<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>மைத்திரிபால சிறிசேன Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/%E0%AE%AE%E0%AF%88%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BE%E0%AE%B2-%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9A%E0%AF%87%E0%AE%A9/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/மைத்திரிபால-சிறிசேன/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Thu, 05 Feb 2026 05:19:30 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>மைத்திரிபால சிறிசேன Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/மைத்திரிபால-சிறிசேன/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>என்.பி.பி. அரசை அவ்வளவு எளிதில் வீழ்த்திவிட முடியாது</title>
		<link>https://oruvan.com/the-npp-government-cannot-be-overthrown-so-easily/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Thu, 05 Feb 2026 05:19:23 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[மைத்திரிபால சிறிசேன]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=44521</guid>

					<description><![CDATA[<p>“159 ஆசனங்களை வைத்துள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை அவ்வளவு எளிதில் வீழ்த்திவிட முடியாது.” என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார். “ மாங்காய் மரத்துக்கு கல் அடிப்பதுபோல ஆட்சியை கவிழ்த்துவிட முடியாது. ஆளுங்கட்சி வசம் 159 ஆசனங்கள் உள்ளன. இதனை பயன்படுத்தி தன்னை வலுப்படுத்திக்கொண்டு முன்னோக்கி செல்வதற்கே அரசாங்கம் முற்படும். மறுபுறத்தில் எதிரணிகள் தமது கருத்துகளை முன்வைக்கும். எனவே, ஆட்சி கவிழ்ப்பு தொடர்பில் கதைக்கப்பட்டாலும் யதார்த்தத்தை புரிந்துகொள்ள வேண்டும். கல்வி மறுசீரமைப்பு எனது ஆட்சிகாலத்தில்தான் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/the-npp-government-cannot-be-overthrown-so-easily/">என்.பி.பி. அரசை அவ்வளவு எளிதில் வீழ்த்திவிட முடியாது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>“159 ஆசனங்களை வைத்துள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தை அவ்வளவு எளிதில் வீழ்த்திவிட முடியாது.” என்று முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்தார்.</p>
<p>“ மாங்காய் மரத்துக்கு கல் அடிப்பதுபோல ஆட்சியை கவிழ்த்துவிட முடியாது.</p>
<p>ஆளுங்கட்சி வசம் 159 ஆசனங்கள் உள்ளன. இதனை பயன்படுத்தி தன்னை வலுப்படுத்திக்கொண்டு முன்னோக்கி செல்வதற்கே அரசாங்கம் முற்படும். மறுபுறத்தில் எதிரணிகள் தமது கருத்துகளை முன்வைக்கும்.</p>
<p>எனவே, ஆட்சி கவிழ்ப்பு தொடர்பில் கதைக்கப்பட்டாலும் யதார்த்தத்தை புரிந்துகொள்ள வேண்டும்.</p>
<p>கல்வி மறுசீரமைப்பு எனது ஆட்சிகாலத்தில்தான் ஆரம்பமானது. நாட்டுக்கு பொருத்தமான கல்வி மறுசீரமைப்பு அவசியம். கல்வியில் அரசியலை திணிக்க கூடாது. கல்வி மறுசீரமைப்பென்பது பொறுப்புடன் செய்ய வேண்டிய விடயமாகும்.” – எனவும் மைத்திரிபால சிறிசேன குறிப்பிட்டார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/the-npp-government-cannot-be-overthrown-so-easily/">என்.பி.பி. அரசை அவ்வளவு எளிதில் வீழ்த்திவிட முடியாது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மூன்று வருடங்களின் பின்னரே அரசாங்கம் தொடர்பில் கருத்து வெளியிட முடியும்</title>
