<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>துப்பாக்கிச் சூடு Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/%e0%ae%a4%e0%af%81%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%bf%e0%ae%9a%e0%af%8d-%e0%ae%9a%e0%af%82%e0%ae%9f%e0%af%81/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/துப்பாக்கிச்-சூடு/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Tue, 17 Feb 2026 03:53:24 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>துப்பாக்கிச் சூடு Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/துப்பாக்கிச்-சூடு/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>சட்டத்தரணி தம்பதி படுகொலை: துப்பாக்கிதாரிகளுக்கு உதவிய சகோதரர்கள் கைது</title>
		<link>https://oruvan.com/lawyer-couple-murdered-brothers-who-helped-gunmen-arrested/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Tue, 17 Feb 2026 03:53:24 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#police]]></category>
		<category><![CDATA[அக்குரேகொட]]></category>
		<category><![CDATA[துப்பாக்கிச் சூடு]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=45191</guid>

					<description><![CDATA[<p>தலங்கம, அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி புத்திக மல்லவஆராச்சி மற்றும் அவரது மனைவி நிசன்சலா ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், நவகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 20 மற்றும் 24 வயதுடைய இரு சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினர், கொட்டாவை பகுதியில் வைத்து காரில் பயணித்துக் கொண்டிருந்த போது இவர்களைக் கைது செய்துள்ளனர். இவர்கள் வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள பாதாள உலகக் குற்றவாளிகளான &#8220;டுடூ&#8221; மற்றும் &#8220;மோதர நிபுண&#8221; ஆகியோரின் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்கள் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/lawyer-couple-murdered-brothers-who-helped-gunmen-arrested/">சட்டத்தரணி தம்பதி படுகொலை: துப்பாக்கிதாரிகளுக்கு உதவிய சகோதரர்கள் கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தலங்கம, அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணி புத்திக மல்லவஆராச்சி மற்றும் அவரது மனைவி நிசன்சலா ஆகியோர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் தொடர்பில், நவகமுவ பிரதேசத்தைச் சேர்ந்த 20 மற்றும் 24 வயதுடைய இரு சகோதரர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.</p>
<p>மேல் மாகாண தெற்கு குற்றத்தடுப்புப் பிரிவினர், கொட்டாவை பகுதியில் வைத்து காரில் பயணித்துக் கொண்டிருந்த போது இவர்களைக் கைது செய்துள்ளனர்.</p>
<p>இவர்கள் வெளிநாட்டில் தலைமறைவாக உள்ள பாதாள உலகக் குற்றவாளிகளான &#8220;டுடூ&#8221; மற்றும் &#8220;மோதர நிபுண&#8221; ஆகியோரின் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபடுபவர்கள் என விசாரணையில் தெரியவந்துள்ளது</p>
<p>கைது செய்யப்பட்ட நதுன் கவிஷ மற்றும் சனோஜ் கோகில ஆகிய இருவரும், வெளிநாட்டிலிருந்து வந்த உத்தரவின் பேரில் கொட்டாவையில் கார் ஒன்றை வாடகைக்கு எடுத்துள்ளனர்.</p>
<p>கொட்டிகாவத்தையில் வைத்து ஒருவரிடமிருந்து துப்பாக்கி அடங்கிய பொதியைப் பெற்று, அதனைத் துப்பாக்கிதாரிகள் வந்த காருக்கு மாற்றியுள்ளனர்.</p>
<p>மேலும், சட்டத்தரணி தனது மனைவியை அலுவலகத்திலிருந்து அழைத்து வரும் நேரத்தை ஒரு வார காலமாக இவர்கள் கண்காணித்து வந்துள்ளனர்.</p>
<p>சம்பவத்தன்று சூப்பர் மார்க்கெட் வாகனத் தரிப்பிடத்தில் சட்டத்தரணியின் கார் நிறுத்தப்பட்டிருந்த தகவலைத் துப்பாக்கிதாரிகளுக்கு வழங்கியதும் இவர்களே என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்</p>
<p>இந்தக் கொடூரக் கொலைக்கு உதவியமைக்காக இந்தச் சகோதரர்களுக்குப் பணம் எதுவும் வழங்கப்படவில்லை என்பதும், அதற்குப் பதிலாக அவர்களுக்கு &#8220;ஐஸ்&#8221; போதைப்பொருள் வழங்கப்பட்டிருப்பதும் விசாரணையில் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.</p>
<p>துப்பாக்கிதாரிகளுக்குத் தேவையான தங்குமிட வசதிகள் மற்றும் போதைப்பொருட்களை பன்னிப்பிட்டிய பகுதியில் உள்ள ஹோட்டல் ஒன்றில் வைத்து இந்தச் சகோதரர்களே ஏற்பாடு செய்து கொடுத்துள்ளனர்.</p>
<p>வாடகைக்கு எடுத்த காரை மீண்டும் ஒப்படைக்கச் சென்ற போதே பொலிஸார் இவர்களைப் பின்தொடர்ந்து சென்று மடக்கிப் பிடித்தனர்</p>
