<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>ananda wijepala Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/ananda-wijepala/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/ananda-wijepala/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Tue, 17 Feb 2026 06:43:47 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>ananda wijepala Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/ananda-wijepala/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>சட்டத்தரணி சுடப்பட்ட இடம் உயர் பாதுகாப்பு வலயம் இல்லை &#8211; பொது பாதுகாப்பு அமைச்சர்</title>
		<link>https://oruvan.com/the-area-where-the-lawyer-was-shot-is-not-a-high-security-zone-public-security-minister/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Tue, 17 Feb 2026 06:43:47 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[ananda wijepala]]></category>
		<category><![CDATA[Parliament]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=45197</guid>

					<description><![CDATA[<p>அண்மையில் சட்டத்தரணி மற்றும் அவரின் மனைவி சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட பகுதி உயர் பாதுகாப்பு வலயம் அல்லவென அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது. நாடாளுமன்றில் இன்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து உரையாற்றிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இதனை தெரிவித்துள்ளார். “சபாநாயகரே இந்தப் பகுதி பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்படவில்லை. குறிப்பாக அந்த நேரத்தில் சில உயர் பாதுகாப்பு வலயங்கள் இருந்திருக்கலாம். எனினும், இந்த சம்பவம் இடம்பெற்ற பகுதி தற்போது உயர் பாதுகாப்பு வலயம் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/the-area-where-the-lawyer-was-shot-is-not-a-high-security-zone-public-security-minister/">சட்டத்தரணி சுடப்பட்ட இடம் உயர் பாதுகாப்பு வலயம் இல்லை &#8211; பொது பாதுகாப்பு அமைச்சர்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>அண்மையில் சட்டத்தரணி மற்றும் அவரின் மனைவி சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட பகுதி உயர் பாதுகாப்பு வலயம் அல்லவென அரசாங்கம் உறுதிப்படுத்தியுள்ளது.</p>
<p>நாடாளுமன்றில் இன்று எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து உரையாற்றிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இதனை தெரிவித்துள்ளார்.</p>
<p>“சபாநாயகரே இந்தப் பகுதி பாதுகாப்பு வலயமாக அறிவிக்கப்படவில்லை. குறிப்பாக அந்த நேரத்தில் சில உயர் பாதுகாப்பு வலயங்கள் இருந்திருக்கலாம்.</p>
<p>எனினும், இந்த சம்பவம் இடம்பெற்ற பகுதி தற்போது உயர் பாதுகாப்பு வலயம் அல்ல. பாதுகாப்பு படையினரும் இதனை உறுதிப்படுத்தியுள்ளனர்.</p>
<p>எவ்வாறாயினும், துப்பாக்கிச் சூடு நடத்த இடத்தில் இருந்து முப்படைகளின் தலைமையகமும், பாதுகாப்பு அமைச்சகமும் 600 முதல் 700 மீட்டர் தொலைவிலேயே அமைந்துள்ளதாக எதிர்க்கட்சி தலைவர் சுட்டிக்காட்டியிருந்தார்.</p>
<p>அது உயர் பாதுகாப்பு வலயம் என்பது பொது மக்களுக்கு கூட தெரியும் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச சுட்டிக்காட்டியிருந்தார்.</p>
<p>இதேவேளை, தலங்கம பொலிஸ் பிரிவின் அக்குரேகொட பகுதியில் உள்ள பல்பொருள் அங்காடி வாகன நிறுத்தும் இடத்தில் கடந்த 13ஆம் திகதி துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருந்தது.</p>
<p>இதில் சட்டத்தரணி ஒருவரும், அவரின் மனைவியும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பில் பொலிஸார் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/the-area-where-the-lawyer-was-shot-is-not-a-high-security-zone-public-security-minister/">சட்டத்தரணி சுடப்பட்ட இடம் உயர் பாதுகாப்பு வலயம் இல்லை &#8211; பொது பாதுகாப்பு அமைச்சர்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>5,000 சிவில் பாதுகாப்புப் படையினர் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு மாற்றம்</title>
