<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>ஹர்ஷன நாணயக்கார Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/%e0%ae%b9%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b7%e0%ae%a9-%e0%ae%a8%e0%ae%be%e0%ae%a3%e0%ae%af%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b0/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/ஹர்ஷன-நாணயக்கார/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Thu, 19 Feb 2026 10:38:49 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>ஹர்ஷன நாணயக்கார Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/ஹர்ஷன-நாணயக்கார/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>பாதாள உலகக் கும்பலை வேரோடு பிடுங்குவோம்</title>
		<link>https://oruvan.com/lets-root-out-the-underworld-gangs/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Thu, 19 Feb 2026 10:38:33 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஹர்ஷன நாணயக்கார]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=45440</guid>

					<description><![CDATA[<p>இலங்கையில் நீண்டகாலமாக வேரூன்றியுள்ள பாதாள உலகக் குழுக்களையும், போதைப்பொருள் மாபியாக்களையும் வேரோடு பிடுங்கி எறிவதற்கு எமது அரசு தீர்மானித்துள்ளது என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார  தெரிவித்தார். நாட்டின் சட்ட ஒழுங்கைச் சீர்குலைக்கும் இத்தகைய குற்றக் கும்பல்களுடன் தொடர்புடைய எவரும், எத்தகு அதிகாரப் பின்னணியைக் கொண்டிருந்தாலும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார். இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த நீதி அமைச்சர், “நாட்டில் பாதாள உலகக் குழுக்கள் இந்தளவுக்குக் கட்டற்று [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/lets-root-out-the-underworld-gangs/">பாதாள உலகக் கும்பலை வேரோடு பிடுங்குவோம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கையில் நீண்டகாலமாக வேரூன்றியுள்ள பாதாள உலகக் குழுக்களையும், போதைப்பொருள் மாபியாக்களையும் வேரோடு பிடுங்கி எறிவதற்கு எமது அரசு தீர்மானித்துள்ளது என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார  தெரிவித்தார்.</p>
<p>நாட்டின் சட்ட ஒழுங்கைச் சீர்குலைக்கும் இத்தகைய குற்றக் கும்பல்களுடன் தொடர்புடைய எவரும், எத்தகு அதிகாரப் பின்னணியைக் கொண்டிருந்தாலும் சட்டத்தின் பிடியிலிருந்து தப்ப முடியாது என்றும் அவர் எச்சரிக்கை விடுத்தார்.</p>
<p>இது தொடர்பில் ஊடகங்களிடம் கருத்துத் தெரிவித்த நீதி அமைச்சர், “நாட்டில் பாதாள உலகக் குழுக்கள் இந்தளவுக்குக் கட்டற்று வளர்ந்தமைக்கு கடந்த கால ஆட்சியாளர்களே பொறுப்புக் கூற வேண்டும்” என்றும் சாடினார்.</p>
<p>“இன்று நாடு எதிர்கொள்ளும் இந்த அச்சுறுத்தலான சூழலுக்கு ராஜபக்ஷக்களின் ஆட்சியே அடித்தளம் இட்டது. அவர்களது அரசியல் ஆதரவே இக்குழுக்கள் இன்று விஸ்வரூபம் எடுக்கக் காரணம்” என்றும் அவர் பகிரங்கமாகக் குற்றம் சாட்டினார்.</p>
<p>“இலங்கையில் பாரிய குற்றங்களைப் புரிந்துவிட்டு, வெளிநாடுகளில் சொகுசு வாழ்க்கை வாழும் பாதாள உலகத் தலைவர்களைக் குறிவைத்து அரசு புதிய வியூகங்களை வகுத்துள்ளது. வெளிநாடுகளில் தலைமறைவாக இருக்கும் சகல பாதாள உலக உறுப்பினர்களையும் சர்வதேச பிடியாணைகள் ஊடாகக் கைது செய்து, அவர்களை மீண்டும் நாட்டுக்குக் கொண்டு வந்து சிறையில் அடைப்போம்.” – என்றும் நீதி அமைச்சர் உறுதியளித்தார்.</p>
