<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>ஹரினி அமரசூரிய Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/%e0%ae%b9%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%ae%e0%ae%b0%e0%ae%9a%e0%af%82%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%af/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/ஹரினி-அமரசூரிய/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Sat, 04 Apr 2026 04:06:27 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>ஹரினி அமரசூரிய Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/ஹரினி-அமரசூரிய/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>மலையக மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு தொடர்மாடி குடியிருப்புகள் பொருத்தமானவை அல்ல &#8211; பிரதமரிடம் எடுத்துரைப்பு</title>
		<link>https://oruvan.com/terraced-houses-are-not-suitable-for-areas-inhabited-by-hill-people-presentation-to-the-prime-minister/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Sat, 04 Apr 2026 04:16:40 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஹரினி அமரசூரிய]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=47913</guid>

					<description><![CDATA[<p>மலையக மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு தொடர்மாடி குடியிருப்புகள் பொருத்தமானவை அல்ல என மலையக மீள்கட்டமைப்பிற்கான சிவில் சமூகக் கூட்டிணைவு பிரதமர் ஹரினி அமரசூரியவிடம் வலியுறுத்தியுள்ளது. டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகப் பணியாற்றும் நாடு முழுவதிலுமுள்ள சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் பிரதமருக்கும் இடையே அலரி மாளிகையில் நடைபெற்ற ஒரு சிறப்புக் கூட்டத்தின் போது, மலையக மீள்கட்டமைப்பிற்கான சிவில் சமூகக் கூட்டிணைவு பிரதமரிடம் இந்த விடயத்தை கூறியுள்ளது. ஏற்கனவே வீடொன்றை நிர்மாணிப்பதற்குத் தகுந்த காணியைக் கொண்டிருப்பவர்களுக்கு அரசாங்கத்தினால் 5 [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/terraced-houses-are-not-suitable-for-areas-inhabited-by-hill-people-presentation-to-the-prime-minister/">மலையக மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு தொடர்மாடி குடியிருப்புகள் பொருத்தமானவை அல்ல &#8211; பிரதமரிடம் எடுத்துரைப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>மலையக மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு தொடர்மாடி குடியிருப்புகள் பொருத்தமானவை அல்ல என மலையக மீள்கட்டமைப்பிற்கான சிவில் சமூகக் கூட்டிணைவு பிரதமர் ஹரினி அமரசூரியவிடம் வலியுறுத்தியுள்ளது.</p>
<p>டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்காகப் பணியாற்றும் நாடு முழுவதிலுமுள்ள சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகளுக்கும் பிரதமருக்கும் இடையே அலரி மாளிகையில் நடைபெற்ற ஒரு சிறப்புக் கூட்டத்தின் போது, மலையக மீள்கட்டமைப்பிற்கான சிவில் சமூகக் கூட்டிணைவு பிரதமரிடம் இந்த விடயத்தை கூறியுள்ளது.</p>
<p>ஏற்கனவே வீடொன்றை நிர்மாணிப்பதற்குத் தகுந்த காணியைக் கொண்டிருப்பவர்களுக்கு அரசாங்கத்தினால் 5 மில்லியன் ரூபா நிதியுதவி வழங்கப்படவுள்ளதுடன், பிரதான நகரப் பகுதிகளில் பொது வசதிகளுடன் கூடிய அடுக்குமாடி குடியிருப்புகளை அமைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக வீடமைப்பு மற்றும் நீர்வழங்கல் அமைச்சின் செயலாளர் பொறியியலாளர் எல். குமுதுலால் போகஹாவத்த இந்த சந்திப்பின் போது சிவில் பிரதிநிதிகளிடம் தெரிவித்துள்ளார்.</p>
<p>பேரழிவால் பாதிக்கப்பட்ட மலையக தமிழ் மக்களின் வாழ்வை மீளக் கட்டியெழுப்புவதற்கான நடைமுறை சாத்தியமான 15 முன்மொழிவுகளுடன் ஜனாதிபதிக்கு அனுப்பப்பட்ட அறிக்கையின் நகல் ஒன்றையும் இதன்போது பிரதமருக்கு கையளித்த மலையக மீள்கட்டமைப்பிற்கான சிவில் சமூக கூட்டிணைவு, இந்த விடயங்கள் குறித்து விவாதிக்க உடனடியாக திகதியை வழங்குமாறும் பிரதமரைக் கோரியிருந்தது.</p>
<p>பிரதமருடன் நடைபெற்ற கலந்துரையாடலில், டித்வா புயலால் பாதிக்கப்பட்ட மக்களின் புனரமைப்பு மற்றும் மாற்றுத் திட்டங்கள் தொடர்பான பல பிரச்சினைகள் விவாதிக்கப்பட்டதாக மலையக மீள்கட்டமைப்பிற்கான சிவில் சமூக கூட்டிணைவு தெரிவித்துள்ளமையும் சுட்டிக்காட்டத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/terraced-houses-are-not-suitable-for-areas-inhabited-by-hill-people-presentation-to-the-prime-minister/">மலையக மக்கள் வசிக்கும் பகுதிகளுக்கு தொடர்மாடி குடியிருப்புகள் பொருத்தமானவை அல்ல &#8211; பிரதமரிடம் எடுத்துரைப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஜனாதிபதி, பிரதமருக்கும் அச்சுறுத்தல் &#8211; பிரதி அமைச்சர் நளின் ஹேவகே</title>
		<link>https://oruvan.com/threats-to-the-president-and-prime-minister-deputy-minister-nalin-hewage/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 03 Nov 2025 06:58:46 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Anura Kumara]]></category>
		<category><![CDATA[Harini Amarasuriya]]></category>
		<category><![CDATA[அநுர குமார திசாநாயக்க]]></category>
		<category><![CDATA[ஒருவன்]]></category>
		<category><![CDATA[ஒருவன் செய்திகள்]]></category>
		<category><![CDATA[நளின் ஹேவகே]]></category>
		<category><![CDATA[ஹரினி அமரசூரிய]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=37197</guid>

