<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>மரண தண்டனை Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/%E0%AE%AE%E0%AE%B0%E0%AE%A3-%E0%AE%A4%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%9F%E0%AE%A9%E0%AF%88/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/மரண-தண்டனை/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Fri, 17 Oct 2025 06:21:01 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.3</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>மரண தண்டனை Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/மரண-தண்டனை/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்! வலுக்கும் கோரிக்கை</title>
		<link>https://oruvan.com/sheikh-hasina-should-be-given-death-penalty-strong-demand/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Fri, 17 Oct 2025 06:21:01 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Bangladesh]]></category>
		<category><![CDATA[Bangladesh Court]]></category>
		<category><![CDATA[Sheikh Hasina]]></category>
		<category><![CDATA[மரண தண்டனை]]></category>
		<category><![CDATA[ஷேக் ஹசீனா]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=35672</guid>

					<description><![CDATA[<p>பங்களாதேஷில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று அந்நாட்டு சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த ஆண்டு இடம்பெற்ற போராட்டத்தை அடுத்து அதிகாரத்தில் இருந்து தூக்கியெறியப்பட்ட ஷேக் ஹசினா, இந்தியாவுக்கு தப்பிச் சென்றதுடன், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக விசாரணையில் உள்ளார். கசிந்த குரல் பதிவுகளின்படி, போராட்டக்காரர்களுக்கு எதிராக &#8220;கொடிய ஆயுதங்களைப் பயன்படுத்த&#8221; பாதுகாப்புப் படையினருக்கு ஷேக் ஹசினா உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகின்றது. எவ்வாறாயினும், இந்த குற்றச்சாட்டுகளை ஷேக் ஹசினா மறுத்துள்ளார். ஹசீனாவின் 15 ஆண்டுகால [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/sheikh-hasina-should-be-given-death-penalty-strong-demand/">ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்! வலுக்கும் கோரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பங்களாதேஷில் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவிற்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று அந்நாட்டு சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
<p>கடந்த ஆண்டு இடம்பெற்ற போராட்டத்தை அடுத்து அதிகாரத்தில் இருந்து தூக்கியெறியப்பட்ட ஷேக் ஹசினா, இந்தியாவுக்கு தப்பிச் சென்றதுடன், மனிதகுலத்திற்கு எதிரான குற்றங்களுக்காக விசாரணையில் உள்ளார்.</p>
<p>கசிந்த குரல் பதிவுகளின்படி, போராட்டக்காரர்களுக்கு எதிராக &#8220;கொடிய ஆயுதங்களைப் பயன்படுத்த&#8221; பாதுகாப்புப் படையினருக்கு ஷேக் ஹசினா உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகின்றது.</p>
<p>எவ்வாறாயினும், இந்த குற்றச்சாட்டுகளை ஷேக் ஹசினா மறுத்துள்ளார்.</p>
<p>ஹசீனாவின் 15 ஆண்டுகால ஆட்சியை முடிவுக்குக் கொண்டுவந்த கலவரத்தில் 1,400 பேர் வரை கொல்லப்பட்டனர். 1971 ஆம் ஆண்டு சுதந்திரப் போருக்குப் பிறகு பங்களாதேஷ் கண்ட மிக மோசமான வன்முறை இதுவாகும்.</p>
