<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>ஜே.வி.பி. Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/%e0%ae%9c%e0%af%87-%e0%ae%b5%e0%ae%bf-%e0%ae%aa%e0%ae%bf/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/ஜே-வி-பி/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Fri, 27 Jun 2025 04:57:56 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>ஜே.வி.பி. Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/ஜே-வி-பி/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>அநுர அரசு கால் வைக்கும் இடமெல்லாம் கோரமாய் கண்ணிவெடிகள்</title>
		<link>https://oruvan.com/wherever-the-anuradhapura-government-sets-foot-there-are-landmines-everywhere/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Fri, 27 Jun 2025 05:20:27 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[there are landmines everywhere.]]></category>
		<category><![CDATA[Wherever the Anuradhapura government sets foot]]></category>
		<category><![CDATA[அநுரகுமார திஸாநாயக்க]]></category>
		<category><![CDATA[ஜே.வி.பி.]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=24765</guid>

					<description><![CDATA[<p>”ஜனாதிபதிக்கும் அரசுக்கும் உள்நாட்டுக்குள் தான் கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடிகள், மிதிவெடிகள் என்று பார்த்தால் இஸ்ரேல்-காஸா போர் ,இஸ்ரேல்-ஈரான் யுத்தம் போன்றவற்றில் ஏவப்படும் ஏவுகணைகளும் எங்கே மீண்டும் இலங்கையில் எரிபொருள் வரிசை யுகத்தை உருவாக்கி மீண்டும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சத்தை அரசுக்கு ஏற்படுத்தும் வகையில் இலங்கையிலும் வெடிக்க ஆரம்பித்துள்ளன” இலங்கையின் அரசியலில் எவருமே நிகழ்த்தாத சாதனைகளை நிகழ்த்தி ஆட்சி பீடம் ஏறிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் அவரின் ஜே .வி.பி.- தேசியமக்கள் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/wherever-the-anuradhapura-government-sets-foot-there-are-landmines-everywhere/">அநுர அரசு கால் வைக்கும் இடமெல்லாம் கோரமாய் கண்ணிவெடிகள்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>”ஜனாதிபதிக்கும் அரசுக்கும் உள்நாட்டுக்குள் தான் கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடிகள், மிதிவெடிகள் என்று பார்த்தால் இஸ்ரேல்-காஸா போர் ,இஸ்ரேல்-ஈரான் யுத்தம் போன்றவற்றில் ஏவப்படும் ஏவுகணைகளும் எங்கே மீண்டும் இலங்கையில் எரிபொருள் வரிசை யுகத்தை உருவாக்கி மீண்டும் ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சத்தை அரசுக்கு ஏற்படுத்தும் வகையில் இலங்கையிலும் வெடிக்க ஆரம்பித்துள்ளன”</p>
<p>இலங்கையின் அரசியலில் எவருமே நிகழ்த்தாத சாதனைகளை நிகழ்த்தி ஆட்சி பீடம் ஏறிய ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவும் அவரின் ஜே .வி.பி.- தேசியமக்கள் சக்தி அரசும் தற்போது இலங்கை அரசியலில் எந்த ஜனாதிபதியும் அரசும் எதிர்கொள்ளாதளவுக்கு நெருக்கடிகள்,சர்ச்சைகள்,குற்றச் சாட்டுக்கள்,விமர்சனங்கள்,கேலிகளுக்குள் சிக்கி படாதபாடுபட்டுக் கொண்டிருக்கின்றனர்.ஜனாதிபதியும் அரசும் கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணிவெடிகளும் மிதி வெடிகளாகவுமேயுள்ளன. அதுமட்டுமன்றி இஸ்ரேல்-காஸா போர் ,இஸ்ரேல்-ஈரான் யுத்தம் போன்றவற்றில் ஏவப்படும் ஏவுகணைகளும் இலங்கை ஆட்சியாளர் தலைக்கு மேலாகவும் வெடிக்க ஆரம்பித்துள்ளன . .</p>
