<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>நா.வேதநாயகன் Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/%e0%ae%a8%e0%ae%be-%e0%ae%b5%e0%af%87%e0%ae%a4%e0%ae%a8%e0%ae%be%e0%ae%af%e0%ae%95%e0%ae%a9%e0%af%8d/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/நா-வேதநாயகன்/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Wed, 15 Apr 2026 13:31:56 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>நா.வேதநாயகன் Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/நா-வேதநாயகன்/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>வடக்கு அபிவிருத்தித் திட்டங்களை விரைவுபடுத்த ஆளுநர் உத்தரவு</title>
		<link>https://oruvan.com/governor-orders-to-expedite-northern-development-projects/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Wed, 15 Apr 2026 11:45:48 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[நா.வேதநாயகன்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=48412</guid>

					<description><![CDATA[<p>தற்போதைய நிலைமைகளில் மாகாணத்தின் அபிவிருத்தித் திட்டங்களைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று புதன்கிழமை காலை நடைபெற்றது. நிர்மாணப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக ஒப்பந்ததாரர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அதனால் அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பில் இக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது. இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், விலை மீளாய்வு உள்ளிட்ட பொருத்தமான மாற்று நடவடிக்கைகளைப் பிரதிப் பிரதம செயலாளர் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/governor-orders-to-expedite-northern-development-projects/">வடக்கு அபிவிருத்தித் திட்டங்களை விரைவுபடுத்த ஆளுநர் உத்தரவு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தற்போதைய நிலைமைகளில் மாகாணத்தின் அபிவிருத்தித் திட்டங்களைத் தடையின்றி முன்னெடுத்துச் செல்வதற்கான ஏற்பாடுகள் தொடர்பில் ஆராயும் விசேட கலந்துரையாடல், வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் இன்று புதன்கிழமை காலை நடைபெற்றது.</p>
<p>நிர்மாணப் பொருட்களின் விலையேற்றம் காரணமாக ஒப்பந்ததாரர்கள் எதிர்கொள்ளும் சவால்கள் மற்றும் அதனால் அபிவிருத்தித் திட்டங்களுக்கு ஏற்படும் பாதிப்புகள் தொடர்பில் இக்கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.</p>
<p>இந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும் வகையில், விலை மீளாய்வு உள்ளிட்ட பொருத்தமான மாற்று நடவடிக்கைகளைப் பிரதிப் பிரதம செயலாளர் (பொறியியல்) ஊடாக உடனடியாக மேற்கொள்வதற்கு இதன்போது தீர்மானிக்கப்பட்டது.</p>
<p>மேலும், ‘டித்வா’ இயற்கைப் பேரிடரால் பாதிப்புக்குள்ளான உட்கட்டமைப்புகளின் மீள்கட்டுமானப் பணிகளைத் துரிதமாக முன்னெடுத்துச் செல்வதற்குத் தேவையான நிர்வாகச் செலவினங்கள் மற்றும் நிதி முகாமைத்துவம் தொடர்பிலும் ஆளுநரால் அதிகாரிகளுக்கு விசேட வழிகாட்டல்கள் வழங்கப்பட்டன.</p>
<p>இந்தக் கலந்துரையாடலில் வடக்கு மாகாண அமைச்சுக்களின் செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், மாகாணப் பணிப்பாளர்கள் உள்ளிட்ட அரச உயர் அதிகாரிகள் பலரும் பங்கேற்றனர்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/governor-orders-to-expedite-northern-development-projects/">வடக்கு அபிவிருத்தித் திட்டங்களை விரைவுபடுத்த ஆளுநர் உத்தரவு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மாந்தை கிழக்கு பிரதேசத்தில் வீதிகள் புனரமைப்பு &#8211; ஆளுநர் தலைமையில் கலந்துரையாடல்</title>
		<link>https://oruvan.com/road-reconstruction-in-manthai-east-area-discussion-chaired-by-the-governor/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Fri, 17 Oct 2025 07:11:28 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[நா.வேதநாயகன்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=35682</guid>

					<description><![CDATA[<p>மாந்தை கிழக்கு பிரதேசத்தில் புனரமைக்கப்பட வேண்டிய வீதிகளின் பட்டியலை முன்னுரிமைப்படுத்துமாறும் கிடைக்கப்பெறுகின்ற நிதிகளுக்கு ஏற்ப அவற்றை படிப்படியாக ஒவ்வொரு ஆண்டும் புனரமைக்கலாம் எனவும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். மாந்தை கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் இராசையா நளினி தலைமையிலான பிரதேச சபையின் அனைத்து உறுப்பினர்களுக்கும், வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை (17.10.2025) நடைபெற்றது. இந்தச் சந்திப்பில், வடக்கு மாகாண ஆளுநரின் கண்காணிப்பு பயணத்தை தொடர்ந்து குத்துப்பாலம் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/road-reconstruction-in-manthai-east-area-discussion-chaired-by-the-governor/">மாந்தை கிழக்கு பிரதேசத்தில் வீதிகள் புனரமைப்பு &#8211; ஆளுநர் தலைமையில் கலந்துரையாடல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>மாந்தை கிழக்கு பிரதேசத்தில் புனரமைக்கப்பட வேண்டிய வீதிகளின் பட்டியலை முன்னுரிமைப்படுத்துமாறும் கிடைக்கப்பெறுகின்ற நிதிகளுக்கு ஏற்ப அவற்றை படிப்படியாக ஒவ்வொரு ஆண்டும் புனரமைக்கலாம் எனவும் வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.</p>
<p>மாந்தை கிழக்கு பிரதேச சபையின் தவிசாளர் இராசையா நளினி தலைமையிலான பிரதேச சபையின் அனைத்து உறுப்பினர்களுக்கும், வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை (17.10.2025) நடைபெற்றது.</p>
<p>இந்தச் சந்திப்பில், வடக்கு மாகாண ஆளுநரின் கண்காணிப்பு பயணத்தை தொடர்ந்து குத்துப்பாலம் புனரமைப்புக்கு மாகாண சபையின் நிதி பிரதேச சபைக்கு விடுவிக்கப்பட்டு அது புனரமைக்கப்பட்டு வருவதாகவும் அதனை நிரந்தரமாக புனரமைக்கவேண்டும் என்ற நிலைப்பாடு சபையின் தவிசாளரால் முன்வைக்கப்பட்டது. அதற்கான கோரிக்கை ஏற்கனவே முன்வைக்கப்பட்டு அதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஆளுநர் குறிப்பிட்டார்.</p>
<p>மாந்தை கிழக்கு பிரதேச சபையின் வருமானம் மிகக் குறைவு எனவும், சபையின் பணியாளர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கே மிகவும் சிரமங்களை எதிர்கொள்ளவேண்டியுள்ளதாகவும் தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் ஆளுநரிடம் சுட்டிக்காட்டினர்.</p>
<p>வருமான அதிகரிப்புக்கான உதவிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் அதுவரையில் கிராமங்களுக்கு ஒரு வீதியாவது புனரமைப்புச் செய்து தரப்பட வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர். அத்துடன் மாகாண சபையால் நிதி வழங்கப்பட்டபோதும் இலங்கை மின்சார சபை அனுமதி வழங்காமையால் வீதி மின் விளக்குகள் பொருத்துவதில் இடர்பாடுகளை எதிர்கொள்வதாகவும் தெரிவித்தனர். யானைகளால் மக்கள் பாதிப்புக்களை எதிர்கொள்ளும் நிலையில் பிரதான சந்திகளில் வீதி மின் விளக்குகள் அவசியம் என்றும் ஆளுநரிடம் எடுத்துக்கூறினர். இது தொடர்பில் மின்சார சபையுடன் கலந்துரையாடுவதாக ஆளுநர் பதிலளித்தார்.</p>
<p>மேலும், சபையின் தேவைப்பாடுகள் &#8211; நிர்வாக விடயங்கள் என்பன தொடர்பிலும் ஆளுநருடன் கலந்துரையாடப்பட்டது.</p>
<p>இந்தக் கலந்துரையாடலில் ஆளுநரின் செயலாளர் எஸ்.சத்தியசீலனும் கலந்துகொண்டார்.</p>
