<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>நரேந்திர மோடி Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/%e0%ae%a8%e0%ae%b0%e0%af%87%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b0-%e0%ae%ae%e0%af%8b%e0%ae%9f%e0%ae%bf/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/நரேந்திர-மோடி/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Tue, 13 Jan 2026 07:33:57 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>நரேந்திர மோடி Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/நரேந்திர-மோடி/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>புதிய அரசியலமைப்பு உருவாக்கம் &#8211; இலங்கையில் இந்தியா இராஜதந்திர தலையீடுகைள மேற்கொள்ள வேண்டும்</title>
		<link>https://oruvan.com/new-constitution-formation-india-should-conduct-diplomatic-interventions-in-sri-lanka/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Tue, 13 Jan 2026 07:33:57 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[நரேந்திர மோடி]]></category>
		<category><![CDATA[மு.க.ஸ்டாலின்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=43042</guid>

					<description><![CDATA[<p>இலங்கையில் உருவாக்கப்பட்டுவரும் புதிய அரசியலமைப்பில் தமிழர்களின் அரசியல் தீர்வுக்காக இந்தியா தலையீடுகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரியுள்ளார். இனப் பிரச்சினைகளைத் தீர்ப்பது என்ற போர்வையில், இலங்கையில் தற்போதைய அரசாங்கம் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான முயற்சிகளை துரிதப்படுத்தி வருவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். புதிய அரசியலமைப்புக்காக இலங்கை அரசு முன்வைத்த கட்டமைப்பு ஒற்றையாட்சி அரசு என்ற கருத்தை மேலும் ஊக்குவிப்பதாக தமிழக [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/new-constitution-formation-india-should-conduct-diplomatic-interventions-in-sri-lanka/">புதிய அரசியலமைப்பு உருவாக்கம் &#8211; இலங்கையில் இந்தியா இராஜதந்திர தலையீடுகைள மேற்கொள்ள வேண்டும்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<div class="xdj266r x14z9mp xat24cr x1lziwak x1vvkbs x126k92a">
<div dir="auto">
<p>இலங்கையில் உருவாக்கப்பட்டுவரும் புதிய அரசியலமைப்பில் தமிழர்களின் அரசியல் தீர்வுக்காக இந்தியா தலையீடுகளை மேற்கொள்ள வேண்டும் என தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரதமர் நரேந்திர மோடியிடம் கோரியுள்ளார்.</p>
<p>இனப் பிரச்சினைகளைத் தீர்ப்பது என்ற போர்வையில், இலங்கையில் தற்போதைய அரசாங்கம் புதிய அரசியலமைப்பை உருவாக்குவதற்கான முயற்சிகளை துரிதப்படுத்தி வருவதாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.</p>
<p>புதிய அரசியலமைப்புக்காக இலங்கை அரசு முன்வைத்த கட்டமைப்பு ஒற்றையாட்சி அரசு என்ற கருத்தை மேலும் ஊக்குவிப்பதாக தமிழக முதல்வர் கூறியுள்ளார்.</p>
<p>தற்போதைய அரசியலமைப்பு சீர்திருத்தங்கள் இலங்கைத் தமிழ் மக்களுக்கு &#8220;கடுமையான ஆபத்துகளை&#8221; ஏற்படுத்துகின்றன.</p>
<p>நாட்டில் உள்ள தமிழ் மக்களின் குறைகளை உண்மையிலேயே தீர்க்கும் ஒரு அரசியலமைப்புச் செயல்முறைக்காக இலங்கைக்கு அழுத்தம் கொடுக்க இந்தியா ராஜதந்திர ரீதியாக தலையிட வேண்டும்.</p>
<p>சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்க மாகாணங்களுக்கிடையில் அதிகாரத்தைப் பிரிக்கும் ஒரு கூட்டாட்சி முறையை புதிய அரசியலமைப்பில் சேர்க்க இந்தியா இலங்கை மீது ராஜதந்திர அழுத்தம் கொடுக்க வேண்டும்.</p>
<p>பிராந்திய அமைதியைப் பேணுவதற்கான இந்தியாவின் முயற்சிகளுக்கு இதுபோன்ற தலையீடு புதிய மதிப்பை சேர்க்கும் என்றும் பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.</p>
</div>
</div>
<p>The post <a href="https://oruvan.com/new-constitution-formation-india-should-conduct-diplomatic-interventions-in-sri-lanka/">புதிய அரசியலமைப்பு உருவாக்கம் &#8211; இலங்கையில் இந்தியா இராஜதந்திர தலையீடுகைள மேற்கொள்ள வேண்டும்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சதிகாரர்கள் நீதியின்முன் நிறுத்தப்படுவர்: பிரதமர் மோடி உறுதி</title>
		<link>https://oruvan.com/conspirators-will-be-brought-to-justice-pm-modi-assures/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Tue, 11 Nov 2025 10:21:23 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[நரேந்திர மோடி]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=37975</guid>

					<description><![CDATA[<p>டெல்லியில் நடந்த கொடிய கார் குண்டுவெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்தார். இரண்டு நாள் அரசு பயணமாக பூட்டானுக்கு சென்றுள்ளார் பிரதமர் மோடி. திம்புவில் நடந்த ஒரு நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு உறுதியளித்துள்ளார். “இன்று, நான் மிகவும் கனத்த இதயத்துடன் இங்கு வந்துள்ளேன். நேற்று மாலை டெல்லியில் நடந்த கொடூரமான சம்பவம் அனைவரையும் மிகவும் வருத்தப்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களின் துயரத்தை நான் புரிந்துகொள்கிறேன். இன்று முழு [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/conspirators-will-be-brought-to-justice-pm-modi-assures/">சதிகாரர்கள் நீதியின்முன் நிறுத்தப்படுவர்: பிரதமர் மோடி உறுதி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>டெல்லியில் நடந்த கொடிய கார் குண்டுவெடிப்பு சம்பவத்தின் பின்னணியில் உள்ளவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி உறுதியளித்தார்.</p>
<p>இரண்டு நாள் அரசு பயணமாக பூட்டானுக்கு சென்றுள்ளார் பிரதமர் மோடி.</p>
<p>திம்புவில் நடந்த ஒரு நிகழ்வில் உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு உறுதியளித்துள்ளார்.</p>
<p>“இன்று, நான் மிகவும் கனத்த இதயத்துடன் இங்கு வந்துள்ளேன். நேற்று மாலை டெல்லியில் நடந்த கொடூரமான சம்பவம் அனைவரையும் மிகவும் வருத்தப்படுத்தியுள்ளது. பாதிக்கப்பட்ட குடும்பங்களின் துயரத்தை நான் புரிந்துகொள்கிறேன். இன்று முழு தேசமும் அவர்களுடன் நிற்கிறது.</p>
