<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>ரணில் Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/ரணில்/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Wed, 21 Jan 2026 10:37:33 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>ரணில் Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/ரணில்/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>விகாரை சொத்துக்களில் கைவைக்க வேண்டாம் &#8211; ரணில் எச்சரிக்கை</title>
		<link>https://oruvan.com/dont-let-viharaya-get-involved-in-properties-ranil-warns/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Wed, 21 Jan 2026 10:37:33 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[ரணில்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=43525</guid>

					<description><![CDATA[<p>நாட்டின் ஆட்சியாளர்கள் பௌத்த மதத்தைப் பாதுகாக்கக் கடமைப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அன்னியர் ஆட்சிக் காலத்தில்கூட பௌத்த மதத்தைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்த பின்னணியில், தற்போதைய ஆட்சியாளர்கள் அப்பொறுப்பிலிருந்து விலகிக்கொள்ள முடியாது என அவர் மேலும் சுட்டிக்காட்டினார். காலி பிரதேசத்தில் நடைபெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ரணில் விக்ரமசிங்க இந்தக் கருத்துக்களை வெளியிட்டார். அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர், &#8220;விகாரைகள் மற்றும் தேவாலயங்கள் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கமைய விகாரைகளுக்குச் சொந்தமானவை விகாரைகளுக்கும், [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/dont-let-viharaya-get-involved-in-properties-ranil-warns/">விகாரை சொத்துக்களில் கைவைக்க வேண்டாம் &#8211; ரணில் எச்சரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>நாட்டின் ஆட்சியாளர்கள் பௌத்த மதத்தைப் பாதுகாக்கக் கடமைப்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.</p>
<p>அன்னியர் ஆட்சிக் காலத்தில்கூட பௌத்த மதத்தைப் பாதுகாப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருந்த பின்னணியில், தற்போதைய ஆட்சியாளர்கள் அப்பொறுப்பிலிருந்து விலகிக்கொள்ள முடியாது என அவர் மேலும் சுட்டிக்காட்டினார்.</p>
<p>காலி பிரதேசத்தில் நடைபெற்ற சமய நிகழ்வொன்றில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே ரணில் விக்ரமசிங்க இந்தக் கருத்துக்களை வெளியிட்டார்.</p>
<p>அங்கு மேலும் கருத்துத் தெரிவித்த அவர்,</p>
<p>&#8220;விகாரைகள் மற்றும் தேவாலயங்கள் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது. அதற்கமைய விகாரைகளுக்குச் சொந்தமானவை விகாரைகளுக்கும், தேவாலயங்களுக்குச் சொந்தமானவை தேவாலயங்களுக்கும் உரியனவாகும். நாம் வழங்கும் தங்க நகைகள் அனைத்தும் விகாரைகளுக்கோ அல்லது தேவாலயங்களுக்கோ சொந்தமானவை. அவற்றில் கைவைக்கச் சென்று நாட்டுக்கு என்ன நடக்கும் என்று எனக்குத் தெரியாது.&#8221;</p>
<p>&#8220;1815 ஆம் ஆண்டு இங்கிலாந்தின் மூன்றாம் ஜோர்ஜ் மன்னர் பௌத்த மதத்தைப் பாதுகாப்பதாகப் பொறுப்பேற்றிருந்தார்.&#8221;</p>
<p>&#8220;இதை ஏற்றுக்கொண்டு மகா சங்கத்தினருடன் இணைந்து இதனைப் பாதுகாப்பது அனைத்துக் கட்சிகளினதும் கடமையாகும்,&#8221; என்றும் அவர் குறிப்பிட்டார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/dont-let-viharaya-get-involved-in-properties-ranil-warns/">விகாரை சொத்துக்களில் கைவைக்க வேண்டாம் &#8211; ரணில் எச்சரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>அடுத்து என்ன? ரணில் தலைமையில் இன்று கூடுகிறது ஐ.தே.க.</title>
		<link>https://oruvan.com/whats-next-unp-to-meet-today-under-ranils-leadership/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Wed, 07 Jan 2026 12:16:58 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[ரணில்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=42621</guid>

					<description><![CDATA[<p>ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று (07) மாலை கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெறவுள்ளது. கட்சியின் புதிய பதவி நிலைக்காக தெரிவுசெய்யப்பட்டவர்களின் பெயர் விவரம் இதன்போது அறிவிக்கப்பட்டு, அங்கீகரிக்கப்படவுள்ளது. புதிய சில நியமனங்களும் வழங்கிவைக்கப்படவுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பவற்றை ஒன்றிணைப்பதற்கு முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கை சம்பந்தமாகவும் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளது. குறிப்பாக தமது அடுத்தக்கட்ட நகர்வுகள் தொடர்பில் ரணில் விக்கிரமசிங்க கட்சிக்கு [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/whats-next-unp-to-meet-today-under-ranils-leadership/">அடுத்து என்ன? ரணில் தலைமையில் இன்று கூடுகிறது ஐ.தே.க.</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஐக்கிய தேசியக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் கட்சி தலைவர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இன்று (07) மாலை கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் நடைபெறவுள்ளது.</p>