<p>இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக முன்னெடுக்க சர்வதேச பொலிஸார் இலங்கை அரசுக்கு முழுமையான ஒத்துழைப்புக்களை வழங்கி வருகின்றனர் என்று குறிப்பிட்ட அவர், தொழில்நுட்ப ரீதியாகவும் புலனாய்வு ரீதியாகவும் இக்குற்றவாளிகளைக் கண்காணிக்கும் பணிகள் முடுக்கிவிடப்பட்டுள்ளன என்றும் தெரிவித்தார்.</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/lets-root-out-the-underworld-gangs/">பாதாள உலகக் கும்பலை வேரோடு பிடுங்குவோம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான தேசிய திட்டம் இந்த மாத இறுதிக்குள் தொடங்கப்படும் – அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அறிவிப்பு</title>
		<link>https://oruvan.com/national-plan-to-eradicate-drug-menace-to-be-launched-by-the-end-of-this-month/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 15 Oct 2025 05:15:52 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Minister Harshana Nanayakkara]]></category>
		<category><![CDATA[ஹர்ஷன நாணயக்கார]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=35424</guid>

					<description><![CDATA[<p>போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான தேசிய திட்டம் இந்த மாத இறுதிக்குள் தொடங்கப்படும் என அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். இதன்படி, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ், யாரும் போதைப்பொருட்களை இறக்குமதி செய்யவோ அல்லது விநியோகிக்கவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள்&#8221; என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். கம்பஹா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் &#8220;அழகான வாழ்க்கை, போதைப்பொருள் இல்லாத தேசம்&#8221; என்ற கருப்பொருளின் கீழ் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார். இந்த மாத இறுதிக்குள் போதைப்பொருள் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/national-plan-to-eradicate-drug-menace-to-be-launched-by-the-end-of-this-month/">போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான தேசிய திட்டம் இந்த மாத இறுதிக்குள் தொடங்கப்படும் – அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான தேசிய திட்டம் இந்த மாத இறுதிக்குள் தொடங்கப்படும் என அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார்.</p>
<p>இதன்படி, தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ், யாரும் போதைப்பொருட்களை இறக்குமதி செய்யவோ அல்லது விநியோகிக்கவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள்&#8221; என்றும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>கம்பஹா மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் &#8220;அழகான வாழ்க்கை, போதைப்பொருள் இல்லாத தேசம்&#8221; என்ற கருப்பொருளின் கீழ் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் பேசிய அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.</p>
<p>இந்த மாத இறுதிக்குள் போதைப்பொருள் இறக்குமதி மற்றும் விநியோகத்தை நிறுத்துவதற்கான ஒரு தேசிய திட்டம் தொடங்கப்படும். இதற்காக அமைச்சரவைப் பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இந்த திட்டத்தை வெற்றிகரமாக்க, மறுவாழ்வு பணியகம், தேசிய ஆபத்தான மருந்துகள் கட்டுப்பாட்டு சபை, சமூக சேவைகள் துறை மற்றும் பிற நிறுவனங்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அதிகாரிகளின் ஆதரவு தேவையாகவுள்ளது.</p>
