<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>பங்களாதேஷ் Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/%e0%ae%aa%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%ae%be%e0%ae%a4%e0%af%87%e0%ae%b7%e0%af%8d/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/பங்களாதேஷ்/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Wed, 01 Apr 2026 13:35:01 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>பங்களாதேஷ் Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/பங்களாதேஷ்/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>பங்களாதேஷ் சிறையிலிருந்து 6 இலங்கை மீனவர்கள் விடுதலை</title>
		<link>https://oruvan.com/6-sri-lankan-fishermen-released-from-bangladesh-prison/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Wed, 01 Apr 2026 13:01:11 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[பங்களாதேஷ்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=47821</guid>

					<description><![CDATA[<p>பங்களாதேஷ் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டு, கடந்த எட்டு மாதங்களாக அந்நாட்டுச் சிறையிலிருந்த ஆறு இலங்கை மீனவர்கள் உத்தியோகபூர்வமாக விடுதலை செய்யப்பட்டுள்ளனர். கடந்த 2025ஆம் ஆண்டு ஜூலை மாதம் நெடுநாள் மீன்பிடி படகில் கடலுக்குச் சென்ற இந்த மீனவர்கள், பங்களாதேஷ் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். எல்லை தாண்டிய குற்றச்சாட்டின் கீழ் சிட்டகாங் மத்திய சிறையில் இவர்கள் அடைக்கப்பட்டிருந்தனர். இவர்களின் நீண்டகால சிறைவாசம் காரணமாக இலங்கையிலுள்ள இவர்களது குடும்பங்கள் பாரிய பொருளாதார மற்றும் வாழ்வாதார நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்தன. [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/6-sri-lankan-fishermen-released-from-bangladesh-prison/">பங்களாதேஷ் சிறையிலிருந்து 6 இலங்கை மீனவர்கள் விடுதலை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பங்களாதேஷ் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டு, கடந்த எட்டு மாதங்களாக அந்நாட்டுச் சிறையிலிருந்த ஆறு இலங்கை மீனவர்கள் உத்தியோகபூர்வமாக விடுதலை செய்யப்பட்டுள்ளனர்.</p>
<p>கடந்த 2025ஆம் ஆண்டு ஜூலை மாதம் நெடுநாள் மீன்பிடி படகில் கடலுக்குச் சென்ற இந்த மீனவர்கள், பங்களாதேஷ் கடற்படையினரால் கைது செய்யப்பட்டனர். எல்லை தாண்டிய குற்றச்சாட்டின் கீழ் சிட்டகாங் மத்திய சிறையில் இவர்கள் அடைக்கப்பட்டிருந்தனர்.</p>
<p>இவர்களின் நீண்டகால சிறைவாசம் காரணமாக இலங்கையிலுள்ள இவர்களது குடும்பங்கள் பாரிய பொருளாதார மற்றும் வாழ்வாதார நெருக்கடிகளை எதிர்கொண்டிருந்தன.</p>
<p>பாதிக்கப்பட்ட குடும்பங்களின் கோரிக்கைக்கு அமைய, கடற்றொழில் அமைச்சு, வெளிவிவகார அமைச்சு மற்றும் பங்களாதேஷிலுள்ள இலங்கை தூதரகம் ஆகியவை இணைந்து மேற்கொண்ட தொடர்ச்சியான இராஜதந்திர முயற்சிகளின் பலனாக நேற்று (31) இவர்கள் விடுவிக்கப்பட்டனர்.</p>
<p>விடுவிக்கப்பட்ட மீனவர்கள் இன்று ( 01) டாக்கா சர்வதேச வானூர்தி நிலையத்திற்கு அழைத்து வரப்பட்டனர். இவர்கள் நாளை (02) கட்டுநாயக்க சர்வதேச வானூர்தி நிலையத்தை வந்தடைய உள்ளனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/6-sri-lankan-fishermen-released-from-bangladesh-prison/">பங்களாதேஷ் சிறையிலிருந்து 6 இலங்கை மீனவர்கள் விடுதலை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பங்களாதேஷில் நாடாளுமன்ற தேர்தலுக்கான திகதி அறிவிப்பு</title>