<p>இந்தச் சம்பவம் குறித்து விசாரணை நடத்தும் அனைத்து நிறுவனங்களுடனும் நான் நேற்று இரவு முழுவதும் தொடர்பில் இருந்தேன். எங்கள் விசாரணை அமைப்புகள் இந்த சதித்திட்டத்தின் காரணத்தை கண்டுபிடிக்கும். இதற்குப் பின்னால் உள்ள சதிகாரர்கள் தப்பவிடப்பட மாட்டார்கள். இந்த கொடிய சம்பவத்துக்கு பின்னால் உள்ள அனைவரும் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள்” எனவும் பிரதமர் மோடி குறிப்பிட்டார்.</p>
<p>அதேவேளை, நாட்டின் முன்னணி புலனாய்வு அமைப்புகள் டெல்லி குண்டுவெடிப்பு வழக்கில் விரைவான மற்றும் முழுமையான விசாரணையை நடத்தி வருவதாகவும், இச்சம்பவத்துக்கு காரணமானவர்களை கண்டுபிடித்து சட்டத்தின் முன் நிறுத்துவோம் என்றும் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் அறிவித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/conspirators-will-be-brought-to-justice-pm-modi-assures/">சதிகாரர்கள் நீதியின்முன் நிறுத்தப்படுவர்: பிரதமர் மோடி உறுதி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பின் வரிசையில் அமர்ந்திருந்த மோடி &#8211; வைரலாகும் புகைப்படம்</title>
		<link>https://oruvan.com/modi-sitting-in-the-back-row-photo-goes-viral/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Sun, 07 Sep 2025 10:58:42 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[modi]]></category>
		<category><![CDATA[Narendra Modi]]></category>
		<category><![CDATA[நரேந்திர மோடி]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=31937</guid>

					<description><![CDATA[<p>இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டிருந்த போது பின் வரிசையில் அமர்ந்திருப்பதை காட்டும் புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகியுள்ளது. ரவி கிஷன் எம்.பி இன்று வெளியிட்டிருந்த புகைப்படம் தற்போது வைரலாகியுள்ளது. எதிர்வரும் ஒன்பதாம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ள துணை ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக, தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) எம்.பி.க்களுக்கு இரண்டு நாள் பயிலரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பிரதமர் நரேந்திர மோடியும் இந்தப் பயிலரங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பயிலரங்கு நடைபெறும் போது [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/modi-sitting-in-the-back-row-photo-goes-viral/">பின் வரிசையில் அமர்ந்திருந்த மோடி &#8211; வைரலாகும் புகைப்படம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி நிகழ்வு ஒன்றில் கலந்துகொண்டிருந்த போது பின் வரிசையில் அமர்ந்திருப்பதை காட்டும் புகைப்படம் ஒன்று தற்போது வைரலாகியுள்ளது.</p>
<p>ரவி கிஷன் எம்.பி இன்று வெளியிட்டிருந்த புகைப்படம் தற்போது வைரலாகியுள்ளது.</p>
<p>எதிர்வரும் ஒன்பதாம் திகதி செவ்வாய்க்கிழமை நடைபெற உள்ள துணை ஜனாதிபதி தேர்தலுக்கு முன்னதாக, தேசிய ஜனநாயக கூட்டணி (NDA) எம்.பி.க்களுக்கு இரண்டு நாள் பயிலரங்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.</p>
<p>பிரதமர் நரேந்திர மோடியும் இந்தப் பயிலரங்கு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு, பயிலரங்கு நடைபெறும் போது பின் வரிசையில் அமர்ந்தார்.<br />
இது குறித்து கோரக்பூரைச் சேர்ந்த பாஜக எம்.பி. ரவி கிஷன் கூறுகையில், பிரதமர் மோடி பின் வரிசையில் அமர்ந்திருப்பது கட்சியின் பலத்தை பிரதிபலிக்கிறது என்று தெரிவித்துள்ளார்.</p>
<p>தேசிய ஜனநாயக கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர்களுக்காக ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் பயிலரங்கில், ஜிஎஸ்டியில் செய்யப்பட்ட சீர்திருத்தங்களுக்காக பாஜக நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதமர் நரேந்திர மோடியையும் கௌரவித்தனர்.</p>
<p>பாஜகவின் இந்த இரண்டு நாள் பயிலரங்கு ஞாயிற்றுக்கிழமை (செப்டம்பர் 7, 2025) தொடங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/modi-sitting-in-the-back-row-photo-goes-viral/">பின் வரிசையில் அமர்ந்திருந்த மோடி &#8211; வைரலாகும் புகைப்படம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>“அணு ஆயுத மிரட்டலை இனி பொறுத்துக்கொள்ள மாட்டோம்” – சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி</title>
		<link>https://oruvan.com/we-will-no-longer-tolerate-the-threat-of-nuclear-weapons-prime-minister-modi-vows-in-independence-day-speech/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Fri, 15 Aug 2025 05:50:46 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[நரேந்திர மோடி]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=29526</guid>

					<description><![CDATA[<p>“இந்திய ஆயுதப் படைகளால் பாகிஸ்தானில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. அணு ஆயுத அச்சுறுத்தல்களை இனி பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று இந்தியா முடிவு செய்துள்ளது. எந்த மிரட்டலுக்கும் நாம் அடிபணிய மாட்டோம்” என்று சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி கூறினார். இந்தியா முழு​வதும் 79-வது சுதந்​திர தினம் இன்று கோலாகல​மாக கொண்​டாடப்பட்டுவருகிறது. தலைநகர் டெல்​லி​யில் அமைந்​துள்ள செங்கோட்டையில் பிரதமர் நரேந்​திர மோடி தேசிய கொடியேற்றினார். தொடர்ந்து 12-வது முறையாக செங்​கோட்​டை​யில் தேசிய கொடியை அவர் நாட்டு மக்களுக்கு [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/we-will-no-longer-tolerate-the-threat-of-nuclear-weapons-prime-minister-modi-vows-in-independence-day-speech/">“அணு ஆயுத மிரட்டலை இனி பொறுத்துக்கொள்ள மாட்டோம்” – சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>“இந்திய ஆயுதப் படைகளால் பாகிஸ்தானில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. அணு ஆயுத அச்சுறுத்தல்களை இனி பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று இந்தியா முடிவு செய்துள்ளது. எந்த மிரட்டலுக்கும் நாம் அடிபணிய மாட்டோம்” என்று சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி கூறினார்.</p>
