<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Airport Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/airport/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/airport/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Sun, 26 Apr 2026 06:06:07 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>Airport Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/airport/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>110 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களுடன் 22 தேரர்கள் கைது</title>
		<link>https://oruvan.com/22-sri-lankan-monks-arrested-with-rs-1-1-billion-drugs-at-katunayake-airport/</link>
		
		<dc:creator><![CDATA[Diluksha]]></dc:creator>
		<pubDate>Sun, 26 Apr 2026 06:06:07 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[22 Sri Lankan]]></category>
		<category><![CDATA[Airport]]></category>
		<category><![CDATA[arrested]]></category>
		<category><![CDATA[Katunayake]]></category>
		<category><![CDATA[monks]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=49113</guid>

					<description><![CDATA[<p>கட்டுநாயக்க விமான நிலையத்தில் 110 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களுடன் 22 தேரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் நேற்று (25) இரவு மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் கொண்டு வந்த பயணப் பொதிகளில் பாடசாலை உபகரணங்கள் மற்றும் பல்வேறு இனிப்புப் பண்டங்களுடன் மறைத்து வைக்கப்பட்டிருந்த 110 கிலோகிராமிற்கும் அதிக குஷ் மற்றும் ஹேஷ் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. ஒவ்வொரு தேரரின் பயணப் பொதியிலும் 5 [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/22-sri-lankan-monks-arrested-with-rs-1-1-billion-drugs-at-katunayake-airport/">110 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களுடன் 22 தேரர்கள் கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>கட்டுநாயக்க விமான நிலையத்தில் 110 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களுடன் 22 தேரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p>
<p>விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரால் நேற்று (25) இரவு மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே<br />
அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p>
<p>சந்தேகநபர்கள் கொண்டு வந்த பயணப் பொதிகளில் பாடசாலை உபகரணங்கள் மற்றும் பல்வேறு இனிப்புப் பண்டங்களுடன் மறைத்து வைக்கப்பட்டிருந்த 110 கிலோகிராமிற்கும் அதிக குஷ் மற்றும் ஹேஷ் போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.</p>
<p>ஒவ்வொரு தேரரின் பயணப் பொதியிலும் 5 கிலோகிராமிற்கும் அதிகமான போதைப்பொருள் இருந்ததாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p>
<p>இந்தச் சந்தேகநபர்கள், அனுசரணையாளர் ஒருவரால் வழங்கப்பட்ட விமானப் பயணச் சீட்டுகளின் மூலம் கடந்த 22ஆம் திகதி தாய்லாந்துக்குச் சென்றுள்ளனர்.</p>
<p>அங்கு அவர்கள் சாதாரண உடையில் பல்வேறு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த புகைப்படங்கள் மற்றும் காணொளி காட்சிகள் அவர்களது கையடக்கத் தொலைபேசிகளில் இருந்து பொலிஸாரால் கண்டறியப்பட்டுள்ளன.</p>
<p>கட்டுநாயக்க விமான நிலைய வரலாற்றில் இதுவரை கைப்பற்றப்பட்ட மிகப்பெரிய போதைப்பொருள் தொகுதி இதுவாகும் என்பதுடன், பௌத்த தேரர்கள் குழுவொன்று போதைப்பொருட்களுடன் கைது செய்யப்பட்ட முதலாவது சந்தர்ப்பமும் இதுவேயாகும்.</p>
<p>கைது செய்யப்பட்டவர்கள் இலங்கையின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த இளம் தேரர்கள் எனவும், அவர்கள் பல்வேறு நிறுவனங்களில் உயர் கல்வியைத் தொடரும் மாணவர்கள் எனவும் தெரியவந்துள்ளது.</p>
<p>சந்தேகநபர்கள் இன்று (26) நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.</p>
<p><img fetchpriority="high" decoding="async" class="alignnone size-full wp-image-49115" src="https://oruvan.com/wp-content/uploads/2026/04/1777163769-arr_L.jpg" alt="" width="650" height="433" /></p>
<p>The post <a href="https://oruvan.com/22-sri-lankan-monks-arrested-with-rs-1-1-billion-drugs-at-katunayake-airport/">110 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியான போதைப்பொருட்களுடன் 22 தேரர்கள் கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>விமான நிலையத்தில் 25 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது</title>
		<link>https://oruvan.com/man-arrested-with-drugs-worth-rs-25-million-at-airport/</link>
		
