<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>வட மாகாணத்தில் Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/%e0%ae%b5%e0%ae%9f-%e0%ae%ae%e0%ae%be%e0%ae%95%e0%ae%be%e0%ae%a3%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/வட-மாகாணத்தில்/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Thu, 08 May 2025 13:01:22 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>வட மாகாணத்தில் Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/வட-மாகாணத்தில்/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>வடக்கில் மேலும் காணிகளை கையகப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் &#8216;மீளப்பெற&#8217; வேண்டும்</title>
		<link>https://oruvan.com/government-must-withdraw-gazette-notification-to-acquire-more-land-in-the-north/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Thu, 08 May 2025 13:25:47 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[வட மாகாணத்தில்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=19738</guid>

					<description><![CDATA[<p>வட மாகாணத்தில் சுமார் ஆறாயிரம் ஏக்கர் கரையோர காணிகளை மூன்று மாத காலத்திற்குள் விரைவாகக் கையகப்படுத்தும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முயற்சிக்கு நான்கு மாவட்ட மக்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர். மார்ச் 28, 2025 அன்று இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல் இல. 2430 இற்கு அமைய அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள 5,941 ஏக்கர்களின் உரிமை மூன்று மாதங்களுக்குள் உறுதிப்படுத்தப்படாவிட்டால், அவை அரசால் கையகப்படுத்தப்படும் என காணி உரித்து நிர்ணயத் திணைக்களம் எச்சரித்துள்ளது. [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/government-must-withdraw-gazette-notification-to-acquire-more-land-in-the-north/">வடக்கில் மேலும் காணிகளை கையகப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் &#8216;மீளப்பெற&#8217; வேண்டும்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>வட மாகாணத்தில் சுமார் ஆறாயிரம் ஏக்கர் கரையோர காணிகளை மூன்று மாத காலத்திற்குள் விரைவாகக் கையகப்படுத்தும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முயற்சிக்கு நான்கு மாவட்ட மக்கள் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.</p>
<p>மார்ச் 28, 2025 அன்று இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசு வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தல் இல. 2430 இற்கு அமைய அட்டவணையில் பட்டியலிடப்பட்டுள்ள 5,941 ஏக்கர்களின் உரிமை மூன்று மாதங்களுக்குள் உறுதிப்படுத்தப்படாவிட்டால், அவை அரசால் கையகப்படுத்தப்படும் என காணி உரித்து நிர்ணயத் திணைக்களம் எச்சரித்துள்ளது.</p>
<p>அரசாங்கம் தங்கள் காணிகளை கைப்பற்ற முயற்சிக்கிறது என்ற அச்சத்தில், அந்தப் பகுதியில் வசிக்கும் தமிழ் மக்கள் சட்டத்தரணிகள் உதவியை நாடியுள்ளதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.</p>
