<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>நோர்வே Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/%e0%ae%a8%e0%af%8b%e0%ae%b0%e0%af%8d%e0%ae%b5%e0%af%87/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/நோர்வே/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Wed, 25 Feb 2026 07:03:51 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>நோர்வே Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/நோர்வே/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>இலங்கை குறித்து நோர்வே நாடாளுமன்றில் நாளை விவாதம்</title>
		<link>https://oruvan.com/discussion-on-sri-lanka-in-the-norwegian-parliament-tomorrow/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 25 Feb 2026 07:03:51 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Kamzy Gunaratnam]]></category>
		<category><![CDATA[Norwegian Parliament]]></category>
		<category><![CDATA[நோர்வே]]></category>
		<category><![CDATA[நோர்வே நாடாளுமன்றம்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=45740</guid>

					<description><![CDATA[<p>இலங்கையின் அண்மைய போக்குகள் குறித்து நோர்வே நாடாளுமன்றத்தில் நாளை விவாதிக்கப்படவுள்ளது. இலங்கையில் தேர்தல் இடம்பெற்று ஒரு வருடம் கடந்துள்ள நிலையில் நோர்வே நாடாளுமன்றத்தில் இடையீட்டு விவாதமாக இலங்கை சம்பந்தமாக விவாதிக்கப்படவுள்ளது. நோர்வே தொழிற் கட்சியை சேர்ந்த இலங்கையை பூர்வீகமாக கொண்ட நோர்வே நாடாளுமன்ற உறுப்பினரான ஹம்சி குணரத்னம் இவ்விவாதத்தை ஆரம்பித்து வைக்கவுள்ளார். இதனைத் தொடர்ந்து நோர்வே வெளிவிவகார அமைச்சர் பதிலளித்து உரையாற்றவுள்ளார். தேர்தலை அடுத்து இலங்கையின் செயற்பாடுகள் முக்கியமாக உள்ளூர் மற்றும் சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்புகள் குறித்து [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/discussion-on-sri-lanka-in-the-norwegian-parliament-tomorrow/">இலங்கை குறித்து நோர்வே நாடாளுமன்றில் நாளை விவாதம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கையின் அண்மைய போக்குகள் குறித்து நோர்வே நாடாளுமன்றத்தில் நாளை விவாதிக்கப்படவுள்ளது.</p>
<p>இலங்கையில் தேர்தல் இடம்பெற்று ஒரு வருடம் கடந்துள்ள நிலையில் நோர்வே நாடாளுமன்றத்தில் இடையீட்டு விவாதமாக இலங்கை சம்பந்தமாக விவாதிக்கப்படவுள்ளது.</p>
<p>நோர்வே தொழிற் கட்சியை சேர்ந்த இலங்கையை பூர்வீகமாக கொண்ட நோர்வே நாடாளுமன்ற உறுப்பினரான ஹம்சி குணரத்னம் இவ்விவாதத்தை ஆரம்பித்து வைக்கவுள்ளார்.</p>
<p>இதனைத் தொடர்ந்து நோர்வே வெளிவிவகார அமைச்சர் பதிலளித்து உரையாற்றவுள்ளார்.</p>
<p>தேர்தலை அடுத்து இலங்கையின் செயற்பாடுகள் முக்கியமாக உள்ளூர் மற்றும் சர்வதேச சமூகத்தின் எதிர்பார்ப்புகள் குறித்து இங்கு கேள்வி எழுப்பப்படுமென கருதப்படுகிறது.</p>
<p>நல்லாட்சி, ஜனநாயக மறுசீரமைப்பு, ஊழல் எதிர்ப்பு நடவடிக்கைகள், தற்போதைய மனித உரிமைகள் நிலைவரம், இன மத சிறுபான்மை மக்களை பாதிக்கும் விடயங்கள், இராணுவ மயமாக்கல், பொறுப்புக் கூறல் மற்றும் நல்லிணக்க செயற்பாடுகள் குறித்து இவ்விடையீட்டு விவாதத்தில் விவாதிக்கப்படவுள்ளன.</p>
<p>சர்வதேச சமூகத்துக்கு எடுத்தியம்பும் பொருட்டும் ஜனநாயகப் பெருமானங்கள், மனித உரிமைகள், நீண்ட கால ஸ்திரத் தன்மை உட்பட பல விடயங்கள் இவ்விவாதத்தில் இடம்பெறுமென அம்சி குணரத்னம் தெரிவித்தார்.</p>
<p>நோர்வே பாராளுமன்றத்தில் தேசிய மற்றும் சர்வதேச முக்கியத்துவமான விடயங்கள் இடையீட்டு விவாதமாக மேற்கொள்ளப்படுமென்பது குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/discussion-on-sri-lanka-in-the-norwegian-parliament-tomorrow/">இலங்கை குறித்து நோர்வே நாடாளுமன்றில் நாளை விவாதம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>போர் ஏற்பட்டால் குடிமக்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் &#8211; நோர்வே இராணுவம் அறிவிப்பு</title>
