<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>ஷிரந்தி ராஜபக்ச Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/%e0%ae%b7%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%b0%e0%ae%be%e0%ae%9c%e0%ae%aa%e0%ae%95%e0%af%8d%e0%ae%9a/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/ஷிரந்தி-ராஜபக்ச/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Tue, 03 Feb 2026 08:37:42 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>ஷிரந்தி ராஜபக்ச Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/ஷிரந்தி-ராஜபக்ச/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>ஷிரந்தியை இலக்கு வைத்து மஹிந்தவை வீழ்த்த முடியாது</title>
		<link>https://oruvan.com/mahinda-cannot-be-defeated-by-targeting-shiranthi/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Tue, 03 Feb 2026 08:37:42 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஷிரந்தி ராஜபக்ச]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=44360</guid>

					<description><![CDATA[<p>“ஷிரந்தி ராஜபக்சவை இலக்கு வைப்பதன்மூலம் மஹிந்தவை வீழ்த்திவிடலாம் என அரசாங்கம் நினைக்கின்றது. அது ஒருபோதும் நடக்காது.” – என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார். சிரிலிய விவகாரம் தொடர்பில் பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால், விசாரணை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது. இது தொடர்பான விசாரணைக்கு ஷிரந்தி ராஜபக்ச அண்மையில் அழைக்கப்பட்டிருந்தார். எனினும், அவர் முன்னிலையாகவில்லை. தனது சட்டத்தரணிகள் ஊடாக இரு வாரங்கள் அவகாசம் கோரி இருந்தார். இந்நிலையில் இன்று முன்னிலையாகுமாறு [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/mahinda-cannot-be-defeated-by-targeting-shiranthi/">ஷிரந்தியை இலக்கு வைத்து மஹிந்தவை வீழ்த்த முடியாது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>“ஷிரந்தி ராஜபக்சவை இலக்கு வைப்பதன்மூலம் மஹிந்தவை வீழ்த்திவிடலாம் என அரசாங்கம் நினைக்கின்றது. அது ஒருபோதும் நடக்காது.” – என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி மனோஜ் கமகே தெரிவித்தார்.</p>
<p>சிரிலிய விவகாரம் தொடர்பில் பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவினரால், விசாரணை முன்னெடுக்கப்பட்டுவருகின்றது.</p>
<p>இது தொடர்பான விசாரணைக்கு ஷிரந்தி ராஜபக்ச அண்மையில் அழைக்கப்பட்டிருந்தார்.</p>
<p>எனினும், அவர் முன்னிலையாகவில்லை. தனது சட்டத்தரணிகள் ஊடாக இரு வாரங்கள் அவகாசம் கோரி இருந்தார்.</p>
<p>இந்நிலையில் இன்று முன்னிலையாகுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது. இதற்கமைய அவர் இன்று FCID<br />
சென்றார்.</p>
<p>இதன்போது FCID வளாகத்தில் வைத்து ஊடகங்களிடம் கருத்து வெளியிட்ட மஹிந்தவின் பேச்சாளர் மனோஜ் கமகே,</p>
<p>“ மஹிந்த ராஜபக்சவை வீழ்த்த முடியாது என்பது ஆளுங்கட்சிக்கு தெரியும்.</p>
<p>அதனால்தான் அவரது பாரியாரை இலக்கு வைத்து அவருக்கு தாக்கத்தை ஏற்படுத்தலாம் என நினைக்கின்றது போலும். அதுவும் நடக்காது.</p>
<p>ஷிரந்தி கல்விக்கு சேவையாற்றியவர். அது பற்றி பேசப்படுவதில்லை. சிரிலிய கணக்கு பற்றியே பேசப்படுகின்றது.” எனக் குறிப்பிட்டார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/mahinda-cannot-be-defeated-by-targeting-shiranthi/">ஷிரந்தியை இலக்கு வைத்து மஹிந்தவை வீழ்த்த முடியாது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>முன்னாள் முதல் பெண்மணி என்ற அடிப்படையில் விசாரணைக்கு முன்னிலையாக வேண்டும்</title>
		<link>https://oruvan.com/government-teaches-shiranthi-a-lesson-in-social-responsibility-for-seeking-time/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Wed, 28 Jan 2026 10:53:17 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஷிரந்தி ராஜபக்ச]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=43998</guid>

