<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>வித்தியா Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/%e0%ae%b5%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/வித்தியா/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Mon, 06 Apr 2026 04:37:41 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>வித்தியா Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/வித்தியா/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>புங்குடுத்தீவு மாணவி வித்தியா கொலை குற்றவாளி பெண் வைத்தியரிடம் அத்துமீறல்</title>
		<link>https://oruvan.com/punkudutivu-student-vidhyas-murder-accused-of-assaulting-female-doctor/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 06 Apr 2026 04:37:41 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[புங்குடுத்தீவு வித்தியா]]></category>
		<category><![CDATA[வித்தியா]]></category>
		<category><![CDATA[வித்தியா படுகொலை]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=48013</guid>

					<description><![CDATA[<p>யாழ்ப்பாணம் &#8211; புங்குடுத்தீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளில் ஒருவர் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்த முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கண்டி பல்லேகலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குறித்த நபர் சிறையில் பணியில் இருந்த பெண் வைத்தியர் ஒருவரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்த முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது. சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் கைதி, வைத்தியரை பாலியல் வன்புணர்வு செய்ய முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது பெண் வைத்தியர் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/punkudutivu-student-vidhyas-murder-accused-of-assaulting-female-doctor/">புங்குடுத்தீவு மாணவி வித்தியா கொலை குற்றவாளி பெண் வைத்தியரிடம் அத்துமீறல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>யாழ்ப்பாணம் &#8211; புங்குடுத்தீவு மாணவி வித்தியா கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள குற்றவாளிகளில் ஒருவர் பெண் வைத்தியர் ஒருவர் பாலியல் ரீதியாக துன்புறுத்த முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>கண்டி பல்லேகலை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள குறித்த நபர் சிறையில் பணியில் இருந்த பெண் வைத்தியர் ஒருவரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்த முயன்றதாகக் குற்றம் சாட்டப்பட்டுள்ளது.</p>
<p>சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வரும் கைதி, வைத்தியரை பாலியல் வன்புணர்வு செய்ய முயன்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இதன்போது பெண் வைத்தியர் கூச்சலிடவே சிறை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து அவரைக் காப்பாற்றியதாக பொலிஸார் தெரிவித்துள்ளர்.</p>
<p>சம்பவம் தொடர்பில் பல்லேகலை பொலிஸார் விசாாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p>
<p>2015ஆம் ஆண்டு மே 13ஆம் திகதி புங்குடுத்தீவு மாணவி வித்தியா கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உட்படுத்தி படுகொலை செய்யப்பட்டிருந்தார்.</p>
<p>இந்த சம்பவம் தொடர்பில் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளை அடுத்து 2017ஆம் ஆண்டு செப்டம்பரில் ஏழு நபர்களுக்கு யாழ்ப்பாண உயர் நீதிமன்ற அமர்வு மரண தண்டனை விதித்தது.</p>
<p>வித்திய படுகொலை சம்பவத்திற்கு நீதி கோரி, நாடு தழுவிய போராட்டங்களும் இடம்பெற்றிருந்தன.</p>
<p>2015 மே 15 அன்று நடைபெற்ற வித்யாவின் இறுதிச் சடங்கில், உள்ளூர் அரசியல்வாதிகள் உட்பட பெருந்திரளான மக்கள் கலந்துகொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/punkudutivu-student-vidhyas-murder-accused-of-assaulting-female-doctor/">புங்குடுத்தீவு மாணவி வித்தியா கொலை குற்றவாளி பெண் வைத்தியரிடம் அத்துமீறல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>வித்தியா கொலை வழக்கு &#8211; விரைவில் தீர்ப்பு</title>
		<link>https://oruvan.com/vidya-murder-case-verdict-soon/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Thu, 06 Nov 2025 10:05:26 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Colombo]]></category>
		<category><![CDATA[Court]]></category>
		<category><![CDATA[vithya]]></category>
		<category><![CDATA[ஒருவன்]]></category>
		<category><![CDATA[ஒருவன் செய்திகள்]]></category>
		<category><![CDATA[புங்குடுதீவு]]></category>
		<category><![CDATA[புங்குடுதீவு வித்தியா]]></category>
		<category><![CDATA[வித்தியா]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=37519</guid>

					<description><![CDATA[<p>புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கொலை செய்யப்பட்டமை தொடர்பில் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை முடிவுக்கு வந்துள்ளது. இந்நிலையில், குறித்த மனு மீதான தீர்ப்பு விரைவில் அறிவிக்கப்படும் என உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் இன்று அறிவித்துள்ளது. பிரதம நீதியரசர் ப்ரீதி பத்மன் சூரசேன தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது. வித்தியா கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட சுவிஸ் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/vidya-murder-case-verdict-soon/">வித்தியா கொலை வழக்கு &#8211; விரைவில் தீர்ப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா கொலை செய்யப்பட்டமை தொடர்பில் தண்டனை விதிக்கப்பட்ட குற்றவாளிகளால் தாக்கல் செய்யப்பட்ட மேன்முறையீட்டு மனு மீதான விசாரணை முடிவுக்கு வந்துள்ளது.</p>
<p>இந்நிலையில், குறித்த மனு மீதான தீர்ப்பு விரைவில் அறிவிக்கப்படும் என உயர்நீதிமன்ற நீதியரசர்கள் குழாம் இன்று அறிவித்துள்ளது.</p>
<p>பிரதம நீதியரசர் ப்ரீதி பத்மன் சூரசேன தலைமையிலான ஐவரடங்கிய நீதியரசர்கள் குழாம் முன்னிலையில் குறித்த மனு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட போதே இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.</p>
<p>வித்தியா கொலை வழக்கில் தண்டனை விதிக்கப்பட்ட சுவிஸ் குமார் உள்ளிட்ட குற்றவாளிகளால் குறித்த மேன்முறையீட்டு மனுத் தாக்கல் செய்யப்பட்டது.</p>
<p>முன்னதாக யாழ்ப்பாணம் புங்குடுதீவு பகுதியில் மாணவி சிவலோகநாதன் வித்தியா, 2015 ஆம் ஆண்டு மே மாதம் கூட்டுப் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்டார்.</p>
<p>இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டதுடன், வழக்கும் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டது.</p>
<p>இந்த வழக்கில், குற்றவாளிகளாகக் கண்டறியப்பட்ட ஏழு பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.</p>
<p>யாழ்ப்பாணம் மேல் நீதிமன்றத்தில் நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் உள்ளிட்ட மூவரடங்கிய நீதிபதிகளால் பிரதிவாதிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/vidya-murder-case-verdict-soon/">வித்தியா கொலை வழக்கு &#8211; விரைவில் தீர்ப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