		<link>https://oruvan.com/the-government-can-only-comment-on-the-matter-after-three-years/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Tue, 30 Dec 2025 07:04:52 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[மைத்திரிபால சிறிசேன]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=41939</guid>

					<description><![CDATA[<p>அரசாங்கம் தொடர்பில் ஒரு வருடத்தில் அதன் நன்மை, தீமைகள் தொடர்பில் கருத்து கூறுவது உசிதமானதல்ல. புதிய அரசாங்கம் ஒன்று பதவியேற்று மூன்று வருடங்களின் பின்னர் தான் நன்மை, தீமைகள் தொடர்பில் கருத்து கூற முடியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார். கொழும்பில் நடந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.தொடர்ந்து பேசிய அவர்,ஒரு அரசாங்கம் ஒரு வருடத்திற்குள் எதும் பெரிதாக சாதித்து விட முடியாது. மூன்று வருடங்களின் பின்னரே [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/the-government-can-only-comment-on-the-matter-after-three-years/">மூன்று வருடங்களின் பின்னரே அரசாங்கம் தொடர்பில் கருத்து வெளியிட முடியும்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>அரசாங்கம் தொடர்பில் ஒரு வருடத்தில் அதன் நன்மை, தீமைகள் தொடர்பில் கருத்து கூறுவது உசிதமானதல்ல. புதிய அரசாங்கம் ஒன்று பதவியேற்று மூன்று வருடங்களின் பின்னர் தான் நன்மை, தீமைகள் தொடர்பில் கருத்து கூற முடியும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.</p>
<p>கொழும்பில் நடந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.தொடர்ந்து பேசிய அவர்,ஒரு அரசாங்கம் ஒரு வருடத்திற்குள் எதும் பெரிதாக சாதித்து விட முடியாது.</p>
<p>மூன்று வருடங்களின் பின்னரே எந்த பக்கம் போகின்றது என்று தெரியும்.கணக்காய்வாளர் நாயகம் தொடர்பில் இதற்கு முன்னர் எனது ஆட்சி காலத்தில் எவ்வாறு செயற்பட்டுள்ளேன் என்பது தொடர்பில் ஆராய்ந்து பார்த்தால் அது தொடர்பில் தெரிந்து கொள்ளலாம்.“நானும் ஒரு கணக்காய்வாளர் நாயகத்தை நியமித்தேன்.</p>
<p>கணக்காய்வாளர் நாயகத்திற்கான நியமனம் ஒரு மணித்தியாலத்தில் செய்யக்கூடிய வேலையாகும்.பிரதேச சபைகளின் பாதீடு வாக்கெடுப்பில் உறுப்பினர்களின் நிலைப்பாடு மக்களின் எதிர்பார்ப்பாகவும் இருக்கலாம்.</p>
<p>அதை அரசாங்கம் உணர்ந்து செயற்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.உள்ளூராட்சி சட்டத்தின் கீழ், இதுபோன்ற சூழ்நிலைகளை ஜனநாயக ரீதியாக வாக்கெடுப்பு மூலம் தீர்க்க முடியும். இதுபோன்ற சூழ்நிலையில், எந்தவொரு நபருக்கும் ஜனநாயக ரீதியாக தங்கள் வாக்கைப் பயன்படுத்த சுதந்திரம் உள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.</p>
<p>“பொதுவாக, புதிதாக நியமிக்கப்பட்ட அரசாங்கம் சிறப்பாக செயல்படுகின்றதா இல்லையா என்பதனை சுமார் மூன்று ஆண்டுகளுக்கு பின்னரே சரியாக மதிப்பிட முடியும்” என்று மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/the-government-can-only-comment-on-the-matter-after-three-years/">மூன்று வருடங்களின் பின்னரே அரசாங்கம் தொடர்பில் கருத்து வெளியிட முடியும்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மகிந்த மற்றும் மைத்திரிக்கு குண்டு துளைக்காக வாகனங்களை மீள வழங்குவது குறித்து பரிசீலனை – அமைச்சர் ஆனந்த விஜேபால தகவல்</title>