<p>ஹசீனாவுக்கு 1,400 மரண தண்டனைகள் வழங்கப்பட வேண்டும் என்று கூறினார். &#8221; மனித ரீதியாக இது சாத்தியமில்லாததால், குறைந்தபட்சம் ஒன்றையாவது நாங்கள் கோருகிறோம்,&#8221; என்று தலைமை சட்டத்தரணி தாஜுல் இஸ்லாம் வலியுறுத்தியுள்ளார்.</p>
<p>&#8220;ஹசீனாவின் குறிக்கோள், தனக்கும் தனது குடும்பத்திற்கும் நிரந்தரமாக அதிகாரத்தில் ஒட்டிக்கொள்வதாகும்,&#8221; என்று இஸ்லாம் வியாழக்கிழமை நீதிமன்றத்தில் தெரிவித்தார்.</p>
<p>&#8220;அவர் ஒரு கடுமையான குற்றவாளியாக மாறிவிட்டார், அவர் செய்த கொடூரத்திற்கு எந்த வருத்தமும் காட்டவில்லை,&#8221; என்று சட்டத்தரணி தாஜுல் இஸ்லாம் தெரிவித்துள்ளார்.</p>
<p>ஹசீனாவின் முன்னாள் உள்துறை அமைச்சர் அசாதுஸ்மான் கான் கமல் மற்றும் முன்னாள் பொலிஸ் தலைவர் சவுத்ரி அப்துல்லா அல்-மாமுன் ஆகியோருக்கும் விசாரணைகள் நடைபெற்று வருகிறன.</p>
<p>கமலும் தலைமறைவாக இருப்பதால், அவருக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும் என்று சட்டத்தரணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.<br />
ஜூலை மாதம் சவுத்ரி குற்றத்தை ஒப்புக்கொண்டுள்ளார். எனினும், அவருக்கு இன்னும் தண்டனை வழங்கப்படவில்லை.</p>
<p>நீதிமன்ற அவமதிப்புக்காக ஹசீனாவுக்கு ஏற்கனவே ஆறு மாத சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது, மேலும் அவர் மீது ஊழல் குற்றச்சாட்டுகளும் தனித்தனியாக சுமத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/sheikh-hasina-should-be-given-death-penalty-strong-demand/">ஷேக் ஹசீனாவுக்கு மரண தண்டனை விதிக்க வேண்டும்! வலுக்கும் கோரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மற்றுமொரு தமிழருக்கு சிங்கப்பூரில் மரண தண்டனை நிறைவேற்றம்</title>
		<link>https://oruvan.com/another-tamil-executed-in-singapore/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 08 Oct 2025 11:22:12 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[தட்சிணாமூர்த்தி]]></category>
		<category><![CDATA[பன்னீர்செல்வம் பரந்தாமன்]]></category>
		<category><![CDATA[மரண தண்டனை]]></category>
		<category><![CDATA[மரண தண்டனை நிறைவேற்றம்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=34798</guid>

					<description><![CDATA[<p>போதைப் பொருள் கடத்தி குற்றச்சாட்டில் மலேசிய நாட்டைச் சேர்ந்த பன்னீர்செல்வம் பரந்தாமன் (38) என்பவருக்கு சிங்கப்பூரில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த 2014ஆம் ஆண்டில் 51.84 கிராம் ஹெராயின் போதைப்பொருளைச் சிங்கப்பூருக்குக் கடத்தியதற்காக மலேசிய நாட்டைச் சேர்ந்த பன்னீர்செல்வம் பரந்தாமன் (38) என்பவருக்கு இவ்வாறு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதை அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர். மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு விட்டது,” என்று பன்னீரின் சகோதரி சங்கரி பரந்தாமன் தெரிவித்துள்ளார். கடந்த 25ஆம் திகதி மற்றொரு [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/another-tamil-executed-in-singapore/">மற்றுமொரு தமிழருக்கு சிங்கப்பூரில் மரண தண்டனை நிறைவேற்றம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>போதைப் பொருள் கடத்தி குற்றச்சாட்டில் மலேசிய நாட்டைச் சேர்ந்த பன்னீர்செல்வம் பரந்தாமன் (38) என்பவருக்கு சிங்கப்பூரில் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.</p>
<p>கடந்த 2014ஆம் ஆண்டில் 51.84 கிராம் ஹெராயின் போதைப்பொருளைச் சிங்கப்பூருக்குக் கடத்தியதற்காக மலேசிய நாட்டைச் சேர்ந்த பன்னீர்செல்வம் பரந்தாமன் (38) என்பவருக்கு இவ்வாறு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.</p>
