<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>தவெக Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/%e0%ae%a4%e0%ae%b5%e0%af%86%e0%ae%95/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/தவெக/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Mon, 08 Dec 2025 07:13:03 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>தவெக Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/தவெக/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு அனுமதி மறுப்பு</title>
		<link>https://oruvan.com/tamil-nadu-residents-denied-entry-to-tvk-ference/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 08 Dec 2025 07:12:34 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[tvk]]></category>
		<category><![CDATA[TVK Vijay]]></category>
		<category><![CDATA[த.வெ.க. தலைவர் விஜய்]]></category>
		<category><![CDATA[தமிழக வெற்றிக் கழகம்]]></category>
		<category><![CDATA[தவெக]]></category>
		<category><![CDATA[விஜய்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=40173</guid>

					<description><![CDATA[<p>புதுச்சேரியில் விஜய் தலைமையில் நடக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், புதுச்சேரியை சேர்ந்த 5 ஆயிரம் பேர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கி புதுச்சேரி பொலிஸார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர். எதிர்வரும் ஒன்பதாம் திகதி நடக்கவுள்ள இந்த மாநாட்டிற்கு என தமிழக வெற்றிக் கழகத்திற்கு புதுச்சேரி பொலிஸார் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளனர். இதன்படி, தமிழக வெற்றிக் கழகம் வழங்கு கியூஆர் கோட் உடன் கூடிய நுழைவுச்சீட்டு வரும் ஐந்தாயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/tamil-nadu-residents-denied-entry-to-tvk-ference/">தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு அனுமதி மறுப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>புதுச்சேரியில் விஜய் தலைமையில் நடக்கும் தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது.</p>
<p>இந்நிலையில், புதுச்சேரியை சேர்ந்த 5 ஆயிரம் பேர்களுக்கு மட்டுமே அனுமதி வழங்கி புதுச்சேரி பொலிஸார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.</p>
<p>எதிர்வரும் ஒன்பதாம் திகதி நடக்கவுள்ள இந்த மாநாட்டிற்கு என தமிழக வெற்றிக் கழகத்திற்கு புதுச்சேரி பொலிஸார் கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளனர்.</p>
<p>இதன்படி, தமிழக வெற்றிக் கழகம் வழங்கு கியூஆர் கோட் உடன் கூடிய நுழைவுச்சீட்டு வரும் ஐந்தாயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டுள்ளது.</p>
<p>குறித்த அனுமதி அட்டை இல்லாத எவருக்கும் கண்டிப்பாக அனுமதி வழங்கப்படாது என பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.</p>
<p>குழந்தைகள், கர்ப்பிணிகள், முதியவர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதுடன், தமிழகத்தில் இருந்து வருபவர்களுக்கும் அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>வீதியோரங்களில் வாகனங்களை நிறுத்த முடியாது எனவும், குடிநீர் வசதி, கழிப்பறை வசதி, ஆம்புலன்ஸ் மற்றும் அவசர காலங்களில் வெளியேறும் வழி ஆகியவை ஏற்படுத்தி தர வேண்டும் எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.</p>
<p>தமிழக வெற்றிக் கழகத்தின் கரூர் மாநாட்டின் போது கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இச்சம்பவம் இந்திய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.</p>
<p>இந்த சம்பவம் குறித்த சிபிஐ விசாரணைகள் தற்போது இடம்பெற்று வரும் நிலையில், நீதிமன்றிலும் வழக்கு விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.</p>
<p>இந்நிலையில், உயர் நீதிமன்ற வழக்கை சுட்டிக்காட்டி புதுச்சேரி மாநாட்டிற்கு இவ்வாறு அனுமதி மறுப்பு மற்றும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/tamil-nadu-residents-denied-entry-to-tvk-ference/">தமிழக வெற்றிக் கழகத்தின் மாநாட்டுக்கு தமிழகத்தை சேர்ந்தவர்களுக்கு அனுமதி மறுப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>விஜயுடன் இணைந்தார் செங்கோட்டையன்!! தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் நியமனம்</title>
		<link>https://oruvan.com/sengottaiyan-joins-vijay-also-appointed-as-chief-coordinator/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Thu, 27 Nov 2025 05:16:05 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[#oruvan #news]]></category>
		<category><![CDATA[tvk]]></category>
