<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>நாமல் Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/%e0%ae%a8%e0%ae%be%e0%ae%ae%e0%ae%b2%e0%af%8d/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/நாமல்/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Wed, 15 Oct 2025 10:02:53 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>நாமல் Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/நாமல்/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>இஷார செவ்வந்தி கைது!! நாமல் எம்.பி அரசாங்கத்திடம் விடுத்த கோரிக்கை</title>
		<link>https://oruvan.com/ishara-sewwandi-arrested-namal-mps-request-to-the-government/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 15 Oct 2025 10:02:53 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ishara Sewwandi]]></category>
		<category><![CDATA[Namal Rajapaksa]]></category>
		<category><![CDATA[நாமல்]]></category>
		<category><![CDATA[நாமல் ராஜபக்ச]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=35507</guid>

					<description><![CDATA[<p>பாதாள உலக அமைப்புகளுக்குப் பின்னால் இருப்பவர்கள் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று இலங்கை பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், முன்னாள் கடற்படைத் தளபதி மற்றும் இரண்டு உயர் பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டதைப் போலவே, இந்த விடயத்தையும் அரசாங்கம் அரசியலாக்கக் கூடாது என்றும் வலியுறுத்தினார். கணேமுல்ல சஞ்சீவ கொலைக்குப் பின்னணியில் இருந்த இஷார செவ்வந்தி கைது செய்யப்பட்டமை குறித்த கேள்விகளுக்கு [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/ishara-sewwandi-arrested-namal-mps-request-to-the-government/">இஷார செவ்வந்தி கைது!! நாமல் எம்.பி அரசாங்கத்திடம் விடுத்த கோரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பாதாள உலக அமைப்புகளுக்குப் பின்னால் இருப்பவர்கள் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று இலங்கை பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.</p>
<p>இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், முன்னாள் கடற்படைத் தளபதி மற்றும் இரண்டு உயர் பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டதைப் போலவே, இந்த விடயத்தையும் அரசாங்கம் அரசியலாக்கக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.</p>
<p>கணேமுல்ல சஞ்சீவ கொலைக்குப் பின்னணியில் இருந்த இஷார செவ்வந்தி கைது செய்யப்பட்டமை குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது நாமல் ராஜபக்ச இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.</p>
<p>“இந்த பாதாள உலக அமைப்புகளுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை நாடு அறிந்து கொள்ள வேண்டும். இது குறித்து நடுநிலையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.</p>
<p>இந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் தேடப்படும் பல நபர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி 17 பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக துணை அமைச்சரே தெரிவித்துள்ளார்.</p>
<p>ஆனால், அந்தக் கடவுச்சீட்டுகள் யாருடையவை என்பதை அவர்கள் இன்னும் வெளியிடவில்லை. துறைமுகத்திலிருந்து ஆய்வு செய்யப்படாத 323 கொள்கலன்களை விடுவித்தவர்கள் யார்? என்ற விவரங்களை வெளியிடவில்லை.</p>
<p>தயவுசெய்து இந்த சம்பவங்களையும் விசாரிக்க” வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். அரசாங்கம் இந்த விடயங்களை விசாரித்து பாதாள உலக நடவடிக்கைகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுத்தினார்.</p>
