<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>தலவாக்கலை Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/%e0%ae%a4%e0%ae%b2%e0%ae%b5%e0%ae%be%e0%ae%95%e0%af%8d%e0%ae%95%e0%ae%b2%e0%af%88/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/தலவாக்கலை/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Sat, 01 Nov 2025 09:08:16 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>தலவாக்கலை Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/தலவாக்கலை/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>தீபாவளி தினத்தன்று தலவாக்கலையில் நடந்த விபத்து: சிகிச்சை பெற்று வந்த இளைஞர் உயிரிழப்பு</title>
		<link>https://oruvan.com/accident-in-thalawakkala-on-diwali-youth-receiving-treatment-dies/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Sat, 01 Nov 2025 10:05:04 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[தலவாக்கலை]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=37074</guid>

					<description><![CDATA[<p>தலவாக்கலை நகரில் தீபாவளி தினத்தன்று ஜீப் மோதியதில் விபத்திற்குள்ளான இளைஞன் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்துள்ளார். செல்வநாதன் புஸ்பகுமார் (28) என்ற இளைஞனே, நுவரெலியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளார். கடந்த 20 ஆம் திகதி தீபாவளி தினத்தன்று இரவு வேளையில் தலவாக்கலை பேருந்து தரிப்பிடத்திற்கு அருகாமையில் பிரதான வீதியில் தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு பட்டாசு கொளுத்தி கொண்டிருந்த இளைஞர்கள் குழு ஒன்றில் இருந்த எஸ்.புஸ்பகுமார் (28) என்ற இளைஞனும் இருந்துள்ளார். இதன்போது [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/accident-in-thalawakkala-on-diwali-youth-receiving-treatment-dies/">தீபாவளி தினத்தன்று தலவாக்கலையில் நடந்த விபத்து: சிகிச்சை பெற்று வந்த இளைஞர் உயிரிழப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தலவாக்கலை நகரில் தீபாவளி தினத்தன்று ஜீப் மோதியதில் விபத்திற்குள்ளான இளைஞன் சிகிச்சை பலனின்றி நேற்றிரவு உயிரிழந்துள்ளார்.</p>
<p>செல்வநாதன் புஸ்பகுமார் (28) என்ற இளைஞனே, நுவரெலியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் இவ்வாறு உயிரிழந்துள்ளார்.</p>
<p>கடந்த 20 ஆம் திகதி தீபாவளி தினத்தன்று இரவு வேளையில் தலவாக்கலை பேருந்து தரிப்பிடத்திற்கு அருகாமையில் பிரதான வீதியில் தீபாவளி கொண்டாட்டத்தை முன்னிட்டு பட்டாசு கொளுத்தி கொண்டிருந்த இளைஞர்கள் குழு ஒன்றில் இருந்த எஸ்.புஸ்பகுமார் (28) என்ற இளைஞனும் இருந்துள்ளார்.</p>
<p>இதன்போது பிரதான பாதையில் வருகை தந்த ஜீப் வண்டி ஒன்று திடீரென இளைஞர்கள்மீது மோதியுள்ளது.</p>
<p>இதில் இரு இளைஞர்கள் காயம் அடைந்தனர். படுகாயம் அடைந்த குறித்த இளைஞன் லிந்துலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர், மேலதிக சிகிச்சைகளுக்காக நுவரெலியா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையிலேயே நேற்று உயிரிழந்துள்ளார்.</p>
<p>விபத்தை ஏற்படுத்திய சாரதி நுவரெலியா நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்டு பிணையில் விடுக்கப்பட்டுள்ளார்.</p>
<p>சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிசார் மேற்கொண்டுவருகின்றனர்.</p>
<p>உயிரிழந்த இளைஞன் தலவாக்கலை புகையிரத பணியளார்களுக்கான வீடொன்றில் வசித்து வந்துள்ளார். இதே நேரம் குறித்த விபத்தில் பாதிக்கப்பட்ட இன்னும் ஒரு இளைஞர் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சையின் பின்பு வீடு திரும்பியுள்ளார்.</p>
<p>(நுவரெலியா நிருபர்)</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/accident-in-thalawakkala-on-diwali-youth-receiving-treatment-dies/">தீபாவளி தினத்தன்று தலவாக்கலையில் நடந்த விபத்து: சிகிச்சை பெற்று வந்த இளைஞர் உயிரிழப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பாதாள உலக குழுவுடன் தொடர்புடைய முக்கிய நபர் கைது</title>
		<link>https://oruvan.com/key-figure-linked-to-underworld-group-arrested/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 03 Sep 2025 10:42:24 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கைது]]></category>
		<category><![CDATA[தலவாக்கலை]]></category>
		<category><![CDATA[பாதாள உலக குழு]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=31561</guid>

