<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Air India Flight 171 crashing Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/air-india-flight-171-crashing/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/air-india-flight-171-crashing/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Sun, 13 Jul 2025 03:51:27 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>Air India Flight 171 crashing Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/air-india-flight-171-crashing/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>ஏர் இந்தியா விபத்து வேண்டுமென்றே நிகழ்ந்ததா?</title>
		<link>https://oruvan.com/was-the-air-india-crash-intentional/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Sun, 13 Jul 2025 03:51:27 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Air India]]></category>
		<category><![CDATA[Air India Crash]]></category>
		<category><![CDATA[Air India Flight 171 crashing]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=26399</guid>

					<description><![CDATA[<p>குஜராத்திலிருந்து கடந்த ஜூன் 12 லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா AI171 விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மேகானி நகர் குடியிருப்புப் பகுதியில் உள்ள பயிற்சி மருத்துவர் குடியிருப்பில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விமானத்தில் 242 பேர் பயணித்த நிலையில், அதில் விஸ்வேஷ் குமார் ரமேஷ் என்பவர் மட்டும் நல்வாய்ப்பாக உயிர் பிழைத்துள்ளார். மொத்தம் 260 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்தச் சம்பவம் குறித்து விமான விபத்து புலனாய்வுப் பணியகம் (AAIB) விசாரணை நடத்தி வருகிறது. அதன்படி, [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/was-the-air-india-crash-intentional/">ஏர் இந்தியா விபத்து வேண்டுமென்றே நிகழ்ந்ததா?</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>குஜராத்திலிருந்து கடந்த ஜூன் 12 லண்டனுக்குப் புறப்பட்ட ஏர் இந்தியா AI171 விமானம், புறப்பட்ட சில நிமிடங்களிலேயே மேகானி நகர் குடியிருப்புப் பகுதியில் உள்ள பயிற்சி மருத்துவர் குடியிருப்பில் மோதி விபத்துக்குள்ளானது.</p>
<p>இந்த விமானத்தில் 242 பேர் பயணித்த நிலையில், அதில் விஸ்வேஷ் குமார் ரமேஷ் என்பவர் மட்டும் நல்வாய்ப்பாக உயிர் பிழைத்துள்ளார். மொத்தம் 260 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.</p>
<p>இந்தச் சம்பவம் குறித்து விமான விபத்து புலனாய்வுப் பணியகம் (AAIB) விசாரணை நடத்தி வருகிறது. அதன்படி, இதன் முதற்கட்ட விசாரணை அறிக்கை, தற்போது வெளியிடப்பட்டுள்ளது.</p>
<p>விமான விபத்தில் கண்டெடுக்கப்பட்ட வாய்ஸ் ரெக்கார்டர், கருப்புப் பெட்டி மூலம் தகவல் சேகரித்து வெளியிடப்பட்டுள்ள அந்த அறிக்கையில், விமானம் புறப்பட்ட சில விநாடிகளிலேயே 2 என்ஜின்களும் செயலிழந்ததாக விசாரணை அறிக்கையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>மேலும், என்ஜின்களுக்கு எரிபொருள் செல்லும் வால்வு திடீரென ஆப் ஆனதாக விசாரணை அறிக்கையில் தகவல் கூறப்பட்டுள்ளது. அதாவது, விமானத்திற்கு எரிபொருளை வழங்கிய இரண்டு ஸ்விட்சுகளும் அணைக்கப்பட்டுள்ளன.</p>