					<description><![CDATA[<p>” முன்னாள் முதல் பெண்மணி என்ற அடிப்படையில் பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாக வேண்டிய சமூக பொறுப்பு ஷிரந்தி ராஜபக்சவுக்கு உள்ளது. அவர் கால்டன் பாலர் பாடசாலையை நடத்திவருபவர். எனவே, சட்டத்தை மதித்து முன்மாதிரியாக திகழ வேண்டும்.” என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். ‘சிரிலிய’ விவகாரம் தொடர்பில் விசாரணைக்கு வருவதற்காக இரு வாரங்கள் ஷிரந்தி ராஜபக்ச அவகாசம் கோரிய விவகாரம் தொடர்பில் அமைச்சரிடம் கேள்வி எழுப்பட்டது. இதற்கு பதிலளிக்கையிலேயே அவர் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/government-teaches-shiranthi-a-lesson-in-social-responsibility-for-seeking-time/">முன்னாள் முதல் பெண்மணி என்ற அடிப்படையில் விசாரணைக்கு முன்னிலையாக வேண்டும்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>” முன்னாள் முதல் பெண்மணி என்ற அடிப்படையில் பொலிஸ் நிதி குற்ற விசாரணைப் பிரிவில் முன்னிலையாக வேண்டிய சமூக பொறுப்பு ஷிரந்தி ராஜபக்சவுக்கு உள்ளது.</p>
<p>அவர் கால்டன் பாலர் பாடசாலையை நடத்திவருபவர். எனவே, சட்டத்தை மதித்து முன்மாதிரியாக திகழ வேண்டும்.” என்று அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார்.</p>
<p>‘சிரிலிய’ விவகாரம் தொடர்பில் விசாரணைக்கு வருவதற்காக இரு வாரங்கள் ஷிரந்தி ராஜபக்ச அவகாசம் கோரிய விவகாரம் தொடர்பில் அமைச்சரிடம் கேள்வி எழுப்பட்டது.</p>
<p>இதற்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.</p>
<p>“ விசாரணைக்கு அழைக்கும்பட்சத்தில், தவிர்க்க முடியாத காரணம் எனில் முதல் சந்தர்ப்பத்தில் அவகாசம் கேட்க முடியும். அவ்வாறு அவர் செய்திருக்ககூடும்.</p>
<p>ஷிரந்தி ராஜபக்ச முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவின் மனைவி. முதல் பெண்மணியாக இருந்தவர். நாமல் ராஜபக்சவின் தாய். எனவே, சட்டத்தை மதிக்க வேண்டிய சமூக பொறுப்பு ஷிரந்தி ராஜபக்சவுக்கு உள்ளது.” – எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/government-teaches-shiranthi-a-lesson-in-social-responsibility-for-seeking-time/">முன்னாள் முதல் பெண்மணி என்ற அடிப்படையில் விசாரணைக்கு முன்னிலையாக வேண்டும்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மகிந்த, நாமல் மற்றும் ஷிரந்தி ஆகியோருக்கு எதிராக லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு</title>
		<link>https://oruvan.com/complaint-filed-against-mahinda-namal-and-shiranthi-at-the-bribery-and-corruption-commission/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Tue, 23 Sep 2025 05:20:05 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[நாமல் ராஜபக்ச]]></category>
		<category><![CDATA[மகிந்த ராஜபக்ச]]></category>
		<category><![CDATA[ஷிரந்தி ராஜபக்ச]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=33311</guid>

					<description><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, அவரது மனைவி ஷிரந்தி ராஜபக்ச மற்றும் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குறித்து விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இலஞ்சம், ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான குடிமக்களின் சக்தி என்ற அமைப்பின் தலைவர் ஜாமினி கமன் துஷார நேற்று இந்த முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளார். இது குறித்து கருத்து வெளியிட்ட அவர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, அவரது மகன் நாடாளுமன்ற [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/complaint-filed-against-mahinda-namal-and-shiranthi-at-the-bribery-and-corruption-commission/">மகிந்த, நாமல் மற்றும் ஷிரந்தி ஆகியோருக்கு எதிராக லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, அவரது மனைவி ஷிரந்தி ராஜபக்ச மற்றும் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குறித்து விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.</p>
<p>இலஞ்சம், ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான குடிமக்களின் சக்தி என்ற அமைப்பின் தலைவர் ஜாமினி கமன் துஷார நேற்று இந்த முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளார்.</p>
<p>இது குறித்து கருத்து வெளியிட்ட அவர்,</p>
<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, அவரது மகன் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மற்றும் மனைவி ஷிரந்தி ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக விசாரணை நடத்தக் கோரி முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.</p>
<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வசித்த விஜேராம மாவத்தையில் உள்ள வீட்டைப் புதுப்பிக்க 5.1 பில்லியன் ரூபாய் அரசு நிதி செலவிடப்பட்டது முறையான கொள்முதல் செயல்முறையின்படி மேற்கொள்ளப்பட்டதா?</p>
<p>அல்லது அது ஊழல் ரீதியாக செலவிடப்பட்டு இலங்கைக் குடியரசுக்கு இழப்பை ஏற்படுத்தியதா? என்பது குறித்து முறையான விசாரணை நடத்துமாறு லஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணையத்திடம் அளிக்கப்பட்டுள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>முன்னாள் ஜனாதிபதியின் மகனும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவின் சொத்துக்கள் குறித்து வழங்கப்பட்ட தகவல்கள் உண்மையானதா, அல்லது முறைகேடாகப் பெறப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்துமாறும் புகாரில் கோரப்பட்டுள்ளது.</p>
<p>மேலும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச (மேரி லூடிஸ் விக்ரமசிங்க) சுமார் 400 மில்லியன் மதிப்புள்ள வீட்டை (கொழும்பு மியூசியஸ் கல்லூரிக்கு அருகிலுள்ள டொரிங்டன் மாவத்தையில்) சொந்தமாக வைத்திருக்கிறார்.</p>
<p>அந்த வீடு சிரிலிய கணக்கில் 35 மில்லியன் ரூபாய்க்கு வாங்கப்பட்டது என்பதும் நிலம் தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்தபோது குறிப்பிடப்பட்டுள்ளது.</p>
<p>மேலும், கொழும்பு 5, டொரிங்டன் மாவத்தை, எண் 260/12ஐ கொண்ட வீட்டை ஷிரந்தி ராஜபக்ச 05.04.2013ஆம் திகதியன்று 400 இலட்சத்திற்கு வாங்கியுள்ளார்.</p>
<p>அவருக்கு 350 இலட்சம் எவ்வாறு வந்தது என புலனாய்வு விசாரணைகளை ஆரம்பிக்குமாறு முறைப்பாடு செய்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/complaint-filed-against-mahinda-namal-and-shiranthi-at-the-bribery-and-corruption-commission/">மகிந்த, நாமல் மற்றும் ஷிரந்தி ஆகியோருக்கு எதிராக லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