		<link>https://oruvan.com/5000-civil-defence-personnel-transferred-to-the-wildlife-department/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Fri, 30 Jan 2026 03:54:49 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[ananda wijepala]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=44076</guid>

					<description><![CDATA[<p>சிவில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த சுமார் 5,000 வீரர்களை வனஜீவராசிகள் திணைக்களத்தின் பணிகளுக்காக விடுவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். சிவில் பாதுகாப்புப் படை தலைமையகத்திற்கு மேற்கொண்ட கண்காணிப்பு விஜயத்தின் போதே அவர் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார். வனஜீவராசிகள் திணைக்களம் மட்டுமன்றி, காவல்துறை திணைக்களத்தின் பணிகளை வலுப்படுத்தவும் சிவில் பாதுகாப்புப் படையினர் பயன்படுத்தப்பட உள்ளனர். இதன்படி, சுமார் 10,000 வீரர்களை காவல்துறையுடன் இணைத்துக் கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டின் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/5000-civil-defence-personnel-transferred-to-the-wildlife-department/">5,000 சிவில் பாதுகாப்புப் படையினர் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு மாற்றம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>சிவில் பாதுகாப்புப் படையைச் சேர்ந்த சுமார் 5,000 வீரர்களை வனஜீவராசிகள் திணைக்களத்தின் பணிகளுக்காக விடுவிக்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.</p>
<p>சிவில் பாதுகாப்புப் படை தலைமையகத்திற்கு மேற்கொண்ட கண்காணிப்பு விஜயத்தின் போதே அவர் இந்த முக்கிய அறிவிப்பை வெளியிட்டார்.</p>
<p>வனஜீவராசிகள் திணைக்களம் மட்டுமன்றி, காவல்துறை திணைக்களத்தின் பணிகளை வலுப்படுத்தவும் சிவில் பாதுகாப்புப் படையினர் பயன்படுத்தப்பட உள்ளனர்.</p>
<p>இதன்படி, சுமார் 10,000 வீரர்களை காவல்துறையுடன் இணைத்துக் கொள்ளத் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் நாட்டின் பொதுமக்களது பாதுகாப்பை மேலும் உறுதிப்படுத்த முடியும் என அரசாங்கம் எதிர்பார்ப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.</p>
<p>சிவில் பாதுகாப்புப் படையின் ஒட்டுமொத்த வினைத்திறனை (Efficiency) அதிகரிப்பதற்குத் தேவையான பயிற்சிகள், மனித வள மேலாண்மை மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துவது குறித்தும் அமைச்சர் இதன்போது வலியுறுத்தினார்.</p>
<p>படையினரின் தொழில்சார் திறன்களை மேம்படுத்துவதன் மூலம் அவர்களைப் பல்வேறு அரச சேவைத் துறைகளில் ஆக்கபூர்வமாக ஈடுபடுத்த முடியும் என அவர் நம்பிக்கை வெளியிட்டார்.</p>
<p>அரச நிர்வாகப் பணிகளில் மனித வளத்தைச் சரியாகப் பங்கீடு செய்யும் அரசாங்கத்தின் புதிய கொள்கையின் ஒரு அங்கமாக இந்த நடவடிக்கை பார்க்கப்படுகிறது</p>
<p>The post <a href="https://oruvan.com/5000-civil-defence-personnel-transferred-to-the-wildlife-department/">5,000 சிவில் பாதுகாப்புப் படையினர் வனஜீவராசிகள் திணைக்களத்திற்கு மாற்றம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இழப்பீடு வழங்க 10 பில்லியன் ரூபா ஒதுக்கீடு</title>
		<link>https://oruvan.com/10-billion-rupees-allocated-for-compensation/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Fri, 05 Dec 2025 08:50:18 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[ananda wijepala]]></category>
		<category><![CDATA[Cyclone Ditwah]]></category>
		<category><![CDATA[Damage caused by Cyclone Ditwah in Sri Lanka]]></category>
		<category><![CDATA[Disaster Damage Details]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=39997</guid>