<p>இந்த விடயங்களை அரசியலாக்கக்கூடாது என்றும் நடுநிலையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/ishara-sewwandi-arrested-namal-mps-request-to-the-government/">இஷார செவ்வந்தி கைது!! நாமல் எம்.பி அரசாங்கத்திடம் விடுத்த கோரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஜெனீவாவில் புலிகளின் ஆதரவாளர்களை சந்தோசப்படுத்துகிறது அரசாங்கம் &#8211; நாமல்</title>
		<link>https://oruvan.com/government-is-pleasing-ltte-supporters-in-geneva-namal/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Wed, 08 Oct 2025 13:00:32 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[நாமல்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=34815</guid>

					<description><![CDATA[<p>ஜெனீவாவில் அரசாங்கம் புலம்பெயர் தமிழர்களையும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களை சந்தோசப்படுத்தியுள்ளதாக மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். குறைநிரப்பு மதிப்பீட்டு இல. 03 (போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு) விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். தொடர்ந்து பேசிய அவர், “ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையால் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கைக்கான தீர்மானத்தை வாய்மொழி மூலம் நிராகரித்த அரசாங்கம் வாக்கெடுப்பு [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/government-is-pleasing-ltte-supporters-in-geneva-namal/">ஜெனீவாவில் புலிகளின் ஆதரவாளர்களை சந்தோசப்படுத்துகிறது அரசாங்கம் &#8211; நாமல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஜெனீவாவில் அரசாங்கம் புலம்பெயர் தமிழர்களையும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களை சந்தோசப்படுத்தியுள்ளதாக மொட்டுக் கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார்.</p>
<p>குறைநிரப்பு மதிப்பீட்டு இல. 03 (போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமான சேவைகள் அமைச்சு) விவாதத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>தொடர்ந்து பேசிய அவர், “ஜெனீவாவில் உள்ள ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையால் சமர்ப்பிக்கப்பட்ட இலங்கைக்கான தீர்மானத்தை வாய்மொழி மூலம் நிராகரித்த அரசாங்கம் வாக்கெடுப்பு இன்றி ஒருமனதாக நிறைவேற்ற அனுமதித்துள்ளது.</p>
<p>இந்தப்பிரேரணை வாக்கெடுப்புக்கு விடப்பட்டால் வெற்றியளிக்கும் வகையில் பல நாடுகளின் ஆதரவு இருந்தாலும் இணை அனுசரணை நாடுகளின் சார்பாக பிரித்தானியா விடுத்த அழைப்புக்கு ஏற்ப வாக்கெடுப்பு இன்று ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளது.</p>
<p>ஏன் அரசாங்கம் இரட்டை வேடம் போடுகிறது.யாரை சந்தோசப்படுத்தப் போகிறது. புலம்பெயர் தமிழர்களையா? அல்லது தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆதரவாளர்களையா? இல்லையென்றால் ஒரு மனதுடன் இந்த பிரச்சினைக்கு தீர்வை வழங்குங்கள்.</p>
<p>நீங்கள் எதிர்க்கட்சியில் இருக்கும் போது அபிவிருத்தி திட்டங்களை பொறாமையுடன் எதிர்க்காமல் இருந்திந்தால் இன்று அதிவேக நெடுஞ்சாலைகளை ஜனாதிபதிக்கு திறந்து வைத்திருக்கலாம்.</p>
<p>ஆனால் இன்று வீதிகள் அமைக்கப்பட வேண்டும் என நினைப்பதை நாம் பாராட்ட வேண்டும்.கிராமத்துக்கு காபட் போட்டாள் அதில் சாப்பிட முடியுமா?என்று கேட்டவர்கள் கிராமிய வீதிகளை அமைப்பது வரவேற்கத்தக்கதாகும்.” என்றார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/government-is-pleasing-ltte-supporters-in-geneva-namal/">ஜெனீவாவில் புலிகளின் ஆதரவாளர்களை சந்தோசப்படுத்துகிறது அரசாங்கம் &#8211; நாமல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சதித்திட்டத்தின் மூலம் எங்கள் அரசாங்கம் வீழ்த்தப்பட்டது &#8211; நாமல் ராஜபக்ச</title>