		<dc:creator><![CDATA[Diluksha]]></dc:creator>
		<pubDate>Sat, 25 Apr 2026 05:24:30 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[Airport]]></category>
		<category><![CDATA[arrested]]></category>
		<category><![CDATA[Drug]]></category>
		<category><![CDATA[Man]]></category>
		<category><![CDATA[million]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=49084</guid>

					<description><![CDATA[<p>கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுமார் 25 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளின் சோதனை நடவடிக்கையின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் பேங்கொக் நகரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். அவரது பயணப் பொதியில் உலர்ந்த பழப் பொதிகளுக்குள் இருந்த பழங்களை அகற்றிவிட்டு, அதற்குள் மிக சூட்சுமமான முறையில் சுமார் 2,505 கிராம் நிறையுடைய குஷ் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது. சந்தேகநபர் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/man-arrested-with-drugs-worth-rs-25-million-at-airport/">விமான நிலையத்தில் 25 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>கட்டுநாயக்க விமான நிலையத்தில் சுமார் 25 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p>
<p>விமான நிலைய சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவின் அதிகாரிகளின் சோதனை நடவடிக்கையின் போதே அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p>
<p>சந்தேகநபர் பேங்கொக் நகரிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.</p>
<p>அவரது பயணப் பொதியில் உலர்ந்த பழப் பொதிகளுக்குள் இருந்த பழங்களை அகற்றிவிட்டு, அதற்குள் மிக சூட்சுமமான முறையில் சுமார் 2,505 கிராம் நிறையுடைய குஷ் போதைப்பொருள் மறைத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>சந்தேகநபர் கொழும்பைச் சேர்ந்த 33 வயதுடைய புகைப்பட கலைஞர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.</p>
<p>மேலதிக விசாரணைகளுக்காக சந்தேகநபர் மற்றும் கைப்பற்றப்பட்ட போதைப்பொருள் தொகுதி என்பன விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்படவுள்ளன.</p>
<p>The post <a href="https://oruvan.com/man-arrested-with-drugs-worth-rs-25-million-at-airport/">விமான நிலையத்தில் 25 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>விமான நிலையத்தில் 11 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது</title>
		<link>https://oruvan.com/one-arrested-with-drugs-worth-rs-113-4-million-at-the-airport/</link>
		
		<dc:creator><![CDATA[Diluksha]]></dc:creator>
		<pubDate>Mon, 06 Apr 2026 06:39:12 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Airport]]></category>
		<category><![CDATA[drugs]]></category>
		<category><![CDATA[million]]></category>
		<category><![CDATA[One arrested]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=48026</guid>

					<description><![CDATA[<p>கட்டுநாயக்க விமான நிலையத்தில் 11 கோடியே 34 இலட்சம் ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் அவர் இன்று (06) கைது செய்யப்பட்டுள்ளார். இந்தியாவின் புதுடெல்லியில் இருந்து எயார் இந்தியா நிறுவனத்திற்குச் சொந்தமான AI-277 என்ற விமானம் மூலம் அவர் விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார். அவரது பயணப் பொதியிலிருந்த சொக்லேட் பெட்டிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 11 கிலோ 340 கிராம் நிறையுடைய &#8216;குஷ்&#8217; போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/one-arrested-with-drugs-worth-rs-113-4-million-at-the-airport/">விமான நிலையத்தில் 11 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>கட்டுநாயக்க விமான நிலையத்தில் 11 கோடியே 34 இலட்சம் ரூபாய் பெறுமதியான குஷ் போதைப்பொருளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p>
<p>சுங்கப் போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் அவர் இன்று (06) கைது செய்யப்பட்டுள்ளார்.</p>
<p>இந்தியாவின் புதுடெல்லியில் இருந்து எயார் இந்தியா நிறுவனத்திற்குச் சொந்தமான AI-277 என்ற விமானம் மூலம் அவர் விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.</p>
<p>அவரது பயணப் பொதியிலிருந்த சொக்லேட் பெட்டிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த 11 கிலோ 340 கிராம் நிறையுடைய &#8216;குஷ்&#8217; போதைப்பொருளை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.</p>
<p>கைதானவர் கொழும்பு, கொம்பனித்தெரு பகுதியைச் சேர்ந்த கூலித் தொழிலில் ஈடுபடும் 45 வயதுடையவர் என தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>இந்நிலையில் மேலதிக விசாரணைகளுக்காக, குறித்த பயணி மற்றும் அவரிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட<br />
போதைப்பொருள் என்பன கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.</p>
<p>The post <a href="https://oruvan.com/one-arrested-with-drugs-worth-rs-113-4-million-at-the-airport/">விமான நிலையத்தில் 11 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் ஒருவர் கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>விமான நிலையத்தில் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான பொருட்களுடன் ஐவர் கைது</title>
		<link>https://oruvan.com/five-arrested-with-drugs-worth-over-rs-10-million-at-the-airport/</link>
		
