<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>நாமல் ராஜபக்ச Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/%E0%AE%A8%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%B2%E0%AF%8D-%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%9C%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%9A/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/நாமல்-ராஜபக்ச/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Wed, 11 Mar 2026 08:07:04 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>நாமல் ராஜபக்ச Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/நாமல்-ராஜபக்ச/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>விலை உயர்வு மக்களின் சுமையை அதிகரிக்கும்</title>
		<link>https://oruvan.com/price-hike-will-increase-the-burden-on-the-people/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Wed, 11 Mar 2026 08:07:04 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[நாமல் ராஜபக்ச]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=46444</guid>

					<description><![CDATA[<p>எரிபொருள் கையிருப்பு தொடர்பாக ஜனாதிபதியும் அமைச்சரும் வழங்கிய வாக்குறுதிகளுக்கு முரணாக, திடீரென எரிபொருள் விலை உயர்த்தப்பட்டிருப்பது அரசின் முறையற்ற நிர்வாகத்தையே காட்டுகின்றது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச எம்.பி. தெரிவித்தார். பத்தரமுல்லையில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அங்கு அவர் மேலும் கூறியதாவது:- “உலக சந்தையில் எரிபொருள் விலை குறைவடைந்து வரும் தற்போதைய சூழலில், உள்நாட்டில் விலையை [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/price-hike-will-increase-the-burden-on-the-people/">விலை உயர்வு மக்களின் சுமையை அதிகரிக்கும்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>எரிபொருள் கையிருப்பு தொடர்பாக ஜனாதிபதியும் அமைச்சரும் வழங்கிய வாக்குறுதிகளுக்கு முரணாக, திடீரென எரிபொருள் விலை உயர்த்தப்பட்டிருப்பது அரசின் முறையற்ற நிர்வாகத்தையே காட்டுகின்றது என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச எம்.பி. தெரிவித்தார்.</p>
<p>பத்தரமுல்லையில் அமைந்துள்ள கட்சியின் தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.</p>
<p>அங்கு அவர் மேலும் கூறியதாவது:-</p>
<p>“உலக சந்தையில் எரிபொருள் விலை குறைவடைந்து வரும் தற்போதைய சூழலில், உள்நாட்டில் விலையை உயர்த்தியிருப்பது எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாதது. நிலக்கரி கொள்வனவின் போது இடம்பெற்ற பாரிய ஊழல்கள் மற்றும் முறைகேடுகளினால் ஏற்பட்ட நட்டத்தை ஈடுகட்டவே, அரசு இந்தச் சுமையை மக்கள் மீது ஏற்றியுள்ளது. முறையான கேள்வி கோரல் நடைமுறைகளைப் பின்பற்றாமல் காலத்தை இழுத்தடித்தமையே இன்றைய நெருக்கடிக்குக் காரணமாகும்.</p>
<p>விவசாயிகள் தற்போது அறுவடைப் பணிகளில் ஈடுபட்டுள்ள போதிலும், நெல்லுக்கான நியாயமான விலையைத் தீர்மானிக்க அரசு தவறியுள்ளது. உர விநியோகத்திலும் பாரிய தாமதங்கள் நிலவுகின்றன. உள்நாட்டு உற்பத்தியைப் பாதுகாப்பதை விடுத்து, இறக்குமதிக்கே அரசு முன்னுரிமை அளித்து வருகின்றது.</p>
<p>நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சு மற்றும் சர்வதேச ரீதியிலான தொடர்பாடல்கள் மிகவும் பலவீனமடைந்துள்ளன. தகுதியற்ற நபர்கள் பொறுப்புகளில் இருப்பதாலேயே சர்வதேச ரீதியில் நாடு சிக்கல்களை எதிர்கொள்கின்றது. இது குறித்து ஜனாதிபதி உடனடியாக அவதானம் செலுத்தி உரிய தீர்மானங்களை எடுக்க வேண்டும்.</p>
<p>அரசியல் கூட்டணிகள் அல்லது மே தினக் கொண்டாட்டங்கள் குறித்துச் சிந்திப்பதை விட, நாட்டின் பொருளாதார நெருக்கடி மற்றும் மக்களின் அத்தியாவசியத் தேவைகளுக்குத் தீர்வு காண அரசு முன்னுரிமை அளிக்க வேண்டும்.” – என்றார்</p>
<p>The post <a href="https://oruvan.com/price-hike-will-increase-the-burden-on-the-people/">விலை உயர்வு மக்களின் சுமையை அதிகரிக்கும்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு: நாமல் கூறுவது என்ன?</title>
		<link>https://oruvan.com/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d-2/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Tue, 11 Nov 2025 13:58:22 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[நாமல் ராஜபக்ச]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=38018</guid>

