<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>ரோஹிங்கியா Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/%e0%ae%b0%e0%af%8b%e0%ae%b9%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/ரோஹிங்கியா/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Fri, 10 Jan 2025 13:27:37 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>ரோஹிங்கியா Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/ரோஹிங்கியா/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>ரோஹிங்கியா அகதிகளை மியன்மாருக்கு நாடு கடத்துவது அரசாங்கத்தின் தீர்மானம் இல்லையா?</title>
		<link>https://oruvan.com/isnt-it-the-governments-decision-to-deport-rohingya-refugees-to-myanmar/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Fri, 10 Jan 2025 13:27:37 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[ரோஹிங்கியா]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=6405</guid>

					<description><![CDATA[<p>போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மீனவர்களால் மீட்கப்பட்டு அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் முல்லைத்தீவு விமானப்படை தளத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மியன்மாரில் இருந்து தப்பி வந்த ரோஹிங்கியா போர் அனாதைகள் தொடர்பாக அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளை நாட்டுக்கு வெளிப்படுத்தாமல் இருப்பதில் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ பேச்சாளர் கவனமாக செயற்படுகின்றார். முல்லைத்தீவு விமானப்படைத் தளத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரோஹிங்கியா அகதிகளை அந்நாட்டுக்கே திருப்பி அனுப்பவுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ள நிலையில், அது தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானத்தை இப்போது கூற [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/isnt-it-the-governments-decision-to-deport-rohingya-refugees-to-myanmar/">ரோஹிங்கியா அகதிகளை மியன்மாருக்கு நாடு கடத்துவது அரசாங்கத்தின் தீர்மானம் இல்லையா?</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>போரினால் பாதிக்கப்பட்ட தமிழ் மீனவர்களால் மீட்கப்பட்டு அரசாங்கத்திடம் ஒப்படைக்கப்பட்ட நிலையில் முல்லைத்தீவு விமானப்படை தளத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மியன்மாரில் இருந்து தப்பி வந்த ரோஹிங்கியா போர் அனாதைகள் தொடர்பாக அரசாங்கம் எடுத்த நடவடிக்கைகளை நாட்டுக்கு வெளிப்படுத்தாமல் இருப்பதில் அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ பேச்சாளர் கவனமாக செயற்படுகின்றார்.</p>
<p>முல்லைத்தீவு விமானப்படைத் தளத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரோஹிங்கியா அகதிகளை அந்நாட்டுக்கே திருப்பி அனுப்பவுள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ள நிலையில், அது தொடர்பான அரசாங்கத்தின் தீர்மானத்தை இப்போது கூற முடியாது என அமைச்சரவைப் பேச்சாளர் டொக்டர் நலிந்த ஜயதிஸ்ஸ இந்த வாரம் தெரிவித்திருந்தார்.</p>