<p>எரிபொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தும் இரண்டு ஸ்விட்சுகளும் புறப்பட்ட சிறிது நேரத்திலேயே ரன் நிலையில் இருந்து கட்-ஆஃப் நிலைக்கு மாற்றப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.</p>
<p>எனினும், சிறிது நேரத்திலேயே ஸ்விட்சுகள் மீண்டும் இயக்கப்பட்டாலும் விமானம் மீண்டும் உந்துதலை அடையும் முன்பே விபத்துக்குள்ளானது. இது தொடர்பாக விமானத்தின் காக்பிட்டில் இருந்து குரல் பதிவையும் விசாரணைக் குழு ஆய்வு செய்துள்ளது.</p>
<p>“எரிபொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்தும் ஸ்விட்சை ஏன் அணைத்தீர்கள்” என்று ஒரு விமானி கேட்பதும், அதற்கு மற்ற விமானி, தாம் அவ்வாறு செய்யவில்லை’ எனப் பதிலளிப்பதும் அதில் பதிவாகி இருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>எனவே, விமானி வேண்டும் என்றே ஸ்விட்சை அணைத்தாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.</p>
<p>இந்த நிலையில், ஏர் இந்தியா விமானத்தை விமானி வேண்டுமென்றே விபத்துக்குள்ளாக்கியிருக்கலாம் என்று இந்தியாவின் முன்னணி விமானப் போக்குவரத்து நிபுணர்களில் ஒருவரான கேப்டன் மோகன் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.</p>
<p>இதுகுறித்து அவர் என்.டி.டிவிக்கு அளித்துள்ள பேட்டியில், “எரிபொருள் தேர்விகள் சறுக்கும் வகையைச் சேர்ந்தவை அல்ல என்பதால், இதைத் தானாகவோ அல்லது மின் தடையினாலோ செய்ய முடியாது.</p>
<p>அவை ஒரு ஸ்லாட்டில் இருக்க வடிவமைக்கப்பட்டுள்ளன. மேலும் அவற்றை மேலே அல்லது கீழே நகர்த்த நீங்கள் அவற்றை வெளியே இழுக்க வேண்டும்.<br />
எனவே, கவனக்குறைவாக அவற்றை ’ஆஃப்’ நிலைக்கு நகர்த்துவதற்கான வாய்ப்பு எழாது.</p>
<p>அதை &#8216;ஆஃப்&#8217; நிலைக்கு நகர்த்துவது நிச்சயமாக வேண்டுமென்றே கைமுறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு நடவடிக்கையாகும்.</p>
<p>புறப்படும் இடத்தில், சுழற்சி தொடங்கும்போது, இரண்டு ஸ்விட்சுகளும் ஒன்றன்பின் ஒன்றாக &#8216;ஆஃப்&#8217; நிலைக்கு நகர்த்தப்படுவது ஏன் என்பதை வேறு எதுவும் விளக்கவில்லை. ஆகையால், இது வேண்டுமென்றே செய்யப்பட்டிருக்க வேண்டும்.</p>
<p>காக்பிட் குரல் ரெக்கார்டரின் கூற்றுப்படி, ஒரு விமானி, &#8216;நீங்கள் அதை ஏன் செய்தீர்கள்?&#8217; என்று கேட்கிறார். ’நான் அதைச் செய்யவில்லை’ என்று மற்றொரு விமானி பதிலளித்தார். இங்குதான் அறிக்கை சில முரண்பாடுகளைக் காட்டுகிறது, இது, கிட்டத்தட்ட ஒரு மறைப்பு போல தெரிகிறது.</p>
<p>புறப்படும் மற்றும் தரையிறங்கும்போது அனைத்து விமானிகளும் ஹெட்போன்களைப் பயன்படுத்துவது கட்டாயமாகும்.</p>
<p>காக்பிட் பகுதி மைக்ரோபோனின் அடிப்படையில் ஆடியோ CAM 1 (கேப்டன்) அல்லது CAM 2 (இணை விமானி )லிருந்து வருகிறதா என்பதை காக்பிட் குரல் ரெக்கார்டர் தெளிவாகக் காட்டும்.</p>
<p>எனவே, &#8216;ஒரு விமானி இதைச் சொன்னார், ஒரு விமானி அதைச் சொன்னார்&#8217; போன்ற தெளிவற்ற சொற்களைப் பயன்படுத்துவது மிகவும் மோசமான அறிக்கையிடல் ஆகும்.</p>
<p>சுழற்சியின்போது விமானியின் இரு கைகளும் கட்டுப்பாட்டு நெடுவரிசையில் இருக்கும், ஏனெனில் அது தானியங்கி அல்ல. அவர்கள் விமானத்தை சுழற்றுவதிலும், தன்னியக்க பைலட்டை அமைப்பதிலும் கவனம் செலுத்துகிறார்கள், எனவே இரண்டு கைகளும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன.</p>