					<description><![CDATA[<p>பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படுவது நல்ல விடயம். அது கட்டாயம் செய்யப்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார். நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். “ ஆனால் இது விடயத்தில் அரசாங்கத்திடம் புதுமையான நிகழ்ச்சி நிரல்தானே உள்ளது. அதாவது தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை வழங்குவதற்காக வியாபாரிகளுக்கு அரசாங்கம் கொடுப்பனவு வழங்குகின்றது. மக்களிடம் இருந்து வரிப்பணம் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d-2/">தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு: நாமல் கூறுவது என்ன?</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு வழங்கப்படுவது நல்ல விடயம். அது கட்டாயம் செய்யப்பட வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச தெரிவித்தார்.</p>
<p>நாடாளுமன்றத்தில் இன்று நடைபெற்ற வரவு- செலவுத் திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.</p>
<p>“ ஆனால் இது விடயத்தில் அரசாங்கத்திடம் புதுமையான நிகழ்ச்சி நிரல்தானே உள்ளது. அதாவது தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை வழங்குவதற்காக வியாபாரிகளுக்கு அரசாங்கம் கொடுப்பனவு வழங்குகின்றது. மக்களிடம் இருந்து வரிப்பணம் அறிவிடப்படுகின்றது.</p>
<p>அந்த பணத்தை எடுத்து முதலாளிகளுக்கு வழங்கி சம்பளம் வழங்குமாறு கூறப்படுகின்றது.</p>
<p>சிறு தோட்ட உரிமையாளர்களின் பொருளாதாரத்தை வலுப்படுத்தவதற்குரிய அரசாங்கத்தின் வேலைத்திட்டம் என்ன? தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வை வழங்குவதற்கு வேறு வழியை கண்டுபிடியுங்கள். நிறுவனங்களுக்கு வரிச்சலுகையை வழங்குங்கள். மாறாக மக்களிடம் வரி பணத்தை எடுத்து நிறுவனங்களுக்கு வழங்குவதில் என்ன பயன்?” – எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டார்.</p>
<p>செல்வந்தர்களிடமிருந்து பெற்று ஏழைகளுக்கு வழங்கும் நிலையை மாற்றி, ஏழைகளின் வயிற்றில் அடித்து, செல்வந்தர்களுக்கு நிவாரணம் வழங்கும் நடைமுறையை அரசாங்கம் கைவிட வேண்டும் எனவும் நாமல் வலியுறுத்தினார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/%e0%ae%a4%e0%af%8b%e0%ae%9f%e0%af%8d%e0%ae%9f%e0%ae%a4%e0%af%8d-%e0%ae%a4%e0%af%8a%e0%ae%b4%e0%ae%bf%e0%ae%b2%e0%ae%be%e0%ae%b3%e0%ae%b0%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%81%e0%ae%95%e0%af%8d-2/">தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள உயர்வு: நாமல் கூறுவது என்ன?</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>நாமல்தான் அடுத்த ஜனாதிபதி &#8211; நாட்டு மக்கள் கூற ஆரம்பித்துவிட்டனர்</title>
		<link>https://oruvan.com/namal-is-the-next-president-the-people-of-the-country-have-started-saying/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Tue, 04 Nov 2025 08:13:16 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[நாமல் ராஜபக்ச]]></category>
		<category><![CDATA[ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=37274</guid>

					<description><![CDATA[<p>நாமல் ராஜபக்ச சிறந்த இளம் தலைவராக செயற்பட்டுவருகின்றார். அவர்தான் அடுத்த ஜனாதிபதியென நாட்டு மக்கள் கூற ஆரம்பித்துள்ளனர் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சிரேஷ்ட தலைவர்களுள் ஒருவரான ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டமொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு , “ கடந்த ஜனாதிபதி தேர்தலில் நாமல் ராஜபக்ச களமிறங்கியதால்தான் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி பாதுகாக்கப்பட்டது. தோல்வி [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/namal-is-the-next-president-the-people-of-the-country-have-started-saying/">நாமல்தான் அடுத்த ஜனாதிபதி &#8211; நாட்டு மக்கள் கூற ஆரம்பித்துவிட்டனர்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>நாமல் ராஜபக்ச சிறந்த இளம் தலைவராக செயற்பட்டுவருகின்றார். அவர்தான் அடுத்த ஜனாதிபதியென நாட்டு மக்கள் கூற ஆரம்பித்துள்ளனர் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் சிரேஷ்ட தலைவர்களுள் ஒருவரான ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ தெரிவித்தார்.</p>
<p>ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த கூட்டமொன்றில் உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.</p>
<p>இது தொடர்பில் அவர் மேலும் கூறியவை வருமாறு ,</p>
<p>“ கடந்த ஜனாதிபதி தேர்தலில் நாமல் ராஜபக்ச களமிறங்கியதால்தான் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சி பாதுகாக்கப்பட்டது.</p>