		<link>https://oruvan.com/consideration-to-return-vehicles-to-mahinda-and-maithri-for-bulletproof-vests-minister-ananda-wijepala-informs/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 13 Oct 2025 05:27:16 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Mahinda Rajapaksa]]></category>
		<category><![CDATA[குண்டு துளைக்காத வாகனம்]]></category>
		<category><![CDATA[மகிந்த ராஜபக்ச]]></category>
		<category><![CDATA[மைத்திரிபால சிறிசேன]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=35194</guid>

					<description><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதிகளான மந்தத ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு முன்னர் ஒதுக்கப்பட்ட குண்டு துளைக்காத வாகனங்களை திருப்பித் தருமாறு விடுத்த கோரிக்கைகளை பொது பாதுகாப்பு அமைச்சகம் மறுபரிசீலனை செய்து வருவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது. கொழும்பு ஊடகம் ஒன்றிடம் பேசிய அமைச்சர் ஆனந்த விஜேபால இதனை தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் உரிமைகள் ரத்து செய்தல் சட்டத்தின் கீழ் பாதுகாப்பு தொடர்பான விடயங்கள் உள்ளடக்கப்படவில்லை என்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார். 2025 ஒக்டோபர் தொடக்கத்தில், முன்னாள் ஜனாதிபதிகளுக்கு முன்னர் வழங்கப்பட்ட சலுகைகளை [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/consideration-to-return-vehicles-to-mahinda-and-maithri-for-bulletproof-vests-minister-ananda-wijepala-informs/">மகிந்த மற்றும் மைத்திரிக்கு குண்டு துளைக்காக வாகனங்களை மீள வழங்குவது குறித்து பரிசீலனை – அமைச்சர் ஆனந்த விஜேபால தகவல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p><strong>மு</strong>ன்னாள் ஜனாதிபதிகளான மந்தத ராஜபக்ச மற்றும் மைத்திரிபால சிறிசேன ஆகியோருக்கு முன்னர் ஒதுக்கப்பட்ட குண்டு துளைக்காத வாகனங்களை திருப்பித் தருமாறு விடுத்த கோரிக்கைகளை பொது பாதுகாப்பு அமைச்சகம் மறுபரிசீலனை செய்து வருவதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.</p>
<p>கொழும்பு ஊடகம் ஒன்றிடம் பேசிய அமைச்சர் ஆனந்த விஜேபால இதனை தெரிவித்துள்ளார்.</p>
<p>ஜனாதிபதியின் உரிமைகள் ரத்து செய்தல் சட்டத்தின் கீழ் பாதுகாப்பு தொடர்பான விடயங்கள் உள்ளடக்கப்படவில்லை என்று அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>2025 ஒக்டோபர் தொடக்கத்தில், முன்னாள் ஜனாதிபதிகளுக்கு முன்னர் வழங்கப்பட்ட சலுகைகளை மீண்டும் பெறுவதற்கான அரசாங்கத்தின் உத்தரவுக்கு இணங்க, மகிந்த ராஜபக்ச தனது குண்டு துளைக்காத வாகனத்தை திருப்பித் தந்தார்.</p>
<p>முன்னாள் ஜனாதிபதிகள் இருவரும் வாகனங்களைத் திருப்பித் தருமாறு கோரியதாக அமைச்சர் விஜேபால தெரிவித்துள்ளார்.</p>
