<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/%e0%ae%aa%e0%ae%bf%e0%ae%b0%e0%ae%a4%e0%ae%ae%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%ae%b2%e0%ae%be%e0%ae%a8%e0%ae%bf%e0%ae%a4%e0%ae%bf-%e0%ae%b9%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%a9%e0%ae%bf-%e0%ae%85%e0%ae%ae/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/பிரதமர்-கலாநிதி-ஹரினி-அம/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Thu, 28 Aug 2025 11:19:25 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/பிரதமர்-கலாநிதி-ஹரினி-அம/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>“வேலையற்ற பட்டதாரிகளுக்கு ஆசிரியர் பணி” : பிரதமர் வெளியிட்ட விசேட அறிவிப்பு</title>
		<link>https://oruvan.com/teachers-job-for-unemployed-graduates-a-special-announcement-issued-by-the-prime-minister/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Thu, 28 Aug 2025 11:19:25 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Harini Amarasuriya]]></category>
		<category><![CDATA[Prime Minister Harini Amarasooriya to visit Thailand]]></category>
		<category><![CDATA[பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய]]></category>
		<category><![CDATA[ஹரினி அமரசூரிய]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=30967</guid>

					<description><![CDATA[<p>வேலையற்ற பட்டதாரிகளை ஆசிரியர்களாக ஆட்சேர்ப்பு செய்வதில் ஏற்பட்ட தாமதத்திற்கு முதன்மைக் காரணமாக இருந்த, உச்ச நீதிமன்றத்தால் பரிசீலனை செய்யப்படும் நான்கு வழக்குகளின் சட்ட நடவடிக்கைகள் இப்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன என்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். இதன்படி, நீதிமன்ற நடவடிக்கைகள் முடிந்ததும், தொடர்புடைய வர்த்தமானி அறிவிப்பை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதன் மூலம் பட்டதாரிகள் ஆசிரியர் ஆட்சேர்ப்பு தேர்வுக்கு விண்ணப்பிக்க வழி வகுக்கும் என்றும் பிரதமர் தெரிவித்தார். [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/teachers-job-for-unemployed-graduates-a-special-announcement-issued-by-the-prime-minister/">“வேலையற்ற பட்டதாரிகளுக்கு ஆசிரியர் பணி” : பிரதமர் வெளியிட்ட விசேட அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>வேலையற்ற பட்டதாரிகளை ஆசிரியர்களாக ஆட்சேர்ப்பு செய்வதில் ஏற்பட்ட தாமதத்திற்கு முதன்மைக் காரணமாக இருந்த, உச்ச நீதிமன்றத்தால் பரிசீலனை செய்யப்படும் நான்கு வழக்குகளின் சட்ட நடவடிக்கைகள் இப்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன என்று கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.</p>
<p>இதன்படி, நீதிமன்ற நடவடிக்கைகள் முடிந்ததும், தொடர்புடைய வர்த்தமானி அறிவிப்பை வெளியிட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதன் மூலம் பட்டதாரிகள் ஆசிரியர் ஆட்சேர்ப்பு தேர்வுக்கு விண்ணப்பிக்க வழி வகுக்கும் என்றும் பிரதமர் தெரிவித்தார்.</p>
<p>கல்வி அமைச்சில் வேலையற்ற பட்டதாரிகள் சங்கத்தின் பிரதிநிதிகளுடன் நடைபெற்ற கலந்துரையாடலின் போது அவர் இந்தக் கருத்துக்களை தெரிவித்தார்.</p>
<p>ஏற்கனவே வழங்கப்பட்ட அமைச்சரவை ஒப்புதல்களுக்கு இணங்க, பிற பட்டதாரி ஆட்சேர்ப்பு செயல்முறைகளைத் தொடர தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக பிரதமர் மேலும் குறிப்பிட்டார்.</p>
<p>கூடுதலாக, ஆசிரியர் தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான வயது வரம்பை தற்போதைய வயது வரம்பை நீட்டிப்பது தொடர்பிலும் கலந்துரையாடலின் போது ஒப்புக் கொள்ளப்பட்டது.</p>
<p>பிரதமர் அலுவலகம் வெளியிட்ட அறிக்கையில், தற்போதுள்ள அனைத்து ஆசிரியர் வெற்றிடங்களையும் உடனடியாக நிரப்புவதற்கான ஆட்சேர்ப்பு செயல்முறையை விரைவுபடுத்துவதற்கான பரஸ்பர இணக்கப்பாடு காணப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/teachers-job-for-unemployed-graduates-a-special-announcement-issued-by-the-prime-minister/">“வேலையற்ற பட்டதாரிகளுக்கு ஆசிரியர் பணி” : பிரதமர் வெளியிட்ட விசேட அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>புதிய கல்விச் சீர்திருத்தத்தில் புத்தியுடன் இதயத்தையும் விருத்தி செய்யும் பிள்ளைகளை உருவாக்கக் கவனம் செலுத்துங்கள்</title>