		<dc:creator><![CDATA[Diluksha]]></dc:creator>
		<pubDate>Mon, 23 Mar 2026 04:56:25 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[10 million]]></category>
		<category><![CDATA[Airport]]></category>
		<category><![CDATA[arrested]]></category>
		<category><![CDATA[drugs]]></category>
		<category><![CDATA[five]]></category>
		<category><![CDATA[worth]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=47233</guid>

					<description><![CDATA[<p>சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட சுமார் ஒரு கோடியே 16 இலட்சத்து 72 ஆயிரத்து 600 (11,672,600) ரூபா பெறுமதியான பொருட்களுடன் விமான நிலையத்தில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் இன்று (23) அதிகாலை விமான நிலைய சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் ஹொங்கொங்கிலிருந்து &#8216;கதே பசிபிக்&#8217; விமான சேவைக்குச் சொந்தமான CX-611 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர். இதன்போது கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 70,460 வெளிநாட்டு சிகரெட்டுகள், பல்வேறு வகையான [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/five-arrested-with-drugs-worth-over-rs-10-million-at-the-airport/">விமான நிலையத்தில் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான பொருட்களுடன் ஐவர் கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>சட்டவிரோதமான முறையில் நாட்டுக்கு கொண்டுவரப்பட்ட சுமார் ஒரு கோடியே 16 இலட்சத்து 72 ஆயிரத்து 600 (11,672,600) ரூபா பெறுமதியான பொருட்களுடன் விமான நிலையத்தில் ஐவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p>
<p>அவர்கள் இன்று (23) அதிகாலை விமான நிலைய சுங்க அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p>
<p>சந்தேகநபர்கள் ஹொங்கொங்கிலிருந்து &#8216;கதே பசிபிக்&#8217; விமான சேவைக்குச் சொந்தமான CX-611 என்ற விமானம் மூலம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.</p>
<p>இதன்போது கைது செய்யப்பட்டவர்களிடம் இருந்து 70,460 வெளிநாட்டு சிகரெட்டுகள், பல்வேறு வகையான மருந்துப் பொருட்கள் மற்றும் வாசனைத் திரவியங்கள் என்பன சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.</p>
<p>கைதானவர்களில் மொரட்டுவை மற்றும் மகரகம பிரதேசங்களைச் சேர்ந்த மூன்று இலங்கை வர்த்தகர்களும், சீன நாட்டைச் சேர்ந்த ஒரு ஆண் மற்றும் ஒரு பெண்ணும் உள்ளடங்குகின்றனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/five-arrested-with-drugs-worth-over-rs-10-million-at-the-airport/">விமான நிலையத்தில் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான பொருட்களுடன் ஐவர் கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>விமான நிலையத்தில், 200 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது</title>
		<link>https://oruvan.com/four-arrested-with-drugs-worth-over-200-million-at-the-airport/</link>
		
		<dc:creator><![CDATA[Diluksha]]></dc:creator>
		<pubDate>Mon, 29 Dec 2025 08:52:57 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Airport]]></category>
		<category><![CDATA[arrested]]></category>
		<category><![CDATA[drugs]]></category>
		<category><![CDATA[Four]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=41886</guid>