<p>போதைப்பொருள் விநியோகத்தை நிறுத்துவதே எங்கள் முதன்மை நோக்கமாகும். தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் கீழ், யாரும் போதைப்பொருளை இறக்குமதி செய்யவோ அல்லது விநியோகிக்கவோ அனுமதிக்கப்பட மாட்டார்கள்.</p>
<p>கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் போதைப்பொருள் பயன்பாடு அதிகரித்து வருவதாக தெரியவந்துள்ளது. இந்த பேரழிவு நாட்டின் பொருளாதாரத்திலும் குடும்ப நிறுவனத்தின் சரிவிலும் கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>
<p>போதைப்பொருள் கடத்தல் மூலம் பாதாள உலகம் பெருமளவில் பரவியுள்ளது. போதைப்பொருள் கடத்தலைத் தடுப்பதற்கான முயற்சிகள் தற்போது உள்நாட்டிலும் சர்வதேச அளவிலும் வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.</p>
<p>நாட்டிற்குள் மெத்தம்பேட்டமைன் உள்ளிட்ட போதைப்பொருட்கள் இறக்குமதி செய்வதைத் தடுக்கவும், நாட்டில் போதைப்பொருள் கடத்தலை ஒழிக்கவும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் இந்த அரசாங்கம் எடுத்து வருகிறது.</p>
<p>நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சகத்தின் கீழ் உள்ள மறுவாழ்வு பணியகம் போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான முறையான திட்டத்தைத் தொடங்கியுள்ளது.</p>
<p>இதன்படி, போதைக்கு அடிமையானவர்கள் தானாக முன்வந்து மறுவாழ்வு செயல்முறைக்கு உட்படக்கூடிய பத்து மறுவாழ்வு மையங்கள் நிறுவப்படும் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/national-plan-to-eradicate-drug-menace-to-be-launched-by-the-end-of-this-month/">போதைப்பொருள் அச்சுறுத்தலை ஒழிப்பதற்கான தேசிய திட்டம் இந்த மாத இறுதிக்குள் தொடங்கப்படும் – அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம்: விசாரணைகளை சீர்குலைக்க சூழ்ச்சி</title>
		<link>https://oruvan.com/easter-sunday-attack-incident-a-conspiracy-to-disrupt-the-investigations/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Fri, 10 Oct 2025 07:26:49 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஹர்ஷன நாணயக்கார]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=34941</guid>

					<description><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளை சீர்குலைப்பதற்கு முற்படும் நபர்களுக்கு அதற்குரிய வாய்ப்பை வழங்கிவிடக்கூடாது என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் நேற்று தயாசிறி ஜயசேகர எம்.பி. சுட்டிக்காட்டிய விடயத்துக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். ” இந்த கருத்து சம்பந்தமாக விசாரணை நடக்கின்றது. அதற்கமைய தெரிவுக்குழுவில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கே பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன பதில்களை வழங்கினார். மாறாக அவர் தாமாக முன்வந்து கருத்துகளை வெளிப்படுத்தவில்லை. [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/easter-sunday-attack-incident-a-conspiracy-to-disrupt-the-investigations/">உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம்: விசாரணைகளை சீர்குலைக்க சூழ்ச்சி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம் தொடர்பான விசாரணைகளை சீர்குலைப்பதற்கு முற்படும் நபர்களுக்கு அதற்குரிய வாய்ப்பை வழங்கிவிடக்கூடாது என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.</p>