					<description><![CDATA[<p>பேரிடர்களால் பாதிக்கப்பட்ட அனைத்து நபர்களுக்கும் இழப்பீடு வழங்க 10 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். &#8220;பேரிடர்களால் பாதிக்கப்பட்ட பலர் வங்கிப் புத்தகங்கள் மற்றும் தேசிய அடையாள அட்டைகள் போன்ற ஆவணங்களை இழந்துவிட்டதால், இழப்பீட்டை பணமாக வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது&#8221; என்று தெரிவித்துள்ளார். மேலும், டித்வா புயல் மிளகாய், மக்காச்சோளம் போன்ற பயிர்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை ஏற்றுக்கொள்வதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/10-billion-rupees-allocated-for-compensation/">இழப்பீடு வழங்க 10 பில்லியன் ரூபா ஒதுக்கீடு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பேரிடர்களால் பாதிக்கப்பட்ட அனைத்து நபர்களுக்கும் இழப்பீடு வழங்க 10 பில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.</p>
<p>&#8220;பேரிடர்களால் பாதிக்கப்பட்ட பலர் வங்கிப் புத்தகங்கள் மற்றும் தேசிய அடையாள அட்டைகள் போன்ற ஆவணங்களை இழந்துவிட்டதால், இழப்பீட்டை பணமாக வழங்க அரசாங்கம் முடிவு செய்துள்ளது&#8221; என்று தெரிவித்துள்ளார்.</p>
<p>மேலும், டித்வா புயல் மிளகாய், மக்காச்சோளம் போன்ற பயிர்களுக்கு பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது என்பதை ஏற்றுக்கொள்வதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/10-billion-rupees-allocated-for-compensation/">இழப்பீடு வழங்க 10 பில்லியன் ரூபா ஒதுக்கீடு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மட்டக்களப்பில் பெயர் பலகைகளை நீக்கிய சம்பவம்  &#8211;  அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை</title>
		<link>https://oruvan.com/incident-of-removing-name-boards-in-batticaloa-action-taken-by-the-government/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 24 Nov 2025 06:58:04 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[#oruvan #news]]></category>
		<category><![CDATA[ananda wijepala]]></category>
		<category><![CDATA[batticaloa]]></category>
		<category><![CDATA[sl parliament]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=39077</guid>

					<description><![CDATA[<p>மட்டக்களப்பு &#8211; வாழைச்சேனை மற்றும் கொக்கட்டிச்சோலை பகுதிகளில் அடையாளம் காணப்பட்ட தொல்பொருள் இடங்களுக்குச் செல்லும் பாதைகளை அடையாளம் காண்பதற்காக நிறுவப்பட்ட பல பெயர்ப்பலகைகளை அகற்றியது தொடர்பான ஆதாரங்களை இன்று (24) நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். குறித்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொல்பொருள் திணைக்களத்தால் நிறுவப்பட்ட பெயர்ப்பலகைகள் கடந்த 22 ஆம் திகதி அகற்றப்பட்டதாகவும், பெயர்ப்பலகைகளை அகற்ற முயன்ற நபர்கள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/incident-of-removing-name-boards-in-batticaloa-action-taken-by-the-government/">மட்டக்களப்பில் பெயர் பலகைகளை நீக்கிய சம்பவம்  &#8211;  அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>மட்டக்களப்பு &#8211; வாழைச்சேனை மற்றும் கொக்கட்டிச்சோலை பகுதிகளில் அடையாளம் காணப்பட்ட தொல்பொருள் இடங்களுக்குச் செல்லும் பாதைகளை அடையாளம் காண்பதற்காக நிறுவப்பட்ட பல பெயர்ப்பலகைகளை அகற்றியது தொடர்பான ஆதாரங்களை இன்று (24) நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.</p>
<p>குறித்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.</p>
<p>தொல்பொருள் திணைக்களத்தால் நிறுவப்பட்ட பெயர்ப்பலகைகள் கடந்த 22 ஆம் திகதி அகற்றப்பட்டதாகவும், பெயர்ப்பலகைகளை அகற்ற முயன்ற நபர்கள் தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார்.</p>
<p>வாழைச்சேனை பொலிஸ் பிரிவில் உள்ள தேவிமலை தொல்பொருள் தளத்திற்கு செல்லும் பாதையை அடையாளம் காண நிறுவப்பட்ட ஆறு பெயர்ப்பலகைகள் அகற்றப்பட்டுள்ளதாக அமைச்சர் தெரிவித்தார்.</p>
<p>வாழைச்சேனை பிரதேச சபையின் தலைவர் எஸ். சுதாகரன் மற்றும் பிரதிச் செயலாளர் பத்மநீதன் ஆகியோர் இதில் அடங்குவதாக அமைச்சர் ஆனந்த விஜேபால இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.</p>
<p>அதன்படி, வாழைச்சேனை உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், பொலிஸ் மா அதிபரின் அறிவுறுத்தலின் பேரில், தொடர்புடைய சந்தேக நபர்களை கைது செய்து நீதிமன்றில் முன்னிலைப்படுத்த  விசாரணைகளை ஆரம்பித்துள்ளார்.</p>