		<category><![CDATA[TVK Vijay]]></category>
		<category><![CDATA[vijay]]></category>
		<category><![CDATA[அதிமுக]]></category>
		<category><![CDATA[ஒருவன்]]></category>
		<category><![CDATA[செங்கோட்டையன்]]></category>
		<category><![CDATA[தவெக]]></category>
		<category><![CDATA[விஜய்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=39391</guid>

					<description><![CDATA[<p>அதிமுகவில் இருந்து விலகிய செங்கோட்டையன் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார். இந்நிலையில், அவருக்கு கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது. அதிமுக மூத்த நிர்வாகிகளில் ஒருவரான கே.ஏ.செங்கோட்டையன், 1977-ம் ஆண்டு முதல் ஒன்பது முறை எம்.எல்.ஏ.வாக பதவி வகித்துள்ளார். முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கட்சியின் அமைப்பு செயலாளராக செயல்பட்டு வந்த செங்கோட்டையனுக்கும். கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இருவருக்கு இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/sengottaiyan-joins-vijay-also-appointed-as-chief-coordinator/">விஜயுடன் இணைந்தார் செங்கோட்டையன்!! தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் நியமனம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>அதிமுகவில் இருந்து விலகிய செங்கோட்டையன் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார்.</p>
<p>இந்நிலையில், அவருக்கு கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளது.</p>
<p>அதிமுக மூத்த நிர்வாகிகளில் ஒருவரான கே.ஏ.செங்கோட்டையன், 1977-ம் ஆண்டு முதல் ஒன்பது முறை எம்.எல்.ஏ.வாக பதவி வகித்துள்ளார்.</p>
<p>முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கட்சியின் அமைப்பு செயலாளராக செயல்பட்டு வந்த செங்கோட்டையனுக்கும். கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டது.</p>
<p>இருவருக்கு இடையில் ஏற்பட்ட கருத்து முரண்பாடு காரணமாக அண்மையில் கட்சியின் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டார். அவருடைய ஆதரவாளர்களும் கட்சியில் இருந்து நீக்கப்பட்டனர்.</p>
<p>இந்நிலையில், நேற்று தனது எம்.எல்.ஏ பதவியை இராஜினாமா செய்த அவர் இன்று காலை விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்துள்ளார்.</p>
<p>இந்நிலையில் செங்கோட்டையனுக்கு தமிழக வெற்றிக் கழகத்தின் நிர்வாகக்குழு தலைமை ஒருங்கிணைப்பாளர் பதவி வழங்கப்படுள்ளதாக கூறப்படுகிறது.</p>
<p>மேலும் நான்கு மாவட்டங்களுக்கு (கோவை, ஈரோடு, திருப்பூர், நீலகிரி) அமைப்பு பொதுச்செயலாளர் பதவியும் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p>
<p>இதனிடையே செங்கோட்டையனை தொடர்ந்து புதுச்சேரி பாஜக முன்னாள் தலைவர் சாமிநாதன் மற்றும் காரைக்கால் முன்னாள் எம்.எல்.ஏ ஹசனாவும் விஜய் முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் இணைய உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.</p>
<p>The post <a href="https://oruvan.com/sengottaiyan-joins-vijay-also-appointed-as-chief-coordinator/">விஜயுடன் இணைந்தார் செங்கோட்டையன்!! தலைமை ஒருங்கிணைப்பாளராகவும் நியமனம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தவெக உறுப்பினர்கள் தற்குறிகள் கிடையாது &#8211; விஜய்</title>
		<link>https://oruvan.com/tvk-members-have-no-identity-cards-vijay/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 24 Nov 2025 07:36:09 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[tvk]]></category>
		<category><![CDATA[vijay]]></category>
		<category><![CDATA[த.வெ.க. தலைவர் விஜய்]]></category>
		<category><![CDATA[தவெக]]></category>
		<category><![CDATA[விஜய்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=39092</guid>

					<description><![CDATA[<p>தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர்கள் தமிழ்நாட்டு அரசியலின் ஆச்சர்யக்குறிகள் என அந்தக் கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்களை தற்குறி என்கிறார்கள், அவர்கள் தற்குறிகள் கிடையாது, தமிழ்நாட்டு அரசியலின் ஆச்சர்யக்குறிகள் என விஜய் வலியுறுத்தியுள்ளார். காஞ்சிபுரம் அருகே நேற்று காலை நடந்த மக்களுடன் சந்திப்பில் உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பில் குறிப்பிட்ட அளவான ஆதரவாளர்களுக்கே அனுமதி வழங்கப்பட்டிருந்தது. மேலும், ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தொடர்ந்தும் பேசிய [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/tvk-members-have-no-identity-cards-vijay/">தவெக உறுப்பினர்கள் தற்குறிகள் கிடையாது &#8211; விஜய்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர்கள் தமிழ்நாட்டு அரசியலின் ஆச்சர்யக்குறிகள் என அந்தக் கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.</p>