					<description><![CDATA[<p>பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், 200 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொளுடன் இரண்டு பெண்கள் உட்பட  நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர். ​​பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமை சந்தேகநபர்கள் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேக நபர்கள் தாய்லாந்தின் பேங்காக்கில் போதைப்பொருளை பெற்று, இந்தியாவின் மும்பைக்குச் சென்று, இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று (29)  வந்தடைந்துள்ளனர். சந்தேகநபர்களிடமிருந்த பறிமுதல் செய்யப்பட்ட குஷ்  போதைப்பொருளின் நிறை 20 கிலோ மற்றும் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/four-arrested-with-drugs-worth-over-200-million-at-the-airport/">விமான நிலையத்தில், 200 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில், 200 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொளுடன் இரண்டு பெண்கள் உட்பட  நால்வர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p>
<p>​​பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவு அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமை சந்தேகநபர்கள் இன்று காலை கைது செய்யப்பட்டுள்ளனர்.</p>
<p>சந்தேக நபர்கள் தாய்லாந்தின் பேங்காக்கில் போதைப்பொருளை பெற்று, இந்தியாவின் மும்பைக்குச் சென்று, இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தில் கட்டுநாயக்க விமான நிலையத்தை இன்று (29)  வந்தடைந்துள்ளனர்.</p>
<p>சந்தேகநபர்களிடமிருந்த பறிமுதல் செய்யப்பட்ட குஷ்  போதைப்பொருளின் நிறை 20 கிலோ மற்றும் 684 கிராம்  எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>கைதானவர்கள்  பொரளை ,ஒருகொடவத்தை மற்றும் தெமட்டகொட பகுதிகளை சேர்ந்தவர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/four-arrested-with-drugs-worth-over-200-million-at-the-airport/">விமான நிலையத்தில், 200 மில்லியனுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் நால்வர் கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பிரதமர் பீஜிங் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்</title>
		<link>https://oruvan.com/prime-minister-arrives-at-beijing-international-airport/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sun, 12 Oct 2025 10:49:18 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[Airport]]></category>
		<category><![CDATA[arrives]]></category>
		<category><![CDATA[Beijing]]></category>
		<category><![CDATA[International]]></category>
		<category><![CDATA[news]]></category>
		<category><![CDATA[Prime Minister]]></category>
		<category><![CDATA[Tamil]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=35154</guid>