<p>இதேவேளை, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவில் தொல்பொருள் இடமாக அடையாளம் காணப்பட்டுள்ள சாந்தமலை கோவிலுக்குச் செல்லும் பாதையைக் குறிக்கும் இரண்டு பெயர் பலகைகள் கடந்த 21ஆம் திகதி ஒரு குழுவினால் அகற்றப்பட்டதாக அமைச்சர் நாடாளுமன்றில் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/incident-of-removing-name-boards-in-batticaloa-action-taken-by-the-government/">மட்டக்களப்பில் பெயர் பலகைகளை நீக்கிய சம்பவம்  &#8211;  அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக 5,000க்கும் மேற்பட்டோர் கைது</title>
		<link>https://oruvan.com/more-than-5000-people-arrested-in-connection-with-drug-trafficking/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Fri, 21 Nov 2025 05:35:05 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[#oruvan #news]]></category>
		<category><![CDATA[ananda wijepala]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=38858</guid>

					<description><![CDATA[<p>போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 5,000க்கும் மேற்பட்ட சந்தேக நபர்களில், சுமார் 250 பேர் மட்டுமே நீதிமன்றங்களால் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். மீதமுள்ளவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்தார். போதைப்பொருள் விநியோகம் மற்றும் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 250 சந்தேக நபர்களும் நீதிமன்றம் மற்றும் தடுப்பு உத்தரவுகளின் கீழ் தடுப்புக்காவலில் உள்ளனர் என்று அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார். போதைப்பொருள் பயன்பாட்டை நிவர்த்தி செய்ய அதிகாரிகள் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/more-than-5000-people-arrested-in-connection-with-drug-trafficking/">போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக 5,000க்கும் மேற்பட்டோர் கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 5,000க்கும் மேற்பட்ட சந்தேக நபர்களில், சுமார் 250 பேர் மட்டுமே நீதிமன்றங்களால் காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.</p>
<p>மீதமுள்ளவர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர் என்று பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜயபால தெரிவித்தார்.</p>
<p>போதைப்பொருள் விநியோகம் மற்றும் கடத்தல் தொடர்பாக கைது செய்யப்பட்ட 250 சந்தேக நபர்களும் நீதிமன்றம் மற்றும் தடுப்பு உத்தரவுகளின் கீழ் தடுப்புக்காவலில் உள்ளனர் என்று அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>போதைப்பொருள் பயன்பாட்டை நிவர்த்தி செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.</p>
<p>போதைப்பொருள் உட்கொண்டதற்காக கைது செய்யப்பட்ட சந்தேக நபர்களை பொலிஸார் மறுவாழ்வு மையங்களுக்கும், சில தன்னார்வலர்களை போதைப்பொருள் தடுப்பு திட்டங்களுக்கும் அனுப்புகின்றனர்.</p>
<p>சிறைச்சாலைகளில் கூட்ட நெரிசலைக் குறைப்பதற்கான நடவடிக்கைகள் குறித்து நீதி அமைச்சகம் தற்போது விவாதித்து வருவதாக அமைச்சர் விஜயபால மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/more-than-5000-people-arrested-in-connection-with-drug-trafficking/">போதைப்பொருள் கடத்தல் தொடர்பாக 5,000க்கும் மேற்பட்டோர் கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>செவ்வந்தி மூலம் வெளிப்பட்ட அரசியல் தொடர்புகள் &#8211; நாடாளுமன்றில் அமைச்சர் தகவல்</title>
		<link>https://oruvan.com/political-connections-revealed-through-the-ishara-sewwandi/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Tue, 18 Nov 2025 06:10:45 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[#oruvan #news]]></category>
		<category><![CDATA[ananda wijepala]]></category>
		<category><![CDATA[Ishara Sewwandi]]></category>
		<category><![CDATA[Parliament]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=38530</guid>