		<link>https://oruvan.com/dates-announced-for-parliamentary-elections-in-bangladesh/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Fri, 12 Dec 2025 03:54:13 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[Bangladesh]]></category>
		<category><![CDATA[Election]]></category>
		<category><![CDATA[பங்களாதேஷ்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=40453</guid>

					<description><![CDATA[<p>முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகியதைத் தொடர்ந்து, பங்களாதேஷத்தில் புதிய பிரதமர் தெரிவுக்கான நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதி நடைபெறும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது. இந்த தேர்தலில், 300 தொகுதிகளில் சுமார் 127.6 மில்லியன் பேர் வாக்களிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மற்றும் கடந்த வருடம் நாடு நெருக்கடிக்குள் தள்ளப்பட்ட பின்னர் அனைத்து கட்சிகளும் ஒருமித்து இணக்கம் கண்ட ஜூலை சாசனத்துக்கான வாக்குப்பதிவும் குறித்த திகதியில் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/dates-announced-for-parliamentary-elections-in-bangladesh/">பங்களாதேஷில் நாடாளுமன்ற தேர்தலுக்கான திகதி அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா பதவி விலகியதைத் தொடர்ந்து, பங்களாதேஷத்தில் புதிய பிரதமர் தெரிவுக்கான நாடாளுமன்றத் தேர்தல் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 12 ஆம் திகதி நடைபெறும் எனத் தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.</p>
<p>இந்த தேர்தலில், 300 தொகுதிகளில் சுமார் 127.6 மில்லியன் பேர் வாக்களிக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. </p>
<p>இந்தநிலையில், பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு மற்றும் கடந்த வருடம் நாடு நெருக்கடிக்குள் தள்ளப்பட்ட பின்னர் அனைத்து கட்சிகளும் ஒருமித்து இணக்கம் கண்ட ஜூலை சாசனத்துக்கான வாக்குப்பதிவும் குறித்த திகதியில் இடம்பெறவுள்ளது. </p>
<p>இதேவேளை, வாக்காளர்கள் இரண்டு வாக்குகளையும் ஒரே நேரத்தில் செலுத்தவுள்ளதால், வாக்கு பதிவு நேரம் ஒரு மணித்தியாலத்துக்கு நீடிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த நாட்டு தேர்தல்கள் ஆணையாளர் தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/dates-announced-for-parliamentary-elections-in-bangladesh/">பங்களாதேஷில் நாடாளுமன்ற தேர்தலுக்கான திகதி அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பங்களாதேஷில் இந்துக்கள் மீது தாக்குதல் நடக்கவில்லை &#8211; முகமது யூனுஸ்</title>
		<link>https://oruvan.com/there-were-no-attacks-on-hindus-in-bangladesh-muhammad-yunus/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Sun, 12 Oct 2025 07:20:13 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[பங்களாதேஷ்]]></category>
		<category><![CDATA[முகமது யூனுஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=35117</guid>