					<description><![CDATA[<p>பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய சீனாவின் பீஜிங் (Beijing) சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார். ​​தேசிய வானொலி மற்றும் தொலைக்காட்சி நிர்வாக அமைச்சர் கவோ ஷூமின் (Cao Shumin) அவரை வரவேற்றார். பிரதமர் முதல்நாளன்று தடைசெய்யப்பட்ட நகரம் மற்றும் சீனப் பெருஞ்சுவரைப் பார்வையிடுவார் என்றும் தெரிவிக்கப்படுகிறது. “ஒரு பகிரப்பட்ட எதிர்காலம்: பெண்களின் முழுமையான வளர்ச்சிக்கான புதிய மற்றும் துரிதப்படுத்தப்பட்ட செயன்முறை” என்ற கருப்பொருளின் கீழ் பெய்ஜிங்கில் நடைபெறும் இந்த உயர்மட்ட உச்சிமாநாட்டை சீன அரசும் ஐ.நா. பெண்களும் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/prime-minister-arrives-at-beijing-international-airport/">பிரதமர் பீஜிங் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய சீனாவின் பீஜிங் (Beijing) சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்.</p>
<p>​​தேசிய வானொலி மற்றும் தொலைக்காட்சி நிர்வாக அமைச்சர் கவோ ஷூமின் (Cao Shumin) அவரை வரவேற்றார்.</p>
<p>பிரதமர் முதல்நாளன்று தடைசெய்யப்பட்ட நகரம் மற்றும் சீனப் பெருஞ்சுவரைப் பார்வையிடுவார் என்றும் தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>“ஒரு பகிரப்பட்ட எதிர்காலம்: பெண்களின் முழுமையான வளர்ச்சிக்கான புதிய மற்றும் துரிதப்படுத்தப்பட்ட செயன்முறை” என்ற கருப்பொருளின் கீழ் பெய்ஜிங்கில் நடைபெறும் இந்த உயர்மட்ட உச்சிமாநாட்டை சீன அரசும் ஐ.நா. பெண்களும் இணைந்து ஏற்பாடு செய்துள்ளனர்.</p>
<p>பிரதமரின் இந்த விஜயத்தின் போது, ​​பாலின சமத்துவம், பெண்கள் அதிகாரமளித்தல் மற்றும் உள்ளடக்கிய கொள்கை சீர்திருத்தங்களில் இலங்கையின் முன்னேற்றத்தை எடுத்துரைக்கும் முக்கிய உரையை ஹரிணி அமரசூரிய ஆற்றவுள்ளார்.</p>
<p>இரு நாடுகளுக்கும் இடையேயான சமூக மேம்பாடு, கல்வி மற்றும் பெண்கள் தலைமையிலான தொழில்முனைவோர் ஆகியவற்றில் ஒத்துழைப்பை வலுப்படுத்துவதில் கவனம் செலுத்தும் வகையில், சீன ஜனாதிபதி சி ஜின்பிங் மற்றும் பிரதமர் லி கியாங் ஆகியோருடன் இருதரப்பு கலந்துரையாடல்களையும் அவர் நடத்துவார் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>
<p>பெண்கள், குழந்தைகள் விவகாரங்கள் மற்றும் சமூக அதிகாரமளித்தல் அமைச்சகத்தின் மூத்த அதிகாரிகள் மற்றும் பிரதமர் அலுவலகத்தின் பிரதிநிதிகள் பிரதமருடன் சென்றுள்ளனர்.</p>
<p><img decoding="async" class="alignleft size-full wp-image-35156" src="https://oruvan.com/wp-content/uploads/2025/10/PM-2.jpg" alt="" width="1011" height="539" srcset="https://oruvan.com/wp-content/uploads/2025/10/PM-2.jpg 1011w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/PM-2-400x213.jpg 400w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/PM-2-650x347.jpg 650w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/PM-2-250x133.jpg 250w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/PM-2-768x409.jpg 768w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/PM-2-150x80.jpg 150w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/PM-2-50x27.jpg 50w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/PM-2-100x53.jpg 100w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/PM-2-200x107.jpg 200w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/PM-2-300x160.jpg 300w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/PM-2-350x187.jpg 350w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/PM-2-450x240.jpg 450w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/PM-2-500x267.jpg 500w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/PM-2-550x293.jpg 550w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/PM-2-800x427.jpg 800w" sizes="(max-width: 1011px) 100vw, 1011px" /></p>
<p>The post <a href="https://oruvan.com/prime-minister-arrives-at-beijing-international-airport/">பிரதமர் பீஜிங் சர்வதேச விமான நிலையத்தை சென்றடைந்தார்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>விமான நிலையத்தில் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கைது</title>
		<link>https://oruvan.com/indian-national-arrested-with-drugs-worth-over-rs-10-million-at-airport/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Wed, 24 Sep 2025 13:15:29 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Airport]]></category>
		<category><![CDATA[arrested]]></category>
		<category><![CDATA[drugs]]></category>
		<category><![CDATA[Indian]]></category>
		<category><![CDATA[national]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=33505</guid>