<p>மைத்திரிபால சிறிசேன வாய்மொழியாக இந்த கோரிக்கையை விடுத்துள்ளதாகவும், அதே நேரத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச எழுத்துப்பூர்வ கோரிக்கையை சமர்ப்பித்துள்ளதாகவும் அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>இந்தக் கோரிக்கைகள் பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் மற்றும் பொலிஸ்மா அதிபர் போன்ற மூத்த அதிகாரிகள் அடங்கிய மதிப்பீட்டுக் குழுவிற்கு பரிந்துரைக்கப்படும் என்று அமைச்சர் மேலும் கூறினார்.</p>
<p>&#8220;வாகனங்களை மீளப் பெற்றமை அவர்களின் பாதுகாப்பை எந்த வகையிலும் பாதித்தால், வாகனங்களை அவர்களுக்கு மீள கையளிப்பதற்கான வாய்ப்பு உள்ளது,&#8221; என்று அமைச்சர் கூறியுள்ளார்.</p>
<p>குழுவின் முடிவின்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>முன்னாள் ஜனாதிபதிகளின் பாதுகாப்புக்கு ஆபத்து இருந்தால், அத்தகைய வாகனங்களை மீள அவர்களுக்கு கையளிப்பதற்கு சட்டம் அனுமதிக்கிறது என்று அமைச்சர் நாடாளுமன்றத்தில் கூறியிருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/consideration-to-return-vehicles-to-mahinda-and-maithri-for-bulletproof-vests-minister-ananda-wijepala-informs/">மகிந்த மற்றும் மைத்திரிக்கு குண்டு துளைக்காக வாகனங்களை மீள வழங்குவது குறித்து பரிசீலனை – அமைச்சர் ஆனந்த விஜேபால தகவல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மைத்திரியிடம் சாட்சியம் பதிவு</title>
		<link>https://oruvan.com/record-testimony-with-maithri/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Mon, 28 Apr 2025 12:31:55 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[மைத்திரிபால சிறிசேன]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=18765</guid>

					<description><![CDATA[<p>கடந்த 2008 ஆம் ஆண்டு பொரலஸ்கமுவ பகுதியில் நடந்த தற்கொலை குண்டு தாக்குதல் தொடர்பான வழக்கில் சாட்சியாகப் பெயரிடப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று (28) சாட்சியம் பதிவு செய்யப்பட்டது. 2008 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி பொரலஸ்கமுவ பகுதியில் அப்போதைய விவசாய அமைச்சராக செயற்பட்ட மைத்திரிபால சிறிசேனவை கொல்லும் நோக்கில் தற்கொலை குண்டு தாக்குதலுக்கு உதவியதாக இரண்டு பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/record-testimony-with-maithri/">மைத்திரியிடம் சாட்சியம் பதிவு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>கடந்த 2008 ஆம் ஆண்டு பொரலஸ்கமுவ பகுதியில் நடந்த தற்கொலை குண்டு தாக்குதல் தொடர்பான வழக்கில் சாட்சியாகப் பெயரிடப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று (28) சாட்சியம் பதிவு செய்யப்பட்டது.</p>
<p>2008 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 10 ஆம் திகதி பொரலஸ்கமுவ பகுதியில் அப்போதைய விவசாய அமைச்சராக செயற்பட்ட மைத்திரிபால சிறிசேனவை கொல்லும் நோக்கில் தற்கொலை குண்டு தாக்குதலுக்கு உதவியதாக இரண்டு பிரதிவாதிகளுக்கு எதிராக சட்டமா அதிபரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு இன்று கொழும்பு மேல் நீதிமன்ற நீதிபதி ஆர்.எஸ்.எஸ். சப்புவித முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p>