<p>கட்சியின் புதிய பதவி நிலைக்காக தெரிவுசெய்யப்பட்டவர்களின் பெயர் விவரம் இதன்போது அறிவிக்கப்பட்டு, அங்கீகரிக்கப்படவுள்ளது.</p>
<p>புதிய சில நியமனங்களும் வழங்கிவைக்கப்படவுள்ளது.<br />
ஐக்கிய மக்கள் சக்தி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி என்பவற்றை ஒன்றிணைப்பதற்கு முன்னெடுக்கப்பட்டுவரும் நடவடிக்கை சம்பந்தமாகவும் இதன்போது கவனம் செலுத்தப்படவுள்ளது.</p>
<p>குறிப்பாக தமது அடுத்தக்கட்ட நகர்வுகள் தொடர்பில் ரணில் விக்கிரமசிங்க கட்சிக்கு தெரியப்படுத்துவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.</p>
<p>The post <a href="https://oruvan.com/whats-next-unp-to-meet-today-under-ranils-leadership/">அடுத்து என்ன? ரணில் தலைமையில் இன்று கூடுகிறது ஐ.தே.க.</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ரணில், சஜித் இணைவுக்காக பலி கடா ஆகுவதற்குகூட நான் தயார்</title>
		<link>https://oruvan.com/i-am-ready-to-become-a-scapegoat-for-the-ranil-sajith-alliance/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Sat, 22 Nov 2025 10:20:16 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[சஜித்]]></category>
		<category><![CDATA[ரணில்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=38965</guid>

					<description><![CDATA[<p>“ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் ஒன்றிணைய வேண்டும். இரு தரப்பு இணைவுக்கு நான் தடையாக இருக்கின்றேன் என எவரேனும் கருதினால் பதவி விலகிவிட்டு ஓரமாககூட இருப்பதற்கு நான் தயார். ரணில், சஜித் இணைவுக்காக பலி கடா ஆகுவதற்குகூட நான் தயார்.” இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ இன்று தெரிவித்தார். கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/i-am-ready-to-become-a-scapegoat-for-the-ranil-sajith-alliance/">ரணில், சஜித் இணைவுக்காக பலி கடா ஆகுவதற்குகூட நான் தயார்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>“ஐக்கிய தேசியக் கட்சியும், ஐக்கிய மக்கள் சக்தியும் ஒன்றிணைய வேண்டும். இரு தரப்பு இணைவுக்கு நான் தடையாக இருக்கின்றேன் என எவரேனும் கருதினால் பதவி விலகிவிட்டு ஓரமாககூட இருப்பதற்கு நான் தயார். ரணில், சஜித் இணைவுக்காக பலி கடா ஆகுவதற்குகூட நான் தயார்.”</p>
<p>இவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ இன்று தெரிவித்தார்.</p>
<p>கொழும்பில் நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/i-am-ready-to-become-a-scapegoat-for-the-ranil-sajith-alliance/">ரணில், சஜித் இணைவுக்காக பலி கடா ஆகுவதற்குகூட நான் தயார்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>“வாத்தி”யாராகிறார் ரணில் &#8211; LEARN WITH RANIL வேலைத்திட்டம் டிசம்பரில் ஆரம்பம்</title>
		<link>https://oruvan.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%b2/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Mon, 10 Nov 2025 15:11:36 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[ரணில்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=37888</guid>

					<description><![CDATA[<p>ஐக்கிய தேசியக் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் அனுபவம் தொடர்பில் இளைஞர்கள் கற்றுக்கொள்வதற்கும், கேள்வி எழுப்புவதற்கும் உரிய வேலைத்திட்டத்தை ஐக்கிய தேசியக் கட்சி முன்னெடுக்கவுள்ளது. இதற்கமைய “LEARN WITH RANIL” (ரணிலிடம் கற்போம்) ரணில் எனும் வேலைத்திட்டம் அடுத்த மாதம் ஆரம்பமாகும் என்று ஐதேக உறுப்பினரான முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார். ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் அணிதிரட்டலுக்கான பிரதிச் செயலாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ள ஹரின் பெர்ணான்டோ இன்று (10) தமது கடமைகளை [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%b2/">“வாத்தி”யாராகிறார் ரணில் &#8211; LEARN WITH RANIL வேலைத்திட்டம் டிசம்பரில் ஆரம்பம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஐக்கிய தேசியக் தலைவரும், முன்னாள் ஜனாதிபதியுமான ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் அனுபவம் தொடர்பில் இளைஞர்கள் கற்றுக்கொள்வதற்கும், கேள்வி எழுப்புவதற்கும் உரிய வேலைத்திட்டத்தை ஐக்கிய தேசியக் கட்சி முன்னெடுக்கவுள்ளது.</p>