<p>நாடாளுமன்றத்தில் நேற்று தயாசிறி ஜயசேகர எம்.பி. சுட்டிக்காட்டிய விடயத்துக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.</p>
<p>” இந்த கருத்து சம்பந்தமாக விசாரணை நடக்கின்றது. அதற்கமைய தெரிவுக்குழுவில் கேட்கப்பட்ட கேள்விகளுக்கே பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்ன பதில்களை வழங்கினார். மாறாக அவர் தாமாக முன்வந்து கருத்துகளை வெளிப்படுத்தவில்லை.<br />
இது ஊடகங்களுக்க வெளிப்படுத்திய தகவல் அல்ல.இது விசாரணையின் ஓர் அங்கம். எனவே, தகவல்களை வெளிப்படுத்துமாறு நாடாளுமன்றத்தால்கூட கட்டளையிட முடியாது என நினைக்கின்றேன்.</p>
<p>எனவே, விசாரணைய சீர்குலைப்பதற்கு முற்படும் தரப்புகளுக்கு இடமளிக்க வேண்டாம்.” எனவும் நீதி அமைச்சர் சபையில் வலியுறுத்தினார்.</p>
<p>அதேவேளை, உயர்பதவிகள் தொடர்பான தெரிவுக்குழுவுக்கு அதிகாரிகள் பொறுப்புடன்தான் அழைக்கப்படுகின்றனர். தெரிவுக்குழுமீது நம்பிக்கை வைத்தே அவர்கள் கருத்துகளை வெளியிடுகின்றனர். அந்த கருத்துகளை உறுப்பினர்கள் டுவிட் செய்வது தவறு. அவர்களுக்கு எதிராகவே விசாரணை நடத்தப்பட வேண்டும்.” என்று அமைச்சர் வசந்த சமரசிங்க குறிப்பிட்டார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/easter-sunday-attack-incident-a-conspiracy-to-disrupt-the-investigations/">உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவம்: விசாரணைகளை சீர்குலைக்க சூழ்ச்சி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மனிதப் புதைகுழி அகழ்வுக்கு போதுமான நிதி வழங்கப்படும்</title>
		<link>https://oruvan.com/sufficient-funds-will-be-provided-for-the-excavation-of-human-graves/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Fri, 03 Oct 2025 06:22:10 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஹர்ஷன நாணயக்கார]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=34235</guid>

					<description><![CDATA[<p>வடக்கு, கிழக்கு பகுதிகளில் மனிதப் புதைகுழிகள் எனச் சந்தேகிக்கப்படும் இடங்களில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்குப் போதுமான நிதி, தமது அமைச்சிடம் இருக்கின்றது என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். மனிதப் புதைகுழிகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அதன்படி, மட்டக்களப்பு, குருக்கள்மடம் மனிதப் புதைகுழிக்கான நிதி முழுமையாக ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார கூறினார். அத்துடன், யாழ்ப்பாணம், செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/sufficient-funds-will-be-provided-for-the-excavation-of-human-graves/">மனிதப் புதைகுழி அகழ்வுக்கு போதுமான நிதி வழங்கப்படும்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>வடக்கு, கிழக்கு பகுதிகளில் மனிதப் புதைகுழிகள் எனச் சந்தேகிக்கப்படும் இடங்களில் அகழ்வுப் பணிகளை மேற்கொள்வதற்குப் போதுமான நிதி, தமது அமைச்சிடம் இருக்கின்றது என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.</p>
<p>மனிதப் புதைகுழிகளுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார்.</p>
<p>அதன்படி, மட்டக்களப்பு, குருக்கள்மடம் மனிதப் புதைகுழிக்கான நிதி முழுமையாக ஒதுக்கப்பட்டுள்ளது என்றும் அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார கூறினார்.</p>