<p>தமிழக வெற்றிக் கழகத்தின் தொண்டர்களை தற்குறி என்கிறார்கள், அவர்கள் தற்குறிகள் கிடையாது, தமிழ்நாட்டு அரசியலின் ஆச்சர்யக்குறிகள் என விஜய் வலியுறுத்தியுள்ளார்.</p>
<p>காஞ்சிபுரம் அருகே நேற்று காலை நடந்த மக்களுடன் சந்திப்பில் உரையாற்றிய அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இந்த சந்திப்பில் குறிப்பிட்ட அளவான ஆதரவாளர்களுக்கே அனுமதி வழங்கப்பட்டிருந்தது.</p>
<p>மேலும், ஊடகவியலாளர்களுக்கு அனுமதி வழங்கப்படவில்லை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இந்நிலையில், தொடர்ந்தும் பேசிய விஜய், தான் ஆட்சிக்கு வந்த பின்னர்  அனைவருக்கும் நிரந்தரமான வீடு ஏற்படுத்திக்கொடுக்கப்படும் என தெரிவித்துள்ளார்.</p>
<p>ஒவ்வொரு வீட்டிற்கும் ஒரு மோட்டார் சைக்கிள் உறுதியாக இருக்க வேண்டும் எனவும், அதற்குண்டான பொருளாதார வளர்ச்சி ஏற்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.</p>
<p>கல்வி பாடத்திட்டத்தில் சீர்திருத்தம் செய்ய வேண்டும் எனவும், அரச வைத்தியசாலைகளுக்கு பொது மக்கள் அச்சமின்றி செல்லும் நிலைமைமை ஏற்படுத்த வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>இதை எப்படி செயல்படுத்த உள்ளோம் என்பதை தேர்தல் அறிக்கையில் விளக்கமாக தெரிவிப்போம் என விஜய் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/tvk-members-have-no-identity-cards-vijay/">தவெக உறுப்பினர்கள் தற்குறிகள் கிடையாது &#8211; விஜய்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>விஜயின் நிலைப்பாட்டில் மாற்றம் &#8211; அதிமுகவுடன் கூட்டணி?</title>
		<link>https://oruvan.com/change-in-vijays-stance-alliance-with-aiadmk/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 19 Nov 2025 06:41:57 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#oruvan #news]]></category>
		<category><![CDATA[Edappadi K. Palaniswami]]></category>
		<category><![CDATA[Tamil Nadu]]></category>
		<category><![CDATA[tvk]]></category>
		<category><![CDATA[TVK Vijay]]></category>
		<category><![CDATA[vijay]]></category>
		<category><![CDATA[தமிழக வெற்றிக் கழகம்]]></category>
		<category><![CDATA[தவெக]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=38651</guid>

					<description><![CDATA[<p>அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்ட சபை தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், அதிமுக உடன் கூட்டணி அமைப்பது தொடர்பில் தமிழக வெற்றிக் கழகம் ஆர்வம் காட்டியுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன்படி, கூட்டணி அமைப்பது தொடர்பில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளதாகவும் அந்த செய்திகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன. இதன்படி, முதல் கட்ட பேச்சுவார்த்தை சற்று சுமுகமாக முடிந்துள்ளதாகவும், இதனால் அதிகமுகவின் முக்கிய பிரமுகர் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையில் நேரடியாக இறங்குவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/change-in-vijays-stance-alliance-with-aiadmk/">விஜயின் நிலைப்பாட்டில் மாற்றம் &#8211; அதிமுகவுடன் கூட்டணி?</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>அடுத்த ஆண்டு தமிழகத்தில் சட்ட சபை தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில், அதிமுக உடன் கூட்டணி அமைப்பது தொடர்பில் தமிழக வெற்றிக் கழகம் ஆர்வம் காட்டியுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p>
<p>இதன்படி, கூட்டணி அமைப்பது தொடர்பில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளதாகவும் அந்த செய்திகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.</p>
<p>இதன்படி, முதல் கட்ட பேச்சுவார்த்தை சற்று சுமுகமாக முடிந்துள்ளதாகவும், இதனால் அதிகமுகவின் முக்கிய பிரமுகர் அடுத்தக்கட்ட பேச்சுவார்த்தையில் நேரடியாக இறங்குவார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் கட்சி தொடங்கியதில் இருந்து மத்திய ஆளும் கட்சியான பாஜகவை தனது கொள்கை எதிரி எனவும் தமிழக ஆளும் கட்சியான திமுகாவை அரசியல் எதிரி எனவும் தெரிவித்திருந்தார்.</p>
<p>எனினும், அதிமுகவை அவர் பெரிதான விமர்ச்திருக்கவில்லை. இதனால் இரு தரப்பினர்களும் கூட்டணி அமைக்க கூடும் என தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், விஜய் தனித்து போட்டியிடுவதாக உறுதிப்படுத்தினார்.</p>