<p>இதற்கமைய “LEARN WITH RANIL” (ரணிலிடம் கற்போம்) ரணில் எனும் வேலைத்திட்டம் அடுத்த மாதம் ஆரம்பமாகும் என்று ஐதேக உறுப்பினரான முன்னாள் அமைச்சர் ஹரின் பெர்ணான்டோ தெரிவித்தார்.</p>
<p>ஐக்கிய தேசியக் கட்சியின் அரசியல் அணிதிரட்டலுக்கான பிரதிச் செயலாளர் நாயகமாக நியமிக்கப்பட்டுள்ள ஹரின் பெர்ணான்டோ இன்று (10) தமது கடமைகளை கட்சி தலைமையகமான சிறிகொத்தவில் பொறுப்பேற்றார்.</p>
<p>அதன் பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடுகையிலேயே ஹரின் பெர்ணான்டோ மேற்படி தகவலை வெளியிட்டார்.</p>
<p>“ “LEARN WITH RANIL” வேலைத்திட்டம் அடுத்த மாதம் ஆரம்பமாகும். இளைஞர்களை அழைத்து இரு மணிநேரம் இந்நிகழ்வு நடக்கும். இதற்காக இளைஞர்கள் ஒன்லைன்மூலம் பதிவு செய்யலாம். ரணில் விக்கிரமசிங்கவிடம் கேள்விகளை எழுப்பலாம்.</p>
<p>அதன்பின்னர் மாதாந்தம் இரு வாரங்களுக்கு ஒரு தடவை , ரணில் விக்கிரமசிங்க என்ற அனுவபம்மிக்க தலைவரிடம் அரசியல் கற்பதற்கும், அதனை ஒன்லைன்மூலமும் அவதானிப்பதற்கும் ஏற்பாடு செய்யப்படும்.</p>
<p>இலங்கையில் முழுமையாக டிஜிட்டல் மயப்படுத்தப்பட்ட முதல் கட்சி என்ற நாமத்தை எதிர்வரும் டிசம்பர் 10 ஆம் திகதி ஐக்கிய தேசியக் கட்சி பெறும். இணையவழிமூலம் கட்சி ஆதரவாளர்கள் கட்சியுடன் தொடர்புகளை ஏற்படுத்தலாம்.” எனவும் ஹரின் பெர்ணான்டோ குறிப்பிட்டார்.</p>
<p>இலங்கையின் 8 ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான ரணில் விக்கிரமசிங்க 4 சதாப்தங்களுக்கு மேலாக நாடாளுமன்ற அரசியல் அனுபவம்மிக்கவர். 1977 முதல் 2020 ஆம் ஆண்டுவரை தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினராக இருந்துள்ளார். ஐந்து தடவைகளுக்கு மேல் பிரதமர் பதவியை வகித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.</p>
<p>(ரணில் விக்கிரமசிங்கவின் அரசியல் வாழ்க்கை. ஏற்கனவே பதிவிட்டது. தற்போது மீள்பதிவு செய்யப்படுகின்றது.)</p>
<p>✍️பிறப்பு – 1949 மார்ச் 24.</p>
<p>✍️தந்தை – எஸ்மண்ட் விக்கிரமசிங்க.</p>
<p>✍️தாய் – மாலினி விக்கிரமசிங்க.</p>
<p>✍️மூன்று சகோதரர்கள், ஒரு சகோதரி. ரணில் இரண்டாவது மகன்.</p>
<p>✍️ ஆரம்பக்கல்வி – கொழும்பு ரோயல் கல்லூரி.</p>
<p>✍️உயர்கல்வி – கொழும்பு பல்கலைக்கழகம், சட்டத்துறை.</p>
<p>✍️ஐ.தே.கவின் இளைஞர் முன்னணி ஊடாக அரசியல் பயணம் ஆரம்பம். 1970 இல் களனி தொகுதி அமைப்பாளராக நியமனம். அதன்பின்னர் பியகம தொகுதி கையளிப்பு.</p>
<p>✍️1977 இல் நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் கம்பஹா மாவட்டத்தில் பியகம தொகுதியில் போட்டி. 22 ,045 வாக்குகளைப்பெற்று வெற்றிநடை.</p>
<p>✍️28 ஆவது வயதில் பிரதி வெளிவிவகார அமைச்சராக நியமனம்.</p>
<p>✍️1977 ஒக்டோர் 05 ஆம் திகதி அமைச்சரவைக்கு உள்வாங்கப்பட்டு இளைஞர் விவகார மற்றும் தொழில் அமைச்சு பதவி ஒப்படைப்பு.</p>
<p>✍️1980 பெப்ரவரி 14 கல்வி அமைச்சு பதவி கையளிப்பு. 9 ஆண்டுகள் அப்பதவியில் நீடித்த அவர், கல்வித்துறையில் நவீன யுகத்துக்கேற்ப பல மறுசீரமைப்புகளை மேற்கொண்டார்.</p>
<p>✍️1993 மே 17 ஆம் திகதி ரணில் விக்கிரமசிங்க பிரதமராக பதவியேற்பு.</p>
<p>✍️1994 இல் ஐ.தே.க. தலைவராக ரணில் விக்கிரமசிங்க நியமனம். கட்சியிலிருந்து வெளியேறி மீண்டும் தாய்வீடு திரும்பிய காமினி திஸாநாயக்க பிரதான எதிர்க்கட்சி தலைவரானார்.காமினி திஸாநாயக்க கொல்லப்பட்ட பின்னர் எதிர்க்கட்சி தலைவராகவும் ரணில் செயற்பட்டார்.</p>
<p>✍️1995 – திருமண வாழ்வில் இணைவு. களனிப் பல்கலைக்கழக ஆங்கிலப் பேராசிரியையான மைத்திரி விக்கிரமசிங்கவை கரம்பிடித்தார்.</p>
<p>✍️1999 இல் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க முதன்முறையாக போட்டி. சந்திரிகாவே வெற்றிபெற்றார். ரணிலுக்கு 42.71% வாக்குகள் கிடைத்தன.</p>
<p>✍️2000 ஒக்டோபர் 10 இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் சந்திரிகா தலைமையிலான மக்கள் கூட்டணி வெற்றி. ஓராண்டுக்குள் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு மீண்டும் 2001 டிசம்பர் 05 ஆம் திகதி தேர்தல் நடத்தப்பட்டது. ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசியக்கட்சி ஆட்சியைக் கைப்பற்றியது.</p>
<p>✍️2001 டிசம்பர் 09 ஆம் திகதி ரணில் பிரதமரானார். 2004 ஏப்ரல் 2 ஆம் திகதிவரை பதவியில் நீடித்தார்.</p>
<p>✍️நாடாளுமன்றத்தில் ஆயுட்காலம் முடிவடைவதற்குள்ளேயே நிறைவேற்று அதிகாரத்தைப் பயன்படுத்தி சந்திரிக்கா நாடாளுமன்றத்தைக் கலைத்து 2004 ஏப்ரல் 2 ஆம் திகதி தேர்தல் நடத்தப்பட்டது. ஐ.தே.க. ஆட்சி கவிழ்ந்தது. கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட ரணில் விக்கிரமசிங்க 3 இலட்சத்து 29 ஆயிரத்து 524 விருப்பு வாக்குகளைப் பெற்றார்.</p>