					<description><![CDATA[<p>கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒரு கோடியே 55 இலட்சத்து அறுபதாயிரம் ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருள் தொகையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவினரால் சந்தேகநபர் கைது இன்று கைது செய்யப்பட்டுள்ளார். பயணப்பையில் சூட்சுமமான முறையில் மறைத்து 03 போதைப்பொருள் பொதிகளை 36 வயதான இந்தியப் பிரஜை நாட்டுக்கு கொண்டு வந்துள்ளார். இந்நிலையில் சந்தேகநபர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/indian-national-arrested-with-drugs-worth-over-rs-10-million-at-airport/">விமான நிலையத்தில் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>கட்டுநாயக்க விமான நிலையத்தில் ஒரு கோடியே 55 இலட்சத்து அறுபதாயிரம் ரூபா பெறுமதியான<br />
குஷ் போதைப்பொருள் தொகையுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p>
<p>பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப்பிரிவினரால் சந்தேகநபர் கைது இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.</p>
<p>பயணப்பையில் சூட்சுமமான முறையில் மறைத்து 03 போதைப்பொருள் பொதிகளை 36 வயதான இந்தியப் பிரஜை<br />
நாட்டுக்கு கொண்டு வந்துள்ளார்.</p>
<p>இந்நிலையில் சந்தேகநபர் நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/indian-national-arrested-with-drugs-worth-over-rs-10-million-at-airport/">விமான நிலையத்தில் ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியுடைய போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>விமான நிலையத்தில் 05 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் இருவர் கைது</title>
		<link>https://oruvan.com/two-arrested-with-drugs-worth-over-rs-50-million-at-the-airport/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Tue, 23 Sep 2025 08:51:09 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[50 million]]></category>
		<category><![CDATA[Airport]]></category>
		<category><![CDATA[arrested]]></category>
		<category><![CDATA[drugs worth]]></category>
		<category><![CDATA[Two]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=33349</guid>

					<description><![CDATA[<p>கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் 05 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் இன்று செவ்வாய்க்கிழமை காலை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர். தாய்லாந்தின் பொங்கொக்கில் இந்த போதைப்பொருள் தொகையை கொள்வனவு செய்து, இந்தியாவின் புது டெல்லிக்கு சென்று, ஏர் இந்தியா விமானம் AI-277 ஊடாக சந்தேகநபர்கள் இன்று காலை 6.50 க்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக கூறப்படுகிறது. பறிமுதல் செய்யப்பட்ட குஷ் போதைப்பொருள் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/two-arrested-with-drugs-worth-over-rs-50-million-at-the-airport/">விமான நிலையத்தில் 05 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் இருவர் கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>கட்டுநாயக்க விமான நிலைய வருகை முனையத்தில் 05 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p>
<p>சந்தேகநபர்கள் இன்று செவ்வாய்க்கிழமை காலை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டுப் பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p>
<p>தாய்லாந்தின் பொங்கொக்கில் இந்த போதைப்பொருள் தொகையை கொள்வனவு செய்து, இந்தியாவின் புது டெல்லிக்கு சென்று, ஏர் இந்தியா விமானம் AI-277 ஊடாக<br />
சந்தேகநபர்கள் இன்று காலை 6.50 க்கு கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்ததாக கூறப்படுகிறது.</p>
<p>பறிமுதல் செய்யப்பட்ட குஷ் போதைப்பொருள் சுமார் 05 கிலோ கிராம் நிறையுடையது என தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>கொழும்பைச் சேர்ந்த 29 வயதான பெண் ஒருவரும் தமிழகத்தின் சென்னையை சேர்ந்த 48 வயதான நபர் ஒருவருமே இதன்போது கைது செய்யப்பட்டுள்ளனர்.</p>
<p>சந்தேகநபர்கள் மேலதிக விசாரணைகளுக்காக கட்டுநாயக்க விமான நிலைய பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பணியக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/two-arrested-with-drugs-worth-over-rs-50-million-at-the-airport/">விமான நிலையத்தில் 05 கோடி ரூபாவுக்கும் அதிக பெறுமதியான போதைப்பொருளுடன் இருவர் கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>விமான நிலையத்தில் பல மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கண்டெடுப்பு</title>
		<link>https://oruvan.com/drugs-worth-millions-of-rupees-seized-at-airport/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sun, 21 Sep 2025 10:40:34 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[Airport]]></category>
		<category><![CDATA[drugs]]></category>
		<category><![CDATA[millions]]></category>
		<category><![CDATA[rupees]]></category>
		<category><![CDATA[worth]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=33206</guid>