<p>அத்துடன், யாழ்ப்பாணம், செம்மணி – சித்துப்பாத்தி மனிதப் புதைகுழியின் அடுத்தகட்ட அகழ்வுக்கான நிதி ஒதுக்கீடு தொடர்பில் அலுவலக மட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்றும் அவர் தெரிவித்தார்.</p>
<p>உரிய நடைமுறைகளை விரைவில் பூரணப்படுத்தி, தேவையான நிதியை வழங்க நீதி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.</p>
<p>அதற்கமைய, மனிதப் புதைகுழி அகழ்வுக்கான நிதி விடயத்தில் எவ்வித சிக்கல்களும் இல்லை என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார சுட்டிக்காட்டினார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/sufficient-funds-will-be-provided-for-the-excavation-of-human-graves/">மனிதப் புதைகுழி அகழ்வுக்கு போதுமான நிதி வழங்கப்படும்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சுயாதீன வழக்கறிஞர் அலுவலகம் விரைவில் ஸ்தாபிப்பு</title>
		<link>https://oruvan.com/independent-attorneys-office-to-be-established-soon/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Fri, 11 Jul 2025 07:07:43 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஹர்ஷன நாணயக்கார]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=26285</guid>

					<description><![CDATA[<p>சுயாதீன வழக்கறிஞர் அலுவலகம் விரைவில் ஸ்தாபிக்கப்படும் எனவும், நீதி நடவடிக்கைக்கு வெளிநாட்டு நீதிபதிகள் தேவையில்லை எனவும் நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். நாடாளுமன்றத்தில நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். ” சுயாதீன வழக்கறிஞர் அலுவலகம் தொடர்பான உறுதிமொழி தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளது. அதனையே செய்கின்றோம். இதற்காக அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டு, நடவடிக்கை இடம்பெறுகின்றது.விரைவில் அது ஸ்தாபிக்கப்படும். சட்டமா அதிபர்மீது நம்பிக்கை இல்லை என்பதால் நாம் இதனை செய்யவில்லை. அவரை நம்புகின்றோம். [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/independent-attorneys-office-to-be-established-soon/">சுயாதீன வழக்கறிஞர் அலுவலகம் விரைவில் ஸ்தாபிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>சுயாதீன வழக்கறிஞர் அலுவலகம் விரைவில் ஸ்தாபிக்கப்படும் எனவும், நீதி நடவடிக்கைக்கு வெளிநாட்டு நீதிபதிகள் தேவையில்லை எனவும் நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.</p>
<p>நாடாளுமன்றத்தில நடைபெற்ற விவாதத்தில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.</p>
<p>” சுயாதீன வழக்கறிஞர் அலுவலகம் தொடர்பான உறுதிமொழி தேர்தல் விஞ்ஞாபனத்தில் உள்ளது. அதனையே செய்கின்றோம். இதற்காக அமைச்சரவை உப குழுவொன்று நியமிக்கப்பட்டு, நடவடிக்கை இடம்பெறுகின்றது.விரைவில் அது ஸ்தாபிக்கப்படும். சட்டமா அதிபர்மீது நம்பிக்கை இல்லை என்பதால் நாம் இதனை செய்யவில்லை. அவரை நம்புகின்றோம்.</p>
<p>வெளிநாட்டு ஒத்துழைப்பு பெறுவதாக இருந்தால் பெறமுடியும். ஆனால் எமது நாட்டில் சிஐடியினருக்கு விசாரணைகளை முன்னெடுக்க முடியும். வெளிநாட்டு நீதிபதிகள் தேவையில்லை. எமது நீதிபதிகளால் அதனை செய்ய முடியும்.<br />
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புட்ட குற்றவாளிகள் அடையாளம் காணப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்.” – எனவும் நீதி அமைச்சர் குறிப்பிட்டார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/independent-attorneys-office-to-be-established-soon/">சுயாதீன வழக்கறிஞர் அலுவலகம் விரைவில் ஸ்தாபிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>வெளிநாடுகளில் வசிப்போர் வழக்கு விசாரணைகளுக்காக இலங்கைக்கு வர வேண்டியதில்லை</title>