		<link>https://oruvan.com/in-the-event-of-war-in-norway-citizens-vehicles-will-be-confiscated-and-used/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 21 Jan 2026 04:33:04 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Norway]]></category>
		<category><![CDATA[நோர்வே]]></category>
		<category><![CDATA[போர்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=43453</guid>

					<description><![CDATA[<p>ரஷ்யாவுடன் போர் ஏற்பட்டால் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்து ஐரோப்பிய நாடான நோர்வே தனது குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது. போர் ஏற்பட்டால், குடிமக்களின் வாகனங்கள், படகுகள் போன்றவை ராணுவத்தால் பறிமுதல் செய்யப்பட்டு பயன்படுத்தப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது. இதுவரை 13,000 குடிமக்களுக்கு இந்த செய்தி அனுப்பப்பட்டுள்ளது. இந்த செய்தியின் மூலம், போர்க்காலத்தில் நாட்டின் பாதுகாப்புக்குத் தேவையான பொருட்களை ஆயுதப்படைகள் அணுகுவதை உறுதி செய்ய உள்ளதாக நோர்வே இராணுவம் தெரிவித்துள்ளது. இப்போது வழங்கப்பட்ட செய்தி ஒரு வருத்திற்கு செல்லுபடியாகும். [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/in-the-event-of-war-in-norway-citizens-vehicles-will-be-confiscated-and-used/">போர் ஏற்பட்டால் குடிமக்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் &#8211; நோர்வே இராணுவம் அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ரஷ்யாவுடன் போர் ஏற்பட்டால் செய்ய வேண்டிய ஏற்பாடுகள் குறித்து ஐரோப்பிய நாடான நோர்வே தனது குடிமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.</p>
<p>போர் ஏற்பட்டால், குடிமக்களின் வாகனங்கள், படகுகள் போன்றவை ராணுவத்தால் பறிமுதல் செய்யப்பட்டு பயன்படுத்தப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.</p>
<p>இதுவரை 13,000 குடிமக்களுக்கு இந்த செய்தி அனுப்பப்பட்டுள்ளது.</p>
<p>இந்த செய்தியின் மூலம், போர்க்காலத்தில் நாட்டின் பாதுகாப்புக்குத் தேவையான பொருட்களை ஆயுதப்படைகள் அணுகுவதை உறுதி செய்ய உள்ளதாக நோர்வே இராணுவம் தெரிவித்துள்ளது.</p>
<p>இப்போது வழங்கப்பட்ட செய்தி ஒரு வருத்திற்கு செல்லுபடியாகும். இராணுவம் இதற்கு முன்பு இதுபோன்ற செய்திகளை அனுப்பியுள்ளது.</p>
<p>இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு நோர்வே மிகவும் கடுமையான பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்கிறது, மேலும் போருக்குத் தயாராக வேண்டிய அவசியம் சமீபத்தில் கணிசமாக அதிகரித்துள்ளது,</p>
<p>எனவே ஒரு பெரிய கையிருப்புக்குத் தயாராகி வருகிறது என்று இராணுவத்தின் தளவாட அமைப்பின் தலைவர் ஆண்டர்ஸ் ஜென்பெர்க் தெரிவித்துள்ளார்.</p>
<p>நோர்வே ஆர்க்டிக்கில் ஒரு மூலோபாய இடத்தைக் கொண்டுள்ளது, அங்கு ரஷ்யாவுடன் கடல் மற்றும் நில எல்லையைப் பகிர்ந்து கொள்கிறது.</p>
<p>நேட்டோ உறுப்பினரான நோர்வேயின் கவலைகளுக்கு கூடுதலாக, மேற்கு நாடுகளால் ஏகபோகமாக வைத்திருக்கும் ஆர்க்டிக்கில் ரஷ்யாவும் சீனாவும் தங்கள் இருப்பை விரிவுபடுத்தும் திட்டங்களை கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/in-the-event-of-war-in-norway-citizens-vehicles-will-be-confiscated-and-used/">போர் ஏற்பட்டால் குடிமக்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் &#8211; நோர்வே இராணுவம் அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பிஃபா உலகக் கிண்ணத்திற்கு போர்த்துக்கல், நோர்வே தகுதி</title>
		<link>https://oruvan.com/portugal-norway-qualify-for-fifa-world-cup/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Tue, 18 Nov 2025 05:39:30 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[நோர்வே]]></category>