<p>மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதை அவரது குடும்பத்தினர் உறுதிப்படுத்தியுள்ளனர். மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு விட்டது,” என்று பன்னீரின் சகோதரி சங்கரி பரந்தாமன் தெரிவித்துள்ளார்.</p>
<p>கடந்த 25ஆம் திகதி மற்றொரு மலேசியருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டு இரண்டு வாரங்களில் சிங்கப்பூரில் இரண்டாவது முறையாக பன்னீர்செல்வத்தின் மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.</p>
<p>சிங்கப்பூரின் கடுமையான சட்டங்களின்கீழ், 15 கிராமுக்கு மேல் ஹெராயின் கடத்தல் குற்றத்துக்குக் கட்டாய மரண தண்டனை விதிக்கப்படும்.</p>
<p>“இரண்டு வாரங்களுக்குள் தூக்கிலிடப்பட்ட இரண்டாவது மலேசியர் பன்னீர் ஆவார். சிங்கப்பூரில் மரண தண்டனை விதிக்கப்பட்ட மலேசியர்கள் எண்ணிக்கை அதிகமாக இருப்பதால், மலேசிய அரசாங்கம் இதில் தலையிட வேண்டும்,” என்று பன்னீரின் குடும்ப சட்டத்தரணி கோரிக்கை விடுத்துள்ளார்.</p>
<p>மரண தண்டனை விதிக்கப்பட்பட்ட சமயத்தில் பன்னீர் தனது வாழ்க்கையை மாற்றியமைத்து ஓர் எழுத்தாளர், கவிஞர் மற்றும் ஆர்வலராக இருந்தார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>மேலும் தனது குடும்பத்துடன் இணைந்து நிறுவிய ஒரு அரசு சாரா நிறுவனம் மூலம் மற்றவர்களுக்கு உதவி செய்ததாகவும் கூறப்படுகின்றது.</p>
<p>கோலாலம்பூரில் உள்ள சிங்கப்பூர்த் தூதரகத்துக்கு வெளியே நேற்று பன்னீர் குடும்பத்தின் ஆதரவாளர்கள் மெழுகுவத்தி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடத்தியதுடன் சிங்கப்பூர் அரசாங்கம் கருணை காட்டும்படி கோரினர்.</p>
<p>2014ஆம் ஆண்டு செப்டம்பர் மூன்றாம் திகதி உட்லண்ட்ஸ் சோதனைச் சாவடியில் ஹெராயின் கடத்தியதற்காக 2017ஆம் ஆண்டு ஜூன் 27ஆம் திகதி சிங்கப்பூர் உயர் நீதிமன்றத்தால் பன்னீர் குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு மரண தண்டனை விதிக்கப்பட்டார்.</p>
<p>அவரது மேல்முறையீடு மற்றும் கருணை மனு பின்னர் நிராகரிக்கப்பட்டது.</p>
<p>கடந்த மாதம், சிங்கப்பூர் இதேபோன்ற குற்றத்திற்காக மற்றொரு மலேசியரான கே. தட்சிணாமூர்த்தி (39) என்பவரின் மரண தண்டனையை நிறைவேற்றியது.</p>
<p>இது போதைப்பொருள் குற்றங்களுக்கு எதிரான அதன் கடுமையான நிலைப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறமை குறிப்பிடத்கதக்து.</p>
<p>The post <a href="https://oruvan.com/another-tamil-executed-in-singapore/">மற்றுமொரு தமிழருக்கு சிங்கப்பூரில் மரண தண்டனை நிறைவேற்றம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>போதைப்பொருள் கடத்தல் &#8211; சிங்கப்பூரில் தமிழர் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்</title>
		<link>https://oruvan.com/drug-trafficking-tamil-man-executed-in-singapore/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Fri, 26 Sep 2025 04:12:44 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Singapore]]></category>
		<category><![CDATA[சிங்கப்பூர்]]></category>
		<category><![CDATA[தட்சிணாமூர்த்தி]]></category>
		<category><![CDATA[தட்சிணாமூர்த்தி காத்தையா]]></category>
		<category><![CDATA[மரண தண்டனை]]></category>
		<category><![CDATA[மரண தண்டனை நிறைவேற்றம்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=33592</guid>