					<description><![CDATA[<p>கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியிடம் முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளின் அடிப்படையில் அரசியல் தொடர்புகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இதனை தெரிவித்துள்ளார். இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர், பாதாள குழுக்களுக்கு எதிரான நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், போதை பொருள் ஒழிப்பு நடவடிக்கையும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. “பாதாள குழுவினருக்கு எதிராக [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/political-connections-revealed-through-the-ishara-sewwandi/">செவ்வந்தி மூலம் வெளிப்பட்ட அரசியல் தொடர்புகள் &#8211; நாடாளுமன்றில் அமைச்சர் தகவல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியிடம் முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளின் அடிப்படையில் அரசியல் தொடர்புகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.</p>
<p>நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இதனை தெரிவித்துள்ளார்.</p>
<p>இந்நிலையில், குறித்த விடயம் தொடர்பில் விரிவான விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.</p>
<p>தொடர்ந்தும் பேசிய அவர்,</p>
<p>பாதாள குழுக்களுக்கு எதிரான நடவடிக்கை துரிதப்படுத்தப்பட்டுள்ளது. அத்துடன், போதை பொருள் ஒழிப்பு நடவடிக்கையும் சிறப்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>“பாதாள குழுவினருக்கு எதிராக பொலிஸார் மிகவும் சிறப்பான முறையில் செயல்பட்டுவருகின்றனர். இது சிலருக்கு தலைவலியை கொடுத்துள்ளது. அதனால்தான் பொலிஸாரை இலக்கு வைத்து விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டுவருகின்றன.</p>
<p>பாதாள குழுவினருக்கு எதிரான நடவடிக்கை விஸ்தரிக்கப்பட்டுள்ளது. பாதாள குழு உறுப்பினர்களுக்கு சிவப்பு பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதுவரையில் 80 பேருக்கு இவ்வாறு பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது.</p>
<p>அவர்களை இந்நாட்டுக்கு கொண்டுவருவதற்குரிய இராஜதந்திர முயற்சியும் மேற்கொள்ளப்பட்டுள்ளன. செல்வந்தியை கொண்டுவந்து என்ன செய்தீர்கள் என சிலர் கேட்கின்றனர்.</p>
<p>இவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் சில அரசியல் தொடர்புகள் பற்றி தகவல்கள் கிடைத்துள்ளன. அது தொடர்பில் விரிவான விசாரணை முன்னெடுக்கப்படும்.” என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/political-connections-revealed-through-the-ishara-sewwandi/">செவ்வந்தி மூலம் வெளிப்பட்ட அரசியல் தொடர்புகள் &#8211; நாடாளுமன்றில் அமைச்சர் தகவல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>திருகோணமலை சர்ச்சை &#8211; அரசாங்கம் நாடாளுமன்றில் விளக்கம்</title>
		<link>https://oruvan.com/trincomalee-controversy-government-explanation-in-parliament/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 17 Nov 2025 06:32:20 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[#oruvan #news]]></category>
		<category><![CDATA[ananda wijepala]]></category>
		<category><![CDATA[Parliament]]></category>
		<category><![CDATA[Trincomalee]]></category>
		<category><![CDATA[ஆனந்த விஜேபால]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=38425</guid>

					<description><![CDATA[<p>திருகோணமலையில் அசம்பாவிதம் ஏற்பட இடமளிக்க முடியாது எனவும் சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். திருகோணமலை சம்பவம் குறித்து நாடாளுமன்றில் இன்று விளக்கமளித்த அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். திருகோணமலை, சம்புத்த ஜயந்தி விகாரை தொடர்பில் நேற்றிரவு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது. புத்தர் சிலையொன்றை வைப்பதற்கு முற்பட்டவேளை இடம்பெற்ற குழப்ப நிலை தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதற்கமைய பொலிஸார் செயற்பட ஆரம்பித்தனர். குழப்பம் ஏற்பட்டால் புத்தர் சிலைக்கு [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/trincomalee-controversy-government-explanation-in-parliament/">திருகோணமலை சர்ச்சை &#8211; அரசாங்கம் நாடாளுமன்றில் விளக்கம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>திருகோணமலையில் அசம்பாவிதம் ஏற்பட இடமளிக்க முடியாது எனவும் சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” எனவும் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.</p>