<p>✍️2005 நவம்பர் 17 ஆம் திகதி நடைபெற்ற ஐந்தாவது ஜனாதிபதி தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சியின் சார்பில் ரணில் விக்கிரமசிங்கவே போட்டியிட்டார். 47 இலட்சத்து 6 ஆயிரத்து 366 வாக்குகளைப் பெற்றார். இத்தேர்தலில் மஹிந்தவே வெற்றிபெற்றார்.</p>
<p>✍️2010 ஜனவரி 26 ஆம் திகதி ஆறாவது ஜனாதிபதி தேர்தல் நடைபெற்றது. ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் சார்பில் மஹிந்த களமிறக்கினார். அவருக்கு எதிராக எதிரக்கட்சிகளின் சார்பில் – இறுதிப்போரை வழிநடத்திய இராணுவத்தளபதி சரத் பொன்சேக்கா களமிறக்கப்பட்டார்.</p>
<p>✍️ஜனாதிபதி தேர்தல் வரலாற்றில் முதல் முறையாக ஐக்கிய தேசியக்கட்சி வேட்பாளர் களமிறங்கவில்லை என்பதுடன், யானை சின்னத்துக்கு பதிலாக அன்னப்பறவை சின்னமே முன்னிலைப்படுத்தப்பட்டது. இத்தேர்தலில் மஹிந்தவே வெற்றிபெற்றார்</p>
<p>✍️2010 ஏப்ரல் 4 ஆம் திகதி நடைபெற்ற பொதுத்தேர்தலில் ரணிலின் தலைமைத்துவத்தின்கீழ் யானை சின்னத்திலேயே ஐக்கிய தேசியக்கட்சி போட்டியிட்டது. தேர்தலில் தோல்வி. கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட ரணில் விக்கிரமசிங்க 2 இலட்சத்து 32 ஆயிரத்து 957 வாக்குகளைப் பெற்றார்.</p>
<p>✍️2015 ஜனவரி 8 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலிலும் விட்டுக்கொடுப்புகளை செய்யவேண்டியநிலை ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஏற்பட்டது. மஹிந்த அரசிலிருந்து வெளியேறிய சுதந்திரக்கட்சியின் பொதுச்செயலாளர் மைத்திரிபால சிறிசேனவுக்கு பொதுவேட்பாளராக களமிறங்கும் வாய்ப்பு வழங்கப்பட்டது.<br />
மைத்திரி ஜனாதிபதி, ரணில் பிரதமர் என்ற தொனியிலேயே பரப்புரைகள் முன்னெடுக்கப்பட்டன. 62 இலட்சத்து 17 ஆயிரத்து 162 வாக்குகளைப் பெற்று மைத்திரி வெற்றிபெற்றார். மஹிந்தவின் 10 ஆண்டுகால சாம்ராஜ்யமும் சரிந்தது.</p>
<p>✍️2015 ஜனவரி 9 ஆம் திகதி பிரதமராக ரணில் பதவியேற்றார். இதனால், மஹிந்தவின் அமைச்சரவையும் கலைந்தது.</p>
<p>✍️2015 ஆகஸ்ட் நடைபெற்ற பொதுத்தேர்தலிலும் ஐக்கிய தேசியக்கட்சி 106 ஆசனங்களைக் கைப்பற்றி அறுதிப்பெரும்பான்மை இல்லாவிட்டாலும் தேசிய அரசமைத்து ஆட்சியை தக்கவைத்துக்கொண்டது.</p>
<p>✍️கொழும்பு மாவட்டத்தில் போட்டியிட்ட ரணில் விக்கிரமசிங்க 5 இலட்சத்து 566 வாக்குகளைப் பெற்று மீண்டும் வரலாற்று வெற்றியை பதிவுசெய்தார்.</p>
<p>✍️2018 ஒக்டோபர் மாதம் ஆட்சிகவிழ்ப்பு சூழ்ச்சிமூலம் மஹிந்தவை, ஜனாதிபதி மைத்திரி பிரதமராக்கினார். எனினும், நீதிமன்றத்தைநாடி சவால்களையெல்லாம் சமாளித்து மீண்டும் பிரதமரானார் ரணில்.<br />
நம்பிக்கையில்லாப் பிரேரணைகளையும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உதவியுடன் மண்கவ்வ செய்தார்.</p>
<p>✍️2019 நவம்பர் 16 ஆம் திகதி நடைபெற்ற இலங்கையின் 8 ஆவது ஜனாதிபதி தேர்தலில் களமிறங்க வேண்டும் என்பதில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறியாகவே இருந்தார். எனினும், கட்சிக்குள் எதிர்ப்புகள் வலுத்ததால், பங்காளிகள் விடாப்பிடியாக நின்றதாலும், நாட்டு மக்கள் சஜித்தை கோரியதாலும் மூன்றாவது முறையும் தியாகம் செய்யவேண்டிய நிலைக்கு அவர் தள்ளப்பட்டார்.<br />
எனினும், 1994 ஆம் ஆண்டுக்கு பிறகு ஐக்கிய தேசியக்கட்சியை சார்ந்த உறுப்பினர் ஒருவரை வேட்பாளராக களமிறக்கும் வாய்ப்பு உதயமானது.</p>
<p>✍️ 2019 ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய தேசியக்கட்சி தோல்வியடைந்தது. அதன்பின்னர் ஐக்கிய தேசியக்கட்சி இரண்டாக உடைந்தது. சஜித் தலைமையில் ஐக்கிய மக்கள் சக்தி உயதமானது.</p>
<p>✍️2020 பொதுத்தேர்தலில் இரு அணிகளும் தனியாக போட்டியிட்டன. ஐக்கிய மக்கள் சக்தி 54 ஆசனங்களைக் கைப்பற்றியது. ஐக்கிய தேசியக்கட்சிக்கு நாடு முழுவதும் 2.15% வாக்குகளே கிடைக்கப்பெற்றன.<br />
தேசியப்பட்டியல் ஊடாக வாய்ப்பு கிடைத்தது.</p>
<p>✍️நாடாளுமன்ற அரசியலுக்கு வந்த பிறகு ரணில் எந்தவொரு பொதுத்தேர்தலிலும் தோற்றதில்லை. 42 வருடங்களாக தொடர்ச்சியாக நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்து சாதனையும் படைத்துள்ளார். 2020 இல் தோல்வியை தழுவினார். எனினும், தேசியப்பட்டில் ஊடாக சபைக்கு நாடாளுமன்றம் வந்தார்.</p>
<p>✍️கோட்டாபய ராஜபக்ச பதவி விலகிய பின்னர், நாடாளுமன்றத்தில் நடத்தப்பட்ட வாக்கெடுப்புமூலம் ஜனாதிபதியானார். கடந்த தேர்தலில் போட்டியிடவில்லை.</p>
<p>The post <a href="https://oruvan.com/%e0%ae%b5%e0%ae%be%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%b0%e0%ae%be%e0%ae%95%e0%ae%bf%e0%ae%b1%e0%ae%be%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%b2/">“வாத்தி”யாராகிறார் ரணில் &#8211; LEARN WITH RANIL வேலைத்திட்டம் டிசம்பரில் ஆரம்பம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ரணில், சஜித் ஓரணியில் திரண்டால் முதல்வர் வேட்பாளராக களமிறங்க தயார்</title>