<p>இந்நிலையில், நாள் அடைவில் ஏற்பபட்ட அரசியல் சூழ்நிலைகளை கருத்திற்கொண்டு தமிழக வெற்றிக் கழகம் கூட்டணி அமைப்பது குறித்து தீவிரமாக ஆலோசனை செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>குறிப்பாக கரூர் சம்பவத்திற்கு பின்னர் விஜயின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கரூர் சம்பவத்தை அடுத்து விஜய்க்கு ஆதரவாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி முதல் ஆளாக குரல் கொடுத்திருந்தார்.</p>
<p>இந்நிலையிலேயே, அதிமுக உடன் கூட்டணி அமைப்பது தொடர்பில் தமிழக வெற்றிக் கழகம் ஆர்வம் காட்டியுள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p>
<p>The post <a href="https://oruvan.com/change-in-vijays-stance-alliance-with-aiadmk/">விஜயின் நிலைப்பாட்டில் மாற்றம் &#8211; அதிமுகவுடன் கூட்டணி?</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சட்டமன்ற தேர்தலில் 100 வீதம் வெற்றி உறுதி!! விஜய் நம்பிக்கை</title>
		<link>https://oruvan.com/vijay-confident-of-100-victory-in-the-assembly-elections/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 05 Nov 2025 09:34:39 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[#oruvan #news]]></category>
		<category><![CDATA[My TVK]]></category>
		<category><![CDATA[tvk]]></category>
		<category><![CDATA[TVK Vijay]]></category>
		<category><![CDATA[ஒருவன்]]></category>
		<category><![CDATA[ஒருவன் செய்தி]]></category>
		<category><![CDATA[தவெக]]></category>
		<category><![CDATA[விஜய்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=37408</guid>

					<description><![CDATA[<p>அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு 100 வீத வெற்றி நிச்சயம் என அந்தக் கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் தவெக இடையே மட்டும் தான் போட்டி என்பதை மீளவும் கூறிக்கொள்வதாகவும் அவர் தெளிவுப்படுத்தியுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொது குழு கூட்டம் மாமல்லபுரத்தில் இன்று காலை இடம்பெற்றது. கரூர் சம்பவம் நடந்து 38 நாட்களுக்கு பின், கட்சி நிர்வாகிகளுடன், பொதுக்குழு கூட்டத்தில் விஜய் கலந்துகொண்டார். [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/vijay-confident-of-100-victory-in-the-assembly-elections/">சட்டமன்ற தேர்தலில் 100 வீதம் வெற்றி உறுதி!! விஜய் நம்பிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு 100 வீத வெற்றி நிச்சயம் என அந்தக் கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.</p>
<p>சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் தவெக இடையே மட்டும் தான் போட்டி என்பதை மீளவும் கூறிக்கொள்வதாகவும் அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.</p>
<p>தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொது குழு கூட்டம் மாமல்லபுரத்தில் இன்று காலை இடம்பெற்றது. கரூர் சம்பவம் நடந்து 38 நாட்களுக்கு பின், கட்சி நிர்வாகிகளுடன், பொதுக்குழு கூட்டத்தில் விஜய் கலந்துகொண்டார்.</p>
<p>இதில் 1400க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது உரையாற்றிய விஜய்,</p>
<p>கரூர் சம்பவத்தில் குடும்ப உறவுகளை இழந்ததால் சொல்ல முடியாத வேதனையில் இருந்தோம். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்காக அமைதி காத்திருந்தோம். எங்கள் கட்சிக்கு எதிராக வன்ம அரசியல் வலை பின்னப்பட்ட‌து.</p>
<p>கரூர் சம்பவம் குறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் வன்மத்துடன் பேசியிருக்கிறார். அதே சட்டப்பேரவையில் தவெகவுக்கு எதிரான உரைக்கு பதிலடி கொடுக்க விரும்புகிறேன்.</p>
<p>உச்ச நீதிமன்றில் திமுக அரசு திக்கித் திணறி நின்றது. கரூர் சம்பவம் குறித்து அதிகாரிகள் அவசர அவசரமாக செய்தியாளர் சந்திப்பை நடத்தினர். ஒரு நபர் ஆணையம் விசாரணை செய்திருந்தது.</p>
<p>இந்நிலையில், ஒருநபர் ஆணைத்தை அவமதிக்கும் வகையில் அதிகாரிகள் கருத்து வெளியிட்டிருந்தனர்.</p>
<p>கரூர் சம்பவத்தில் உண்மை நிலையை தெளிவுப்படுத்த வேண்டும் என கூறி, சட்ட ரீதியாகவும் சாமர்த்தியமாகவும் பேசுவதாக நினைத்து கொண்டு 50 வருட அரசியல் அனுபவம் உள்ள முதலமைச்சர் சட்டப்பேரவையில் உரையாற்றியது ஒரு வடிக்கட்டின பொய்.</p>
<p>இதை நான் சொல்லவில்லை. உச்ச நீதிமன்றம் சொல்லியிருக்கிறது. 2026ம் ஆண்டு திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள், புரிய வைப்பார்கள், மனிதாபிமானம், மாண்பு இல்லாமல் அரசியல் ஆதாயம் தேடுகிறார் முதலமைச்சர்.</p>