<p>இதேவேளை, துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்த சட்டத்தரணி புத்திக மல்லவஆராச்சி மற்றும் அவரது மனைவியின் இறுதிக்கிரியைகள், நேற்று (16) பிற்பகல் பிடிகல, கொடமுன குடும்ப மயானத்தில் இடம்பெற்றன.</p>
<p>இதில் பெருந்திரளான சட்டத்தரணிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினர்.</p>
<p>இக்கொலையுடன் தொடர்புடைய ஏனைய நபர்களைக் கைது செய்ய பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்</p>
<p>The post <a href="https://oruvan.com/lawyer-couple-murdered-brothers-who-helped-gunmen-arrested/">சட்டத்தரணி தம்பதி படுகொலை: துப்பாக்கிதாரிகளுக்கு உதவிய சகோதரர்கள் கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>நாகொட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதி மீது துப்பாக்கிச் சூடு!</title>
		<link>https://oruvan.com/shots-fired-at-prisoner-receiving-treatment-at-nagoda-hospital/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 31 Dec 2025 03:45:11 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Nagoda]]></category>
		<category><![CDATA[துப்பாக்கிச் சூடு]]></category>
		<category><![CDATA[நாகொட]]></category>
		<category><![CDATA[நாகொட வைத்தியசாலை]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=42010</guid>

					<description><![CDATA[<p>நாகொட போதனா வைத்தியசாலையில் இன்று (31) காலை நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறைக் கைதி ஒருவர் காயமடைந்துள்ளார். இன்று (31) காலை சிறைச்சாலை கைதி ஒருவரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. மருத்துவமனையின் 14வது விடுதியில் சிகிச்சை பெற்று வந்த கைதி மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டபோது சிறைச்சாலை அதிகாரிகளும் உடனிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. காயமடைந்த கைதி களுத்துறை சிறைச்சாலையின் கைதி என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். காலை 6.00 மணியளவில் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/shots-fired-at-prisoner-receiving-treatment-at-nagoda-hospital/">நாகொட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதி மீது துப்பாக்கிச் சூடு!</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>நாகொட போதனா வைத்தியசாலையில் இன்று (31) காலை நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த சிறைக் கைதி ஒருவர் காயமடைந்துள்ளார்.</p>
<p>இன்று (31) காலை சிறைச்சாலை கைதி ஒருவரை குறிவைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>மருத்துவமனையின் 14வது விடுதியில் சிகிச்சை பெற்று வந்த கைதி மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டபோது சிறைச்சாலை அதிகாரிகளும் உடனிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>காயமடைந்த கைதி களுத்துறை சிறைச்சாலையின் கைதி என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர். காலை 6.00 மணியளவில் துப்பாக்கிச் சூடு நடந்ததாக வைத்தியசாலை இயக்குநர் தெரிவித்துள்ளார்.</p>
<p>அறுவை சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த கைதியின் வயிற்றுப் பகுதியில் காயம் ஏற்பட்டதாக வைத்தியசாலையின் இயக்குநர் தெரிவித்தார்.</p>
<p>அதன்படி, கைதி அறுவை சிகிச்சைக்காக அழைத்துச் செல்லப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. துப்பாக்கிச் சூடு நடத்தியவரை கைது செய்ய விசாரணைகள் நடந்து வருகின்றன.</p>
<p>The post <a href="https://oruvan.com/shots-fired-at-prisoner-receiving-treatment-at-nagoda-hospital/">நாகொட வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த கைதி மீது துப்பாக்கிச் சூடு!</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இலங்கையில் நடக்கும் துப்பாக்கிச் சூடுகள் &#8211; துப்பாக்கிதாரிகள் குறித்து வெளியான தகவல்</title>
		<link>https://oruvan.com/shootings-in-sri-lanka-information-released-about-the-gunmen/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Thu, 30 Oct 2025 07:06:15 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[#oruvan #news]]></category>
		<category><![CDATA[#police]]></category>
		<category><![CDATA[Gun Shooting]]></category>
		<category><![CDATA[sri lanka]]></category>
		<category><![CDATA[ஒருவன்]]></category>
		<category><![CDATA[ஒருவன் செய்திகள்]]></category>
