41:55 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Australia]]></category>
		<category><![CDATA[Bondi Beach]]></category>
		<category><![CDATA[Bondi shooter]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=40654</guid>

					<description><![CDATA[<p>அவுஸ்திரேலிய அரசாங்கம் கடுமையான துப்பாக்கிச் சட்டங்களை இயற்றுவது குறித்து பரிசீலித்து வருவதாக அந்நாட்டு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார். இதன்படி, தேவையான எந்த நடவடிக்கைகளையும் எடுக்க அரசாங்கம் தயாராக உள்ளதெனவும், அதில் கடுமையான துப்பாக்கிச் சட்டங்களும் அடங்குமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். தனிநபர்களால் உரிமம் பெறக்கூடிய துப்பாக்கிகளின் எண்ணிக்கையில் வரம்புகள், அதிக சோதனைகள் மற்றும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு உரிமங்களை மறுஆய்வு செய்தல் ஆகியவை இதில் அடங்கும் என்றும் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/australia-government-announces-tough-gun-laws-in-paris/">கடுமையான துப்பாக்கிச் சட்டங்களை இயற்றுவது குறித்து பரீசிலனை &#8211; அவுஸ்திரேலியா அரசாங்கம் அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>அவுஸ்திரேலிய அரசாங்கம் கடுமையான துப்பாக்கிச் சட்டங்களை இயற்றுவது குறித்து பரிசீலித்து வருவதாக அந்நாட்டு பிரதமர் அந்தோணி அல்பானீஸ் தெரிவித்துள்ளார்.</p>
<p>இன்று இடம்பெற்ற சிறப்பு செய்தியாளர் சந்திப்பில் அவர் தெரிவித்துள்ளார்.</p>
<p>இதன்படி, தேவையான எந்த நடவடிக்கைகளையும் எடுக்க அரசாங்கம் தயாராக உள்ளதெனவும், அதில் கடுமையான துப்பாக்கிச் சட்டங்களும் அடங்குமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>தனிநபர்களால் உரிமம் பெறக்கூடிய துப்பாக்கிகளின் எண்ணிக்கையில் வரம்புகள், அதிக சோதனைகள் மற்றும் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு உரிமங்களை மறுஆய்வு செய்தல் ஆகியவை இதில் அடங்கும் என்றும் பிரதமர் அறிவித்துள்ளார்</p>
<p>&#8220;மக்களின் சூழ்நிலைகள் மாறுகின்றன, மக்கள் ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் தீவிரமயமாக்கப்படலாம், உரிமங்கள் நிரந்தரமாக வழங்கப்படக்கூடாது,&#8221; என்று  பிரதமர் அந்தோணி அல்பானீஸ் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரின் போண்டி கடற்கரையில் யூத மத கொண்டாட்ட நிகழ்வில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் 10 வயது சிறுமி உள்ளிட்ட 15 பேர் உயிரிழந்துள்ளனர்.</p>
<p>இந்த தாக்குதலை 50 வயதான தந்தையும், 24 வயதான மகனும் மேற்கொண்டிருந்தனர். இதில் 50 வயதான தந்தை  உயிரிழந்த நிலையில், 24 வயதான மகன் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.</p>
<p>இந்த தாக்குதலை நியூ சவுத் வேல்ஸ் பொலிஸார்  பயங்கரவாதச் செயலாக அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/australia-government-announces-tough-gun-laws-in-paris/">கடுமையான துப்பாக்கிச் சட்டங்களை இயற்றுவது குறித்து பரீசிலனை &#8211; அவுஸ்திரேலியா அரசாங்கம் அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சிட்னி துப்பாக்கிச் சூடு &#8211; இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை</title>
		<link>https://oruvan.com/sydney-shooting-sri-lankans-not-affected/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 15 Dec 2025 05:34:49 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Australia]]></category>
		<category><![CDATA[Bondi Beach]]></category>
		<category><![CDATA[Bondi shooter]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=40645</guid>

