<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>புத்திக மனதுங்க Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/%e0%ae%aa%e0%af%81%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%95-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%a4%e0%af%81%e0%ae%99%e0%af%8d%e0%ae%95/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/புத்திக-மனதுங்க/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Tue, 01 Apr 2025 11:55:29 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>புத்திக மனதுங்க Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/புத்திக-மனதுங்க/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>&#8220;மொஹமட் ருஷ்டி புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டியவர்&#8221; &#8211; பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு</title>
		<link>https://oruvan.com/mohammed-rushdie-deserves-rehabilitation-police-media-spokesperson-says-jamiatul-ulama-has-said/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Tue, 01 Apr 2025 11:53:35 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[புத்திக மனதுங்க]]></category>
		<category><![CDATA[மொஹமட் ருஷ்டி]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=16526</guid>

					<description><![CDATA[<p>பயங்கரவாத தடை சட்டத்தில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மொஹமட் ருஷ்டி புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டியவர் என ஜம்மியதுல் உலமா சபை தெரிவித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார். ஸ்டிக்கர் ஒட்டியதற்காக அவர் கைது செய்ப்படவில்லை. அவரை விசாரிக்கும்போது, அவர் அடிப்படைவாத கொள்கைகளால் பாதிக்கப்பட்டுள்ளார் என தெளிவானது. இலங்கையின் பல இடங்களிலும் இத்தகைய ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதனால் அவரைப் பற்றிய விசாரணையை தீவிரமாக மேற்கொண்டோம். விசாரணையின் முடிவில், அவர் தீவிரவாத நோக்கங்களைக் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/mohammed-rushdie-deserves-rehabilitation-police-media-spokesperson-says-jamiatul-ulama-has-said/">&#8220;மொஹமட் ருஷ்டி புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டியவர்&#8221; &#8211; பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பயங்கரவாத தடை சட்டத்தில் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள மொஹமட் ருஷ்டி புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டியவர் என ஜம்மியதுல் உலமா சபை தெரிவித்துள்ளதாக பொலிஸ் ஊடகப்பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்துள்ளார்.</p>
<p>ஸ்டிக்கர் ஒட்டியதற்காக அவர் கைது செய்ப்படவில்லை. அவரை விசாரிக்கும்போது, அவர் அடிப்படைவாத கொள்கைகளால் பாதிக்கப்பட்டுள்ளார் என தெளிவானது. இலங்கையின் பல இடங்களிலும் இத்தகைய ஸ்டிக்கர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதனால் அவரைப் பற்றிய விசாரணையை தீவிரமாக மேற்கொண்டோம்.</p>
<p>விசாரணையின் முடிவில், அவர் தீவிரவாத நோக்கங்களைக் கொண்டவராக இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டதால் கைது செய்யப்பட்டார்.</p>
<p>இவர் உலமா சபையில் முன்னிலைப்படுத்தட்டார். பின்னர் உலமா சபை உண்மையில் அவர் ஒரு சாதாரண முஸ்லிமின் நிலையைத் தாண்டிய நிலை இருப்பதாகவும் அவருக்கு புனர்வாழ்வளிக்கப்பட வேண்டும் என்றும் கூறியது.</p>
<p>தற்போது திவிரவாத விசாரணைப் பிரிவில் (TID) அவரை 90 நாட்கள் வரை தடுப்புக் காவலில் வைத்திருக்க பயங்கரவாத சட்டத்தின் கீழ் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது எனவும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் கூறியுள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/mohammed-rushdie-deserves-rehabilitation-police-media-spokesperson-says-jamiatul-ulama-has-said/">&#8220;மொஹமட் ருஷ்டி புனர்வாழ்வு அளிக்கப்பட வேண்டியவர்&#8221; &#8211; பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இலங்கையர்கள் 68 பேர் இன்டர்போலின் சிவப்பு பட்டியலில்</title>
