<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>தென் கொரியா Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/%E0%AE%A4%E0%AF%86%E0%AE%A9%E0%AF%8D-%E0%AE%95%E0%AF%8A%E0%AE%B0%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/தென்-கொரியா/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Tue, 11 Nov 2025 11:24:46 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>தென் கொரியா Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/தென்-கொரியா/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>கொரியாவில் இரு இலங்கை இளைஞர்கள் பலி &#8211; விசாரணைகள் தீவிரம்</title>
		<link>https://oruvan.com/two-sri-lankan-youths-killed-in-korea-investigations-intensify/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Tue, 11 Nov 2025 11:24:46 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[#oruvan #news]]></category>
		<category><![CDATA[ஒருவன்]]></category>
		<category><![CDATA[ஒருவன் செய்திகள்]]></category>
		<category><![CDATA[தென் கொரியா]]></category>
		<category><![CDATA[மீன் பண்ணை]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=37997</guid>

					<description><![CDATA[<p>தென் கொரியாவில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது உயிரிழந்த இரண்டு இலங்கை இளைஞர்கள் உயிரிழந்தமைக்கான காரணம் குறித்து இன்னும் தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை. அந்த நாட்டின் ஊடக அறிக்கையின்படி, இருவரும் மீன் பண்ணையில் வேலை செய்து கொண்டிருந்தபோது உயிரிழந்துள்ளனர். அந்நாட்டு பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது மீன் பண்ணையில் உள்ள தண்ணீர் தொட்டியில் மூன்று உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. தள மேற்பார்வையாளரான கொரிய நாட்டவரும் உயிரிழந்திருந்தார். உயிரிழந்த இரண்டு இலங்கையர்களும் 20 மற்றும் 30 வயதுடைய [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/two-sri-lankan-youths-killed-in-korea-investigations-intensify/">கொரியாவில் இரு இலங்கை இளைஞர்கள் பலி &#8211; விசாரணைகள் தீவிரம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தென் கொரியாவில் பணிபுரிந்து கொண்டிருந்தபோது உயிரிழந்த இரண்டு இலங்கை இளைஞர்கள் உயிரிழந்தமைக்கான காரணம் குறித்து இன்னும் தெளிவான தகவல்கள் வெளியாகவில்லை.</p>
<p>அந்த நாட்டின் ஊடக அறிக்கையின்படி, இருவரும் மீன் பண்ணையில் வேலை செய்து கொண்டிருந்தபோது உயிரிழந்துள்ளனர்.</p>
<p>அந்நாட்டு பொலிஸாருக்கு கிடைத்த தகவல்களின் அடிப்படையில் முன்னெடுக்கப்பட்ட தேடுதல் நடவடிக்கையின் போது மீன் பண்ணையில் உள்ள தண்ணீர் தொட்டியில் மூன்று உடல்கள் கண்டெடுக்கப்பட்டன.</p>
<p>தள மேற்பார்வையாளரான கொரிய நாட்டவரும் உயிரிழந்திருந்தார். உயிரிழந்த இரண்டு இலங்கையர்களும் 20 மற்றும் 30 வயதுடைய இளைஞர்கள் ஆவர். கொரிய நாட்டவருக்கு 50 வயது.</p>
<p>இருப்பினும், மரணம் எப்படி நடந்தது என்பது குறித்து மேலும் விசாரணைகள் நடந்து வருகின்றன.</p>
<p>The post <a href="https://oruvan.com/two-sri-lankan-youths-killed-in-korea-investigations-intensify/">கொரியாவில் இரு இலங்கை இளைஞர்கள் பலி &#8211; விசாரணைகள் தீவிரம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தென் கொரியாவில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு</title>