<p>கேள்வி கேட்க ஆளே இல்லாமல் போனதால் திமுக தலைமை இப்படி இருக்கிறது. இந்த இடையூறு அனைத்தும் தற்காலிகமே. மக்களோடு கைகோர்த்து மக்களுக்காக நிற்போம்.</p>
<p>அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள தேர்தலில் இரு தரப்பினர்களுக்கு மட்டுமே போட்டி. 100 சதவீதம் வெற்றி நமக்கே” என்று விஜய் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/vijay-confident-of-100-victory-in-the-assembly-elections/">சட்டமன்ற தேர்தலில் 100 வீதம் வெற்றி உறுதி!! விஜய் நம்பிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொது குழு கூட்டம்</title>
		<link>https://oruvan.com/special-general-committee-meeting-of-tamil-nadu-victory-party/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 05 Nov 2025 07:28:49 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[#oruvan #news]]></category>
		<category><![CDATA[tvk]]></category>
		<category><![CDATA[TVK Vijay]]></category>
		<category><![CDATA[Vija]]></category>
		<category><![CDATA[த.வெ.க. தலைவர் விஜய்]]></category>
		<category><![CDATA[தவெக]]></category>
		<category><![CDATA[விஜய்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=37389</guid>

					<description><![CDATA[<p>தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொது குழு கூட்டம் இன்று காலை ஆரம்பமாக இடம்பெற்று வருகின்றது. இதில் சுமார் இரண்டாயிரம் பேர் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் இந்த கூட்டம் இடம்பெறுகின்றது. கரூர் சம்பவத்திற்கு பின்னர்  நடைபெறும் பொதுக்குழு கூட்டம் என்பதால் தமிழக அரசியல் வட்டாரத்தில் இந்த பொதுக் குழு கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது. இதன்போது பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/special-general-committee-meeting-of-tamil-nadu-victory-party/">தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொது குழு கூட்டம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொது குழு கூட்டம் இன்று காலை ஆரம்பமாக இடம்பெற்று வருகின்றது. இதில் சுமார் இரண்டாயிரம் பேர் கலந்துகொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>மாமல்லபுரத்தில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் இந்த கூட்டம் இடம்பெறுகின்றது.</p>
<p>கரூர் சம்பவத்திற்கு பின்னர்  நடைபெறும் பொதுக்குழு கூட்டம் என்பதால் தமிழக அரசியல் வட்டாரத்தில் இந்த பொதுக் குழு கூட்டம் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கிறது.</p>
<p>இதன்போது பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் பங்கேற்ற மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில், கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.</p>
<p>இந்த சம்பவம் தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது. பல்வேறு தரப்பினர்களும், விஜய் மீதும் அவரின் கட்சியின் மீதும் குற்றம் சுமத்தியிருந்தனர்.</p>
<p>உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு 20 லட்சம் ரூபா நிவாரணம் வழங்கியதோடு, அவர்களை மாமல்லபுரத்திற்கு நேரில் அழைத்த விஜய் தனித்தனியாக சந்தித்து ஆறுதல் தெரிவித்திருந்தார்.</p>
<p>இந்த சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.  கரூர் சம்பவத்திற்கு பின்னர்  அரசில் செயற்பாடுகளுக்கு விஜயம் முழுக்குப் போட்டிருந்த நிலையில், தற்போது தீவிரம் காட்டியுள்ளார்.</p>
<p>இதன் ஒருபகுதியாக தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொது குழு கூட்டம் இன்று இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/special-general-committee-meeting-of-tamil-nadu-victory-party/">தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொது குழு கூட்டம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>16 நாட்களுக்கு பிறகு வெளியே வந்தார் புஸ்ஸி ஆனந்த்</title>
		<link>https://oruvan.com/pussy-anand-comes-out-after-16-days/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Tue, 14 Oct 2025 06:49:39 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[tvk]]></category>
		<category><![CDATA[TVK Vijay]]></category>
		<category><![CDATA[டிவிகே]]></category>
		<category><![CDATA[தமிழக வெற்றிக் கழகம்]]></category>
		<category><![CDATA[தவெக]]></category>
		<category><![CDATA[புஸ்சி ஆனந்த்]]></category>
		<category><![CDATA[புஸ்ஸி ஆனந்த்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=35343</guid>