		<link>https://oruvan.com/68-sri-lankans-on-interpols-red-list/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Tue, 04 Feb 2025 09:37:08 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[புத்திக மனதுங்க]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=9211</guid>

					<description><![CDATA[<p>வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள 68 திட்டமிட்ட குற்றவாளிகளைக் கைது செய்ய சிவப்பு அறிவிப்புகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார். இந்த சிவப்பு அறிவிப்புகளின்படி வெளிநாடுகளில் கைதுகள் நடைபெற்று வருவதாகவும், நேற்று முன்தினம் துபாயில் மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார் இந்த மூன்று நபர்களும் இந்த வாரம் இந்நாட்டிற்கு அழைத்து வரப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும், வெளிநாடுகளுக்குச் சென்ற குற்றவாளிகள் இந்நாட்டிற்கு அழைத்து வரப்பட்டு சட்டத்தின் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/68-sri-lankans-on-interpols-red-list/">இலங்கையர்கள் 68 பேர் இன்டர்போலின் சிவப்பு பட்டியலில்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>வெளிநாடுகளில் தலைமறைவாக உள்ள 68 திட்டமிட்ட குற்றவாளிகளைக் கைது செய்ய சிவப்பு அறிவிப்புகள் பிறப்பிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் புத்திக மனதுங்க தெரிவித்தார்.</p>
<p>இந்த சிவப்பு அறிவிப்புகளின்படி வெளிநாடுகளில் கைதுகள் நடைபெற்று வருவதாகவும், நேற்று முன்தினம் துபாயில் மூன்று நபர்கள் கைது செய்யப்பட்டதாகவும் அவர் கூறினார்</p>
<p>இந்த மூன்று நபர்களும் இந்த வாரம் இந்நாட்டிற்கு அழைத்து வரப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும், வெளிநாடுகளுக்குச் சென்ற குற்றவாளிகள் இந்நாட்டிற்கு அழைத்து வரப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் அவர் கூறினார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/68-sri-lankans-on-interpols-red-list/">இலங்கையர்கள் 68 பேர் இன்டர்போலின் சிவப்பு பட்டியலில்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>2024இல் இலங்கையில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் &#8211; 61 பேர் உயிரிழப்பு, 47 பேர் படுகாயம்</title>
		<link>https://oruvan.com/shooting-incidents-in-sri-lanka-in-2024-61-people-killed-47-seriously-injured/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Sun, 05 Jan 2025 06:34:31 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[lka]]></category>
		<category><![CDATA[இலங்கைச் செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஒருவன்]]></category>
		<category><![CDATA[ஒருவன் செய்திகள்]]></category>
		<category><![CDATA[துப்பாக்கிச் சூடு]]></category>
		<category><![CDATA[புத்திக மனதுங்க]]></category>
		<category><![CDATA[பொலிஸார்]]></category>
		<category><![CDATA[விசாரணை]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=5463</guid>

					<description><![CDATA[<p>கடந்த ஆண்டு 100க்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 61 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 47 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். 2024 ஆம் ஆண்டில் நடந்த பெரும்பாலான துப்பாக்கிச் சூடு சம்பவங்களுக்கு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுக்கு இடையிலான மோதல்கள் காரணமாக இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர். கடந்த ஆண்டு பதிவான 103 துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 56 சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடையவை எனவும் இதில் 45 பேர் உயிரிழந்துள்ளமை தங்கள் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். 16 [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/shooting-incidents-in-sri-lanka-in-2024-61-people-killed-47-seriously-injured/">2024இல் இலங்கையில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் &#8211; 61 பேர் உயிரிழப்பு, 47 பேர் படுகாயம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>கடந்த ஆண்டு 100க்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 61 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன், 47 பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p>