		<category><![CDATA[துப்பாக்கிச் சூடு]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=36848</guid>

					<description><![CDATA[<p>நாடு முழுவதும் பதிவான பெரும்பாலான துப்பாக்கிச் சூடுகள் கூலிக்கு அமர்த்தப்பட்ட துப்பாக்கிதாரிகளால் நடத்தப்பட்டதாகவும், அவர்களில் பலருக்கு பாதிக்கப்பட்டவர்களுடன் எந்த தொடர்பும் இல்லை என்றும் சமீபத்திய பொலிஸ் விசாரணைகள் தெரிவிக்கின்றன. புலனாய்வாளர்களின் கூற்றுப்படி, இந்த ஒப்பந்தக் கொலையாளிகள் பெரும்பாலும் போதைப்பொருளுக்கு அடிமையான நபர்களாக உள்ளனர். அவர்கள் பணம் சம்பாதிப்பதற்காக, முதன்மையாக தங்கள் போதைப்பொருள் பழக்கத்திற்கு நிதியை பெற்றுக்கொள்ள துப்பாக்கிச் சூடு நடத்த ஒப்புக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பல கொலைகள் 400,000 ரூபா முதல் 500,000 ரூபா வரை மட்டுமே செலவில் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/shootings-in-sri-lanka-information-released-about-the-gunmen/">இலங்கையில் நடக்கும் துப்பாக்கிச் சூடுகள் &#8211; துப்பாக்கிதாரிகள் குறித்து வெளியான தகவல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>நாடு முழுவதும் பதிவான பெரும்பாலான துப்பாக்கிச் சூடுகள் கூலிக்கு அமர்த்தப்பட்ட துப்பாக்கிதாரிகளால் நடத்தப்பட்டதாகவும், அவர்களில் பலருக்கு பாதிக்கப்பட்டவர்களுடன் எந்த தொடர்பும் இல்லை என்றும் சமீபத்திய பொலிஸ் விசாரணைகள் தெரிவிக்கின்றன.</p>
<p>புலனாய்வாளர்களின் கூற்றுப்படி, இந்த ஒப்பந்தக் கொலையாளிகள் பெரும்பாலும் போதைப்பொருளுக்கு அடிமையான நபர்களாக உள்ளனர்.</p>
<p>அவர்கள் பணம் சம்பாதிப்பதற்காக, முதன்மையாக தங்கள் போதைப்பொருள் பழக்கத்திற்கு நிதியை பெற்றுக்கொள்ள துப்பாக்கிச் சூடு நடத்த ஒப்புக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>பல கொலைகள் 400,000 ரூபா முதல் 500,000 ரூபா வரை மட்டுமே செலவில் செய்யப்படுவதாகவும், சில சந்தர்ப்பங்களில், துப்பாக்கிச் சூடு நடத்தியவர்களுக்கு பணத்திற்குப் பதிலாக போதைப்பொருள் வழங்கப்பட்டதாகவும் பொலிஸ் வட்டாரங்கள் தெரிவித்தன.</p>
<p>இந்த ஆண்டு ஜனவரி முதல், இலங்கையில் 100க்கும் மேற்பட்ட துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் நடந்துள்ளன, இதன் விளைவாக 52 பேர் உயிரிழந்துள்ளனர்.</p>
<p>இந்த ஆண்டு பதிவான 103 துப்பாக்கிச் சூடு சம்பவங்களில் 76 சம்பவங்கள் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச் செயல்களுடன் தொடர்புடையவை என்று பொலிஸார் தெரிவித்தனர்.</p>
<p>ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவியல் வலைப்பின்னல்களை அகற்ற தொடர்ச்சியான நடவடிக்கைகள் மற்றும் சிறப்புப் பணிக்குழுக்கள் நிறுத்தப்பட்ட போதிலும், இதனை கட்டுப்படுத்த இன்னும் தீவிரமான நடவடிக்கைகள் தேவை என்பதை அதிகாரிகள் ஒப்புக்கொண்டுள்ளனர்.</p>
<p>போதைப்பொருளுக்கு அடிமையானவர்களை அடையாளம் காண சிறப்பு சோதனைகள் நடத்தப்படும் என்றும், பின்னர் அவர்கள் மறுவாழ்வுக்கு அனுப்பப்படுவார்கள் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.</p>
<p>இருப்பினும், குற்றச் செயல்களில் ஈடுபட்டதாகக் கண்டறியப்பட்டவர்களுக்கு எதிராக முதலில் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டார்.</p>
<p>ஒப்பந்தக் கொலைகள் அதிகரிப்பதைத் தடுக்க, குறிப்பாக போதைப்பொருள் அடிமைத்தனம் மற்றும் பாதாள உலக நபர்களால் அடிமையானவர்களைச் சுரண்டுவது போன்ற மூல காரணங்களைக் கையாள்வது அவசியம் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/shootings-in-sri-lanka-information-released-about-the-gunmen/">இலங்கையில் நடக்கும் துப்பாக்கிச் சூடுகள் &#8211; துப்பாக்கிதாரிகள் குறித்து வெளியான தகவல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>லசந்த விக்ரமசேகர படுகொலை!! சிசிடிவி காட்சிகளைப் பயன்படுத்தி விசாரணை</title>
		<link>https://oruvan.com/lasantha-wickramasekera-murder-investigation-using-cctv-footage/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Thu, 23 Oct 2025 04:13:44 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[#oruvan #news]]></category>
		<category><![CDATA[Weligama PS]]></category>
		<category><![CDATA[துப்பாக்கிச் சூடு]]></category>
		<category><![CDATA[லசந்த விக்ரமசேகர]]></category>
		<category><![CDATA[வெலிகம]]></category>
		<category><![CDATA[வெலிகம பிரதேச சபை]]></category>
		<category><![CDATA[வெலிகம பிரதேச சபை துப்பாக்கிச் சூடு]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=36109</guid>