		<link>https://oruvan.com/employment-for-sri-lankans-in-south-korea/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 15 Oct 2025 06:08:58 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[South Korea]]></category>
		<category><![CDATA[கொரிய மொழித் திறன் பரீட்சை]]></category>
		<category><![CDATA[தென் கொரியா]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=35443</guid>

					<description><![CDATA[<p>இந்த ஆண்டு இதுவரை 2,927 இலங்கையர்கள் தென் கொரியாவில் வேலை வாய்ப்புகளுக்காக சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது. இவர்களில் 2,197 பேர் உற்பத்தித் துறையிலும், 680 பேர் மீன்வளத் துறையிலும், 23 பேர் கட்டுமானத் துறையிலும், இரண்டு பேர் விவசாயத் துறையிலும் வேலைகளைப் பெற்றுள்ளனர். இதற்கிடையில், தென் கொரியாவில் ஏற்கனவே வேலை வாய்ப்பு பெற்றுள்ள சுமார் 200 இலங்கையர்களை இந்த மாத இறுதிக்குள் அனுப்புவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்  தெரிவித்துள்ளது. [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/employment-for-sri-lankans-in-south-korea/">தென் கொரியாவில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இந்த ஆண்டு இதுவரை 2,927 இலங்கையர்கள் தென் கொரியாவில் வேலை வாய்ப்புகளுக்காக சென்றுள்ளதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் அறிவித்துள்ளது.</p>
<p>இவர்களில் 2,197 பேர் உற்பத்தித் துறையிலும், 680 பேர் மீன்வளத் துறையிலும், 23 பேர் கட்டுமானத் துறையிலும், இரண்டு பேர் விவசாயத் துறையிலும் வேலைகளைப் பெற்றுள்ளனர்.</p>
<p>இதற்கிடையில், தென் கொரியாவில் ஏற்கனவே வேலை வாய்ப்பு பெற்றுள்ள சுமார் 200 இலங்கையர்களை இந்த மாத இறுதிக்குள் அனுப்புவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம்  தெரிவித்துள்ளது.</p>
<p>இந்தப் பணியமர்த்தலுடன், இந்த ஆண்டின் தொடக்கத்தில் இருந்து தென் கொரியாவில் வேலைவாய்ப்புக்காகச் சென்ற இலங்கையர்களின் மொத்த எண்ணிக்கை 3,000 ஐத் தாண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p>
<p>கூடுதலாக, ஒக்டோபர் 23ஆம் திகதி தொடங்கவுள்ள 2025 கொரிய மொழித் திறன் பரீட்சைக்கு 36,475 பேர் பதிவு செய்துள்ளதாக பணியகம் அறிவித்துள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/employment-for-sri-lankans-in-south-korea/">தென் கொரியாவில் இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தென் கொரியாவில் துன்புறுத்தப்பட்ட இலங்கையர் &#8211; அந்நாட்டு ஜனாதிபதி கடும் கண்டனம்</title>
		<link>https://oruvan.com/sri-lankans-persecuted-in-south-korea-president-of-that-country-strongly-condemns/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Fri, 25 Jul 2025 03:36:53 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[South Korea]]></category>
		<category><![CDATA[South Korea President]]></category>
		<category><![CDATA[தென் கொரியா]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=27539</guid>

