<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>தீபாவளி பண்டிகை Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/%e0%ae%a4%e0%af%80%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b5%e0%ae%b3%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%95%e0%af%88/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/தீபாவளி-பண்டிகை/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Mon, 20 Oct 2025 07:19:09 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>தீபாவளி பண்டிகை Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/தீபாவளி-பண்டிகை/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>தீபாவளி பண்டிகையால் ஜொலித்தது அயோத்தி: 29 லட்சம் விளக்குகள் ஏற்றி உலக சாதனை</title>
		<link>https://oruvan.com/ayodhya-shines-with-diwali-festival-29-lakh-lamps-lit-setting-a-world-record/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Mon, 20 Oct 2025 10:00:21 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[தீபாவளி பண்டிகை]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=35899</guid>

					<description><![CDATA[<p>அயோத்தி சரயு நதிக்கரையில் நேற்று 29 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு புதிய உலக சாதனை படைக்கப்பட்டது. ஒரே நேரத்தில் 2,128 அர்ச்சகர்கள் நடத்திய பிரம்மாண்ட ஆரத்தி வழிபாடும் உலக சாதனை படைத்துள்ளது. தீபாவளியையொட்டி அயோத்தி ராமர் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ராமர் கோயில் வளாகத்தில் நேற்று 22 அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற்றது. ராமாயணக் காட்சிகள், கும்ப மேளா, மகளிர் முன்னேற்றம், பிரம்மோஸ் ஏவுகணை உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்ட [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/ayodhya-shines-with-diwali-festival-29-lakh-lamps-lit-setting-a-world-record/">தீபாவளி பண்டிகையால் ஜொலித்தது அயோத்தி: 29 லட்சம் விளக்குகள் ஏற்றி உலக சாதனை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>அயோத்தி சரயு நதிக்கரையில் நேற்று 29 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டு புதிய உலக சாதனை படைக்கப்பட்டது. ஒரே நேரத்தில் 2,128 அர்ச்சகர்கள் நடத்திய பிரம்மாண்ட ஆரத்தி வழிபாடும் உலக சாதனை படைத்துள்ளது.</p>
<p>தீபாவளியையொட்டி அயோத்தி ராமர் கோயிலில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்று வருகின்றன. இதன் ஒரு பகுதியாக ராமர் கோயில் வளாகத்தில் நேற்று 22 அலங்கார ஊர்திகளின் அணிவகுப்பு நடைபெற்றது. ராமாயணக் காட்சிகள், கும்ப மேளா, மகளிர் முன்னேற்றம், பிரம்மோஸ் ஏவுகணை உள்ளிட்டவற்றை அடிப்படையாக கொண்ட ஊர்திகள் பார்வையாளர்களை கவர்ந்தன.</p>
<p>தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அயோத்தி சரயு நதிக் கரையின் 56 படித்துறைகளில் நேற்று மாலை 29 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டன. இதற்காக 73,000 லிட்டர் எண்ணெய், 55 லட்சம் பருத்தி திரிகள் பயன்படுத்தப்பட்டன. 33,000-க்கும் மேற்பட்ட தன்னார் வலர்கள் விளக்குகளை ஏற்றி னர். ஒரே நேரத்தில் 29 லட்சம் அகல் விளக்குகள் ஏற்றப்பட்டது புதிய உலக சாதனை ஆகும்.</p>
<p>சரயு நதியின் படித்துறைகளில் நேற்று இரவு ஒரே நேரத்தில் 2,128 அர்ச்சகர்கள் நடத்திய பிரம்மாண்ட ஆரத்தி வழிபாடும் உலக சாதனை படைத்துள்ளது.</p>
<p>1,100 ட்ரோன்கள் மூலம் சிறப்பு கண்காட்சி நடத்தப்பட்டது. இதில் ராமர், அனுமன், ராமர் பாலம், அயோத்தி கோயில் போன்ற உருவங்களை மக்கள் வெகுவாக கண்டு ரசித்தனர்.</p>
<p>அயோத்தி ராமர் கோயிலில் உத்தர பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் நேற்று சுவாமி தரிசனம் செய்தார். பின்னர், அவர் வடம் பிடித்து இழுத்து ராமர், சீதை தேரோட்டத்தை தொடங்கி வைத்தார்.</p>
<p>9-ஆவது ஆண்டு தீப உற்சவம் கோலாகலம்: ராமகதா பூங்காவில் நடந்த விழாவில் முதல்வர் யோகி ஆதித்யநாத் பேசியதாவது: கடந்த 2017 தீபாவளியின்போது அயோத்தியில் தீப உற்சவத்தை தொடங்கினோம். தற்போது 9-வது ஆண்டாக உற்சவம் கோலாகலமாக நடந்து வருகிறது.</p>
