<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>anura visit china Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/anura-visit-china/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/anura-visit-china/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Fri, 17 Jan 2025 04:29:51 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>anura visit china Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/anura-visit-china/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>ஊழலிலிருந்து விடுவிப்பதற்கு இலங்கைக்கு முழு ஆதரவு &#8211; சீன பிரதமர்</title>
		<link>https://oruvan.com/full-support-for-sri-lanka-in-eradicating-corruption-chinese-premier/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Fri, 17 Jan 2025 04:29:33 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Anura Kumara Dissanayake china visit]]></category>
		<category><![CDATA[anura visit china]]></category>
		<category><![CDATA[China]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=7179</guid>

					<description><![CDATA[<p>இலங்கையை ஊழலிலிருந்து விடுவிப்பதற்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் சீனா ஆதரவு தெரிவித்துள்ளது. இலங்கை மக்களுக்கு &#8220;வளரும் தேசம் &#8211; அழகான வாழ்க்கை&#8221; என்ற தொலைநோக்குப் பார்வையை அடைய தற்போதைய இலங்கை அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளுக்கு சீனாவின் முழு ஆதரவையும் அந்நாட்டு பிரதமர் லி கியாங் வெளிப்படுத்தியிருந்தார். நேற்று வியாழக்கிழமை பெய்ஜிங்கில் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது பிரதமர் லி கியாங் இந்தக் கருத்தைத் தெரிவித்தார். இந்தச் சந்திப்பின் போது, ​​பிரதமர் லி ஜனாதிபதி [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/full-support-for-sri-lanka-in-eradicating-corruption-chinese-premier/">ஊழலிலிருந்து விடுவிப்பதற்கு இலங்கைக்கு முழு ஆதரவு &#8211; சீன பிரதமர்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கையை ஊழலிலிருந்து விடுவிப்பதற்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் சீனா ஆதரவு தெரிவித்துள்ளது.</p>
<p>இலங்கை மக்களுக்கு &#8220;வளரும் தேசம் &#8211; அழகான வாழ்க்கை&#8221; என்ற தொலைநோக்குப் பார்வையை அடைய தற்போதைய இலங்கை அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளுக்கு சீனாவின் முழு ஆதரவையும் அந்நாட்டு பிரதமர் லி கியாங் வெளிப்படுத்தியிருந்தார்.</p>
<p>நேற்று வியாழக்கிழமை பெய்ஜிங்கில் இலங்கை ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுடன் இடம்பெற்ற சந்திப்பின் போது பிரதமர் லி கியாங் இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.</p>
<p>இந்தச் சந்திப்பின் போது, ​​பிரதமர் லி ஜனாதிபதி திசாநாயக்கவை அன்புடன் வரவேற்று, இலங்கையின் பொருளாதார வளர்ச்சிக்கு விரிவான ஆதரவை வழங்குவதற்கான சீனாவின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.</p>
<p>ஊழல் இல்லாத தேசத்தைக் கட்டியெழுப்புவதற்கான இலங்கை அரசின் தொடர்ச்சியான முயற்சிகளுக்கு சீனாவின் ஆதரவையும் பிரதமர் உறுதிப்படுத்தினார்.</p>
<p>ஜனாதிபதி திசாநாயக்க, தனது கருத்துக்களில், துறவி ஃபாக்சியனின் காலத்தில் இருந்தே சீனாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான வரலாற்றுச் சிறப்புமிக்க நட்பை எடுத்துரைத்தார்.</p>
<p>வறுமையை ஒழிப்பதற்கும் நாடு முழுவதும் டிஜிட்டல் மயமாக்கலை ஊக்குவிப்பதற்கும் இலங்கையின் முயற்சிகளுக்கு பிரதமர் லியின் ஆதரவையும் அவர் கோரினார்.</p>
