<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>நேபாளம் Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/%e0%ae%a8%e0%af%87%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b3%e0%ae%ae%e0%af%8d/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/நேபாளம்/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Mon, 15 Sep 2025 08:03:38 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>நேபாளம் Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/நேபாளம்/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>நேபாளம் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது &#8211; மார்ச் ஐந்தாம் திகதி பொது தேர்தல்</title>
		<link>https://oruvan.com/nepal-parliament-dissolved-general-elections-on-march-5th/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 15 Sep 2025 08:03:38 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[நேபாள நாடாளுமன்றம்]]></category>
		<category><![CDATA[நேபாளம்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=32674</guid>

					<description><![CDATA[<p>நேபாளத்தின் இடைக்கால அரசாங்கத்தின் பரிந்துரையை ஏற்று நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது. இதன்படி, அடுத்த ஆண்டு மார்ச் ஐந்தாம் திகதி பொது தேர்தல் இடம்பெறும் என ஜனாதிபதி ராம் சந்திரா பவுதெல் அறிவித்துள்ளார். நேபாளத்தில் கடந்த நான்காம் திபதி சமூக ஊடகங்களுக்க விதிக்கப்பட்ட தடையை தொடர்ந்து பெரும் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டம் பின்னர் கலவரமாக மாறியது. இதில் 75 பேர் உயிரிழந்ததடன், 1300க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருந்தனர். இதனை தொடர்ந்து நாட்டின் முழு பாதுகாப்பையும் அந்நாட்டு இராணுவம் பொறுப்பேற்றுக்கொண்டது. நேபாளம் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/nepal-parliament-dissolved-general-elections-on-march-5th/">நேபாளம் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது &#8211; மார்ச் ஐந்தாம் திகதி பொது தேர்தல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>நேபாளத்தின் இடைக்கால அரசாங்கத்தின் பரிந்துரையை ஏற்று நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.</p>
<p>இதன்படி, அடுத்த ஆண்டு மார்ச் ஐந்தாம் திகதி பொது தேர்தல் இடம்பெறும் என ஜனாதிபதி ராம் சந்திரா பவுதெல் அறிவித்துள்ளார்.</p>
<p>நேபாளத்தில் கடந்த நான்காம் திபதி சமூக ஊடகங்களுக்க விதிக்கப்பட்ட தடையை தொடர்ந்து பெரும் போராட்டம் வெடித்தது. இந்த போராட்டம் பின்னர் கலவரமாக மாறியது.</p>
<p>இதில் 75 பேர் உயிரிழந்ததடன், 1300க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருந்தனர். இதனை தொடர்ந்து நாட்டின் முழு பாதுகாப்பையும் அந்நாட்டு இராணுவம் பொறுப்பேற்றுக்கொண்டது.</p>
<p>நேபாளம் முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. பிரதமர் சர்மா ஒலி உள்ளிட்ட மூத்த அமைச்சர்கள் பதவி விலகினர்.</p>
<p>நிலைமை கட்டுக்குள் கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து நேபாள உச்ச நீதிமன்றத்தின் முன்னாள் தலைமை நீதிபதி சுசீலா கார்கி, நாட்டின் இடைக்கால பிரதமராக பதவியேற்றார்.</p>
<p>இடைக்கால பிரதமர் சுசீலா தலைமையிலான நிர்வாகத்தின் பரிந்துரையை ஏற்று, நாடாளுமன்றத்தை ஜனாதிபதி ராம் சந்திரா கலைத்துள்ளார்.</p>
<p>செப்டம்பர் 12ஆம் திகதி முதல் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளதாக அவர் அறிவித்தார்.</p>
<p>இவ்வாறான நிலையில், 2026ஆம் ஆண்டு மார்ச் ஐந்தாம் திகதி பொது தேர்தல் நடைபெறும்என அந்நாட்டு ஜனாதிபதி ராம் சந்திரா பவுதெல் அறிவித்துள்ளார்.</p>
<p>எவ்வாறாயினும், ஜனாதிபதியின் இந்த அறிவிப்புக்கு பல்வேறு கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.</p>
<p>நாடாளுமன்றத்தை கலைத்தது சட்டவிரோதம், ஜனநாயகத்துக்கு எதிரானது, அரசியலமைப்புக்கு விரோதமானது’ என்று முக்கிய அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/nepal-parliament-dissolved-general-elections-on-march-5th/">நேபாளம் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது &#8211; மார்ச் ஐந்தாம் திகதி பொது தேர்தல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>நேபாளம் பிரதமர் பதவி விலகினார் &#8211; நாட்டை விட்டு வெளியேறவும் முடிவு</title>
		<link>https://oruvan.com/nepal-prime-minister-resigns-decides-to-leave-the-country/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Tue, 09 Sep 2025 09:43:27 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Nepal PM]]></category>