		<link>https://oruvan.com/ranil-ready-to-contest-as-cm-candidate-if-sajith-unites/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Sat, 01 Nov 2025 02:31:59 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[சஜித்]]></category>
		<category><![CDATA[ரணில்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=37005</guid>

					<description><![CDATA[<p>ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய தேசியக் கட்சியும் ஒரே சின்னத்தின்கீழ் போட்டியிட முன்வந்தால் மாகாணசபைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராகக் களமிறங்குவதற்கு தயார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார். கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். ” மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு நான் தீர்மானம் எடுக்கவில்லை. எனினும், ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி என்பன ஒரே மேடைக்கு வந்து, ஒரே சின்னத்தின்கீழ் போட்டியிட்டால், தேர்தலில் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/ranil-ready-to-contest-as-cm-candidate-if-sajith-unites/">ரணில், சஜித் ஓரணியில் திரண்டால் முதல்வர் வேட்பாளராக களமிறங்க தயார்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஐக்கிய மக்கள் சக்தியும், ஐக்கிய தேசியக் கட்சியும் ஒரே சின்னத்தின்கீழ் போட்டியிட முன்வந்தால் மாகாணசபைத் தேர்தலில் முதல்வர் வேட்பாளராகக் களமிறங்குவதற்கு தயார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார்.</p>
<p>கொழும்பில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போது எழுப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.</p>
<p>” மாகாணசபைத் தேர்தலில் போட்டியிடுவதற்கு நான் தீர்மானம் எடுக்கவில்லை. எனினும், ஐக்கிய தேசியக் கட்சி, ஐக்கிய மக்கள் சக்தி என்பன ஒரே மேடைக்கு வந்து, ஒரே சின்னத்தின்கீழ் போட்டியிட்டால், தேர்தலில் களமிறங்குமாறு கட்சி கோரிக்கை விடுத்தால் , எனக்கு வாக்களித்த மக்கள் கேட்டுக்கொண்டால் தேர்தலில் போட்டியிட நான் தயார்.</p>
<p>நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை துறந்துவிட்டு, முதலமைச்சர் வேட்பாளராக களமிறங்குவதற்கு நான் தயார். கட்சி கோரிக்கை விடுக்காவிட்டால் போட்டியிட மாட்டேன். அதேபோல இரு தரப்பும் இணையாவிட்டாலும் களமிறங்கமாட்டேன்.” எனவும் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்தார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/ranil-ready-to-contest-as-cm-candidate-if-sajith-unites/">ரணில், சஜித் ஓரணியில் திரண்டால் முதல்வர் வேட்பாளராக களமிறங்க தயார்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ரணில் சற்று முன்னர் நீதிமன்றத்தில் ஆஜர்</title>
		<link>https://oruvan.com/ranil-appeared-in-court-a-short-while-ago%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b0%e0%af%8d/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Wed, 29 Oct 2025 08:53:51 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[ரணில்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=36756</guid>

					<description><![CDATA[<p>பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (29) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ள நிலையில் கோட்டை நீதவான் நீதிமன்றுக்கு முன் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி பதவி வகித்த காலப்பகுதியில், அவரது மனைவி பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டன் செல்வதற்கு அரச நிதியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டு தொடர்பில் இந்த முறைப்பாடு தாக்கல் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/ranil-appeared-in-court-a-short-while-ago%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b0%e0%af%8d/">ரணில் சற்று முன்னர் நீதிமன்றத்தில் ஆஜர்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பொதுச் சொத்துச் சட்டத்தின் கீழ் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று (29) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ள நிலையில் கோட்டை நீதவான் நீதிமன்றுக்கு முன் பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.</p>
<p>ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி பதவி வகித்த காலப்பகுதியில், அவரது மனைவி பேராசிரியர் மைத்திரி விக்ரமசிங்கவின் பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்வதற்காக லண்டன் செல்வதற்கு அரச நிதியை துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டு தொடர்பில் இந்த முறைப்பாடு தாக்கல் செய்யப்பட்டிருந்தது.</p>