		<link>https://oruvan.com/foreigners-do-not-have-to-come-to-sri-lanka-for-court-hearings/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Fri, 23 May 2025 12:40:38 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஹர்ஷன நாணயக்கார]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=21089</guid>

					<description><![CDATA[<p>உயிரச்சுறுத்தல் அபாய நிலையில் உள்ளவர்கள் நீதிமன்றத்துக்கு சமுகமளிக்காமல் சிறைச்சாலையில் இருந்தவாறு நீதிமன்ற வழக்கு விசாரணைகளில் பங்குபற்ற முடியும். அதேபோல் வெளிநாடுகளில் உள்ளவர்கள் ஏதேனும் வழக்கு விசாரணைகளுக்காக இனி இலங்கைக்கு வருகைதர வேண்டிய அவசியமில்லை. தூதுவராலயத்தின் ஊடாக சாட்சியமளிக்க முடியும். குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை ( திருத்தச்) சட்டமூலம் ஊடாக இதற்கான வசதிகள் வெகுவிரைவில் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (23) நடைபெற்ற அமர்வின் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/foreigners-do-not-have-to-come-to-sri-lanka-for-court-hearings/">வெளிநாடுகளில் வசிப்போர் வழக்கு விசாரணைகளுக்காக இலங்கைக்கு வர வேண்டியதில்லை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>உயிரச்சுறுத்தல் அபாய நிலையில் உள்ளவர்கள் நீதிமன்றத்துக்கு சமுகமளிக்காமல் சிறைச்சாலையில் இருந்தவாறு நீதிமன்ற வழக்கு விசாரணைகளில் பங்குபற்ற முடியும். அதேபோல் வெளிநாடுகளில் உள்ளவர்கள் ஏதேனும் வழக்கு விசாரணைகளுக்காக இனி இலங்கைக்கு வருகைதர வேண்டிய அவசியமில்லை. தூதுவராலயத்தின் ஊடாக சாட்சியமளிக்க முடியும். குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை ( திருத்தச்) சட்டமூலம் ஊடாக இதற்கான வசதிகள் வெகுவிரைவில் ஏற்படுத்திக் கொடுக்கப்படும் என்று நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.</p>
<p>பாராளுமன்றத்தில் வெள்ளிக்கிழமை (23) நடைபெற்ற அமர்வின் போது குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்டமூலம் மற்றும் வெளிநாட்டுக் கடன்கள் (நீக்குதல்) சட்டமூலம் மீதான விவாதத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p>
<p>அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,</p>
<p>நாட்டு மக்கள் நீதிமன்றத்துக்கு செல்ல விரும்புவதில்லை. சட்டத்தரணிகள் மற்றும் நீதிபதிகள் மாத்திரமே நீதிமன்றத்துக்கு செல்ல விரும்புகிறார்கள்.</p>
<p>அதுவும் அங்கு அவர்கள் தொழில் புரிவதால். சாட்சியாளர்கள் நீதிமன்றத்துக்கு செல்ல விரும்புவதில்லை. வழக்கு பிற்போடல் மற்றும் அலைகழித்தல் ஆகியவற்றால் நீதிமன்றத்துக்கு செல்வதற்கு பொதுமக்கள் விரும்புவதில்லை. நீதிமன்றங்களில் நேரம் வீண்விரயமாக்கப்படுவதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளன.</p>
<p>நீதிமன்ற கட்டமைப்புக்குள் தோற்றம் பெற்றுள்ள சிக்கல்களுக்கு ஒரு அரசாங்கமோ, அந்த அரசாங்கத்தின் நீதியமைச்சர்களோ, பொறுப்புக்கூற வேண்டியதில்லை. bகாலம் காலமாகவே இந்த பிரச்சினைகள் தோற்றம் பெற்றுள்ளன. ஆகவே இவற்றுக்கு தீர்வு காணும் பொறுப்பு தற்போதைய அரசாங்கத்துக்கு உண்டு.</p>
<p>சிறைச்சாலைகளின் நெரிசலை வரையறுத்தல், வழக்கு விசாரணைகள் தாமதமாகுவதை தவிர்த்தல், ஆளணி பற்றாக்குறையை நிவர்த்தி செய்தல், அதற்கான ஏற்பாடுகளை வழங்குதல் உள்ளிட்ட பல விடயங்களை இது உள்ளடக்கியுள்ளது.</p>