					<description><![CDATA[<p>வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலை தொடர்பாக சிசிடிவி காட்சிகளைப் பயன்படுத்தி விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இதன்படி, நான்கு பொலிஸ் குழுக்கள் மூலம் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக தென் மாகாணத்திற்குப் பொறுப்பான மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜெயலத் தெரிவித்தார். நேற்று (22) காலை, வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்ரமசேகர, அவரது உத்தியோகபூர்வ அலுவலகத்தில் இனந்தெரியாத துப்பாக்கிதாரியால் சுட்டுக் கொல்லப்பட்டார். சந்தேகநபர்கள் வெள்ளைச் சட்டை அணிந்து, கறுப்பு முகமூடி [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/lasantha-wickramasekera-murder-investigation-using-cctv-footage/">லசந்த விக்ரமசேகர படுகொலை!! சிசிடிவி காட்சிகளைப் பயன்படுத்தி விசாரணை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>வெலிகம பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் கொலை தொடர்பாக சிசிடிவி காட்சிகளைப் பயன்படுத்தி விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p>
<p>இதன்படி, நான்கு பொலிஸ் குழுக்கள் மூலம் விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக தென் மாகாணத்திற்குப் பொறுப்பான மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜெயலத் தெரிவித்தார்.</p>
<p>நேற்று (22) காலை, வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்ரமசேகர, அவரது உத்தியோகபூர்வ அலுவலகத்தில் இனந்தெரியாத துப்பாக்கிதாரியால் சுட்டுக் கொல்லப்பட்டார்.</p>
<p>சந்தேகநபர்கள் வெள்ளைச் சட்டை அணிந்து, கறுப்பு முகமூடி அணிந்தபடி, அலுவலகத்திற்குள் நுழைந்து துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளனர்.</p>
<p>உத்தியோகபூர்வ இருக்கையில் இருந்த தலைவர் லசந்த விக்ரமசேகரவை நோக்கி துப்பாக்கிச் சூடு நடத்தியவர் சுமார் நான்கு முறை துப்பாக்கிச் சூடு நடத்தியதையும், மற்றொரு நபருடன் மோட்டார் சைக்கிளில் தப்பிச் செல்வதையும் சிசிடிவி காட்சிகள் காட்டுகின்றன.</p>
<p>துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த தலைவர், மாத்தறை மாவட்ட பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.</p>
<p>துப்பாக்கிச் சூட்டின் விளைவாக பிரதேச சபைத் தலைவர் லசந்த விக்ரமசேகரவின் தலை, கழுத்து மற்றும் மார்புப் பகுதியில் காயம் ஏற்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p>
<p>அதன்படி, தென் மாகாணத்திற்குப் பொறுப்பான மூத்த பிரதிப் பொலிஸ் மா அதிபர் கித்சிறி ஜயலத்தின் நேரடி மேற்பார்வையின் கீழ் நான்கு பொலிஸ் குழுக்கள் சம்பவம் குறித்து விசாரணைகளைத் தொடங்கியுள்ளன.</p>
<p>எனினும், இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை எந்த சந்தேக நபரும் கைது செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது.</p>
<p>இதற்கிடையில், பூசா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மிதிகம ருவானின் பிரிவினரால் இந்தக் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.</p>
<p>தனக்கு எதிராக விடுக்கப்படும் அச்சுறுத்தல்கள் குறித்து உரிய நடவடிக்கைகளை எடுக்குமாறு கோரி லசந்த விக்ரமசேகர ஆகஸ்ட் 29 ஆம் தேதி ஐஜிபிக்கு கடிதம் அனுப்பியதாக தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>இதற்கிடையில், வெலிகம பிரதேச சபைத் தலைவரின் கொலை தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் நேற்று செவ்வாய்க்கிழமை இரவு சிறப்பு கலந்துரையாடல் நடைபெற்றது.</p>
<p>எதிர்க்கட்சித் தலைவர் அலுவலகத்தில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில் ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் உட்பட பல மூத்த உறுப்பினர்கள் கலந்து கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>கலந்துரையாடலுக்குப் பிறகு ஊடகங்களுக்குப் பேசிய ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார, இது ஒரு அரசியல் படுகொலை என்று கூறினார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/lasantha-wickramasekera-murder-investigation-using-cctv-footage/">லசந்த விக்ரமசேகர படுகொலை!! சிசிடிவி காட்சிகளைப் பயன்படுத்தி விசாரணை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சிட்னியில் நடந்த துப்பாகிச் சூட்டு சம்பவத்தில் 20 பேர் படுகாயம் – 60 வயதான சந்தேகநபர் கைது</title>