<p><img fetchpriority="high" decoding="async" class="alignnone size-full wp-image-35689" src="https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-17-at-12.07.59_f2ffe2c4.jpg" alt="" width="1600" height="904" srcset="https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-17-at-12.07.59_f2ffe2c4.jpg 1600w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-17-at-12.07.59_f2ffe2c4-400x226.jpg 400w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-17-at-12.07.59_f2ffe2c4-650x367.jpg 650w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-17-at-12.07.59_f2ffe2c4-250x141.jpg 250w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-17-at-12.07.59_f2ffe2c4-768x434.jpg 768w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-17-at-12.07.59_f2ffe2c4-1536x868.jpg 1536w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-17-at-12.07.59_f2ffe2c4-150x85.jpg 150w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-17-at-12.07.59_f2ffe2c4-50x28.jpg 50w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-17-at-12.07.59_f2ffe2c4-100x57.jpg 100w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-17-at-12.07.59_f2ffe2c4-200x113.jpg 200w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-17-at-12.07.59_f2ffe2c4-300x170.jpg 300w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-17-at-12.07.59_f2ffe2c4-350x198.jpg 350w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-17-at-12.07.59_f2ffe2c4-450x254.jpg 450w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-17-at-12.07.59_f2ffe2c4-500x283.jpg 500w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-17-at-12.07.59_f2ffe2c4-550x311.jpg 550w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-17-at-12.07.59_f2ffe2c4-800x452.jpg 800w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-17-at-12.07.59_f2ffe2c4-1200x678.jpg 1200w" sizes="(max-width: 1600px) 100vw, 1600px" /> <img decoding="async" class="alignnone size-full wp-image-35687" src="https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-17-at-12.08.01_c5f2622e.jpg" alt="" width="1600" height="1066" srcset="https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-17-at-12.08.01_c5f2622e.jpg 1600w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-17-at-12.08.01_c5f2622e-400x267.jpg 400w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-17-at-12.08.01_c5f2622e-650x433.jpg 650w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-17-at-12.08.01_c5f2622e-250x167.jpg 250w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-17-at-12.08.01_c5f2622e-768x512.jpg 768w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-17-at-12.08.01_c5f2622e-1536x1023.jpg 1536w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-17-at-12.08.01_c5f2622e-150x100.jpg 150w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-17-at-12.08.01_c5f2622e-50x33.jpg 50w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-17-at-12.08.01_c5f2622e-100x67.jpg 100w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-17-at-12.08.01_c5f2622e-200x133.jpg 200w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-17-at-12.08.01_c5f2622e-300x200.jpg 300w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-17-at-12.08.01_c5f2622e-350x233.jpg 350w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-17-at-12.08.01_c5f2622e-450x300.jpg 450w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-17-at-12.08.01_c5f2622e-500x333.jpg 500w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-17-at-12.08.01_c5f2622e-550x366.jpg 550w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-17-at-12.08.01_c5f2622e-800x533.jpg 800w, https://oruvan.com/wp-content/uploads/2025/10/WhatsApp-Image-2025-10-17-at-12.08.01_c5f2622e-1200x800.jpg 1200w" sizes="(max-width: 1600px) 100vw, 1600px" /></p>
<p>The post <a href="https://oruvan.com/road-reconstruction-in-manthai-east-area-discussion-chaired-by-the-governor/">மாந்தை கிழக்கு பிரதேசத்தில் வீதிகள் புனரமைப்பு &#8211; ஆளுநர் தலைமையில் கலந்துரையாடல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஜனாதிபதி நிதியத்தின் சேவைகள் பிரதேச மட்டத்துக்கு பரவல் &#8211; ஜனாதிபதிக்கு நா.வேதநாயகன் வாழ்த்து</title>
		<link>https://oruvan.com/presidents-fund-services-extended-to-the-regional-level-na-vedhanayagan-congratulates-the-president/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Sat, 21 Jun 2025 10:13:00 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[நா.வேதநாயகன்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=24250</guid>

					<description><![CDATA[<p>ஜனாதிபதி நிதியத்தின் சேவைகள் பிரதேச மட்டத்துக்கு பரவலாக்கப்பட்டமை எமது மாகாண மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். இது முக்கியமான மைல்கல். இதற்காக எமது மாகாண மக்கள் சார்பில் அதிமேதகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளை பிரதேச செயலக மட்டத்துக்கு விரிவாக்கும் நிகழ்சித் திட்டத்தின் வடக்கு மாகாணத்துக்கான ஆரம்ப நிகழ்வு கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இன்று சனிக்கிழமை (21.06.2025) நடைபெற்றது. இந்த நிகழ்வில் கடற்றொழில் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/presidents-fund-services-extended-to-the-regional-level-na-vedhanayagan-congratulates-the-president/">ஜனாதிபதி நிதியத்தின் சேவைகள் பிரதேச மட்டத்துக்கு பரவல் &#8211; ஜனாதிபதிக்கு நா.வேதநாயகன் வாழ்த்து</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஜனாதிபதி நிதியத்தின் சேவைகள் பிரதேச மட்டத்துக்கு பரவலாக்கப்பட்டமை எமது மாகாண மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதமாகும். இது முக்கியமான மைல்கல். இதற்காக எமது மாகாண மக்கள் சார்பில் அதிமேதகு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.</p>
<p>ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளை பிரதேச செயலக மட்டத்துக்கு விரிவாக்கும் நிகழ்சித் திட்டத்தின் வடக்கு மாகாணத்துக்கான ஆரம்ப நிகழ்வு கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தில் இன்று சனிக்கிழமை (21.06.2025) நடைபெற்றது. இந்த நிகழ்வில் கடற்றொழில் மற்றும் நீர்வள மேம்பாடு அமைச்சர் இ.சந்திரசேகரன் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.</p>
<p>கிளிநொhச்சி மாவட்டச் செயலர் சு.முரளிதரன் வரவேற்புரையை நிகழ்த்தினார். தொடர்ந்து ஜனாதிபதி நிதியத்தின் சேவைகள் தொடர்பில் ஜனாதிபதி நிதியத்தின் செயலாளரும், ஜனாதிபதி செயலகத்தின் மேலதிக செயலாளருமான சி.ரொஷான் தெளிவுபடுத்தினார்.</p>
<p>இதனைத் தொடர்ந்து உரையாற்றிய ஆளுநர், நான் பிரதேச செயலராக பணியாற்றிய போர்க்காலத்தில் &#8211; 1991ஆம் ஆண்டு காலப்பகுதிகளில் &#8211; மக்கள் மருத்துவத் தேவைக்காக கொழும்புக்கு அலையவேண்டும். அதுவும் இதற்கு விண்ணப்பித்து நீண்ட காலம் காத்திருக்கவேண்டும். இந்த அலைச்சல் வீண் செலவுகள் எல்லாம் இப்போது இல்லாமலாக்கப்பட்டிருக்கின்றது. இது எமது மக்களுக்கு கிடைத்த மிகப்பெரிய வரப்பிரசாதம்.</p>
<p>அரச சேவை என்பது மக்களுக்கு விரைவாக கிடைக்கப்பெறவேண்டியது. இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் ஊடாக அது மக்களுக்கு கிடைக்கப்பெறுகின்றது. மக்கள் தமது பிரதேச செயலகங்கள் ஊடாக விரைவாக தமக்குத் தேவையான நிதியைப் பெற்றுக்கொள்ள முடியும். தனித்து மருத்துவ தேவைக்காக மாத்திரமல்லாது, ஜனாதிபதி நிதியத்தின் ஏனைய சேவைகளையும் வடக்கு மாகாண மக்கள் இன்றிலிருந்து பிரதேச செயலகங்கள் ஊடாகப் பெற்றுக்கொள்ள முடியும்.</p>
<p>மக்கள் நம்பிக்கை வைக்கக் கூடியதாக அரச சேவையை மாற்றியமைக்கவேண்டும் என அதிமேதகு ஜனாதிபதி அவர்கள் அடிக்கடி குறிப்பிடுவார். அது உண்மை. இன்று மக்கள் மத்தியில் அவ்வாறானதொரு நிலைமை இல்லை. இன்று ஆரம்பிக்கப்படும் இந்தச் சேவைகள் ஊடாக அதை மாற்றியமைப்பதற்கு அரச அதிகாரிகள் முன்வரவேண்டும் என ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டார்.</p>
