<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>மோந்தா சூறாவளி Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/%E0%AE%AE%E0%AF%8B%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BE-%E0%AE%9A%E0%AF%82%E0%AE%B1%E0%AE%BE%E0%AE%B5%E0%AE%B3%E0%AE%BF/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/மோந்தா-சூறாவளி/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Wed, 29 Oct 2025 08:15:31 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>மோந்தா சூறாவளி Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/மோந்தா-சூறாவளி/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>மோந்தா புயல் தாக்கியதில் இரு பெண்கள் உயிரிழப்பு</title>
		<link>https://oruvan.com/two-women-killed-in-cyclone-monda/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 29 Oct 2025 08:15:31 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[Montha]]></category>
		<category><![CDATA[மொந்தா]]></category>
		<category><![CDATA[மோந்தா]]></category>
		<category><![CDATA[மோந்தா சூறாவளி]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=36751</guid>

					<description><![CDATA[<p>இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் மோந்தா புயல் தாக்கியதில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர். வங்கக் கடலில் உருவாகியிருந்த தாழமுக்கம் நேற்று இரவு சூறாவளியாக கரையைக் கடந்தது. மோந்தா புயல் ஆந்திராவின் காக்கிநாடா &#8211; மசூலிப்பட்டினம் இடையே அந்தர்வேதிபாளையம் என்னும் இடத்தில் கரையைக் கடந்தது. கரையை கடந்தபோது மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசியது. இதில் இரண்டு பெண்கள் உயிரிழந்ததுடன், ஐம்பதுக்கு மேற்பட்ட கால்நடைகளும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சூறாவளி காரணமாக 107 ரயில்கள், 18 [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/two-women-killed-in-cyclone-monda/">மோந்தா புயல் தாக்கியதில் இரு பெண்கள் உயிரிழப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இந்தியாவின் ஆந்திரப் பிரதேசத்தில் மோந்தா புயல் தாக்கியதில் இரண்டு பெண்கள் உயிரிழந்துள்ளனர்.</p>
<p>வங்கக் கடலில் உருவாகியிருந்த தாழமுக்கம் நேற்று இரவு சூறாவளியாக கரையைக் கடந்தது.</p>
<p>மோந்தா புயல் ஆந்திராவின் காக்கிநாடா &#8211; மசூலிப்பட்டினம் இடையே அந்தர்வேதிபாளையம் என்னும் இடத்தில் கரையைக் கடந்தது.</p>
<p>கரையை கடந்தபோது மணிக்கு 110 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த சூறாவளி காற்று வீசியது.</p>
<p>இதில் இரண்டு பெண்கள் உயிரிழந்ததுடன், ஐம்பதுக்கு மேற்பட்ட கால்நடைகளும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>மேலும், சூறாவளி காரணமாக 107 ரயில்கள், 18 விமான சேவைகள் இரத்து செய்யப்பட்டுள்ளன.</p>
<p>இந்நிலையில், போர்க்கால அடிப்படையில் சீரமைப்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக ஆந்திர மாநில அரசு தெரிவித்துள்ளது.</p>
<p>இதன்படி, ஆயிரத்து இருநூற்றி நான்கிற்கும் மேற்பட்ட நிவாரண முகாம்கள் அமைக்கப்பட்டு 75 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் தங்கவைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>முன்னதாக, வங்க கடலில் மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழமுக்கம் வலுப்பெற்று நேற்று காலை புயலாக மாறியது. இந்த புயலுக்கு ‘மோந்தா’ என பெயரிடப்பட்டிருந்தது.</p>
<p>நேற்று இரவு 8.40 மணியளவில் காக்கிநாடா அருகே அந்தர்வேதிப்பாளையம் என்னும் இடத்தில் புயல் கரையைக் கடக்கத் தொடங்கியதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.</p>
<p>சுமார் 8.40 மணிக்கு கரையைக் கடக்கத் தொடங்கிய புயல், கரையை முழுமையாக கடந்து முடிக்க நள்ளிரவு 1.30 மணி வரை எடுத்துக் கொண்டதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/two-women-killed-in-cyclone-monda/">மோந்தா புயல் தாக்கியதில் இரு பெண்கள் உயிரிழப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>&#8220;மோந்தா&#8221; சூறாவளி &#8211; இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை</title>
		<link>https://oruvan.com/cyclone-montha-emergency-warning-issued-to-sri-lankans/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Tue, 28 Oct 2025 07:07:13 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Montha]]></category>
		<category><![CDATA[மோந்தா சூறாவளி]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=36623</guid>

					<description><![CDATA[<p>நாட்டின் வடகிழக்கில் வங்காள விரிகுடா கடல் பகுதியில் உருவான &#8220;மோந்தா&#8221; சூறாவளி, வடக்கு நோக்கி நகர்ந்து, மேலும் தீவிரமடைந்து, வடமேற்கு திசையில் நகரும் என்று வலிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. எனவே, காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை வழியாக மட்டக்களப்பு வரையிலான கடற்கரைக்கு அப்பால் உள்ள ஆழமற்ற கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மீன்பிடி மற்றும் கப்பல் போக்குவரத்து நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும், சிலாபம் முதல் மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலும், காலி முதல் ஹம்பாந்தோட்டை வழியாக [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/cyclone-montha-emergency-warning-issued-to-sri-lankans/">&#8220;மோந்தா&#8221; சூறாவளி &#8211; இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>நாட்டின் வடகிழக்கில் வங்காள விரிகுடா கடல் பகுதியில் உருவான &#8220;மோந்தா&#8221; சூறாவளி, வடக்கு நோக்கி நகர்ந்து, மேலும் தீவிரமடைந்து, வடமேற்கு திசையில் நகரும் என்று வலிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.</p>
<p>எனவே, காங்கேசன்துறையிலிருந்து திருகோணமலை வழியாக மட்டக்களப்பு வரையிலான கடற்கரைக்கு அப்பால் உள்ள ஆழமற்ற கடல் பகுதிகளில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மீன்பிடி மற்றும் கப்பல் போக்குவரத்து நடவடிக்கைகளைத் தவிர்க்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p>
<p>மேலும், சிலாபம் முதல் மன்னார் வழியாக காங்கேசன்துறை வரையிலும், காலி முதல் ஹம்பாந்தோட்டை வழியாக பொத்துவில் வரையிலும் உள்ள ஆழமற்ற கடல் பகுதிகளில் மீன்பிடி மற்றும் கப்பல் போக்குவரத்து சமூகத்தினர் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டுள்ளது.</p>
<p>அத்துடன், நாட்டின் வடகிழக்கில் வங்காள விரிகுடாவில் தற்போது உருவாகி வரும் புயல், இன்று (28) மாலை/இரவு நேரத்தில் கடுமையான சூறாவளி புயலாக வலுவடைந்து இந்தியாவின் ஆந்திரப் பிரதேச கடற்கரையை நோக்கி நகரும் என்று எதிர்பார்க்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/cyclone-montha-emergency-warning-issued-to-sri-lankans/">&#8220;மோந்தா&#8221; சூறாவளி &#8211; இலங்கையர்களுக்கு விடுக்கப்பட்டுள்ள அவசர எச்சரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