		<link>https://oruvan.com/20-people-injured-in-sydney-shooting-60-year-old-suspect-arrested/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 06 Oct 2025 06:41:40 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[அவுஸ்திரேலியா]]></category>
		<category><![CDATA[சிட்னி]]></category>
		<category><![CDATA[துப்பாக்கிச் சூடு]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=34539</guid>

					<description><![CDATA[<p>அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் குறைந்தது 20 பேர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். காயமடைந்தவர்களில் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் நியூ சவுத் வேல்ஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்தசம் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாகவும், துப்பாக்கிதாரி சுமார் 100 முறை துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர். 60 வயது மதிக்கத்தக்க சந்தேகநபர் சிட்னி நகரின் மேற்கில் உள்ள ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள வீதியில் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/20-people-injured-in-sydney-shooting-60-year-old-suspect-arrested/">சிட்னியில் நடந்த துப்பாகிச் சூட்டு சம்பவத்தில் 20 பேர் படுகாயம் – 60 வயதான சந்தேகநபர் கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>அவுஸ்திரேலியாவின் சிட்னி நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் குறைந்தது 20 பேர் படுகாயமடைந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p>
<p>காயமடைந்தவர்களில் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் நியூ சவுத் வேல்ஸ் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p>
<p>இந்தசம் சம்பவம் நேற்று மாலை இடம்பெற்றுள்ளதாகவும், துப்பாக்கிதாரி சுமார் 100 முறை துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p>
<p>60 வயது மதிக்கத்தக்க சந்தேகநபர் சிட்னி நகரின் மேற்கில் உள்ள ஆள் நடமாட்டம் அதிகம் உள்ள வீதியில் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார்.</p>
<p>எவ்வாறாயினும், சந்தேகநபர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இந்தச் துப்பாக்கிச் சூட்டு சம்பத்திற்கான காரணம் தெரியவரவில்லை.  காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p>
<p>மேலும், துப்பாக்கிச் சூடு நடத்தியவரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p>
<p>துப்பாக்கிச் சூடு நடத்தியதாகக் கூறப்படும் நபர் மீது இதுவரை எந்தக் குற்றச்சாட்டும் சுமத்தப்படவில்லை.</p>
<p>துப்பாக்கிதாரியின் நோக்கம் தெளிவாகத் தெரியவில்லை, எனினும், இந்தச் சம்பம் &#8220;பயங்கரவாத நடவடிக்கை இல்லை என்பதை பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளளனர்.</p>
<p>சம்பம்வம் குறித்து நியூ சவுத் வேல்ஸ்  பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/20-people-injured-in-sydney-shooting-60-year-old-suspect-arrested/">சிட்னியில் நடந்த துப்பாகிச் சூட்டு சம்பவத்தில் 20 பேர் படுகாயம் – 60 வயதான சந்தேகநபர் கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>எல்பிட்டிய பகுதியில் துப்பாக்கிச் சூடு</title>
		<link>https://oruvan.com/shooting-in-elpitiya-area/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Sun, 05 Oct 2025 03:56:21 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Elpitiya]]></category>
		<category><![CDATA[எல்பிட்டிய]]></category>
		<category><![CDATA[துப்பாக்கிச் சூடு]]></category>
		<category><![CDATA[பொலிஸார்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=34416</guid>

					<description><![CDATA[<p>எல்பிட்டிய, ஓமத்த பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது நேற்று (04) இரவு மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர். துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயமோ அல்லது உயிரிழப்போ ஏற்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர். எனினும், வீட்டின் ஜன்னல் ஒன்று சேதமடைந்துள்ளது. துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை. அதே நேரத்தில் இந்த சம்பவம் அப்பகுதியில் போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து பொலிஸாருக்கு தகவல் அளித்ததற்கு பழிவாங்கும் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/shooting-in-elpitiya-area/">எல்பிட்டிய பகுதியில் துப்பாக்கிச் சூடு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>எல்பிட்டிய, ஓமத்த பகுதியில் உள்ள வீடு ஒன்றின் மீது நேற்று (04) இரவு மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஒருவர் துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவித்தனர்.</p>
