<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>தயாசிறி Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/%E0%AE%A4%E0%AE%AF%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%B1%E0%AE%BF/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/தயாசிறி/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Thu, 22 Jan 2026 12:11:16 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>தயாசிறி Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/தயாசிறி/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>ஶ்ரீதரன் உடன் பதவி விலக வேண்டும் &#8211; தயாசிறி</title>
		<link>https://oruvan.com/sridharan-should-resign-with-him-dayasiri/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Thu, 22 Jan 2026 12:11:16 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[தயாசிறி]]></category>
		<category><![CDATA[ஶ்ரீதரன்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=43624</guid>

					<description><![CDATA[<p>அரசியலமைப்பு பேரவையில் இருந்து உடனடியாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஶ்ரீதரன் விலக வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கடுமையாக சாடியுள்ளார். அவர் பாராளுமன்றில் இன்று (22) இடம்பெற்ற சபை அமர்வில் கலந்து கொண்டு, இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, சிறுபான்மை கட்சி சார்பாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ் ஶ்ரீதரன் அரசியலமைப்பு பேரவையில் அங்கம் வகிக்கின்றார். எனினும் அரசாங்கத்தின் அனைத்து தீர்மானங்களுக்கும் அரசியலமைப்பு பேரவையில் அவர் கைகளை [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/sridharan-should-resign-with-him-dayasiri/">ஶ்ரீதரன் உடன் பதவி விலக வேண்டும் &#8211; தயாசிறி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>அரசியலமைப்பு பேரவையில் இருந்து உடனடியாக இலங்கை தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.ஶ்ரீதரன் விலக வேண்டும் என பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர கடுமையாக சாடியுள்ளார்.</p>
<p>அவர் பாராளுமன்றில் இன்று (22) இடம்பெற்ற சபை அமர்வில் கலந்து கொண்டு, இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>இது தொடர்பில் அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,</p>
<p>சிறுபான்மை கட்சி சார்பாக பாராளுமன்ற உறுப்பினர் எஸ் ஶ்ரீதரன் அரசியலமைப்பு பேரவையில் அங்கம் வகிக்கின்றார்.</p>
<p>எனினும் அரசாங்கத்தின் அனைத்து தீர்மானங்களுக்கும் அரசியலமைப்பு பேரவையில் அவர் கைகளை தூக்கி ஆதரவு வழங்குகின்றார்.</p>
<p>அவர் தவறான நபர்களை பதவியில் நியமிப்பதற்கும் தமது ஆதரவை வழங்கியுள்ளார்.</p>
<p>தற்போது இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவின் பணிப்பாளர் நாயகத்தை நியமிப்பதற்கான வாக்கெடுப்பின் போது ஶ்ரீதரன் ஆதரவு வழங்குகிறார்.</p>
<p>அவர் அதற்கான நியாயப்பாடுகளையும் அறிவிக்கவில்லை.</p>
<p>சூரிய மின் சக்தி வேலைத்திட்டத்திற்கான காணி ஒதுக்கீடு விடயத்துடன் தொடர்புப்படுத்தி இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி குறித்து தற்போது ஶ்ரீதரன் சாரங்கனுக்கு எதிராக இலஞ்சம் மற்றும் ஊழல் ஆணைக்குழுவில் முறைப்பாடு ஒன்றும் முன்வைக்கப்பட்டுள்ளது.</p>
<p>பல குற்றச்சாட்டுக்களை முன்வைத்து இலங்கை தமிழரசுக் கட்சிக் கூட அவரை அரசியலமைப்பு பேரவையில் இருந்து விலகுமாறு அறிவுறுத்தியுள்ளது.</p>
<p>எதிர்க்கட்சிகளின் கோரிக்கைகளின் அடிப்படையில் அந்த பேரவைக்கு நியமிக்கப்பட்ட அவர், அரசாங்கத்தின் தீர்மானங்கள் அனைத்துக்கும் ஆதரவளிக்கிறார்.</p>
<p>அது மாத்திரமல்ல அவருக்கு எதிராக பல குற்றச்சாட்டுக்கள் உள்ளன.</p>
<p>கணக்காய்வாளர் நியமனம், இழப்பீட்டு அலுவலகங்களுக்கான நியமனத்தில் இராணுவ பின்புலம் கொண்ட இருவரது நியமனத்திற்கு ஆதரவளித்தமை உள்ளிட்ட பல குற்றச்சாட்டுக்கள் உள்ளன.</p>