<p>இதன்போது, முன்னதாக பிறப்பிக்கப்பட்டிருந்த அழைப்பாணைக்கு அமைய முதல் சாட்சியாகப் பெயரிடப்பட்ட முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நீதிமன்றத்தில் முன்னிலையாகி தனது சாட்சியத்தை பதிவு செய்தமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/record-testimony-with-maithri/">மைத்திரியிடம் சாட்சியம் பதிவு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ரணில், மைத்திரி மீண்டும் களத்தில் &#8211; அடுத்தகட்ட நகர்வு என்ன?</title>
		<link>https://oruvan.com/ranil-maithri-back-in-the-fray-whats-the-next-move/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Sat, 15 Feb 2025 04:02:39 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஐ.தே.க]]></category>
		<category><![CDATA[சுசில் பிரேமஜயந்த]]></category>
		<category><![CDATA[நிமல் சிறிபால டி சில்வா]]></category>
		<category><![CDATA[மைத்திரிபால சிறிசேன]]></category>
		<category><![CDATA[ரணில் விக்ரமசிங்க]]></category>
		<category><![CDATA[ஷெஹான் சேமசிங்க]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=10578</guid>

					<description><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதிகளாக ரணில் விக்ரமசிங்க, மைத்திரிபால சிறிசேன ஆகியோர் கடந்த 30ஆம் திகதி சந்தித்து கலந்துரையாடிமை தொடர்பில் தேசிய அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது. இந்த விடயம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பிய போது, இது சாதாரணமாக நடந்த சந்திப்பொன்று எனக் கூறியதுடன், அரசியல்வாதிகள் பொது நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் போது சந்திப்பது இயல்பானது என்றும் பதிலளித்திருந்தார். மைத்திரிபால சிறிசேன இவ்வாறு கூறியிருந்தாலும், இந்த சந்திப்பு அரசியல் நோக்கங்களின் அடிப்படையிலும், எதிர்கால அரசியல் போக்கு தொடர்பிலும் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/ranil-maithri-back-in-the-fray-whats-the-next-move/">ரணில், மைத்திரி மீண்டும் களத்தில் &#8211; அடுத்தகட்ட நகர்வு என்ன?</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதிகளாக ரணில் விக்ரமசிங்க, மைத்திரிபால சிறிசேன ஆகியோர் கடந்த 30ஆம் திகதி சந்தித்து கலந்துரையாடிமை தொடர்பில் தேசிய அரசியலில் பேசுபொருளாக மாறியுள்ளது.</p>
<p>இந்த விடயம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் ஊடகவியலாளர்கள் கேள்வியெழுப்பிய போது, இது சாதாரணமாக நடந்த சந்திப்பொன்று எனக் கூறியதுடன், அரசியல்வாதிகள் பொது நிகழ்வுகளில் கலந்துகொள்ளும் போது சந்திப்பது இயல்பானது என்றும் பதிலளித்திருந்தார்.</p>
<p>மைத்திரிபால சிறிசேன இவ்வாறு கூறியிருந்தாலும், இந்த சந்திப்பு அரசியல் நோக்கங்களின் அடிப்படையிலும், எதிர்கால அரசியல் போக்கு தொடர்பிலும் கலந்துரையாட இடம்பெற்றதென ஐ.தே.கவின் தகவல் அறியும் வட்டாரங்களில் அறிய முடிந்தது.</p>
<p>ஐ.தே.க மற்றும் ஐக்கிய மக்கள் சக்திக்கு இடையில் ஒருபுறம் பேச்சுகள் இடம்பெற்று வருகின்றன. அதேபோன்று ஏனைய அரசியல் கட்சிகளையும் ஒன்றிணைக்கும் முயற்சியில் ஐ.தே.க ஈடுபட்டுள்ளது.</p>
<p>அதன் ஒருகட்டம்தான் ரணில் &#8211; மைத்திரி சந்திப்பு எனத் தெரியவருகிறது.</p>
<p>ஆளுங்கட்சியின் செயல்பாடுகள் பல்வேறு அரசியல் கட்சிகளின் எதிர்கால செயல்பாடுகளுக்கு தடைகளை ஏற்படுத்தும் என பல்வேறு கட்சிகள் கருதுவதால் அரசாங்கத்துக்கு எதிரான வலுவான கூட்டணியொன்றை உருவாக்க வேண்டுமென்ற தொனியில் பல்வேறு சந்திப்புகள் கடந்த சில நாட்களாக நடத்தப்பட்டு வருகின்றன.</p>