<p>வழக்கு விசாரணைகள் தாமதமடைதல் மற்றும் வளங்கள் வீண்விரயமாதல் தொடர்பில் விசேட கவனம் செலுத்த வேண்டும். நவீன தொழில்நுட்ப வசதிகளை நீதிமன்ற கட்டமைப்புக்குள் கொண்டு வரும் வகையில் இந்த திருத்தச் சட்டமூலம் தயாரிக்கப்பட்டுள்ளது.</p>
<p>வழக்கு விசாரணைகள் தாமதமடைதல் மற்றும் நீதி கிடைப்பனவில் ஏற்படும் தாமதம் ஆகியவற்றால் பொதுமக்கள் பாதிக்கப்பட்டுள்ளார்கள்.</p>
<p>குற்றவியல் நடவடிக்கைமுறைச் சட்டக்கோவை (திருத்தச்) சட்ட மூலம் நிறைவேற்றப்பட்டால் நீதிமன்ற கட்டமைப்பில் நிலவும் அடிப்படை பிரச்சினைகளுக்கு கணிசமான அளவு தீர்வு காண முடியும்.</p>
<p>குற்றவியல் சட்டத்தின் பிரகாரம் ஏதேனும் வழக்குக்கு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளும் போது வாதியும் இருக்க வேண்டும், பிரதிவாதியும் ,இருக்க வேண்டும்.</p>
<p>சந்தேக நபரும், சாட்சியாளரும் நீதிமன்றத்தில் இருக்க வேண்டும். சாட்சிக் கூண்டில் இருந்து சாட்சியமளிக்க வேண்டும். இவர்களில் எவரேனும் நீதிமன்றத்தக்கு சமூகமளிக்காவிடின் வழக்கு பிற்போடப்படும்.இதனால் அன்றைய தினம் வருகைத்தந்திருந்த ஏனையவர்கள் அனைவரும்ம் பாதிக்கப்படுவார்கள்.</p>
<p>இந்த பிரச்சனைக்கு தொழில்நுட்ப ரீதியில் தீர்வு காணும் பொருட்டு இந்த திருத்தச் சட்டமூலம் ஆக்கப்பட்டுள்ளது. சட்டமூலத்தின் 144 ஆவது பிரிவில் &#8216; நீதிமன்றத்தின் முன்னிலையில் தனிப்பட்ட முறையில் ஆஜராகாமல், இணையம் வழிமுறையில் முன்னிலையாகலாம் &#8216; என்று குறிப்பிடப்பட்டுள்ளது.</p>
<p>இன்று அனைவரின் கைகளிலும் ஸ்மார்ட் தொலைபேசிகள் உள்ளன. சந்தேக நபர்களையும், சாட்சியாளர்களையும் நீதிமன்றத்துக்கு அழைத்து வராமல் தொலைத்தொடர்பு இணையம் முறைமையின் ஊடாக வாக்குமூலம் பெற்றுக்கொள்ளலாம்.</p>
<p>கொவிட் காலத்தில் உரிய ஏற்பாடுகள் இல்லாத நிலையிலும் நீதிமன்ற வழக்கு விசாரணைகள் நிகழ்நிலை முறைமையில் இடம்பெற்றன. இன்று அந்த நடவடிக்கைகளுக்கு சட்ட அந்தஸ்த்து வழங்க தீர்மானித்துள்ளோம்.</p>
<p>நீதிமன்றத்துக்கு வருகைத் தராமல் விசாரணைகளில் பங்குப்பற்றுவதற்கு நீதிபதி அனுமதி வழங்கும் விதிமுறைகள் 144 ஆவது பிரிவின் 4 ஆவ உபபிரிவில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>
<p>எவரேனும் சந்தேக நபர் அல்லது சாட்சியாளரின் உயிருக்கு பாதிப்பு அல்லது அச்சுறுத்தல் காணப்படும் சந்தர்ப்பத்தில் அவர்களை நீதிமன்றத்துக்கு அழைக்க வேண்டிய அவசியம் கிடையாது. குற்றவாளி ஒருவரை நீதிமனற்த்துக்கு அழைத்து வரும் போது அவருக்கு எதிராக மக்கள் போராட்டம் ஏதும் ஏற்படுமாயின் அவ்வாறன சந்தர்ப்பத்தில் அவரை அழைக்க வேண்டிய தேவையில்iலை.</p>
<p>அத்துடன் ஏதேனும் நோய்வாய்ப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டிருந்தால் அவரை அழைக்க வேண்டியதில்லை. சிறைச்சாலையில் இருந்தவாறு நிகழ்நிலை முறைமை ஊடாக விசாரணைகளில் பங்குப்பற்றலாம்.ஷ</p>
<p>அண்மையில் புதுக்கடை நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட சந்தேக நபர் கொலை செய்யப்பட்டார்.எதிர்வரும் காலங்களில் அவதான நிலையில் உள்ளவர்களை நீதிமன்றத்துக்கு அழைத்து வர வேண்டிய அவசியமில்லை.</p>
<p>இதற்கான சட்ட ஏற்பாடுகள் வழங்கப்பட்டுள்ளன. சிறைச்சாலைகளிலும், நீதிமன்றங்களிலும் நவீன தொழில்நுட்ப வசதிகளுக்கான வசதிகள் ஏற்படுத்திக் கொள்ளப்பட்டுள்ளன.</p>
<p>இந்த திருத்தச் சட்டமூலத்தின் ஊடாக வெளிநாடுகளில் உள்ளவர்கள் ஏதேனும் வழக்கு விசாரணைகளுக்காக இலங்கைக்கு வருகைத் தர வேண்டிய அவசியமில்லை. தான் வசிக்கும் நாட்டில் உள்ள இலங்கைக்கான தூதுவராலயம் அல்லது கொன்சியூலர் காரியாலயத்தின் ஊடாக நவீன தொழில்நுட்பம் ஊடாக விசாரணைகளில் பங்குப்பற்ற முடியும்.</p>