					<description><![CDATA[<p>சிங்கப்பூரின், சாங்கி சிறையில் மரண தண்டனையை எதிர்நோக்கி வந்த மலேசியாவைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி காத்தையாவிற்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்நாட்டின் மத்திய போதைப்பொருள் பிரிவு சி.என்.பி இதனை உறுதிப்படுத்தியது. இதன்படி, நேற்று வியாழக்கிழமை அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 39 வயதுடைய தட்சிணாமூர்த்தி, சிங்கப்பூருக்கு 44.96 கிராம் diamorphine-னை கடத்தியதாக கடந்த 2011ஆம் ஆண்டில் குற்றம் சாட்டப்பட்டு 2015ஆம் ஆண்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவர் தம்மீதான குற்றச்சாட்டு மற்றும் தண்டனையை மேல்முறையீடு செய்த வேளையில், [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/drug-trafficking-tamil-man-executed-in-singapore/">போதைப்பொருள் கடத்தல் &#8211; சிங்கப்பூரில் தமிழர் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>சிங்கப்பூரின், சாங்கி சிறையில் மரண தண்டனையை எதிர்நோக்கி வந்த மலேசியாவைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி காத்தையாவிற்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.</p>
<p>அந்நாட்டின் மத்திய போதைப்பொருள் பிரிவு சி.என்.பி இதனை உறுதிப்படுத்தியது. இதன்படி, நேற்று வியாழக்கிழமை அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>39 வயதுடைய தட்சிணாமூர்த்தி, சிங்கப்பூருக்கு 44.96 கிராம் diamorphine-னை கடத்தியதாக கடந்த 2011ஆம் ஆண்டில் குற்றம் சாட்டப்பட்டு 2015ஆம் ஆண்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டது.</p>
<p>அவர் தம்மீதான குற்றச்சாட்டு மற்றும் தண்டனையை மேல்முறையீடு செய்த வேளையில், கடந்த 2016ஆம் ஆண்டு பெப்ரவரி ஐந்தாம் திகதி மேல்முறையீட்டு நீதிமன்றம் அதை தள்ளுபடி செய்தது</p>
<p>அதைத் தொடர்ந்து, கடந்த 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 29ஆம் திகதியே தட்சிணாமூர்த்தி தூக்கிலிடப்பட்டிருக்க வேண்டும்.</p>
<p>ஆனால், நீதித்துறை சீராய்வு வழக்கு விசாரணையைத் தொடங்க அனுமதிக்கும் வகையில், மரணதண்டனை நிறைவேற்றுவதற்கு முன்னதாக அதற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.</p>
<p>அத்துடன் மேல் முறையீட்டின் போது சட்ட ஆலோசகர் ஒருவரும் அவருக்கு நியமிக்கப்பட்டதாக, அறிக்கை ஒன்றில் சி.என்.பி கூறியிருந்தது.</p>
<p>மேலும், சிங்கப்பூர் ஜனாதிபதியிடம் தட்சிணாமூர்த்தி, கருணை மனு தாக்கல் செய்திருந்தபோதும் அது தோல்வியடைந்ததாக சி.என்.பி தெரிவித்தது.</p>
<p>இதேவேளை, எஸ். சாமிநாதன், ஆர்.லிங்கேஸ்வரன், பன்னீர் செல்வம் பரந்தாமன் ஆகிய மூன்று மலேசியர்களும் சிங்கப்பூர் சிறையில் மரண தண்டனையை எதிர்நோக்கி வருகின்றனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/drug-trafficking-tamil-man-executed-in-singapore/">போதைப்பொருள் கடத்தல் &#8211; சிங்கப்பூரில் தமிழர் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சீனாவில் 4 கனடா நாட்டினருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்</title>
		<link>https://oruvan.com/4-canadians-executed-in-china/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Thu, 20 Mar 2025 08:23:47 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[மரண தண்டனை]]></category>
		<category><![CDATA[மெலானி ஜோலி]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=15178</guid>