<p>ஜனாதிபதி தேர்தலில் அநுரகுமார திஸாநாயக்க பெற்ற வெற்றியின் மூலம் பாராளுமன்றத்தேர்தலில் 159 ஆசனங்கள் என்ற வரலாற்று வெற்றியுடன் தேசியமக்கள் சக்தி அரசு அரியணை ஏறிய நாள் முதல் கலாநிதிப் பட்டம்,அரிசி,தேங்காய்,குரங்கு,உப்பு,பாதாள உலகம்,படுகொலைகள்,சர்வாதிகாரம்,இந்திய பிரதமரின் வருகை ,ஜனாதிபதியின் இந்திய,சீன விஜயங்கள்,உள்ளுராட்சி சபைகளுக்கான தேர்தலில் வாக்கு வீழ்ச்சி,மின்சாரக் கட்டணம்,வடக்கு காணி சுவீகரிப்பு, 323 சிவப்பு முத்திரை கொள்கலன்கள் விடுவிப்பு, என பல சர்ச்சைகளில் சிக்கி சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கின்றது.</p>
<p>ஆனாலும் ஜனாதிபதிக்கும் தேசிய மக்கள் சக்தி அரசுக்கும் எதிரான இவ்வாறான சர்ச்சைகள் , குற்றச்சாட்டுக்கள் ,விமர்சனங்கள், கேலிகளுக்கு ஜனாதிபதியோ அரசோ இன்றுவரை சரியான பதிலையோ தீர்வுகளையோ விளக்கங்களையோ வழங்காது இவற்றை மக்களை மறக்கடிக்கச்செய்யும் முயற்சியாகவும் இவ்வாறான சர்ச்சைகளை குற்றச்சாட்டுகளை,விமர்சனங்களை முன்வைக்கும் எதிர்க் கட்சிகளை அச்சுறுத்தும்,அடக்கும் விதமாகவும் அரசியல் கைதுகளை அதிகரித்துள்ள நிலையில்தான் ”சிறைக்கைதிகளுக்கான ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் மோசடி”என்ற கண்ணிவெடிமீது அரசு காலை வைத்தது.</p>
<p>ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்படுகின்ற சிறைக் கைதிகள் தொடர்பிலேயே ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் அவரின் தேசிய மக்கள் சக்தி அரசும் தற்போது கடும் குற்றச்சாட்டுகளையும் விமர்சனங்களையும் எதிர்கொண்டுள்ளனர்.தேசிய பொசன் தின கொண்டாட்டத்தை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய அனுமதிக்கப்பட்ட சிறை கைதிகளுக்கு பதிலாக வேறு கைதி ஒருவர் ஊழல்,மோசடிக் குற்றச்சாட்டில் குற்றவாளியாக நீதிமன்றத்தினால் தீர்ப்பு வழங்கப்பட்ட 10 நாட்களுக்குள் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பில் விடுதலை செய்யப்பட்டதை அடுத்தே அரசுக்கு எதிரான இந்த சர்ச்சை வெடித்துள்ளது.</p>
<p>தேசிய பொசன் தின கொண்டாட்டத்தை முன்னிட்டு நாடு முழுவதும் 29 சிறைகளிலிருந்து 338 கைதிகள் ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டனர்.இவர்களில் அநுராதபுரம் மேல் நீதிமன்றத்தால் குற்றவாளி என அறிவிக்கப்பட்டு தண்டனை வழங்கப்பட்ட சிறைக் கைதி ஒருவரும் இம்முறை ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டிருந்தார்.நாற்பது லட்சம் ரூபா நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டின் கீழ் கைது செய்யப்பட்ட நிதி நிறுவனமொன்றின் அநுராதபுரம் கிளை முகாமையாளரான இவருக்கு சிறைத் தண்டனை வழங்கப்பட்ட 10 நாட்களுக்குள் ஜனாதிபதியால் பொது மன்னிப்பு வழங்கப்பட்டு விடுதலை செய்யப்பட்டார்.</p>
<p>தேசிய பொசன் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியால் வழங்கப்பட்ட பொது மன்னிப்பின் கீழ் இந்தக் குற்றவாளி விடுதலை செய்யப்படுவதாக சிறைச்சாலை அதிகாரிகள் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தனர்.அநுராதபுரம் சிறைச்சாலை அதிகாரிகள், எழுத்து மூலம் நீதிமன்றத்திற்கு முன்வைத்த ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு வடமத்திய மாகாண மேல் நீதிமன்ற நீதிபதி லக்மாலி ஹேவாசமினால், இந்தக் குற்றவாளி இவருக்கு எதிரான வழக்கில் இருந்து விடுதலை செய்யப்பட்டார்.</p>
