<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>தியாக தீபம் திலீபன் Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%af%e0%ae%be%e0%ae%95-%e0%ae%a4%e0%af%80%e0%ae%aa%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%a4%e0%ae%bf%e0%ae%b2%e0%af%80%e0%ae%aa%e0%ae%a9%e0%af%8d/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/தியாக-தீபம்-திலீபன்/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Wed, 17 Sep 2025 07:33:57 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>தியாக தீபம் திலீபன் Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/தியாக-தீபம்-திலீபன்/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>தியாக தீபம் திலீபனின் மூன்றாம் நாள் நினைவேந்தல்</title>
		<link>https://oruvan.com/third-day-commemoration-of-the-sacrifice-of-thileepan/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 17 Sep 2025 07:33:57 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Jaffna]]></category>
		<category><![CDATA[Jaffna News]]></category>
		<category><![CDATA[தியாக தீபம் திலீபன்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=32852</guid>

					<description><![CDATA[<p>தியாக தீபம் திலீபனின் மூன்றாம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது. நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில், சுடரேற்றி, திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூபி அஞ்சலி செலுத்தப்பட்டது. தியாக தீபம் திலீபன் தமிழ் மக்களின் உரிமைக்காக 12 நாட்கள் உணவையும் நீரையும் ஒறுத்து உயிர்த் தியாகம் செய்திருந்தார். தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல்துறைப் பொறுப்பாளரான திலீபன் இந்திய அமைதிப் படையிடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார். [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/third-day-commemoration-of-the-sacrifice-of-thileepan/">தியாக தீபம் திலீபனின் மூன்றாம் நாள் நினைவேந்தல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தியாக தீபம் திலீபனின் மூன்றாம் நாள் நினைவேந்தல் நிகழ்வுகள் இன்றைய தினம் புதன்கிழமை முன்னெடுக்கப்பட்டது.</p>
<p>நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபத்தின் நினைவிடத்தில், சுடரேற்றி, திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூபி அஞ்சலி செலுத்தப்பட்டது.</p>
<p>தியாக தீபம் திலீபன் தமிழ் மக்களின் உரிமைக்காக 12 நாட்கள் உணவையும் நீரையும் ஒறுத்து உயிர்த் தியாகம் செய்திருந்தார்.</p>
<p>தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பின் அரசியல்துறைப் பொறுப்பாளரான திலீபன் இந்திய அமைதிப் படையிடம் ஐந்து அம்சக் கோரிக்கைகளை போராட்டத்தில் ஈடுபட்டிருந்தார்.</p>
<p>1987ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 15 ஆம் திகதி உணவையும் நீரையும் தவிர்த்து அறப் போராட்டத்தை திலீபன் முன்னெடுத்தார்.</p>
<p>எனினும், அவரின் கோரிக்கைகள் எதுவும் நிறைவேற்றப்படாத நிலையில் 1987 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 26ஆம் திகதி முற்பகல் 10.48 மணிக்கு உயிர்நீத்தார்.</p>
<p>யாழ்ப்பாணம், ஊரெழுவைச் சேர்ந்த திலீபனின் இயற்பெயர் இராசையா பார்த்தீபன் என்பதும் குறிப்பிடத்தக்கது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/third-day-commemoration-of-the-sacrifice-of-thileepan/">தியாக தீபம் திலீபனின் மூன்றாம் நாள் நினைவேந்தல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் யாழில் உணர்வெழுச்சியுடன் ஆரம்பம்</title>
		<link>https://oruvan.com/the-commemoration-of-the-martyr-thileepan-begins-with-emotion-in-jaffna/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 15 Sep 2025 06:48:19 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[தியாக தீபம் திலீபன்]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம் செய்திகள்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=32664</guid>

					<description><![CDATA[<p>ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 38வது நினைவு தின நிகழ்வுகள் இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானது. யாழ்ப்பாணம், நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் தியாகி தீலிபன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த நேரம் காலை 9.45 மணியளவில் அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமானது. மாவீரர்களின் பெற்றோரால் பொதுச் சுடர் ஏற்றப்பட்டதை தொடர்ந்து, மலர் மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. 1). மீளக்குடியமர்தல் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/the-commemoration-of-the-martyr-thileepan-begins-with-emotion-in-jaffna/">தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் யாழில் உணர்வெழுச்சியுடன் ஆரம்பம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 38வது நினைவு தின நிகழ்வுகள் இன்றைய தினம் திங்கட்கிழமை யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானது.</p>
<p>யாழ்ப்பாணம், நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவிடத்தில் தியாகி தீலிபன் உண்ணாவிரதத்தை ஆரம்பித்த நேரம் காலை 9.45 மணியளவில் அஞ்சலி நிகழ்வுகள் ஆரம்பமானது.</p>
<p>மாவீரர்களின் பெற்றோரால் பொதுச் சுடர் ஏற்றப்பட்டதை தொடர்ந்து, மலர் மாலை அணிவித்து, மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.</p>
<p>1). மீளக்குடியமர்தல் என்ற பெயரில் இலங்கைத்தீவின் வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதிதாக திட்டமிடப்படும் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்தவேண்டும்.</p>
<p>2). சிறைக் கூடங்களிலும் இராணுவ பொலிஸ் தடுப்பு முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் யாவரும் விடுதலை செய்யப்படவேண்டும்.</p>
<p>3). அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும்.</p>
<p>4). ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்படவேண்டும்.</p>
<p>5). தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும்.</p>
<p>ஆகிய ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து நீராகாரமின்றி 12 நாள்கள் உண்ணாவிரதம் இருந்து திலீபன் உயிர்நீத்தார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/the-commemoration-of-the-martyr-thileepan-begins-with-emotion-in-jaffna/">தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் யாழில் உணர்வெழுச்சியுடன் ஆரம்பம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