<p>இருப்பினும், விமானியின் கண்காணிப்பு மட்டுமே கைகள் சுதந்திரமாக உள்ளது. வேறுவிதமாகக் கூற தெளிவற்ற சொற்களைப் பயன்படுத்துவது தவறாக வழிநடத்துவதாகத் தெரிகிறது. இந்த நடவடிக்கை வேண்டுமென்றே செய்யப்பட்டது.</p>
<p>ஒருவர் மன அழுத்தத்தில் இருக்கும்போது அல்லது மன அழுத்தம் மற்றும் மனச்சோர்வில் இருக்கும்போது, இதுபோன்ற சூழ்நிலையை உருவாக்கலாம். கடந்தகால சம்பவங்களைக் சுட்டிக்காட்டியே நான் இதைச் சொல்கிறேன்.</p>
<p>இது விமான நிறுவனத்தின் தவறு மட்டுமல்ல; அது விமானக் கட்டுப்பாட்டாளரின் பொறுப்பாகும். ஒரு முக்கிய பிரச்சினை விமான நேர வரம்புகள் மற்றும் ஓய்வு நேரங்கள்.</p>
<p>கடந்த 10-15 ஆண்டுகளில், விமானிகள் தங்கள் வரம்புகளுக்குத் தள்ளப்பட்டுள்ளனர், இதனால் அவர்களுக்கு சிறிய குடும்ப வாழ்க்கையே மிஞ்சியுள்ளது.<br />
பல குடும்பங்கள் பிரிந்து செல்வதைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டிருக்கிறீர்கள், மேலும் இந்த வகையான மன அழுத்தம் பல்வேறு எதிர்விளைவுகளுக்கு வழிவகுக்கும்.</p>
<p>இந்தியாவில் உள்ள எந்த விமான நிறுவனமும் மருத்துவ மதிப்பீடுகளின்போது அதன் விமானிகளின் மனநல சுயவிவரத்தைப் பராமரிப்பதில்லை. நம்மில் சிலர் இதைப் பற்றி எச்சரித்து வருகிறோம், ஆனால் அது செவிடர் காதுகளில் விழும் சங்காகவே இருக்கிறது.</p>
<p>விமானிகளைம் மனிதர்களைவிட இயந்திரங்களைப்போலவே நடத்துகிறார்கள். எனினும், இதுபற்றி நாம் அவசரப்பட்டு எந்த முடிவுக்கும் வரக்கூடாது. உலகிலேயே மிக அற்புதமான விமானிகள் மற்றும் பணியாளர்கள் நம்மிடம் உள்ளனர்.</p>
<p>நாட்டின் விமானிகள் மற்றும் பணியாளர்கள் எடுக்கும் அனைத்து முயற்சிகளையும் நான் பாராட்ட வேண்டும்; அவர்கள் சிவில் விமானப் போக்குவரத்தின் முதுகெலும்பு. அவர்கள் சிவில் விமானப் போக்குவரத்தின் முதன்மையானவர்கள்.</p>
<p>விமானிகளின் நலன் மற்றும் நல்வாழ்விலும் நாம் அக்கறை கொள்கிறோம். எனவே இந்த கட்டத்தில் எந்த முடிவுகளுக்கும் விரைந்து செல்லாமல் இறுதி அறிக்கைக்காகக் காத்திருப்போம்.</p>
<p>இதில் தொழில்நுட்ப சிக்கல்களும் உள்ளன. அறிக்கை குறித்து கருத்து தெரிவிக்கலாம். ஆனால் முதற்கட்ட அறிக்கைதான் வந்துள்ளது. உறுதியான அறிக்கை ஒன்று வரும் வரை நாம் காத்திருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/was-the-air-india-crash-intentional/">ஏர் இந்தியா விபத்து வேண்டுமென்றே நிகழ்ந்ததா?</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஏர் இந்தியா விமான விபத்து &#8211; 198 பேரின் டி.என்.ஏ அடையாளம் காணப்பட்டது</title>
		<link>https://oruvan.com/air-india-flight-crash-dna-of-198-people-identified/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Fri, 20 Jun 2025 06:00:44 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Air India]]></category>
		<category><![CDATA[Air India Crash]]></category>
		<category><![CDATA[Air India Flight 171 crashing]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=24079</guid>