					<description><![CDATA[<p>ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கத்திலுள்ள பலருக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என பிரதி அமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்துள்ளார். எனினும், நாட்டு மக்களே அவர்களின் பாதுகாவலர்களாக இருப்பார்கள் என்றும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். நாட்டில் உள்ள பாதாள உலக மற்றும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர்களை தற்போதைய அரசாங்கம் கடுமையாக கையாளுகின்றது. இதனால் அரசாங்க தரப்பினர்களுக்கு கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளனர். இந்நிலையில், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கத்திலுள்ள பலருக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என பிரதி அமைச்சர் நளின் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/threats-to-the-president-and-prime-minister-deputy-minister-nalin-hewage/">ஜனாதிபதி, பிரதமருக்கும் அச்சுறுத்தல் &#8211; பிரதி அமைச்சர் நளின் ஹேவகே</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கத்திலுள்ள பலருக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என பிரதி அமைச்சர் நளின் ஹேவகே தெரிவித்துள்ளார்.</p>
<p>எனினும், நாட்டு மக்களே அவர்களின் பாதுகாவலர்களாக இருப்பார்கள் என்றும் பிரதி அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>நாட்டில் உள்ள பாதாள உலக மற்றும் சர்வதேச போதைப்பொருள் கடத்தல்காரர்களை தற்போதைய அரசாங்கம் கடுமையாக கையாளுகின்றது.</p>
<p>இதனால் அரசாங்க தரப்பினர்களுக்கு கடும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளனர்.</p>
<p>இந்நிலையில், ஜனாதிபதி, பிரதமர் மற்றும் அரசாங்கத்திலுள்ள பலருக்குப் பாதுகாப்பு அளிக்கப்பட வேண்டும் என பிரதி அமைச்சர் நளின் ஹேவகே குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>எவ்வாறாயினும், எதிர்க்கட்சி ஒரு பாதாள உலகக் குழுவிற்கு உதவினால், மற்றொரு பாதாள உலகக்குழு அவர்களை எதிர்க்கும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>பாதாள உலகத்துடன் தொடர்பு கொண்டவுடன், அதிலிருந்து தப்பிக்க முடியாது என்றும், அதிலிருந்து வெளியேற முற்பட்டால் உயிரை பறிகொடுக்க நேரிடும் எனவம் அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>இதேவேளை, பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் தொடர்பான பகுப்பாய்வுக்குப் பின்னர், நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குத் தேவையான பாதுகாப்பை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p>
<p>நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமக்குப் பாதுகாப்புத் தேவைப்பட்டால், அது குறித்து எழுத்து மூலம் கோரிக்கை விடுக்க முடியும் என பொலிஸார் மேலும் தெரிவித்துள்ளனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/threats-to-the-president-and-prime-minister-deputy-minister-nalin-hewage/">ஜனாதிபதி, பிரதமருக்கும் அச்சுறுத்தல் &#8211; பிரதி அமைச்சர் நளின் ஹேவகே</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தனிநபருக்கும் தீங்கு விளைவிக்காத வகையில் சுற்றுலா துறை ஊக்குவிக்கப்படும் – பிரதமர் நாடாளுமன்றில் விளக்கம்</title>
		<link>https://oruvan.com/tourism-sector-will-be-promoted-in-a-way-that-does-not-harm-the-individual-prime-minister-explains-in-parliament/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 08 Oct 2025 05:38:01 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Harini Amarasuriya]]></category>
		<category><![CDATA[LGBTQIA+]]></category>
		<category><![CDATA[ஒருவன் செய்தி]]></category>
		<category><![CDATA[ஒருவன் செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஓரினச்சேர்க்கையாளர்]]></category>
		<category><![CDATA[பிரதமர்]]></category>
		<category><![CDATA[ஹரினி அமரசூரிய]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=34735</guid>

					<description><![CDATA[<p>சுற்றுலாத் துறையை மேம்படுத்துவது தொடர்பான நிலைப்பாடு குறித்து ஜனாதிபதியும் வெளியுறவு அமைச்சரும் அரசாங்கத்திற்கும் நிர்வாக அதிகாரிகளுக்கும் தெரிவித்துள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். எந்தவொரு தனிநபருக்கும் தீங்கு விளைவிக்காத வகையில் சுற்றுலாவை செயல்படுத்துவது அரசாங்கத்தின் கொள்கை என்றும், சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதில் சிறப்புக் குழுக்கள் ஊக்குவிக்கப்படுவதில்லை என்றும் பிரதமர் கூறினார். சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக ஓரினச்சேர்க்கையாளர் சமூகத்தை ஊக்குவிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜெயவர்தன இன்று (08) நாடாளுமன்றத்தில் கேட்ட கேள்விக்கு [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/tourism-sector-will-be-promoted-in-a-way-that-does-not-harm-the-individual-prime-minister-explains-in-parliament/">தனிநபருக்கும் தீங்கு விளைவிக்காத வகையில் சுற்றுலா துறை ஊக்குவிக்கப்படும் – பிரதமர் நாடாளுமன்றில் விளக்கம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>சுற்றுலாத் துறையை மேம்படுத்துவது தொடர்பான நிலைப்பாடு குறித்து ஜனாதிபதியும் வெளியுறவு அமைச்சரும் அரசாங்கத்திற்கும் நிர்வாக அதிகாரிகளுக்கும் தெரிவித்துள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.</p>