<p>“இங்கு கீழே காணப்படும் அட்டவணையில் விபரிக்கப்பட்டுள்ள காணிகளின் ஏதாவது ஒரு பகுதிக்கு, ஏதேனும் உரிமைகோரல் அல்லது ஏதேனும் பங்கு அல்லது நலவுரித்து எவருக்காவது உண்டெனில் அதனை 2025 ஆம் வருடம் மாச்சு 28 ஆந் திகதி முதல் மூன்று மாதங்களுக்குள் கீழே ஒப்பமிட்டுள்ள எனக்கு அனுப்பாவிடின், மேற்குறித்த கட்டளைச் சட்டத்தின் 5 (1) ஆம் பிரிவின் கீழ் அவ்வாறான காணிகள் அரசுக்குரிய காணிகளாகப் பிரகடனப்படுத்தப்படும் எனவும், அரசுக்குரிய காணிகளாகக் கருத்திற்கொள்ளப்பட்டு அவைபற்றி நடவடிக்கை எடுக்கப்படுமெனவும் இச்சட்டத்தின் 4 ஆம் பிரிவின் கீழ் இத்தால் அறிவித்தல் தரப்படுகின்றது.” வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>
<p>இதில் குறிப்பிடப்பட்டுள்ளமைக்கு அமைய, வவுனியாவைத் தவிர்த்து, வடக்கு மாகாணத்தின் நான்கு மாவட்டங்களிலும் மொத்தமாக 5,941 ஏக்கர் காணி உள்ளடக்கப்பட்டுள்ளது. இதற்கமைய முல்லைத்தீவு மாவட்டத்தில் 1,703, யாழ்ப்பாண மாவட்டத்தில் 3,669, கிளிநொச்சி மாவட்டத்தில் 515 மற்றும் மன்னார் மாவட்டத்தில் 54 ஏக்கர் காணி உள்ளடங்கும்.</p>
<p><img fetchpriority="high" decoding="async" class="alignnone size-full wp-image-19740" src="https://oruvan.com/wp-content/uploads/2025/05/d0786d16-c073-4fd8-8bc3-12aca4f989d7.jpeg" alt="" width="1280" height="960" srcset="https://oruvan.com/wp-content/uploads/2025/05/d0786d16-c073-4fd8-8bc3-12aca4f989d7.jpeg 1280w, https://oruvan.com/wp-content/uploads/2025/05/d0786d16-c073-4fd8-8bc3-12aca4f989d7-400x300.jpeg 400w, https://oruvan.com/wp-content/uploads/2025/05/d0786d16-c073-4fd8-8bc3-12aca4f989d7-650x488.jpeg 650w, https://oruvan.com/wp-content/uploads/2025/05/d0786d16-c073-4fd8-8bc3-12aca4f989d7-250x188.jpeg 250w, https://oruvan.com/wp-content/uploads/2025/05/d0786d16-c073-4fd8-8bc3-12aca4f989d7-768x576.jpeg 768w, https://oruvan.com/wp-content/uploads/2025/05/d0786d16-c073-4fd8-8bc3-12aca4f989d7-150x113.jpeg 150w, https://oruvan.com/wp-content/uploads/2025/05/d0786d16-c073-4fd8-8bc3-12aca4f989d7-50x38.jpeg 50w, https://oruvan.com/wp-content/uploads/2025/05/d0786d16-c073-4fd8-8bc3-12aca4f989d7-100x75.jpeg 100w, https://oruvan.com/wp-content/uploads/2025/05/d0786d16-c073-4fd8-8bc3-12aca4f989d7-200x150.jpeg 200w, https://oruvan.com/wp-content/uploads/2025/05/d0786d16-c073-4fd8-8bc3-12aca4f989d7-300x225.jpeg 300w, https://oruvan.com/wp-content/uploads/2025/05/d0786d16-c073-4fd8-8bc3-12aca4f989d7-350x263.jpeg 350w, https://oruvan.com/wp-content/uploads/2025/05/d0786d16-c073-4fd8-8bc3-12aca4f989d7-450x338.jpeg 450w, https://oruvan.com/wp-content/uploads/2025/05/d0786d16-c073-4fd8-8bc3-12aca4f989d7-500x375.jpeg 500w, https://oruvan.com/wp-content/uploads/2025/05/d0786d16-c073-4fd8-8bc3-12aca4f989d7-550x413.jpeg 550w, https://oruvan.com/wp-content/uploads/2025/05/d0786d16-c073-4fd8-8bc3-12aca4f989d7-800x600.jpeg 800w, https://oruvan.com/wp-content/uploads/2025/05/d0786d16-c073-4fd8-8bc3-12aca4f989d7-1200x900.jpeg 1200w" sizes="(max-width: 1280px) 100vw, 1280px" /></p>
<p>மக்கள் தங்கள் காணிகளை உரிமை கோருவதற்கு மூன்று மாதங்கள் மாத்திரமே அவகாசம் வழங்கப்பட்டுள்ளமைக்கு ஏற்கனவே ஆட்சேபனைகளை எழுப்பியுள்ள சட்டத்தரணிகள், சர்ச்சைக்குரிய வர்த்தமானி அறிவிப்பை இரத்து செய்யுமாறு அரசாங்கத்தை வலியுறுத்துகின்றனர்.</p>