<p>ரணில் &#8211; மைத்திரி சந்திப்புக்குப் பின்னர் ஐ.தே.கவின் தவிசாளர் வஜிர அபேவர்தன, பிவிதுரு ஹெல உறுமய கட்சியின் தலைவர் உதய கம்மன்பில, முன்னாள் அமைச்சர்களான அனுர பிரியதர்ஷன யாப்பா, சுசில் பிரேமஜயந்த, ஷெஹான் சேமசிங்க, நிமல் லான்சா, நிமல் சிறிபால டி சில்வா, பிரேம்நாத் சி. டொலவத்தே மற்றும் சாகல ரத்நாயக்க ஆகியோர் சந்தித்த கலந்துரையாடியுள்ளனர்.</p>
<p>இந்தச் சந்திப்பிலும் எதிர்காலத்தில் எவ்வாறு இணக்கமாகச் செயல்படுவதென கலந்துரையாடப்பட்டுள்ளது. அடுத்தகட்ட சந்திப்புகளும் தொடர்ந்து இடம்பெற உள்ளதாக ஐ.தே.கவின் வட்டாரங்களில் அறிய முடிகிறது.</p>
<p>அரசாங்கத்தின் சில தீர்மானங்கள் நாட்டில் தாக்கங்களை ஏற்படுத்தும் சூழ்நிலை எழுந்தால் மீண்டும் அரசியல் ரீதியாக எழுச்சியடைய முடியும் என கருதும் இந்தக் கட்சிகளின் தலைவர்கள் தொடர்ச்சியான பேச்சுகளை நடத்தி இணங்கிச் செயல்படுவதற்கான முயற்சிகளை எடுக்க விருப்பத்தில் உள்ளதாகவும் தெரியவருகிறது.</p>
<p>The post <a href="https://oruvan.com/ranil-maithri-back-in-the-fray-whats-the-next-move/">ரணில், மைத்திரி மீண்டும் களத்தில் &#8211; அடுத்தகட்ட நகர்வு என்ன?</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>அரசியலமைப்புப் பேரவையும் ரணிலும்</title>
		<link>https://oruvan.com/ranil-in-the-constitutional-assembly/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Sat, 14 Dec 2024 04:10:08 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கட்டுரை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை ஒற்றையாட்சி]]></category>
		<category><![CDATA[ஐக்கிய நாடுகள் சபை]]></category>
		<category><![CDATA[ஒருவன்]]></category>
		<category><![CDATA[மனித உரிமைச் சபை]]></category>
		<category><![CDATA[மைத்திரிபால சிறிசேன]]></category>
		<category><![CDATA[ரணில் விக்கிரமசிங்க]]></category>
		<category><![CDATA[ஜெனீவா]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=2473</guid>

					<description><![CDATA[<p>இலங்கை ஒற்றையாட்சி அரசின் நீதிமன்ற நடைமுறைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைச் சபை பல்வேறு சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டியிருந்தது. நீதித்துறைச் செயற்பாடுகளில் மக்கள் நம்பிக்கை வைக்க வேண்டும் எனவும் நீதித்துறையின் செற்பாடு சுயாதீனமாக இருக்க வேண்டும் எனவும் ஜெனீவா மனித உரிமைச் சபை ஆணையாளரின் அறிக்கைகளில் கூறப்பட்டுமிருந்தது. இலங்கை 1972 இல் குடியரசாகிய பின்னர் 1978ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இரண்டாவது யாப்பில் இலங்கை நீதித்துறையின் செயற்பாடுகள் மேலும் மாற்றியமைக்கப்பட்டன. 2015ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 19 ஆவது [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/ranil-in-the-constitutional-assembly/">அரசியலமைப்புப் பேரவையும் ரணிலும்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கை ஒற்றையாட்சி அரசின் நீதிமன்ற நடைமுறைகள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைச் சபை பல்வேறு சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டியிருந்தது. நீதித்துறைச் செயற்பாடுகளில் மக்கள் நம்பிக்கை வைக்க வேண்டும் எனவும் நீதித்துறையின் செற்பாடு சுயாதீனமாக இருக்க வேண்டும் எனவும் ஜெனீவா மனித உரிமைச் சபை ஆணையாளரின் அறிக்கைகளில் கூறப்பட்டுமிருந்தது.</p>