<p>வடக்கு மக்களின் வாக்கில் பாராளுமன்றம் வந்த அவர், அவர்களுக்கு எதிராக செயற்படுவதை அவதானிக்க முடிகின்றது.</p>
<p>எனவே அரசியலமைப்பு பேரவையில் இருந்து எஸ்.ஶ்ரீதரன் உடனடியாக பதவி விலக வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/sridharan-should-resign-with-him-dayasiri/">ஶ்ரீதரன் உடன் பதவி விலக வேண்டும் &#8211; தயாசிறி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தயாசிறியின் செயற்பாடு தொடர்பில் ஆராய குழு</title>
		<link>https://oruvan.com/committee-to-investigate-dayasiris-activities/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Wed, 19 Nov 2025 07:00:40 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[தயாசிறி]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=38661</guid>

					<description><![CDATA[<p>பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் நடவடிக்கை குறித்து பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சுனில் வடகல சமர்ப்பித்த முறைப்பாடு தொடர்பாக விசாரணை செய்ய மூவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது. 2025 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 24 ஆம் திகதி சபா மண்டபத்தினுள் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் இன்று (19) பாராளுமன்றத்தில் அறிவித்தார். பிரதிச் சபாநாயகர் ரிஸ்வி சாலி இந்தக் குழுவின் தலைவராக பெயரிடப்பட்டுள்ளார். பாராளுமன்ற உறுப்பினர்களான உபாலி பன்னிலகே மற்றும் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/committee-to-investigate-dayasiris-activities/">தயாசிறியின் செயற்பாடு தொடர்பில் ஆராய குழு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பாராளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகரவின் நடவடிக்கை குறித்து பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சுனில் வடகல சமர்ப்பித்த முறைப்பாடு தொடர்பாக விசாரணை செய்ய மூவர் அடங்கிய குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.</p>
<p>2025 ஆம் ஆண்டு செப்டெம்பர் மாதம் 24 ஆம் திகதி சபா மண்டபத்தினுள் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் ஆராய்வதற்காக இந்தக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாக சபாநாயகர் இன்று (19) பாராளுமன்றத்தில் அறிவித்தார்.</p>
<p>பிரதிச் சபாநாயகர் ரிஸ்வி சாலி இந்தக் குழுவின் தலைவராக பெயரிடப்பட்டுள்ளார்.</p>
<p>பாராளுமன்ற உறுப்பினர்களான உபாலி பன்னிலகே மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோர் அதன் உறுப்பினர்களாக பெயரிடப்பட்டுள்ளனர்.</p>
<p>சபாநாயகர் விடுத்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டதாவது:</p>
<p>&#8220;2025 செப்டெம்பர் 24 ஆம் திகதி சபா மண்டபத்தினுள் பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி தயாசிறி ஜயசேகரவின் செயல் குறித்து, பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி சுனில் வடகல செப்டெம்பர் 25 ஆம் திகதி நடைபெற்ற பாராளுமன்ற அலுவல்கள் பற்றிய குழுக் கூட்டத்தில் சமர்ப்பித்த முறைப்பாட்டைக் கவனத்தில் கொண்டு, அது தொடர்பாக விசாரித்து அறிக்கை சமர்ப்பிப்பதற்காக, பிரதிச் சபாநாயகர் ரிஸ்வி சாலி தலைமையில், பாராளுமன்ற உறுப்பினர்கள் உபாலி பன்னிலகே மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரை உறுப்பினர்களாகக் கொண்ட மூவர் அடங்கிய குழுவொன்றை நான் நியமித்துள்ளேன் என்பதைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன் என தெரிவித்தார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/committee-to-investigate-dayasiris-activities/">தயாசிறியின் செயற்பாடு தொடர்பில் ஆராய குழு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