<p>எந்தவொரு தனிநபருக்கும் தீங்கு விளைவிக்காத வகையில் சுற்றுலாவை செயல்படுத்துவது அரசாங்கத்தின் கொள்கை என்றும், சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதில் சிறப்புக் குழுக்கள் ஊக்குவிக்கப்படுவதில்லை என்றும் பிரதமர் கூறினார்.</p>
<p>சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக ஓரினச்சேர்க்கையாளர் சமூகத்தை ஊக்குவிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜெயவர்தன இன்று (08) நாடாளுமன்றத்தில் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.</p>
<p>சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதில் எந்தவொரு கட்சிக்கோ அல்லது குழுவுக்கோ எந்த சூழ்நிலையிலும் சிறப்பு ஊக்குவிப்பு வழங்கப்படாது என்று பிரதமர் மேலும் வலியுறுத்தினார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/tourism-sector-will-be-promoted-in-a-way-that-does-not-harm-the-individual-prime-minister-explains-in-parliament/">தனிநபருக்கும் தீங்கு விளைவிக்காத வகையில் சுற்றுலா துறை ஊக்குவிக்கப்படும் – பிரதமர் நாடாளுமன்றில் விளக்கம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>“வேலையற்ற பட்டதாரிகளுக்கு ஆசிரியர் பணி” : பிரதமர் வெளியிட்ட விசேட அறிவிப்பு</title>
		<link>https://oruvan.com/teachers-job-for-unemployed-graduates-a-special-announcement-issued-by-the-prime-minister/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Thu, 28 Aug 2025 11:19:25 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Harini Amarasuriya]]></category>
		<category><![CDATA[Prime Minister Harini Amarasooriya to visit Thailand]]></category>
		<category><![CDATA[பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய]]></category>
		<category><![CDATA[ஹரினி அமரசூரிய]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=30967</guid>

					<description><![CDATA[<p>வேலையற்ற பட்டதாரிகளை ஆசிரியர்களாக ஆட்சேர்ப்பு செய்வதில் ஏற்பட்ட தாமதத்திற்கு முதன்மைக் காரணமாக இருந்த, உச்ச நீதிமன்றத்தால் பரிசீலனை செய்யப்படும் நான்கு வழக்குகளின் சட்ட நடவடிக்கைகள் இப்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன என்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். இதன்படி, நீதிமன்ற நடவடிக்கைகள் முடிந்ததும், தொடர்புடைய வர்த்தமானி அறிவிப்பை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதன் மூலம் பட்டதாரிகள் ஆசிரியர் ஆட்சேர்ப்பு தேர்வுக்கு விண்ணப்பிக்க வழி வகுக்கும் என்றும் பிரதமர் தெரிவித்தார். [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/teachers-job-for-unemployed-graduates-a-special-announcement-issued-by-the-prime-minister/">“வேலையற்ற பட்டதாரிகளுக்கு ஆசிரியர் பணி” : பிரதமர் வெளியிட்ட விசேட அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>வேலையற்ற பட்டதாரிகளை ஆசிரியர்களாக ஆட்சேர்ப்பு செய்வதில் ஏற்பட்ட தாமதத்திற்கு முதன்மைக் காரணமாக இருந்த, உச்ச நீதிமன்றத்தால் பரிசீலனை செய்யப்படும் நான்கு வழக்குகளின் சட்ட நடவடிக்கைகள் இப்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன என்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.</p>
<p>இதன்படி, நீதிமன்ற நடவடிக்கைகள் முடிந்ததும், தொடர்புடைய வர்த்தமானி அறிவிப்பை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதன் மூலம் பட்டதாரிகள் ஆசிரியர் ஆட்சேர்ப்பு தேர்வுக்கு விண்ணப்பிக்க வழி வகுக்கும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.</p>
<p>கல்வி அமைச்சில் வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது அவர் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.</p>
<p>ஏற்கனவே வழங்கப்பட்ட அமைச்சரவை ஒப்புதல்களுக்கு இணங்க, பிற பட்டதாரி ஆட்சேர்ப்பு செயல்முறைகளைத் தொடர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.</p>
<p>கூடுதலாக, ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பை தற்போதைய வயது வரம்பை நீட்டிப்பது தொடர்பிலும் கலந்துரையாடலின் போது ஒப்புக் கொள்ளப்பட்டது.</p>
<p>பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், தற்போதுள்ள அனைத்து ஆசிரியர் வெற்றிடங்களையும் உடனடியாக நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு செயல்முறையை விரைவுபடுத்துவதற்கான பரஸ்பர இணக்கப்பாடு காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/teachers-job-for-unemployed-graduates-a-special-announcement-issued-by-the-prime-minister/">“வேலையற்ற பட்டதாரிகளுக்கு ஆசிரியர் பணி” : பிரதமர் வெளியிட்ட விசேட அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பதவிக்காலம் முடிவடைந்து செல்லும் தூதுவருடன் சந்திப்பு</title>
		<link>https://oruvan.com/%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9f%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Tue, 29 Jul 2025 05:14:05 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஹரினி அமரசூரிய]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=27853</guid>