<p>இந்தியா முழு​வதும் 79-வது சுதந்​திர தினம் இன்று கோலாகல​மாக கொண்​டாடப்பட்டுவருகிறது.<br />
தலைநகர் டெல்​லி​யில் அமைந்​துள்ள செங்கோட்டையில் பிரதமர் நரேந்​திர மோடி தேசிய கொடியேற்றினார்.</p>
<p>தொடர்ந்து 12-வது முறையாக செங்​கோட்​டை​யில் தேசிய கொடியை அவர் நாட்டு மக்களுக்கு ஆற்றிய உரையில்,</p>
<p>“ நாம் அனைவரும் இந்தியாவை நம் உயிருக்கும் மேலாக நேசிக்கிறோம். 1947-ம் ஆண்டு, எல்லையற்ற சாத்தியக்கூறுகளுடனும், எண்ணற்ற ஆயுதங்களின் வலிமையுடனும், நமது நாடு சுதந்திரம் பெற்றது. ஆனால் சவால்கள் இன்னும் அதிகமாக இருந்தன.</p>
<p>இந்த சுதந்திர தினத்துக்காக செங்கோட்டையில் கூடியிருக்கும் ‘மினி இந்தியா’வை நான் காண்கிறேன். நமது துணிச்சலான வீரர்களின் வீரத்துக்கு நான் தலை வணங்குகிறேன்.” என்று குறிப்பிட்டார்.</p>
<p>ஆபரேஷன் சிந்தூர் மூலம், நமது வீரர்கள், எதிரிகளை கற்பனைக்கு அப்பாற்பட்ட பலத்துடன் பதிலளித்தனர். ஏப்ரல் 22-ம் திகதி. எல்லை தாண்டி வந்த பயங்கரவாதிகள், அப்பாவி பொதுமக்களை அவர்களின் மதத்தை கேட்ட பிறகு கொன்றனர்.<br />
இதனால் முழு தேசமும் கோபமடைந்தது.</p>
<p>அணு ஆயுத மிரட்டல் நீண்ட காலமாகத் தொடர்கிறது. ஆனால், அது இனி பொறுத்துக் கொள்ளப்படாது. நமது எதிரிகள் இதுபோன்ற முயற்சிகளில் தொடர்ந்து ஈடுபட்டால், நமது ஆயுதப் படைகள் தங்கள் விருப்பப்படி, அவர்கள் விரும்பும் நேரத்தில், அவர்கள் நிர்ணயித்த இலக்குகளை அடைவதன் மூலம் பதிலடி கொடுக்கும். பொருத்தமான பதிலடி கொடுக்க நாங்கள் தயாராக உள்ளோம்.</p>
<p>நமது ஆயுதப் படைகளால் பாகிஸ்தானில் கடுமையான பாதிப்பு ஏற்பட்டது. ஒவ்வொரு நாளும் புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன. அணு ஆயுத அச்சுறுத்தல்களை இனி பொறுத்துக்கொள்ள மாட்டோம் என்று இந்தியா முடிவு செய்துள்ளது. எந்த மிரட்டலுக்கும் நாம் அடிபணிய மாட்டோம்.” – என பிரதமர் மோடி மேலும் குறிப்பிட்டார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/we-will-no-longer-tolerate-the-threat-of-nuclear-weapons-prime-minister-modi-vows-in-independence-day-speech/">“அணு ஆயுத மிரட்டலை இனி பொறுத்துக்கொள்ள மாட்டோம்” – சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உறுதி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பூகம்பத்தையும் தாங்கும் ‘இன்ஜினீயரிங் அதிசயம்’ &#8211; பிரதமர் மோடி திறந்து வைத்த செனாப் பாலத்தின் சிறப்பு அம்சங்கள் என்ன?</title>
		<link>https://oruvan.com/an-engineering-marvel-that-can-withstand-earthquakes-what-are-the-special-features-of-the-chenab-bridge-inaugurated-by-prime-minister-modi/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Sat, 07 Jun 2025 03:00:32 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[நரேந்திர மோடி]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=22706</guid>

					<description><![CDATA[<p>ஜம்மு காஷ்மீரில் கட்டப்பட்டு உள்ள உலகின் மிக உயரமான பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார். ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் பக்கால் மற்றும் கவுரி பகுதிகளுக்கு இடையே சிந்து நதியின் துணை நதியான செனாப் நதியின் குறுக்கே புதிய பாலம் கட்ட கடந்த 2002-ம் ஆண்டில் முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 2004-ம் ஆண்டில் பாலம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால் பாலத்தின் உறுதித்தன்மையில் கேள்வி எழுந்ததால் கடந்த 2009-ம் ஆண்டில் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/an-engineering-marvel-that-can-withstand-earthquakes-what-are-the-special-features-of-the-chenab-bridge-inaugurated-by-prime-minister-modi/">பூகம்பத்தையும் தாங்கும் ‘இன்ஜினீயரிங் அதிசயம்’ &#8211; பிரதமர் மோடி திறந்து வைத்த செனாப் பாலத்தின் சிறப்பு அம்சங்கள் என்ன?</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஜம்மு காஷ்மீரில் கட்டப்பட்டு உள்ள உலகின் மிக உயரமான பாலத்தை பிரதமர் நரேந்திர மோடி நேற்று திறந்து வைத்தார்.</p>
<p>ஜம்மு காஷ்மீரின் ரியாசி மாவட்டத்தில் பக்கால் மற்றும் கவுரி பகுதிகளுக்கு இடையே சிந்து நதியின் துணை நதியான செனாப் நதியின் குறுக்கே புதிய பாலம் கட்ட கடந்த 2002-ம் ஆண்டில் முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து கடந்த 2004-ம் ஆண்டில் பாலம் கட்டும் பணிகள் தொடங்கப்பட்டன. ஆனால் பாலத்தின் உறுதித்தன்மையில் கேள்வி எழுந்ததால் கடந்த 2009-ம் ஆண்டில் பணிகள் நிறுத்தப்பட்டன.</p>
<p>இதன்பிறகு கடந்த 2010-ம் ஆண்டில் செனாப் நதியில் இரும்பு கம்பிகளால் பாலம் கட்டும் பணி தொடங்கியது. வடக்கு ரயில்வே நிர்வாகத்தின் கீழ் ஜம்மு காஷ்மீர் வருகிறது. எனினும் மலைப் பகுதி என்பதால் செனாப் ரயில் பாலம் கட்டும் பணி கொங்கன் ரயில்வேயிடம் ஒப்படைக்கப்பட்டது. கடந்த 2014-ம் ஆண்டில் பிரதமர் நரேந்திர மோடி பதவியேற்ற பிறகு பாலம் கட்டும் பணி வேகம் பெற்றது.</p>
<p>சுமார் 15 ஆண்டுகள் உழைப்பில், ரூ.1,486 கோடி செலவில் 1,315 மீட்டர் நீளம், 13.5 மீட்டர் அகலம், 359 மீட்டர் உயரத்தில் செனாப் ரயில் பாலம் கட்டப்பட்டு உள்ளது. இது பிரான்ஸின் ஈபிள் கோபுரத்தைவிட ( 330 மீட்டர்) உயரமானது. உலகிலேயே மிகவும் உயரமான ரயில்வே பாலம் என்ற பெருமையை பெற்றிருக்கிறது.</p>
<p>செனாப் ரயில் பாலத்தில் நேற்று காலை திறப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்று உலகின் மிக உயரமான ரயில்வே பாலத்தை திறந்து வைத்தார். அப்போது அவர் பாலத்தின் மீது தேசிய கொடியை ஏந்தி சென்றார். இதுகுறித்து அவர் சமூக வலைதளத்தில் வெளியிட்ட பதிவில், &#8220;செனாப் ரயில் பாலத்தில் தேசிய கொடி கம்பீரமாக பறக்கிறது. மிகச் சவாலான மலைப்பகுதியில் பாலம் கட்டப்பட்டு உள்ளது. இது இந்தியாவின் திறனை வெளிப்படுத்துகிறது&#8221; என்று தெரிவித்துள்ளார்.</p>