<p>நல்லாட்சி அரசாங்கத்தின் போது மனித உரிமைகள் ஆணையாளராக இருந்த ஒருவர், தனியார் காணிகளை கையகப்படுத்துவதற்கு காணி நிர்ணயக் கட்டளைச் சடடத்தை பயன்படுத்துவதை ஒரு இரகசிய மற்றும் தந்திரமான நடவடிக்கை என விவரித்துள்ளார்.</p>
<p>&#8220;பொது நோக்கங்களுக்காக தனியார் காணிகளை கையகப்படுத்த காணி நிர்ணயக் கட்டளைச் சட்டம் பயன்படுத்தப்பட்டால், அது பொது நோக்கங்களுக்காகவா என்பதை அரசாங்கம் நியாயப்படுத்த வேண்டும். மறுபுறம், இது தனியார் காணிகளை கையகப்படுத்துவதற்கு அரசு மிகவும் வசதியாகப் பயன்படுத்தும் ஒரு மறைக்கப்பட்ட மற்றும் தந்திரமான முறையாகும்.&#8221; என சட்டத்தரணி அம்பிகா சற்குணநாதன் தனது எக்ஸ் (X) கணக்கில் பதிவொன்றை இட்டுள்ளார்.</p>
<p>நில உரிமையை கோருவதற்கு மக்களுக்கு மூன்று மாதங்கள் மாத்திரமே அவகாசம் அளிப்பது நியாயமா என அவர் கேள்வி எழுப்பியுள்ளார், மேலும் அந்த நேரம் போதுமானதாக இல்லாததற்கான காரணங்களையும் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>&#8220;நில உரிமை கோருவதற்கு மூன்று மாத கால நீட்டிப்பு போதுமானதாக இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏனென்றால், பலருக்கு இது குறித்து தெரியாது. சில சந்தர்ப்பங்களில், உரிமையாளர் இறந்திருக்கலாம் மற்றும் உறவினர்கள் வெளிநாடு சென்றிருக்கலாம். போர் காரணமாக பல தசாப்தங்களாக முறையான ஆவணங்கள் இல்லாமல் காணியில் வாழும் மக்களின் விடயங்களும் உள்ளன.&#8221;</p>
<p>காணிப் பிரச்சினைகளைத் தீர்க்க ஒரு காணி ஆணைக்குழுவை நியமிக்க வேண்டியதன் அவசியத்தை அவர் பரிந்துரைக்கிறார், மேலும் தமிழீழ விடுதலைப் புலிகள் (LTTE) இந்த பிரதேசங்களை கட்டுப்படுப்பாட்டில் வைத்திருந்தபோது காணி உரிமை தொடர்பாக வழங்கப்பட்ட ஆவணங்கள் இருப்பதை மேலும் நமக்கு நினைவூட்டுகிறார்.</p>
<p>&#8220;இந்த மாகாணங்கள் புலிகளின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்தபோது, அவர்கள் காணி உறுதிகளை வழங்கினர். அந்த காணிகளில் பல தசாப்தங்களாக வசித்து வரும் தாங்கள்தான் அவற்றின் உண்மையான உரிமையாளர்கள் என நம்புகிறார்கள். தேவைப்படுவது என்னவென்றால், காணிகளை வரைபடமாக்கி, இந்தப் பிரச்சினைகளைத் தீர்க்க ஒரு காணி ஆணைக்குழுவை நியமிப்பதாகும். இங்கு பிரச்சினைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக அவற்றை மேலும் சிக்கலாக்கும் விடயம் இடம்பெறுகிறது.&#8221;</p>
<p>யாழ்ப்பாணம், வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பகுதியில், மே 2, 2025 அன்று, ஜனாதிபதி சட்டத்தரணி எம். ஏ. சுமந்திரன் தலைமையிலான சட்டத்தரணிகள் குழுவைச் சந்தித்த அப்பகுதி தமிழ் மக்கள், மார்ச் 28, 2025 வெள்ளிக்கிழமை வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கு அமைய தங்கள் காணிகளை இழக்கும் அபாயம் உள்ளதா என்பதை உறுதிப்படுத்துமாறு கேட்டுக்கொண்டதாக பிரதேச ஊடகவியலாளர்கள் தெரிவிக்கின்றனர்.</p>