<p>இதன்படி, வாக்குமூலம் வழங்குவதற்காக கடந்த ஓகஸ்ட் மாதம் 22ஆம் திகதி குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு சமூகமளித்த முன்னாள் ஜனாதிபதி, கைது செய்யப்பட்டு நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதையடுத்து, ஓகஸ்ட் 26ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.</p>
<p>பின்னர், முன்னாள் ஜனாதிபதி தொடர்பில் சமர்ப்பிக்கப்பட்ட வைத்திய அறிக்கைகளைக் கருத்திற்கொண்ட கோட்டை நீதவான் நிலுபுலி லங்காபுர, முன்னாள் ஜனாதிபதியை தலா 50 இலட்சம் ரூபா பெறுமதியான மூன்று சரீரப் பிணைகளின் கீழ் விடுவிக்க உத்தரவிட்டதுடன், வழக்கு விசாரணையை இன்றைய தினம் (29) மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறும் உத்தரவிட்டமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/ranil-appeared-in-court-a-short-while-ago%e0%ae%b0%e0%ae%a3%e0%ae%bf%e0%ae%b2%e0%af%8d-%e0%ae%9a%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81-%e0%ae%ae%e0%af%81%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a9%e0%ae%b0%e0%af%8d/">ரணில் சற்று முன்னர் நீதிமன்றத்தில் ஆஜர்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ரணில் வாரம், ஐஸ் வாரம் முடிவடைந்து தற்போது வசீம் தாஜூதின் வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது</title>
		<link>https://oruvan.com/ranil-week-and-ice-week-have-ended-and-now-wasim-thajuds-week-has-begun/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Thu, 02 Oct 2025 05:25:32 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[ரணில்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=34157</guid>

					<description><![CDATA[<p>‘வசீம் தாஜூதின் மரணத்தை தமது அரசியலுக்காக பயன்படுத்திக் கொள்ளாமல் அரசாங்கம் நடுநிலையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த விடயத்தை அரசியலுக்கு பயன்படுத்துவது அவரது ஆத்மாவுக்கு இழைக்கும் மாபெரும் அநீதியாகும். அரசியல் பேசுபொருளுக்காகவே பொலிஸ் ஊடகப் பிரிவு புதிய விடயத்தை வெளிப்படுத்தியுள்ளது’ என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று (01) நடைபெற்ற தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/ranil-week-and-ice-week-have-ended-and-now-wasim-thajuds-week-has-begun/">ரணில் வாரம், ஐஸ் வாரம் முடிவடைந்து தற்போது வசீம் தாஜூதின் வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>‘வசீம் தாஜூதின் மரணத்தை தமது அரசியலுக்காக பயன்படுத்திக் கொள்ளாமல் அரசாங்கம் நடுநிலையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த விடயத்தை அரசியலுக்கு பயன்படுத்துவது அவரது ஆத்மாவுக்கு இழைக்கும் மாபெரும் அநீதியாகும். அரசியல் பேசுபொருளுக்காகவே பொலிஸ் ஊடகப் பிரிவு புதிய விடயத்தை வெளிப்படுத்தியுள்ளது’ என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும், நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.</p>
<p>ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் காரியாலயத்தில் நேற்று (01) நடைபெற்ற தொகுதி அமைப்பாளர்களுடனான சந்திப்பின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.</p>
<p>அங்கு அவர் மேலும் தெரிவித்ததாவது, “ராஜபக்ஷக்கள் பற்றி இந்த அரசாங்கமும், நல்லாட்சி அரசாங்கமும் பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்தன. விசாரணைகளும் மேற்கொள்ளப்பட்டன. தேர்தல் மேடைகளில் குறிப்பிட்ட பொய்களை உண்மையாக்குவதற்கு முயற்சித்தார்கள்.</p>
<p>வசீம் தாஜூதின் மரணம் தொடர்பில் நாராஹேன்பிட்டிய பொலிஸ் நிலையத்தின் பொறுப்பதிகாரியை கைது செய்து போலியான வாக்குமூலம் பெற்றுக்கொள்வதற்கும் கடந்த அரசாங்கத்தின் அதிகாரிகள் முயற்சித்தார்கள். அந்த அதிகாரிகள்தான் இந்த அரசாங்கத்தின் உயர் பதவிகளில் உள்ளார்கள்.</p>
<p>முன்னாள் கடற்படைத் தளபதி கைது விவகாரத்தில் போலியான வாக்குமூலம் வழங்குவதற்கு அழுத்தம் பிரயோகிக்கப்பட்டதாக குறிப்பிட்டு பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் நீதிமன்றம் சென்றுள்ளார்.</p>
<p>ஒரு சில அதிகாரிகள் போலியான சாட்சியங்களை திரட்டி அரசாங்கத்தையும், ஆட்சியாளர்களையும் திருப்திப்படுத்த முயற்சிக்கிறார்கள். வசீம் தாஜூதின் மரணம் தொடர்பில் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஊடகங்களுக்கு விடயங்களை குறிப்பிடுகின்றார்.</p>
<p>இந்த விடயம் தொடர்பான விசாரணையின் முன்னேற்றத்தை நீதிமன்றத்திற்கு அறிக்கையிட வேண்டுமே தவிர ஊடகங்களுக்கு குறிப்பிடக்கூடாது. அரசியல் பேசுபொருளுக்காகவே இந்த விடயம் தற்போது வெளிப்படுத்தப்பட்டுள்ளது.</p>
<p>வசீம் தாஜூதின் மரணம் தொடர்பில் நடுநிலையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும் என்று தொடர்ந்து வலியுறுத்துகிறோம். இந்த விடயத்துடன் தொடர்புடைய சி.சி.டி காணொளியில் இடுப்பில் கை வைத்துக் கொண்டிருப்பவர் தனது கணவர் என்று அவரது மனைவி குறிப்பிட்டதாக பொலிஸார் குறிப்பிடுகிறார்.</p>