<p>அஞ்ஜி தொங்கு பாலம் திறப்பு: செனாப் ரயில் பாலத்தில் இருந்து 7 கி.மீ. தொலைவில் கத்ரா-பெனிகால் இடையே ரூ.435 கோடி செலவில் அஞ்ஜி தொங்கு பாலம் கட்டப்பட்டு உள்ளது. இந்த பாலம் 725 மீட்டர் நீளம் கொண்டதாகும். இந்த பாலத்தையும் பிரதமர் நரேந்திர மோடி திறந்துவைத்தார். இது இந்தியாவின் முதல் கேபிள் ரயில் பாலம் ஆகும். இதன் உயரம் 77 மாடிகளுக்கு இணையானது.</p>
<p>இதன்பிறகு கத்ரா ரயில் நிலையத்தில் நடைபெற்ற விழாவில் கத்ரா- ஸ்ரீநகர் இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி கொடியசைத்து தொடங்கிவைத்தார். அப்போது ரயிலில் பயணம் செய்த பள்ளி மாணவ, மாணவியருடன் அவர் கலந்துரையாடினார்.</p>
<p>பின்னர் கத்ராவில் நடைபெற்ற அரசு நலத்திட்ட விழாவில் ரூ.46,000 கோடி மதிப்பிலான திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கிவைத்தார். சில திட்டங்களுக்கு அவர் அடிக்கல் நாட்டினார்.</p>
<p>அப்போது அவர் பேசியதாவது: இந்தியாவை பற்றி கூறும்போது காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை என்று குறிப்பிடுகிறோம். அந்த கூற்று இப்போது உண்மையாகி உள்ளது. வைஷ்ணவி தேவியின் அருளால் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் முதல்முறையாக ரயில் சேவை தொடங்கப்பட்டு உள்ளது. இந்தியாவின் இதர பகுதிகளோடு காஷ்மீர் பள்ளத்தாக்கு ரயில் சேவை மூலம் இணைக்கப்பட்டு இருக்கிறது. புதிய ரயில் சேவையின் மூலம் உதயம்பூர், ஸ்ரீநகர், பாரமுல்லா பகுதி மக்கள் பலன் அடைவார்கள்.</p>
<p>சவாலான மலைப் பகுதியில் வெற்றிகரமாக ரயில் பாதையை அமைத்து உள்ளோம். இந்த பாதையில் செனாப் மற்றும் அஞ்ஜி பாலங்களும் திறக்கப்பட்டு உள்ளன. இது இந்தியாவின் தொழில்நுட்ப திறனை பறைசாற்றுகிறது. புதிய வழித்தடத்தில் கத்ரா- ஸ்ரீநகர் இடையே இரு வந்தே பாரத் ரயில்களின் சேவை தொடங்கப்பட்டு இருக்கிறது. இதன்மூலம் காஷ்மீர் மக்களின் நீண்ட நாள் கனவு, நனவாகி உள்ளது.</p>
<p>காஷ்மீர் பள்ளத்தாக்கில் புதிய ரயில் பாதையை அமைக்கும்போது பல்வேறு சவால்கள் எழுந்தன. கரோனா பெருந்தொற்று, மோசமான வானிலையிலும் தொய்வின்றி கட்டுமான பணிகள் நடைபெற்றன.</p>
<p>பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் உள்ள ஈபிள் கோபுரத்தை பார்க்க சுற்றுலா பயணிகள் அதிக அளவில் செல்கின்றனர். அதைவிட செனாப் ரயில் பாலம் உயரமானது ஆகும். இனிமேல் இந்த பாலத்தை பார்க்க சுற்றுலா பயணிகள் குவிவார்கள். மேலும் இந்தியாவின் முதல் அஞ்ஜி தொங்கு ரயில் பாலத்தையும் வெற்றிகரமாக கட்டி உள்ளோம். இதுவும் மிகப்பெரிய சுற்றுலா தலமாக மாறும். புதிய ரயில் சேவையால் ஜம்மு காஷ்மீரின் சுற்றுலா மட்டுமன்றி, தொழில் துறையும் அபார வளர்ச்சி அடையும். காஷ்மீர் ஆப்பிள்கள், உலர்ந்த பழங்கள், காஷ்மீர் குங்குமம், மூலிகைகள் உள்ளிட்டவை ரயில்கள் மூலம் நாட்டின் இதர பகுதிகளுக்கு எளிதாக எடுத்துச் செல்லப்படும்.</p>
<p>தேசிய ஜனநாயக கூட்டணியின் 11 ஆண்டு கால ஆட்சியில் மக்கள் நலனுக்கு முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது. 4 கோடி ஏழை குடும்பங்களுக்கு வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டு உள்ளன. ஆயுஷ்மான் பாரத் காப்பீடு திட்டத்தால் ஆண்டுக்கு ரூ.5 லட்சம் வரை இலவசமாக மருத்துவ சிகிச்சை அளிக்கப்படுகிறது. 50 கோடி பேருக்கு ஜன்தன் வங்கிக் கணக்குகள் தொடங்கப்பட்டு உள்ளன. 12 கோடி கழிப்பறைகள் கட்டப்பட்டு உள்ளன. 12 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டிருக்கிறது.</p>
<p>பஹல்காம் தாக்குதல்: கடந்த ஏப்ரல் 22-ம் தேதி காஷ்மீரின் பஹல்காமில் சுற்றுலா பயணிகள் மீது தீவிரவாத தாக்குதல் நடத்தப்பட்டது. காஷ்மீரின் சுற்றுலாவை சீர்குலைக்க வேண்டும். காஷ்மீர் மக்களின் வருவாயை தடுக்க வேண்டும். இந்தியாவின் ஒற்றுமையை சீர்குலைக்க வேண்டும் ஆகிய நோக்கங்களுக்காக தீவிரவாத தாக்குதல் திட்டமிட்டு நடத்தப்பட்டது. இது பாகிஸ்தானின் சதித் திட்டம் ஆகும்.</p>
<p>பஹல்காமில் சுற்றுலா பயணிகளை குதிரையில் அழைத்துச் செல்லும் சையது அடில் ஹூசைன் ஷா என்பவர் தீவிரவாதிகளுடன் தீரமாக போரிட்டு தனது உயிரை தியாகம் செய்தார். பாகிஸ்தானின் சதித் திட்டங்கள், தீவிரவாதத்துக்கு எதிராக ஒட்டுமொத்த காஷ்மீர் மக்களும் கிளர்ந்து எழுந்து உள்ளனர். இதன்மூலம் ஒட்டுமொத்த உலகத்துக்கும் வலுவான செய்தி எடுத்துரைக்கப்பட்டு இருக்கிறது.</p>
<p>ஒரு காலத்தில் காஷ்மீரில் தீவிரவாத பிரச்சினை நீடித்தது. பாஜக ஆட்சிக் காலத்தில் தீவிரவாதம் ஒடுக்கப்பட்டு, வளமான காஷ்மீருக்கு வித்திடப்பட்டு இருக்கிறது. சுற்றுலா, படப்பிடிப்புகள், சாகச விளையாட்டுகளின் மையமாக காஷ்மீர் உருவெடுத்திருக்கிறது.</p>
<p>இது பக்ரீத் பண்டிகை காலம் ஆகும். வரும் ஜூலை 3-ம் தேதி அமர்நாத் யாத்திரை தொடங்க உள்ளது. இந்த காலங்களில் தீவிரவாத தாக்குதல்களை தடுக்க பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன. காஷ்மீரின் வளர்ச்சிக்காக நான் அயராது பாடுபட்டு கொண்டிருக்கிறேன். காஷ்மீரின் வளர்ச்சியை தடுக்க யாராவது முயற்சி செய்தால், அவர்கள் முதலில் என்னை எதிர்கொள்ள வேண்டும்.</p>
<p>பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக கடந்த மே மாதம் 6-ம் தேதி நள்ளிரவில் ஆபரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை தொடங்கப்பட்டது. இதன்மூலம் பாகிஸ்தானில் செயல்பட்ட தீவிரவாத முகாம்கள் தரைமட்டமாக்கப்பட்டன. இதற்கு பதிலடியாக காஷ்மீர் எல்லைப் பகுதிகளில் உள்ள வீடுகள், கோயில்கள், குருத்வாராக்களை குறிவைத்து பாகிஸ்தான் ராணுவம் தாக்குதல் நடத்த முயற்சி செய்தது. அந்த தாக்குதல்களை இந்திய ராணுவம் வெற்றிகரமாக முறியடித்தது. ஒட்டுமொத்த மக்களும் ராணுவத்துக்கு ஆதரவாக தோளோடு தோள் நின்றனர். இது புதிய இந்தியா. இவ்வாறு பிரதமர் நரேந்திர மோடி பேசினார்.</p>
<p>செனாப் பாலத்தின் சிறப்பு அம்சங்கள்: ஆங்கிலேயர் ஆட்சியின்போது கடந்த 1892-ம் ஆண்டில் ஜம்மு மற்றும் காஷ்மீர் பள்ளத்தாக்கை இணைக்க புதிய ரயில் பாதையை அமைக்க திட்டமிடப்பட்டது. ஆனால் தொழில்நுட்ப சவால்கள் காரணமாக ரயில் பாதை திட்டம் கிடப்பில் போடப்பட்டது.</p>