					<description><![CDATA[<p>அவுஸ்திரேலியாவின் சிட்னியில் நடந்த கொடூர துப்பாக்கிச் சூடு சம்பவங்களில், அந்தப் பகுதியில் வசிக்கும் இலங்கையர்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது. பிரதி வெளியுறவு அமைச்சர் அருண் ஹேமச்சந்திர இதனை தெரிவித்துள்ளார். இந்த சம்பவம் குறித்து உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும், விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் நடந்த தொடர் துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 15 பேர் கொல்லப்பட்டனர். கடற்கரையில் இருந்தவர்களை குறிவைத்து இரண்டு துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/sydney-shooting-sri-lankans-not-affected/">சிட்னி துப்பாக்கிச் சூடு &#8211; இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>அவுஸ்திரேலியாவின் சிட்னியில் நடந்த கொடூர துப்பாக்கிச் சூடு சம்பவங்களில், அந்தப் பகுதியில் வசிக்கும் இலங்கையர்கள் யாருக்கும் எந்த பாதிப்பும் ஏற்படவில்லை என்று அரசாங்கம் அறிவித்துள்ளது.</p>
<p>பிரதி வெளியுறவு அமைச்சர் அருண் ஹேமச்சந்திர இதனை தெரிவித்துள்ளார்.</p>
<p>இந்த சம்பவம் குறித்து உன்னிப்பாக அவதானித்து வருவதாகவும், விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் நடந்த தொடர் துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 15 பேர் கொல்லப்பட்டனர்.</p>
<p>கடற்கரையில் இருந்தவர்களை குறிவைத்து இரண்டு துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர், மேலும் இரண்டு பொலிஸ“ அதிகாரிகள் உட்பட 42 பேர் காயமடைந்துள்ளர் என்பதும் குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/sydney-shooting-sri-lankans-not-affected/">சிட்னி துப்பாக்கிச் சூடு &#8211; இலங்கையர்களுக்கு பாதிப்பில்லை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சிட்னி துப்பாக்கிச் சூடு &#8211; பலி எண்ணிக்கை அதிகரிப்பு</title>
		<link>https://oruvan.com/sydney-shooting-death-toll-rises/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 15 Dec 2025 03:30:10 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Australia]]></category>
		<category><![CDATA[Bondi Beach]]></category>
		<category><![CDATA[Bondi shooter]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=40629</guid>

					<description><![CDATA[<p>அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் இடம்பெற்ற யூத மத கொண்டாட்ட நிகழ்வில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களில் 10 வயது சிறுமியும் அடங்குவதாகக் கூறப்படுகிறது. சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் நேற்று (14) நடந்த தொடர் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்பாக நியூ சவுத் வேல்ஸ் பொலிஸார் பல்வேறு தகவல்களை கண்டறிந்துள்ளனர். இதன்படி, குறித்த துப்பாக்கிச் சூடு நடத்திய இருவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் மகன் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/sydney-shooting-death-toll-rises/">சிட்னி துப்பாக்கிச் சூடு &#8211; பலி எண்ணிக்கை அதிகரிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>அவுஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் இடம்பெற்ற யூத மத கொண்டாட்ட நிகழ்வில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 15 ஆக உயர்ந்துள்ளது.</p>
<p>உயிரிழந்தவர்களில் 10 வயது சிறுமியும் அடங்குவதாகக் கூறப்படுகிறது.</p>
<p>சிட்னியில் உள்ள போண்டி கடற்கரையில் நேற்று (14) நடந்த தொடர் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்பாக நியூ சவுத் வேல்ஸ் பொலிஸார் பல்வேறு தகவல்களை கண்டறிந்துள்ளனர்.</p>
<p>இதன்படி, குறித்த துப்பாக்கிச் சூடு நடத்திய இருவரும் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தை மற்றும் மகன் என்பதும் தெரியவந்துள்ளது.</p>
<p>துப்பாக்கிச் சூடு நடத்திய 50 வயதுடைய தந்தை கொல்லப்பட்டதாகவும், அவரது மகன் 24 வயது இளைஞர் படுகாயங்களுடன் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இந்த நிகழ்வில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது. துப்பாக்கிச் சூடு நடத்தியவர்கள் அவர்களை குறிவைத்து பாரிய தாக்குதலை நடத்தியுள்ளனர்.</p>