<p>அவர்களை மியன்மாருக்கே திருப்பி அனுப்புவதே அரசாங்கத்தின் திட்டம் என பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் ஆனந்த விஜேபால ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு தெரிவித்திருந்ததோடு, ரோஹிங்கியாக்களின் பெயர் பட்டியல் அந்த அரசாங்கத்திடம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்திருந்தார்.</p>
<p>பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபாலவின் இந்த கருத்துக்கு சிவில் சமூக ஆர்வலர்கள் மற்றும் அரசியல்வாதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.</p>
<p>மூன்று வாரங்களுக்கு முன்னர் இலங்கைக்கு வந்த 115 அகதிகள் தற்போது முல்லைத்தீவு விமானப்படை தளத்தில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். அவர்களில் படகை செலுத்திய குற்றச்சாட்டின் அடிப்படையில் 12 பேர் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தால் விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில், 2025 ஜனவரி 7ஆம் திகதி புதன்கிழமை விடுவிக்கப்பட்டனர்.</p>
<p>இவர்களில் நாற்பதுக்கும் மேற்பட்ட  உள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. பாதுகாப்பான நாட்டில் அரசியல் தஞ்சம் பெறுவதே அவர்களின் எதிர்ப்பார்ப்பாகும்.</p>
<p>கடந்த செவ்வாய்க்கிழமை (ஜனவரி 7) அரசாங்க தகவல் திணைக்களத்தில் இடம்பெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பில், ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அமைச்சரவைப் பேச்சாளர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ, ரோஹிங்கியா யுத்த அனாதைகளை நாடு கடத்துவது தொடர்பில் அரசாங்கத்தின் தீர்மானத்தை இப்போதைக்கு அறிவிக்க முடியாது என தெரிவித்தார்.</p>
<p>“எடுக்கப்பட்ட தீர்மானம் என்னவென்பது குறித்து இந்த நேரத்தில் குறிப்பிட முடியாது. அனைத்து காரணங்களையும் பரிசீலித்துதான் நாம் செயற்படுகின்றோம். மனிதாபிமானம், தேசிய பாதுகாப்பு, வலையத்தின் பாதுகாப்பு என்ற அனைத்து விடயங்கள் தொடர்பில் நாம் அவதானம் செலுத்துகின்றோம்.”</p>
<p>தற்போதைய ஜனாதிபதியின் ஆட்சிக்காலத்தில் நாட்டிற்குள் பிரவேசித்த முதலாவது அகதிகள் தொடர்பில் எதிர்காலத்தில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பில் பொது பாதுகாப்புக்கு பொறுப்பான அமைச்சரின் கருத்துக்கு முரணான கருத்தை தெரிவித்த அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ, பாதுகாப்பு மற்றும் வெளிவிவகார அமைச்சுகள் இணைந்து செயல்படுவதாக மேலும் தெரிவித்திருந்தார்.</p>
<p>“இந்த குடியேற்றவாசிகள் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சு, வெளிவிவகார அமைச்சு இணைந்து செயற்படுகின்றன. உங்களுக்குத் தெரியும் மிகவும் அவதானமாக கையாள வேண்டிய விடயம் இது. அந்த மக்களின் மனித உரிமைகள், மனிதாபிமானத்தை பாதுகாப்பதோடு இந்த வலையத்தின் பாதுகாப்புத் தொடர்பிலும் அவதானம் செலுத்திதான் இந்த பிரச்சினையைில் தலையீடு செய்கின்றோம். அனைத்து விடயங்களையும் பரிசீலித்து பார்த்துதான் செயற்பட வேண்டும்.”</p>
<p>ரோஹிங்கியா அகதிகள் தொடர்பில் ஜனாதிபதி அவதானம் செலுத்தி வருவதாக குறிப்பிட்ட அமைச்சர், பொது பாதுகாப்பு அமைச்சு குறித்து எவ்வித கருத்தையும் வெளியிடவில்லை.</p>
<p>“இந்த விடயம் தொடர்பில் அரசு பரந்த அளவில் அவதானம் செலுத்தி, இந்த அமைச்சரவை கூட்டத்தில் அல்ல முன்னைய அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடினோம் என்பதை உங்களுக்குத் தெரிவிக்க முடியும். இதற்கமைய வெளிவிவகார அமைச்சு,  பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியும் இதுத் தொடர்பில் அவதானம் செலுத்தி செயற்படுகின்றனர்.”</p>