<p>கடந்த 1965-ம் ஆண்டில் இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் நடைபெற்றது. அப்போது எழுந்த பிரச்சினைகளை கருத்தில் கொண்டு ஜம்மு மற்றும் பள்ளத்தாக்கு பகுதியை இணைக்க ரயில் பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டது. முதல்கட்டமாக பல ஆண்டுகள் உழைப்பில் கடந்த 1972-ம் ஆண்டில் கதுவா முதல் ஜம்மு வரை 76 கி.மீ. தொலைவுக்கு ரயில் பாதை அமைக்கப்பட்டது.</p>
<p>கடந்த 1999-ம் ஆண்டில் இந்தியா, பாகிஸ்தான் இடையே கார்கில் போர் நடைபெற்றது. அப்போது எழுந்த பிரச்சினைகளை கருத்தில் கொண்டு கடந்த 2002-ம் ஆண்டில் காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதியில் ரயில் பாதை அமைக்க அன்றைய பிரதமர் வாஜ்பாய் ஒப்புதல் வழங்கினார். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சியிலும் காஷ்மீர் பள்ளத்தாக்கு ரயில் திட்டம் முன்னெடுத்துச் செல்லப்பட்டது.</p>
<p>கடந்த 2014-ம் ஆண்டில் நரேந்திர மோடி பிரதமராக பதவியேற்றார். குறித்த காலத்தில் திட்டப் பணிகளை நிறைவு செய்யும் யுஎஸ்பிஆர்எல் திட்டத்தை அவர் அமல்படுத்தினார். மேலும் செனாப் ரயில் பாலம் திட்டத்தை பிரதமர் மோடியே நேரடியாக கண்காணித்தார். இந்த திட்டத்துக்கு தேவையான நிதி உடனுக்குடன் வழங்கப்பட்டது. நாள்தோறும் 3,200-க்கும் மேற்பட்டோர் இரவு பகலாக கட்டுமானப் பணியில் ஈடுபட்டனர். இதன்காரணமாக காஷ்மீர் பள்ளத்தாக்கு பகுதி நாட்டின் இதர பகுதிகளுடன் ரயில் பாதை மூலம் இணைக்கப்பட்டு இருக்கிறது.</p>
<p>சர்வதேச அரங்கில் செனாப் ரயில் பாலம் இன்ஜினீயரிங் அதிசயம் என்று வர்ணிக்கப்படுகிறது. இந்த பாலம் 120 ஆண்டுகளுக்கு நீடித்து நிலைத்து நிற்கும். ரிக்டர் அலகில் 8 என்ற அளவுக்கு பூகம்பம் ஏற்பட்டால் கூட செனாப் பாலத்துக்கு சிறுசேதம் கூட ஏற்படாது. 40 கிலோ வெடிகுண்டுகளால் தாக்குதல் நடத்தினால்கூட பாலத்தை தகர்க்க முடியாது. கடுமையான குளிர்காலத்திலும் செனாப் பாலம் வழியாக ரயில்களை இயக்க முடியும்.</p>
<p>செனால் ரயில் பாலம் பகுதியில் ஆண்டு முழுவதும் பலத்த காற்று வீசுகிறது. இதை கருத்தில் கொண்டு 266 கி.மீ. வேகத்தில் காற்று வீசினால்கூட எந்த பாதிப்பும் ஏற்படாத வகையில் நவீன தொழில்நுட்பத்தில் பாலம் கட்டப்பட்டு இருக்கிறது.</p>
<p>வடக்கிழக்கில் சிலிகுரி பகுதி, கோழி கழுத்து பகுதி என்று அழைக்கப்படுகிறது. இதேபோன்று ஜம்மு காஷ்மீரின் அக்னூர் பகுதியும் கோழி கழுத்து பகுதி என்று அழைக்கப்படுகிறது. ராணுவரீதியாக இது முக்கியத்துவம் வாய்ந்த பகுதியாகும்.</p>
<p>இங்கு செனாப் ரயில் பாலம் கட்டப்பட்டிருப்பது பாகிஸ்தான், சீனாவுக்கு நேரடியாக விடுக்கப்பட்ட சவால் ஆகும். பாகிஸ்தான் எல்லை பகுதி இங்கிருந்து 64 கி.மீ. தொலைவில் உள்ளது. போர்க்காலங்களில் ராணுவத்துக்கு தேவையான தளவாடங்கள், ஆயுதங்களை ரயில் பாதை மூலம் மிக எளிதாக எல்லைப் பகுதிக்கு எடுத்துச் செல்ல முடியும். எனவே பயணிகள், சரக்கு போக்குவரத்துக்கு இணையாக ராணுவ ரீதியாகவும் புதிய ரயில் பாதை மிகுந்த முக்கியத்துவம் பெற்றிருக்கிறது.</p>
<p>The post <a href="https://oruvan.com/an-engineering-marvel-that-can-withstand-earthquakes-what-are-the-special-features-of-the-chenab-bridge-inaugurated-by-prime-minister-modi/">பூகம்பத்தையும் தாங்கும் ‘இன்ஜினீயரிங் அதிசயம்’ &#8211; பிரதமர் மோடி திறந்து வைத்த செனாப் பாலத்தின் சிறப்பு அம்சங்கள் என்ன?</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சஜித்தை டெல்லிக்கு அழைத்த மோடி</title>
		<link>https://oruvan.com/%e0%ae%9a%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%9f%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%85%e0%ae%b4%e0%af%88%e0%ae%a4%e0%af%8d/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Sun, 13 Apr 2025 05:16:31 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[நரேந்திர மோடி]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=17436</guid>

					<description><![CDATA[<p>எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை டெல்லிக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார். கடந்த வார இறுதியில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி, கொழும்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தார். இதன் போதே டெல்லி விஜயத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டது. கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் சுமார் 30 நிமிடங்கள் வரை இடம்பெற்ற இந்த சந்திப்பில், இந்த தருணத்தில் இலங்கைக்கு எத்தகைய உதவியை இந்தியாவிடமிருந்து எதிர்பார்க்கின்றீர்கள் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/%e0%ae%9a%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%9f%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%85%e0%ae%b4%e0%af%88%e0%ae%a4%e0%af%8d/">சஜித்தை டெல்லிக்கு அழைத்த மோடி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை டெல்லிக்கு விஜயம் மேற்கொள்ளுமாறு இந்திய பிரதமர் நரேந்திர மோடி அழைப்பு விடுத்துள்ளார்.</p>
<p>கடந்த வார இறுதியில் இலங்கைக்கு விஜயம் மேற்கொண்டிருந்த பிரதமர் நரேந்திர மோடி, கொழும்பில் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களை முன்னெடுத்திருந்தார். இதன் போதே டெல்லி விஜயத்திற்கான அழைப்பு விடுக்கப்பட்டது.</p>
<p>கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் சுமார் 30 நிமிடங்கள் வரை இடம்பெற்ற இந்த சந்திப்பில், இந்த தருணத்தில் இலங்கைக்கு எத்தகைய உதவியை இந்தியாவிடமிருந்து எதிர்பார்க்கின்றீர்கள் என்று பிரதமர் நரேந்திர மோடி, எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிடம் வினவியுள்ளார்.</p>
<p>இதற்கு பதிலளித்த சஜித் பிரேமதாச, கொவிட் பெரும் தொற்றின் போதும், அதன் பின்னரான பொருளாதார நெருக்கடியின் போதும் இந்திய உதவி கிடைத்திருக்காவிடின் இலங்கையால் இந்தளவு சீக்கிரம் மீண்டிருக்க முடியாது. எனவே, எதிர்வரும் நாட்களிலும் பொருளாதாரத்தில் இருந்து மீள்வதற்கு இந்தியாவின் ஒத்துழைப்பு இன்றியமையாததாகும்.</p>