<p>திருகோணமலை சம்பவம் குறித்து நாடாளுமன்றில் இன்று விளக்கமளித்த அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>திருகோணமலை, சம்புத்த ஜயந்தி விகாரை தொடர்பில் நேற்றிரவு சம்பவமொன்று இடம்பெற்றுள்ளது.</p>
<p>புத்தர் சிலையொன்றை வைப்பதற்கு முற்பட்டவேளை இடம்பெற்ற குழப்ப நிலை தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் கிடைத்துள்ளது. இதற்கமைய பொலிஸார் செயற்பட ஆரம்பித்தனர்.</p>
<p>குழப்பம் ஏற்பட்டால் புத்தர் சிலைக்கு சேதம் ஏற்படக்கூடும் என தகவல் கிடைத்தது.</p>
<p>இதனையடுத்து பொலிஸார் சிலையை அங்கிருந்து அகற்றி, சிலைக்குரிய பாதுகாப்பை உறுதிப்படுத்தினர்.” எனவும் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் குறிப்பிட்டார்.</p>
<p>இதேவேளை, திருகோணமலை கடற்கரைப் பகுதியில் சட்டவிரோதமாகக் கட்டடப்பட்டு வரும் விகாரையில் நேற்றிரவு (16) பிக்குகளால் அடாத்தாக வைக்கப்பட்ட புத்தர் சிலை கடும் எதிர்ப்புக்கு மத்தியில் அங்கிருந்து பொலிஸாரால் அகற்றப்பட்டது.</p>
<p>பௌத்த பிக்குகள் புத்தர் சிலையை அடாத்தாக வைத்தமைக்குத் தமிழ் அரசியல்வாதிகள் உள்ளிட்ட தமிழர் தரப்பினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தனர்.</p>
<p>இதனை தொடர்ந்து பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சரின் வேண்டுகோளுக்கிணங்கப் பொலிஸாரால் புத்தர் சிலை அகற்றப்பட்டு அங்கிருந்து கொண்டு செல்லப்பட்டது.</p>
<p>இதையடுத்து அந்தப் பகுதியில் நேற்று நள்ளிரவு வரை பதற்றமான சூழ்நிலை நிலவியது. பொலிஸார் மற்றும் விசேட அதிரடிப் படையினர் பாதுகாப்புக்காக அங்கு குவிக்கப்பட்டிருந்தனர்.</p>
<p>எவ்வாறாயினும், இதன்போது, பிக்கு தலைமையிலான குழுவினர் கடும் எதிர்ப்புத் தெரிவித்தமையால், அந்தப் பகுதியில் பதற்ற நிலை ஏற்பட்டது.</p>
<p>இந்தச் சந்தர்ப்பத்தில் பொலிஸார் மீது பிக்கு ஒருவர் தாக்குதல் மேற்கொண்டமை மேலும் பிரச்சினையை மேலும் தீவிரப்படுத்தியது.<br />
எனினும், இரவு வேளையில் கடற்கரைப் பகுதியில் இருந்து புத்தர் சிலை அகற்றப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/trincomalee-controversy-government-explanation-in-parliament/">திருகோணமலை சர்ச்சை &#8211; அரசாங்கம் நாடாளுமன்றில் விளக்கம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இந்தியா மற்றும் பாகிஸ்தானில் தற்கொலை குண்டு தாக்குதல்!!  இலங்கைக்கு ஆபத்தில்லை என்கிறது அரசு</title>
		<link>https://oruvan.com/suicide-bomb-attacks-in-india-and-pakistan-government-says-there-is-no-danger-to-sri-lanka/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 12 Nov 2025 06:58:15 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[#oruvan #news]]></category>
		<category><![CDATA[ananda wijepala]]></category>
		<category><![CDATA[Delhi Red Fort blast]]></category>
		<category><![CDATA[ஆனந்த விஜேபால]]></category>
		<category><![CDATA[ஒருவன் செய்திகள்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=38057</guid>

					<description><![CDATA[<p>இந்தியா மற்றும் பாகிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்புகளால் இலங்கைக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். நாட்டின் புலனாய்வு அமைப்புகள் தீவிரமாக இருப்பதால் நாட்டில் எந்த பாதுகாப்பு பிரச்சினையும் இல்லை என்று அவர் கூறுகிறார். &#8220;தற்போது, ​​இதுபோன்ற அச்சுறுத்தல் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இலங்கையின் புலனாய்வுத் துறை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது. நமது பாதுகாப்புத் துறை, குறிப்பாக முப்படைகள் மற்றும் பொலிஸார், தேசிய பாதுகாப்பில் சிறப்பு [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/suicide-bomb-attacks-in-india-and-pakistan-government-says-there-is-no-danger-to-sri-lanka/">இந்தியா மற்றும் பாகிஸ்தானில் தற்கொலை குண்டு தாக்குதல்!!  இலங்கைக்கு ஆபத்தில்லை என்கிறது அரசு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இந்தியா மற்றும் பாகிஸ்தானில் நடந்த குண்டுவெடிப்புகளால் இலங்கைக்கு எந்த ஆபத்தும் இல்லை என்று பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.</p>