<p>அந்த நபர் கடந்த காலங்களில் யாருடன் இருந்தார், யாருக்காக செயற்பட்டார் என்பதை பொலிஸார் விசாரிக்க வேண்டும். வசீம் தாஜூதின் மரணத்தை தமது அரசியலுக்காக பயன்படுத்திக் கொள்ளாமல் அரசாங்கம் நடுநிலையான விசாரணைகளை மேற்கொள்ள வேண்டும். இந்த விடயத்தை அரசியலுக்கு பயன்படுத்துவது அவரது ஆத்மாவுக்கு இழைக்கும் மாபெரும் அநீதியாகும்.</p>
<p>ரணில் வாரம், ஐஸ் வாரம் முடிவடைந்து விட்டது. தற்போது வசீம் தாஜூதின் வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. எதிர்வரும் வாரங்கள் எவ்வாறானதாக இருக்கும் என்று தெரியவில்லை.</p>
<p>அரசாங்கத்தின் நோக்கத்திற்கு அமைய பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ஊடங்களுக்கு பொய்யான விடயங்களை குறிப்பிடுவதும், நீதிமன்ற விசாரணைக்குட்படுத்தப்பட்டுள்ள விடயங்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் தகவல்களை குறிப்பிட்டால் அவருக்கு எதிராக எதிர்வரும் நாட்களில் சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வோம்” என்றார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/ranil-week-and-ice-week-have-ended-and-now-wasim-thajuds-week-has-begun/">ரணில் வாரம், ஐஸ் வாரம் முடிவடைந்து தற்போது வசீம் தாஜூதின் வாரம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>வெளிநாடு செல்லத் தயாராகும் ரணில்</title>
		<link>https://oruvan.com/ranil-prepares-to-go-abroad/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 24 Sep 2025 07:09:26 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Ranil wickramasinghe]]></category>
		<category><![CDATA[ரணில்]]></category>
		<category><![CDATA[ரணில் விக்கிரமசிங்க]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=33433</guid>

					<description><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது உடல்நிலை காரணமாக வெளிநாடு செல்ல தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, முன்னாள் ஜனாதிபதி ரணில் பிரான்ஸ், இங்கிலாந்து அல்லது இந்தியா போன்ற ஒரு நாட்டிற்கு செல்ல தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. தற்போதைய அரசியல் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, எதிர்க்கட்சியின் பொறுப்பை ஏற்று எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முன்னாள் ஜனாதிபதிக்கு சமீபத்தில் அழைப்புகள் வந்தன. முன்னாள் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/ranil-prepares-to-go-abroad/">வெளிநாடு செல்லத் தயாராகும் ரணில்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தனது உடல்நிலை காரணமாக வெளிநாடு செல்ல தயாராகி வருவதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p>
<p>தென்னிலங்கை ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ள செய்தியில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இதன்படி, முன்னாள் ஜனாதிபதி ரணில் பிரான்ஸ், இங்கிலாந்து அல்லது இந்தியா போன்ற ஒரு நாட்டிற்கு செல்ல தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>தற்போதைய அரசியல் சூழ்நிலையைக் கருத்தில் கொண்டு, எதிர்க்கட்சியின் பொறுப்பை ஏற்று எதிர்கால அரசியல் நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு முன்னாள் ஜனாதிபதிக்கு சமீபத்தில் அழைப்புகள் வந்தன.</p>
<p>முன்னாள் ஜனாதிபதி ரணிலும் இந்த விஷயத்தில் கவனம் செலுத்தியுள்ளார், மேலும் ஆயிரம் அரசியல் கூட்டங்களை நடத்தும் திட்டம் குறித்து முன்னாள் ஜனாதிபதி தனது கருத்துக்களைத் தெரிவித்துள்ளார்.</p>
<p>எவ்வாறாயினும், அவரது உடல்நிலை மற்றும் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் காரணமாக ரணில் விக்கிரமசிங்க வெளிநாடு செல்ல தயாராகி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>இந்த ஆண்டு இறுதிக்குள் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெளிநாடு செல்வார் என்று அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாக அந்த செய்தியில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/ranil-prepares-to-go-abroad/">வெளிநாடு செல்லத் தயாராகும் ரணில்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட ரணில்</title>
		<link>https://oruvan.com/ranil-brought-to-court/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Fri, 22 Aug 2025 10:04:59 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[ரணில்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=30308</guid>