<p>ஆகவே, இலங்கைக்கு ஆதரவாக இந்தியாவின் தொடர் ஒத்துழைப்பு அவசியம் என கோரிக்கை விடுத்தார். இதன் பின்னர் டெல்லிக்கு விஜயம் செய்யுமாறு எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு அழைப்பு விடுத்தார். சந்திப்பில் பங்கேற்றிருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கரிடம் விஜயத்திற்கான ஏற்பாடுகளை முன்னெடுக்குமாறு பிரதமர் மோடி இதன்போது ஆலோசனை வழங்கினார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/%e0%ae%9a%e0%ae%9c%e0%ae%bf%e0%ae%a4%e0%af%8d%e0%ae%a4%e0%af%88-%e0%ae%9f%e0%af%86%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%bf%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%af%81-%e0%ae%85%e0%ae%b4%e0%af%88%e0%ae%a4%e0%af%8d/">சஜித்தை டெல்லிக்கு அழைத்த மோடி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இந்தியாவுடன் ஏழு புதிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து &#8211; இருநாடுகளும் இடையில் மின் கட்டமைப்புகள் இணைப்பு</title>
		<link>https://oruvan.com/seven-new-agreements-signed-with-india-interconnection-of-power-infrastructure-between-the-two-countries/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Sat, 05 Apr 2025 08:54:02 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[நரேந்திர மோடி]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=16946</guid>

					<description><![CDATA[<p>பாதுகாப்பு, மின் கட்டமைப்புகள் இணைப்பு, திருகோணமலையை எரிசக்தி மையமாக மேம்படுத்துதல், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் சுகாதாரத் துறையில் ஒத்துழைப்பு போன்ற துறைகளை உள்ளடக்கிய ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது. திருகோணமலையில் உள்ள எரிசக்தி மையத்துடன் தொடர்புடைய புரிந்துணர்வு ஒப்பந்தம் ஐக்கிய அரபு எமிரேட்ஸை உள்ளடக்கிய முத்தரப்பு ஒப்பந்தமாகும். இலங்கைக்கு மூன்றுநாள் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் பேச்சுகளில் ஈடுபட்டார். இதன் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/seven-new-agreements-signed-with-india-interconnection-of-power-infrastructure-between-the-two-countries/">இந்தியாவுடன் ஏழு புதிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து &#8211; இருநாடுகளும் இடையில் மின் கட்டமைப்புகள் இணைப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பாதுகாப்பு, மின் கட்டமைப்புகள் இணைப்பு, திருகோணமலையை எரிசக்தி மையமாக மேம்படுத்துதல், டிஜிட்டல் மயமாக்கல் மற்றும் சுகாதாரத் துறையில் ஒத்துழைப்பு போன்ற துறைகளை உள்ளடக்கிய ஏழு புரிந்துணர்வு ஒப்பந்தங்களை இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் கைச்சாத்திடப்பட்டுள்ளது.</p>
<p>திருகோணமலையில் உள்ள எரிசக்தி மையத்துடன் தொடர்புடைய புரிந்துணர்வு ஒப்பந்தம் ஐக்கிய அரபு எமிரேட்ஸை உள்ளடக்கிய முத்தரப்பு ஒப்பந்தமாகும்.</p>
<p>இலங்கைக்கு மூன்றுநாள் அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் பேச்சுகளில் ஈடுபட்டார்.</p>
<p>இதன் பின்னரே இந்த 7 ஒப்பந்தகளும் கைச்சாத்திடப்பட்டுள்ளன.</p>
<p>The post <a href="https://oruvan.com/seven-new-agreements-signed-with-india-interconnection-of-power-infrastructure-between-the-two-countries/">இந்தியாவுடன் ஏழு புதிய ஒப்பந்தங்கள் கைச்சாத்து &#8211; இருநாடுகளும் இடையில் மின் கட்டமைப்புகள் இணைப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தூசு தட்டப்படும் &#8216;எட்கா&#8217; உடன்படிக்கை &#8211; மோடியின் வருகைக்கு முன் இணங்கிய ஒப்பந்தங்கள் இறுதிப்படுத்தப்படும்</title>
		<link>https://oruvan.com/dusting-off-edca-agreement-agreements-reached-before-modis-visit-to-be-finalized/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Fri, 10 Jan 2025 08:17:10 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[அநுரகுமார திசாநாயக்க]]></category>
		<category><![CDATA[எட்கா உடன்படிக்கை]]></category>
		<category><![CDATA[நரேந்திர மோடி]]></category>
		<category><![CDATA[விஜித ஹேரத்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=6311</guid>

					<description><![CDATA[<p>இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் (ETCA) தொடர்பான பேச்சுகளை மீண்டும் தொடங்குவதற்கான கதவை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் திறந்துள்ளது. கடந்த மாதம் 15ஆம் திகதி முதல் 17ஆம் திகதிவரை இந்தியாவுக்கு அரசுமுறை பயணமாக சென்ற ஜனாதிபதி, இந்திய பிதரமர் மோடியுடன் ஈடுபட்ட கலந்துரையாடலில் எட்கா உடன்படிக்கை, இருநாடுகளுக்கு இடையிலான நிலத் தொடர்பு, திருகோணமலை எண்ணெய் குதங்கள், காங்கேசன்துறை துறைமுகம், இருநாடுகளுக்கு இடையிலான கப்பல் போக்குவரத்து, சுற்றுலா அபிவிருத்தி, முதலீட்டு [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/dusting-off-edca-agreement-agreements-reached-before-modis-visit-to-be-finalized/">தூசு தட்டப்படும் &#8216;எட்கா&#8217; உடன்படிக்கை &#8211; மோடியின் வருகைக்கு முன் இணங்கிய ஒப்பந்தங்கள் இறுதிப்படுத்தப்படும்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான பொருளாதார மற்றும் தொழில்நுட்ப ஒத்துழைப்பு ஒப்பந்தம் (ETCA) தொடர்பான பேச்சுகளை மீண்டும் தொடங்குவதற்கான கதவை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான அரசாங்கம் திறந்துள்ளது.</p>
<p>கடந்த மாதம் 15ஆம் திகதி முதல் 17ஆம் திகதிவரை இந்தியாவுக்கு அரசுமுறை பயணமாக சென்ற ஜனாதிபதி, இந்திய பிதரமர் மோடியுடன் ஈடுபட்ட கலந்துரையாடலில் எட்கா உடன்படிக்கை, இருநாடுகளுக்கு இடையிலான நிலத் தொடர்பு, திருகோணமலை எண்ணெய் குதங்கள், காங்கேசன்துறை துறைமுகம், இருநாடுகளுக்கு இடையிலான கப்பல் போக்குவரத்து, சுற்றுலா அபிவிருத்தி, முதலீட்டு ஊக்குவிப்புகள், இறக்குமதி, ஏற்றுமதி, தொழில்நுட்ப பரிமாற்றம் உட்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து கலந்துரையாடியிருந்தார்.</p>
<p>இருவரும் இணைந்து வெளியிட்டிருந்த கூட்டறிக்கையில் இந்த விவகாரங்கள் குறிப்பிடப்பட்டிருந்ததுடன், எட்கா உடன்படிக்கை தொடர்பிலான பேச்சுகளை தொடர்ந்து கொண்டுசெல்லவும் திட்டமிட்டிருந்தனர்.</p>