<p>துப்பாக்கிச் சூட்டில் யாருக்கும் காயமோ அல்லது உயிரிழப்போ ஏற்படவில்லை என்று பொலிஸார் தெரிவித்தனர். எனினும், வீட்டின் ஜன்னல் ஒன்று சேதமடைந்துள்ளது.</p>
<p>துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இன்னும் வெளியாகவில்லை.</p>
<p>அதே நேரத்தில் இந்த சம்பவம் அப்பகுதியில் போதைப்பொருள் தொடர்பான நடவடிக்கைகள் குறித்து பொலிஸாருக்கு தகவல் அளித்ததற்கு பழிவாங்கும் விதமாக நடத்தப்பட்டிருக்கலாம் என்று பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.</p>
<p>சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை எல்பிட்டிய பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/shooting-in-elpitiya-area/">எல்பிட்டிய பகுதியில் துப்பாக்கிச் சூடு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>கம்பஹா பொது பேருந்து நிலையம் அருகே துப்பாக்கிச் சூடு</title>
		<link>https://oruvan.com/shooting-near-gampaha-public-bus-stand/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 16 Apr 2025 02:12:21 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#police]]></category>
		<category><![CDATA[Gampaha]]></category>
		<category><![CDATA[Gun Shooting]]></category>
		<category><![CDATA[கம்பஹா]]></category>
		<category><![CDATA[துப்பாக்கிச் சூடு]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=17510</guid>

					<description><![CDATA[<p>கம்பஹா நகரில் உள்ள பொது பேருந்து நிலையம் அருகே நேற்று இரவு துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தகவல்களின்படி, மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் சிறிய லொறி ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், லொறியில் இருந்த இருவர் பாதுகாப்புக்காக வாகனத்தை விட்டு இறங்கி அருகிலுள்ள கடைக்குள் ஓடிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அதிர்ஷ்டவசமாக, இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை. [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/shooting-near-gampaha-public-bus-stand/">கம்பஹா பொது பேருந்து நிலையம் அருகே துப்பாக்கிச் சூடு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>கம்பஹா நகரில் உள்ள பொது பேருந்து நிலையம் அருகே நேற்று இரவு துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p>
<p>தகவல்களின்படி, மோட்டார் சைக்கிளில் வந்த இரண்டு பேர் சிறிய லொறி ஒன்றின் மீது துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>எனினும், லொறியில் இருந்த இருவர் பாதுகாப்புக்காக வாகனத்தை விட்டு இறங்கி அருகிலுள்ள கடைக்குள் ஓடிச் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>அதிர்ஷ்டவசமாக, இந்த சம்பவத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை. துப்பாக்கிச் சூட்டுக்கான காரணம் இதுவரை கண்டறியப்படவில்லை.</p>
<p>இந்நிலையில், சந்தேக நபர்களை அடையாளம் கண்டு கைது செய்ய கம்பஹா பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/shooting-near-gampaha-public-bus-stand/">கம்பஹா பொது பேருந்து நிலையம் அருகே துப்பாக்கிச் சூடு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>துப்பாக்கிச் சூடு &#8211; மூவர் பலி</title>
		<link>https://oruvan.com/shooting-three-killed/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Sat, 01 Feb 2025 01:54:14 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[துப்பாக்கிச் சூடு]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=8971</guid>

					<description><![CDATA[<p>காலி, ஹினிதும, பனங்கல பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர். மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் T56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி தாக்குதலை மேற்கொண்டுள்ளனர். துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில், உயிரிழந்த மூவரும் மதுபானம் அருந்திக்கொண்டு இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது​. சம்பவம் தொடர்பான விரிவான விசாரணைகளை ஹினிதும பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/shooting-three-killed/">துப்பாக்கிச் சூடு &#8211; மூவர் பலி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>காலி, ஹினிதும, பனங்கல பிரதேசத்தில் துப்பாக்கிச் சூட்டு சம்பவமொன்று நேற்று இடம்பெற்றுள்ளது.</p>