<p>தோல்வி உறுதி என்பது தெரிந்தும், களமிறங்க வேண்டாம், உங்கள் அரசியல் எதிர்காலம் நாசமாகிவிடும் என நாமலிடம் பல உறுப்பினர்கள் கூறினர். அவரது குடும்ப உறுப்பினர்கள்கூட இதனை வலியுறுத்தினர். ஆனால் நெருக்கடியான சூழ்நிலையிலும் சவாலை ஏற்ற இளம் தலைவர் அவர். அதுமட்டுமல்ல நாடாளுமன்றத்திலும் துணிவுடன் செயல்பட்டுவருகின்றார்.</p>
<p>ஜனாதிபதி தேர்தலில் 2.5 சதவீத வாக்குகளே கிடைக்கப்பெற்றன. ஆனால் பொதுத்தேர்தலில் அது 10 சதவீதமாக அதிகரித்தது. நாமல் அன்று வழங்கிய உத்வேகமே இதற்கு காரணம்.</p>
<p>அதேவேளை, நாமல் ராஜபக்சதான் அடுத்த ஜனாதிபதியென நாட்டு மக்கள் கூறிவருகின்றனர். அது உண்மை. அடுத்த தேர்தலில் வென்று ஆட்சியை பிடிப்போம்.” – என்றார் ஜொன்ஸ்டன் பெர்ணான்டோ.</p>
<p>The post <a href="https://oruvan.com/namal-is-the-next-president-the-people-of-the-country-have-started-saying/">நாமல்தான் அடுத்த ஜனாதிபதி &#8211; நாட்டு மக்கள் கூற ஆரம்பித்துவிட்டனர்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மக்கள் பிரதிநிதிகளின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் &#8211; நாமல் எம்.பி கோரிக்கை</title>
		<link>https://oruvan.com/ensure-the-safety-of-peoples-representatives-namal-mps-request/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Sun, 26 Oct 2025 05:05:42 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#oruvan #news]]></category>
		<category><![CDATA[Namal Rajapaksa]]></category>
		<category><![CDATA[Weligama PS]]></category>
		<category><![CDATA[நாமல் ராஜபக்ச]]></category>
		<category><![CDATA[லசந்த விக்ரமசேகர]]></category>
		<category><![CDATA[வெலிகம பிரதேச சபை துப்பாக்கிச் சூடு]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=36430</guid>

					<description><![CDATA[<p>மக்கள் பிரதிநிதிகளின் பாதுகாப்பை உடனடியாக உறுதி செய்யுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார். மேயர்கள், நகராட்சி உறுப்பினர்கள், பிரதேச சபைகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார். சமீபத்தில் கொலை செய்யப்பட்ட வெலிகம பிரதேச சபைத் தலைவர், தனக்கு பாதுகாப்பு தேவை என்று பொலிஸ்மா அதிபரிடம் தெரிவித்ததாகவும், ஆனால் தேவையான பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்றும் நாமல் ராஜபக்ஷ கூறினார். யாரோ [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/ensure-the-safety-of-peoples-representatives-namal-mps-request/">மக்கள் பிரதிநிதிகளின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் &#8211; நாமல் எம்.பி கோரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>மக்கள் பிரதிநிதிகளின் பாதுகாப்பை உடனடியாக உறுதி செய்யுமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அரசாங்கத்தை வலியுறுத்தியுள்ளார்.</p>
<p>மேயர்கள், நகராட்சி உறுப்பினர்கள், பிரதேச சபைகளின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட வேண்டும் என்று நாமல் ராஜபக்ச வலியுறுத்தியுள்ளார்.</p>
<p>சமீபத்தில் கொலை செய்யப்பட்ட வெலிகம பிரதேச சபைத் தலைவர், தனக்கு பாதுகாப்பு தேவை என்று பொலிஸ்மா அதிபரிடம் தெரிவித்ததாகவும், ஆனால் தேவையான பாதுகாப்பு வழங்கப்படவில்லை என்றும் நாமல் ராஜபக்ஷ கூறினார்.</p>
<p>யாரோ ஒருவர் இறந்த பிறகு, அவர்களின் கடந்த கால செயல்களைப் பற்றிப் பேசி, கொலையை மறைக்கும் வகையில், காவல்துறை அமைச்சர் ஆனந்த விஜேபால நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரை குறித்து தான் மிகவும் கவலையடைந்துள்ளதாகவும் நாமல் ராஜபக்ச கூறியுள்ளார்.</p>
<p>வெலிகம பிரதேச தலைவரின் பாதுகாப்பு கோரிக்கை நிறைவேற்றப்பட்டிருந்தால், அவர் இன்றும் உயிருடன் இருப்பார் என்று நாமல் ராஜபக்ச வலியுறுத்தினார்.</p>
<p>ஏதாவது நடப்பதற்கு முன்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுப்பது பொருத்தமானது என்பதை அரசாங்கத்திற்கு நினைவூட்டுவதாக நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>எனவே, மக்கள் பிரதிநிதிகளுக்கு பாதுகாப்பு வழங்குமாறு அரசாங்கத்திடம் கேட்டுக்கொள்வதாக அவர் வலியுறுத்தியுள்ளார்.</p>
<p>துப்பாக்கிச் சூட்டு கலாசாரம் நிறுத்தப்படும் என பொது பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல கூறிய போதிலும், இந்த துப்பாக்கிச் சூடு அரசாங்கத்தின் தேவைகளுக்காக நடத்தப்படுகிறதா என்ற சந்தேகம் இருப்பதாக நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/ensure-the-safety-of-peoples-representatives-namal-mps-request/">மக்கள் பிரதிநிதிகளின் பாதுகாப்பை உறுதி செய்யுங்கள் &#8211; நாமல் எம்.பி கோரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>நான் காதலித்தது செவ்வந்தியை அல்ல, லிமினியை தான் காதலித்தேன்</title>