					<description><![CDATA[<p>அண்மையில் இடம்பெற்ற ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் 214 பேரின் டி.என்.ஏ பொருத்தங்கள் உறுதிசெய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி, இதுவரை 198 பேரின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 12ஆம் திகதி இந்தியாவின் &#8211; அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் சிறிது நேரத்திலேயே மருத்துவக் கல்லூரி விடுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் அந்த விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/air-india-flight-crash-dna-of-198-people-identified/">ஏர் இந்தியா விமான விபத்து &#8211; 198 பேரின் டி.என்.ஏ அடையாளம் காணப்பட்டது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>அண்மையில் இடம்பெற்ற ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் 214 பேரின் டி.என்.ஏ பொருத்தங்கள் உறுதிசெய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p>
<p>இதன்படி, இதுவரை 198 பேரின் உடல்கள் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>கடந்த 12ஆம் திகதி இந்தியாவின் &#8211; அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட ஏர் இந்தியா விமானம் சிறிது நேரத்திலேயே மருத்துவக் கல்லூரி விடுதியில் விழுந்து விபத்துக்குள்ளானது.</p>
<p>இதில் அந்த விமானத்தில் பயணித்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்தனர். ஏர் இந்தியா போயிங் 787-8 ட்ரீம்லைனர் விமானம் இந்த விபத்தில் சிக்கியது.</p>
<p>198 பேரில் 149 பேர் இந்தியர்கள், ஏழு பேர் போர்த்துகீசியர்கள், 32 பேர் பிரித்தானியர்கள் மற்றும் ஒரு கனடா நாட்டைச் சேர்ந்தவர்களின் உடல்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அகமதாபாத் சிவில் மருத்துவமனை கண்காணிப்பாளர் ராகேஷ் ஜோஷி தெரிவித்தார்.</p>
<p>உயிரிழந்த 15 பேரின் உடல்கள் விமானம் மூலம் கொண்டு செல்லப்பட்டதாகவும், 183 உடல்கள் ஆம்புலன்ஸ்களில் கொண்டு செல்லப்பட்டதாகவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>விமான விபத்தில் உயிரிழந்தவர்களில் இதுவரை 222 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர், அவர்களில் 214 பேர் டி.என்.ஏ மாதிரிகள் அடிப்படையில் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.</p>
<p>மேலும் எட்டுப் பேர் டி.என்.ஏ பொருத்தம் இல்லாமல் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என அகமதாபாத் காவல் ஆணையர் ஜி.எஸ். மாலிக் தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/air-india-flight-crash-dna-of-198-people-identified/">ஏர் இந்தியா விமான விபத்து &#8211; 198 பேரின் டி.என்.ஏ அடையாளம் காணப்பட்டது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>நடு வானில் எஞ்சினில் கோளாறு &#8211; கொல்கத்தாவில் தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்</title>
		<link>https://oruvan.com/mid-air-engine-failure-air-india-flight-lands-in-kolkata/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Tue, 17 Jun 2025 02:33:39 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Air India]]></category>
		<category><![CDATA[Air India Flight]]></category>
		<category><![CDATA[Air India Flight 171 crashing]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=23722</guid>