<p>இலங்கையின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்து வரும் சீன அரசாங்கத்திற்கும், அந்நாட்டு மக்களும் தொடர்ந்து அளித்து வரும் ஆதரவிற்கு ஜனாதிபதி நன்றியைத் தெரிவித்தார்.</p>
<p>நீண்டகால இருதரப்பு உறவை வலுப்படுத்துதல், முதலீடுகளை வளர்ப்பது, கலாச்சார பரிமாற்றங்கள், வர்த்தகம் மற்றும் அரசியல் ஒத்துழைப்பை விரிவுபடுத்துதல் உள்ளிட்ட பல்வேறு தலைப்புகளில் இந்த சந்திப்பு இடம்பெற்றது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/full-support-for-sri-lanka-in-eradicating-corruption-chinese-premier/">ஊழலிலிருந்து விடுவிப்பதற்கு இலங்கைக்கு முழு ஆதரவு &#8211; சீன பிரதமர்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>அநுரவின் புதிய ஒப்பந்தம் &#8211; ஹம்பாந்தோட்டையில் சீனாவின் பிரசன்னம் அதிகரிக்கும் ; இந்தியா கவலையடையும்</title>
		<link>https://oruvan.com/anuras-new-deal-chinas-presence-in-hambantota-will-increase-india-will-be-worried/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Thu, 16 Jan 2025 07:52:30 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[anura visit china]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=7074</guid>

					<description><![CDATA[<p>ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சீனாவுக்கு மேற்கொண்டுள்ள அதிகாரப்பூர்வ பயணம் தொடர்பிலும் இந்தப் பயணத்தில் கைச்சாத்திடவிருந்த உடன்படிக்கைகள் குறித்தும் இந்தியா, அமெரிக்கா உட்பட ஆசிய, ஐரோப்பிய நாடுகள் உன்னிப்பாக அவதானித்திருந்தன. இந்த நிலையில் இன்று வியாழக்கிழமை சீன தலைநகர் பெய்ஜிங்கில் முக்கிய ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டதுடன், இந்த ஒப்பந்தத்தின் ஊடாக இலங்கையில் சீனா 3.7 பில்லியன் அமெரிக்க டொலர்களை நேரடியாக முதலீடு செய்ய உள்ளது. ஒப்பந்தத்தின் பிரகாரம் ஹம்பாந்தோட்டையில் புதிய எண்ணெய் சுத்திரிகரிப்பு நிலையமொன்று உருவாக்கப்பட உள்ளது. இந்த எண்ணெய் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/anuras-new-deal-chinas-presence-in-hambantota-will-increase-india-will-be-worried/">அநுரவின் புதிய ஒப்பந்தம் &#8211; ஹம்பாந்தோட்டையில் சீனாவின் பிரசன்னம் அதிகரிக்கும் ; இந்தியா கவலையடையும்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க சீனாவுக்கு மேற்கொண்டுள்ள அதிகாரப்பூர்வ பயணம் தொடர்பிலும் இந்தப் பயணத்தில் கைச்சாத்திடவிருந்த உடன்படிக்கைகள் குறித்தும் இந்தியா, அமெரிக்கா உட்பட ஆசிய, ஐரோப்பிய நாடுகள் உன்னிப்பாக அவதானித்திருந்தன.</p>
<p>இந்த நிலையில் இன்று வியாழக்கிழமை சீன தலைநகர் பெய்ஜிங்கில் முக்கிய ஒப்பந்தமொன்று கைச்சாத்திடப்பட்டதுடன், இந்த ஒப்பந்தத்தின் ஊடாக இலங்கையில் சீனா 3.7 பில்லியன் அமெரிக்க டொலர்களை நேரடியாக முதலீடு செய்ய உள்ளது.</p>
<p>ஒப்பந்தத்தின் பிரகாரம் ஹம்பாந்தோட்டையில் புதிய எண்ணெய் சுத்திரிகரிப்பு நிலையமொன்று உருவாக்கப்பட உள்ளது. இந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் 02 இலட்சம் கொள்ளளவுடைய எண்ணெய் தாங்கிகளை கொண்டிருக்கும் என்பதுடன், அவற்றில் பெருமளவான தொகையை ஏற்றுமதி செய்ய இருநாடுகளும் ஒப்பந்தத்தின் பிரகாரம் திட்டமிட்டுள்ளன.</p>
<p>இந்த ஒப்பந்தம் இந்தியாவுக்கு மிகப்பெரிய கவலையை ஏற்படுத்தும் என இந்திய அரசியல் ஆய்வாளர்கள் இலங்கைக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.</p>
<p>தெற்காசியாவில் மிகவும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகமாக எதிர்காலத்தில் ஹம்பாந்தோட்டை உருவாக வாய்ப்புள்ள சூழலில் ஏற்கனவே, அந்த துறைமுகத்தை 99 வருடங்களுக்கு இலங்கை சீனாவுக்கு குத்தகைக்கு வழங்கியுள்ளது.</p>