		<link>https://oruvan.com/i-didnt-fall-in-love-with-aventurine-i-fell-in-love-with-limini/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Sat, 18 Oct 2025 03:01:10 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[நாமல் ராஜபக்ச]]></category>
		<category><![CDATA[ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=35763</guid>

					<description><![CDATA[<p>“நான் காதலித்தது செவ்வந்தியை அல்ல, லிமினி என்பவரைத் தான் காதலித்தேன்” என்று நாடாளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிகையில், “அது பொலிஸாரின் பொறுப்பு. ஆனால் பாதாள உலகில் தொடர்புடையவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதையும் பொலிஸார் கவனிக்க வேண்டும். ஒரு குழு, திருடர்களுக்காக பதினேழு கடவுச்சீட்டுக்களை உருவாக்கி நாட்டை விட்டு வெளியேற்றியதாக பொலிஸாருக்கு பொறுப்பான பிரதி அமைச்சர் கூறினார். [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/i-didnt-fall-in-love-with-aventurine-i-fell-in-love-with-limini/">நான் காதலித்தது செவ்வந்தியை அல்ல, லிமினியை தான் காதலித்தேன்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>“நான் காதலித்தது செவ்வந்தியை அல்ல, லிமினி என்பவரைத் தான் காதலித்தேன்” என்று நாடாளுமன்ற உறுப்பினரான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.</p>
<p>ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அலுவலகத்தில் இடம்பெற்ற ஊடக சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிகையில், “அது பொலிஸாரின் பொறுப்பு. ஆனால் பாதாள உலகில் தொடர்புடையவர்கள் நாட்டை விட்டு வெளியேறுவதையும் பொலிஸார் கவனிக்க வேண்டும்.</p>
<p>ஒரு குழு, திருடர்களுக்காக பதினேழு கடவுச்சீட்டுக்களை உருவாக்கி நாட்டை விட்டு வெளியேற்றியதாக பொலிஸாருக்கு பொறுப்பான பிரதி அமைச்சர் கூறினார்.</p>
<p>அப்படியானால் இந்த செயலாளர் யார்? இந்த தகவலை பொலிஸாருக்கு பொறுப்பான அமைச்சருக்கு கொடுத்தது யார்? இதை உடனடியாக நாட்டுக்கு வெளிப்படுத்த வேண்டிய பொறுப்பு பொலிஸாருக்கும், பொறுப்பான அமைச்சருக்கும் உள்ளது.</p>
<p>வெளியேறிய மக்களில் பாதாள உலகத்தைச் சேர்ந்தவர்கள் இருந்திருக்க வேண்டும். எனவே, பொலிஸுக்கு பொறுப்பான பிரதி அமைச்சர் இதில் கவனம் செலுத்த வேண்டும்.</p>
<p>மேலும், 323 கொள்கலன் தப்பியது போலவே பாதாள உலகத்தைச் சேர்ந்த ஒரு குழுவும் வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றதா என்ற கேள்வி இந்த நேரத்தில் எழுகிறது.</p>
<p>அரசாங்கத்தில் சிலர் நீதிமன்ற உத்தரவுகளை ஏன் ஏற்க வேண்டும்? என்று சொல்லும் நிலையை அடைந்துவிட்டனர். இதிலிருந்து அமைப்பு மாற்றம் சிறப்பாக செய்யப்பட்டுள்ளது என்பது தெளிவாகிறது என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/i-didnt-fall-in-love-with-aventurine-i-fell-in-love-with-limini/">நான் காதலித்தது செவ்வந்தியை அல்ல, லிமினியை தான் காதலித்தேன்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இஷார செவ்வந்தி கைது!! நாமல் எம்.பி அரசாங்கத்திடம் விடுத்த கோரிக்கை</title>
		<link>https://oruvan.com/ishara-sewwandi-arrested-namal-mps-request-to-the-government/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 15 Oct 2025 10:02:53 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Ishara Sewwandi]]></category>
		<category><![CDATA[Namal Rajapaksa]]></category>
		<category><![CDATA[நாமல்]]></category>
		<category><![CDATA[நாமல் ராஜபக்ச]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=35507</guid>

					<description><![CDATA[<p>பாதாள உலக அமைப்புகளுக்குப் பின்னால் இருப்பவர்கள் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று இலங்கை பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார். இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், முன்னாள் கடற்படைத் தளபதி மற்றும் இரண்டு உயர் பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டதைப் போலவே, இந்த விடயத்தையும் அரசாங்கம் அரசியலாக்கக் கூடாது என்றும் வலியுறுத்தினார். கணேமுல்ல சஞ்சீவ கொலைக்குப் பின்னணியில் இருந்த இஷார செவ்வந்தி கைது செய்யப்பட்டமை குறித்த கேள்விகளுக்கு [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/ishara-sewwandi-arrested-namal-mps-request-to-the-government/">இஷார செவ்வந்தி கைது!! நாமல் எம்.பி அரசாங்கத்திடம் விடுத்த கோரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பாதாள உலக அமைப்புகளுக்குப் பின்னால் இருப்பவர்கள் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று இலங்கை பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.</p>