<p>எட்கா தொடர்பில் குறித்த கூட்டறிக்கையில் குறிப்பிடப்பட்டிருந்த விவகாரம் இலங்கையில் எதிர்க்கட்சிகளுக்கு தீனி போடுவதாக மாறியது. உடனடியாக கருத்துகளை ஆரம்பித்த எதிர்க்கட்சிகள், அரசாங்கம் எட்கா உடன்படிக்கையை கைச்சாத்திட இணங்கிவிட்டதாக ஊடகங்களில் செய்திகளை பகிர்ந்தன.</p>
<p>இந்தியப் பயணம் தொடர்பில் கொழும்பில் கருத்து வெளியிட்டிருந்த வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத், எட்கா ஒப்பந்தத்தை கைச்சாத்திட எவ்வித இணக்கப்பாடுகளும் புதுடில்லியில் எட்டப்படவில்லை என்றும் பேச்சுகளை முன்னோக்கி கொண்டுசெல்லவே இணக்கப்பாடுகள் எட்டப்பட்டதாகவும் கூறியிருந்தார்.</p>
<p>இந்த நிலையில், புதுடில்லியில் எட்டப்பட்ட இணக்கப்பாடு குறித்து கருத்து வெளியிட்டுள்ள இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, ​​பேச்சுவார்த்தைகளை முடிவுக்குக் கொண்டுவருவதற்கான நோக்கத்துடன் மட்டுமே மீண்டும் தொடங்க ஒப்புக் கொள்ளப்பட்டதாக கூறியுள்ளார்.</p>
<p>கூட்டு அறிக்கை தெளிவாக உள்ளது. ஆங்கில மொழியில் அது தெளிவாக உள்ளது. பேச்சுவார்த்தைகளைத் தொடர விருப்பம் இருந்தது. அது ஒரு குறிப்பிட்ட காலக்கெடுவிற்குள் முடிவடையும் பேச்சுகள் அல்ல என்றும் அவர் தெரிவித்துள்ளார்.</p>
<p>இதன் பிரகாரம் எட்கா உடன்படிக்கை உட்பட ஏனைய திட்டங்கள் தொடர்பில் இருநாடுகளுக்கு இடையிலான பேச்சுகள் விரைவில் ஆரம்பமாகும் என இராஜதந்திர வட்டாரங்களில் அறிய முடிகிறது.</p>
<p>இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் இலங்கை பயணத்துக்கு முன்னதாக இந்தப் பேச்சுகளில் குறிப்பிடத்தக்களவு முன்னேற்றத்தை எட்ட இருநாடுகளும் கலந்துரையாடல்களை பல கோணங்களில் ஆரம்பித்துள்ளதாகவும் மோடியின் பயணத்தின் போது சில முக்கிய உடன்படிக்கைகளை கைச்சாத்திடும் நோக்கில் இந்த கலந்துரையாடல்கள் இடம்பெறுவதாகவும் அறிய முடிந்தது.</p>
<p><strong>சுப்ரமணியம் நிஷாந்தன்</strong></p>
<p>The post <a href="https://oruvan.com/dusting-off-edca-agreement-agreements-reached-before-modis-visit-to-be-finalized/">தூசு தட்டப்படும் &#8216;எட்கா&#8217; உடன்படிக்கை &#8211; மோடியின் வருகைக்கு முன் இணங்கிய ஒப்பந்தங்கள் இறுதிப்படுத்தப்படும்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பிரதமர் மோடி இலங்கை வருகிறார்</title>
		<link>https://oruvan.com/prime-minister-modi-is-coming-to-sri-lanka/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Tue, 07 Jan 2025 13:22:46 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[நரேந்திர மோடி]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=5894</guid>

					<description><![CDATA[<p>இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்த வருடத்திற்குள் இலங்கைக்கு பயணம் செய்வார் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, தெரிவித்துள்ளார். பத்திரிகை ஆசிரியர்களுடன் இன்று செவ்வாய்க்கிழமை அவர் நடத்திய சந்திப்பிலேயே இந்த தகவலை தெரிவித்துள்ளார். இந்த பயணத்திற்கான சரியான நேரத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம் என்றும் சந்தோஷ் ஜா, கூறியுள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, கடந்த டிசம்பர் மாத நடுப்பகுதியில் புதுடில்லிக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டிருந்த போது, ​​பிரதமர் மோடியை இலங்கை வருமாறு அழைப்பை [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/prime-minister-modi-is-coming-to-sri-lanka/">பிரதமர் மோடி இலங்கை வருகிறார்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி இந்த வருடத்திற்குள் இலங்கைக்கு பயணம் செய்வார் என இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா, தெரிவித்துள்ளார்.</p>
<p>பத்திரிகை ஆசிரியர்களுடன் இன்று செவ்வாய்க்கிழமை அவர் நடத்திய சந்திப்பிலேயே இந்த தகவலை தெரிவித்துள்ளார்.</p>
<p>இந்த பயணத்திற்கான சரியான நேரத்தை உருவாக்கும் பணியில் ஈடுபட்டுள்ளோம் என்றும் சந்தோஷ் ஜா, கூறியுள்ளார்.</p>
<p>ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, கடந்த டிசம்பர் மாத நடுப்பகுதியில் புதுடில்லிக்கு இரண்டு நாள் பயணம் மேற்கொண்டிருந்த போது, ​​பிரதமர் மோடியை இலங்கை வருமாறு அழைப்பை விடுத்திருந்தார். அதன் பிரகாரம் மோடியின் இலங்கை பயணம் இடம்பெற உள்ளது.</p>
<p>பிரதமர் மோடி 2015 ஆம் ஆண்டு மற்றும் 2017ஆம் ஆண்டுகளில் இரண்டு முறை இலங்கைக்கு பயணம் செய்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/prime-minister-modi-is-coming-to-sri-lanka/">பிரதமர் மோடி இலங்கை வருகிறார்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இந்தியாவின் தேசியப் பாதுகாப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்த ஒருபோது அனுமதிக்க மாட்டேன் &#8211; ஜனாதிபதி அநுர, மோடியிடம் உறுதி</title>
		<link>https://oruvan.com/i-will-never-allow-indias-national-security-to-be-compromised-president-anura-kumara-assures-modi/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 16 Dec 2024 09:41:27 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Anura india visit]]></category>
		<category><![CDATA[Anura Kumara]]></category>
		<category><![CDATA[Anura Kumara Dissanayake]]></category>
		<category><![CDATA[Narendra Modi]]></category>
		<category><![CDATA[President of Sri Lanka]]></category>
		<category><![CDATA[Prime Minister of India]]></category>
		<category><![CDATA[Sri Lankan President]]></category>
		<category><![CDATA[அநுரகுமார திசாநாயக்க]]></category>
		<category><![CDATA[நரேந்திர மோடி]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=2750</guid>