					<description><![CDATA[<p>குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைதுசெய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு சற்று முன்னர் அழைத்து வரப்பட்டார். வாக்குமூலம் அளிக்க அவர் இன்று (22) காலை குற்றப் புலனாய்வுத் துறைக்கு (CID) வந்திருந்தார். ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அவரது பாரியாருடன் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்கென அரச நிதியைப் பயன்படுத்தி லண்டனிற்கு விஜயம் செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அரச நிதியை தனிப்பட்ட விடயத்திற்கு தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் ரணில் விக்கிரமசிங்க இன்றைய தினம் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/ranil-brought-to-court/">நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட ரணில்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>குற்றப் புலனாய்வு திணைக்களத்தினரால் கைதுசெய்யப்பட்ட முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றத்திற்கு சற்று முன்னர் அழைத்து வரப்பட்டார்.</p>
<p>வாக்குமூலம் அளிக்க அவர் இன்று (22) காலை குற்றப் புலனாய்வுத் துறைக்கு (CID) வந்திருந்தார்.</p>
<p>ஜனாதிபதியாக இருந்த காலத்தில் அவரது பாரியாருடன் பட்டமளிப்பு விழாவில் கலந்து கொள்வதற்கென அரச நிதியைப் பயன்படுத்தி லண்டனிற்கு விஜயம் செய்துள்ளதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அரச நிதியை தனிப்பட்ட விடயத்திற்கு தவறாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் ரணில் விக்கிரமசிங்க இன்றைய தினம் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>இதேவேளை ஜனாதிபதியொருவர் கைதுசெய்யப்பட்ட முதற்சந்தரப்பம் இதுவாகும்.</p>
<p>The post <a href="https://oruvan.com/ranil-brought-to-court/">நீதிமன்றத்துக்கு அழைத்து வரப்பட்ட ரணில்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ரஷ்யா தனிமைப்படுத்தபடவில்லை – ரணில்</title>
		<link>https://oruvan.com/russia-is-not-isolated-ranil/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Thu, 19 Jun 2025 13:10:03 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[ரணில்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=24047</guid>

					<description><![CDATA[<p>சர்வதேச அரங்கில் ரஷ்யா தனிமைப்படுத்தப்படவில்லை என்றும், ஆசிய பிராந்திய நாடுகள் உட்பட பல நாடுகளுடன் தொடர்ந்து உறவுகளைப் பேணி வருவதாகவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே கூறுகிறார். செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார மன்றத்தில் (SPIEF-2025) பங்கேற்றபோது, ​​ரஷ்யாவின் முக்கிய ஊடக வலையமைப்பான Russia Today (RT) உடனான கலந்துரையாடலின் போது முன்னாள் ஜனாதிபதி இந்தக் கருத்தைத் தெரிவித்தார். இந்த அறிக்கையை Russia Today பரவலாக வெளியிட்டது. கலந்துரையாடலின் போது, ​​முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரிக்ஸ் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/russia-is-not-isolated-ranil/">ரஷ்யா தனிமைப்படுத்தபடவில்லை – ரணில்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>சர்வதேச அரங்கில் ரஷ்யா தனிமைப்படுத்தப்படவில்லை என்றும், ஆசிய பிராந்திய நாடுகள் உட்பட பல நாடுகளுடன் தொடர்ந்து உறவுகளைப் பேணி வருவதாகவும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே கூறுகிறார்.</p>
<p>செயின்ட் பீட்டர்ஸ்பர்க் சர்வதேச பொருளாதார மன்றத்தில் (SPIEF-2025) பங்கேற்றபோது, ​​ரஷ்யாவின் முக்கிய ஊடக வலையமைப்பான Russia Today (RT) உடனான கலந்துரையாடலின் போது முன்னாள் ஜனாதிபதி இந்தக் கருத்தைத் தெரிவித்தார்.</p>
<p>இந்த அறிக்கையை Russia Today பரவலாக வெளியிட்டது.</p>
<p>கலந்துரையாடலின் போது, ​​முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரிக்ஸ் (பிரேசில், ரஷ்யா, இந்தியா, சீனா, தென்னாப்பிரிக்கா) பொருளாதார மற்றும் அரசியல் குழுவின் முக்கியத்துவத்தை வலியுறுத்தினார். “பிரிக்ஸ் மேற்கத்திய உலகத்தைச் சேராத நாடுகளைக் குறிக்கிறது” என்று அவர் கூறினார், இலங்கை தனது ஜனாதிபதி பதவிக் காலத்தில் பிரிக்ஸ் உறுப்பினர் பதவிக்கு விண்ணப்பித்ததை நினைவு கூர்ந்தார்.</p>
<p>இந்தக் கருத்துக்கள் ரஷ்யாவின் சர்வதேச உறவுகளை வலுப்படுத்துவதையும், மேற்கத்திய நாடுகளை மையமாகக் கொண்டிராத புதிய உலகளாவிய சக்திகளின் வளர்ச்சியையும் பிரதிபலிக்கின்றன என்று Russia Today ஊடக வலையமைப்பு ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.</p>
<p>முன்னாள் ஜனாதிபதியின் இந்தக் கூற்றுகள், சர்வதேச அரசியல் மற்றும் பொருளாதார அரங்கில் இலங்கையின் நிலைப்பாடு மற்றும் ரஷ்யாவின் பங்கு குறித்த புதிய உரையாடலுக்கு வழிவகுத்துள்ளன.</p>
<p>The post <a href="https://oruvan.com/russia-is-not-isolated-ranil/">ரஷ்யா தனிமைப்படுத்தபடவில்லை – ரணில்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