					<description><![CDATA[<p>கொரியாவில் பணிபுரியும் இலங்கை தொழிலாளி ஒருவர் சந்தித்த துஷ்பிரயோக சம்பவத்தை அந்நாட்டு ஜனாதிபதி கண்டித்துள்ளார். தென் கொரிய ஜனாதிபதி லீ ஜே-மியுங் இந்த சம்பவத்தை கண்டித்து, &#8220;எந்தவொரு மனித உரிமை மீறலுக்கும் கடுமையாக பதிலடி கொடுக்கப்படும்&#8221; என்று எச்சரித்துள்ளார். இந்த சம்பவம் கடந்த பெப்ரவரி 26 அன்று தெற்கு ஜியோல்லா மாகாணத்தின் நஜுவில் உள்ள செங்கல் தொழிற்சாலை ஒன்றில் நடந்துள்ளது. குறித்த தொழிற்சாலையில் இலங்கையர் பணிபுரிந்தார். தொழிற்சாலையில் இருந்த சக தொழிலாளர்கள் இலங்கை தொழிலாளியை செங்கல் குவியலில் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/sri-lankans-persecuted-in-south-korea-president-of-that-country-strongly-condemns/">தென் கொரியாவில் துன்புறுத்தப்பட்ட இலங்கையர் &#8211; அந்நாட்டு ஜனாதிபதி கடும் கண்டனம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>கொரியாவில் பணிபுரியும் இலங்கை தொழிலாளி ஒருவர் சந்தித்த துஷ்பிரயோக சம்பவத்தை அந்நாட்டு ஜனாதிபதி கண்டித்துள்ளார்.</p>
<p>தென் கொரிய ஜனாதிபதி லீ ஜே-மியுங் இந்த சம்பவத்தை கண்டித்து, &#8220;எந்தவொரு மனித உரிமை மீறலுக்கும் கடுமையாக பதிலடி கொடுக்கப்படும்&#8221; என்று எச்சரித்துள்ளார்.</p>
<p>இந்த சம்பவம் கடந்த பெப்ரவரி 26 அன்று தெற்கு ஜியோல்லா மாகாணத்தின் நஜுவில் உள்ள செங்கல் தொழிற்சாலை ஒன்றில் நடந்துள்ளது. குறித்த தொழிற்சாலையில் இலங்கையர் பணிபுரிந்தார்.</p>
<p>தொழிற்சாலையில் இருந்த சக தொழிலாளர்கள் இலங்கை தொழிலாளியை செங்கல் குவியலில் கட்டி வைத்து, ஃபோர்க்லிஃப்ட் மூலம் தூக்கி, துன்புறுத்தி கேலி செய்ததாக தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>குறித்த தொழிலாளி டிசம்பர் 2024 இல் வேலை அனுமதி முறையின் கீழ் E-9 விசாவில் கொரியாவிற்கு சென்றதாகவும் சம்பவத்திற்கு முன்னர் சுமார் மூன்று மாதங்கள் தொழிற்சாலையில் பணிபுரிந்ததாகக் கூறப்படுகிறது.</p>
<p>இந்நிலையில், ஜியோனம் புலம்பெயர்ந்த தொழிலாளர் மனித உரிமைகள் வலையமைப்பு, தொழிலாளி வேலையில் தவறு இருந்ததாக தெரிவித்து சக தொழிலாளர்களால் துஷ்பிரயோகம் செய்யப்பட்டதாக தெரிவித்துள்ளது.</p>
<p>சம்பவம் நடந்த சில மாதங்களுக்குப் பின்னர், சம்பவத்தின் காணொளி சமூக ஊடகங்களில் பரப்பப்பட்டதுடன், கொரிய அரசாங்கம் இந்த விடயத்தில் உடனடி விசாரணையைத் தொடங்கியுள்ளது.</p>
<p>இந்த சம்பவத்தால் தான் கடுமையான மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளதாக இலங்கை தொழிலாளி உள்ளூர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட போது தெரிவித்துள்ளார்.</p>
<p>இந்நிலையில், குறித்து சம்பவம் தொடர்பில் தென் கொரிய ஜனாதிபதி கருத்து வெளியிடுகையில்,</p>
<p>&#8220;என் கண்களை என்னால் நம்ப முடியவில்லை. ஒரு ஜனநாயக நாட்டிலும், ஒரு கலாச்சார அதிகார மையத்திலும் இதுபோன்ற துஷ்பிரயோகம் நடக்கும் என்று நான் ஒருபோதும் நினைத்ததில்லை. இது மன்னிக்க முடியாத வன்முறைச் செயல்.</p>
<p>சிறுபான்மையினர் மற்றும் பாதிக்கப்படக்கூடிய நபருக்கு எதிரான மனித உரிமைகளை தெளிவாக மீறுவதாகும். புலம்பெயர்ந்த தொழிலாளியின் பாதிக்கப்படக்கூடிய சூழ்நிலையை யாரும் சுரண்டவோ அல்லது துஷ்பிரயோகம் செய்யவோ கூடாது என்பதை நாங்கள் உறுதிசெய்கிறோம்.</p>