					<description><![CDATA[<p>இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இலங்கை நிலப்பரப்பை பயன்படுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். மேலும், இந்தியாவிற்கான தமது தொடர்ச்சியான ஆதரவை உறுதிப்படுத்த விரும்புவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். கடந்த செப்டம்பர் மாதம் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் முதல் வெளிநாட்டுப் பயணமாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தியா சென்றுள்ளார். மூன்று நாள் அரச பயணமாக இந்தியா சென்றுள்ள ஜனாதிபக்கு அரச மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. இது [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/i-will-never-allow-indias-national-security-to-be-compromised-president-anura-kumara-assures-modi/">இந்தியாவின் தேசியப் பாதுகாப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்த ஒருபோது அனுமதிக்க மாட்டேன் &#8211; ஜனாதிபதி அநுர, மோடியிடம் உறுதி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இந்தியாவின் தேசியப் பாதுகாப்பு மற்றும் பிராந்திய ஸ்திரத்தன்மைக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இலங்கை நிலப்பரப்பை பயன்படுத்துவதற்கு ஒருபோதும் இடமளிக்கப் போவதில்லை என ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.</p>
<p>மேலும், இந்தியாவிற்கான தமது தொடர்ச்சியான ஆதரவை உறுதிப்படுத்த விரும்புவதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.</p>
<p>கடந்த செப்டம்பர் மாதம் ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் முதல் வெளிநாட்டுப் பயணமாக ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தியா சென்றுள்ளார்.</p>
<p>மூன்று நாள் அரச பயணமாக இந்தியா சென்றுள்ள ஜனாதிபக்கு அரச மரியாதையுடன் வரவேற்பு அளிக்கப்பட்டது. இது குறித்த நிகழ்வுகள் இந்திய ஜனாதிபதியின் உத்தியோகபூர்வ இல்லமான ராஷ்டிரபதி பவனில் நடைபெற்றது.</p>
<p>குதிரைப்படை அணிவகுப்புடன் ராஷ்டிரபதி பவனுக்கு அழைத்து வரப்பட்ட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு மற்றும் பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரினால் மகத்தான வரவேற்பு அளிக்கப்பட்டது.</p>
<p>இந்த நிகழ்வை தொடர்ந்து ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க மற்றும் பிரதமர் நரேந்திர மோடிக்கு இடையிலான சந்திப்பு இடம்பெற்றிருந்தது.</p>
<p>இதன்போது இந்திய – இலங்கை உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும், மீனவர்கள் பிரச்சினை மற்றும் இலங்கை தமிழர்கள் பிரச்சினை குறித்தும் இதன் போது பேசப்பட்டது. இந்த சந்திப்பை தொடர்ந்து இரு நாட்டு தலைவர்களின் கூட்டு ஊடகவியலாளர் சந்திப்பு இடம்பெற்றிருந்தது.</p>
<p>இதில் இலங்கை மற்றும் இந்தியாவுக்கு இடையில் முக்கிய புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் பரிமாறிக்கொள்ளப்பட்டன.</p>
<p>இதனை தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் மோடி,</p>
<p>ஜனாதிபதியாக பதவியேற்றதன் பின்னர் அநுரகுமார திசாநாயக்கவின் முதல் வெளிநாட்டு பயணமாக இந்தியா வந்தமைக்கு பிரதமர் மோடி தனது நன்றியைத் தெரிவித்தார், மேலும் இது இலங்கையுடனான இந்தியாவின் உறவுகளை வலுப்படுத்தும் என்றும் தெரிவித்தார்.</p>
<p>“ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை இந்தியாவிற்கு வரவேற்கிறேன். ஜனாதிபதியாக, உங்கள் முதல் அரசு முறைப் பயணத்திற்கு நீங்கள் இந்தியாவைத் தேர்ந்தெடுத்ததில் நாங்கள் மிகவும் மகிழ்ச்சியடைகிறோம்.</p>
<p>இந்த பயணத்துடன், எங்கள் உறவுகளில் புதிய வேகமும் ஆற்றலும் உருவாக்கப்படுகின்றன. எங்கள் கூட்டாண்மைக்காக, நாங்கள் ஒரு எதிர்கால தொலைநோக்கை ஏற்றுக்கொண்டுள்ளோம்.</p>
<p>&#8220;எங்கள் பொருளாதார ஒத்துழைப்பில், முதலீடு சார்ந்த வளர்ச்சி மற்றும் இரு நாடுகளுக்கும் இடையிலான இணைப்பை வலியுறுத்தியுள்ளோம்,&#8221; என்று பிரதமர் மோடி தெரிவித்தார்.</p>
<p>இந்தியா மற்றும் இலங்கையின் பாதுகாப்பு நலன்கள் ஒன்றோடொன்று இணைக்கப்பட்டுள்ளன என்றும், &#8220;பாதுகாப்பு ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை விரைவில் இறுதி செய்ய முடிவு செய்துள்ளோம்&#8221; என்றும் பிரதமர் மோடி தெரிவித்திருந்தார்.</p>
<p>மேலும், கொழும்பு பாதுகாப்பு மாநாடு பிராந்திய அமைதி, பாதுகாப்பு மற்றும் மேம்பாட்டிற்கான ஒரு முக்கியமான தளம் என்று நம்புவதாகவும்&#8221; பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டிந்தார்.</p>
<p>கடல் பாதுகாப்பு, பயங்கரவாத எதிர்ப்பு, சைபர் பாதுகாப்பு, கடத்தல் மற்றும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றங்களுக்கு எதிரான போராட்டம், மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரணம் ஆகியவற்றை மேம்படுத்துவதில் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை அவர் மேலும் வலியுறுத்தினார்.</p>
<p>&#8220;இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையிலான மக்களின் உறவுகள் நமது நாகரிகங்களுடன் இணைக்கப்பட்டுள்ளன&#8221; என்று பிரதமர் மோடி மேலும் தெரிவித்தார்.</p>
<p>இதனையடுத்து உரையாற்றி ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, “தனது இந்திய விஜயம் இரு நாடுகளுக்கும் இடையிலான ஒத்துழைப்பை மேம்படுத்த உதவும் என்று தெரிவித்தார்.</p>
<p>மேலும், இலங்கைக்கு விஜயம் செய்யுமாறும் பிரதமர் மோடிக்கு ஜனாதிபதி அநுரகுமார அழைப்பு விடுத்தார்.</p>
<p>இரண்டு வருடங்களுக்கு முன்னர் இலங்கை கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டதாகவும், அந்த நிலையில் இருந்து மீள்வதற்கு இந்தியா பெரும் ஆதரவை வழங்கியதாகவும் தெரிவித்தார்.</p>
<p>&#8220;இந்தியாவின் நலனுக்கு தீங்கு விளைவிக்கும் வகையில் இலங்கை நிலப்பரப்பை எந்த வகையிலும் பயன்படுத்த அனுமதிக்க மாட்டோம் என்று உறுதியளிப்பதாகவும் ஜனாதிபதி குறிப்பிட்டார்.</p>
<p>இந்தியாவுடனான ஒத்துழைப்பு நிச்சயமாக செழிக்கும், மேலும் இந்தியாவிற்கான எங்கள் தொடர்ச்சியான ஆதரவை உறுதிப்படுத்த விரும்புகிறேன்,&#8221; என்று ஜனாதிபதி மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/i-will-never-allow-indias-national-security-to-be-compromised-president-anura-kumara-assures-modi/">இந்தியாவின் தேசியப் பாதுகாப்பிற்கு பாதிப்பை ஏற்படுத்த ஒருபோது அனுமதிக்க மாட்டேன் &#8211; ஜனாதிபதி அநுர, மோடியிடம் உறுதி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