					<description><![CDATA[<p>அமெரிக்காவில் இருந்து மும்பை நோக்கி வந்த ஏர் இந்தியா விமானம், நடு வானில் தொழில்நுட்ப கோளாறை எதிர்கொண்ட சம்பவம் பயணிகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. எனினும், மிகவும் சாதுர்யமாக செயற்பட்ட விமானி குறித்த விமானத்தை பத்திரமாக கொல்கத்தா விமான நிலையத்தில் தரையிறக்கியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் இருந்து, கொல்கத்தா வழியாக மும்பைக்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று நேற்று பயணித்துள்ளது. இந்நிலையில், நடுவானில் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/mid-air-engine-failure-air-india-flight-lands-in-kolkata/">நடு வானில் எஞ்சினில் கோளாறு &#8211; கொல்கத்தாவில் தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>அமெரிக்காவில் இருந்து மும்பை நோக்கி வந்த ஏர் இந்தியா விமானம், நடு வானில் தொழில்நுட்ப கோளாறை எதிர்கொண்ட சம்பவம் பயணிகள் இடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.</p>
<p>எனினும், மிகவும் சாதுர்யமாக செயற்பட்ட விமானி குறித்த விமானத்தை பத்திரமாக கொல்கத்தா விமான நிலையத்தில் தரையிறக்கியதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p>
<p>இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோவில் இருந்து, கொல்கத்தா வழியாக மும்பைக்கு ஏர் இந்தியா விமானம் ஒன்று நேற்று பயணித்துள்ளது.</p>
<p>இந்நிலையில், நடுவானில் விமானம் பறந்து கொண்டிருந்த நிலையில், விமானத்தின் இரண்டு” எஞ்சின்களில் ஒன்றில் பழுது ஏற்பட்டுள்ளது. எஞ்சினில் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டிருந்ததை விமானி உணர்ந்தார்.</p>
<p>தொடர்ந்து தொழில்நுட்ப கோளாறு குறித்து அதிகாரிகளுக்கு விமானி தகவல் தெரிவித்தார்.</p>
<p>இதனையடுத்து பயணிகள் பாதுகாப்பை கருத்தில் கொண்ட விமானி விமானத்தை சாதுர்யமாக இயக்கி கொல்கத்தா விமான நிலையத்தில் பத்திரமாக தரையிறக்கினார். இதனால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.</p>
<p>சுமார் ஐந்து மணி நேர காத்திருப்பிற்கு பிறகு விமானத்தில் இருந்து பயணிகள் பத்திரமாக வெளியேற்றப்பட்டனர். இதைத்தொடர்ந்து விமானத்தில் ஏற்பட்ட கோளாறை சரிசெய்யும் பணியில் பொறியிலாளர்கள் ஈடுபட்டுள்ளனர்.</p>
<p>மேலும் மும்பைக்கு செல்ல வேண்டிய ஏர் இந்தியா விமானம் கொல்கத்தாவில் நிறுத்திவைக்கப்பட்டது. இந்த சம்பவம் விமான பயணிகள் இடையே பரபரப்பை ஏற்படுத்தியது.</p>
<p>இதேவேளை, கடந்த 12ஆம் திகதி அகமதாபாத்தில் இருந்து லண்டன் நோக்கி பயணித்த ஏர் இந்தியா விமாம் விபத்துக்குள்ளானத்தில் அந்த விமானத்தில் பயணம் செய்த 242 பேரில் 241 பேர் உயிரிழந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/mid-air-engine-failure-air-india-flight-lands-in-kolkata/">நடு வானில் எஞ்சினில் கோளாறு &#8211; கொல்கத்தாவில் தரையிறக்கப்பட்ட ஏர் இந்தியா விமானம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்த குடும்பம் &#8211; இலங்கையில் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம்</title>
		<link>https://oruvan.com/family-of-those-killed-in-air-india-crash-beautiful-photo-taken-in-sri-lanka/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Fri, 13 Jun 2025 05:03:25 +0000</pubDate>
				<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Air India Flight]]></category>
		<category><![CDATA[Air India Flight 171 crashing]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=23291</guid>