<p>ரோஹிங்கியாக்களை வெளியேற்ற வேண்டாம் என நாடாளுமன்றத்தில் கேட்டுக் கொண்ட எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, “இவ்வாறான மனிதாபிமானமற்ற செயலில் ஈடுபட வேண்டாம்” எனவும் வேண்டுகோள் விடுத்திருந்தார்.</p>
<p>இதேவேளை, முல்லைத்தீவு விமானப்படை தளத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ரோஹிங்கியா அகதிகளை அவர்களின் நாட்டுக்கு அனுப்ப வேண்டாம் என எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் கோரிக்கை விடுத்திருந்தார்.</p>
<p>மேலும், அவர்களை மியன்மாருக்கு அனுப்புவது, குறிப்பிட்ட நாட்டில் ஆபத்தில் இருக்கும் மக்களை விருப்பமின்றி திருப்பி அனுப்புவதைத் தடுக்கும் (Non-Refoulement) சர்வதேச சட்டக் கோட்பாட்டை மீறும் செயலாகும் என எதிர்க்கட்சி உறுப்பினர் ஜனாதிபதிக்கு அறிவித்திருந்தார்.</p>
<p>தற்போதைய ஜனாதிபதியின் ஆட்சிக்காலத்தில் நாட்டிற்குள் பிரவேசித்த முதலாவது அகதிகள் குழுவை வலிந்து வெளியேற்றுவது &#8216;யமனின் வாய்க்கு&#8217; அனுப்புவது போன்றது என சுட்டிக்காட்டியுள்ள எதிர்க்கட்சி உறுப்பினர், உலக நாடுகளுக்கு முன்பாக நாட்டின் நற்பெயருக்கு ஏற்படக்கூடிய கதி குறித்தும்  எச்சரித்திருந்தார்.</p>
<p>மியன்மாருக்கு ரோஹிங்கியாக்களை திருப்பி அனுப்புவது அவர்களின் உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்துவது மாத்திரமன்றி, மனிதாபிமான கொள்கைகள் மற்றும் 1951ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகள் மாநாடு உட்பட சர்வதேச சட்டக் கடமைகளை மீறுவதாகும் என சோனக இஸ்லாமிய கலாச்சார நிலையத்தின் தலைவர் ஒமர் கமில் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்திற்கு அனுப்பிய கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p>
<div class="yj6qo"></div>
<p>The post <a href="https://oruvan.com/isnt-it-the-governments-decision-to-deport-rohingya-refugees-to-myanmar/">ரோஹிங்கியா அகதிகளை மியன்மாருக்கு நாடு கடத்துவது அரசாங்கத்தின் தீர்மானம் இல்லையா?</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சட்ட நடைமுறைகளை பின்பற்றி மியன்மார் அகதிகள் நாடு கடத்தப்படுவார்கள் &#8211; அரசாங்கம்</title>
		<link>https://oruvan.com/myanmar-refugees-will-be-deported-following-legal-procedures-government/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Fri, 03 Jan 2025 03:32:55 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[ananda wijepala]]></category>
		<category><![CDATA[Myanmar]]></category>
		<category><![CDATA[Rohingya refugees]]></category>
		<category><![CDATA[மியான்மர்]]></category>
		<category><![CDATA[மியான்மர் அரசாங்கம்]]></category>
		<category><![CDATA[ரோஹிங்கியா]]></category>
		<category><![CDATA[ரோஹிங்கியா அகதிகள்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=5118</guid>