<p>பெய்ஜிங் சார்புத் தலைவர்களாக கருதப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்ச மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் ஹம்பாந்தோட்டை துறைமுகம் இவ்வாறு 99 ஆண்டுகளுக்கு சீனாவுக்கு குத்தகைக்கு வழங்க ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன.</p>
<p>அதேபோன்று சீனாவின் முதலீட்டில் அப்பாந்தோட்டை துறைமுகம், கிரிக்கெட் மைதானம் என பல திட்டங்கள் உருவாக்கப்பட்டதுடன், தலைநகர் கொழும்பில் போர்ட் சிட்டி எனப்படும் துறைமுக நகரத் திட்டமும் சீனாவின் முதலீட்டில் மேற்கொள்ளப்படுகிறது.</p>
<p>இலங்கையின் கடற்பரப்புக்குள் சீனாவின் ஆய்வுக் கப்பல்கள் வருகை தருவதற்கு இந்தியா ஏற்கனவே கடுமையான எதிர்ப்புகளை பல சந்தர்ப்பங்களில் வெளிப்படுத்தியுள்ள நிலையில், ஜனாதிபதி அநுரகுமார தலைமையிலான அரசாங்கம் செய்துக்கொண்டுள்ள ஒப்பந்தம் இந்தியாவை கவலையடைய செய்யும் என அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்</p>
<p><img fetchpriority="high" decoding="async" class="alignnone  wp-image-7065" src="https://oruvan.com/wp-content/uploads/2025/01/vijith-sinopec.jpg" alt="" width="1401" height="933" srcset="https://oruvan.com/wp-content/uploads/2025/01/vijith-sinopec.jpg 650w, https://oruvan.com/wp-content/uploads/2025/01/vijith-sinopec-400x266.jpg 400w, https://oruvan.com/wp-content/uploads/2025/01/vijith-sinopec-250x167.jpg 250w, https://oruvan.com/wp-content/uploads/2025/01/vijith-sinopec-150x100.jpg 150w, https://oruvan.com/wp-content/uploads/2025/01/vijith-sinopec-50x33.jpg 50w, https://oruvan.com/wp-content/uploads/2025/01/vijith-sinopec-100x67.jpg 100w, https://oruvan.com/wp-content/uploads/2025/01/vijith-sinopec-200x133.jpg 200w, https://oruvan.com/wp-content/uploads/2025/01/vijith-sinopec-300x200.jpg 300w, https://oruvan.com/wp-content/uploads/2025/01/vijith-sinopec-350x233.jpg 350w, https://oruvan.com/wp-content/uploads/2025/01/vijith-sinopec-450x300.jpg 450w, https://oruvan.com/wp-content/uploads/2025/01/vijith-sinopec-500x333.jpg 500w, https://oruvan.com/wp-content/uploads/2025/01/vijith-sinopec-550x366.jpg 550w" sizes="(max-width: 1401px) 100vw, 1401px" /></p>
<p>கடந்த டிசம்பர் மாதம் புதுடில்லிக்குச் சென்றிருந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் எந்தவொரு தீர்மானத்தை தமது அரசாங்கம் எடுக்காதென்ற உத்தரவாதத்தை வழங்கியிருந்தார்.</p>
<p>ஆனால், தற்போதைய ஒப்பந்தம் சீனாவின் கப்பல்கள் ஹம்பாந்தோட்டை துறைமுகத்துக்கு வருவதற்கான வழிமுறைகளை இலகுவாக்கியுள்ளது. எண்ணெய் ஏற்றுமதி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படும் பட்சத்தில் அதிகளவான கப்பல்கள் சீனாவிலிருந்து இலங்கைக்கு வருகை தரும். இது இலங்கையில் பொருளாதாரத்துக்கு ஓரளவு பலம் சேர்க்கும் ஒப்பந்தமாக கருதப்படுகிற போதிலும், இந்தியாவுக்கு கவலையை அளிக்கும் ஒப்பந்தமாக இருக்கலாம்.</p>
<p>பட்டுப்பாதை திட்டத்துக்கும் தெற்காசிய பிராந்திய வணிக நடவடிக்கைகளுக்கும் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனா கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகமாக கருதுகிறது. அத்திட்டங்களுக்கு வலுசேர்க்கும் வகையில் தற்போதைய ஒப்பந்தத்தின் ஊடாக சீனாவின் பிரசன்னம் ஹம்பாந்தோட்டையில் மேலும் வலுபெறும் என இந்திய அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.</p>
<p>(சுப்ரமணியம் நிஷாந்தன்)</p>
<p>The post <a href="https://oruvan.com/anuras-new-deal-chinas-presence-in-hambantota-will-increase-india-will-be-worried/">அநுரவின் புதிய ஒப்பந்தம் &#8211; ஹம்பாந்தோட்டையில் சீனாவின் பிரசன்னம் அதிகரிக்கும் ; இந்தியா கவலையடையும்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