<p>இலங்கை 1972 இல் குடியரசாகிய பின்னர் 1978ஆம் ஆண்டு உருவாக்கப்பட்ட இரண்டாவது யாப்பில் இலங்கை நீதித்துறையின் செயற்பாடுகள் மேலும் மாற்றியமைக்கப்பட்டன. 2015ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட 19 ஆவது திருத்தச் சட்டத்தின் மூலம் நீதித்துறையின் செயற்பாடுகள் சுயாதீனமாக இயங்கக்கூடிய அளவுக்கு அரசியலமைப்புப் பேரவை உருவாக்கப்பட்டது. நீதித்துறை மாத்திரமல்ல தேர்தல் திணைக்களம், பொலிஸ் திணைக்களம் உள்ளிட்ட முக்கியமான அரச நிறுவனங்கள் சுயாதீனமாக இயங்கக்கூடிய முறையில் அரசியலமைப்புப் பேரவை உருவாக்கப்பட்டது.</p>
<p>மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதியாகவும் ரணில் விக்கிரமசிங்க பிரதமராகவும் பதவி வகித்த 2015 ஆம் ஆண்டுதான் இத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. மகிந்த ராஜபக்சவின் 18 ஆவது திருத்தம் அரச நிறுவனங்கள் சுயாதீனமாகச் செயற்பட அனுமதிக்கவில்லை என்று குற்றம் சுமத்தியே 2015இல் 19 ஆவது திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது</p>
<p>அப்போது மிகவும் ஜனநாயக மொழியில் வாதிட்டிருந்த ரணில் விக்கிரமசிங்க 2022 இல் ஜனாதிபதியாகப் பதவியேற்றதும் நீதித்துறையின் செயற்பாடுகளில் தலையிட்டமை அரசியல் நாகரிகமல்ல என்று அப்போது பலரும் சுட்டிக்காட்டியிருந்தனர்.</p>
<p>குறிப்பாக மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவர் நீதிபதி நிஷ்ஷங்க பந்துல கருணாரத்னவை உயர்நீதிமன்ற நீதியரசராக நியமிக்கும் விடயத்தில் ரணில் மேற்கொண்ட நடவடிக்கைகள் அரசியலமைப்புச் பேரவையின் செயற்பாடுகளுக்கு ஏற்புடையதாக இருக்கவில்லை.</p>
<p>இந்த நிலையில் நிஷ்ஷங்க பந்துல கருணாரத்னவை உயர்நீதிமன்ற நீதியரசராக நியமிப்பதற்கு அரசியலமைப்புச் பேரவையில் முன்வைக்கப்பட்ட ரணிலின் பரிந்துரையை நிராகரிப்பதற்கு அதன் பெரும்பான்மை உறுப்பினர்கள் எடுத்த தீர்மானம் சரியானது என்றும் அடிப்படை உரிமைகள் மீறப்படவில்லை எனவும் உயர் நீதிமன்றம் சென்ற வியாழக்கிழமை தீர்ப்பு வழங்கியுள்ளது.</p>
<p>இத் தீர்ப்பு இலங்கை ஒற்றையாட்சி அரசின் நிறைவேற்று அதிகாரத்தை ரணில் துஸ்பிரயோகம் செய்திருக்கிறார் என்பதை பகிரங்கப்படுத்தியுள்ளது.</p>
<p>2005 ஆம் ஆண்டில் இருந்து 2014 ஆம் ஆண்டு வரையான மகிந்த ராஜபக்சவின் ஆட்சியை விமர்சித்திருந்த ரணில் 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் கோட்டாபய ராஜபக்ச ஜனாதிபதிபதிப் பதவியில் இருந்து விலகிய பின்னர் நாடாளுமன்றத்தில் நடைபெற்ற வாக்கெடுப்பில் வெற்றி பெற்று ஜனாதிபதியாகத் தெரிவானார்.</p>
<p>ஆனால், மகிந்த ராஜபக்சவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனக் கட்சியின் ஆதரவுடன் அவர் ஜனாதிபதியாகினார் என்பதும் ராஜபக்ச குடும்பத்தின் ஆதரவுடன் அரசாங்கத்தை அமைத்திருந்தார் என்பது எல்லோருக்கும் தெரியும். இப் பின்னணியில்தான் ரணிலின் ஆட்சிக் காலத்தில் அதிகாரத் துஸ்பிரயோகங்கள் மற்றும் ஊழல் மோசடிகள் இடம்பெற்றிருக்கின்ற என்பதும் புரியாத புதிரல்ல.</p>