					<description><![CDATA[<p>நெதர்லாந்து அரசாங்கத்தின் இலங்கைக்கான தூதுவராக கடமையாற்றிய பொனி ஹர்பக் (Bonnie Harbach) இன் பதவிக்காலம் நிறைவடைந்து நாட்டில் இருந்து புறப்படுவதற்கு முன்னர், அவர் பிரதமர் அலுவலகத்திற்கு வருகை தந்து பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை நேற்று (28) சந்தித்தார். இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டதுடன், இலங்கையில் இதுவரை இடம்பெற்ற மூன்று அமைதியான முறையில் நடந்த தேர்தல்கள் தொடர்பில் மகிழ்ச்சியடைவதாகவும், தற்போதைய அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை பாராட்டுவதாகவும் தூதுவர் இதன்போது தெரிவித்தார். இலங்கை முகங்கொடுக்கும் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9f%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81/">பதவிக்காலம் முடிவடைந்து செல்லும் தூதுவருடன் சந்திப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>நெதர்லாந்து அரசாங்கத்தின் இலங்கைக்கான தூதுவராக கடமையாற்றிய பொனி ஹர்பக் (Bonnie Harbach) இன் பதவிக்காலம் நிறைவடைந்து நாட்டில் இருந்து புறப்படுவதற்கு முன்னர், அவர் பிரதமர் அலுவலகத்திற்கு வருகை தந்து பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவை நேற்று (28) சந்தித்தார்.</p>
<p>இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவது குறித்து இங்கு கவனம் செலுத்தப்பட்டதுடன், இலங்கையில் இதுவரை இடம்பெற்ற மூன்று அமைதியான முறையில் நடந்த தேர்தல்கள் தொடர்பில் மகிழ்ச்சியடைவதாகவும், தற்போதைய அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தை பாராட்டுவதாகவும் தூதுவர் இதன்போது தெரிவித்தார்.</p>
<p>இலங்கை முகங்கொடுக்கும் சவால்கள் குறித்தும், அந்த சவால்களை வெற்றிகொள்வதற்கு நெதர்லாந்து அரசாங்கம் பூரண ஆதரவளிக்கும் எனவும் தூதுவர் இங்கு வலியுறுத்தினார்.</p>
<p>நெதர்லாந்து தூதுவராக இலங்கைக்கு வழங்கிய ஆதரவு குறித்து மகிழ்ச்சியடைவதாகவும், எதிர்காலத்திலும் நெதர்லாந்தின் ஆதரவை இலங்கைக்கு பெற்றுக்கொடுப்பதற்காக செயற்படுமாறும், எதிர்காலப் பணிகளுக்காக தனது வாழ்த்துக்களை தெரிவிப்பதாகவும் பிரதமர் இதன்போது குறிப்பிட்டார்.</p>
<p>இந்நிகழ்வில், பிரதமரின் செயலாளர் திரு. பிரதீப் சபுதந்திரி, நெதர்லாந்து தூதரகத்தின் அரசியல் விவகார ஆலோசகர் திரு. நாமல் பெரேரா, வெளிவிவகார அமைச்சின் ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா பிரிவின் உதவிப் பணிப்பாளர் செல்வி. திவங்கா அத்துரலிய உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/%e0%ae%aa%e0%ae%a4%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%be%e0%ae%b2%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%ae%9f%e0%af%88%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%af%81/">பதவிக்காலம் முடிவடைந்து செல்லும் தூதுவருடன் சந்திப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சூரிய சக்தியைப் பயன்படுத்த இலங்கை அர்ப்பணிப்புடன் செயல்படும் &#8211; ஹரினி அமரசூரிய</title>
		<link>https://oruvan.com/sri-lanka-committed-to-harnessing-solar-energy-harini-amarasuriya/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Wed, 16 Jul 2025 10:55:48 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஹரினி அமரசூரிய]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=26765</guid>

					<description><![CDATA[<p>சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பின் (ISA) ஆசிய மற்றும் பசிபிக் பிராந்தியக் குழுவின் ஏழாவது மாநாடு இன்று கொழும்பு ICT ரத்னதீப ஹோட்டலில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களின் தலைமையில் ஆரம்பமானது. &#8220;பன்முகத்தன்மையும் வாய்ப்புகளும் நிறைந்த பிராந்தியத்தின் வழியாக சூரிய சக்தி ஒத்துழைப்பை முன்னெடுத்துச் செல்லுதல்&#8221; எனும் தலைப்பில் நடைபெற்ற இந்த மாநாட்டின் இணைத் தலைமைத்துவத்தை இலங்கை வகித்தது. இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதமர், பிராந்திய சூரிய சக்தி ஒத்துழைப்பைப் பலப்படுத்துவதற்கும், நிலையான அபிவிருத்தியின் மூலம் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/sri-lanka-committed-to-harnessing-solar-energy-harini-amarasuriya/">சூரிய சக்தியைப் பயன்படுத்த இலங்கை அர்ப்பணிப்புடன் செயல்படும் &#8211; ஹரினி அமரசூரிய</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>சர்வதேச சூரிய சக்தி கூட்டமைப்பின் (ISA) ஆசிய மற்றும் பசிபிக் பிராந்தியக் குழுவின் ஏழாவது மாநாடு இன்று கொழும்பு ICT ரத்னதீப ஹோட்டலில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய அவர்களின் தலைமையில் ஆரம்பமானது.</p>
<p>&#8220;பன்முகத்தன்மையும் வாய்ப்புகளும் நிறைந்த பிராந்தியத்தின் வழியாக சூரிய சக்தி ஒத்துழைப்பை முன்னெடுத்துச் செல்லுதல்&#8221; எனும் தலைப்பில் நடைபெற்ற இந்த மாநாட்டின் இணைத் தலைமைத்துவத்தை இலங்கை வகித்தது.</p>
<p>இதன்போது கருத்துத் தெரிவித்த பிரதமர், பிராந்திய சூரிய சக்தி ஒத்துழைப்பைப் பலப்படுத்துவதற்கும், நிலையான அபிவிருத்தியின் மூலம் சக்தி பாதுகாப்பை அடைவதற்கும் இலங்கை அர்ப்பணிப்புடன் உள்ளது என்பதை வலியுறுத்தினார்.</p>
<p>இலங்கைக்கும் ISA பிராந்தியக் குழுவிற்கும் இடையிலான உள்ளூர் பங்களிப்பைக் குறிக்கும் வகையில், உத்தியோகபூர்வ வரைபடத் திட்டம் கையெழுத்திடப்பட்டு வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி அவர்களிடம் கையளிக்கப்பட்டது.<br />
இந்நிகழ்வில் உரையாற்றிய வலுசக்தி அமைச்சர் குமார ஜயக்கொடி, சூரிய சக்தி பயன்பாட்டை விரிவுபடுத்தும் அரசாங்கத்தின் &#8220;சூரிய சக்திக்கான போராட்டம்&#8221; எனும் திட்டம் மற்றும் 2030 ஆம் ஆண்டுக்குள் 70% புதுப்பிக்கத்தக்க வலுசக்தி இலக்கை அடையும் நோக்கத்துடன் அரசாங்கம் செயல்பட்டு வருவதாகத் தெரிவித்தார்.</p>