<p>நாட்டின் புலனாய்வு அமைப்புகள் தீவிரமாக இருப்பதால் நாட்டில் எந்த பாதுகாப்பு பிரச்சினையும் இல்லை என்று அவர் கூறுகிறார்.</p>
<p>&#8220;தற்போது, ​​இதுபோன்ற அச்சுறுத்தல் குறித்து எந்த தகவலும் வெளியிடப்படவில்லை. இலங்கையின் புலனாய்வுத் துறை தொடர்ந்து செயல்பட்டு வருகிறது.</p>
<p>நமது பாதுகாப்புத் துறை, குறிப்பாக முப்படைகள் மற்றும் பொலிஸார், தேசிய பாதுகாப்பில் சிறப்பு கவனம் செலுத்தி வருகிறது.</p>
<p>எனவே, தேசிய பாதுகாப்பில் எந்தப் பிரச்சினையும் இல்லை.&#8221; என அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>இதேவேளை, இந்திய தலைநகர் புது டில்லி செங்கோட்டை அருகோ இடம்பெற்ற தற்கொலை குண்டு தாக்குதல் சம்பவம் குறித்த தான் மிகுந்த கவலை கொள்வதாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.</p>
<p>தனது அதிகாரப்பூர்வ எக்ஸ் தளத்தில் விடுத்துள்ள பதிவு ஒன்றில் ஜனாதிபதி இவ்வாறு தெரிவித்துள்ளார்.</p>
<p>இந்நிலையில், இந்திய மக்களுடன் இலங்கை ஒற்றுமையுடன் இருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.</p>
<p>டில்லியில் உள்ள செங்கோட்டை அடுத்த மூன்று நாட்களுக்கு சுற்றுலாப் பயணிகளுக்கு மூடப்படும் என்று இந்திய தொல்பொருள் ஆய்வு மையம் அறிவித்துள்ளது.</p>
<p>வெடிப்பு நடந்த இடத்தில் விசாரணை நடத்தப்பட்டு வருவதால், நினைவுச்சின்னத்திற்கு அருகில் பொதுமக்கள் கூடுவதைக் குறைக்கும் நோக்கில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>எவ்வாறாயினும், இதுவொரு தற்கொலை பயங்கரவாத தாக்குதல் என்று இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டிருந்தன.</p>
<p>The post <a href="https://oruvan.com/suicide-bomb-attacks-in-india-and-pakistan-government-says-there-is-no-danger-to-sri-lanka/">இந்தியா மற்றும் பாகிஸ்தானில் தற்கொலை குண்டு தாக்குதல்!!  இலங்கைக்கு ஆபத்தில்லை என்கிறது அரசு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தாவூத் இப்ராஹிம் குழு குறித்த எச்சரிக்கை &#8211; எதிர்வினையாற்றியுள்ள இலங்கை</title>
		<link>https://oruvan.com/warning-about-dawood-ibrahim-group-sri-lanka-reacts/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 10 Nov 2025 05:56:04 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[#oruvan #news]]></category>
		<category><![CDATA[ananda wijepala]]></category>
		<category><![CDATA[Dawood Ibrahim group]]></category>
		<category><![CDATA[ஆனந்த விஜேபால]]></category>
		<category><![CDATA[ஒருவன்]]></category>
		<category><![CDATA[ஒருவன் செய்திகள்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=37828</guid>

					<description><![CDATA[<p>இந்திய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவான தாவூத் இப்ராஹிம் குழுவிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கும் இடையிலான புதிய கூட்டணி குறித்து அரசாங்கம் எதிர்வினையாற்றியுள்ளது. இது குறித்த இந்திய உளவுத்துறை அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளதை தொடர்ந்து இலங்கையில் நடைபெறும் எந்தவொரு சட்டவிரோத நடவடிக்கைக்கும் எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது. குறித்து குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, இந்த குறிப்பிட்ட தகவல் குறித்து தனக்குத் தெரியாது [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/warning-about-dawood-ibrahim-group-sri-lanka-reacts/">தாவூத் இப்ராஹிம் குழு குறித்த எச்சரிக்கை &#8211; எதிர்வினையாற்றியுள்ள இலங்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இந்திய ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுவான தாவூத் இப்ராஹிம் குழுவிற்கும் தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் உறுப்பினர்களுக்கும் இடையிலான புதிய கூட்டணி குறித்து அரசாங்கம் எதிர்வினையாற்றியுள்ளது.</p>