<p>ஜனாதிபதியாகப் பதவி வகித்திருந்தபோது இலங்கை நீதித்துறையை தனது கட்டுப்பாட்டில் வைத்திருந்தவர் மகிந்த ராஜபக்ச என்பதை உலகம் அறியும். குறிப்பாக திவிநெகும சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற அப்போது பிரதம நீதியரசராக பதவி வகித்திருந்த சிறாணி பண்டாரநாயக்காவை பதவியில் இருந்து விலக்கியவர் என்பதை மக்கள் அறிவர்.</p>
<p>அதிகாரங்களை தமது அரசிடம் குவியப்படுத்தும் நோக்கில் கொண்டுவரப்பட்ட மகிந்த அரசின் திவிநெகும சட்டத்துக்கு (Divi Neguma Bill) எதிராகக் கொண்டுவரப்பட்ட வழக்கில் அச்சட்டம் செல்லுபடியாகாது என்று சிறாணி பண்டாரநாயக்கா தீர்ப்பளித்தார். இத் தீர்ப்பு மகிந்தவுக்கு அறிவிக்கப்பட்ட அடுத்த நாள் சிறாணிக்கு எதிராக அரசதரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாத்திரம் கையொப்பமிட்ட குற்றச்சாட்டுக்கள் (Impeachment) தொடுக்கப்பட்டன.</p>
<p>இக் குற்றச்சாட்டுக்களில் மூன்று நிரூபிக்கப்பட்டுள்ளதாக அரச தரப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் கொண்ட ஒரு குழு டிசம்பர் 2012 இல் தீர்ப்பளித்தது. இந்தத் தீர்ப்பை எதிர்க்கட்சிகள், பல்வேறு மனித உரிமை அமைப்புகள், மற்றும் சர்வதேச நாடுகள் கண்டித்திருந்தன.</p>
<p>இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கம் கடுமையாக விமர்சித்திருந்தது. ஆனால், எந்த ஒரு விமர்சனங்களையும் கண்டனங்களையும் மகிந்த கண்டுகொள்ளவில்லை. மாறாக சிறாணி பண்டாரநாயக்காவின் இல்லத்துக்கு முன்பாக அரச ஆதரவாளர்களும், குண்டர்களும் ஆர்ப்பாட்டம் நடத்துவதற்குத் தூண்டினார்.</p>
<p>மகிந்தவின் இச் செயற்பாடுகளை அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ரணில் கடுமையாகக் கண்டித்ததுடன் சர்வதேச நாடுகளிடமும் முறையிட்டிருந்தார். இந்த அரசியல் செயற்பாடுகளின் பின்னணியில் ரணில் வகுத்த வியூகங்களை ஏற்று அப்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் செயலாளராக இருந்த மைத்திரிபால சிறிசேன கட்சியின் இருந்து வெளியேறி ரணிலுடன் கூட்டுச் சேர்ந்து 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதியாகப் பதவியேற்றார். ரணில் பிரதமரானார். சிறாணி பண்டாரநாயக்க மீண்டும் பிரதம நீதியரசராகப் பதவியேற்றார். 2015இல் 19 ஜனாதிபதியின் அதிகாரங்களைக் குறைக்கும் 19 ஆவது திருத்தம் நாடாளுமன்றத்தில் நிறைவேறியது.</p>
<p>ஆனால் 2022 இல் அதிஸ்டவசமாக ஜனாதிபதியான ரணில் நீதித்துறையின் செயற்பாடுகளில் தலையிட்டது மாத்திரமல்ல 19 ஆவது திருத்தத்துக்கு மாறாக ஜனாதிபதிக்குரிய அதிகாரங்களையும் அவர் மீறியிருக்கிறார் என்பது வேடிக்கை மாத்திரமல்ல அவமானமும் கூட. ஆகவே பாரம்பரியக் கட்சிகளை ஓரம்கட்டி ஆட்சிக்கு வந்துள்ள அநுரவும் இச் செயற்பாடுகளுக்கு உள்ளாகிவிடக்கூடாது.</p>
<p>ஈழத்தமிழர்களின் அரசியல் உரிமை சார்ந்த விவகாரங்களில் நீதித்துறை இவ்வாறுதான் செயற்பட்டிருந்தது. ஆகவே மாற்றம் என்று மார் தட்டும் அநுர இவற்றை கவனத்தில் எடுப்பாரா?</p>
<p>(”ஒருவன்” ஞாயிறு வார இதழில் வெளியான ஆசிரியர் தலையங்கம்)</p>
<p>The post <a href="https://oruvan.com/ranil-in-the-constitutional-assembly/">அரசியலமைப்புப் பேரவையும் ரணிலும்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