<p>இதன் பின்னர் அமைச்சர் இ.சந்திரசேகரன், பல விடயங்கள் கடந்த காலங்களில் கொழும்பை மையப்படுத்தியிருந்த நிலையில் அதை மாகாணத்தை நோக்கி பரவலாக்கியிருக்கின்றோம் எனக் குறிப்பிட்டார். அதன் ஓர் அங்கமாக ஜனாதிபதி நிதியத்தின் சேவைகளைக் குறிப்பிட முடியும் என்றார் அமைச்சர்.</p>
<p>இதனைத்தொடந்து ஜனாதிபதி நிதியத்தின}டாக வழங்கப்படும் புலமைப்பரிசில் மற்றும் வேறு சேவைகளை இணைய வழிமுறையூடாக செயற்படுத்தும் திட்டம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.</p>
<p>இந்த நிகழ்வில் மாவட்டச் செயலர்கள், பிரதேச செயலர்கள், ஜனாதிபதி நிதியத்தின் மேலதிக செயலாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/presidents-fund-services-extended-to-the-regional-level-na-vedhanayagan-congratulates-the-president/">ஜனாதிபதி நிதியத்தின் சேவைகள் பிரதேச மட்டத்துக்கு பரவல் &#8211; ஜனாதிபதிக்கு நா.வேதநாயகன் வாழ்த்து</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஐ.நா.வின் பங்களிப்புடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் புதிய திட்டங்கள்</title>
		<link>https://oruvan.com/projects-in-the-northern-and-eastern-provinces-with-the-participation-of-the-un/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Fri, 30 May 2025 07:07:44 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[நா.வேதநாயகன்]]></category>
		<category><![CDATA[வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=21792</guid>

					<description><![CDATA[<p>ஐ.நா.வின் பங்களிப்புடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணி மற்றும் நம்பிக்கை கட்டியமைக்கும் செயல்திட்டமான லன்ரேன் (LANTERN &#8211; Land and Trust-building Engagement in the Regions of the North &#38; East) திட்டத்தின் அறிமுக நிகழ்வு வடக்கு மாகாண நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை (29.05.2025) இடம்பெற்றது. ஐ.நா. வதிவிடப்பிரதிநிதியின் ஆலோசகர் பட்டிரிக், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தினர், ஐ.ஓ.எம். நிறுவனத்தினர், யு.என். ஹபிட்டாட் நிறுவனத்தினர், வடக்கு மாகாண காணி [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/projects-in-the-northern-and-eastern-provinces-with-the-participation-of-the-un/">ஐ.நா.வின் பங்களிப்புடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் புதிய திட்டங்கள்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஐ.நா.வின் பங்களிப்புடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணி மற்றும் நம்பிக்கை கட்டியமைக்கும் செயல்திட்டமான லன்ரேன் (LANTERN &#8211; Land and Trust-building Engagement in the Regions of the North &amp; East) திட்டத்தின் அறிமுக நிகழ்வு வடக்கு மாகாண நா.வேதநாயகன் தலைமையில் ஆளுநர் செயலகத்தில் நேற்று வியாழக்கிழமை (29.05.2025) இடம்பெற்றது.</p>
<p>ஐ.நா. வதிவிடப்பிரதிநிதியின் ஆலோசகர் பட்டிரிக், ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டத்தினர், ஐ.ஓ.எம். நிறுவனத்தினர், யு.என். ஹபிட்டாட் நிறுவனத்தினர், வடக்கு மாகாண காணி ஆணையாளர், வடக்கு மாகாண பிரதி நில அளவையாளர் நாயகம், முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி மாவட்டங்களின் மாவட்டச் செயலர்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.</p>
<p>கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்து வெளியிட்ட ஆளுநர், ஐ.நா.வின் அமைதிக்கான நிதியத்தின் மூலம் 3 மில்லியன் அமெரிக்க டொலர் நிதியுதவியுடன் 2 ஆண்டுகளில், வட மற்றும் கிழக்குப் பகுதிகளில் காணியுடன் தொடர்புடைய முக்கிய சவால்களைத் தீர்ப்பதற்கும், அதற்குப் போதுமான முக்கியத்துவமுள்ள வகையில், அரசாங்கம் மற்றும் பொதுமக்கள் இடையிலான நம்பிக்கையை வளர்த்தெடுப்பதற்குமான திட்டமாக இது அமைகின்றது.</p>
<p>இத்திட்டம், இலங்கையின் நீண்டகாலப் போர் பின்னணியில் காணிக்கான சம அளவிலான அணுகல் இல்லாமை தொடர்ச்சியான முரண்பாடுகளுக்கான மூலக்காரணமாக இருந்து வந்ததையும், மக்களின் இடம்பெயர்வு, மீளக்குடியமர்தல் மற்றும் சமூகங்களின் மீளிணைவு உள்ளிட்ட சிக்கல்களை உணர்ந்து உருவாக்கப்பட்டுள்ளது. காணி தொடர்பான இவ்வகை நம்பிக்கையின்மை நீண்டநாள் அமைதிக்குத் தடையாகவும், சமூக மாற்றத்துக்கு இடையூறாகவும் இருந்து வருகிறது. இவை, ஒழுங்கற்ற கொள்கைகள், செயலாக்க வலுவிழப்புகள் மற்றும் நுட்பக்குறைபாடுகள் ஆகியவற்றிலிருந்தும் உருவாகின்றன.</p>
<p><img decoding="async" class="alignnone size-full wp-image-21794" src="https://oruvan.com/wp-content/uploads/2025/05/WhatsApp-Image-2025-05-29-at-22.13.57_da14755c.jpg" alt="" width="1600" height="869" srcset="https://oruvan.com/wp-content/uploads/2025/05/WhatsApp-Image-2025-05-29-at-22.13.57_da14755c.jpg 1600w, https://oruvan.com/wp-content/uploads/2025/05/WhatsApp-Image-2025-05-29-at-22.13.57_da14755c-400x217.jpg 400w, https://oruvan.com/wp-content/uploads/2025/05/WhatsApp-Image-2025-05-29-at-22.13.57_da14755c-650x353.jpg 650w, https://oruvan.com/wp-content/uploads/2025/05/WhatsApp-Image-2025-05-29-at-22.13.57_da14755c-250x136.jpg 250w, https://oruvan.com/wp-content/uploads/2025/05/WhatsApp-Image-2025-05-29-at-22.13.57_da14755c-768x417.jpg 768w, https://oruvan.com/wp-content/uploads/2025/05/WhatsApp-Image-2025-05-29-at-22.13.57_da14755c-1536x834.jpg 1536w, https://oruvan.com/wp-content/uploads/2025/05/WhatsApp-Image-2025-05-29-at-22.13.57_da14755c-150x81.jpg 150w, https://oruvan.com/wp-content/uploads/2025/05/WhatsApp-Image-2025-05-29-at-22.13.57_da14755c-50x27.jpg 50w, https://oruvan.com/wp-content/uploads/2025/05/WhatsApp-Image-2025-05-29-at-22.13.57_da14755c-100x54.jpg 100w, https://oruvan.com/wp-content/uploads/2025/05/WhatsApp-Image-2025-05-29-at-22.13.57_da14755c-200x109.jpg 200w, https://oruvan.com/wp-content/uploads/2025/05/WhatsApp-Image-2025-05-29-at-22.13.57_da14755c-300x163.jpg 300w, https://oruvan.com/wp-content/uploads/2025/05/WhatsApp-Image-2025-05-29-at-22.13.57_da14755c-350x190.jpg 350w, https://oruvan.com/wp-content/uploads/2025/05/WhatsApp-Image-2025-05-29-at-22.13.57_da14755c-450x244.jpg 450w, https://oruvan.com/wp-content/uploads/2025/05/WhatsApp-Image-2025-05-29-at-22.13.57_da14755c-500x272.jpg 500w, https://oruvan.com/wp-content/uploads/2025/05/WhatsApp-Image-2025-05-29-at-22.13.57_da14755c-550x299.jpg 550w, https://oruvan.com/wp-content/uploads/2025/05/WhatsApp-Image-2025-05-29-at-22.13.57_da14755c-800x435.jpg 800w, https://oruvan.com/wp-content/uploads/2025/05/WhatsApp-Image-2025-05-29-at-22.13.57_da14755c-1200x652.jpg 1200w" sizes="(max-width: 1600px) 100vw, 1600px" /></p>
<p>இந்தச் சவால்கள் பலதரப்பட்டவையாக உள்ளன — தனிநபர் உரிமை விவகாரங்கள், இடம்பெயர்வின் தாக்கங்கள், சமூகங்களுக்கிடையிலான வளங்களுக்கான முரண்பாடுகள், இராணுவம் கைப்பற்றியுள்ள குடியேற்ற நிலங்கள், சமூக கலந்தாய்வின்றி பாதுகாப்பு அல்லது அபிவிருத்திக்காக ஒதுக்கப்படும் நிலங்கள் என வௌ;வேறு நிலைத்தன்மையற்ற சிக்கல்கள் உள்ளன.</p>
<p>இந்தச் சூழலில், இடம்பெயர்ந்தோர், அகதிகள், மீண்டுவருபவர்கள், குடும்பத் தலைவியரான பெண்கள், முன்னாள் போராளிகள், மாற்றுத்திறனாளிகள், இளையோர்கள் ஆகியோரது நுட்பமான நலன்கள் கவனிக்கப்பட வேண்டிய முக்கியத்துவம் வாய்ந்தவை.</p>
<p>நில உரிமையில் பாலினத்தை அடிப்படையாகக் கொண்ட தடைகள், பெண்களுக்கு சட்டப்படி உரிமைகள் இருப்பினும் நடைமுறையில் பல்வேறு சவால்களை ஏற்படுத்துகின்றன. இந்தத் திட்டம் இதனை முற்றாக உணர்ந்தும் கவனத்துடனும் செயல்படுகிறது.</p>