					<description><![CDATA[<p>பங்களாதேஷில் இந்துக்கள் மீது எந்த தாக்குதலும் நடக்கவில்லை என்று அரசாங்கத்தின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார். இவை அனைத்தும் இந்திய ஊடகங்களின் போலி அறிக்கைகள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போது இந்தியாவின் மிகப்பெரிய அம்சம் போலி செய்திகள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். இந்துக்கள் மீது தாக்குதல்கள் நடப்பதாக வரும் செய்திகள் தவறானவை. இந்த விடயத்தில் அரசாங்கம் எச்சரிக்கையாக இருப்பதாக முகமது யூனுஸ் கூறியுள்ளார். பங்களாதேஷில் ஷேக் ஹசீனாவின் வீழ்ச்சிக்குப் பிறகு அமைதிக்கான நோபல் பரிசு வென்ற [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/there-were-no-attacks-on-hindus-in-bangladesh-muhammad-yunus/">பங்களாதேஷில் இந்துக்கள் மீது தாக்குதல் நடக்கவில்லை &#8211; முகமது யூனுஸ்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பங்களாதேஷில் இந்துக்கள் மீது எந்த தாக்குதலும் நடக்கவில்லை என்று அரசாங்கத்தின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் தெரிவித்துள்ளார்.</p>
<p>இவை அனைத்தும் இந்திய ஊடகங்களின் போலி அறிக்கைகள் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். தற்போது இந்தியாவின் மிகப்பெரிய அம்சம் போலி செய்திகள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>இந்துக்கள் மீது தாக்குதல்கள் நடப்பதாக வரும் செய்திகள் தவறானவை. இந்த விடயத்தில் அரசாங்கம் எச்சரிக்கையாக இருப்பதாக முகமது யூனுஸ் கூறியுள்ளார்.</p>
<p>பங்களாதேஷில் ஷேக் ஹசீனாவின் வீழ்ச்சிக்குப் பிறகு அமைதிக்கான நோபல் பரிசு வென்ற முகமது யூனுஸ் தலைமையில் அமைக்கப்பட்ட இடைக்கால அரசாங்கம் கடுமையான பிளவுகளை எதிர்கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.</p>
<p>நாட்டின் மாறிவரும் அரசியல் சூழ்நிலையில் இடைக்கால அரசாங்கத்தின் தலைவர்கள் பாதுகாப்பான வெளியேற்றத்தைத் தேடுகிறார்கள் என்ற கூற்றுக்களை தேசிய குடிமக்கள் கட்சியின் (NCP) மூத்த ஆலோசகர் நிராகரித்துள்ளார்.</p>
<p>காலநிலை மாற்ற ஆலோசகர் சையதா ரிஸ்வானா ஹாசன் ஒரு செய்தியாளர் கூட்டத்தில், எந்த விதமான வெளியேற்றத்தையும் விரும்பவில்லை என்று தெரிவித்துள்ளார்.</p>
<p>தேசிய குடிமக்கள் கட்சியின் தலைவர்கள் தங்கள் குற்றச்சாட்டுகளை தெளிவுபடுத்த வேண்டும் என்று கோரிய ரிஸ்வானா, தனது வாழ்நாள் முழுவதும் பங்களாதேஷில் கழிக்க விரும்புவதாகக் கூறினார்.</p>
<p>எவ்வாறாயினும், தேசிய குடிமக்கள் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் நஹித் இஸ்லாம், சில ஆலோசகர்கள் அரசாங்கத்திலிருந்து பாதுகாப்பாக வெளியேற மற்ற அரசியல் கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறினார்.</p>
<p>சில ஆலோசகர்கள் பொதுமக்களுக்கு சேவை செய்வதை விட தங்கள் சொந்த பாதுகாப்பிற்கு முன்னுரிமை அளிப்பதாக நஹித் குற்றம் சாட்டினார், மேலும் போராட்டங்களின் போது மாணவர்கள் காட்டிய நேர்மையையும் கேள்விக்குள்ளாக்கினார்.</p>
<p>&#8220;ஆலோசனை குழுவின் பெரும்பாலான உறுப்பினர்களை நம்பியது ஒரு பெரிய தவறு. அவர்களை நம்பிய நாங்கள் ஏமாற்றப்பட்டோம். பெரும்பாலான ஆலோசகர்கள் மற்ற அரசியல் தலைவர்களுடன் தொடர்பில் உள்ளனர்.</p>
<p>இப்போது அவர்களின் ஒரே குறிக்கோள் பாதுகாப்பாக வெளியேறுவதுதான்&#8221; என்று நஹித் கூறினார். இருப்பினும், ஆலோசகர்கள் அல்லது அவர்கள் விவாதித்த அரசியல் கட்சிகளின் பெயரை நஹித் குறிப்பிட மறுத்துவிட்டார்.</p>
<p>இது இடைக்கால அரசாங்கத்தில் ஆழமான பிளவுகள் இருப்பதாக செய்திகள் வந்துள்ளன.</p>
<p>இதற்கிடையில், மற்றொரு தேசிய குடிமக்கள் கட்சியின் தலைவரான சர்ஜிஸ் அஸ்லம், ஆலோசகர்களுக்கான ஒரே வழி மரணம் என்று கூறி சர்ச்சையை மேலும் அதிகரித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/there-were-no-attacks-on-hindus-in-bangladesh-muhammad-yunus/">பங்களாதேஷில் இந்துக்கள் மீது தாக்குதல் நடக்கவில்லை &#8211; முகமது யூனுஸ்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஷேக் ஹசீனாவை உடனடியாக திருப்பி அனுப்புங்கள்  &#8211; இந்தியாவிற்கு பங்களாதேஷ் கடிதம்</title>