		<link>https://oruvan.com/our-government-was-overthrown-through-a-conspiracy-namal-rajapaksa/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 30 Dec 2024 07:53:08 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[Namal]]></category>
		<category><![CDATA[Sri Lanka News]]></category>
		<category><![CDATA[Sri Lanka Tamil News]]></category>
		<category><![CDATA[தேசிய மக்கள் சக்தி]]></category>
		<category><![CDATA[நாமல்]]></category>
		<category><![CDATA[நாமல் ராஜபக்ச]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி நிதியம்]]></category>
		<category><![CDATA[ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=4550</guid>

					<description><![CDATA[<p>ஒவ்வொரு ஜனாதிபதியின் கீழும் ஜனாதிபதி நிதியை பயன்படுத்திய நபர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். தனது குடும்பத்தில் எவருக்கும் ஜனாதிபதி நிதி வழங்கப்படவில்லை எனவும், அந்த நிதியை யாரும் பெற்றுக்கொள்ள மாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார். இதேவேளை, உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலின் போது பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட கட்சிக்கு பதிலாக பல வேட்பாளர்கள் கட்சி மாறியுள்ள நிலையில் புதிய வேட்புமனுக்களை கோருவது [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/our-government-was-overthrown-through-a-conspiracy-namal-rajapaksa/">சதித்திட்டத்தின் மூலம் எங்கள் அரசாங்கம் வீழ்த்தப்பட்டது &#8211; நாமல் ராஜபக்ச</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஒவ்வொரு ஜனாதிபதியின் கீழும் ஜனாதிபதி நிதியை பயன்படுத்திய நபர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.</p>
<p>தனது குடும்பத்தில் எவருக்கும் ஜனாதிபதி நிதி வழங்கப்படவில்லை எனவும், அந்த நிதியை யாரும் பெற்றுக்கொள்ள மாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.</p>
<p>இதேவேளை, உள்ளூராட்சி சபைத் தேர்தலுக்கான வேட்புமனுத் தாக்கலின் போது பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட கட்சிக்கு பதிலாக பல வேட்பாளர்கள் கட்சி மாறியுள்ள நிலையில் புதிய வேட்புமனுக்களை கோருவது நல்லது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p>
<p>தேசிய மக்கள் சக்தியின் கீழ் வேட்புமனு தாக்கல் செய்த பலர் தற்போது நாடாளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துவதால் உள்ளூராட்சி மன்ற தேர்தலுக்கு தற்போதுள்ள வேட்புமனுக்களின் கீழ் செல்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.</p>
<p>2022ஆம் ஆண்டு சதித்திட்டத்தின் மூலம் பொதுஜன பெரமுனவின் அரசாங்கம் வீழ்த்தப்பட்டது. அப்போது வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு சக்திகள் நமது நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியடையச் செய்யும் அளவிற்கு சூழ்ச்சி செய்தன.</p>
<p>அப்போது ரணிலை ஜனாதிபதியாக நியமித்தோம். ரணிலின் வேலைத்திட்டத்தையே இந்த அரசாங்கம் நடத்துகின்றது.</p>
<p>ஒரு அமைச்சர் அல்லது அரசியல் தொடர்புள்ள ஒருவர் ஜனாதிபதி நிதியில் இருந்து பணம் செலவழிப்பதாக கூறப்படுவதுடன், இதுவரை ஜனாதிபதி நிதியத்தினால் உதவி செய்யப்பட்ட ஏனையவர்களின் பெயர்களையும் வெளியிட வேண்டும்.</p>
<p>இதன்படி, ஒவ்வொரு ஜனாதிபதியின் கீழும் ஜனாதிபதி நிதியை பயன்படுத்திய நபர்களின் பெயர் விபரங்கள் வெளியிடப்பட வேண்டும். எங்களின் குடும்பத்திற்கு ஜனாதிபதி நிதியத்தில் இருந்து பணம் வழங்கப்படவில்லை.</p>
<p>அதிலிருந்து நாங்கள் பணத்தை எடுப்பதும் இல்லை” என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/our-government-was-overthrown-through-a-conspiracy-namal-rajapaksa/">சதித்திட்டத்தின் மூலம் எங்கள் அரசாங்கம் வீழ்த்தப்பட்டது &#8211; நாமல் ராஜபக்ச</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