<p>அரசாங்க நிறுவனங்கள், மாகாண சபை, சிவில் சமூகம், சமூகத் தலைவர்கள், பெண்கள் மற்றும் இளைஞர் தலைவர்கள் ஆகியோருடன் நெருக்கமாக இணைந்து, வடக்கு மற்றும் கிழக்குப் பகுதிகளில் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு காணிகளை விடுவித்தல், மீளக்குடியமர்தல், சமூக மீளிணக்கம் மற்றும் வீடு மற்றும் காணி உரிமைகளைப் பெறுவதற்கான நீடித்த, சமச்சீர் தீர்வுகளை வழங்கும் திறனுடன் செயல்படுதல் – இதன் மூலமாக எதிர்கால முரண்பாடுகளைத் தவிர்த்து, சமாதானத்தையும் சமூக நம்பிக்கையையும் கட்டியமைக்குதல் என இந்தத் திட்டத்தின் நோக்கம் தெளிவானது.</p>
<p>எனவே, இந்தத் திட்டத்தை எங்களால் முடிந்த அளவு நேர்த்தியான ஒத்துழைப்பு, வெளிப்படைத்தன்மை மற்றும் அர்ப்பணிப்புடன் ஏற்றுக்கொள்ள முடியும். இந்தத் திட்டம், நம்பிக்கையை மீட்டெடுத்து, காணி என்பது உறுதியான சமாதானத்துக்கும், வளர்ச்சிக்கும், அனைத்து சமூகங்களுக்கும் ஒரு நிலைத்தமைப்பாக அமையும் வகையில் அமையவேண்டும் என ஆளுநர் தனது உரையில் குறிப்பிட்டார்.</p>
<p>இதன் பின்னர் ஐ.நா. வதிவிடப் பிரதிநிதியின் ஆலோசகர், யு.என். ஹபிட்டாட் நிறுவனப் பிரதிநிதிகள் ஆகியோர் திட்டம் தொடர்பில் தமது நிலைப்பாடுகளை முன்வைத்தனர்.</p>
<p><img loading="lazy" decoding="async" class="alignnone size-full wp-image-21795" src="https://oruvan.com/wp-content/uploads/2025/05/WhatsApp-Image-2025-05-29-at-22.13.56_9541f7e1.jpg" alt="" width="1600" height="969" srcset="https://oruvan.com/wp-content/uploads/2025/05/WhatsApp-Image-2025-05-29-at-22.13.56_9541f7e1.jpg 1600w, https://oruvan.com/wp-content/uploads/2025/05/WhatsApp-Image-2025-05-29-at-22.13.56_9541f7e1-400x242.jpg 400w, https://oruvan.com/wp-content/uploads/2025/05/WhatsApp-Image-2025-05-29-at-22.13.56_9541f7e1-650x394.jpg 650w, https://oruvan.com/wp-content/uploads/2025/05/WhatsApp-Image-2025-05-29-at-22.13.56_9541f7e1-250x151.jpg 250w, https://oruvan.com/wp-content/uploads/2025/05/WhatsApp-Image-2025-05-29-at-22.13.56_9541f7e1-768x465.jpg 768w, https://oruvan.com/wp-content/uploads/2025/05/WhatsApp-Image-2025-05-29-at-22.13.56_9541f7e1-1536x930.jpg 1536w, https://oruvan.com/wp-content/uploads/2025/05/WhatsApp-Image-2025-05-29-at-22.13.56_9541f7e1-150x91.jpg 150w, https://oruvan.com/wp-content/uploads/2025/05/WhatsApp-Image-2025-05-29-at-22.13.56_9541f7e1-50x30.jpg 50w, https://oruvan.com/wp-content/uploads/2025/05/WhatsApp-Image-2025-05-29-at-22.13.56_9541f7e1-100x61.jpg 100w, https://oruvan.com/wp-content/uploads/2025/05/WhatsApp-Image-2025-05-29-at-22.13.56_9541f7e1-200x121.jpg 200w, https://oruvan.com/wp-content/uploads/2025/05/WhatsApp-Image-2025-05-29-at-22.13.56_9541f7e1-300x182.jpg 300w, https://oruvan.com/wp-content/uploads/2025/05/WhatsApp-Image-2025-05-29-at-22.13.56_9541f7e1-350x212.jpg 350w, https://oruvan.com/wp-content/uploads/2025/05/WhatsApp-Image-2025-05-29-at-22.13.56_9541f7e1-450x273.jpg 450w, https://oruvan.com/wp-content/uploads/2025/05/WhatsApp-Image-2025-05-29-at-22.13.56_9541f7e1-500x303.jpg 500w, https://oruvan.com/wp-content/uploads/2025/05/WhatsApp-Image-2025-05-29-at-22.13.56_9541f7e1-550x333.jpg 550w, https://oruvan.com/wp-content/uploads/2025/05/WhatsApp-Image-2025-05-29-at-22.13.56_9541f7e1-800x485.jpg 800w, https://oruvan.com/wp-content/uploads/2025/05/WhatsApp-Image-2025-05-29-at-22.13.56_9541f7e1-1200x727.jpg 1200w" sizes="auto, (max-width: 1600px) 100vw, 1600px" /></p>
<p>அதனைத் தொடர்ந்து கலந்துரையாடல் முன்னெடுக்கப்பட்டது. இதன்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள காணிப் பிரச்சினைகள் வேறு வேறானவை என மாவட்டச் செயலர்கள் சுட்டிக்காட்டினர். அத்துடன் தற்போது அங்குள்ள காணிப் பிரச்சினைகள் எத்தகைய தன்மை வாய்ந்தவை அவற்றைத் தீர்ப்பதற்கு எவ்வாறான உதவிகளை இந்தத் திட்டத்தின் ஊடாக வழங்கலாம் என்பது தொடர்பிலும் மாவட்டச் செயலர்களும், மாகாண காணி ஆணையாளரும் குறிப்பிட்டனர்.</p>
<p>இதன்போது வடக்கின் 4 மாவட்டச் செயலர்களும், சூம் செயலி ஊடாக இணைந்த வவுனியா மாவட்ட மேலதிக மாவட்டச் செயலரும் வனவளத் திணைக்களம், வன உயிரிகள் திணைக்களம் என்பனவற்றின் முறையற்ற செயற்பாடுகள் தொடர்பில் கடுமையான நிலைப்பாடுகளை முன்வைத்தனர். அந்தத் திணைக்களத்தின் முறைய வர்த்தமானியை மீளப்பெறுவது தொடர்பில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக வலியுறுத்தி வருகின்றபோதும் நடைமுறையில் எதுவும் நடைபெறவில்லை எனவும் விசனத்துடன் அதிகாரிகளும், ஆளுநரும் சுட்டிக்காட்டினர். அது முக்கிய பிரச்சினை என்றும் அதுவும் இந்தத் திட்டத்தின் ஊடாகவேனும் தீர்க்கப்பட வேண்டும் என வலியுறுத்தினர்.</p>
<p>இந்தத் திட்டத்தின் நடைமுறையாக்கம் தொடர்பில் தொடர் கலந்துரையாடல்கள் நடைபெறும் என ஐ.நா. வதிவிடப் பிரதிநிதியின் ஆலோசகர் குறிப்பிட்டார்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/projects-in-the-northern-and-eastern-provinces-with-the-participation-of-the-un/">ஐ.நா.வின் பங்களிப்புடன், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் புதிய திட்டங்கள்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஆசிரியராகக் கடமையாற்றிய காலம் என் வாழ்வில் பொற்காலம &#8211; நா.வேதநாயகன் பெருமிதம்</title>
		<link>https://oruvan.com/the-time-i-spent-as-a-teacher-was-the-golden-age-of-my-life/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Sat, 24 May 2025 07:00:36 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[நா.வேதநாயகன்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=21162</guid>

					<description><![CDATA[<p>நான் நான்கு மாவட்டங்களில் மாவட்டச் செயலராகக் கடமையாற்றிய காலத்தைவிட இந்தப் பாடசாலையில் 4 ஆண்டுகள் இரசாயனவியல் ஆசிரியராகக் கடமையாற்றிய காலமே என் வாழ்வில் பொற்காலம். இன்றும் மறக்க முடியாத காலம். என்னிடம் கற்ற மாணவர்கள் உயர் பதவிகளில் இருப்பதைப்பார்க்கும் போது பெருமையாக இருக்கின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். தேசியப் பாடசாலையான முல்லைத்தீவு மல்லாவி மத்திய கல்லூரியின் வைர விழா நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/the-time-i-spent-as-a-teacher-was-the-golden-age-of-my-life/">ஆசிரியராகக் கடமையாற்றிய காலம் என் வாழ்வில் பொற்காலம &#8211; நா.வேதநாயகன் பெருமிதம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>நான் நான்கு மாவட்டங்களில் மாவட்டச் செயலராகக் கடமையாற்றிய காலத்தைவிட இந்தப் பாடசாலையில் 4 ஆண்டுகள் இரசாயனவியல் ஆசிரியராகக் கடமையாற்றிய காலமே என் வாழ்வில் பொற்காலம். இன்றும் மறக்க முடியாத காலம். என்னிடம் கற்ற மாணவர்கள் உயர் பதவிகளில் இருப்பதைப்பார்க்கும் போது பெருமையாக இருக்கின்றது என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.</p>
<p>தேசியப் பாடசாலையான முல்லைத்தீவு மல்லாவி மத்திய கல்லூரியின் வைர விழா நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றும் போதே ஆளுநர் இவ்வாறு தெரிவித்தார்</p>
<p>அவர் மேலும் தெரிவிக்கையில், நான் இந்த வைரவிழாவில் ஆளுநராகக் கலந்துகொள்வதிலும் பார்க்க முன்னாள் ஆசிரியர் என்ற வகையில் பங்கேற்பதையே பெருமையாகக் கருதுகின்றேன். அந்தக் காலத்தில் என்னுடன் விடுதிகளில் ஒன்றாக தங்கியிருந்து கற்பித்த சக ஆசிரிய நண்பர்கள் இருக்கின்றார்கள். நாங்கள் அன்றைய நாள்களில் பாடசாலை நிறைவடைந்த பின்னர் போட்டிபோட்டுக்கொண்டு மேலதிக வகுப்புக்களை மாணவர்களுக்கு எடுத்தோம்.</p>
<p>யாழ்ப்பாணத்திலிருந்து இங்கு வந்து தங்கி நின்று கற்பித்து சனிக்கிழமை காலையிலிருந்து இங்கிருந்து யாழ்ப்பாணம் சென்று மீண்டும் ஞாயிறு இங்கு திரும்பவேண்டும். அன்றைய சூழலில் இந்திய இராணுவம் நிலைகொண்டிருந்த காலம். யாழ்ப்பாணம் சென்று வருவதில் பெரும் நெருக்கடிகளையும், சோதனைகளையும் எதிர்கொண்டிருந்தேன். ஒரு தடவை பாடசாலை மாணவர்களுடன் சேர்ந்து நாங்கள் ஆசிரியர்களும் ஷெல் தாக்குதல் காரணமாக இடம்பெயர்ந்து ஓடினோம். அத்தகைய பயங்கரமான சூழலில் கற்பித்திருந்தாலும் அது என்றும் மறக்க முடியாத பொற்காலம்.</p>