		<link>https://oruvan.com/send-sheikh-hasina-back-immediately-bangladesh-letter-to-india/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Tue, 24 Dec 2024 03:59:59 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[Bangladesh]]></category>
		<category><![CDATA[Sheikh Hasina]]></category>
		<category><![CDATA[பங்களாதேஷ்]]></category>
		<category><![CDATA[ஷேக் ஹசீனா]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=3728</guid>

					<description><![CDATA[<p>முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை உடனடியாக பங்களாதேஷூக்கு மீள திருப்பி அனுப்புமாறு புதிய இடைக்கால நிர்வாகம் இந்தியாவிடம் எழுத்துப்பூர்வமாக கோரிக்கை விடுத்துள்ளது. ஷேக் ஹசீனாவிற்கு எதிராக வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ள நிலையில், நீதிதுறை நடவடிக்கைகளுக்காக அவரை திருப்பி அனுப்புமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. சட்டவிரோத செயலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை வேறொரு நாட்டில் விசாரணைக்காக நாடு கடத்த இந்தியா மற்றும் பங்களாதேஷ் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின்படி முன்னாள் பிரதமரை மீண்டும் பங்களாதேஷுக்கு அழைத்து வருவதற்கான வாய்ப்புகள் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/send-sheikh-hasina-back-immediately-bangladesh-letter-to-india/">ஷேக் ஹசீனாவை உடனடியாக திருப்பி அனுப்புங்கள்  &#8211; இந்தியாவிற்கு பங்களாதேஷ் கடிதம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவை உடனடியாக பங்களாதேஷூக்கு மீள திருப்பி அனுப்புமாறு புதிய இடைக்கால நிர்வாகம் இந்தியாவிடம் எழுத்துப்பூர்வமாக கோரிக்கை விடுத்துள்ளது.</p>
<p>ஷேக் ஹசீனாவிற்கு எதிராக வழக்குகள் பதிவுசெய்யப்பட்டுள்ள நிலையில், நீதிதுறை நடவடிக்கைகளுக்காக அவரை திருப்பி அனுப்புமாறு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.</p>
<p>சட்டவிரோத செயலில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட ஒருவரை வேறொரு நாட்டில் விசாரணைக்காக நாடு கடத்த இந்தியா மற்றும் பங்களாதேஷ் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.</p>
<p>இந்த ஒப்பந்தத்தின்படி முன்னாள் பிரதமரை மீண்டும் பங்களாதேஷுக்கு அழைத்து வருவதற்கான வாய்ப்புகள் இருப்பதாக பங்களாதேஷ் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.</p>
<p>77 வயதான ஷேக் ஹசீனா கடந்த ஓகஸ்ட் ஐந்தாம் திகதி தனது பதவியிலிருந்து விலகியதுடன், பொதுமக்களின் எதிர்ப்பால் இந்தியாவுக்கு தப்பிச் சென்றார்.</p>
<p>அதன் பிறகு, டாக்டர் முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால நிர்வாகத்தின் கீழ் பங்களாதேஷ் நிர்வாகம் மாற்றப்பட்டது.</p>
<p>அண்மையில் இந்திய வெளிவிவகார செயலாளரின் பங்களாதேஷிற்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது முன்னாள் பிரதமரை மீண்டும் பங்களாதேஷிற்கு அனுப்புவது தொடர்பில் கவனம் செலுத்தப்பட்டதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.</p>
<p>The post <a href="https://oruvan.com/send-sheikh-hasina-back-immediately-bangladesh-letter-to-india/">ஷேக் ஹசீனாவை உடனடியாக திருப்பி அனுப்புங்கள்  &#8211; இந்தியாவிற்கு பங்களாதேஷ் கடிதம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