					<description><![CDATA[<p>தலைமறைவாகியுள்ளதாக கூறப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் பொது செயலாளர் புஸ்சி ஆனந்த் வெளியே வந்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27ஆம் திகதி நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், துணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் உள்பட சிலர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டிருந்தது. தொடர்ந்து, கரூர் மேற்கு மாவட்ட [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/pussy-anand-comes-out-after-16-days/">16 நாட்களுக்கு பிறகு வெளியே வந்தார் புஸ்ஸி ஆனந்த்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தலைமறைவாகியுள்ளதாக கூறப்பட்ட தமிழக வெற்றிக் கழகத்தின் பொது செயலாளர் புஸ்சி ஆனந்த் வெளியே வந்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p>
<p>கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த மாதம் 27ஆம் திகதி நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக பிரசார கூட்டத்தில் நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்தனர்.</p>
<p>இந்த சம்பவம் தொடர்பாக அக்கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்சி ஆனந்த், துணை பொதுச்செயலாளர் நிர்மல் குமார், கரூர் மாவட்ட செயலாளர் மதியழகன் உள்பட சிலர் மீது வழக்கு பதிவுசெய்யப்பட்டிருந்தது.</p>
<p>தொடர்ந்து, கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன், கரூர் மத்திய மாநகர நிர்வாகி பவுன் ராஜ் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.</p>
<p>இதனையடுத்து, கட்சியின் பொதுச் செயலாளர் புஸ்ஸி ஆனந்த் மற்றும் இணை பொதுச் செயலாளர் சி. டி. ஆர். நிர்மல் குமார் ஆகியோர் தலைமறைவாகினர்.</p>
<p>இவர்களை கைது கைது செய்ய ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டன.</p>
<p>இந்த நிலையில் கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ விசாரிக்க உச்ச நீதிமன்றம் நேற்று உத்தரவிட்டது இதனை தொடர்நது தலைமறைவாக இருந்த புஸ்சி ஆனந்த் , நிர்மல்குமார் நேற்று வெளியே வந்தனர்.</p>
<p>வெளியே வந்த உடன் முதலில் நிர்மகுமார் விஜய்யை சந்தித்தார். தொடர்ந்து புஸ்ஸி ஆனந்த் விஜய்யை சந்தித்தார். புஸ்ஸி ஆனந்த் விஜய்யுடன் சுமார் 20 நிமிடங்கள் ஆலோசனை நடத்தினர்.</p>
<p>உச்ச நீதிமன்றின் தீர்ப்பு மற்றும் கட்சியின் அடுத்தக் கட்ட நடவடிக்கைகள் குறித்து விஜய் மற்றும், புஸ்ஸி ஆனந்தும் தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/pussy-anand-comes-out-after-16-days/">16 நாட்களுக்கு பிறகு வெளியே வந்தார் புஸ்ஸி ஆனந்த்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>கரூர் சம்பவம் &#8211; சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு</title>
		<link>https://oruvan.com/karur-incident-supreme-court-orders-cbi-probe/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 13 Oct 2025 07:17:20 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Karur stampede]]></category>
		<category><![CDATA[கரூர் கூட்டம்]]></category>
		<category><![CDATA[கரூர் சம்பவம்]]></category>
		<category><![CDATA[டிவிகே]]></category>
		<category><![CDATA[தமிழக வெற்றிக் கழகம்]]></category>
		<category><![CDATA[தவெக]]></category>
		<category><![CDATA[விஜய்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=35225</guid>

					<description><![CDATA[<p>கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் சந்திப்பின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையை எதிர்த்து தமிழக வெற்றிக் கழம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது. இந்த வழக்கு உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் ஜே.கே.மகேஸ்​வரி, என்​.​வி.அஞ்​சரியா ஆகியோர் அடங்​கிய அமர்வு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதன் போது சம்பவம் குறித்து [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/karur-incident-supreme-court-orders-cbi-probe/">கரூர் சம்பவம் &#8211; சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>கரூரில் தமிழக வெற்றிக் கழகத்தின் மக்கள் சந்திப்பின் போது ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில் சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.</p>
<p>கரூர் கூட்ட நெரிசல் சம்பவத்தில் சிறப்பு புலனாய்வுக் குழு விசாரணையை எதிர்த்து தமிழக வெற்றிக் கழம் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தது.</p>
<p>இந்த வழக்கு உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் ஜே.கே.மகேஸ்​வரி, என்​.​வி.அஞ்​சரியா ஆகியோர் அடங்​கிய அமர்வு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.</p>