<p>இந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.</p>
<p>மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் T56 ரக துப்பாக்கியை பயன்படுத்தி தாக்குதலை மேற்கொண்டுள்ளனர்.</p>
<p>துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்ட சந்தர்ப்பத்தில், உயிரிழந்த மூவரும் மதுபானம் அருந்திக்கொண்டு இருந்ததாக தெரிவிக்கப்படுகிறது​.</p>
<p>சம்பவம் தொடர்பான விரிவான விசாரணைகளை ஹினிதும பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/shooting-three-killed/">துப்பாக்கிச் சூடு &#8211; மூவர் பலி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மன்னார் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு பொலிஸாரே பொறுப்பு கூற வேண்டும் &#8211; செல்வம் எம்.பி</title>
		<link>https://oruvan.com/police-should-be-held-responsible-for-mannar-shooting-incident-selvam-mp/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Fri, 17 Jan 2025 02:22:57 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[Mannar]]></category>
		<category><![CDATA[Mannar Court]]></category>
		<category><![CDATA[செல்வம் அடைக்கலநாதன்]]></category>
		<category><![CDATA[துப்பாக்கிச் சூடு]]></category>
		<category><![CDATA[மன்னார்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=7167</guid>

					<description><![CDATA[<p>மன்னார் நீதிமன்றத்திற்கு முன்னால் நேற்று (16) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு பொலிஸார் முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். அறிக்கை ஒன்றை விடுத்துள்ள அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். மன்னார் நீதிமன்றத்திற்கு முன் நடைபெற்ற துப்பாக்கி பிரயோகம் உண்மையிலேயே கண்டிக்கத்தக்க ஒரு விடயம் என்பதுடன், காட்டு மிராண்டித்தனமான ஒரு விடயமாகும். இந்த மிலேச்சத்தனமான செயலுக்கு மன்னாரில் உள்ள பொலிஸார் முழுப்பொறுப்பையும் எடுக்க வேண்டும். நொச்சிகுளம் மக்கள் தொடர்ந்து [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/police-should-be-held-responsible-for-mannar-shooting-incident-selvam-mp/">மன்னார் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு பொலிஸாரே பொறுப்பு கூற வேண்டும் &#8211; செல்வம் எம்.பி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>மன்னார் நீதிமன்றத்திற்கு முன்னால் நேற்று (16) இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு பொலிஸார் முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார்.</p>
<p>அறிக்கை ஒன்றை விடுத்துள்ள அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>மன்னார் நீதிமன்றத்திற்கு முன் நடைபெற்ற துப்பாக்கி பிரயோகம் உண்மையிலேயே கண்டிக்கத்தக்க ஒரு விடயம் என்பதுடன், காட்டு மிராண்டித்தனமான ஒரு விடயமாகும்.</p>
<p>இந்த மிலேச்சத்தனமான செயலுக்கு மன்னாரில் உள்ள பொலிஸார் முழுப்பொறுப்பையும் எடுக்க வேண்டும்.</p>
<p>நொச்சிகுளம் மக்கள் தொடர்ந்து பழிவாங்கப்படுகிறார்கள். இன்றும் தொடர்ச்சியாக  நொச்சிகுளம் கிராமத்தின் மக்கள் படிப்படியாக படுகொலை செய்யப்படுகின்ற சூழல் காணப்படுகிறது .</p>
<p>இந்த விடயத்தை கடந்த அரசாங்கத்தில் மக்கள் பாதுகாப்பு தொடர்பாடல் அமைச்சரோடு நான் நேரடியாக பேசியிருந்தேன். காரணம் துப்பாக்கி பாவிக்கப்பட்டுள்ளது. முன்னர் ஏ.கே 47 பாவிக்கப்பட்டுள்ளது .</p>
<p>இப்பொழுது எந்த வகையான துப்பாக்கி பாவிக்கப்பட்டுள்ளது என்பது தெரியப் படவில்லை. இந்த துப்பாக்கி பிரயோகம் நொச்சிகுளம் மக்களை பார்த்து தான் பிரயோகிக்கப்படுகிறது என்பது எல்லோருக்கும் தெரிந்த விடயம்.</p>
<p>மன்னார் பொலிஸாருடைய மெத்தனப் போக்கும் இதில் அடங்கியிருக்கிறது. அந்த கிராமத்து மக்கள் அச்சத்தோடு வாழும் சூழலிலே மீண்டும் மன்னார் நீதி மன்றத்திற்கு முன் இந்த படுகொலைகள் நடைபெற்றிருக்கிறது. ஆகவே இது கண்டிக்கத்தக்கது.</p>
<p>இவ்விடயம் சம்பந்தமாக ஜனாதிபதி அவர்களினதும் கவனத்திற்கும், நாடாளுமன்ற கவனத்திற்கும் முக்கியமான விடயமாக கொண்டு வரவுள்ளேன். ஏனென்றால் இது தொடர்ச்சியாக நடைபெறுகிற விடயமாக இருக்கிறது.</p>
<p>போன உயிர்களை மீளப் பெற முடியாது. துப்பாக்கி பிரயோகத்தால் உயிர் நீத்த குடும்பங்கள் பல அந்த கிராம மக்கள் அச்சத்தோடு வாழுகின்ற நிலைமை தொடர்கின்றது.</p>