<p>வெளிநாட்டில் பணிபுரியும் கொரிய குடிமக்களை நாங்கள் மதிக்கிறோம் மற்றும் புலம்பெயர்ந்த தொழிலாளர்களின் அடிப்படை உரிமைகளைப் பாதுகாக்கிறோம்.&#8221; என தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/sri-lankans-persecuted-in-south-korea-president-of-that-country-strongly-condemns/">தென் கொரியாவில் துன்புறுத்தப்பட்ட இலங்கையர் &#8211; அந்நாட்டு ஜனாதிபதி கடும் கண்டனம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தென் கொரியாவில் 176 பயணிகளுடன் சென்ற விமானம் தீப்பிடிப்பு</title>
		<link>https://oruvan.com/plane-carrying-176-passengers-catches-fire-in-south-korea/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Wed, 29 Jan 2025 09:15:09 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[தென் கொரியா]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=8803</guid>

					<description><![CDATA[<p>தென் கொரியாவில் 176 பயணிகளுடன் சென்ற விமானம் தீப்பிடித்ததுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கிம்ஹே விமான நிலையத்தில் பயணிகள் விமானம் ஒன்றே இவ்வாறு தீப்பிடித்ததுள்ளது. எனினும், பயணிகள் 176 பேரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதில் தென் 169 பயணிகள் மற்றும் ஏழு பணியாளர்களுடன் 176 பேரை ஏற்றிக்கொண்டு புறப்பட தயார் நிலையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது &#160;</p>
<p>The post <a href="https://oruvan.com/plane-carrying-176-passengers-catches-fire-in-south-korea/">தென் கொரியாவில் 176 பயணிகளுடன் சென்ற விமானம் தீப்பிடிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தென் கொரியாவில் 176 பயணிகளுடன் சென்ற விமானம் தீப்பிடித்ததுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>கிம்ஹே விமான நிலையத்தில் பயணிகள் விமானம் ஒன்றே இவ்வாறு தீப்பிடித்ததுள்ளது.</p>
<p>எனினும், பயணிகள் 176 பேரும் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p>
<p>இதில் தென் 169 பயணிகள் மற்றும் ஏழு பணியாளர்களுடன் 176 பேரை ஏற்றிக்கொண்டு புறப்பட தயார் நிலையில் இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/plane-carrying-176-passengers-catches-fire-in-south-korea/">தென் கொரியாவில் 176 பயணிகளுடன் சென்ற விமானம் தீப்பிடிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தென் கொரிய விமான விபத்து &#8211; அனைத்துப் பயணிகளும் உயிரிழப்பு (Update)</title>
		<link>https://oruvan.com/plane-crashes-at-muan-airport-in-south-korea-killing-47-people/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Sun, 29 Dec 2024 09:36:13 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Jeju Air flight]]></category>
		<category><![CDATA[Muan International Airport]]></category>
		<category><![CDATA[South Korea]]></category>
		<category><![CDATA[South Korea as plane crashes]]></category>
		<category><![CDATA[தென் கொரியா]]></category>
		<category><![CDATA[முவான் சர்வதேச விமான நிலையம்]]></category>
		<category><![CDATA[விமானம் விபத்து]]></category>
		<category><![CDATA[ஜெஜு ஏர்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=4408</guid>