<p>இந்த மாநாடு புதிய பிராந்தியப் பங்காளிகளை உருவாக்குவதற்கான வாய்ப்பாக அமைந்ததுடன், மொரட்டுவ பல்கலைக்கழகமானது, சூரிய வலுசக்தி புத்தகத்திற்கான பிரதான அறிவுசார் ஆராய்ச்சி மையமாக அடையாளம் காணப்பட்டது.</p>
<p>சூரிய சக்தி தொழில்நுட்பத்தின் மூலம் பிராந்திய அபிவிருத்தி மற்றும் பல்வகை சமூக-பொருளாதாரச் செயல்பாடுகளுக்கு சூரிய சக்தியைப் பயன்படுத்துவதற்கான நடைமுறைச் சாத்தியமான தீர்வுகள் உள்ளிட்ட விசேட சூரிய சக்தி தாக்க புத்தாக்கக் கண்காட்சியின் ஆரம்ப விழாவிலும் பிரதமர் கலந்துகொண்டார்.<br />
இலங்கையின் இந்திய உயர் ஸ்தானிகர் கௌரவ சந்தோஷ் ஜா, ISA தலைமை இயக்குநர் உள்ளிட்ட ஆசிய-பசிபிக் பிராந்தியத்தின் பிரதிநிதிகள் மற்றும் 124 நாடுகளின் உறுப்பினர்களும் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/sri-lanka-committed-to-harnessing-solar-energy-harini-amarasuriya/">சூரிய சக்தியைப் பயன்படுத்த இலங்கை அர்ப்பணிப்புடன் செயல்படும் &#8211; ஹரினி அமரசூரிய</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>உத்தேச புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பிரதமர் எம்.பிக்களுக்கு விளக்கமளிப்பு</title>
		<link>https://oruvan.com/%e0%ae%89%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%9a%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Sat, 12 Jul 2025 02:40:32 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஹரினி அமரசூரிய]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=26346</guid>

					<description><![CDATA[<p>2026 ஆம் ஆண்டு முதல் செயற்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கும் முதல் நிகழ்வு பிரதமர் கலாநிதி. ஹரினி அமரசூரியவின் தலைமையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது. இதன்போது, புதிய சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதன் நோக்கங்கள் மற்றும் இலக்குகள், சீர்திருத்தங்களுக்கான வழிகாட்டும் கொள்கைகள், புதிய சீர்திருத்தங்களுக்கு ஏற்ப கல்வியின் முக்கிய தூண்கள், பாடத்திட்ட சீர்திருத்தம், சீர்திருத்தங்களைச் செயல்படுத்தும் நடைமுறைகள் மற்றும் ஆசிரியர் பயிற்சி போன்ற அடிப்படை விடயங்கள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. கல்வி அமைச்சு, தேசிய [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/%e0%ae%89%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%9a%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4/">உத்தேச புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பிரதமர் எம்.பிக்களுக்கு விளக்கமளிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>2026 ஆம் ஆண்டு முதல் செயற்படுத்தப்படவுள்ள புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கும் முதல் நிகழ்வு பிரதமர் கலாநிதி. ஹரினி அமரசூரியவின் தலைமையில் பாராளுமன்றத்தில் நடைபெற்றது.</p>
<p>இதன்போது, புதிய சீர்திருத்தங்களைக் கொண்டுவருவதன் நோக்கங்கள் மற்றும் இலக்குகள், சீர்திருத்தங்களுக்கான வழிகாட்டும் கொள்கைகள், புதிய சீர்திருத்தங்களுக்கு ஏற்ப கல்வியின் முக்கிய தூண்கள், பாடத்திட்ட சீர்திருத்தம், சீர்திருத்தங்களைச் செயல்படுத்தும் நடைமுறைகள் மற்றும் ஆசிரியர் பயிற்சி போன்ற அடிப்படை விடயங்கள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டது. கல்வி அமைச்சு, தேசிய கல்வி நிறுவகம் மற்றும் தேசிய கல்வி ஆணைக்குழு மூலம் இந்த புதிய கல்வி சீர்திருத்தங்கள் செயல்படுத்தப்படும் விதம் மற்றும் கண்காணிக்கப்படும் விதம் தொடர்பாகவும் இங்கு தெளிவுபடுத்தப்பட்டன.</p>
<p>அத்தோடு, 21 ஆம் நூற்றாண்டு மற்றும் அதற்கு அப்பால் ஏற்படக்கூடிய சவால்களை எதிர்கொள்ளும் திறன் கொண்ட குடிமகனை உருவாக்குவதற்கான அடிப்படை அடித்தளத்தை அமைப்பது மற்றும் அந்த புதிய குடிமகனை நாட்டின் நிலையான தேசிய அபிவிருத்தி மற்றும் சமாதானச் செயன்முறைக்கு பங்களிப்பாளராக மாற்றுவது ஆகியன இந்த புதிய கல்வி சீர்திருத்தங்களின் முக்கிய நோக்கமாகும் என்பதும் தெளிவுபடுத்தப்பட்டது.</p>
<p>கல்வி சீர்திருத்தங்கள் குறித்த அடிப்படை விளக்கத்தைத் தொடர்ந்து, பாராளுமன்ற உறுப்பினர்கள், சீர்திருத்தங்கள் குறித்த தங்களின் கருத்துக்கள் மற்றும் புதிய முன்மொழிவுகளை முன்வைத்தனர். அப்போது, விசேட தேவைகள் உள்ள மற்றும் மாற்றுத்திறனாளிகளான பிள்ளைகளுக்கு இந்த கல்வி மாற்றத்தை ஏற்படுத்துவதன் முக்கியத்துவம் மற்றும் தேவைகள் குறித்து விசேடமாகக் கலந்துரையாடப்பட்டது.</p>
<p>இந்த கலந்துரையாடலில் கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் வைத்தியர் மதுர செனெவிரத்ன உட்பட, பாராளுமன்ற உறுப்பினர்கள், பிரதமரின் செயலாளர் பிரதீப் சபுதந்திரி, கல்வி உயர்கல்வி மற்றும் தொழில்நுட்ப கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ, தேசிய கல்வி ஆணைக்குழுவின் உப தலைவர் திலக் தர்மரத்ன ஆகியோர் உட்பட கல்வி அமைச்சு, தேசிய கல்வி நிறுவனம் மற்றும் தேசிய கல்வி ஆணைக்குழு ஆகியவற்றின் உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/%e0%ae%89%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%87%e0%ae%9a-%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af-%e0%ae%95%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%9a%e0%af%80%e0%ae%b0%e0%af%8d%e0%ae%a4/">உத்தேச புதிய கல்வி சீர்திருத்தங்கள் குறித்து பிரதமர் எம்.பிக்களுக்கு விளக்கமளிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>கல்வித் துறையில் நவீன மாற்றங்களுக்காக 6 உப குழுக்களை நியமிக்க தீர்மானம்</title>
