<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>and the Prime Minister Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/and-the-prime-minister/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/and-the-prime-minister/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Wed, 30 Jul 2025 03:12:11 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>and the Prime Minister Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/and-the-prime-minister/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>பாலஸ்தீன அரசை அங்கீகரிக்க தயாராகும் பிரித்தானியா</title>
		<link>https://oruvan.com/britain-prepares-to-recognize-palestinian-state/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 30 Jul 2025 03:12:11 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[and the Prime Minister]]></category>
		<category><![CDATA[Benjamin Netanyahu]]></category>
		<category><![CDATA[UK]]></category>
		<category><![CDATA[UK government]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=27931</guid>

					<description><![CDATA[<p>காசா பகுதியில் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புக் கொள்ளாவிட்டால், செப்டம்பர் மாதத்திற்குள் பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாக இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார். காசாவில் ஏற்பட்டுள்ள பேரழிவு சூழ்நிலை மற்றும் தீர்வுக்கான வாய்ப்புகள் மங்கி வருவதைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் ஸ்டார்மர் அமைச்சர்களிடம் தெரிவித்துள்ளார். &#8220;இறுதியில், இந்த நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரே வழி நீண்டகால தீர்வுதான். பாதுகாப்பான மற்றும் இறையாண்மை கொண்ட பாலஸ்தீன அரசுடன் பாதுகாப்பான இஸ்ரேல் எங்கள் இலக்கு. உண்மையான [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/britain-prepares-to-recognize-palestinian-state/">பாலஸ்தீன அரசை அங்கீகரிக்க தயாராகும் பிரித்தானியா</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>காசா பகுதியில் போர் நிறுத்தத்திற்கு இஸ்ரேல் ஒப்புக் கொள்ளாவிட்டால், செப்டம்பர் மாதத்திற்குள் பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாக இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மர் தெரிவித்துள்ளார்.</p>
<p>காசாவில் ஏற்பட்டுள்ள பேரழிவு சூழ்நிலை மற்றும் தீர்வுக்கான வாய்ப்புகள் மங்கி வருவதைக் கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாகவும் பிரதமர் ஸ்டார்மர் அமைச்சர்களிடம் தெரிவித்துள்ளார்.</p>
<p>&#8220;இறுதியில், இந்த நெருக்கடியை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான ஒரே வழி நீண்டகால தீர்வுதான். பாதுகாப்பான மற்றும் இறையாண்மை கொண்ட பாலஸ்தீன அரசுடன் பாதுகாப்பான இஸ்ரேல் எங்கள் இலக்கு.</p>
<p>உண்மையான அமைதிக்கான பங்களிப்பாக பாலஸ்தீன அரசை அங்கீகரிப்போம் என்று நாங்கள் முன்பே கூறியுள்ளோம். இப்போது இரு நாடுகள் தீர்வுக்காக செயல்பட வேண்டிய நேரம் இது,&#8221; என்று கெய்ர் ஸ்டார்மர் மேலும் கூறினார்.</p>
<p>சுதந்திர பாலஸ்தீன அரசை அங்கீகரிப்பதாக பிரான்ஸ் முன்னர் கூறியிருந்தது. செப்டம்பர் மாதம் ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் சபையில் பாலஸ்தீன அரசை பிரான்ஸ் அதிகாரப்பூர்வமாக அங்கீகரிப்பதாக அந்நாட்டு ஜனாதிபதி இம்மானுவேல் மக்ரோன் சமீபத்தில் அறிவித்தார்.</p>
<p>காசாவில் போர் தொடங்கி 662 நாட்களுக்குப் பின்னர், இஸ்ரேல் காசாவில் 60,000 க்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்களைக் கொன்றுள்ளது. இறப்பு எண்ணிக்கை 60,034 ஐ எட்டியுள்ளது, சராசரியாக ஒரு நாளைக்கு 36 பேர் கொல்லப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>காசா கடுமையான பஞ்சத்தால் பாதிக்கப்பட்டு, 88 குழந்தைகள் உட்பட 147 பேர் மரணமடைந்த நிலையில், இஸ்ரேல் தொடர்ந்து இனப்படுகொலையைச் செய்து வருகிறது, இது உலகின் மனசாட்சியை நெரிக்கிறது.</p>
<p>நேற்று உணவுக்காக வரிசையில் காத்திருந்த 19 பேர் உட்பட 62 பேர் கொல்லப்பட்டனர். 637 பேர் காயமடைந்தனர்.</p>
<p>ரஃபாவில் உள்ள ஒரு உணவு மையத்தில் காத்திருந்த மக்கள் மீது இராணுவம் துப்பாக்கிச் சூடு நடத்தியதில் 11 பேர் கொல்லப்பட்டனர், மேலும் அகதிகள் வசிக்கும் அல்மாவாசியில் உள்ள ஒரு முகாமில் நடந்த குண்டுவெடிப்பில் நான்கு பேர் கொல்லப்பட்டனர்.</p>
<p>காசாவில் ஒரு மில்லியன் பாலஸ்தீனியர்கள் கடுமையான பட்டினியை எதிர்கொள்கின்றனர்.</p>
<p>ஐந்து வயதுக்குட்பட்ட ஐந்து குழந்தைகளில் ஒருவர் கடுமையான ஊட்டச்சத்து குறைபாட்டால் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐ.நா.வின் பசி நிறுவனமான சர்வதேச செஞ்சிலுவைச் சங்கத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.</p>
<p>The post <a href="https://oruvan.com/britain-prepares-to-recognize-palestinian-state/">பாலஸ்தீன அரசை அங்கீகரிக்க தயாராகும் பிரித்தானியா</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>உலக வங்கி பிரதிநிதிகளுக்கும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு</title>
		<link>https://oruvan.com/meeting-between-world-bank-representatives-and-the-prime-minister/</link>
		