<p>போர் முடிவுக்கு வந்த பின்னர் மிகக் குறுகிய காலத்தில் முல்லைத்தீவு மாவட்டத்தில் முதனிலை பாடசாலையாக வளர்ந்திருக்கின்றது. அதற்கு இந்தப் பாடசாலைக்கு தலைமைத்துவம் வழங்கியவர்கள், ஒத்துழைப்பு வழங்கியவர்கள்தான் காரணம்.</p>
<p>எந்தவொரு நிறுவனமும் வளர்ச்சியடைவதும் பின்நோக்கிச் செல்வதும் அதன் தலைமைத்துவத்தில்தான் தங்கியிருக்கின்றது. எங்கு தலைமைத்துவம் பிழையாகப்போகின்றதோ அங்கு சரிவு ஆரம்பிக்கின்றது. அதைப்போல வெளிப்படைத்தன்மையும் முக்கியம். எவரும் நம்பிக்கை வைத்துச் செயற்படக்கூடிய நிறுவனமாக இருக்கவேண்டும். பாடசாலை அதிபர் வெளிப்படைத்தன்மையுடன் செயற்படுவதால்தான் அவர் மீது நம்பிக்கை வைத்து பழைய மாணவர்களும் உதவிகளைச் செய்கின்றனர்.</p>
<p>இந்தப் பாடசாலையின் பழைய மாணவர்கள் பலர் புலம்பெயர் தேசங்களிலிருந்து இங்கு கைகொடுத்துக்கொண்டு இருக்கின்றார்கள். அவர்கள் அனைவரும் பாராட்டப்படவேண்டியவர்கள். அவர்களால்தான் இன்று இந்த நிலைமைக்கு வளர்ச்சியடையக்கூடியதாக உள்ளது. வைத்திய கலாநிதி விமல் ஜெயரட்ணம் இந்தப் பாடசாலையுடன் நேரடித் தொடர்புடையவராக இல்லாதபோதும் அவர் பல்வேறு உதவிகளைச் செய்திருக்கின்றார். அவருக்கு பாடசாலைச் சமூகமும், ஊர்மக்களும் இணைந்து கௌரவிப்பு நிகழ்வு நடத்தவேண்டும்.</p>
<p>நான் இந்தப் பாடசாலைக்கு ஆசிரியராக ஆரம்பத்தில் நியமிக்கப்படவில்லை. புதுக்குடியிருப்புக்கே எனது நியமனம் கிடைத்தது. இந்தப் பாடசாலைக்கு இரசாயனவியல் ஆசிரியராக நியமிக்கப்பட்டவர் பதவியேற்க தாமதமாகும் என்பதால் நானாக விரும்பிக்கேட்டு இங்கு வந்தேன். இரண்டு வருடங்களில் அவர் இங்கு வர விரும்பியபோதும் நான் இந்தப் பாடசாலையை விட்டுச் செல்ல விரும்பவில்லை. என்னோடு கற்பித்த ஆசிரியர்கள், என்னிடம் படித்த அந்தப் பண்பாண மாணவர்கள், இந்தச் சமூகத்தைவிட்டுச் செல்வதற்கு எனக்கு மனம்வரவில்லை.</p>
<p>இப்போது ஆசிரியர்கள் யாழ்ப்பாணத்திலிருந்து இங்கு தினமும் வந்து செல்கின்றார்கள். அதன் ஊடாக ஆரோக்கியமான மாணவர் சமூகத்தை அவர்களால் உருவாக்க முடியாது. இங்கு தங்கியிருந்து சேவையாற்றவேண்டும். இப்போதும் ஆசிரிய இடமாற்றங்கள்தான் எங்களுக்கு சவாலாக இருக்கின்றன. யாழ்ப்பாணத்திலிருந்தே ஆசிரியர்கள் இங்கு வருகின்றார்கள்.</p>
<p>இந்தப் பிரதேசத்திலிருந்தே எதிர்காலத்தில் ஆசிரியர்கள், சட்டத்தரணிகள், மருத்துவர்கள், கணக்காளர், இலங்கை நிர்வாகசேவை அதிகாரிகள், திட்டமிடல் பணிப்பாளர்கள் உருவாகவேண்டும். மாணவர்களுக்கு அதற்குரிய வகையில் தலைமைத்துவப் பண்புகளுடன் வளர்க்கவேண்டும்.</p>
<p>மாணவர்களே நீங்கள் மற்றையவர்களுக்கு உதவும் சிந்தனையை வளர்த்துக்கொள்ளவேண்டும். அப்போதுதான் மற்றவர்களால் மதிக்கப்படுவீர்கள். உயர் பதவிகளுக்குச் செல்லும்போது உங்களுக்கு பணிவு வேண்டும். மக்களுக்காக சேவையாற்றவேண்டும், என்றார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/the-time-i-spent-as-a-teacher-was-the-golden-age-of-my-life/">ஆசிரியராகக் கடமையாற்றிய காலம் என் வாழ்வில் பொற்காலம &#8211; நா.வேதநாயகன் பெருமிதம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>வடக்கு மாகாணத்தில் வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்துவது குறித்து கவனம்</title>
		<link>https://oruvan.com/attention-to-controlling-the-whitefly-infestation-in-the-northern-province/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Fri, 25 Apr 2025 09:45:13 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[நா.வேதநாயகன்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=18426</guid>

					<description><![CDATA[<p>வடக்கு மாகாணத்தில் வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்துவது தொடர்பில் பல தடவைகள் கலந்துரையாடப்பட்டபோதும் அது முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை எனச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், மக்கள் இதனால் பெரும் வாழ்வாதாரப் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளமையை கருத்திலெடுத்தாவது விரைவாகவும் முழு வீச்சிலும் கட்டுப்படுத்த அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைக்கவேண்டும் என்று கோரினார். வடக்கு மாகாணத்தில் வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான பொறிமுறையை உருவாக்குவது தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது. கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், வெள்ளை [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/attention-to-controlling-the-whitefly-infestation-in-the-northern-province/">வடக்கு மாகாணத்தில் வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்துவது குறித்து கவனம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>வடக்கு மாகாணத்தில் வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்துவது தொடர்பில் பல தடவைகள் கலந்துரையாடப்பட்டபோதும் அது முழுமையாக நடைமுறைப்படுத்தப்படவில்லை எனச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், மக்கள் இதனால் பெரும் வாழ்வாதாரப் பாதிப்புக்களை எதிர்கொண்டுள்ளமையை கருத்திலெடுத்தாவது விரைவாகவும் முழு வீச்சிலும் கட்டுப்படுத்த அனைத்துத் தரப்பினரும் ஒத்துழைக்கவேண்டும் என்று கோரினார்.</p>
<p>வடக்கு மாகாணத்தில் வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கான பொறிமுறையை உருவாக்குவது தொடர்பில் ஆராயும் கலந்துரையாடல் ஆளுநர் செயலகத்தில் நடைபெற்றது.</p>
<p>கலந்துரையாடலின் ஆரம்பத்தில் கருத்துத் தெரிவித்த ஆளுநர், வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு எமது திணைக்களங்களால் போதிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. பல தடவைகள் கலந்துரையாடப்பட்டாலும் செயற்பாட்டு ரீதியில் அதன் தாக்கத்தை மக்களால் உணர முடியவில்லை.</p>
<p>எமக்கு தினந்தோறும் மக்களிடமிருந்து வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரி கடிதம் அனுப்புகின்றனர். தென்னையை வாழ்வாதாரமாகக் கொண்டு வடக்கு மாகாணத்தில் ஆயிரக்கணக்கான குடும்பங்கள் இருக்கின்றன.</p>
<p>எனவே அவர்களின் பாதிப்புக்களை கருத்திலெடுத்து இதைக் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தினார். 2023ஆம் ஆண்டு காலப் பகுதியில் வெள்ளை ஈ தாக்கம் பரவியபோது எடுக்கப்பட்ட முயற்சிகளின் அளவைக்கூட இப்போது காண முடியவில்லை எனவும் குறிப்பிட்டார்.</p>
<p>வடக்கு மாகாண விவசாயத்திணைக்களத்தால் வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்துவதற்கு சில முயற்சிகள் எடுக்கப்பட்டிருப்பதாக அதன் பணிப்பாளர் ஆளுநரிடம் சுட்டிக்காட்டினார்.</p>
<p>தென்னை பயிர்ச் செய்கை சபையின் உதவிப் பொது முகாமையாளர் ரி.வைகுந்தன் சில விடயங்களைத் தெளிவுபடுத்தினார். இலங்கை முழுவதும் வெள்ளை ஈ தாக்கம் இருந்தாலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களிலேயே இதன் தாக்கம் பெரிதும் அதிகம் எனக் குறிப்பிட்டார்.</p>
<p>ஏனைய பிரதேசங்களின் காலநிலை குறிப்பாக காற்றுடன் கூடிய மழை காரணமாக வெள்ளை ஈ தாக்கம் கட்டுப்பாட்டில் இருந்தாலும் வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் இதன் பரவல் அதிகமாக உள்ளது எனத் தெரிவித்தார். எனவே வடக்கு மற்றும் கிழக்கு மாகாணமே கூடுதல் அக்கறை எடுத்து இதனைக் கட்டுப்படுத்த முயற்சிக்கவேண்டும் எனவும், இதற்கான நிரந்தரத் தீர்வு ஆராய்ச்சி அடிப்படையிலேயே அமையவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.</p>
<p>மேலும், தற்போது வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்துவதற்கு வேப்பெண்ணை சேர்வக்ஸல் கரைசலைப் பயன்படுத்தி தென்னை ஓலையின் கீழ்ப் பகுதியைக் கழுவும் செயற்பாடு 2 அல்லது 3 வாரங்களுக்கு ஒரு தடவை தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட வேண்டிய அவசியம் இருப்பதாகக் குறிப்பிட்ட அவர் இதனை முன்னெடுக்கும் போது அந்தப் பிரதேசத்திலுள்ள அனைத்து தென்னை மரங்களிலும் செய்தால் மாத்திரமே அது உரிய வெற்றியைத் தரும் எனவும் சுட்டிக்காட்டினார்.</p>