		<link>https://oruvan.com/focus-on-creating-children-who-develop-their-hearts-as-well-as-their-minds-in-the-new-education-reform/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Fri, 01 Aug 2025 05:33:10 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=28153</guid>

					<description><![CDATA[<p>புத்தியை மட்டும் விருத்தி செய்யும் கல்வி முறைக்குப் பதிலாக, இதயத்தையும் விருத்தி செய்து, கருணையுடன் கூடிய போதிசத்துவ குணங்கள் கொண்ட குழந்தைகளை உருவாக்குவதற்குப் புதிய கல்விச் சீர்திருத்தத்தில் கவனம் செலுத்துமாறு அஸ்கிரி, மல்வத்து ஆகிய இரு மகா விகாரைகளின் அனுநாயக்க தேரர்கள் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவிடம் கேட்டுக்கொண்டனர். புதிய கல்விச் சீர்திருத்தம் தொடர்பாக அஸ்கிரி மற்றும் மல்வத்து பீடங்களின் அனுநாயக்க தேரர்கள் மற்றும் காரக சங்க சபையின் துறவிகளுக்கு தெளிவூட்டுவதற்காக, கண்டியில் உள்ள தலதா மாளிகை [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/focus-on-creating-children-who-develop-their-hearts-as-well-as-their-minds-in-the-new-education-reform/">புதிய கல்விச் சீர்திருத்தத்தில் புத்தியுடன் இதயத்தையும் விருத்தி செய்யும் பிள்ளைகளை உருவாக்கக் கவனம் செலுத்துங்கள்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>புத்தியை மட்டும் விருத்தி செய்யும் கல்வி முறைக்குப் பதிலாக, இதயத்தையும் விருத்தி செய்து, கருணையுடன் கூடிய போதிசத்துவ குணங்கள் கொண்ட குழந்தைகளை உருவாக்குவதற்குப் புதிய கல்விச் சீர்திருத்தத்தில் கவனம் செலுத்துமாறு அஸ்கிரி, மல்வத்து ஆகிய இரு மகா விகாரைகளின் அனுநாயக்க தேரர்கள் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியவிடம் கேட்டுக்கொண்டனர்.</p>
<p>புதிய கல்விச் சீர்திருத்தம் தொடர்பாக அஸ்கிரி மற்றும் மல்வத்து பீடங்களின் அனுநாயக்க தேரர்கள் மற்றும் காரக சங்க சபையின் துறவிகளுக்கு தெளிவூட்டுவதற்காக, கண்டியில் உள்ள தலதா மாளிகை வளாகத்தில் பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரியாவின் பங்கேற்புடன் நேற்று (31) நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அனுநாயக்க தேரர்கள் இதனைத் தெரிவித்தனர்.</p>
<p>புதிய கல்விச் சீர்திருத்தம் குறித்துச் சமூகத்தில் எழுந்துள்ள தவறான கருத்துக்கள், அதன் தற்போதைய நிலை மற்றும் அதன் உண்மையான தன்மை குறித்து பிரதமர் மற்றும் கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ அவர்களால் அஸ்கிரி, மல்வத்து இரு பீடங்களின் துறவிகளுக்கு இங்கு விளக்கமளிக்கப்பட்டது.</p>
<p>இங்கு அறிவுரை வழங்கிய அஸ்கிரி, மல்வத்து இரு பீடங்களின் அநுநாயக்க தேரர்கள், புதிய கல்விச் சீர்திருத்தத்தில் நன்னெறிக் கல்விக்கு முக்கியத்துவம் அளிப்பதுடன், குழந்தைகளின் தொழில்சார் திறன்களையும் மனிதாபிமானப் பண்புகளையும் ஒருங்கே வளர்க்க வேண்டியதன் அவசியத்தையும் வலியுறுத்தினர்.</p>
<p>புதிய கல்விச் சீர்திருத்தத்துடன் இணைந்ததாக பிரிவெனாக் கல்வியில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்தும் இங்கு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.</p>
<p>இந்நிகழ்வில், அஸ்கிரி பீடத்தின் அனுநாயக்க தேரர் வணக்கத்திற்குரிய வெண்டருவே ஸ்ரீ உபாலி நாயக்க தேரர், மல்வத்து பீடத்தின் அனுநாயக்க தேரர் வணக்கத்திற்குரிய திம்புல்கும்புரே ஸ்ரீ சரணங்கர விமலதம்ம நாயக்க தேரர், மல்வத்து பீடத்தின் மற்றுமொரு அநுநாயக்க தேரர் கலாநிதி வணக்கத்திற்குரிய நியங்கொட விஜிதசிரி நாயக்க தேரர், பிரதான காரக சங்க சபையின் துறவிகள், கல்வி மற்றும் உயர்கல்வி பிரதி அமைச்சர் மதுர செனெவிரத்ன, மத்திய மாகாண ஆளுநர் சரத் அபேகோன், கல்வி அமைச்சின் செயலாளர் நாலக கலுவெவ உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/focus-on-creating-children-who-develop-their-hearts-as-well-as-their-minds-in-the-new-education-reform/">புதிய கல்விச் சீர்திருத்தத்தில் புத்தியுடன் இதயத்தையும் விருத்தி செய்யும் பிள்ளைகளை உருவாக்கக் கவனம் செலுத்துங்கள்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