<p>இந்நிலையில் 2025 பொசன் தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் அநு ராதபுரம் சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த டபிள்யூ.எச். அதுல திலகரத்ன என்பவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டு தீர்ப்புவழங்கப்படட 10 தினங்களுக்குள் விடுவிக்கப்பட்டதாக பாராளுமன்றத்தின் கவனத்திற்கு கொண்டுவந்த எதிர்க்கட்சி, இந்தச் சம்பவத்தின் பின்னணியில் கடுமையான முறைகேடு இருப்பதாக குற்றம்சாட்டிய நிலையிலேயே கிணறு வெட்ட பூதம் கிளம்பிய கதையாக ”சிறைக்கைதிகளுக்கான ஜனாதிபதி பொது மன்னிப்பு”என்ற போர்வையில் நடந்த மோசடிகள் வெளிவரத் தொடங்கியுள்ளன.</p>
<p>ஜனாதிபதியாக அநுரகுமார திசாநாயக்க பதவியேற்ற பின்னர் ”சிறைக்கைதிகளுக்கான ஜனாதிபதி பொது மன்னிப்பு”என்ற போர்வையில் சட்டவிரோதமாக 68 கைதிகள் இதுவரை விடுவிக்கப்பட்டுள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது. இவ்வாறான நிலையில் ”ஜனாதிபதி பொதுமன்னிப்பு”என்றபெயரில் கைதி ஒருவர் மோசடியாக விடுதலை செய்யப்பட்டமை தொடர்பில் சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய பணி இடைநீக்கம் செய்யப்பட்டு கொழும்பு மேலதிக நீதவான் மஞ்சுள ரத்நாயக்க முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டபோது,நீதிமன்றத்தில் ஆஜரான மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ், 2024 ஆம் ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தில் 57 கைதிகளும், இந்த ஆண்டு சுதந்திர தினத்தின் போது மேலும் 11 கைதிகளும் தேவையான நிபந்தனைகளை பூர்த்தி செய்யாமல் முறைகேடாக விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தினார்.</p>
<p>ஜனாதிபதியின் பொதுமன்னிப்பை தவறாக பயன்படுத்தி சில கைதிகளை விடுதலை செய்ததாக குற்றம்சாட்டி சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய,அநுராதபுரம் சிறைச்சாலையின் அத்தியட்சர் மோகன் கருணாரத்ன ஆகியோர் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்ட நிலையில்,இலங்கையில் தேசிய நிகழ்வுகளைக் கருத்தில் கொண்டு வழங்கப்படும் ஜனாதிபதியின் பொதுமன்னிப்புக்கான நிபந்தனைகளை, இனிவரும் காலங்களில் நீதி அமைச்சு கடுமையாக்கும் என்று நீதியமைச்சர் ஹர்சன நாணயக்கார தெரிவித்துள்ளார். அதேநேரம் கடந்த ஆட்சிகளிலும் இவ்வாறு ஜனாதிபதி பொது மன்னிப்பு தவறாக பயன் படுத்தப்பட்டுள்ளதா என்பதுதொடர்பில் விசாரணைகள் நடத்தப்படுமென அமைச்சரவை பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ அறிவித்துள்ளார்.</p>
<p>இதேவேளை தேசிய பொசன் தினத்தையொட்டி ஜனாதிபதி பொது மன்னிப்பின் கீழ் விடுவிக்கப்பட்ட 388 கைதிகளின் முழுப் பட்டியலையும் , பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி கோரியுள்ளது.ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவிற்கு அனுப்பப்பட்ட கைதிகளின் பரிந்துரை பட்டியல் மற்றும் அவர் அங்கீகரித்த உரிய பட்டியல் இரண்டும் பொதுமக்களுக்கு பகிரங்கப்படுத்தப்பட வேண்டும்.ஜனாதிபதி யார் யாருக்கெல்லாம் மன்னிப்பு வழங்க அங்கீகாரம் அளித்தார் என்பதைப் பற்றி மக்களுக்கு பதிலளிக்கும் கடமை ஜனாதிபதிக்கு இருக்க வேண்டும் எனவும் எதிர்க்கட்சி வலியுறுத்தியுள்ளது</p>