<p>இதன் போது சம்பவம் குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டப்பட்டது. மேலும், இந்த விசாரணையை மேற்பார்வை செய்ய உச்ச நீதிமன்றம் ஓய்வு பெற்ற நீதிபதி அஜய் ரஸ்தோகி தலைமையிலான மூன்று பேர் கொண்ட குழுவை அமைப்பதாகவும் அறிவித்துள்ளது.</p>
<p>வழக்கு விசாரணை சுதந்திரமாகவும், நியாயமாகவும் நடத்தப்பட வேண்டும் என்பதை உறுதி செய்யும்படி இந்தக் குழுவுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.</p>
<p>கரூரில் தமிழக வெற்றிக் கழக பிர​சா​ரக் கூட்​டத்​தில் 41 பேர் உயி​ரிழந்த சம்​பவம் எதிரொலி​யாக அரசியல் கட்​சிகளின் கூட்​டங்​களுக்கு நிலை​யான வழி​காட்டு நெறி​முறை​களை உரு​வாக்​கக்​ கோரி வில்​லிவாக்​கம் தினேஷ் என்​பவர் தொடர்ந்த வழக்கை விசா​ரித்த சென்னை உயர் நீதி​மன்ற தனி நீதிப​தி, தவெக தலை​வ​ரான விஜய்யை கடுமை​யாக விமர்​சித்​தும், இந்த சம்​பவம் தொடர்​பாக விசா​ரணை நடத்த வடக்கு மண்டல பொலிஸ் ஐஜி அஸ்ரா கார்க் தலை​மை​யில் சிறப்பு புல​னாய்​வுக் குழு அமைத்​தும் உத்தரவிட்டிருந்தார்.</p>
<p>எனினும், இந்த உத்​தரவை எதிர்த்து தமிழக வெற்றிக் கழகத்தின் தேர்​தல் பிர​சார மேலாண்மை பொதுச் செய​லா​ள​ரான ஆதவ் அர்​ஜூனா உச்ச நீதி​மன்​றத்​தில் மனுத்​தாக்​கல் செய்​திருந்​தார்.</p>
<p>இந்த மனு உச்ச நீதி​மன்ற நீதிப​தி​கள் ஜே.கே.மகேஸ்​வரி, என்​.​வி.அஞ்​சரியா ஆகியோர் அடங்​கிய அமர்​வில் விசாரிக்கப்பட்டு வந்தது.</p>
<p>இந்நிலையில், இன்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. அதன்படி, கரூர் கூட்ட நெரிசல் வழக்கை சிபிஐ விசாரிக்கும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/karur-incident-supreme-court-orders-cbi-probe/">கரூர் சம்பவம் &#8211; சிபிஐ விசாரணைக்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>விஜய் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி இடையே தொலைபேசி உரையாடல் – கூட்டணி குறித்தும் பேச்சுவார்த்தை</title>
		<link>https://oruvan.com/telephone-conversation-between-vijay-and-edappadi-palaniswami-also-talks-on-alliance/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 08 Oct 2025 06:16:42 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[EPS]]></category>
		<category><![CDATA[tvk]]></category>
		<category><![CDATA[TVK Vijay]]></category>
		<category><![CDATA[த.வெ.க. தலைவர் விஜய்]]></category>
		<category><![CDATA[தமிழக வெற்றிக் கழகம்]]></category>
		<category><![CDATA[தவெக]]></category>
		<category><![CDATA[விஜய்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=34747</guid>

					<description><![CDATA[<p>தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு இடையில் தொலைபேசியில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது. இந்த கலந்துரையாடலை இரு தரப்பினரும் உறுதி செய்துள்ளனர். கடந்த ஆறாம் திகதி இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும், சுமார் 30 நிமிடங்கள் வரை இந்த கலந்துரையாடல் நீடித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது, 2026 சட்டமன்றத் தேர்தலை மனதில் கொண்டு, திமுக அரசை வீழ்த்த ஒரு கூட்டணியை அமைக்கலாம் என்ற யோசனையை எடப்பாடி பழனிசாமி முன்வைத்ததாக அதிமுக வட்டாரங்கள் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/telephone-conversation-between-vijay-and-edappadi-palaniswami-also-talks-on-alliance/">விஜய் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி இடையே தொலைபேசி உரையாடல் – கூட்டணி குறித்தும் பேச்சுவார்த்தை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோருக்கு இடையில் தொலைபேசியில் கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.</p>
<p>இந்த கலந்துரையாடலை இரு தரப்பினரும் உறுதி செய்துள்ளனர்.</p>
<p>கடந்த ஆறாம் திகதி இந்த கலந்துரையாடல் இடம்பெற்றதாகவும், சுமார் 30 நிமிடங்கள் வரை இந்த கலந்துரையாடல் நீடித்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இதன்போது, 2026 சட்டமன்றத் தேர்தலை மனதில் கொண்டு, திமுக அரசை வீழ்த்த ஒரு கூட்டணியை அமைக்கலாம் என்ற யோசனையை எடப்பாடி பழனிசாமி முன்வைத்ததாக அதிமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.</p>
<p>எனினும், இதற்கு விஜய் நேரடியாக மறுப்பு தெரிவிக்கவில்லை என அதிமுக தரப்பினர் தெரிவித்துள்ளனர்.</p>