<p>இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், முன்னாள் கடற்படைத் தளபதி மற்றும் இரண்டு உயர் பொலிஸ் அதிகாரிகள் கைது செய்யப்பட்டதைப் போலவே, இந்த விடயத்தையும் அரசாங்கம் அரசியலாக்கக் கூடாது என்றும் வலியுறுத்தினார்.</p>
<p>கணேமுல்ல சஞ்சீவ கொலைக்குப் பின்னணியில் இருந்த இஷார செவ்வந்தி கைது செய்யப்பட்டமை குறித்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் போது நாமல் ராஜபக்ச இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.</p>
<p>“இந்த பாதாள உலக அமைப்புகளுக்குப் பின்னால் யார் இருக்கிறார்கள் என்பதை நாடு அறிந்து கொள்ள வேண்டும். இது குறித்து நடுநிலையான விசாரணை நடத்தப்பட வேண்டும்.</p>
<p>இந்த அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்தில் தேடப்படும் பல நபர்கள் நாட்டை விட்டு வெளியேறியுள்ளனர். போலி கடவுச்சீட்டை பயன்படுத்தி 17 பேர் நாட்டை விட்டு வெளியேறியுள்ளதாக துணை அமைச்சரே தெரிவித்துள்ளார்.</p>
<p>ஆனால், அந்தக் கடவுச்சீட்டுகள் யாருடையவை என்பதை அவர்கள் இன்னும் வெளியிடவில்லை. துறைமுகத்திலிருந்து ஆய்வு செய்யப்படாத 323 கொள்கலன்களை விடுவித்தவர்கள் யார்? என்ற விவரங்களை வெளியிடவில்லை.</p>
<p>தயவுசெய்து இந்த சம்பவங்களையும் விசாரிக்க” வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார். அரசாங்கம் இந்த விடயங்களை விசாரித்து பாதாள உலக நடவடிக்கைகளைத் தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் வலியுத்தினார்.</p>
<p>இந்த விடயங்களை அரசியலாக்கக்கூடாது என்றும் நடுநிலையான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/ishara-sewwandi-arrested-namal-mps-request-to-the-government/">இஷார செவ்வந்தி கைது!! நாமல் எம்.பி அரசாங்கத்திடம் விடுத்த கோரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>நாமல் எம்.பிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு</title>
		<link>https://oruvan.com/case-against-namal-mp-adjourned/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Fri, 26 Sep 2025 06:46:41 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Court]]></category>
		<category><![CDATA[Namal Rajapaksa]]></category>
		<category><![CDATA[நாமல் ராஜபக்ச]]></category>
		<category><![CDATA[நீதிமன்றம்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=33613</guid>

					<description><![CDATA[<p>கிரிஷ் பரிவர்த்தனை தொடர்பாக முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்த வழக்கில், கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அசல் வழக்கு அறிக்கையை வரவழைக்க நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று அதன் பதிவாளருக்கு உத்தரவிட்டது. வழக்கு இன்று கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி நதி அபர்ணா முர்புருடுகுடா முன் அழைக்கப்பட்டது. பிரதிவாதி நாமல் ராஜபக்ச நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார். பிரதிவாதி சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ், பிரதிவாதி [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/case-against-namal-mp-adjourned/">நாமல் எம்.பிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>கிரிஷ் பரிவர்த்தனை தொடர்பாக முன்னாள் அமைச்சர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக சட்டமா அதிபர் தாக்கல் செய்த வழக்கில், கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள அசல் வழக்கு அறிக்கையை வரவழைக்க நடவடிக்கை எடுக்குமாறு கொழும்பு உயர் நீதிமன்றம் இன்று அதன் பதிவாளருக்கு உத்தரவிட்டது.</p>
<p>வழக்கு இன்று கொழும்பு உயர் நீதிமன்ற நீதிபதி நதி அபர்ணா முர்புருடுகுடா முன் அழைக்கப்பட்டது. பிரதிவாதி நாமல் ராஜபக்ச நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தார்.</p>
<p>பிரதிவாதி சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ், பிரதிவாதி கோரிய சில ஆவணங்கள் இன்னும் அரசு தரப்பு தனக்கு வழங்கப்படவில்லை என்று நீதிமன்றத்தில் தெரிவித்தார்.</p>