<p>”ஜனாதிபதி பொதுமன்னிப்பு” மோசடியாக பயன்படுத்தப்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டு சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உபுல்தெனிய,அநுராதபுரம் சிறைச்சாலையின் அத்தியட்சர் மோகன் கருணாரத்ன ஆகியோர் கைது செய்யப்பட்டாலும் சிறைக்கைதிகள் மோசடியாக விடுவிக்கப்பட்டதன் பின்னணியில் அரசியல் இல்லாமல் இல்லை. இவ்விருவர் கைது தொடர்பிலும் அரசு காட்டிய அவசரம் அதன் பின்னால் உள்ள அரசியலை மூடி மறைக்கும் ஒரு கைங்கரியமாகவே பார்க்கப்படுகின்றது. அரசியல் அழுத்தங்கள் அல்லது அரசியல் செல்வாக்கு இல்லாமல் ஜனாதிபதியின் பொது மன்னிப்பை மோசடியாக பயன்படுத்தும் தைரியம் இலகுவில் யாருக்கும் வராது.</p>
<p>ஜனாதிபதியின் பொதுமன்னிப்பை முறையற்ற வகையில் பயன்படுத்தி விடுதலை செய்யப்பட்டதாக கூறப்படும் அதுல திலகரத்ன என்ற நபர் குற்றப்புலனாய்வு பிரிவினரால் தேடப்படும் நிலையில், அவர் தனக்கு எதிரான வேறு வழக்கு விசாரணையொன்றுக்காக அநுராதபுரம் நீதவான் நீதிமன்றத்திற்கு வந்துள்ளமையும் அந்த நீதிமன்றத்தில் இடம்பெற்ற அநுராதபுரம் சிறைச்சாலை பணிப்பாளருக்கு எதிரான வழக்கு விசாரணையையும் பார்வையிட்டுள்ளமையும் தான் நீதிமன்றத்தில் இருக்கின்றேன் என்று கையுயர்த்தி நீதவானிடமும் தெரிவித்துள்மையும் இதனை உறுதிப்படுத்துகின்றன.</p>
<p>அவர் அநுராதபுரம் நீதிமன்றத்தில் இடம்பெற்ற தனக்கு எதிரான வேறு வழக்கொன்றில் தனது சட்டத்தரணியுடன் கலந்துகொண்டிருந்ததுடன், அந்த விசாரணை முடிவடைந்த பின்னர், சிறைச்சாலை பணிப்பாளருக்கு எதிரான வழக்கு விசாரணை நடைபெற்ற பகுதிக்கு சென்று அங்கு பார்வையாளர் பகுதியில் இருந்து வழக்கு விசாரணைகளையும் பார்வையிட்டுள்ளார்.இவ்வேளையில் சிறைச்சாலை பணிப்பாளர் சார்பாக ஆஜராகிய சட்டத்தரணி நீதிமன்றத்தில் விளக்கமளித்து, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டுள்ள சிறைச்சாலை பணிப்பாளர் சட்டவிரோதமான முறையில் அதுல திலகரட்ணவை விடுவிக்கவில்லை என்றும், விடுதலையான நபர் இந்த நீதிமன்றத்தில் இப்போது இருக்கின்றார் என்றும் கூறியுள்ளார். அவர் சட்டப்படி விடுதலையான காரணத்தினாலேயே இங்கே இருக்கின்றார் என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>இதன்போது அங்கிருந்த அதுல திலகரட்ன, தான் இங்கே இருக்கின்றேன் என்று கையுயர்த்தி கூறியுள்ளார். இவ்வேளையில் நீதிமன்ற வளாகத்தில் குற்றப்புலனாய்வு அதிகாரிகளும் இருந்துள்ளனர்.எவ்வாறாயினும் குறித்த வழக்கு விசாரணை முடிந்த பின்னர், அங்கிருந்து அதுல திலகரட்ன தனது நண்பர்களுடன் சிறிது நேரம் கலந்துரையாடியதுடன், குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகளுக்கு முன்னாலேயே அங்கிருந்து வெளியேறி சென்றுள்ளார்.</p>
<p>அவர் ஜனாதிபதியின் பொது மன்னிப்பை மோசடியாக பயன்படுத்தி விடுதலை செய்யப்பட்டிருந்தால் ஏன் அவரை அங்கிருந்த குற்றப்புலனாய்வு பிரிவினர் கைது செய்யவில்லை?அவரை கைது செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிடவில்லை.அதனால் கைது செய்யவில்லை என்றால் ஏன் அவரை கைது செய்யுமாறு உத்தரவிடக்கோரி அரசு தரப்பு நீதிமன்றத்தை இதுவரையில் நாடவில்லை? அவர் அவ்வாறு மோசடியாக விடுதலை செய்யப்பட்டிருந்தால் எவ்வாறு இதுவரையில் தலைமைறைவாகாது தைரியமாக நீதிமன்றம் வந்து தான் இங்கு தான் இருப்பதாக கூறியிருப்பார்?ஆகவேதான் ஜனாதிபதி பொதுமன்னிப்பு என்ற விடயத்தை சிறை அதிகாரிகள் தவறாகப் பயன்படுத்துகின்றனரா அல்லது அமைச்சர்கள் தவறாக பயன்படுத்துகின்றனரா அல்லது ஜனாதிபதியே தவறாகப் பயன்படுத்திவிட்டு அதிகாரிகளை பலிக்கடாவாக்குகின்றாரா என்ற நியாயமான சந்தேகம் எழுந்துள்ளது. எனினும் இதனையும் இந்த அரசு எந்த நியாயமான பதிலும் தீர்வும் வழங்காது கடந்து சென்று இன்னுமொரு சர்ச்சையில் சிக்கிக்கொள்ளும்.</p>