					<description><![CDATA[<p>பாதாள உலக குழுவுடன் தொடர்புடைய பல கொலைகளுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் நேற்று இரவு தலவாக்கலை, அகரபத்தனையில் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். கைது செய்யப்பட்டவர் மீட்டியாகொட பகுதியில் நடந்த பல கொலைகளுடன் தொடர்புடையவர் என்று பொலிஸ் சிறப்புப் பணிக்குழு (STF) தெரிவித்துள்ளது. சமீபத்தில் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட பாதாள உலகத் தலைவர்களுடன் தொடர்பு கொள்வதில் சந்தேக நபர் முக்கிய பங்கு வகித்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இந்த பாதாள உலக நபர்கள் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/key-figure-linked-to-underworld-group-arrested/">பாதாள உலக குழுவுடன் தொடர்புடைய முக்கிய நபர் கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p><span dir="auto">பாதாள உலக குழுவுடன் தொடர்புடைய பல கொலைகளுடன் தொடர்புடைய சந்தேக நபர் ஒருவர் நேற்று இரவு தலவாக்கலை, அகரபத்தனையில் கைது செய்யப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.</span></p>
<p><span dir="auto">கைது செய்யப்பட்டவர் மீட்டியாகொட பகுதியில் நடந்த பல கொலைகளுடன் தொடர்புடையவர் என்று பொலிஸ் சிறப்புப் பணிக்குழு (STF) தெரிவித்துள்ளது. </span></p>
<p><span dir="auto">சமீபத்தில் இந்தோனேசியாவில் கைது செய்யப்பட்டு இலங்கைக்கு நாடு கடத்தப்பட்ட பாதாள உலகத் தலைவர்களுடன் தொடர்பு கொள்வதில் சந்தேக நபர் முக்கிய பங்கு வகித்ததாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.</span></p>
<p><span dir="auto">இந்த பாதாள உலக நபர்கள் வெளிநாட்டில் இருந்து செயல்படும் அதே வேளையில் இலங்கையில் உள்ள தனிநபர்களுடன் தொடர்பைப் பேணுவதற்கு தேவையான வாட்ஸ்அப் தொழில்நுட்பத்தை சந்தேக நபர் வழங்கியதாகக் கூறப்படுகிறது.</span></p>
<p><span dir="auto">கைது செய்யப்பட்ட பாதாள உலக சந்தேக நபர்களின் தொலைபேசி தரவு பகுப்பாய்வின் அடிப்படையில், சிறப்பு அதிரடிப்படையினர் சந்தேக நபரை அகரபத்தனை பகுதியில் உள்ள அவரது மனைவியின் வீட்டில் கைது செய்தனர்.</span></p>
<p><span dir="auto">சந்தேக நபர் நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளார். </span><span dir="auto">மீட்டியாகொட பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</span></p>
<p>The post <a href="https://oruvan.com/key-figure-linked-to-underworld-group-arrested/">பாதாள உலக குழுவுடன் தொடர்புடைய முக்கிய நபர் கைது</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>நச்சு வாசனை திரவியத்தை நுகர்ந்த மாணவர்கள் வைத்தியசாலையில்</title>
		<link>https://oruvan.com/students-hospitalized-after-consuming-toxic-perfume/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Wed, 16 Jul 2025 08:01:00 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[தலவாக்கலை]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=26745</guid>

					<description><![CDATA[<p>தலவாக்கலை பகுதியில் இயங்கும் தமிழ் பாடசாலை ஒன்றில் இன்று (16) தரம் 6 இல் கல்வி கற்கும் மூன்று மாணவர்கள் நச்சுத்தன்மை வாய்ந்த அல்லது தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களைக் கொண்ட வாசனை திரவியத்தை நுகர்ந்ததால் திடீர் சுகவீனம் அடைந்து லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். நச்சுத்தன்மை வாய்ந்த வாசனை திரவியத்தை நுகர்ந்தன் காரணமாக குறித்த மாணவர்களுக்கு தலைசுற்றல், தலைவலி, குமட்டல் வாந்தி பேதி மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/students-hospitalized-after-consuming-toxic-perfume/">நச்சு வாசனை திரவியத்தை நுகர்ந்த மாணவர்கள் வைத்தியசாலையில்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தலவாக்கலை பகுதியில் இயங்கும் தமிழ் பாடசாலை ஒன்றில் இன்று (16) தரம் 6 இல் கல்வி கற்கும் மூன்று மாணவர்கள் நச்சுத்தன்மை வாய்ந்த அல்லது தீங்கு விளைவிக்கும் இரசாயனங்களைக் கொண்ட வாசனை திரவியத்தை நுகர்ந்ததால் திடீர் சுகவீனம் அடைந்து லிந்துலை பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.</p>
<p>நச்சுத்தன்மை வாய்ந்த வாசனை திரவியத்தை நுகர்ந்தன் காரணமாக குறித்த மாணவர்களுக்கு தலைசுற்றல், தலைவலி, குமட்டல் வாந்தி பேதி மற்றும் சுவாசிப்பதில் சிரமம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாக லிந்துலை பிராந்திய வைத்திசாலையின் மாவட்ட வைத்திய அதிகாரி அசேல மல்லவராச்சி தெரிவித்தார்.</p>
<p>எனினும் மாணவர்களின் உடல்நிலை மோசமானதாக இல்லை எனவும் வைத்தியர் தெரிவித்தார் ,</p>
<p>தலவாக்கலை பகுதியில் இயங்கும் குறித்த தமிழ் பாடசாலையில் தரம் 6இல் கல்வி கற்கும் ஒரு மாணவர் பாடசாலைக்கு கொண்டு வந்த நறுமண போத்தலை ஏனைய மாணவர்களுக்கும் பூசியதால் உடல்நலக்குறைவு ஏற்பட்டது தெரியவந்துள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/students-hospitalized-after-consuming-toxic-perfume/">நச்சு வாசனை திரவியத்தை நுகர்ந்த மாணவர்கள் வைத்தியசாலையில்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