<p>நியாயமான விசாரணைக்கு இந்த ஆவணங்கள் மிகவும் முக்கியமானவை என்று ஜனாதிபதி சட்டத்தரணி சம்பத் மெண்டிஸ் தெரிவித்திருந்தார்.</p>
<p>இதற்கு பதிலளித்த அரசு தரப்பு சார்பில் ஆஜரான துணை சொலிசிட்டர் ஜெனரல் வசந்த பெரேரா, பிரதிவாதி கோரிய பெரும்பாலான ஆவணங்கள் ஏற்கனவே அவர்களுக்கு வழங்கப்பட்டுவிட்டதாக நீதிமன்றத்தில் தெரிவித்தார்.</p>
<p>பிரதிவாதிகள் இதுவரை பெறாத ஆவணங்கள் குற்றவியல் புலனாய்வுத் துறையிடம் கோரப்படும் என்றும், வழங்கக்கூடிய ஆவணங்கள் உடனடியாக வழங்கப்படும் என்றும் அவர் கூறினார்.</p>
<p>இந்த நேரத்தில், பிரதிவாதிகள் கோரிய ஆவணங்களை மறுநாள் உடனடியாக அவர்களுக்கு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று நீதிபதி கூறினார்.</p>
<p>பின்னர் வழக்கை டிசம்பர் 18ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ள நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p>
<p>மேலும், இந்த வழக்கு தொடர்பாக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள வழக்கின் அசல் வழக்கு கோப்பு இன்னும் தனது நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவில்லை என்பதை சுட்டிக்காட்டிய நீதிபதி, உயர் நீதிமன்ற பதிவாளருக்கு அறிக்கையை உடனடியாக வரவழைக்க நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.</p>
<p>இலங்கையில் ரக்பியை ஊக்குவிப்பதற்காக இந்திய நிறுவனமான கிரிஷிடமிருந்து எழுபது மில்லியன் ரூபாய் பணத்தைப் பெற்று பணமோசடி தடுப்புச் சட்டத்தின் கீழ் ஒரு குற்றத்தைச் செய்ததாகக் கூறி, சட்டமா அதிபர் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சவுக்கு எதிராக இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/case-against-namal-mp-adjourned/">நாமல் எம்.பிக்கு எதிரான வழக்கு ஒத்திவைப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கிச் செல்கின்றது &#8211; நாமல் ராஜபக்ச</title>
		<link>https://oruvan.com/the-countrys-economy-is-heading-towards-decline-namal-rajapaksa/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Tue, 23 Sep 2025 11:36:48 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Namal Rajapaksa]]></category>
		<category><![CDATA[நாமல் ராஜபக்ச]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=33367</guid>

					<description><![CDATA[<p>கடந்த ஒரு வருடத்தில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கிச் சென்றுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார். அத்துடன், கடற்றொழில் செயற்பாடும் 34 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நாடாளுமன்றில் உரையாற்றி அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர், அரசாங்கம் கடந்த காலம் பற்றியும், கடந்த கால அரசாங்கங்கள் செய்த தவறுகளை ஆராய்ந்து பேசுவதையே வழமையாக கொண்டுள்ளது. இந்நிலையில், அரசாங்கம் தங்களது வாக்குறுதிகள் தொடர்பில் சுயமதிப்பீடு செய்து [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/the-countrys-economy-is-heading-towards-decline-namal-rajapaksa/">நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கிச் செல்கின்றது &#8211; நாமல் ராஜபக்ச</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>கடந்த ஒரு வருடத்தில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கிச் சென்றுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் தேசிய அமைப்பாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.</p>
<p>அத்துடன், கடற்றொழில் செயற்பாடும் 34 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>நாடாளுமன்றில் உரையாற்றி அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். தொடர்ந்தும் பேசிய அவர்,</p>
<p>அரசாங்கம் கடந்த காலம் பற்றியும், கடந்த கால அரசாங்கங்கள் செய்த தவறுகளை ஆராய்ந்து பேசுவதையே வழமையாக கொண்டுள்ளது.</p>
<p>இந்நிலையில், அரசாங்கம் தங்களது வாக்குறுதிகள் தொடர்பில் சுயமதிப்பீடு செய்து கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.</p>
<p>அரசாங்கம் ஆட்சிக்கு வந்து ஒரு வருடம் ஆகியுள்ளது. இந்த காலப்பகுதியில் நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கிச் சென்றுள்ளது. வெங்காயத்தை இறக்குமதி செய்ய நடவடிக்கை எடுத்துள்ளனர்.</p>
<p>கடற்றொழில் செயற்பாடும் 34 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளது. இந்த நிலை நீடித்தால் எதிர்காலத்தில் மீன்களையும் வெளிநாடுகளில் இருந்து இறக்குமதி செய்ய வேண்டிய நிலைமை ஏற்படக்கூடும்.</p>
<p>மேலும், இறப்பர் தொழிற்துறையும் வீழ்ச்சியடைந்துள்ளது. இதுவே அரசாங்கம் ஒரு வருடத்தில் பெற்றுக்கொண்ட வெற்றியாகும்.</p>