<p>இந்நேரத்தில் தாக்குதல்தாரி ஒருவரை பொது மகன் ஒருவர் தனது உயிரை பணயம் வைத்து பிடித்திருந்தார். பின்னர், உயிரிழந்த துப்பாக்கிச் சூடு நடத்தியவரின் வாகனத்தில் வெடிபொருட்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.</p>
<p>நியூ சவுத் வேல்ஸ் பொலிஸார் நேற்று (14) மதியம் துப்பாக்கிச் சூட்டை பயங்கரவாதச் செயலாக அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அவுஸ்திரேலிய பிரதமரும் இது ஒரு யூத எதிர்ப்புச் செயல் என்று தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/sydney-shooting-death-toll-rises/">சிட்னி துப்பாக்கிச் சூடு &#8211; பலி எண்ணிக்கை அதிகரிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>அவுஸ்திரேலியாவில் குடியேற்ற எதிர்ப்பு பேரணிகள் &#8211; அரசாங்கம் கண்டனம்</title>
		<link>https://oruvan.com/thousands-attend-australia-anti-immigration-rallies/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sun, 31 Aug 2025 11:51:31 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[anti-immigration]]></category>
		<category><![CDATA[attend]]></category>
		<category><![CDATA[Australia]]></category>
		<category><![CDATA[rallies]]></category>
		<category><![CDATA[Thousands]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=31236</guid>

					<description><![CDATA[<p>அவுஸ்திரேலியாவின் பல நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட குடியேற்ற எதிர்ப்பு பேரணிகள் வெறுப்பை  ஊக்குவிக்கும் இயக்கங்கள் என அரசாங்கத்தால் கடுமையாக கண்டிக்கப்பட்டுள்ளன. சிட்னி, மெல்போர்ன், அடிலெய்டு போன்ற நகரங்களில் நடைபெற்ற இந்த &#8220;மார்ச் ஃபார் ஆஸ்திரேலியா&#8221; பேரணிகளில், வலதுசாரி தீவிரவாத குழுக்களும், நவ-நாஜி பிரமுகர்களும் பங்கேற்றுள்ளனர். சிட்னி பேரணியில் 8,000 பேர் வரையும் , அடிலெய்டில் 15,000 பேர் வரையும் பேரணியில் ஈடுபட்டதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. மெல்போர்னில் சில பகுதிகளில் மோதல்களும் இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. போராட்டக்காரர்கள், [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/thousands-attend-australia-anti-immigration-rallies/">அவுஸ்திரேலியாவில் குடியேற்ற எதிர்ப்பு பேரணிகள் &#8211; அரசாங்கம் கண்டனம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p><!--StartFragment --></p>
<p><span class="cf0">அவுஸ்திரேலியாவின் பல நகரங்களில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்ட குடியேற்ற எதிர்ப்பு பேரணிகள் வெறுப்பை  </span><span class="cf0">ஊக்குவிக்கும் இயக்கங்கள் என அரசாங்கத்தால் கடுமையாக கண்டிக்கப்பட்டுள்ளன.</span></p>
<p><span class="cf0">சிட்னி, மெல்போர்ன், அடிலெய்டு போன்ற நகரங்களில் நடைபெற்ற </span><span class="cf0">இந்த</span><span class="cf0"> &#8220;</span><span class="cf0">மார்ச்</span> <span class="cf0">ஃபார்</span> <span class="cf0">ஆஸ்திரேலியா</span><span class="cf0">&#8221; </span><span class="cf0">பேரணிகளில்</span><span class="cf0">, </span><span class="cf0">வலதுசாரி</span> <span class="cf0">தீவிரவாத</span> <span class="cf0">குழுக்களும்</span><span class="cf0">, </span><span class="cf0">நவ-நாஜி</span> <span class="cf0">பிரமுகர்களும்</span> <span class="cf0">பங்கேற்றுள்ளனர்</span><span class="cf0">.</span></p>
<p><span class="cf0">சிட்னி</span> <span class="cf0">பேரணியில்</span> <span class="cf0">8,000 </span><span class="cf0">பேர்</span><span class="cf0"> வரையும் , அடிலெய்டில்</span> <span class="cf0">15,000 </span><span class="cf0">பேர்</span> <span class="cf0">வரையும் பேரணியில்</span> <span class="cf0">ஈடுபட்டதாக</span> <span class="cf0">சர்வதேச</span> <span class="cf0">செய்திகள் </span><span class="cf0">தெரிவிக்கின்றன</span><span class="cf1">.</span></p>