		<category><![CDATA[போர்த்துக்கல்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=38515</guid>

					<description><![CDATA[<p>ஆர்மேனிய அணிக்கு எதிராக 9–1 என கோல் கணக்கில் வெற்றியீட்டிய கிறிஸ்டியானோ ரொனால்டோவின் போர்த்துக்கல் மற்றும் இத்தாலியை 4–1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஆர்மேனிய அணிகள் 2026 பிஃபா உலகக் கிண்ண போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன. கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த ஐரோப்பிய பிராந்திய தகுதிகாண் போட்டியில் ஆர்மேனிய அணிக்கு எதிராக கோல் மழை பொழிந்ததன் மூலம் ‘எஃப்’ குழுவில் முதலிடம் பிடித்தே போர்த்துக்கல் அணி உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்றது. எனினும் ரொனால்டோ முந்தைய போட்டியில் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/portugal-norway-qualify-for-fifa-world-cup/">பிஃபா உலகக் கிண்ணத்திற்கு போர்த்துக்கல், நோர்வே தகுதி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஆர்மேனிய அணிக்கு எதிராக 9–1 என கோல் கணக்கில் வெற்றியீட்டிய கிறிஸ்டியானோ ரொனால்டோவின் போர்த்துக்கல் மற்றும் இத்தாலியை 4–1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஆர்மேனிய அணிகள் 2026 பிஃபா உலகக் கிண்ண போட்டிக்கு தகுதி பெற்றுள்ளன.</p>
<p>கடந்த ஞாயிற்றுக்கிழமை நடந்த ஐரோப்பிய பிராந்திய தகுதிகாண் போட்டியில் ஆர்மேனிய அணிக்கு எதிராக கோல் மழை பொழிந்ததன் மூலம் ‘எஃப்’ குழுவில் முதலிடம் பிடித்தே போர்த்துக்கல் அணி உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்றது. எனினும் ரொனால்டோ முந்தைய போட்டியில் சிவப்பு அட்டை பெற்றதால் இந்தப் போட்டி ஆட முடியாமல் போனமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>இதன்மூலம் அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் கனடாவில் அடுத்த ஆண்டு நடைபெறும் உலகக் கிண்ணத்தில் போர்த்துக்கல் அணி தொடர்ச்சியாக ஏழாவது முறையாக பங்கேற்கவுள்ளது. 2016 யூரோ சம்பியனான போர்த்துக்கல் இதுவரை உலகக் கிண்ணத்தை வென்றதில்லை. எதிர்வரும் உலகக் கிண்ணம் தனது கடைசி உலகக் கிண்ணமாகும் என 40 வயது ரொனால்டோ ஏற்கனவே அறிவித்துள்ளார்.</p>
<p>இதேவேளை நேற்று முன்தினம் தனது சொந்த மண்ணில் நடைபெற்ற போட்டியில் இத்தாலி அணி நோர்வே இடம் தோல்வியை சந்தித்ததால் உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற தொடர்ந்து காத்திருக்க வேண்டி ஏற்பட்டுள்ளது. இந்தப் போட்டியில் வென்ற நோர்வே ‘ஐ’ குழுவில் முதலிடம் பெற்று உலகக் கிண்ணத்திற்கு முன்னேறியது.</p>
<p>அந்த அணி 28 ஆண்டுகளுக்கு பின்னரே பிஃபா உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற்றுள்ளது. மறுபுறம் இந்தப் குழுவில் இரண்டாவது இடத்திற்கு தள்ளப்பட்ட இத்தாலி உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற பிளே ஓப் சுற்றில் ஆட வேண்டி ஏற்பட்டுள்ளது.</p>
<p>நான்கு முறை உலகக் கிண்ணத்தை வென்ற முன்னணி கால்பந்து அணியான இத்தாலி 2018 இல் ரஷ்யாவில் நடந்த உலகக் கிண்ணம் மற்றும் 2022 இல் கட்டாரில் நடந்த உலகக் கிண்ணத்திற்கு தகுதி பெற தவறிய நிலையில் மீண்டும் ஒரு முறை உலகக் கிண்ணத்திற்கு முன்னேற அந்த அணி போராட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.</p>
<p>மொத்தம் 48 அணிகள் பங்கேற்கும் உலகக் கிண்ணத்தில் நடப்புச் சம்பியன் ஆர்ஜன்டீனா, பிரேசில், இங்கிலாந்து உட்பட 32 நாடுகள் இதுவரை தகுதிபெற்றுள்ளன. இன்னும் 16 அணிகள் தகுதி பெறவுள்ள நிலையில் இன்னும் பெரும்பாலான அணிகள் ஐரோப்பிய பிராந்தியத்தில் இருந்தே தகுதி பெறவுள்ளன.</p>
<p>The post <a href="https://oruvan.com/portugal-norway-qualify-for-fifa-world-cup/">பிஃபா உலகக் கிண்ணத்திற்கு போர்த்துக்கல், நோர்வே தகுதி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