<p>இவை அனைத்து தொகை மதிப்பு புள்ளிவிபர திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள விடயங்களாகும்.</p>
<p>அரசாங்கம் தற்போது பழிவாங்கும் செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளது. ஆகையினால், அரசாங்கம் அடக்குமுறைகளை கைவிட வேண்டும் என கோருகின்றேன்.</p>
<p>அத்துடன், மக்களுக்கு தேவையான நடவடிக்கைகளை அரசாங்கம் எடுக்க வேண்டும் என நாமல் ராஜபக்ச மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/the-countrys-economy-is-heading-towards-decline-namal-rajapaksa/">நாட்டின் பொருளாதாரம் வீழ்ச்சியை நோக்கிச் செல்கின்றது &#8211; நாமல் ராஜபக்ச</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மகிந்த, நாமல் மற்றும் ஷிரந்தி ஆகியோருக்கு எதிராக லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு</title>
		<link>https://oruvan.com/complaint-filed-against-mahinda-namal-and-shiranthi-at-the-bribery-and-corruption-commission/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Tue, 23 Sep 2025 05:20:05 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[நாமல் ராஜபக்ச]]></category>
		<category><![CDATA[மகிந்த ராஜபக்ச]]></category>
		<category><![CDATA[ஷிரந்தி ராஜபக்ச]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=33311</guid>

					<description><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, அவரது மனைவி ஷிரந்தி ராஜபக்ச மற்றும் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குறித்து விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இலஞ்சம், ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான குடிமக்களின் சக்தி என்ற அமைப்பின் தலைவர் ஜாமினி கமன் துஷார நேற்று இந்த முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளார். இது குறித்து கருத்து வெளியிட்ட அவர், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, அவரது மகன் நாடாளுமன்ற [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/complaint-filed-against-mahinda-namal-and-shiranthi-at-the-bribery-and-corruption-commission/">மகிந்த, நாமல் மற்றும் ஷிரந்தி ஆகியோருக்கு எதிராக லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, அவரது மனைவி ஷிரந்தி ராஜபக்ச மற்றும் மகனும் நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக இலஞ்சம் அல்லது ஊழல் குறித்து விசாரணை செய்யும் ஆணைக்குழுவில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.</p>
<p>இலஞ்சம், ஊழல் மற்றும் வீண்விரயத்திற்கு எதிரான குடிமக்களின் சக்தி என்ற அமைப்பின் தலைவர் ஜாமினி கமன் துஷார நேற்று இந்த முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளார்.</p>
<p>இது குறித்து கருத்து வெளியிட்ட அவர்,</p>
<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, அவரது மகன் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச மற்றும் மனைவி ஷிரந்தி ராஜபக்ச ஆகியோருக்கு எதிராக விசாரணை நடத்தக் கோரி முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.</p>
<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச வசித்த விஜேராம மாவத்தையில் உள்ள வீட்டைப் புதுப்பிக்க 5.1 பில்லியன் ரூபாய் அரசு நிதி செலவிடப்பட்டது முறையான கொள்முதல் செயல்முறையின்படி மேற்கொள்ளப்பட்டதா?</p>
<p>அல்லது அது ஊழல் ரீதியாக செலவிடப்பட்டு இலங்கைக் குடியரசுக்கு இழப்பை ஏற்படுத்தியதா? என்பது குறித்து முறையான விசாரணை நடத்துமாறு லஞ்சம் அல்லது ஊழல் விசாரணை ஆணையத்திடம் அளிக்கப்பட்டுள்ள முறைப்பாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>முன்னாள் ஜனாதிபதியின் மகனும் தற்போதைய நாடாளுமன்ற உறுப்பினருமான நாமல் ராஜபக்சவின் சொத்துக்கள் குறித்து வழங்கப்பட்ட தகவல்கள் உண்மையானதா, அல்லது முறைகேடாகப் பெறப்பட்டதா என்பது குறித்து விசாரணை நடத்துமாறும் புகாரில் கோரப்பட்டுள்ளது.</p>
<p>மேலும், முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச (மேரி லூடிஸ் விக்ரமசிங்க) சுமார் 400 மில்லியன் மதிப்புள்ள வீட்டை (கொழும்பு மியூசியஸ் கல்லூரிக்கு அருகிலுள்ள டொரிங்டன் மாவத்தையில்) சொந்தமாக வைத்திருக்கிறார்.</p>
<p>அந்த வீடு சிரிலிய கணக்கில் 35 மில்லியன் ரூபாய்க்கு வாங்கப்பட்டது என்பதும் நிலம் தொடர்பான ஆவணங்களை ஆய்வு செய்தபோது குறிப்பிடப்பட்டுள்ளது.</p>
<p>மேலும், கொழும்பு 5, டொரிங்டன் மாவத்தை, எண் 260/12ஐ கொண்ட வீட்டை ஷிரந்தி ராஜபக்ச 05.04.2013ஆம் திகதியன்று 400 இலட்சத்திற்கு வாங்கியுள்ளார்.</p>