<p>ஜனாதிபதிக்கும் அரசுக்கும் உள்நாட்டுக்குள் தான் கால் வைக்கும் இடமெல்லாம் கண்ணி வெடிகள், மிதிவெடிகள் என்று பார்த்தால் இஸ்ரேல்-காஸா போர் ,இஸ்ரேல்-ஈரான் யுத்தம் போன்றவற்றில் ஏவப்படும் ஏவுகணைகளும் எங்கே மீண்டும் இலங்கையில் எரிபொருள் வரிசை யுகத்தை ஏற்படுத்தி விடுமோ என்ற அச்சத்தை அரசுக்கு ஏற்படுத்தும் வகையில் இலங்கையிலும் வெடிக்க ஆரம்பித்துள்ளன ,ஜனாதிபதியாகவிருந்த கோத்தபாய ராஜபக்ஸவின் வீழ்ச்சிக்கும் அவரின் அரசின் வீழ்ச்சிக்கும் ஆரம்ப புள்ளியாக அமைந்தது எரிபொருளுக்கான வரிசை என்பதை எவரும் இலகுவில் மறந்துவிட முடியாது. அதனால் தான் தற்போதைய இஸ்ரேல்-ஈரான் யுத்தமும் ஜனாதிபதி அநுரகுமாரவுக்கும் அவரின் அரசுக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>
<p>கே.பாலா</p>
<p>The post <a href="https://oruvan.com/wherever-the-anuradhapura-government-sets-foot-there-are-landmines-everywhere/">அநுர அரசு கால் வைக்கும் இடமெல்லாம் கோரமாய் கண்ணிவெடிகள்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>நிஜ முகம் காட்டும் ”ஜே .வி.பி”</title>
		<link>https://oruvan.com/jvp-showing-its-true-face/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Thu, 22 May 2025 13:41:14 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஜே.வி.பி.]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=20961</guid>

					<description><![CDATA[<p>”தேசிய மக்கள் சக்தி என்ற மிதவாத முகமூடியுடன் மக்கள் முன் தோன்றி ஆட்சியை கைப்பற்றியவர்கள் இன்று அந்த ஆட்சியை தக்க வைக்க, சிங்கள வாக்குவங்கியை பாதுகாக்க தமது முகமூடியை கழற்றி பழைய கடும்போக்குவாத, இனவாத ஜே .வி.பி.யினராக தமது ஆட்டத்தை தொடங்கியுள்ளனர். இந்த ஆட்டம் ஜே .வி.பி.-என்.பி.பி.க்கிடையில் பிளவுகளையும் ஏற்படுத்தியுள்ளது” இலங்கையில் வரலாற்று சாதனைகளுடன் ஆட்சியைக்கைப்பற்றி அரியணை ஏறியுள்ள இனவாத ஜே .வி.பி.-மிதவாத தேசிய மக்கள் சக்திக்கிடையிலான மோதல் போக்கும் விரிசலும் தொடர்ந்தும் அதிகரித்து வருவதனை ஜே [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/jvp-showing-its-true-face/">நிஜ முகம் காட்டும் ”ஜே .வி.பி”</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>”தேசிய மக்கள் சக்தி என்ற மிதவாத முகமூடியுடன் மக்கள் முன் தோன்றி ஆட்சியை கைப்பற்றியவர்கள் இன்று அந்த ஆட்சியை தக்க வைக்க, சிங்கள வாக்குவங்கியை பாதுகாக்க தமது முகமூடியை கழற்றி பழைய கடும்போக்குவாத, இனவாத ஜே .வி.பி.யினராக தமது ஆட்டத்தை தொடங்கியுள்ளனர். இந்த ஆட்டம் ஜே .வி.பி.-என்.பி.பி.க்கிடையில் பிளவுகளையும் ஏற்படுத்தியுள்ளது”</p>
<p>இலங்கையில் வரலாற்று சாதனைகளுடன் ஆட்சியைக்கைப்பற்றி அரியணை ஏறியுள்ள இனவாத ஜே .வி.பி.-மிதவாத தேசிய மக்கள் சக்திக்கிடையிலான மோதல் போக்கும் விரிசலும் தொடர்ந்தும் அதிகரித்து வருவதனை ஜே .வி.பி-தேசியமக்கள் சக்தி தலைவரான ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவின் ஜே .வி.பி.யின் 60 ஆவது ஆண்டு நிறைவு தினக் கூட்ட உரை மீண்டுமொரு தடவை உறுதிப்படுத்தியுள்ளதுடன் ஜனாதிபதி அநுரகுமார தலைமையில் ஒரு அணி ஜே.வி.பி. சார்பு கடும்போக்குவாத இனவாத அணியாகவும், பிரதமர் ஹரிணி அமரசூரிய தலைமையில் இன்னொரு அணி மிதவாதப் போக்குடைய ”கற்றோர்” அணியாகவும் பிளவுபடத் தொடங்கியுள்ளது.</p>