					<description><![CDATA[<p>இந்தியாவின் அகமதாபாத்தில் நேற்று வியாழக்கிழமை நடந்த விமான விபத்து உலகின் மிக மோசமான விமான பேரழிவுகளில் ஒன்றாக மாறியுள்ளது. இந்த துயர சம்பவத்திற்குப் பிறகு, அதில் பயணித்த சில பயணிகளின் இறுதி நினைவுகள் இப்போது வெளியாகி வருகின்றன. இதன்படி, பிரதிக் ஜோஷி மற்றம் அவரின் குடும்பத்தினர் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. மூன்று குழந்தைகள் மற்றும் மனையுவிடன் லண்டன் நோக்கிச் சென்ற போது ஜோஷி விபத்தை எதிர்நோக்கியிருந்தார். மென்பொருள் நிபுணரான ஜோஷி, ஆறு ஆண்டுகள் லண்டனில் வசித்து வந்தார். [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/family-of-those-killed-in-air-india-crash-beautiful-photo-taken-in-sri-lanka/">ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்த குடும்பம் &#8211; இலங்கையில் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இந்தியாவின் அகமதாபாத்தில் நேற்று வியாழக்கிழமை நடந்த விமான விபத்து உலகின் மிக மோசமான விமான பேரழிவுகளில் ஒன்றாக மாறியுள்ளது.</p>
<p>இந்த துயர சம்பவத்திற்குப் பிறகு, அதில் பயணித்த சில பயணிகளின் இறுதி நினைவுகள் இப்போது வெளியாகி வருகின்றன.</p>
<p>இதன்படி, பிரதிக் ஜோஷி மற்றம் அவரின் குடும்பத்தினர் பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. மூன்று குழந்தைகள் மற்றும் மனையுவிடன் லண்டன் நோக்கிச் சென்ற போது ஜோஷி விபத்தை எதிர்நோக்கியிருந்தார்.</p>
<p>மென்பொருள் நிபுணரான ஜோஷி, ஆறு ஆண்டுகள் லண்டனில் வசித்து வந்தார். லண்டனில் தனது மூன்று குழந்தைகள் உட்பட தனது குடும்பத்திற்கு சிறந்த வாழ்க்கையை வழங்க கடுமையாக உழைத்துள்ளதாக கூறப்படுகின்றது.</p>
<p>ஆறு ஆண்டுகள் அர்ப்பணிப்புடன் பணியாற்றிய பின்னர், அவர் இறுதியாக நேற்று குறித்த விமானத்தில், தனது அன்புக்குரிய குடும்பத்தை லண்டனுக்கு அழைத்துச் செல்ல தேவையான ஏற்பாடுகளைச் செய்திருந்தார்.</p>
<p>இந்தியாவில் வைத்தியராக பணியாற்றிய அவரின் மனைவியும் இந்த பயணத்திற்காக தனது வேலையும் கைவிட்டிருந்தார்.</p>
<p>உதய்பூரில் உள்ள பசிபிக் மருத்துவமனையில் வைத்தியராக பணிபுரிந்து வந்தார், இரண்டு நாட்களுக்கு முன்பு தனது வேலையை இராஜினாமா செய்திருந்தார்.</p>
<p>அவர்களின் மூன்று குழந்தைகள் ஐந்து வயது இரட்டை ஆண் குழந்தைகளும் எட்டு வயது மகள்களும் ஆவர்.</p>
<p>புதிய வாழ்க்கைக்கான அனைத்து நம்பிக்கைகளுடனும் விமானத்தில் ஏறிய ஜோஷி தம்பதியினர், தங்கள் மூன்று குழந்தைகளுடன் இறுதியா ஒரு செல்ஃபி புகைப்படத்தையும் எடுத்திருந்தனர்.</p>
<p>இருப்பினும், அது அவர்கள் எடுக்கும் கடைசி செல்ஃபியாக இருக்கும் என்று அவர்கள் ஒருபோதும் நினைத்துப் பார்த்ததில்லை.</p>
<p>பேரழிவு தரும் துயரத்திற்கு சில நிமிடங்களுக்கு முன்பு எடுக்கப்பட்ட புன்னகையால் நிரம்பிய செல்ஃபி, இன்று உலகப் புகழ்பெற்ற புகைப்படமாக மாறியுள்ளது.</p>
<p>ஜோஷி குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேர் உட்பட விமானத்தில் இருந்த 241 பயணிகளும் விமான விபத்தில் இறந்தனர்.</p>
<p>துரதிர்ஷ்டவசமான விபத்துக்கு முன்பு, ஜோஷி குடும்பம் இலங்கைக்கும் சுற்றுலா வந்திருந்தனர். அவர்கள் கண்டி தலதா மாளிகை உள்ளிட்ட பகுதிகளுக்குச் சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/family-of-those-killed-in-air-india-crash-beautiful-photo-taken-in-sri-lanka/">ஏர் இந்தியா விமான விபத்தில் உயிரிழந்த குடும்பம் &#8211; இலங்கையில் எடுத்துக்கொண்ட அழகிய புகைப்படம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