<p><span class="cf0">மெல்போர்னில்</span> <span class="cf0">சில</span> <span class="cf0">பகுதிகளில்</span> <span class="cf0">மோதல்களும்</span> <span class="cf0">இடம்பெற்றதாக</span> <span class="cf0">தெரிவிக்கப்பட்டுள்ளது</span><span class="cf1">.</span></p>
<p><span class="cf0">போராட்டக்காரர்கள்</span><span class="cf0">, </span><span class="cf0">பலஸ்தீன</span> <span class="cf0">ஆதரவு</span> <span class="cf0">பேரணியில்</span> <span class="cf0">கலந்து</span> <span class="cf0">கொண்டவர்களுடன்</span> <span class="cf0">மோதியதையும்</span><span class="cf0"> பொலிஸார்</span> <span class="cf0">உறுதிப்படுத்தியுள்ளனர்</span><span class="cf0">.</span></p>
<p><span class="cf0">இந்த</span> <span class="cf0">பேரணிகளில்</span> <span class="cf0">பவுலின்</span> <span class="cf0">ஹான்சன்</span><span class="cf0">, </span><span class="cf0">பாப்</span> <span class="cf0">கட்டர்</span> <span class="cf0">உள்ளிட்ட</span> <span class="cf0">எதிர்க்கட்சி</span> <span class="cf0">அரசியல்வாதிகளும்</span> <span class="cf0">கலந்து</span> <span class="cf0">கொண்டனர்</span><span class="cf0">.</span></p>
<p><span class="cf0">பேரணிகளில்</span><span class="cf0">, </span><span class="cf0">குடியேற்றம்</span><span class="cf0">, </span><span class="cf0">கலாச்சாரம்</span><span class="cf0">, </span><span class="cf0">வீட்டு</span> <span class="cf0">வசதி</span><span class="cf0">, </span><span class="cf0">மருத்துவம்</span><span class="cf0">, </span><span class="cf0">குற்றம்</span> <span class="cf0">மற்றும்</span> <span class="cf0">சுற்றுச்சூழல்</span> <span class="cf0">போன்ற</span> <span class="cf0">பிரச்சனைகள்</span> <span class="cf0">குறித்து</span> <span class="cf0">கவலை</span> <span class="cf0">வெளிப்படுத்தப்பட்டது</span><span class="cf0">. </span></p>
<p><span class="cf0">ஆனால்</span><span class="cf0">, </span><span class="cf0">பேரணிகளில்</span> <span class="cf0">வெறுப்பும்</span> <span class="cf0">மோதலும்</span> <span class="cf0">உள்ளதாக </span><span class="cf0">அரசாங்கம்</span> <span class="cf0">கூறுகிறது</span><span class="cf0">.</span></p>
<p><span class="cf0">உள்துறை</span> <span class="cf0">அமைச்சர்</span> <span class="cf0">டோனி</span> <span class="cf0">பர்க்</span> <span class="cf0">கூறுகையில்</span><span class="cf0">, “</span><span class="cf0">நம்மைப்</span> <span class="cf0">பிளக்கும்</span> <span class="cf0">இயக்கங்களுக்கு</span> <span class="cf0">அவுஸ்திரேலியாவில்</span> <span class="cf0">இடமில்லை</span><span class="cf0">. </span><span class="cf0">நாங்கள்</span> <span class="cf0">நவீன</span><span class="cf0">, </span><span class="cf0">ஒற்றுமையுள்ள</span> <span class="cf0">அவுஸ்திரேலியாவுடன்</span> <span class="cf0">இருக்கிறோம்</span><span class="cf0">” </span><span class="cf0">என்றார்</span><span class="cf0">.</span></p>
<p><span class="cf0">புலம்பெயர்ந்த</span> <span class="cf0">சமூகங்களை</span> <span class="cf0">அச்சுறுத்தும்</span> <span class="cf0">முயற்சிகளை</span> <span class="cf0">நாங்கள்</span> <span class="cf0">ஏற்க</span><span class="cf0"> மாட்டோம்</span> <span class="cf0">என</span> <span class="cf0">அமைச்சர் டாக்டர் ஆன் அலி கூறியுள்ளார்</span></p>
<p><span class="cf0">அரசாங்கம், வெறுப்புப் பேரணிகளை எதிர்ப்பதாகவும், மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்க வேண்டும் எனவும் வலியுறுத்தியுள்ளது.</span></p>
<p><!--EndFragment --></p>
<p>The post <a href="https://oruvan.com/thousands-attend-australia-anti-immigration-rallies/">அவுஸ்திரேலியாவில் குடியேற்ற எதிர்ப்பு பேரணிகள் &#8211; அரசாங்கம் கண்டனம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