<p>ஆட்சியிலுள்ள ஜே .வி.பி.- தேசிய மக்கள் சக்திக்கிடையிலான மோதல்போக்கும் விரிசலும் முதலில் , தங்களது அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்கள் சம்பளம், சலுகைகள், வாகனங்கள், எரிபொருள், ஊழியர்கள் போன்றவற்றைப் பெற மாட்டார்கள் என்ற ஜே.வி.பி.யின் அறிவிப்புடன் ஆரம்பமானது. முழுநேர ஜே.வி.பி உறுப்பினர்கள் அத்தகைய சலுகைகள் இல்லாமல் வாழ முடிந்தாலும், உயர்மட்ட சம்பளம், வேலைகள் மற்றும் சலுகைகளை ஒதுக்கி வைத்துவிட்டு பாராளுமன்றத்திற்கு வந்த தேசிய மக்கள் சக்தியிலுள்ள ”கற்றோர்” குழுவினருக்கு இது பெரிய பிரச்சினையாக மாறியது.</p>
<p>பாராளுமன்றத்தில் மக்கள் விடுதலை முன்னணி ( ஜே .வி.பி.) தேசிய மக்கள் சக்தி கூட்டணிக்கு (என்.பி.பி.)159 ஆசனங்கள் கிடைக்கப் பெற்ற நிலையில், இவற்றில் 107 பேர் தேசிய மக்கள் சக்தியையும் 52 பேர் நேரடியாக ஜே.வி.பியையும் பிரதிநிதித்துவப்படுத்துகின்றனர்.எனினும் தேசிய மக்கள் சக்தியை பிரதிநிதித்துவப்படுத்தும் 107 பாராளுமன்ற உறுப்பினர்களில் பெரும்பான்மையானவர்கள் கலாநிதி பட்டம் மற்றும் பேராசிரியர் பட்டங்களை வகிப்பவர்கள். அதே போல் பெரிய நிறுவனங்கள் மற்றும் நிறுவனங்களில் உயர் பதவிகளை வகித்து அதிக சலுகைகள் மற்றும் அதிக சம்பளத்துடன் பணியாற்றிய நிலையில் தற்போது தங்களுடைய பாராளுமன்ற உறுப்புரிமைக்காக அவற்றை கைவிட்டுள்ள நிலையில் பாராளுமன்ற சலுகைகளையும் தியாகம் செய்யுமாறு பணிக்கப்பட்டனர். அரசின் ஜனாதிபதி பிரதமர் , அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர்களின் சம்பளங்கள் கூட ஜே .வி.பி. கட்சியின் கணக்கிற்கே செல்வதனால் அரசுக்குள் இரு அணிகளுக்குமிடையில் முதலில் முரண்பாடுகள் தோற்றம் பெற்றன.</p>
<p>இரண்டாவதாக இந்தியாவுக்கு அநுரகுமார தலைமையிலான ஜே .வி.பி. – தேசிய மக்கள் சக்தி அரசு விரும்பியோ விரும்பாமலோ கொடுக்கும் முக்கியத்துவம் வழக்கமாக சீனா ஆதரவுடன் இயங்கும் ஜே .வி.பி.யில் உள்ள இந்திய எதிர்ப்புணர்வாளர்களை சினமடைய வைத்துள்ள நிலையில் அண்மைய இந்தியப்பிரதமர் நரேந்திரமோடியின் இலங்கைக்கான விஜயம் ஜே .வி.பி.- தேசிய மக்கள் சக்திக்குள் புகைந்து கொண்டிருந்த முறுகலை, பிளவுகளை மேலும் தீவிரப்படுத்தியது. தீவிர இந்திய எதிர்ப்புணர்வாளரும் இலங்கையின் நிறைவேற்றதிகார ஜனாதிபதியுமான அநுரகுமார திசாநாயக்க, தான் ஜனாதிபதியாக பதவியேற்றவுடன் இராஜதந்திர அழுத்தங்கள் காரணமாக முதல் நாடாக இந்தியாவுக்கு மேற்கொண்ட உத்தியோகபூர்வ விஜயம் அரசுக்குள் ஏற்படுத்திய விரிசலை விடவும் இந்தியப் பிரதமர் நரேந்திரமோடி இலங்கைக்கு மேற்கொண்ட விஜயம் ஜே .வி.பி. -தேசிய மக்கள் சக்திகிடையிலான விரிசலை மேலும் அதிகப்படுத்தியது.</p>
<p>இவ்வாறான நிலையில் தான் ஏறுமுகமாக இருந்த ஜே .வி.பி.-தேசிய மக்கள் சக்தியின் மக்கள் ஆதரவு நடந்து முடிந்த உள்ளூராட்சிசபைகளுக்கான தேர்தலில் இறங்குமுமானதால் அதிர்ச்சியடைந்த ஜே .வி.பி.செயலாளர் நாயகம் ரில்வின் சில்வாவும் கட்சியின் முக்கியஸ்தர்களாகவுள்ள ஜே .வி.பி அமைச்சர்களும் கட்சித்தலைவரான அநுரகுமார திசாநாயக்கவுக்கு விடுத்த எச்சரிக்கையும் கொடுத்த நெருக்கடியும் தான் ஆரம்பத்தில் மிதவாதப் போக்குடைய தேசிய மக்கள் சக்தி அணி சார்பாக இருந்த ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவை கடும்போக்குவாத,இனவாத அணிப் பக்கம் தற்போது சாய வைத்துள்ளது.</p>