					<description><![CDATA[<p>சட்ட நடைமுறைகளை பின்பற்றி சமீபத்தில் முல்லைத்தீவுக்கு வந்த ரோஹிங்கியா அகதிகளை நாடு கடத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார். கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். “வெளியுறவு அமைச்சகம் மியான்மர் அரசாங்கத்துடன் தொடர்பில் உள்ளது, இலங்கை வந்துள்ள அகதிகளின் பெயர் பட்டியல் ஏற்கனவே அவர்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது. நாங்கள் சட்ட நடைமுறைகளைப் பின்பற்றுவோம், மியான்மர் அரசாங்கத்துடன் கலந்துரையாடல்களில் ஈடுபடுவோம், இந்த கட்டத்தில், அவர்களை [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/myanmar-refugees-will-be-deported-following-legal-procedures-government/">சட்ட நடைமுறைகளை பின்பற்றி மியன்மார் அகதிகள் நாடு கடத்தப்படுவார்கள் &#8211; அரசாங்கம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>சட்ட நடைமுறைகளை பின்பற்றி சமீபத்தில் முல்லைத்தீவுக்கு வந்த ரோஹிங்கியா அகதிகளை நாடு கடத்துவது குறித்து அரசாங்கம் பரிசீலித்து வருவதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்துள்ளார்.</p>
<p>கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>“வெளியுறவு அமைச்சகம் மியான்மர் அரசாங்கத்துடன் தொடர்பில் உள்ளது, இலங்கை வந்துள்ள அகதிகளின் பெயர் பட்டியல் ஏற்கனவே அவர்களுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டுள்ளது.</p>
<p>நாங்கள் சட்ட நடைமுறைகளைப் பின்பற்றுவோம், மியான்மர் அரசாங்கத்துடன் கலந்துரையாடல்களில் ஈடுபடுவோம், இந்த கட்டத்தில், அவர்களை நாடு கடத்துவது குறித்து பரிசீலித்து வருகிறோம்,” என்று அமைச்சர் தெரிவித்துள்ளார்.</p>
<p>எவ்வாறாயினும், முல்லைத்தீவுக்கு வந்த அகதிகள் குழு அதிகாரிகளுடனான கலந்துரையாடல்கள் முடியும் வரை அங்கேயே தடுத்து வைக்கப்படும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>டிசம்பர் 19 அன்று, ரோஹிங்கியாவைச் சேர்ந்த 115 பேரை ஏற்றிச் சென்ற பல நாள் இழுவைப்படகு முல்லைத்தீவில் உள்ள முள்ளிவாய்க்கால் கடற்கரையில் கரையொதுங்கியது.</p>
<p>இவர்கள் அனைவரும் திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டபோது, ​​12 நபர்கள் தடுப்புக்காவலில் வைக்கப்பட்டனர், மீதமுள்ள அகதிகளை மிரிஹானா குடிவரவு தடுப்பு மையத்திற்கு அனுப்ப உத்தரவிடப்பட்டது.</p>
<p>இருப்பினும், பின்னர் அவர்கள் முல்லைத்தீவில் உள்ள விமானப்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டனர், அங்கு அவர்கள் தொடர்ந்து தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.</p>
<p>முல்லைத்தீவில் உள்ள விமானப்படை முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள 103 நபர்களை இன்னும் அகதிகளாக வகைப்படுத்த முடியாது.</p>
<p>மேலும் அவர்கள் தற்போது ஒழுங்கற்ற குடியேறிகளாகக் கருதப்படுகிறார்கள் என்று பெயர் குறிப்பிடத நிலையில் பேசிய குடிவரவு மற்றும் குடியகல்வுத் துறையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.</p>
<p>இந்த நபர்களின் அடையாளங்களைச் சரிபார்க்க விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாக அந்த அதிகாரி கூறினார்.</p>
<p>“அவர்கள் தங்கள் பெயர்களை வழங்கினாலும், சிலர் அவ்வப்போது அவற்றை மாற்றுகிறார்கள், எனவே அவர்களின் அடையாளங்களை உறுதிப்படுத்த சட்ட ஆவணங்களை நாங்கள் நம்பியிருக்க வேண்டும்.</p>