<p>பிராந்திய மேலதிக பணிப்பாளர் &#8211; ஆராய்ச்சி எஸ்.ராஜேஸ்கண்ணா, ஒட்டுமருந்தை (Surfactant) சாதாரணமாக பூச்சி நாசினிக்கு பயன்படுத்தும் அளவை விட 4 மடங்கு அதிகம் பயன்படுத்தி தெளிப்பதன் ஊடாக வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்துவதில் சாதகமான முடிவு கிடைக்கப்பெற்றுள்ளதாகக் குறிப்பிட்டார்.</p>
<p>அதேநேரம் இயற்கைமுறையில் கட்டுப்படுத்துவதற்கான முயற்சிகளும் எடுக்கப்பட்டுவருவதாக வடக்கு மாகாண விவசாயத் திணைக்களப் பணிப்பாளர் தெரிவித்தார்.</p>
<p>இதன் பின்னர் கருத்துத் தெரிவித்த ஆளுநர், இந்த முயற்சிகளை விரைவில் ஆரம்பிக்க வேண்டும் எனவும், மக்களுக்கு வெள்ளை ஈயைக் கட்டுப்படுத்த அணுகவேண்டிய விவரங்கள் தெளிவுபடுத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டார். இதற்கு அமைவாக உடனடியாகவே ஒவ்வொரு மாவட்டத்திலும் அதிகம் பாதிப்புக்குள்ளான இடங்கள் தெரிவு செய்யப்பட்டு அங்கு இதைக் கட்டுப்படுத்துவதற்கான மாதிரி செயற்பாடுகள் மக்களுக்கு செய்து காட்டுவதற்குத் தீர்மானிக்கப்பட்டது. அதைத் தொடர்ச்சியாகவும் முன்னெடுக்க முடிவு செய்யப்பட்டது.</p>
<p>இதேவேளை இந்தக் கலந்துரையாடலில் பங்கேற்ற இராணுவத்தினரிடம், வெள்ளை ஈ கட்டுப்பாட்டுக்கான நடவடிக்கைக்கான ஒத்துழைப்பும் கோரப்பட்டது.</p>
<p>கலந்துரையாடலில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர், வடக்கு மாகாண விவசாய அமைச்சின் செயலாளர், தென்னை பயிர்ச் செய்கை சபையின் பிராந்திய முகாமையாளர் ஆகியோரும் பங்கேற்றிருந்தனர்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/attention-to-controlling-the-whitefly-infestation-in-the-northern-province/">வடக்கு மாகாணத்தில் வெள்ளை ஈ தாக்கத்தை கட்டுப்படுத்துவது குறித்து கவனம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>வடக்கு மாகாணம் தொடர்ந்தும் பின்தங்கிய நிலையில் இருக்க முடியாது</title>
		<link>https://oruvan.com/the-northern-province-cannot-continue-to-remain-backward/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Fri, 21 Mar 2025 11:41:19 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[நா.வேதநாயகன்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=15367</guid>

					<description><![CDATA[<p>வடக்கு மாகாணம் தொடர்ந்தும் எல்லாவற்றிலும் பின்தங்கிய நிலையில் இருக்க முடியாது. நாங்களும் முன்னேறவேண்டும். இங்குள்ள சிறுதொழில் முயற்சியாளர்கள் நீங்கள் முன்னேறி எமது மாகாணத்துக்கு பெருமையைத்தேடி தரவேண்டும். இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார். கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில், சிறுதொழில் முயற்சியாளர்களுக்கான &#8216;கிளி முயற்சியாளர் சந்தை&#8217; இன்று வெள்ளிக்கிழமை (21.03.2025) திறந்து வைக்கப்பட்டது. இந்தச் சந்தைக் கட்டடத்துக்கான நிதியுதவியை ஒபர் சிலோன் நிறுவனம் வழங்கியிருந்தது. சந்தையைத் திறந்து வைத்த பின்னர் உரையாற்றிய ஆளுநர், சிறுதொழில் முயற்சியாளர்களை [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/the-northern-province-cannot-continue-to-remain-backward/">வடக்கு மாகாணம் தொடர்ந்தும் பின்தங்கிய நிலையில் இருக்க முடியாது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>வடக்கு மாகாணம் தொடர்ந்தும் எல்லாவற்றிலும் பின்தங்கிய நிலையில் இருக்க முடியாது. நாங்களும் முன்னேறவேண்டும். இங்குள்ள சிறுதொழில் முயற்சியாளர்கள் நீங்கள் முன்னேறி எமது மாகாணத்துக்கு பெருமையைத்தேடி தரவேண்டும். இவ்வாறு வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் வலியுறுத்தினார்.</p>
<p>கிளிநொச்சி மாவட்டச் செயலகத்தின் ஏற்பாட்டில், சிறுதொழில் முயற்சியாளர்களுக்கான &#8216;கிளி முயற்சியாளர் சந்தை&#8217; இன்று வெள்ளிக்கிழமை (21.03.2025) திறந்து வைக்கப்பட்டது. இந்தச் சந்தைக் கட்டடத்துக்கான நிதியுதவியை ஒபர் சிலோன் நிறுவனம் வழங்கியிருந்தது.</p>
<p>சந்தையைத் திறந்து வைத்த பின்னர் உரையாற்றிய ஆளுநர், சிறுதொழில் முயற்சியாளர்களை ஊக்குவிப்பதற்கான சாதகமான சூழல் உருவாகிவருகின்றது. இவர்களுக்கான சந்தைப்படுத்தல் கடந்த காலங்களில் மிகப்பெரும் சவாலாக இருந்தது. இப்போது வெளிநாடுகளுக்கு கூட ஏற்றுமதி செய்யக் கூடிய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.</p>
<p>நாம் எதிலும் வெற்றியடைய தூரநோக்கு இருக்கவேண்டும். உங்களுக்கு அது இருக்கின்றமையை வரவேற்று பாராட்டுகின்றேன். உங்களுக்கு மேலும் பல வசதிகள் செய்துதரப்படவேண்டும் என்பதை ஏற்றுக்கொள்கின்றேன். கிளிநொச்சி மாவட்டத்துக்கு மிகச் சிறந்த தலைமைத்துவம் கிடைத்திருக்கின்றது. உங்களின் மாவட்டச் செயலர் சு.முரளிதரன் சிறப்பான ஒருவர். அவர் உங்களுக்கு தேவையானவற்றை நிச்சயம் நிறைவேற்றித்தருவார்.</p>
<p>ஆரம்பத்தில் சிறுதொழில் முயற்சியாளர்களாக இருந்த பலர் இன்று பெரும் கைத்தொழிற்சாலைகளை உருவாக்கி பலருக்கு வேலைவாய்ப்பை வழங்கிக் கொண்டிருக்கின்றனர். நீங்களும் அவ்வாறு பெரும் தொழிற்சாலைகளை உருவாக்கி ஏனையோருக்கு வேலை வாய்ப்புக்களை வழங்கவேண்டும்.</p>
<p>வடக்கு மாகாணத்தின் சுற்றுலா மற்றும் சிறுகைத்தொழில் முயற்சிகளுக்கு உலக வங்கி உதவி செய்யும் சூழல் உருவாகியிருக்கின்றது. அவற்றை நாம் பயன்படுத்தி முன்னேறவேண்டும், என்றார் ஆளுநர்.</p>
<p>இந்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்டச் செயலர் சு.முரளிதரன், ஒபர் சிலோன் நிறுவனத்தின் திட்டத் தலைவர் செல்வி சின்னத்தம்பி சூரியகுமாரி, கிளிநொச்சி மாவட்ட மேலதிக மாவட்டச் செயலர் திருமதி நளாயினி இன்பராஜ், மாவட்டச் செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், சிறுதொழில் முயற்சியாளர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.</p>
<p><img loading="lazy" decoding="async" class="alignnone size-full wp-image-15369" src="https://oruvan.com/wp-content/uploads/2025/03/WhatsApp-Image-2025-03-21-at-14.10.38_215fa1ae.jpg" alt="" width="1600" height="1066" srcset="https://oruvan.com/wp-content/uploads/2025/03/WhatsApp-Image-2025-03-21-at-14.10.38_215fa1ae.jpg 1600w, https://oruvan.com/wp-content/uploads/2025/03/WhatsApp-Image-2025-03-21-at-14.10.38_215fa1ae-400x267.jpg 400w, https://oruvan.com/wp-content/uploads/2025/03/WhatsApp-Image-2025-03-21-at-14.10.38_215fa1ae-650x433.jpg 650w, https://oruvan.com/wp-content/uploads/2025/03/WhatsApp-Image-2025-03-21-at-14.10.38_215fa1ae-250x167.jpg 250w, https://oruvan.com/wp-content/uploads/2025/03/WhatsApp-Image-2025-03-21-at-14.10.38_215fa1ae-768x512.jpg 768w, https://oruvan.com/wp-content/uploads/2025/03/WhatsApp-Image-2025-03-21-at-14.10.38_215fa1ae-1536x1023.jpg 1536w, https://oruvan.com/wp-content/uploads/2025/03/WhatsApp-Image-2025-03-21-at-14.10.38_215fa1ae-150x100.jpg 150w, https://oruvan.com/wp-content/uploads/2025/03/WhatsApp-Image-2025-03-21-at-14.10.38_215fa1ae-50x33.jpg 50w, https://oruvan.com/wp-content/uploads/2025/03/WhatsApp-Image-2025-03-21-at-14.10.38_215fa1ae-100x67.jpg 100w, https://oruvan.com/wp-content/uploads/2025/03/WhatsApp-Image-2025-03-21-at-14.10.38_215fa1ae-200x133.jpg 200w, https://oruvan.com/wp-content/uploads/2025/03/WhatsApp-Image-2025-03-21-at-14.10.38_215fa1ae-300x200.jpg 300w, https://oruvan.com/wp-content/uploads/2025/03/WhatsApp-Image-2025-03-21-at-14.10.38_215fa1ae-350x233.jpg 350w, https://oruvan.com/wp-content/uploads/2025/03/WhatsApp-Image-2025-03-21-at-14.10.38_215fa1ae-450x300.jpg 450w, https://oruvan.com/wp-content/uploads/2025/03/WhatsApp-Image-2025-03-21-at-14.10.38_215fa1ae-500x333.jpg 500w, https://oruvan.com/wp-content/uploads/2025/03/WhatsApp-Image-2025-03-21-at-14.10.38_215fa1ae-550x366.jpg 