<p>இது குறித்த இந்திய உளவுத்துறை அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளதை தொடர்ந்து இலங்கையில் நடைபெறும் எந்தவொரு சட்டவிரோத நடவடிக்கைக்கும் எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பொதுப் பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p>
<p>குறித்து குறித்த கேள்விகளுக்கு பதிலளித்த பொதுப் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால, இந்த குறிப்பிட்ட தகவல் குறித்து தனக்குத் தெரியாது என கூறியுள்ளார்.</p>
<p>எவ்வாறாயினும், போதைப்பொருள் வர்த்தகத்தை எதிர்த்துப் போராட அரசாங்கம் ஏற்கனவே பாரிய திட்டத்தைத் தொடங்கியுள்ளது என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.</p>
<p>ஏதேனும் சட்டவிரோத நடவடிக்கை நடந்தால், நாங்கள் நடவடிக்கை எடுப்போம்.  பொலிஸாருக்கு இது குறித்து தகவல் கிடைத்திருக்கலாம், அவர்கள் அதன்படி செயல்படுவார்கள்.” என அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>தாவூத் இப்ராஹிம் குழு, தென்னிந்தியா மற்றும் இலங்கை வழியாக அதன் போதைப்பொருள் வலையமைப்பை விரிவுபடுத்துவதற்காக முன்னாள் விடுதலைப் புலிகள் உறுப்பினர்களுடன் இணைந்து செயல்படுவதாக இந்திய உளவுத்துறை அமைப்புகள் எச்சரிக்கை விடுத்துள்ளன.</p>
<p>மகாராஷ்டிரா, குஜராத் மற்றும் பிற மாநிலங்களில் தீவிரப்படுத்தப்பட்ட சட்ட நடவடிக்கைகள் காரணமாக மேற்கு மற்றும் வட இந்தியாவில் தாவூத் இப்ராஹிம் குழு பெரும் இழப்புகளைச் சந்தித்துள்ளது.</p>
<p>இதனால், புதிய வழிகளைத் தேடி, இந்தக் குழு தற்போது தமிழ்நாடு மற்றும் இலங்கை முழுவதும் விடுதலைப் புலிகளின் கடத்தல் வலையமைப்பைப் பயன்படுத்தி போதைப்பொருட்களைக் கொண்டு செல்ல திட்டமிட்டுள்ளதாக அந்த எச்சரிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/warning-about-dawood-ibrahim-group-sri-lanka-reacts/">தாவூத் இப்ராஹிம் குழு குறித்த எச்சரிக்கை &#8211; எதிர்வினையாற்றியுள்ள இலங்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>வெளிநாட்டில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்கள் ஏழு சரணடைய இணக்கம்</title>
		<link>https://oruvan.com/seven-sri-lankan-drug-traffickers-abroad-agree-to-surrender/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Sun, 09 Nov 2025 11:31:59 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[#oruvan #news]]></category>
		<category><![CDATA[ananda wijepala]]></category>
		<category><![CDATA[Colombo]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=37796</guid>

					<description><![CDATA[<p>மத்திய கிழக்கு நாடுகளில் தற்போது தலைமறைவாக உள்ள ஏழு இலங்கை போதைப்பொருள் கடத்தல்காரர்கள் உள்ளூர் அதிகாரிகளிடம் சரணடைய விருப்பம் தெரிவித்துள்ளனர். பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இதனை தெரிவித்துள்ளார். கொழும்பு மாவட்ட செயலகத்தில் ““முழு நாடுமே ஒன்றாக” தேசிய போதைப்பொருள் எதிர்ப்பு பிரச்சாரத்தின் கீழ் கொழும்பு மாவட்ட நடவடிக்கையில் பங்கேற்றபோது அவர் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/seven-sri-lankan-drug-traffickers-abroad-agree-to-surrender/">வெளிநாட்டில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்கள் ஏழு சரணடைய இணக்கம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>மத்திய கிழக்கு நாடுகளில் தற்போது தலைமறைவாக உள்ள ஏழு இலங்கை போதைப்பொருள் கடத்தல்காரர்கள் உள்ளூர் அதிகாரிகளிடம் சரணடைய விருப்பம் தெரிவித்துள்ளனர்.</p>
<p>பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால இதனை தெரிவித்துள்ளார்.</p>
<p>கொழும்பு மாவட்ட செயலகத்தில் ““முழு நாடுமே ஒன்றாக” தேசிய போதைப்பொருள் எதிர்ப்பு பிரச்சாரத்தின் கீழ் கொழும்பு மாவட்ட நடவடிக்கையில் பங்கேற்றபோது அவர் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/seven-sri-lankan-drug-traffickers-abroad-agree-to-surrender/">வெளிநாட்டில் உள்ள போதைப்பொருள் கடத்தல்காரர்கள் ஏழு சரணடைய இணக்கம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