<p>பொலிஸார் முழுமையான விசாரணையை நடத்தி வருகின்றனர், விசாரணை முடிந்ததும், அவர்கள் வந்ததற்கான காரணங்களை நாங்கள் மதிப்பிடுவோம். மற்ற அனைத்து விஷயங்களும் பின்னர் தீர்க்கப்படும், ”என்று அந்த அதிகாரி விளக்கினார்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/myanmar-refugees-will-be-deported-following-legal-procedures-government/">சட்ட நடைமுறைகளை பின்பற்றி மியன்மார் அகதிகள் நாடு கடத்தப்படுவார்கள் &#8211; அரசாங்கம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>16 நாட்கள் கடலில் தவித்த அவலம், ஆறு பேர் பலி &#8211; இலங்கை வந்த அகதிகளின் சோக கதை</title>
		<link>https://oruvan.com/six-people-die-after-16-days-at-sea-the-tragic-story-of-rohingya-refugees-who-arrived-in-sri-lanka/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Sun, 22 Dec 2024 06:41:13 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Myanmar]]></category>
		<category><![CDATA[Rohingya people]]></category>
		<category><![CDATA[Rohingya refugees]]></category>
		<category><![CDATA[மியான்மர்]]></category>
		<category><![CDATA[ரோஹிங்கியா]]></category>
		<category><![CDATA[ரோஹிங்கியா அகதிகள்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=3609</guid>

					<description><![CDATA[<p>கடந்த வாரம் இறுதியில் முல்லைத்தீவில் 100க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகள் மற்றும் பணியாளர்களை ஏற்றிச் சென்ற படகு கரையொதுங்கிய நிலையில் அதில் இருந்தவர்கள் மீட்கப்பட்டனர். பசி மற்றும் சோர்வடைந்த நிலையில் இருந்த ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என 103 பேரும் இலங்கை அதிகாரிகளிடம் தங்கள் அனுபவித்த துயரத்தை விவரித்தனர். 45 குழந்தைகள் உட்பட 103 பெரியவர்களைக் கொண்ட இந்தக் குழு, மியான்மரின் ராக்கைன் பகுதியிலிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. 2017ஆம் ஆண்டு ரோஹிங்கியா சமூகத்தை சேர்ந்தவர்களை [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/six-people-die-after-16-days-at-sea-the-tragic-story-of-rohingya-refugees-who-arrived-in-sri-lanka/">16 நாட்கள் கடலில் தவித்த அவலம், ஆறு பேர் பலி &#8211; இலங்கை வந்த அகதிகளின் சோக கதை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>கடந்த வாரம் இறுதியில் முல்லைத்தீவில் 100க்கும் மேற்பட்ட ரோஹிங்கியா அகதிகள் மற்றும் பணியாளர்களை ஏற்றிச் சென்ற படகு கரையொதுங்கிய நிலையில் அதில் இருந்தவர்கள் மீட்கப்பட்டனர்.</p>
<p>பசி மற்றும் சோர்வடைந்த நிலையில் இருந்த ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகள் என 103 பேரும் இலங்கை அதிகாரிகளிடம் தங்கள் அனுபவித்த துயரத்தை விவரித்தனர்.</p>
<p>45 குழந்தைகள் உட்பட 103 பெரியவர்களைக் கொண்ட இந்தக் குழு, மியான்மரின் ராக்கைன் பகுதியிலிருந்து தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.</p>
<p>2017ஆம் ஆண்டு ரோஹிங்கியா சமூகத்தை சேர்ந்தவர்களை அந்தப் பகுதியை விட்டு வெளியேற கட்டாயப்படுத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>ரோஹிங்கியா மக்கள் நாடற்றவர்களாக உள்ளனர், ஏனெனில் அவர்கள் பல தலைமுறைகளாக நாட்டில் வாழ்ந்தாலும், மியான்மர் அவர்களை குடிமக்களாக அங்கீகரிக்கவில்லை.</p>
<p>“நாங்கள் மூன்று படகுகளில் நாட்டை விட்டு வெளியேறினோம், அவற்றில் இரண்டு பழுதடைந்தன. அந்த இரண்டு படகுகளில் இருந்தவர்கள் எங்கள் படகில் ஏறினர்.</p>