<p>இதன் விளைவாகவே ஜே.வி.பி.யின் வரலாற்றை மறந்து செயற்பட முடியாதென , ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க கொழும்பில் அண்மையில் நடந்த ஜே.வி.பியின் 60 ஆவது ஆண்டுநிறைவு தினக் கூட்டத்தில் தேசிய மக்கள் சக்தியின் பிரதமர் ஹரிணி அமரசூரியவை வைத்துக்கொண்டு பகிரங்கமாக அறிவித்தார். ஜனாதிபதி இந்த அறிவிப்பை விடுத்த போது ஜே.வி.பி பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா சிரித்த சிரிப்பின்மூலம் ஜனாதிபதி தேர்தல் , பாராளுமன்ற தேர்தலுக்குப் பின்னர் தேசிய மக்கள் சக்தியின் மிதவாத போக்குடன் பயணித்த ஜனாதிபதி அநுரகுமாரவை தற்போது ஜே.வி.பி .யின் கடும்போக்குவாத,இனவாத பிடிக்குள் கொண்டுவந்துள்ள வெற்றிக் களிப்பைக் காண முடிந்தது.</p>
<p>இந்த நிகழ்வில் மேலும் உரையாற்றிய ஜனாதிபதி ,வேதனைகள் பலவற்றுடனான வரலாற்றை கொண்ட கட்சியாக ஜே .வி.பி. இருந்துள்ளது. கஸ்டங்கள், சித்திரவதைகள், வேதனைகள், தோல்விகள் அதேபோன்று காட்டிக்கொடுப்புகள் மற்றும் சூழ்ச்சிகளையும் கண்டுள்ள கட்சியாக இருந்தது. இவற்றுக்கு சமாந்திரமாக வெற்றிகளையும் நாங்கள் கண்டுள்ளோம். சவால்களுக்கு மத்தியில் இந்த இயக்கத்தை கைவிடுவதற்கு எவ்வளவோ சந்தர்ப்பங்கள் இருந்தன. ஆனால் வெற்றியென்ற எதிர்பார்ப்புடன் 60 வருடங்களாக பயணித்துள்ளோம். இதனை சாதாரண அரசியல் இயக்கங்களால் செய்ய முடியாது. இப்போது நாங்கள் மிகவும் பலமாக மக்களிடையே முன்வந்துள்ளோம். எமது துணிச்சலே இவற்றுக்கு காரணம்.</p>
<p>இப்போது எதிர்க்கட்சியோ பல்வகை கட்சியாகவே இருக்கின்றது. அந்த பல்வகை கட்சிகள் கூடினாலும் அவர்களால் வெற்றி பெற முடியாது. பிரிந்துநின்று வாக்குகளை கேட்டு இப்போது சபையில் ஒன்றாகி சபைகளை அமைக்க முயற்சிக்கின்றனர். வெட்கமில்லையா? வேண்டுமென்றால் பல்வகை எதிர்க்கட்சிகள் ஒன்றாக ஒருபக்கத்திலும் நாம் ஒரு பக்கத்திலும் அரசியல் செய்வோம். அப்போது மக்கள் தமது அரணாக எம்மையே தெரிவு செய்வர். ஒரு சபையையும் வெற்றி பெறாமல் ஜனாதிபதியாக முடியுமா? அவர்கள் தங்களை ஜே.வி.பி என்று நினைக்கின்றனர். ஆனால் அவ்வாறான வெற்றியை ஜே.வி.பியால் மட்டுமே பெற முடியும். என ஜே .வி.பி புராணமே பாடியுள்ளார்.</p>
<p>ஜே .வி.பி.யின் படுகொலைகள்,வன்முறைகள் உச்சம் தொட்ட நிலையில் ஜனாதிபதியாக பிரேமதாச பதவியேற்ற பின்னர் இரும்புக்கரம் கொண்டு ஜே .வி.பி.அடக்கப்பட்டது ,அழிக்கப்பட்டது. இதன்பின்னர் ஜே.வி.பி. தலைமைத்துவம் 1994இல் மீண்டும் ஒன்றுகூடி, ஆளும் வர்க்கத்தின் ஒரு பிரிவினரின் ஆதரவுடன், அதன் சோசலிச வாய்ச்சவடால்களை பெருமளவில் கைவிட்டுவிட்டு, தமிழ் மக்களுக்கு எதிரான கொடூரமான இனவாத யுத்தத்தை ஆதரித்ததுடன், தம்மை ஒரு பாராளுமன்றக் கட்சியாக மாற்றிக்கொண்டது. இவ்வாறான நிலையில்தான் இந்திய-இலங்கை ஒப்பந்தத்தின் அடிப்படையிலான வடக்கு,கிழக்கு இணைப்பை நீதிமன்றத்தினூடாக பிரித்ததுடன் இராணுவத்திற்கு ஆட்சேர்ப்பு செய்து தமிழ் மக்களுக்கு எதிரான இறுதி அழித்தொழிப்பு யுத்தத்தை ஆரம்பிக்கவும் முன்நின்றது.</p>