		<category><![CDATA[கே.பி. சர்மா ஒலி]]></category>
		<category><![CDATA[நேபாள பிரதமர்]]></category>
		<category><![CDATA[நேபாளம்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=32096</guid>

					<description><![CDATA[<p>நேபாளத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் ஜெனரல் சி போராட்டங்களுக்குப் பிறகு பிரதமர் கே.பி. சர்மா ஒலி பதவி விலகியுள்ளார். திங்கட்கிழமை தொடங்கிய போராட்டங்களை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்ததை அடுத்து, இரண்டாவது நாளில் அவர் பதவி விலகியுள்ளார். செவ்வாய்க்கிழமை காலை, போராட்டக்காரர்கள் பிரதமர், அமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு தீ வைத்தனர். போராட்டங்களை கட்டுப்படுத்த இன்று முக்கிய கூட்டம் கூட்டப்பட்ட நிலையில், பிரதமரின் எதிர்பாராத பதவி விலகள் அறிவிப்பு வெளியானது. அவர் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/nepal-prime-minister-resigns-decides-to-leave-the-country/">நேபாளம் பிரதமர் பதவி விலகினார் &#8211; நாட்டை விட்டு வெளியேறவும் முடிவு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>நேபாளத்தில் தொடர்ந்து நடைபெற்று வரும் ஜெனரல் சி போராட்டங்களுக்குப் பிறகு பிரதமர் கே.பி. சர்மா ஒலி பதவி விலகியுள்ளார்.</p>
<p>திங்கட்கிழமை தொடங்கிய போராட்டங்களை கட்டுப்படுத்த எடுக்கப்பட்ட அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்ததை அடுத்து, இரண்டாவது நாளில் அவர் பதவி விலகியுள்ளார்.</p>
<p>செவ்வாய்க்கிழமை காலை, போராட்டக்காரர்கள் பிரதமர், அமைச்சர்கள் மற்றும் அரசியல் தலைவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களுக்கு தீ வைத்தனர்.</p>
<p>போராட்டங்களை கட்டுப்படுத்த இன்று முக்கிய கூட்டம் கூட்டப்பட்ட நிலையில், பிரதமரின் எதிர்பாராத பதவி விலகள் அறிவிப்பு வெளியானது.</p>
<p>அவர் விரைவில் நாட்டை விட்டு வெளியேறக்கூடும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. பக்தபூரில் உள்ள பிரதமரின் இல்லம் இன்று காலை தீக்கிரையாக்கப்பட்டது.</p>
<p>போராட்டங்கள் வெடித்ததைத் தொடர்ந்து பதவி விலகிய உள்துறை அமைச்சர் ரமேஷ் லேக்கின் காத்மாண்டு வீடும் தீக்கிரையாக்கப்பட்டது.</p>
<p>திங்கட்கிழமை தொடங்கிய போராட்டங்கள் பொலிஸாருடனான மோதல்களாக விரிவடைந்தன, இதனால் 19 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 300க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.</p>
<p>தலைநகர் காத்மாண்டுவின் கலங்கி, காளிமடி, தஹாச்சல், பனேஷ்வர், மற்றும் லலித்பூர் மாவட்டத்தில் சாய்சல், சாபாகு மற்றும் டெக்கோ உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் போராட்டக்காரர்கள் கூடி அரசாங்கத்திற்கு எதிராகத் திரும்பினர்.</p>
<p>சமூக ஊடகத் தடையை நீக்கக் கோரி தொடங்கிய போராட்டம் வன்முறையாக மாறியதை அடுத்து, தடையை விலக்கிக் கொள்ள அரசாங்கம் முடிவு செய்திருந்தது.</p>
<p>இருப்பினும், இதற்குப் பிறகு போராட்டத்தின் போக்கு மாறியது.</p>
<p>பிரதமர் பதவி விலக வேண்டும், புதிய அரசாங்கத்தை அமைக்க வேண்டும், ஊழல் அரசியல்வாதிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும், போராட்டக்காரர்களைக் கொன்றவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் போன்ற கோரிக்கைகளுடன் இரண்டாவது நாளில் போராட்டங்கள் தீவிரமடைந்தன.</p>
<p>ஜெனரல் சி போராட்டம் வெடித்ததைத் தொடர்ந்து, நாட்டில் அமைதியை மீட்டெடுக்க அனைத்து அரசியல் கட்சிகளின் கூட்டத்தையும் கூட்டிய பின்னர் பிரதமர் கே.பி. சர்மா ஒலி பதவி விலகியுள்ளார்.</p>
<p>இன்றுமாலை 6 மணிக்கு கூட்டம் நடைபெறும் என்று அவர் அறிவித்தார். மேலும், நாட்டு மக்கள் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் அவர் வேண்டுகோள் விடுத்தார்.</p>
<p>இதற்கிடையில், பிரதமர் நாட்டை விட்டு வெளியேற வாய்ப்புள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p>
<p>காத்மாண்டுவில் உள்ள அவரது இல்லத்திற்கு அருகில் ஒரு தனியார் ஜெட் விமானம் தயார் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன, மேலும் அவர் துபாய் செல்லக்கூடும் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p>
<p>நாட்டை விட்டு வெளியேறினால் தனது பொறுப்புகளை நிறைவேற்றும் பணி துணை பிரதமருக்கு வழங்கப்பட்டுள்ளதாக அறிகுறிகள் உள்ளன.</p>
<p>The post <a href="https://oruvan.com/nepal-prime-minister-resigns-decides-to-leave-the-country/">நேபாளம் பிரதமர் பதவி விலகினார் &#8211; நாட்டை விட்டு வெளியேறவும் முடிவு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