					<description><![CDATA[<p>சீனாவில் கனடா நாட்டைச் சேர்ந்த 4 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. சீனாவில் போதைப் பொருள் வழக்கில் கைதான 4 கனடா நாட்டினருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களது தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக கனடா வெளியுறவுத் துறை அமைச்சர் மெலானி ஜோலி தெரிவித்துள்ளார். இந்நிலையில், அந்த 4 பேரை பற்றிய தகவல்கள் அவர்களது குடும்பத்தினரின் வேண்டுகோளுக்கு இணங்க வெளியிடப்படவில்லை. ஆனால், அவர்கள் நால்வரும் சீனா மற்றும் கனடா ஆகிய இரு நாடுகளிலும் குடியுரிமை பெற்றிருந்தார்கள் எனக் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/4-canadians-executed-in-china/">சீனாவில் 4 கனடா நாட்டினருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>சீனாவில் கனடா நாட்டைச் சேர்ந்த 4 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>சீனாவில் போதைப் பொருள் வழக்கில் கைதான 4 கனடா நாட்டினருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டிருந்த நிலையில் அவர்களது தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக கனடா வெளியுறவுத் துறை அமைச்சர் மெலானி ஜோலி தெரிவித்துள்ளார்.</p>
<p>இந்நிலையில், அந்த 4 பேரை பற்றிய தகவல்கள் அவர்களது குடும்பத்தினரின் வேண்டுகோளுக்கு இணங்க வெளியிடப்படவில்லை. ஆனால், அவர்கள் நால்வரும் சீனா மற்றும் கனடா ஆகிய இரு நாடுகளிலும் குடியுரிமை பெற்றிருந்தார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.</p>
<p>இதுகுறித்து கனடா வெளியுறவுத் துறை அமைச்சர் கூறுகையில், இந்த வழக்கை அவர் கடந்த சில மாதங்களாக பின் தொடர்ந்து வந்ததாகவும், முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ உள்ளிடோரிடம் அந்த நால்வரையும் அவர்களது தண்டனையிலிருந்து காப்பாற்ற முறையிட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.</p>
<p>மேலும், இந்த தண்டனையானது அடிப்படை மனித கண்ணியத்துக்கு முரணானது என்று தனது கண்டனங்களை அவர் தெரிவித்துள்ளார்.</p>
<p>இதற்கு பதிலளித்து பேசிய கனடாவின் சீன தூதரக பிரதிநிதி, தற்போது மரண தண்டனை நிறைவேற்றப்பட்ட நால்வரின் குற்றங்களுக்கும் தகுந்த ஆதாரங்கள் உள்ளது என்றும் இதுபோன்ற பொறுப்பற்ற கருத்துக்களை கூறாமல் சீனாவின் சட்டத்தை மதிக்குமாறு கூறியுள்ளார்.</p>
<p>இந்நிலையில், போதைப் பொருள் கடத்தல், ஊழல் மற்றும் உளவு போன்ற குற்றங்களில் கைதானோருக்கு சீனாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டு வருகின்றது. ஆனால், வெளி நாட்டவருக்கு விதிக்கப்படும் மரண தண்டனை மிகவும் அரிதாகவே நிறைவேற்றப்படும் என்று கூறப்படுகின்றது.</p>
<p>இருப்பினும், போதைப் பொருள் வழக்கு போன்ற கடுமையான குற்றங்களில் கைதானவர்களின் இரு நாட்டு குடியுரிமைகள் சீனாவில் அங்கீகரிக்கப்படுவதில்லை. தற்போது நிறைவேற்றப்பட்ட மரண தண்டனைகள் குறித்து சர்வதேச அளவிலான ஆர்வலர்கள் தங்களது கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.</p>
<p>முன்னதாக, கடந்த 2019 ஆம் ஆண்டு போதைப் பொருள் கடத்தல் வழக்கில் கனடா நாட்டைச் சேர்ந்த ராபர்ட் லோயட் ஷெல்லென்பெர்க் என்பவருக்கு சீனாவில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஆனால், அவரது தண்டனை இன்னும் நிறைவேற்றப்படவில்லை.</p>
<p>இரு நாடுகளுக்கும் இடையிலான உறவானது, கடந்த 2018 ஆம் ஆண்டு சீனாவைச் சேர்ந்த மெங் வான்சோ என்பவரை அமெரிக்காவின் வேண்டுகொளுக்கு இணங்க கனடா கைது செய்து நாடு கடத்தியது முதல் விரிசலடைந்து வருவது குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/4-canadians-executed-in-china/">சீனாவில் 4 கனடா நாட்டினருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