					<description><![CDATA[<p>கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 168.40 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. விமான நிலையத்தின் வருகை முனையத்தில் உள்ள ஆண்கள் கழிப்பறையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் நேற்றைய தினம் போதைப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன. 422 கிராம் குஷ் மற்றும் 1 கிலோ 262 கிராம் நிறையுடைய ஹஷிஷ் போதைப்பொருட்களே இதன்போது கண்டெடுக்கப்பட்டுள்ளன. கழிப்பறையை சுத்தம் செய்த தொழிலாளி அதிகாரிகளுக்கு இது தொடர்பில் தகவல் வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன. [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/drugs-worth-millions-of-rupees-seized-at-airport/">விமான நிலையத்தில் பல மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கண்டெடுப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 168.40 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.</p>
<p>விமான நிலையத்தின் வருகை முனையத்தில் உள்ள ஆண்கள் கழிப்பறையில் பொலிஸ் போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் அதிகாரிகளால் நேற்றைய தினம் போதைப்பொருட்கள் கண்டெடுக்கப்பட்டுள்ளன.</p>
<p>422 கிராம் குஷ் மற்றும் 1 கிலோ 262 கிராம் நிறையுடைய ஹஷிஷ் போதைப்பொருட்களே இதன்போது கண்டெடுக்கப்பட்டுள்ளன.</p>
<p>கழிப்பறையை சுத்தம் செய்த தொழிலாளி அதிகாரிகளுக்கு இது தொடர்பில் தகவல் வழங்கியதாக தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>இந்நிலையில் சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/drugs-worth-millions-of-rupees-seized-at-airport/">விமான நிலையத்தில் பல மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருட்கள் கண்டெடுப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>விமான நிலையத்தில் 85 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கைது</title>
		<link>https://oruvan.com/indian-national-arrested-at-bia-with-rs-85-million-worth-of-kush/</link>
		
		<dc:creator><![CDATA[admin]]></dc:creator>
		<pubDate>Sun, 14 Sep 2025 05:11:28 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Airport]]></category>
		<category><![CDATA[arrested]]></category>
		<category><![CDATA[drugs]]></category>
		<category><![CDATA[Indian]]></category>
		<category><![CDATA[national]]></category>
		<category><![CDATA[with]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=32560</guid>

					<description><![CDATA[<p>பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 85 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் இந்திய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேகநபர் நேற்று சனிக்கிழமை (13) காலை 09.45 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளார். பின்னர் இந்தியாவின் மதுரை நோக்கி பயணிப்பதற்காக விமான நிலையத்தின் வருகை முனையத்தில் காத்திருந்தார். இதன்போது குறித்த இந்திய பிரஜையின் பயணப்பை சந்தேகத்திற்கிடமானது என கண்டறிந்த பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்தின் அதிகாரிகள், சோதனை மேற்கொண்டர். இதன்போது 8.542 கிலோகிராம்  நிறையுடைய [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/indian-national-arrested-at-bia-with-rs-85-million-worth-of-kush/">விமான நிலையத்தில் 85 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் 85 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் இந்திய பிரஜை ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.</p>
<p>சந்தேகநபர் நேற்று சனிக்கிழமை (13) காலை 09.45 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு வருகை தந்துள்ளார்.</p>
<p>பின்னர் இந்தியாவின் மதுரை நோக்கி பயணிப்பதற்காக விமான நிலையத்தின் வருகை முனையத்தில் காத்திருந்தார்.</p>
<p>இதன்போது குறித்த இந்திய பிரஜையின் பயணப்பை சந்தேகத்திற்கிடமானது என கண்டறிந்த பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியகத்தின் அதிகாரிகள், சோதனை மேற்கொண்டர்.</p>
<p>இதன்போது 8.542 கிலோகிராம்  நிறையுடைய குஷ் போதைப்பொருள் கண்டெடுக்கப்பட்டதுடன் சந்தேகநபரும் கைது செய்யப்பட்டார்.</p>
<p>சென்னையை சேர்ந்த 33 வயதான நபரே கைது இவ்வாறு செய்யப்பட்டுள்ளார்.</p>
<p>சந்தேகநபர் நீர்கொழும்பு நீதவான் முன்னிலையில் இன்று ஞாயிற்றுக்கிழமை (14) ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/indian-national-arrested-at-bia-with-rs-85-million-worth-of-kush/">விமான நிலையத்தில் 85 மில்லியன் ரூபா பெறுமதியான போதைப்பொருளுடன் இந்திய பிரஜை கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