<p><img decoding="async" class="alignnone size-full wp-image-19741" src="https://oruvan.com/wp-content/uploads/2025/05/33f505fb-99cd-49aa-9b86-9e1c4ccdfe7a.jpeg" alt="" width="1280" height="960" srcset="https://oruvan.com/wp-content/uploads/2025/05/33f505fb-99cd-49aa-9b86-9e1c4ccdfe7a.jpeg 1280w, https://oruvan.com/wp-content/uploads/2025/05/33f505fb-99cd-49aa-9b86-9e1c4ccdfe7a-400x300.jpeg 400w, https://oruvan.com/wp-content/uploads/2025/05/33f505fb-99cd-49aa-9b86-9e1c4ccdfe7a-650x488.jpeg 650w, https://oruvan.com/wp-content/uploads/2025/05/33f505fb-99cd-49aa-9b86-9e1c4ccdfe7a-250x188.jpeg 250w, https://oruvan.com/wp-content/uploads/2025/05/33f505fb-99cd-49aa-9b86-9e1c4ccdfe7a-768x576.jpeg 768w, https://oruvan.com/wp-content/uploads/2025/05/33f505fb-99cd-49aa-9b86-9e1c4ccdfe7a-150x113.jpeg 150w, https://oruvan.com/wp-content/uploads/2025/05/33f505fb-99cd-49aa-9b86-9e1c4ccdfe7a-50x38.jpeg 50w, https://oruvan.com/wp-content/uploads/2025/05/33f505fb-99cd-49aa-9b86-9e1c4ccdfe7a-100x75.jpeg 100w, https://oruvan.com/wp-content/uploads/2025/05/33f505fb-99cd-49aa-9b86-9e1c4ccdfe7a-200x150.jpeg 200w, https://oruvan.com/wp-content/uploads/2025/05/33f505fb-99cd-49aa-9b86-9e1c4ccdfe7a-300x225.jpeg 300w, https://oruvan.com/wp-content/uploads/2025/05/33f505fb-99cd-49aa-9b86-9e1c4ccdfe7a-350x263.jpeg 350w, https://oruvan.com/wp-content/uploads/2025/05/33f505fb-99cd-49aa-9b86-9e1c4ccdfe7a-450x338.jpeg 450w, https://oruvan.com/wp-content/uploads/2025/05/33f505fb-99cd-49aa-9b86-9e1c4ccdfe7a-500x375.jpeg 500w, https://oruvan.com/wp-content/uploads/2025/05/33f505fb-99cd-49aa-9b86-9e1c4ccdfe7a-550x413.jpeg 550w, https://oruvan.com/wp-content/uploads/2025/05/33f505fb-99cd-49aa-9b86-9e1c4ccdfe7a-800x600.jpeg 800w, https://oruvan.com/wp-content/uploads/2025/05/33f505fb-99cd-49aa-9b86-9e1c4ccdfe7a-1200x900.jpeg 1200w" sizes="(max-width: 1280px) 100vw, 1280px" /></p>
<p>அவர்களில் சிலர் தங்கள் காணி உறுதிப்பத்திரங்கள், அனுமதிப்பத்திரங்கள் மற்றும் ஆவணங்களுடன் சட்டத்தரணிகளிடம் வந்ததாக அவர்கள் மேலும் கூறுகின்றனர்.</p>
<p>வர்த்தமானி அறிவிப்பு குறித்து பொதுமக்களுக்கு விளக்கமளித்த பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளரும், ஜனாதிபதி சட்டத்தரணியுமான எம்.ஏ. சுமந்திரன், அரசாங்கம் கையகப்படுத்த முயற்சிக்கும் காணிகளின் உரிமையாளர்களில் பலர் ஏற்கனவே வெளிநாடுகளில் புகலிடம் கோரியவர்களாக இருக்கலாம் என சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>&#8220;இந்தியாவில் பலர் அகதிகளாக உள்ளனர். அங்கு சுமார் ஒன்றரை லட்சம் பேர் இருந்தனர். ஆனால் ஒரு சிலர் இலங்கைக்குத் திரும்பிவிட்டனர். சர்வதேச சட்டத்தின் கீழ் அவர்கள் அகதிகளாகக் கருதப்படுகிறார்கள். எனவே, சர்வதேச சட்டத்தின்படி, வேறொரு நாட்டில் அகதிகளாக இருக்கும் மக்களின் காணிகளை அவர்கள் கைவிட்டுவிட்டார்கள் என்ற அடிப்படையில் கையகப்படுத்துவது பொருத்தமற்றது.&#8221;</p>
<p>மே 6 ஆம் தேதி நடைபெற உள்ள உள்ளூராட்சித் தேர்தலை இலக்காகக் கொண்டு ஏப்ரல் 26 ஆம் திகதி கிளிநொச்சியில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, போரின் போது கையகப்படுத்தப்பட்ட மக்களின் காணிகளை &#8216;முறையான ஆய்வுக்குப் பின்னர்&#8217; வனப் பாதுகாப்புத் துறை திருப்பித் தரும் என்று கூறியிருந்தார்.</p>
<p>&#8220;பாரம்பரியமாக பயிரிடப்பட்ட சில நிலங்கள், கூகிள் வரைபடங்களைப் பார்த்து வனப் பாதுகாப்புத் துறையால் கையகப்படுத்தப்பட்டன. அவை இந்தப் பகுதியில் பயிரிடப்பட்ட நிலங்கள். மக்களின் நிலங்கள். முறையான ஆய்வுக்குப் பிறகு அவற்றைத் திருப்பித் தர நாங்கள் பணியாற்றி வருகிறோம்.&#8221;</p>