					<description><![CDATA[<p>தென் கொரிய மண்ணில் நடந்த மிக மோசமான விமான விபத்தில், விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் இறந்துவிட்டதாக இப்போது கருதப்படுவதாக அதிகாரிகளை கோடிட்டு பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது. முவான் சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை ஒன்பது மணிக்கு இந்த விபத்து நடந்திருந்தது விமானத்தின் பின்புறத்தில் இருந்த விமான பணிப்பெண்கள் இருவர் மட்டுமம் உயிர் பிழைத்துள்ள நிலையில், அவர்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விமானத்தில் இருந்த பயணிகளில் பலர் கிறிஸ்துமஸ் விடுமுறையில் இருந்ததாக கருதப்படுகிறது. தென் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/plane-crashes-at-muan-airport-in-south-korea-killing-47-people/">தென் கொரிய விமான விபத்து &#8211; அனைத்துப் பயணிகளும் உயிரிழப்பு (Update)</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தென் கொரிய மண்ணில் நடந்த மிக மோசமான விமான விபத்தில், விமானத்தில் இருந்த அனைத்து பயணிகளும் இறந்துவிட்டதாக இப்போது கருதப்படுவதாக அதிகாரிகளை கோடிட்டு பிபிசி செய்தி வெளியிட்டுள்ளது.</p>
<p>முவான் சர்வதேச விமான நிலையத்தில் இன்று காலை ஒன்பது மணிக்கு இந்த விபத்து நடந்திருந்தது</p>
<p>விமானத்தின் பின்புறத்தில் இருந்த விமான பணிப்பெண்கள் இருவர் மட்டுமம் உயிர் பிழைத்துள்ள நிலையில், அவர்கள் மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>விமானத்தில் இருந்த பயணிகளில் பலர் கிறிஸ்துமஸ் விடுமுறையில் இருந்ததாக கருதப்படுகிறது.</p>
<p><strong>தென் கொரிய விமான விபத்து – 167 பேர் உயிரிழப்பு</strong></p>
<p>தென் கொரியாவின் முவான் விமான நிலையத்தில் இன்று காலை ஏற்பட்ட விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 167ஆக உயர்ந்துள்ளது.</p>
<p>மேலும், இந்த விபத்தில் 12 பேர் கொல்லப்பட்ருக்கலாம் எனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.</p>
<p><strong>தென் கொரிய விமான விபத்து – 120 பேர் உயிரிழப்பு </strong></p>
<p>தென் கொரியாவில் இன்று காலை ஏற்பட்ட விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 120ஆக உயர்ந்துள்ளது.</p>
<p>விபத்துக்குள்ளான விமானத்தில் இருந்தவர்களில் பெரும்பாலோர் குவாங்ஜு மற்றும் முவான் பகுதிகளைச் சேர்ந்த உள்ளூர்வாசிகள் என தென் கொரிய ஊடகங்கள் சுட்டிக்காட்டியுள்ளன.</p>
<p>இந்நிலையில், முவான் விமான நிலையத்தில் நடந்த சம்பவத்தால் பாதிக்கப்பட்ட அனைவரிடமும் ஆழ்ந்த மன்னிப்பு கோருவதாக விமான நிறுவனம் தெரிவித்துள்ளது.</p>
<p>எவ்வாறாயினும், கடந்த மூன்று தசாப்தங்களில் தென் கொரியாவில் நடந்த மிகவும் மோசமான விமான விபத்தாக இந்த விபத்து பதிவாகியுள்ளது.</p>
<p>இந்த விபத்தில் விமானம் அடையாளம் காணமுடியாத அளவிற்கு சேதம் ஏற்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>விமானத்தின்  இருந்து மீட்கப்பட்ட இரண்டு பணியாளர்கள் நகடுமையான காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று உள்ளூர் பொது சுகாதார மையத்தின் தலைவர் தெரிவித்தார்.</p>
<p>விபத்துக்குள்ளான இந்த விமானம் 2009ஆம் ஆண்டு தயாரிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>எவ்வாறாயினும், இந்த விபத்தில் பெரும்பாலானோர்கள் உயிரிழந்துவிட்டதாக தீயணைப்பு வீரர் ஒருவரை மேற்கோள்காட்டி யோன்ஹாப் செய்தி நிறுவனம் அறிக்கையிட்டுள்ளது.</p>
<p>போக்குவரத்து அமைச்சக தரவுகளின்படி, 1997ஆம் ஆண்டு குவாமில் 200க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்ட விமான விபத்துக்குப் பிறகு, தென் கொரிய விமான நிறுவனத்தால் ஏற்பட்ட மிக மோசமான விபத்து இதுவாகும்.</p>