		<dc:creator><![CDATA[Kanooshiya Pushpakumar]]></dc:creator>
		<pubDate>Wed, 22 Jan 2025 03:46:28 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[and the Prime Minister]]></category>
		<category><![CDATA[Meeting between]]></category>
		<category><![CDATA[representatives]]></category>
		<category><![CDATA[World Bank]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=7774</guid>

					<description><![CDATA[<p>உலக வங்கியின் தெற்காசிய வலயத்திற்கான உப தலைவர் மார்டின் ரெய்சர் இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்தித்து பிரதான அபிவிருத்தி முன்னுரிமைகள் தொடர்பில் கலந்துரையாடினார். கல்வி, பாலின சமத்துவம் மற்றும் பிராந்திய விடயங்கள், நிலையான முன்னேற்றத்தை ஏற்படுத்தல் மற்றும் தேசிய சவால்களுக்கு முகம்கொடுப்பதற்கான தேவைகள் தொடர்பில் இந்த சந்திப்பின் போது அவதானம் செலுத்தப்பட்டது. தொழில்நுட்ப மற்றும் தொழில் கல்வி மற்றும் பயிற்சி ஊடாக (TVET) தரமான கல்வி அணுகலை மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடலின் போது பிரதானமாக [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/meeting-between-world-bank-representatives-and-the-prime-minister/">உலக வங்கி பிரதிநிதிகளுக்கும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>உலக வங்கியின் தெற்காசிய வலயத்திற்கான உப தலைவர் மார்டின் ரெய்சர் இலங்கை பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை சந்தித்து பிரதான அபிவிருத்தி முன்னுரிமைகள் தொடர்பில் கலந்துரையாடினார்.</p>
<p>கல்வி, பாலின சமத்துவம் மற்றும் பிராந்திய விடயங்கள், நிலையான முன்னேற்றத்தை ஏற்படுத்தல் மற்றும் தேசிய சவால்களுக்கு முகம்கொடுப்பதற்கான தேவைகள் தொடர்பில் இந்த சந்திப்பின் போது அவதானம் செலுத்தப்பட்டது.</p>
<p>தொழில்நுட்ப மற்றும் தொழில் கல்வி மற்றும் பயிற்சி ஊடாக (TVET) தரமான கல்வி அணுகலை மேம்படுத்துவது குறித்து கலந்துரையாடலின் போது பிரதானமாக அவதானம் செலுத்தப்பட்டது.</p>
<p>மாணவர்களுக்கு பலதரப்பட்ட தொழில் வாய்ப்புக்களை உருவாக்குவதற்கு TVET இனை பிரதான கல்வியுடன் இணைப்பதன் முக்கியத்துவம் தொடர்பில் இரு தரப்பினரும் வலியுறுத்தினர்.</p>
<p>வேலைத்தளங்களில் பாலின சமத்துவம் என்ற சிக்கலுக்குரிய விடயம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.</p>
<p>பொருளாதார செயற்பாடுகளில் பெண்களின் பங்களிப்பை மேம்படுத்துவதற்கு கொள்கை ரீதியிலான தலையீடு மற்றும் ஒத்துழைப்பு கட்டமைப்புகளின் தேவை குறித்தும் இரு தரப்பும் தமது அங்கீகாரத்தை சுட்டிக்காட்டியது.</p>
<p>கல்வி, பாலின சமத்துவம் மற்றும் பிராந்திய அபிவிருத்தியை மேம்படுத்துவதற்கான நிலையான தீர்வுகளுக்கு ஒத்துழைப்பு வழங்குவதில் இலங்கை மற்றும் உலக வங்கியின் பரஸ்பர உறுதிப்பாடு இந்த கலந்துரையாடலின் ஊடாக வலுப்படுத்தப்பட்டது.</p>
<p>நேபாளம், மாலைதீவு மற்றும் இலங்கைக்கான பிராந்திய நாடுகளின் பணிப்பாளர் டேவிட் சிசிலன் உள்ளிட்ட உலக வங்கியின் சிரேஷ்ட அதிகாரிகளும், இலங்கை அரசின் சார்பில் பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்ரி, பிரதமரின் மேலதிக செயலாளர் சாகரிகா போகஹவத்த, வெளியக வளங்கள் பிரிவின் பணிப்பாளர் நாயகம் சமந்த பண்டார வெளிவிவகார அமைச்சின் பொருளாதார விவகாரங்களுக்கான (இரு தரப்பு) சிரேஷ்ட பணிப்பாளர் நாயகம் தர்ஷன எம்.பெரேரா, வெளிவிவகார அமைச்சின் தென்கிழக்காசியா மற்றும் மத்திய ஆசிய பிரிவிற்கான பணிப்பாளர் லஷின்கா தம்முலுகே உள்ளிட்டவர்களும் இந்த சந்திப்பில் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/meeting-between-world-bank-representatives-and-the-prime-minister/">உலக வங்கி பிரதிநிதிகளுக்கும் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