		<link>https://oruvan.com/resolution-to-appoint-6-sub-committees-for-modern-changes-in-the-education-sector/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Sat, 07 Jun 2025 02:33:23 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஹரினி அமரசூரிய]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=22700</guid>

					<description><![CDATA[<p>கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வித் துறையில் நவீன மாற்றங்களுக்காக 6 உப குழுக்களை நியமிக்க கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் தீர்மானிக்கப்பட்டது. பிரதமர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சருமான (கலாநிதி) ஹரினி அமரசூரிய, கல்வி, உயர் கல்வி கௌரவ பிரதி அமைச்சர் (வைத்தியர்) மதுர செனெவிரத்ன மற்றும் தொழிற் கல்வி பிரதி அமைச்சர் நலின் ஹேவகே ஆகியோரின் தலைமையில் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/resolution-to-appoint-6-sub-committees-for-modern-changes-in-the-education-sector/">கல்வித் துறையில் நவீன மாற்றங்களுக்காக 6 உப குழுக்களை நியமிக்க தீர்மானம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வித் துறையில் நவீன மாற்றங்களுக்காக 6 உப குழுக்களை நியமிக்க கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் தீர்மானிக்கப்பட்டது.</p>
<p>பிரதமர் மற்றும் கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற் கல்வி அமைச்சருமான (கலாநிதி) ஹரினி அமரசூரிய, கல்வி, உயர் கல்வி கௌரவ பிரதி அமைச்சர் (வைத்தியர்) மதுர செனெவிரத்ன மற்றும் தொழிற் கல்வி பிரதி அமைச்சர் நலின் ஹேவகே ஆகியோரின் தலைமையில் இந்தக் குழுபாராளுமன்றத்தில் கூடிய போதே இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டது.</p>
<p>அதற்கமைய, கல்வி மறுசீரமைப்பு உபகுழுவில் (கலாநிதி) ஹரினி அமரசூரிய (தலைவர்), அனுர கருணாதிலக்க, ரோஹிணி குமாரி விஜேரத்ன, ஞானமுத்து ஸ்ரீநேசன், சுனில் ராஜபக்ஷ ஆகியோரும், பாடசாலைகளில் காணப்படும் மனித வளம் மற்றும் பௌதீக வள பற்றாக்குறை பற்றிய உப குழுவில் (கலாநிதி) கெளஷல்யா ஆரியரத்ன (தலைவர்), மயில்வாகனம் ஜெகதீஸ்வரன், சந்தன தென்னகோன், சுகத் வசந்த த சில்வா மற்றும் தர்மப்ரிய விஜேசிங்ஹ ஆகியோரும் அடங்குகின்றனர்.</p>
<p>அத்துடன், இடைநிலை வகுப்புகளுக்கு மாணவர்களை இணைத்துக்கொள்ளல் பற்றிய உப குழுவில் சமன்மலீ குணசிங்ஹ (தலைவர்), அபூபக்கர் ஆதம்பாவா, சஞ்ஜீவ ரணசிங்ஹ மற்றும் ஆர்.எம். சமந்த ரனசிங்ஹ ஆகியோரும், கல்விச் சபையை நிறுவுதல் பற்றிய உப குழுவில், மஹிந்த ஜயசிங்க, (தலைவர்), (கலாநிதி) எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், (கலாநிதி) வீ.எஸ். இராதாகிருஷ்ணன், மஞ்ஜுள சுரவீர ஆரச்சி மற்றும் ருவன் மாபலகம ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்.<br />
மேலும், உயர் கல்வித் பிரிவுகள் பற்றிய உப குழுவில் (வைத்தியர்) மதுர செனெவிரத்ன (தலைவர்), (கலாநிதி) உபாலி பன்னிலகே, றஜீவன் ஜெயச்சந்திரமூர்த்தி, நிமல் பலிஹேன மற்றும் மஞ்சுல சுகத் ரத்னாயக ஆகியோரும், திறன் கல்விப் பிரிவு பற்றிய உப குழுவில் நலின் ஹேவகே (தலைவர்), டி.வீ. சானக, சிவஞானம் சிறீதரன் மற்றும் இம்ரான் மகரூப் ஆகியோரும் உள்ளடங்குகின்றனர்.</p>
<p>பல்கலைக்கழக பிரவேசம் மற்றும் பல்கலைக்கழகத்தில் இயலாமையுடைய மாணவர்களுக்கு அநீதி இழைக்கப்படாமல் இருப்பதற்கும் அவர்களுக்கான வசதிகளை விருத்தி செய்தல், நாட்டின் பல்வேறு பகுதிகளிலுள்ள பாடசாலைகளில் காணப்படும் சிக்கல்கள், ஆசிரியர் பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு சிக்கல்கள் தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவின் கவனத்துக்குக் கொண்டுவந்தனர்.</p>
<p>இது தொடர்பில் எடுக்கக்கூடிய துரித நடவடிக்கைகளை எடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு பிரதமர் ஆலோசனை வழங்கியதுடன் தேவையான கொள்கை ரீதியான மாற்றங்களுக்காக அரசாங்கம் அவசரமாக தலையிடுவதாகத் தெரிவித்தார்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/resolution-to-appoint-6-sub-committees-for-modern-changes-in-the-education-sector/">கல்வித் துறையில் நவீன மாற்றங்களுக்காக 6 உப குழுக்களை நியமிக்க தீர்மானம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>அனுராதபுரம், யாழ்ப்பாணம, கண்டி நகரங்கள் தேசிய கலாசார நகரங்களாக அபிவிருத்தி &#8211; பிரான்ஸில் பிரதமர் தெரிவிப்பு</title>
		<link>https://oruvan.com/anuradhapura-jaffna-and-kandy-cities-to-be-developed-as-national-cultural-cities-prime-ministers-statement-in-france/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Thu, 03 Apr 2025 08:55:19 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஹரினி அமரசூரிய]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=16763</guid>