<p>அரசாங்கம் காணிகளை விடுவிப்பதாக உறுதியளித்து, அதனை மீண்டும் கையகப்படுத்தும் முயற்சிகளைக் கைவிட வேண்டும் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் சுட்டிக்காட்டுகிறார்.</p>
<p>&#8220;ஒருபுறம், விடுவிக்கப்படும் எனக் கூறி அனைத்து காணிகளையும் கையகப்படுத்த முயற்சிப்பது ஒரு மோசமான விடயம். அரசாங்கம் அதைச் செய்வதை நிறுத்த வேண்டும்.&#8221;</p>
<p>ஜனாதிபதிக்கு கடிதம்</p>
<p>மே 3, 2025 அன்று ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவிற்கு, இந்த விடயம் குறித்து கடிதம் ஒன்றை அனுப்பியுள்ள இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் செயலாளர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன், வடக்கில் காணி கையகப்படுத்த தற்போதைய அரசாங்கத்தால் பயன்படுத்தப்படும் இந்தச் சட்டம் மக்களின் காணிகளை கைப்பற்ற பிரித்தானிய அரசாங்கத்தால் இயற்றப்பட்டது எனக் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>“இந்தக் கட்டளைச் சட்டம் பிரித்தானிய காலனித்துவ ஆட்சியாளர்களால் எமது மக்கள் நூற்றாண்டுகளாக பாவித்து வந்த, ஆனால் தெளிவான உரித்தாவணங்கள் இல்லாத காணிகளை பறிப்பதற்காக உருவாக்கப்பட்டது என்பதை நீங்கள் அறிவீர்கள்.”</p>
<p>கடந்த அரை நூற்றாண்டிற்கு மேலாக பலமுறை இடம்பெயர்ந்த மக்கள் இன்னும் அவர்களின் காணிகளில் குடியேறவில்லை என ஜனாதிபதியிடம் தெரிவித்த முன்னாள் தமிழ் மக்கள் பிரதிநிதி, தற்போதைய சூழ்நிலையில் இந்தச் சட்டத்தைப் பயன்படுத்துவது ஏன் பொருத்தமானதல்ல என்பதற்கான பிற காரணங்களுடன் கூடுதலாக, நான்கு காரணங்களின் கீழ் விளக்கியுள்ளார்.</p>
<p>1. பல தொடர்ச்சியான இடம்பெயர்வுகள் சாதாரண வாழ்வை குழப்பியுள்ளதோடு, இன்னமும் அது திருத்தியமைக்கப்படவில்லை.</p>
<p>2. ⁠கட்டாய இடப்பெயர்வுகளாலும் இந்தப் பிரதேசங்களை அழித்தொழித்த சுனாமி பேரலையினாலும் மக்கள் தமது உறுதிகளையும் மற்றைய ஆவணங்களையும் இழந்துள்ளனர்.</p>
<p>3. ⁠இந்தக் காணிகளின் உரித்தாளர்கள் பலருக்கு பல வருடங்களுக்கு முன்னரே மரித்த முன் உரித்தாளர்களிடம் இருந்து முறையாக உரிமை மாற்றம் செய்யப்படவில்லை.</p>
<p>4. ⁠பல இலட்சக்கணக்கான மக்கள் போர்ச் சூழலில் இருந்து தப்பி வெளி நாடுகளில் அகதிகளாக முறையாக ஏற்றுக்கொள்ளப்பட்டு வாழ்ந்து வருகின்றனர்.</p>
<p>மேற்கண்ட சூழ்நிலைகளில், தொடர்புடைய வர்த்தமானி அறிவிப்பில் கோரப்பட்டுள்ளமைக்கு அமைய இந்த காணிகளுக்கு உரிமை கோருவது இந்த மக்களுக்கு மிகவும் கடினம் எனவும், ஜனாதிபதி அனுர குமார திஸாநாயக்கவுக்கு மே மாதம் 3ஆம் திகதி அனுப்பியுள்ள கடிதத்தில், எம்.ஏ. சுமந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>நில அளவைத் திணைக்களத்தின் உதவியுடன் வடக்கு மற்றும் கிழக்கில் வலுக்கட்டாயமாக ஆக்கிரமிக்கப்பட்ட காணிகளை சட்டப்பூர்வமாக உரிமையாக்க இராணுவம் உள்ளிட்ட பாதுகாப்புத் தரப்பினர் மற்றும் அரசு நிறுவனங்கள் மேற்கொண்ட பல முந்தைய முயற்சிகள், தமிழ் மக்களின் போராட்டங்களால் முறியடிக்கப்பட்டன.</p>
<p>The post <a href="https://oruvan.com/government-must-withdraw-gazette-notification-to-acquire-more-land-in-the-north/">வடக்கில் மேலும் காணிகளை கையகப்படுத்தும் வர்த்தமானி அறிவித்தலை அரசாங்கம் &#8216;மீளப்பெற&#8217; வேண்டும்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