<p>ஆகவே இதன் முழுப்பொறுப்பையும் பொலிஸார் எடுக்க வேண்டும் .இந்த சம்பவத்திற்கு காரணம் பொலிஸாருடைய கவனயீனம் அசமந்தப்போக்கு என்பதை இங்கு நான் குறிப்பிட விரும்புகிறேன்.</p>
<p>முப்படைகள் அங்கே பாதுகாப்பு நடவடிக்கையில் இருக்கும் போது இவ்வாறான விடயங்கள் நடைபெறுவது கேள்விக்குறியாகவே இருக்கிறது. அந்த வகையில் இவ்வாறான சம்பவங்கள் நிறுத்தப்பட வேண்டிய விடயங்களாகும்.</p>
<p>சம்மந்தப்பட்டவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்ட வேண்டும். இதற்கான குழு அடங்கிய புலனாய்வு துறை நடவடிக்கைகளை பொலிஸார் உடனடியாக ஆரம்பித்து செயலில் இறங்க வேண்டும்.</p>
<p>மன்னாரில் உள்ள பொலிஸாரை மட்டும் வைத்து இதற்குரிய நடவடிக்கைகளை செய்து கொள்வது முடியாத காரியமாகும். எனவே கொழும்பில் இருந்து விசேட குழு அடங்கிய பொலிஸார் வரவழைக்கப்பட்ட வேண்டும்.</p>
<p>பொலிஸார் அதற்கான நடவடிக்கையை துரிதப்படுத்த வேண்டுவதுடன் சம்பந்தப்பட்டவர்கள் உடனடியாக கைது செய்யப்பட்டு சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என்பதே எனது கோரிக்கை என அவர்  தனது அறிக்கையில் கூறியுள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/police-should-be-held-responsible-for-mannar-shooting-incident-selvam-mp/">மன்னார் துப்பாக்கிச் சூட்டு சம்பவத்திற்கு பொலிஸாரே பொறுப்பு கூற வேண்டும் &#8211; செல்வம் எம்.பி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>கொழும்பில் துப்பாக்கிச் சூடு &#8211; இரண்டாவது நபரும் உயிரிழப்பு (Update)</title>
		<link>https://oruvan.com/shooting-in-mount-lavinia-colombo-one-person-killed/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Tue, 07 Jan 2025 02:56:43 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[Colombo]]></category>
		<category><![CDATA[Gun Shooting]]></category>
		<category><![CDATA[Mount Lavinia]]></category>
		<category><![CDATA[Shooting in Mount Lavinia]]></category>
		<category><![CDATA[உயிரிழப்பு]]></category>
		<category><![CDATA[கல்கிஸ்ஸ]]></category>
		<category><![CDATA[கொழும்பு]]></category>
		<category><![CDATA[துப்பாக்கிச் சூடு]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=5688</guid>

					<description><![CDATA[<p>கல்கிஸ்ஸ வட்டாரபால வீதி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இரண்டாவது நபரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 20 வயதுடைய ஒருவர் துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார். எனினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பில் துப்பாக்கிச் சூடு &#8211; ஒருவர் உயிரிழப்பு கொழும்பு, கல்கிஸ்ஸ வட்டாரபால வீதி பகுதியில் இனந்தெரியாத துப்பாக்கிதாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார். காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/shooting-in-mount-lavinia-colombo-one-person-killed/">கொழும்பில் துப்பாக்கிச் சூடு &#8211; இரண்டாவது நபரும் உயிரிழப்பு (Update)</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>கல்கிஸ்ஸ வட்டாரபால வீதி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்த இரண்டாவது நபரும் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>20 வயதுடைய ஒருவர் துப்பாக்கிச் சூடு சம்பவத்தைத் தொடர்ந்து காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டார்.</p>
<p>எனினும், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p><strong>கொழும்பில் துப்பாக்கிச் சூடு &#8211; ஒருவர் உயிரிழப்பு</strong></p>
<p>கொழும்பு, கல்கிஸ்ஸ வட்டாரபால வீதி பகுதியில் இனந்தெரியாத துப்பாக்கிதாரிகள் மேற்கொண்ட துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.</p>
<p>காயமடைந்தவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p>
<p>துப்பாக்கிச் சூட்டில் உயிரிழந்தவர் கல்கிஸ்ஸ வட்டாரபால வீதியைச் சேர்ந்த 36 வயதுடையவர் எனவும், காயமடைந்தவர் 20 வயதுடையவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதற்கான காரணம் இதுவரை வெளியாகவில்லை. இந்நிலையில், சந்தேக நபர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை கல்கிஸ்ஸ பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/shooting-in-mount-lavinia-colombo-one-person-killed/">கொழும்பில் துப்பாக்கிச் சூடு &#8211; இரண்டாவது நபரும் உயிரிழப்பு (Update)</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