550w, https://oruvan.com/wp-content/uploads/2025/03/WhatsApp-Image-2025-03-21-at-14.10.38_215fa1ae-800x533.jpg 800w, https://oruvan.com/wp-content/uploads/2025/03/WhatsApp-Image-2025-03-21-at-14.10.38_215fa1ae-1200x800.jpg 1200w" sizes="auto, (max-width: 1600px) 100vw, 1600px" /> <img loading="lazy" decoding="async" class="alignnone size-full wp-image-15370" src="https://oruvan.com/wp-content/uploads/2025/03/WhatsApp-Image-2025-03-21-at-14.10.40_39bb462d.jpg" alt="" width="1600" height="1066" srcset="https://oruvan.com/wp-content/uploads/2025/03/WhatsApp-Image-2025-03-21-at-14.10.40_39bb462d.jpg 1600w, https://oruvan.com/wp-content/uploads/2025/03/WhatsApp-Image-2025-03-21-at-14.10.40_39bb462d-400x267.jpg 400w, https://oruvan.com/wp-content/uploads/2025/03/WhatsApp-Image-2025-03-21-at-14.10.40_39bb462d-650x433.jpg 650w, https://oruvan.com/wp-content/uploads/2025/03/WhatsApp-Image-2025-03-21-at-14.10.40_39bb462d-250x167.jpg 250w, https://oruvan.com/wp-content/uploads/2025/03/WhatsApp-Image-2025-03-21-at-14.10.40_39bb462d-768x512.jpg 768w, https://oruvan.com/wp-content/uploads/2025/03/WhatsApp-Image-2025-03-21-at-14.10.40_39bb462d-1536x1023.jpg 1536w, https://oruvan.com/wp-content/uploads/2025/03/WhatsApp-Image-2025-03-21-at-14.10.40_39bb462d-150x100.jpg 150w, https://oruvan.com/wp-content/uploads/2025/03/WhatsApp-Image-2025-03-21-at-14.10.40_39bb462d-50x33.jpg 50w, https://oruvan.com/wp-content/uploads/2025/03/WhatsApp-Image-2025-03-21-at-14.10.40_39bb462d-100x67.jpg 100w, https://oruvan.com/wp-content/uploads/2025/03/WhatsApp-Image-2025-03-21-at-14.10.40_39bb462d-200x133.jpg 200w, https://oruvan.com/wp-content/uploads/2025/03/WhatsApp-Image-2025-03-21-at-14.10.40_39bb462d-300x200.jpg 300w, https://oruvan.com/wp-content/uploads/2025/03/WhatsApp-Image-2025-03-21-at-14.10.40_39bb462d-350x233.jpg 350w, https://oruvan.com/wp-content/uploads/2025/03/WhatsApp-Image-2025-03-21-at-14.10.40_39bb462d-450x300.jpg 450w, https://oruvan.com/wp-content/uploads/2025/03/WhatsApp-Image-2025-03-21-at-14.10.40_39bb462d-500x333.jpg 500w, https://oruvan.com/wp-content/uploads/2025/03/WhatsApp-Image-2025-03-21-at-14.10.40_39bb462d-550x366.jpg 550w, https://oruvan.com/wp-content/uploads/2025/03/WhatsApp-Image-2025-03-21-at-14.10.40_39bb462d-800x533.jpg 800w, https://oruvan.com/wp-content/uploads/2025/03/WhatsApp-Image-2025-03-21-at-14.10.40_39bb462d-1200x800.jpg 1200w" sizes="auto, (max-width: 1600px) 100vw, 1600px" /></p>
<p>The post <a href="https://oruvan.com/the-northern-province-cannot-continue-to-remain-backward/">வடக்கு மாகாணம் தொடர்ந்தும் பின்தங்கிய நிலையில் இருக்க முடியாது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மக்களுக்கு உதவி செய்ய உருவாக்கப்பட்ட பதவிகளில் உபத்திரங்களையே செய்கின்றனர் &#8211; நா.வேதநாயகன்</title>
		<link>https://oruvan.com/they-are-doing-harm-in-positions-created-to-help-the-people-na-vedhanayagan/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Fri, 21 Mar 2025 08:29:32 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[நா.வேதநாயகன்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=15328</guid>

					<description><![CDATA[<p>“மக்களுக்கு உதவிகளைச் செய்வதற்காக உருவாக்கப்பட்ட பதவிகளில் இருக்கும் சிலர் மக்களுக்கு உதவிகளைச் செய்வதற்குப் பதிலாக உபத்திரங்களையே செய்கின்றனர்.” &#8211; இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கவலை வெளியிட்டார். புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் ஏற்பாட்டில், சபை நிதியில் புதுக்குடியிருப்பு சந்தையினுள் அமைக்கப்பட்ட கடைத்தொகுதி மற்றும் உலக வங்கியின் நிதியில் உள்ளூர் அபிவிருத்தி உதவித் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட கடைத்தொகுதி என்பனவற்றை ஆளுநர் திறந்து வைத்தார். அத்துடன் சந்தையினுள் மரக்கன்றும் நடுகை செய்தார். அதனைத் தொடர்ந்து [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/they-are-doing-harm-in-positions-created-to-help-the-people-na-vedhanayagan/">மக்களுக்கு உதவி செய்ய உருவாக்கப்பட்ட பதவிகளில் உபத்திரங்களையே செய்கின்றனர் &#8211; நா.வேதநாயகன்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>“மக்களுக்கு உதவிகளைச் செய்வதற்காக உருவாக்கப்பட்ட பதவிகளில் இருக்கும் சிலர் மக்களுக்கு உதவிகளைச் செய்வதற்குப் பதிலாக உபத்திரங்களையே செய்கின்றனர்.”</p>
<p>&#8211; இவ்வாறு வடக்கு மாகாண கௌரவ ஆளுநர் நா.வேதநாயகன் அவர்கள் கவலை வெளியிட்டார்.</p>
<p>புதுக்குடியிருப்பு பிரதேச சபையின் ஏற்பாட்டில், சபை நிதியில் புதுக்குடியிருப்பு சந்தையினுள் அமைக்கப்பட்ட கடைத்தொகுதி மற்றும் உலக வங்கியின் நிதியில் உள்ளூர் அபிவிருத்தி உதவித் திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட கடைத்தொகுதி என்பனவற்றை ஆளுநர் திறந்து வைத்தார். அத்துடன் சந்தையினுள் மரக்கன்றும் நடுகை செய்தார்.</p>
<p>அதனைத் தொடர்ந்து புதுக்குடியிருப்பு பிரதேச சபை மண்டபத்தினுள், திண்மக் கழிவு முகாமைத்துவம் தொடர்பான விழிப்புணர்வூட்டும் அங்குரார்ப்பண நிகழ்வு இன்று வெள்ளிக்கிழமை (21.03.2025) இடம்பெற்றது. இதில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்ட ஆளுநர் அங்கு உரையாற்றுகையில்,</p>
<p>முன்னைய காலங்களில் எமது மாகாணமே இலங்கையில் தூய்மையான மாகாணமாக இருந்தது. ஆனால் இன்று அது தலைகீழாக மாறிவிட்டது. எப்போது &#8216;சொப்பிங் பாக்&#8217;, &#8216;பிளாஸ்ரிக் போத்தல்&#8217; என்பன அறிமுகத் தொடங்கியதோ அன்றே எமது சுற்றாடலும் மாசடையத் தொடங்கிவிட்டது.</p>
<p>எங்கள் இடத்தை அழகாக – தூய்மையாக வைத்திருக்க நாங்கள் விரும்பவில்லை. நாங்கள் எமது சூழல் அழகாக இருக்கவேண்டும் என்று நினைத்திருந்தால், வீதியில் குப்பைகளைப் போட்டிருக்கமாட்டோம். இளமையிலேயே எங்கள் பிள்ளைகளுக்கு சுற்றாடலை தூய்மையாக வைத்திருப்பதை பழக்கவேண்டும். இன்று இங்குள்ள மாணவர்கள், எதிர்காலத்தில் பெரியவர்களாகும்போது சுற்றாடலை தூய்மையாக வைத்திருப்பவர்களாக மாறவேண்டும்.</p>
<p>உங்களுக்கு நல்லதொரு பிரதேச செயலராக விஜயகுமார் கிடைத்திருக்கின்றார். அவர் இந்தப் பகுதியில் சிறப்பான மாற்றங்களைச் செய்வார் என்ற நம்பிக்கை எனக்கிருக்கின்றது, என்றார் ஆளுநர்.</p>
<p>இந்த நிகழ்வுகளில் முல்லைத்தீவு மாவட்ட உள்ளூராட்சி உதவி ஆணையாளர் ச.யசிந்தன், புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் இ.விஜயகுமார், புதுக்குடியிருப்பு பிரதேச சபைச் செயலர் ச.கிருசாந்தன் ஆகியோர் கலந்துகொண்டனர்.</p>
<p>புதுக்குடியிருப்பு பிரதேச சபையால் அறிமுகப்படுத்தப்பட்ட திண்மக் கழிவகற்றலுக்காக அட்டை மற்றும் துண்டுபிரசுரம் என்பன ஆளுநரால் இந்த நிகழ்வில் வெளியிட்டு வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/they-are-doing-harm-in-positions-created-to-help-the-people-na-vedhanayagan/">மக்களுக்கு உதவி செய்ய உருவாக்கப்பட்ட பதவிகளில் உபத்திரங்களையே செய்கின்றனர் &#8211; நா.வேதநாயகன்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>அழகுக்கலை நிலையங்களின் உரிமம் இரத்துச் செய்யப்படும் &#8211; வேதநாயகன் எச்சரிக்கை</title>
		<link>https://oruvan.com/licenses-of-beauty-salons-will-be-revoked-vedanayagan-warns/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Fri, 21 Feb 2025 13:10:02 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[நா.வேதநாயகன்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=11584</guid>