<p>இதற்கு முன்கூட்டியதாக சத்தியக் கூற்று ஊடாக தனது அடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டும்.மக்களின் நலனை கருத்திற் கொண்டு தான் இந்த சட்டமூலம் உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/foreigners-do-not-have-to-come-to-sri-lanka-for-court-hearings/">வெளிநாடுகளில் வசிப்போர் வழக்கு விசாரணைகளுக்காக இலங்கைக்கு வர வேண்டியதில்லை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>புதிய அரசியலமைப்பு எப்போது இயற்றப்படும்? நீதி அமைச்சர் பதில்</title>
		<link>https://oruvan.com/when-will-the-new-constitution-be-enacted-justice-minister-responds/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Wed, 02 Apr 2025 07:08:08 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஹர்ஷன நாணயக்கார]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=16621</guid>

					<description><![CDATA[<p>”புதிய அரசியலமைப்பு இயற்றப்படுவதற்குரிய கால எல்லையை என்னால் சரியாக குறிப்பிட முடியாது. ஆனால் ஐந்தாண்டு காலப்பகுதிக்குள் இதற்குரிய பணி நிச்சயம் நிறைவேறும்.” என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது புதிய அரசியலமைப்பு தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். ” எல்லா விடயங்களையும் ஆறு மாத காலத்துக்குள் செய்ய முடியாது. அதனால்தான் ஐந்தாண்டுகள் ஆணை வழங்கப்படுகின்றது. புதிய அரசியலமைப்பை இயற்றுவதற்குரிய பணியை ஆரம்பத்தில் இருந்தே ஆரம்பிக்க [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/when-will-the-new-constitution-be-enacted-justice-minister-responds/">புதிய அரசியலமைப்பு எப்போது இயற்றப்படும்? நீதி அமைச்சர் பதில்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>”புதிய அரசியலமைப்பு இயற்றப்படுவதற்குரிய கால எல்லையை என்னால் சரியாக குறிப்பிட முடியாது. ஆனால் ஐந்தாண்டு காலப்பகுதிக்குள் இதற்குரிய பணி நிச்சயம் நிறைவேறும்.” என்று நீதி அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.</p>
<p>தனியார் தொலைக்காட்சியொன்றுக்கு வழங்கிய நேர்காணலின்போது புதிய அரசியலமைப்பு தொடர்பில் எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.</p>
<p>” எல்லா விடயங்களையும் ஆறு மாத காலத்துக்குள் செய்ய முடியாது. அதனால்தான் ஐந்தாண்டுகள் ஆணை வழங்கப்படுகின்றது. புதிய அரசியலமைப்பை இயற்றுவதற்குரிய பணியை ஆரம்பத்தில் இருந்தே ஆரம்பிக்க வேண்டியதில்லை. நல்லாட்சி காலத்தில் தயாரிக்கப்பட்ட வரைவு நகல் உள்ளது. மேலும் பல அறிக்கைகளும் உள்ளன.” எனவும் நீதி அமைச்சர் குறிப்பிட்டார்.</p>
<p>கால எல்லை பற்றி கேட்டால் என்னால் பதில் வழங்க முடியாது. ஆனால் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நீக்கம் உள்ளிட்ட புதிய அரசியலமைப்பு ஐந்தாண்டு காலப்பகுதிக்குள் கொண்டுவரப்படும்.</p>
<p>நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமை நிச்சயம் நீக்கப்படும். குறித்த முறைமையை தக்க வைப்பது தொடர்பில் எவ்வித பேச்சும் எமது தரப்பில் நடக்கவில்லை.” – எனவும் நீதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/when-will-the-new-constitution-be-enacted-justice-minister-responds/">புதிய அரசியலமைப்பு எப்போது இயற்றப்படும்? நீதி அமைச்சர் பதில்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