<p>கரூர் சம்பவத்தில் உயிரிழந்த குடும்பத்தினரை நேரில் சந்தித்து, பின்னர் தனது பிரசாரத்தை விரைவில் தொடங்க திட்டமிட்டுள்ளதாக விஜய் கூறியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>எவ்வாறாயினும், எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்திக்கவும், ஜனவரி மாதத்திற்குப் பின்னர் கூட்டணி குறித்து முடிவெடுப்பதாகவும் விஜய் உறுதியளித்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.</p>
<p>விஜய் மற்றும் எடப்பாடி பழனிசாமி இடையே தொலைபேசி உரையாடல் இடம்பெற்றதை தமிழக வெற்றிக் கழகத்தின் செய்தித் தொடர்பாளர் உறுதிப்படுத்தினார்.</p>
<p>மேலும், இந்த உரையாடலின் விவரங்கள் சரியான நேரத்தில் வெளியிடப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/telephone-conversation-between-vijay-and-edappadi-palaniswami-also-talks-on-alliance/">விஜய் மற்றும் எடப்பாடி பழனிச்சாமி இடையே தொலைபேசி உரையாடல் – கூட்டணி குறித்தும் பேச்சுவார்த்தை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>கரூரில் பாதிக்கப்பட்டவர்களை விஜய் நேரில் சந்திக்க வேண்டும் &#8211; பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை</title>
		<link>https://oruvan.com/premalatha-vijayakanth-demands-that-vijay-should-meet-the-affected-people-in-karur-in-person/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 06 Oct 2025 06:17:38 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Karur]]></category>
		<category><![CDATA[Karur stampede]]></category>
		<category><![CDATA[tvk]]></category>
		<category><![CDATA[TVK Vijay]]></category>
		<category><![CDATA[கரூர்]]></category>
		<category><![CDATA[கரூர் கூட்டம்]]></category>
		<category><![CDATA[டிவகே]]></category>
		<category><![CDATA[தவெக]]></category>
		<category><![CDATA[விஜயின் கரூர் கூட்டம்]]></category>
		<category><![CDATA[விஜய்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=34536</guid>

					<description><![CDATA[<p>கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை தமிழக் வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேரில் சந்திக்க வேண்டும் என தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார். கிருஷ்ணகிரியில் நேற்று இடம்பெற்ற பொது மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார். கரூரில் பாதுகாப்பு கொடுக்க தவறியதால் 41 பேர் உயிர் இழந்துள்ளனர். மக்களை சந்திக்க தாமதமாக வந்ததே விஜய் செய்த மிகப் பெரிய தவறு. விஜய் கடமை உணர்வை தவறிவிட்டதாகவும் அவர் குற்றம் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/premalatha-vijayakanth-demands-that-vijay-should-meet-the-affected-people-in-karur-in-person/">கரூரில் பாதிக்கப்பட்டவர்களை விஜய் நேரில் சந்திக்க வேண்டும் &#8211; பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை தமிழக் வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் நேரில் சந்திக்க வேண்டும் என தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.</p>
<p>கிருஷ்ணகிரியில் நேற்று இடம்பெற்ற பொது மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இவ்வாறு கூறியுள்ளார்.</p>
<p>கரூரில் பாதுகாப்பு கொடுக்க தவறியதால் 41 பேர் உயிர் இழந்துள்ளனர். மக்களை சந்திக்க தாமதமாக வந்ததே விஜய் செய்த மிகப் பெரிய தவறு. விஜய் கடமை உணர்வை தவறிவிட்டதாகவும் அவர் குற்றம் சுமத்தியுள்ளார்.</p>
<p>கரூர் சம்பவத்தில் இரு பக்கமும் தவறுகள் உள்ளன. பாதுகாப்பு கொடுக்க வேண்டிய அரசும் தவறி விட்டது. தொண்டர்களை பத்திரமாக பாதுகாக்க வேண்டிய விஜய்யும் தவறு செய்து விட்டார். இதில் மாற்று கருத்து இல்லை.</p>
<p>விஜயகாந்த்தை அண்ணன் என்று கூறும் விஜய், அண்ணன் என்ன செய்தார் என்பதை பார்த்து செயல்பட வேண்டும் எனவும் பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை விடுத்துள்ளனர்.</p>
<p>கரூர் பிரசார கூட்டம் நடந்த இடத்தில் மின் துண்டிக்கப்பட்டுள்ளது. இதனால் கூட்ட நெரிசல் ஏற்பட்டது. அதே நேரத்தில் தொண்டர்களுக்கு தண்ணீர், உணவு கொடுக்க வேண்டும்.</p>
<p>தலைவர் என்பவர் எப்போதும் வாகனத்தில் உள்ளேயே அமர்ந்து இருக்க கூடாது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>இந்நிலையில், கரூர் சம்பவத்தில் பாதிக்கப்பட்ட மக்களை விஜய் நேரில் சந்திக்க வேண்டும். நிதியுதவியையும் நேரில் கொடுக்க வேண்டும் என பிரேமலதா விஜயகாந்த் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/premalatha-vijayakanth-demands-that-vijay-should-meet-the-affected-people-in-karur-in-person/">கரூரில் பாதிக்கப்பட்டவர்களை விஜய் நேரில் சந்திக்க வேண்டும் &#8211; பிரேமலதா விஜயகாந்த் கோரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