					<description><![CDATA[<p>வடக்கு மாகாண உள்ளூராட்சி அதிகாரசபைகளின் நியமத்துணைவிதிகளின் சட்ட ஏற்பாட்டில் சொல்லப்பட்டுள்ள விடயங்களை மீறிச் செயற்படும் அழகுக்கலை நிலையங்களின் உரிமம் இரத்துச் செய்யப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார். வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் வடக்கு மாகாண அழகுக்கலை சங்கப் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் இன்று வெள்ளிக்கிழமை (21.02.2025) நடைபெற்றது. ஒரு சில அழகுக்கலை நிலையங்கள் சங்கத்தின் கட்டுப்பாடுகளை மீறிச் செயற்படுவது தொடர்பில் ஏற்கனவே ஆளுநருக்கு தெரியப்படுத்தப்பட்டிருந்த நிலையில் அதற்கு அமைவாக இன்றைய கூட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது. உள்ளூராட்சிமன்றங்களால் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/licenses-of-beauty-salons-will-be-revoked-vedanayagan-warns/">அழகுக்கலை நிலையங்களின் உரிமம் இரத்துச் செய்யப்படும் &#8211; வேதநாயகன் எச்சரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>வடக்கு மாகாண உள்ளூராட்சி அதிகாரசபைகளின் நியமத்துணைவிதிகளின் சட்ட ஏற்பாட்டில் சொல்லப்பட்டுள்ள விடயங்களை மீறிச் செயற்படும் அழகுக்கலை நிலையங்களின் உரிமம் இரத்துச் செய்யப்படும் என வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன் தெரிவித்தார்.</p>
<p>வடக்கு மாகாண ஆளுநர் செயலகத்தில் வடக்கு மாகாண அழகுக்கலை சங்கப் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் இன்று வெள்ளிக்கிழமை (21.02.2025) நடைபெற்றது.<br />
ஒரு சில அழகுக்கலை நிலையங்கள் சங்கத்தின் கட்டுப்பாடுகளை மீறிச் செயற்படுவது தொடர்பில் ஏற்கனவே ஆளுநருக்கு தெரியப்படுத்தப்பட்டிருந்த நிலையில் அதற்கு அமைவாக இன்றைய கூட்டம் ஒழுங்குபடுத்தப்பட்டிருந்தது.</p>
<p>உள்ளூராட்சிமன்றங்களால் உரிமம் வழங்கப்படும்போது உள்ளூராட்சிமன்ற அதிகார எல்லைக்குள் சிகை அலங்கரிப்பு நிலையங்கள், நாவிதன்கடைகள், அழகுக்கலை நிலையங்களை நடாத்திச் செல்வதை முறைப்படுத்தல், ஒழுங்குபடுத்தல், கண்காணிப்புச் செய்தல் மற்றும் கட்டுப்படுத்தல் தொடர்பான நியமத்துணைவிதிகளின் அடிப்படையிலேயே ஒவ்வொரு ஆண்டும் உரிமம் வழங்கப்படுவதாக உள்ளூராட்சி அமைச்சின் செயலர் சுட்டிக்காட்டினார்.</p>
<p>இந்த நியமத்துணை விதியின் கீழ் பாடசாலை மாணவர்களுக்கான தலைமுடி வெட்டுதல் கூட எவ்வாறு அமையவேண்டும் என தெளிவாகச் சொல்லப்பட்டுள்ளதால் அதற்கு அமைவாகவே அனைத்து அழகக நிலையங்களும் செயற்பட முடியும் என ஆளுநரும் இதன்போது சுட்டிக்காட்டினார்.</p>
<p>நியமத்துணைவிதியை மீறும் அழகக நிலையங்கள் தொடர்பில் அழகக சங்கங்கள் அந்தந்த உள்ளூராட்சிமன்றங்களுக்கு முறைப்பாடு செய்ய முடியும் எனவும் குறிப்பிட்ட ஆளுநர், அதற்கு அமைவாக அத்தகை அழகுக்கலை நிலையங்களின் உரிமத்தை உள்ளூராட்சிமன்றங்கள் எதிர்காலத்தில் இரத்துச் செய்ய முடியும் எனவும் குறிப்பிட்டார்.</p>
<p>அழகுக்கலை நிலையங்கள் தொடர்பான முறைப்பாடுகளைத் தெரிவிப்பதற்கு வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் விசேட தொலைபேசி இலக்கம் ஒன்றையும் வழங்கினார். அந்த இலக்கத்துக்கு முறைப்பாடுகள் தெரிவிக்கப்பட்டால் பொதுச்சுகாதாரப் பரிசோதகர்கள் ஊடாகவும் சோதனைகளை மேற்கொள்வதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அமைச்சின் செயலர் குறிப்பிட்டார்.</p>
<p>சில பெற்றோர் தமது பிள்ளைகளுக்கு இவ்வாறுதான் தலைமுடி வெட்ட வேண்டும் என நிர்பந்திக்கின்றனர் என அழகக சங்கப் பிரதிநிதிகள் சுட்டிக்காட்டினர். இதன்போது கருத்து வெளியிட்ட வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலர், சட்டத்தில் இவ்வாறுதான் தலைமுடியை வெட்ட முடியும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதை மீறினால் அழகுக்கலை நிலைய உரிமையாளரின் உரிமமே இரத்துச் செய்யப்படும் எனச் சுட்டிக்காட்டியதுடன், பெற்றோருக்கும் இதை தெரியப்படுத்துமாறு குறிப்பிட்டார்.</p>
<p>அதேபோல சட்டவிரோத செயல்கள் இடம்பெறுவதாக நம்பப்படும் அழகுக்கலை நிலையங்கள் தொடர்பில் முறைப்பாடுகளைத் தெரிவிப்பதற்காக கூட்டத்தில் கலந்து கொண்ட பொலிஸாராலும் விசேட தொலைபேசி இலக்கங்கள் வழங்கப்பட்டன. மேலும், அழகுக்கலை நிலைய உரிமையாளர்களுக்கு தெளிவூட்டும் கூட்டங்களை சங்கங்கள் ஒழுங்கு செய்தால் அதில் கலந்துகொண்டு விளக்கமளிக்க தயாராக இருப்பதாக பொலிஸாரும் இதன்போது தெரிவித்தனர்.</p>
<p>இந்தச் சந்திப்பில் வடக்கு மாகாண ஆளுநரின் செயலாளர் மு.நந்தகோபாலன், வடக்கு மாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர் செ.பிரணவநாதன், வடக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலர் ம.பற்றிக் டிறஞ்சன், தொழில் திணைக்களத்தின் பிரதிநிதிகள், சுகாதாரத் திணைக்களத்தின் பிரதிநிதிகள் ஆகியோரும் கலந்துகொண்டிருந்தனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/licenses-of-beauty-salons-will-be-revoked-vedanayagan-warns/">அழகுக்கலை நிலையங்களின் உரிமம் இரத்துச் செய்யப்படும் &#8211; வேதநாயகன் எச்சரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>வடக்கு ஆசிரியர் பிரச்சினைக்கு அடுத்த வருட ஆரம்பத்தில் தீர்வு</title>
		<link>https://oruvan.com/northern-teacher-issue-to-be-resolved-early-next-year/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Wed, 25 Dec 2024 05:45:37 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[நா.வேதநாயகன்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=3858</guid>

					<description><![CDATA[<p>வடக்கு மாகாணத்தில் ஆசிரிய வளப் பங்கீடு சரியான முறையில் நடைபெறவில்லை எனச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், ஆசிரிய தொழிற்சங்கங்கள் மற்றும் கல்வி அமைச்சின் சகல அதிகாரிகளையும் இணைத்து அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் கலந்துரையாடல் நடத்தி இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார். இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றது. வடக்கு மாகாணத்தில் கடந்த காலங்களில் இடம்பெற்ற முறையற்ற [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/northern-teacher-issue-to-be-resolved-early-next-year/">வடக்கு ஆசிரியர் பிரச்சினைக்கு அடுத்த வருட ஆரம்பத்தில் தீர்வு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>வடக்கு மாகாணத்தில் ஆசிரிய வளப் பங்கீடு சரியான முறையில் நடைபெறவில்லை எனச் சுட்டிக்காட்டிய வடக்கு மாகாண ஆளுநர் நா.வேதநாயகன், ஆசிரிய தொழிற்சங்கங்கள் மற்றும் கல்வி அமைச்சின் சகல அதிகாரிகளையும் இணைத்து அடுத்த ஆண்டு ஆரம்பத்தில் கலந்துரையாடல் நடத்தி இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு காண எதிர்பார்ப்பதாகவும் தெரிவித்தார்.</p>
<p>இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகளுக்கும் வடக்கு மாகாண ஆளுநருக்கும் இடையிலான சந்திப்பு ஆளுநர் செயலகத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை இடம்பெற்றது.</p>
<p>வடக்கு மாகாணத்தில் கடந்த காலங்களில் இடம்பெற்ற முறையற்ற இடமாற்றங்கள் மற்றும் முறைகேடுகள் தொடர்பில் ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதிகள் ஆளுநருக்கு தெரியப்படுத்தினர். இடமாற்றங்கள் பெயரளவுக்கே இடம்பெற்றன என்பதைச் சுட்டிக்காட்டிய அவர்கள், ஆசிரிய ஆலோசகர்களுக்கான இடமாற்றங்கள் பல ஆண்டுகளாக நடைபெறவில்லை என்றும் குறிப்பிட்டனர்.</p>
<p>வடக்கு மாகாணத்தின் முன்பள்ளிக் கல்வி தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்று அவர்கள் கோரியதுடன், ஆசிரியர்களுக்கு தற்போதைய காலத்துக்கு ஏற்ற வகையிலான பயிற்சிகள் வழங்கப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டனர்.</p>
<p>இது தொடர்பாக இலங்கைத் தமிழர் ஆசிரியர் சங்கத்தால் கோரிக்கைக் கடிதம் ஒன்று ஆளுநரிடம் ஒப்படைக்கப்பட்டது.</p>
<p>The post <a href="https://oruvan.com/northern-teacher-issue-to-be-resolved-early-next-year/">வடக்கு ஆசிரியர் பிரச்சினைக்கு அடுத்த வருட ஆரம்பத்தில் தீர்வு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
