<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>ADIC Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/adic/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/adic/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Fri, 16 Jan 2026 03:25:49 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>ADIC Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/adic/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>இலங்கையில் மதுபானத்தால் தினசரி 50 மரணங்கள்</title>
		<link>https://oruvan.com/50-deaths-per-day-due-to-alcohol-in-sri-lanka/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Fri, 16 Jan 2026 03:25:49 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#police]]></category>
		<category><![CDATA[ADIC]]></category>
		<category><![CDATA[death]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<category><![CDATA[who]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=43233</guid>

					<description><![CDATA[<p>இலங்கையில் மதுபானப் பயன்பாடு காரணமாக நாளொன்றுக்கு சுமார் 50 பேர் உயிரிழப்பதாக மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் (ADIC) பகீர் தகவலை வெளியிட்டுள்ளது. கொழும்பில் நடைபெற்ற &#8220;மதுபானம் குறித்த உண்மைகளும் கட்டுக்கதைகளும் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்பு&#8221; என்ற தலைப்பிலான ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் சம்பத் டி சேரம் இதனைத் தெரிவித்தார். அவர் மேலும் குறிப்பிடுகையில், இலங்கையில் மதுபானம் மற்றும் புகையிலை பயன்பாடு காரணமாக ஆண்டுதோறும் 15,000 முதல் 20,000 [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/50-deaths-per-day-due-to-alcohol-in-sri-lanka/">இலங்கையில் மதுபானத்தால் தினசரி 50 மரணங்கள்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கையில் மதுபானப் பயன்பாடு காரணமாக நாளொன்றுக்கு சுமார் 50 பேர் உயிரிழப்பதாக மதுபானம் மற்றும் போதைப்பொருள் தகவல் மையம் (ADIC) பகீர் தகவலை வெளியிட்டுள்ளது.</p>
<p>கொழும்பில் நடைபெற்ற &#8220;மதுபானம் குறித்த உண்மைகளும் கட்டுக்கதைகளும் மற்றும் மக்கள் பிரதிநிதிகளின் பொறுப்பு&#8221; என்ற தலைப்பிலான ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு உரையாற்றிய அதன் நிறைவேற்றுப் பணிப்பாளர் சம்பத் டி சேரம் இதனைத் தெரிவித்தார்.</p>
<p>அவர் மேலும் குறிப்பிடுகையில், இலங்கையில் மதுபானம் மற்றும் புகையிலை பயன்பாடு காரணமாக ஆண்டுதோறும் 15,000 முதல் 20,000 பேர் வரை உயிரிழக்கின்றனர்.</p>
<p>வீதி விபத்துக்கள், புற்றுநோய் மற்றும் ஏனைய நோய்களால் ஏற்படும் மரணங்களின் மொத்த எண்ணிக்கையை விடவும், மதுபானத்தினால் ஏற்படும் மரணங்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது.</p>
<p>சட்டபூர்வமான மற்றும் சட்டவிரோத மதுபானங்கள் ஆகிய இரண்டுமே இந்த உயயிரிழப்புகளுக்குப் பிரதான காரணிகளாக அமைவதாக அவர் சுட்டிக்காட்டினார்.</p>
<p>அதேவேளை, மதுபானக் கட்டுப்பாட்டு நடவடிக்கைகளுக்குப் பெரும் சவாலாக இருப்பது அரசியல்வாதிகளுக்கும் மதுபான நிறுவனங்களுக்கும் இடையிலான நெருங்கிய தொடர்பு என்று புகையிலை மற்றும் மதுபானங்கள் மீதான தேசிய அதிகார சபையின் தலைவர் வைத்தியர் ஆனந்த ரத்நாயக்க தெரிவித்தார்.</p>
<p>நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பலருக்கு மதுபான உற்பத்தி நிலையங்கள் அல்லது விற்பனை நிலையங்களின் உரிமம் இருப்பதை அவர் சுட்டிக்காட்டினார்.</p>
<p>அரசியல் பலத்தைத் தக்கவைக்க மதுபான நிறுவனங்களின் நிதி பயன்படுத்தப்படுவதாகவும், நிறுவனங்களின் ஆதிக்கத்தை நிலைநாட்ட அரசியல்வாதிகள் பயன்படுத்தப்படுவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார்.</p>
<p>மேலும், இலங்கையில் சட்டவிரோத மதுபானப் பயன்பாடு 300% அல்லது 37% இனால் அதிகரித்துள்ளதாக உலக சுகாதார நிறுவனம் (WHO) தெரிவித்ததாகக் கூறப்படும் செய்திகள் முற்றிலும் அடிப்படையற்றவை.</p>
<p>அவ்வாறான அறிக்கையை அந்த நிறுவனம் வெளியிடவில்லை என்றும் இந்தச் சந்திப்பின் போது தெளிவுபடுத்தப்பட்டது</p>
<p>The post <a href="https://oruvan.com/50-deaths-per-day-due-to-alcohol-in-sri-lanka/">இலங்கையில் மதுபானத்தால் தினசரி 50 மரணங்கள்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