					<description><![CDATA[<p>உலக மரபுரிமை சொத்தான அனுராதபுரம் புனித நகரத்தை பாதுகாப்பதற்கான யுனெஸ்கோவின் தலையீடு பாராட்டுதற்குரியது. அனுராதபுரம் இலங்கையின் மாத்திரமன்றி பிரபஞ்சத்தின் சொத்தாகும் என பிரான்சில் இடம்பெற்ற யுனெஸ்கோ சர்வதேச மாநாட்டில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார். யுனெஸ்கோ பணிப்பாளர் நாயகம் ஓத்ரி அசூலே, இலங்கையின் புத்தசாசன, மதங்கள் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹிணிதும சுனில் செனவி உள்ளிட்ட இலங்கை தூதுக்குழுவினர் மற்றும் சர்வதேச நிபுணர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர். பிரான்சிலுள்ள யுனெஸ்கோ தலைமையகத்தில் ஏப்ரல் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/anuradhapura-jaffna-and-kandy-cities-to-be-developed-as-national-cultural-cities-prime-ministers-statement-in-france/">அனுராதபுரம், யாழ்ப்பாணம, கண்டி நகரங்கள் தேசிய கலாசார நகரங்களாக அபிவிருத்தி &#8211; பிரான்ஸில் பிரதமர் தெரிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>உலக மரபுரிமை சொத்தான அனுராதபுரம் புனித நகரத்தை பாதுகாப்பதற்கான யுனெஸ்கோவின் தலையீடு பாராட்டுதற்குரியது. அனுராதபுரம் இலங்கையின் மாத்திரமன்றி பிரபஞ்சத்தின் சொத்தாகும் என பிரான்சில் இடம்பெற்ற யுனெஸ்கோ சர்வதேச மாநாட்டில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய தெரிவித்தார்.</p>
<p>யுனெஸ்கோ பணிப்பாளர் நாயகம் ஓத்ரி அசூலே, இலங்கையின் புத்தசாசன, மதங்கள் மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹிணிதும சுனில் செனவி உள்ளிட்ட இலங்கை தூதுக்குழுவினர் மற்றும் சர்வதேச நிபுணர்கள் இந்த மாநாட்டில் பங்கேற்றுள்ளனர்.</p>
<p>பிரான்சிலுள்ள யுனெஸ்கோ தலைமையகத்தில் ஏப்ரல் முதலாம் திகதி ‘இலங்கையின் உலக மரபுரிமை சொத்தான அனுராதபுரம் புனித நகரத்தை பாதுகாப்பதற்கான ஒன்றிணைந்த மற்றும் நிலையான அணுகுமுறை’ என்ற தொனிப்பொருளில் இடம்பெற்ற சர்வதேச நிபுணர்களின் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றிய பிரதமர் மேலும் கூறியதாவது,</p>
<p>யுனெஸ்கோ மற்றும் இலங்கைக்கிடையிலான தொடர்புகள் 75 வருடங்களை அண்மிக்கும் தருணத்தில் யுனெஸ்கோ சர்வதேச மாநாட்டில் உரையாற்ற சந்தர்ப்பம் கிடைத்தமை மகிழ்ச்சியளிக்கிறது.</p>
<p>ஐக்கிய நாடுகளின் கல்வி, விஞ்ஞான மற்றும் கலாசார அமைப்பின் பணிப்பாளர் நாயகம் ஓத்ரி அசூலே அவர்கள் கடந்த ஜூலை மாதம் இலங்கைக்கு மேற்கொண்டிருந்த விஜயத்தின் பிரதிபலனாக அனுராதபுரத்தை பாதுகாக்கும் வகையில் இந்த மாநாடு இடம்பெறுகிறது.</p>
<p>யுனெஸ்கோ மற்றும் இலங்கைக்கிடையிலான நீண்டகால ஒத்துழைப்பை பலப்படுத்துவதற்கும், கலாசாரங்களுக்கிடையிலான உரையாடல், மரபுரிமைகளை பாதுகாத்தல், கல்வி, நிலைபேறான அபிவிருத்தி மற்றும் தொழில்நுட்ப அபிவிருத்தியை முன்னோக்கி கொண்டு செல்வதற்கும் இந்த மாநாடு கைகொடுக்கும்.<br />
எதிர்கால சந்ததியினருக்கென கலாசார பாரம்பரியத்தை பாதுகாத்து முன்னெடுத்துச் செல்லும் பொறுப்பை பலப்படுத்துவதற்கு உலகளாவிய தலைவராக யுனெஸ்கோவின் ஒத்துழைப்பு இலங்கைக்கு முன்னரை விடவும் மிகவும் அத்தியாவசியமாக தேவைப்படும் காலப்பகுதியில் நாம் உள்ளோம்.</p>
<p>கலாசாரத்திற்கென முன்னர் இல்லாத மகத்தான வரவேற்பைப் பெறுதல், உலக அமைதி, அபிவிருத்திக்கான அறிவுத்திறன் மற்றும் புத்தாக்கங்களை பயன்படுத்தல், AI தொழில்நுட்பத்தை உயர் நெறிமுறைகளுடன் கையாளுதல், நிலைபேறான கல்வி, சமுத்திர உயிரியல் பல்வகைத்தன்மை மற்றும் பாதுகாப்பு, காலநிலை மாற்றத்திற்கு ஈடுகொடுக்கும் திறனை மேம்படுவதற்காக யுனெஸ்கோ எடுக்கும் நடவடிக்கைகள் மிகவும் முக்கியமானவை என்பதுடன் காலத்திற்கு ஏற்றவை.</p>
<p>கலாசார முக்கோணம் நிறுவப்பட்டுள்ள அனுராதபுரம் மற்றும் பொலன்னறுவை இராச்சியங்களில் காணப்பட்ட மிகவும் முன்னேற்றகரமான நாகரிகம் மற்றும் இயற்கையை பாதுகாப்பதற்கு 1980களிலிருந்து யுனெஸ்கோவின் ஒத்துழைப்பு இலங்கைக்கு கிடைக்கப்பெற்றுள்ளது.</p>
<p>எமது அரசு இனவாதத்தை புறக்கணிக்கிறது. அனைவருக்கும் சமமான உரிமைகளுடன் அனைவரையும் ஒன்றிணைக்கும் சமூகமொன்றை கட்டியெழுப்புவதற்கே அரசாங்கம் முயற்சிக்கிறது. குரோத அரசியல் இலாபங்களுக்கு எதிராகவும், மக்கள் பிளவுபடுவதை விரும்பாதவர்களுமே இந்த தேசிய மரபுரிமைகளை பாதுகாப்பதற்கு அர்ப்பணிப்புடன் செயலாற்றியுள்ளனர்.</p>
<p>எதிர்காலத்தில் இலங்கையின் அனுராதபுரம், யாழ்ப்பாணம் மற்றும் கண்டி ஆகிய 3 நகரங்களையும் தேசிய கலாசார நகரங்களாக அபிவிருத்தி செய்வதற்கு எமது அரசு திட்டமிட்டுள்ளது.</p>
<p>இதேவேளை மியன்மார் மற்றும் தாய்லாந்தில் ஏற்ப்பட்ட நிலநடுக்கத்தினால் உருவாகியுள்ள பேரழிவுகள் தொடர்பில் அந்த நாடுகளின் அரசுகள் மற்றும் மக்களுக்கு இலங்கை ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிப்பதாகவும் பிரதமர் ஹரினி அமரசூரிய குறிப்பிட்டார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/anuradhapura-jaffna-and-kandy-cities-to-be-developed-as-national-cultural-cities-prime-ministers-statement-in-france/">அனுராதபுரம், யாழ்ப்பாணம, கண்டி நகரங்கள் தேசிய கலாசார நகரங்களாக அபிவிருத்தி &#8211; பிரான்ஸில் பிரதமர் தெரிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>நாடாளுமன்ற உறுப்பினர்களின் வருடாந்த உள்ளக விளையாட்டுப் போட்டி &#8211; கேடயங்கள், சான்றிதழ்கள் வழங்கிவைப்பு</title>
		<link>https://oruvan.com/annual-internal-sports-competition-for-members-of-parliament-presentation-of-shields-and-certificates/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Tue, 25 Mar 2025 05:30:09 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[ஹரினி அமரசூரிய]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=15689</guid>