<p>2024 ஆம் ஆண்டில் நடந்த பெரும்பாலான துப்பாக்கிச் சூடு சம்பவங்களுக்கு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பல்களுக்கு இடையிலான மோதல்கள் காரணமாக இடம்பெற்றுள்ளதாகவும் பொலிஸார் சுட்டிக்காட்டியுள்ளனர்.</p>
<p>கடந்த ஆண்டு பதிவான 103 துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 56 சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுடன் தொடர்புடையவை எனவும் இதில் 45 பேர் உயிரிழந்துள்ளமை தங்கள் விசாரணைகளில் தெரியவந்துள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.</p>
<p>16 பேர் கொல்லப்பட்ட மற்ற 47 துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் வெவ்வேறு காரணங்களால் குறிப்பாக தனிப்பட்ட தகராறுகளால் நிகழ்ந்தவை என்றும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.</p>
<p>2024 ஆம் ஆண்டில் பதிவான கடைசி துப்பாக்கிச் சூடு சம்பவம் டிசம்பர் 28 ஆம் திகதி மாலையில் பதிவாகியிருந்தது. சீதுவ பகுதியில் உள்ள ஒரு வீட்டில் காரில் வந்த அடையாளம் தெரியாத துப்பாக்கிதாரிகள் துப்பாக்கிச் சூடு நடத்தினர்.</p>
<p>இதில் ஒருவர் கொல்லப்பட்டதுடன் இருவர் காயமடைந்தனர். தந்தை மற்றும் அவரது இரண்டு மகன்களை இலக்கு வைத்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக பொலிஸார் விவரித்துள்ளனர்.</p>
<p>2024 ஆம் ஆண்டில் பல பெரிய துப்பாக்கிச் சூடுகள் நடந்துள்ளன. சில பட்டப்பகலில் நடந்தன, துப்பாக்கி ஏந்தியவர்கள் பொது மக்கள் முன்னிலையில் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளன.</p>
<p>கடந்த ஆண்டு ஜனவரி 22 அன்று தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் பெலியத்த வெளியேறும் இடத்திற்கு அருகில் ஐந்து பேர் கொல்லப்பட்ட சம்பவம் மிகவும் பாராதூரமான ஒன்றாகும் இந்த சம்பவத்தில் நமது மக்கள் சக்தி கட்சியின் தலைவர் சமன் பெரேராவும் கொல்லப்பட்டார்.</p>
<p>மேலும், ஜூலை 8 ஆம் திகதி, அதுருகிரியவில் ஒரு அழகு நிலையம் திறப்பு விழாவில் தொழிலதிபர் சுரேந்திர வசந்த பெரேரா என்று அழைக்கப்படும் &#8220;கிளப் வசந்த&#8221; உட்பட இரண்டு பேர் கொல்லப்பட்டனர்.</p>
<p>இந்த சம்பவத்தில் பிரபல பாடகர் கே. சுஜீவா உட்பட நான்கு பேர் துப்பாக்கிச் சூட்டுக் காயங்களுக்கு ஆளானார்கள். இவ்வாறான சில துப்பாக்கிச் சூடுகள் சிசிடிவியில் பதிவாகியுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.</p>
<p>பெரும்பாலான துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் ஈடுபட்டவர்களைக் கண்டுபிடித்து கைது செய்வதில் பொலிஸார் வெற்றி பெற்றுள்ளதாக, பொலிஸ் செய்தித் தொடர்பாளர் கே. புத்திக மனதுங்க வலியுறுத்தினார்.</p>
<p>கடந்த ஆண்டு நடந்த துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்பாக 50க்கும் மேற்பட்ட சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக அவர் மேலும் கூறினார். ஆயுதங்களும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>2024ஆம் ஆண்டின் கடைசி மூன்று மாதங்களில் மட்டும் இதுபோன்ற துப்பாக்கிச் சூடுகளுக்குப் பயன்படுத்தப்பட்ட மூன்று டி-56 தாக்குதல் துப்பாக்கிகளை மீட்டுள்ளதாகவும், ஒட்டுமொத்தமாக, கடந்த ஆண்டு 20 டி-56 துப்பாக்கிகளை மீட்டெடுக்க முடிந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்’’</p>
<p>2024 ஆம் ஆண்டில் துப்பாக்கிச் சூடு சம்பவங்களின் எண்ணிக்கை முந்தைய ஆண்டை விடக் குறைவாக பதிவாகியிருந்ததாகவும், 2023 ஆம் ஆண்டில், 120 துப்பாக்கிச் சூடுகளில் 54 பேர் கொல்லப்பட்டதுடன், 65 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/shooting-incidents-in-sri-lanka-in-2024-61-people-killed-47-seriously-injured/">2024இல் இலங்கையில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவங்கள் &#8211; 61 பேர் உயிரிழப்பு, 47 பேர் படுகாயம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