<p>ராமரும், ராமர் பாலமும் கற்பனை என்று காங்கிரஸ் தலைவர்கள் கூறினர். அவர்கள் கூறியதை மக்கள் ஒருபோதும் மன்னிக்க மாட்டார்கள். கடந்த 1990-ல் கரசேவகர்கள் அயோத்தி நோக்கி பாத யாத்திரை சென்றபோது அப்போதைய சமாஜ்வாதி அரசு துப்பாக்கிச்சூடு நடத்தியது. அவர்கள் துப்பாக்கியால் சுட்டார்கள். ஆனால், நாம் அயோத்தியில் தீபங்களை ஏற்றுகிறோம். உத்தர பிரதேசத்தில் ராம ராஜ்ஜியம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/ayodhya-shines-with-diwali-festival-29-lakh-lamps-lit-setting-a-world-record/">தீபாவளி பண்டிகையால் ஜொலித்தது அயோத்தி: 29 லட்சம் விளக்குகள் ஏற்றி உலக சாதனை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தீபாவளி பண்டிகையில் வீடு செல்வோருக்காக விசேட பேருந்து சேவை</title>
		<link>https://oruvan.com/special-bus-service-for-those-returning-home-during-diwali-festival/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Sat, 18 Oct 2025 10:57:09 +0000</pubDate>
				<category><![CDATA[Uncategorized]]></category>
		<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[தீபாவளி பண்டிகை]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=35830</guid>

					<description><![CDATA[<p>நீண்ட வார இறுதி விடுமுறை மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விசேட பேருந்து சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. ஹட்டன், வெலிமட, பதுளை, பசறை, வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களுக்கு அதிக பயணிகள் பயணிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், வீதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்ட பேருந்துகளை அதிகபட்சமாக சேவையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது. அதேநேரம் மேல் மாகாண போக்குவரத்து ஆணைக்குழுவினால் அனுமதி பெற்றுள்ள பேருந்துகளையும் அதிகரித்து வரும் பயணிகளின் தேவையை பூர்த்தி செய்ய இந்த விடுமுறையில் சேவையில் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/special-bus-service-for-those-returning-home-during-diwali-festival/">தீபாவளி பண்டிகையில் வீடு செல்வோருக்காக விசேட பேருந்து சேவை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>நீண்ட வார இறுதி விடுமுறை மற்றும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு விசேட பேருந்து சேவை முன்னெடுக்கப்படவுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது.</p>
<p>ஹட்டன், வெலிமட, பதுளை, பசறை, வவுனியா மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய இடங்களுக்கு அதிக பயணிகள் பயணிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுவதால், வீதி அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்ட பேருந்துகளை அதிகபட்சமாக சேவையில் ஈடுபடுத்த திட்டமிடப்பட்டுள்ளது.</p>
<p>அதேநேரம் மேல் மாகாண போக்குவரத்து ஆணைக்குழுவினால் அனுமதி பெற்றுள்ள பேருந்துகளையும் அதிகரித்து வரும் பயணிகளின் தேவையை பூர்த்தி செய்ய இந்த விடுமுறையில் சேவையில் ஈடுபடுத்த எதிர்பார்க்கப்படுகிறது.</p>
<p>அந்தப் பேருந்துகளுக்கான தற்காலிக அனுமதிப்பத்திரங்களை வழங்கும் நடவடிக்கைகள் தேசிய போக்குவரத்து ஆணைக்குழுவின் பெஸ்டியன் மாவத்தை அலுவலகத்தால் மேற்கொள்ளப்படும், இதற்காக சாதாரண நாட்களில் பணியில் இருக்கும் அதிகாரிகளை விட அதிகமான அதிகாரிகள் நியமிக்கப்படுவார்கள் என தெரிவிக்கப்படுகின்றது.</p>
<p>இந்தக் காலகட்டத்திற்குப் பின்னர் கொழும்புக்குத் திரும்பும் பயணிகளுக்கு போக்குவரத்து வசதிகளை வழங்குவதற்காக, பயணிகள் தேவை அதிகமாக உள்ள பகுதிகளில் தற்காலிக அனுமதிப்பத்திரங்களின் கீழ் பேருந்துகளை சேவையில் ஈடுபடுத்துமாறு மாகாண போக்குவரத்து அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.</p>
<p>தேசிய போக்குவரத்து ஆணைக்குழு ஏற்கனவே தேவையான தற்காலிக அனுமதிப்பத்திரங்களை மாகாண போக்குவரத்து அதிகாரிகளுக்கு அனுப்பியுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/special-bus-service-for-those-returning-home-during-diwali-festival/">தீபாவளி பண்டிகையில் வீடு செல்வோருக்காக விசேட பேருந்து சேவை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