					<description><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர்களின் வருடாந்த உள்ளக விளையாட்டுப் போட்டிக்கான கேடயங்கள் மற்றும் சான்றிதழ்கள் கையளிக்கும் நிகழ்வு பிரதமர் மற்றும் சபாநாயகர் தலைமையில் நடைபெற்றது ஐந்தாவது வருடமாக ஏற்பாடு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வருடாந்த உள்ளக விளையாட்டுப் போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கான கேடயங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் வைபவம் பிரதமர் (கலாநிதி) ஹரினி அமரசூரிய மற்றும் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன ஆகியோரின் தலைமையில் நாடாளுமன்ற பிலியட் மண்டபத்தில் கடந்த 21ஆம் திகதி நடைபெற்றது. விளையாட்டுத் துறைப் பிரதியமைச்சர் சுகத் திலகரத்ன [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/annual-internal-sports-competition-for-members-of-parliament-presentation-of-shields-and-certificates/">நாடாளுமன்ற உறுப்பினர்களின் வருடாந்த உள்ளக விளையாட்டுப் போட்டி &#8211; கேடயங்கள், சான்றிதழ்கள் வழங்கிவைப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>நாடாளுமன்ற உறுப்பினர்களின் வருடாந்த உள்ளக விளையாட்டுப் போட்டிக்கான கேடயங்கள் மற்றும் சான்றிதழ்கள் கையளிக்கும் நிகழ்வு பிரதமர் மற்றும் சபாநாயகர் தலைமையில் நடைபெற்றது</p>
<p>ஐந்தாவது வருடமாக ஏற்பாடு செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான வருடாந்த உள்ளக விளையாட்டுப் போட்டியில் வெற்றியீட்டியவர்களுக்கான கேடயங்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கும் வைபவம் பிரதமர் (கலாநிதி) ஹரினி அமரசூரிய மற்றும் சபாநாயகர் (வைத்தியர்) ஜகத் விக்கிரமரத்ன ஆகியோரின் தலைமையில் நாடாளுமன்ற பிலியட் மண்டபத்தில் கடந்த 21ஆம் திகதி நடைபெற்றது.</p>
<p>விளையாட்டுத் துறைப் பிரதியமைச்சர் சுகத் திலகரத்ன மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நளின் பண்டார ஆகியோரின் தலைமையின் கீழ் பாராளுமன்ற படைக்கல சேவிதர் திணைக்களத்தின் ஒத்துழைப்புடன் இந்தப் போட்டிங்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன.</p>
<p>ஏழு உள்ளக விளையாட்டுப் பிரிவுகளின் கீழ் இடம்பெற்ற போட்டிகளில் ஸ்நூகர் இறுதிப் போட்டி பிரதமர் மற்றும் சபாநாயகர் முன்னிலையில் இடம்பெற்றது. நாடாளுமன்ற உறுப்பினர்களான டி.வி.சானக்க மற்றும் ரோஹன பண்டார பங்குபற்றிய இப்போட்டியில் கௌரவ நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக்க வெற்றிபெற்றார்.</p>
<p>இங்கு நடைபெற்ற கலப்பு இரட்டையர் மேசைப்பந்துப் போட்டியில் பிரதி அமைச்சர் சதுரங்க அபேசிங்க மற்றும் (சட்டத்தரணி) நிலந்தி கொட்டஹச்சி ஆகியோர் வெற்றி பெற்றனர். இதில் எதிர்த்திசையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான வருண லியனகே மற்றும் (சட்டத்தரணி) சமிந்திரானி கிரிஎல்லே ஆகியோர் போட்டியிட்டனர்.</p>
<p>தாம் போட்டியில் நாடாளுமன்ற உறுப்பினர் டபிள்யூ.எச்.எம்.தர்மசேன வெற்றிபெற்றார். இரண்டாவது இடத்தை நாடாளுமன்ற உறுப்பினர் பி.ஆரியவன்ச பெற்றுக்கொண்டார்.</p>
<p>மேசைப்பந்து (ஆண்கள்) போட்டியில் நாடாளுமன்ற உறுப்பினர் வருண லியனகே வெற்றிபெற்றதுடன், இரண்டாவது இடத்தை நாடாளுமன்ற உறுப்பினர் ருவன்திலக ஜயக்கொடி பெற்றுக்கொண்டார்.</p>
<p>உள்ளக விளையாட்டுப் போட்டியின் தனிநபர்களுக்கான மேசைப்பந்து (பெண்கள்) போட்டியில் நாடாளுமன்ற உறுப்பினர் (சட்டத்தரணி) நிலந்தி கொட்டஹச்சி வெற்றிபெற்றதுடன், இரண்டாவது இடத்தை நாடாளுமன்ற உறுப்பினர் (சட்டத்தரணி) சமிந்திரானி கிரிஎல்லே பெற்றுக்கொண்டார்.</p>
<p>சதுரங்கப் போட்டியில் (செஸ்) நாடாளுமன்ற உறுப்பினர் (வைத்தியர்) அர்ச்சுனா இராமநாதன் பெற்றிபெற்றதுடன், இரண்டாவது இடத்தை நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹன பண்டார வெற்றிகொண்டார்.</p>
<p>அத்துடன், கரம் விளையாட்டில் நாடாளுமன்ற உறுப்பினர் லெப்டினன் கமாண்டர் (ஓய்வுபெற்ற) பிரகீத் மதுரங்க வெற்றிபெற்றதுடன், இப்போட்டியில் இரண்டாவது இடத்தை விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே பெற்றுக்கொண்டார்.</p>
<p>பூல் (pool) விளையாட்டில் நாடாளுமன்ற ரோஹன பண்டார வெற்றிகொண்டதுடன், இரண்டாவது இடத்தை நாடாளுமன்ற உறுப்பினர் டி.வி.சானக்க பெற்றுக்கொண்டார்.</p>
<p>இதில் வெற்றிபெற்ற நாடாளுமன்ற உறுப்பினர்களை வாழ்த்தி உரைநிகழ்த்திய பிரதமர் (கலாநிதி) ஹரினி அமரசூரிய, மிகவும் வேலைப்பழு மிக்க காலத்தில் மனதை இலகுவாக வைத்திருக்கவும், உறுப்பினர்களிடையே நட்புறவை மேம்படுத்துவதற்கு விளையாட்டுக்கள் உறுதுணையாக இருப்பதாகக் கூறினார். அத்துடன், இந்தப் போட்டியை ஏற்பாடு செய்தமைக்காக கௌரவ விளையாட்டுப் பிரதியமைச்சர் சுகத் திலகரத்ன மற்றும் நாடாளுமன்ற நளின் பண்டார ஆகியோருக்கும் பிரதமர் நன்றியைத் தெரிவித்தார்.</p>
<p>இந்த விளையாட்டுப் போட்டிகளின் நடுவர்களாகப் நாடாளுமன்ற பணியாளர்களான தரங்க அபேசிங்கே மற்றும் சமீர சஞ்சீவ ஆகியோர் பங்களித்தனர்.</p>
<p>கேடயங்கள் மற்றும் சான்றிதழ்களை வழங்கும் நிகழ்வில் நாடாளுமன்ற குழுக்களின் பிரதித் தலைவர் ஹேமாலி வீரசேகர, சபை முதல்வரும், அமைச்சருமான பிமல் ரத்னாயக்க, விளையாட்டுத்துறை அமைச்சர் சுனில் குமார கமகே உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.</p>
<p>அத்துடன், நாடாளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர, நாடாளுமன்ற பணியாட் தொகுதியின் பிரதானியும் பிரதிச் செயலாளர் நாயகமுமான சமிந்த குலரத்ன, படைக்கல சேவிதர் குஷான் ஜயரத்ன உள்ளிட்ட அதிகாரிகள் பலரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/annual-internal-sports-competition-for-members-of-parliament-presentation-of-shields-and-certificates/">நாடாளுமன்ற உறுப்பினர்களின் வருடாந்த உள்ளக விளையாட்டுப் போட்டி &#8211; கேடயங்கள், சான்றிதழ்கள் வழங்கிவைப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