<p>அவருக்கு 350 இலட்சம் எவ்வாறு வந்தது என புலனாய்வு விசாரணைகளை ஆரம்பிக்குமாறு முறைப்பாடு செய்துள்ளோம்” எனத் தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/complaint-filed-against-mahinda-namal-and-shiranthi-at-the-bribery-and-corruption-commission/">மகிந்த, நாமல் மற்றும் ஷிரந்தி ஆகியோருக்கு எதிராக லஞ்ச, ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>முடிந்தால் அதை செய்து காட்டுங்கள் &#8211; நாமல் எம்.பிக்கு சவால்</title>
		<link>https://oruvan.com/if-possible-do-it-challenge-to-namal-mp/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 17 Sep 2025 11:26:38 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Namal Rajapaksa]]></category>
		<category><![CDATA[கந்தசாமி பிரபு]]></category>
		<category><![CDATA[நாமல் ராஜபக்ச]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=32884</guid>

					<description><![CDATA[<p>தேர்லுக்கு முன்னரும், தேர்தலுக்கு பின்னரும் தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்கள் சொத்து விபரங்களை வெளியிட்டிருக்கின்றோம். முடியுமாகயிருந்தால் நாமல் ராஜபக்ச மற்றும் ஏனைய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்களது சொத்துவிபரங்களை வெளிப்படுத்தி காட்டுங்கள் என மட்டக்களப்பு மாவட்ட தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு சவால் விடுத்துள்ளார். கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையினால் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு வீட்டு திருத்தத்திற்கான காசோலை வழங்கும் நிகழ்வு இன்று (17) நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு பேசிய அவர் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/if-possible-do-it-challenge-to-namal-mp/">முடிந்தால் அதை செய்து காட்டுங்கள் &#8211; நாமல் எம்.பிக்கு சவால்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தேர்லுக்கு முன்னரும், தேர்தலுக்கு பின்னரும் தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர்களாகிய நாங்கள் சொத்து விபரங்களை வெளியிட்டிருக்கின்றோம்.</p>
<p>முடியுமாகயிருந்தால் நாமல் ராஜபக்ச மற்றும் ஏனைய எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தங்களது சொத்துவிபரங்களை வெளிப்படுத்தி காட்டுங்கள் என மட்டக்களப்பு மாவட்ட தேசிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் கந்தசாமி பிரபு சவால் விடுத்துள்ளார்.</p>
<p>கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையினால் தெரிவுசெய்யப்பட்ட பயனாளிகளுக்கு வீட்டு திருத்தத்திற்கான காசோலை வழங்கும் நிகழ்வு இன்று (17) நடைபெற்றது.</p>
<p>இதில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.</p>
<p>கிழக்கு மாகாண வீடமைப்பு அதிகார சபையின் ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்திற்கு 43 மில்லியன் ரூபாய் பெறுமதியான வீடுகள் திருத்த வேலைக்கான நிதி வழங்கப்பட்டிருந்தது.</p>
<p>எமது பிரதேச மக்களுக்கு நன்மை பயக்கக்கூடிய விடயங்களுக்கு நிதி ஒதுக்கீடுகளை மேற்கொண்டு அவற்றை செய்து கொண்டு வருகின்றோம்.</p>
<p>நாங்கள் வழங்கிய வாக்குறுதிகளை படிப்படியாக செய்து வருகின்ற நேரங்களில் எங்களுக்கு எதிராக எதிர் கட்சியினர் பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.</p>
<p>அதில் எங்களது அமைச்சர்களதும் நாடாளுமன்ற உறுப்பினர்களதும் சொத்து விவரங்கள் தொடர்பான விமர்சனங்கள் பேசப்பட்டு கொண்டு வருகின்றது.</p>
<p>வசந்த விக்ரமசிங்க அவர்களது சொத்து விபரம் தொடர்பாக இன்று எதிர்க்கட்சியினர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்னர்.</p>
<p>நாங்கள் ஆட்சிக்கு வருவதற்கு முன்னரும் சரி இப்போதும் சரி, எங்களது சொத்து விவரங்களை தொடர்ச்சியாக வெளிப்படுத்திக் கொண்டு வருகின்றோம்.</p>
<p>எங்களது சொத்து விபரங்களை தேர்தலில் போட்டியிடுவதற்கு முன்னரும் வெளிப்படுத்தி இருந்தோம் தேர்தலுக்கு பின்னரும் பதவிகளை பொறுப்பேற்றதன் பின்னரும் சொத்து விவரங்களை வெளியிட்டு வருகின்றோம்.</p>
<p>முடியுமாக இருந்தால் எதிர்க்கட்சியில் இப்பவர்களின் சொத்து விபரங்களை பகிரங்கமாக வெளிப்படுத்த முடியுமா? இயலும் என்றால் வெளிப்படுத்தி காட்டுங்கள் என்றார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/if-possible-do-it-challenge-to-namal-mp/">முடிந்தால் அதை செய்து காட்டுங்கள் &#8211; நாமல் எம்.பிக்கு சவால்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