<p>திரும்பி வரும் வழியில், எங்கள் சக பயணிகளில் ஆறு பேர், அவர்களில் நான்கு குழந்தைகள் இறந்தனர். உடல்கள் கடலில் வீசப்பட்டன, ”என்று அகதிகளில் ஒருவர் கூறினார்.</p>
<p>அவர்கள் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டு, பின்னர் திருகோணமலை பதில் நீதிபதி அப்துல் சலாம் ஜாஹிர் முன் ஆஜர்படுத்தப்பட்டனர்.</p>
<p>இதனையடுத்துமு 103 அகதிகளையும் சட்டவிரோதமாக இலங்கைக்குள் நுழைந்ததற்காக தடுத்து வைத்து, உரிய நடவடிக்கைக்காக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டு திணைக்களத்திற்கு அனுப்ப உத்தரவிட்டிருந்தார்.</p>
<p>குடிவரவு மற்றும் குடியேற்றச் சட்டத்தின் கீழ் குற்றங்களுக்காக பொலிஸாரினால் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட அறிக்கையை பரிசீலித்த பின்னர் நீதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.</p>
<p>படகின் 12 பணியாளர்கள் டிசம்பர் 31ஆம் திகதி வரை நீதிபதியால் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனர், மற்றவர்கள் அந்தப் பகுதியில் உள்ள ஒரு பாடசாலையில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.</p>
<p>அகதிகளுக்கு வந்தவுடன் மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டு உணவு மற்றும் பிற தேவைகள் வழங்கப்பட்டன.</p>
<p>அஹாம் மனிதவள மையம் (AHRC) மற்றும் திருகோணமலை மாவட்ட மகளிர் வலையமைப்பு (TDWN) உள்ளிட்ட சிவில் சமூக அமைப்புகள் அகதிகளுக்கு உணவு மற்றும் பிற வசதிகளை வழங்கின.</p>
<p>மியான்மரில் நடந்து வரும் உள்நாட்டு &#8216;இன மோதல்&#8217; காரணமாக தனது நாட்டை விட்டு வெளியேறியதாக அகதியொருவர் தெரிவித்தார்.</p>
<p>&#8220;நான் நாட்டின் பாதுகாப்புப் படைகளுக்கு லஞ்சம் கொடுத்து சட்டவிரோதமாக தப்பிச் செல்ல வேண்டியிருந்தது,&#8221; என்று அவர் தெரிவித்தார்.</p>
<p>அவர்கள் எங்கு செல்கிறார்கள் என்பது அவர்களுக்குத் தெரியாது, ஆனால் பாதுகாப்பான இடத்திற்குச் செல்ல விரும்பினர் என்று அவர் கூறினார்.</p>
<p>மற்றொரு அகதி தனது கிராமத்தில் குண்டுவீச்சு நடத்தப்படுவதாகவும், பாதுகாப்புத் தேடி நாட்டை விட்டு வெளியேற வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதாகவும் கூறினார்.</p>
<p>மற்றொரு அகதி தனது கிராமத்துடனான தொடர்பு இணைப்புகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும், தனது உயிருக்கு பயப்படுவதாகவும் கூறினார்.</p>
<p>விசாரணையின் போது, ​​அகதிகளில் ஒருவர், மியான்மரில் இருந்து படகு மூலம் புறப்பட்டு 16 நாட்களாக கடலில் இருந்ததாகக் கூறினார்.</p>
<p>அந்தக் குழு குறைந்தபட்ச சுகாதார வசதிகள் இல்லாமல் பல நாட்களாகப் பயணம் செய்து கொண்டிருந்தது. சில இளம் குழந்தைகள் மற்றும் பெண்கள் நீரிழப்புக்கு ஆளாகியும் நடக்க முடியாமல் தவித்தும் காணப்பட்டனர்.</p>
<p>அகதிகளைப் பார்வையிட்ட துணை வெளியுறவு அமைச்சர் அருண் ஹேமச்சந்திர, தேசிய மற்றும் சர்வதேச சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கப்படும் வரை மிரிஹான தடுப்பு மையத்திற்கு அவர்கள் அழைத்துச் செல்லப்படுவார்கள் என்று கூறினார்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/six-people-die-after-16-days-at-sea-the-tragic-story-of-rohingya-refugees-who-arrived-in-sri-lanka/">16 நாட்கள் கடலில் தவித்த அவலம், ஆறு பேர் பலி &#8211; இலங்கை வந்த அகதிகளின் சோக கதை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