<p><strong>உயிரிழப்பின் எண்ணிக்கை 85 ஆக உயர்வு</strong></p>
<p>தென் கொரியாவின் முவான் சர்வதேச விமான நிலையத்தில் ஏற்பட்ட விமான விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 85ஆக உயர்ந்துள்ளது.</p>
<p>இந்நிலையில், தொடர்ந்தும் மீட்பு பணிகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும், காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p>
<p>காயமடைந்தவர்களில் சிலரின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p>
<p><strong>தென் கொரியாவில் விமான விபத்து</strong></p>
<p>தென் கொரியாவில் ஞாயிற்றுக்கிழமை 181 பேருடன் சென்ற விமானம் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இதுவரை 47 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p>
<p>தரையிறங்கும் போது விமானம் ஓடுபாதையை விட்டு விலகிச் சென்றதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.</p>
<p>ரொய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்தின்படி, தென் கொரியாவின் முவான் சர்வதேச விமான நிலையத்தில் விமானம் ஒன்று ஓடுபாதையை விட்டு விலகி விபத்துக்குள்ளானது, இதில் 47 பேர் உயிரிழந்துள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.</p>
<p>175 பயணிகள் மற்றும் ஆறு விமானப் பணிப்பெண்களை ஏற்றிச் சென்ற ஜெஜு ஏர் விமானம், தாய்லாந்தின் பாங்காக்கில் இருந்து திரும்பிக் கொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.</p>
<p>விமானம் தரையிறங்கும் போது விபத்து ஏற்பட்டதாக யோன்ஹாப் செய்தி நிறுவனத்தை மேற்கோள் காட்டி ஞாயிற்றுக்கிழமை ரொய்ட்டர்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.</p>
<p>விபத்து நடந்த இடத்திற்கு விரைந்த மீட்பு குழுவினர், தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும், விமானத்திலிருந்து பயணிகளை வெளியேற்றியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இந்த விமானம் ஜெஜு ஏர் நிறுவனத்திற்கு சொந்தமான போயிங் 737-800 ஆகும். தரையிறங்கும் கியர் செயலிழந்ததால் விமானம் ஓடுபாதையை விட்டு விலகி வேலியில் மோதியதாக யோன்ஹாப் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.</p>
<p>விபத்துக்கான சரியான காரணம் குறித்து விசாரித்து வருவதாக அவசர அதிகாரிகள் தெரிவித்தனர். காணொளிகள் மற்றும் புகைப்படங்கள் விமானம் தரையிறங்கும் கியரை திறக்காமல் தரையிறங்கி இறுதியில் வெடிப்பதைக் காட்டியது.</p>
<p>இதேவேளை, கடந்த புதன்கிழமை கஜகஸ்தானின் அக்தாவ் அருகே அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் விபத்துக்குள்ளானது, இதில் விமானத்தில் இருந்த 67 பேரில் 38 பேர் கொல்லப்பட்டனர்.</p>
<p>அஜர்பைஜான் தலைநகர் பாகுவிலிருந்து அஜர்பைஜான் ஏர்லைன்ஸ் விமானம் J2-8243, ரஷ்யாவின் தெற்கு செச்சினியா பிராந்தியத்தில் உள்ள க்ரோஸ்னிக்கு சென்றுகொண்டிருந்த போது விபத்துக்குள்ளாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p>
<p><a href="https://x.com/i/status/1873180704819093671">https://x.com/i/status/1873180704819093671</a></p>
<p>The post <a href="https://oruvan.com/plane-crashes-at-muan-airport-in-south-korea-killing-47-people/">தென் கொரிய விமான விபத்து &#8211; அனைத்துப் பயணிகளும் உயிரிழப்பு (Update)</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