<p>போருக்கான அதன் ஆதரவு மற்றும் பல்வேறு முதலாளித்துவ அரசாங்கங்களில் அதன் பங்கேற்பு அல்லது அரசியல் ஆதரவளிப்பினால் செல்வாக்கிழந்து போன ஜே.வி.பி. 2015 இல் தேசிய மக்கள் சக்தி என்ற கட்சியை ஸ்தாபித்தது. ஜே.வி.பி.யின் கடந்த கால ஆயுத வன்முறை ,படுகொலை அடையாளத்தை மறைக்கும் நோக்கிலேயே, அநுரகுமாரவும் அவருக்கு ஆலோசனைகளை வழங்கும் கற்றோர்களும் தேசிய மக்கள் சக்தி என்ற புதிய முகமூடியைப் போட்டுக் கொண்டார்கள்.சிவில் சமூக அமைப்புக்கள் சிலவற்றையும், கல்வியாளர்களையும் புதிதாக இணைத்துக் கொண்டு தேசிய மக்கள் சக்தியாக உருமாறி கடந்த ஜனாதிபதித் தேர்தலையும் பாராளுமன்றத் தேர்தலையும் எதிர்கொண்டு வெற்றிபெற்று இன்று ஆட்சியாளர்களாகியுள்ளனர்.</p>
<p>நடந்து முடிந்த உள்ளூராட்சி சபைகளுக்கான தேர்தலில் ஏற்பட்ட பின்னடைவுக்கு தேசிய மக்கள் சக்தியின் மிதவாத போக்கே காரணம் என்பது ஜே.வி.பி . தரப்பின் குற்றச்சாட்டு. சிங்கள தேசியவாதம் முன்னிலைப்படுத்தப்பட வேண்டும் என்பதே அவர்களின் வாதம்.அதனால் தான் தற்போது ஜே .வி.பி. அமைச்சர்கள் இனவாதம் கக்கத் தொடங்கியுள்ளனர். தமிழினவாதம் தலைவிரித்தாடுவதாக குற்றம்சாட்டத்தொடங்கியுள்ளனர்.தமிழ் அரசியல் கைதிகள் எவருமே இல்லை என்கின்றனர். வடக்கில் 6000 ஏக்கர் கரையோரக் காணிகளை ஆக்கிரமிக்கும் வர்த்தமானியை வெளியிட்டுள்ளனர்.</p>
<p>கடந்த மாவீரர் தின நினைவு நிகழ்வுக்கெல்லாம் அனுமதி கொடுத்தவர்கள் இன்று இனப்படுகொலைக்கான கனடா நினைவுச் சின்னத்திற்கு கனடா தூதுவரை அழைத்து கடும்கண்டனம் தெரிவிக்கினறனர். இனப்படுகொலை என்பது கட்டுக்கதை என்கின்றனர். சர்வதேச விசாரணைகளை , தலையீடுகளை ஏற்க முடியாதென்கின்றனர்.தமிழ் தேசியக்கட்சி வன்னியில் கசிப்பும் பணமும் கொடுத்தே வாக்குகளைப் பெற்றதாக அமைச்சர்கள் புலம்புகின்றனர்.ஆனையிறவு உப்புக்கு தமிழ் பெயர் வைக்க முடியாது .பெயரை விட்டு உப்பின் ருசியைப்பாருங்கள் என்கின்றனர்.வடக்கின் உப்பு வடக்கிற்கு என்ற கோரிக்கைக்கு இடமில்லை என்கின்றனர். போராட்டங்கள், ஆர்ப்பாட்டங்களை அடக்க, ஒடுக்கத் தொடங்கியுள்ளனர் ஜனாதிபதி அடிக்கடி மகாநாயக்கர்களை சந்தித்து மண்டியிடுகின்றார்.</p>
<p>உள்ளூராட்சி சபைகளில் நாம் வெற்றி பெற்றுள்ள இடங்களில் மக்கள் ஆணைக்கு எதிராக சவால்விடுக்கும் வகையில் எவராவது ஆட்சியமைக்க முயன்றால் நாங்கள் பாராளுமன்ற மற்றும் அரசியலமைப்பு அதிகாரங்களை பயன்படுத்துவோம் என ஜனாதிபதி எச்சரிக்கின்றார். நாம் வெற்றிபெற்றுள்ள உள்ளூராட்சி சபைகளில் எதிர்க்கட்சிகள் ஏதேனும் முறையில் ஆட்சியமைப்பார்களாக இருந்தால் மத்திய அரசாங்கத்தினால் அவ்வாறான சபைகளுக்கு நிதி வழங்கப்படாது.அவ்வாறு எதிர்க்கட்சிகள் ஆட்சியமைக்கும் சபைகளில் அதிகாரிகளுக்கு சம்பளம் வழங்கப்பட்டாலும், அந்தப் பிரதேசங்களின் அபிவிருத்திக்காக நிதி வழங்கப்படாது என்று பாராளுமன்ற சபை முதல்வரும் அமைச்சருமான பிமல் ரத்நாயக்க மிரட்டுகின்றார்.</p>
<p>எனவே தேசிய மக்கள் சக்தி என்ற மிதவாத முகமூடி அணிந்து ”மாற்றம்” என்ற வேஷத்துடன் மக்கள் முன் தோன்றி ஆட்சியை கைப்பற்றியவர்கள் இன்று அந்த ஆட்சியை தக்க வைக்க தமது முகமூடியை கழற்றி வேஷத்தை கலைத்து பழைய கடும்போக்குவாத,இனவாத முகத்தைக்காட்டத் தொடங்கியுள்ளனர்.</p>
<p>கே.பாலா</p>
<p>The post <a href="https://oruvan.com/jvp-showing-its-true-face/">நிஜ முகம் காட்டும் ”ஜே .வி.பி”</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>&#8216;நிறைவேற்று அதிகாரம் ஒழிப்பு&#8217; &#8211; அநுரவை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் புதிய வியூகம்</title>
		<link>https://oruvan.com/abolition-of-executive-power-opposition-parties-new-strategy-to-overthrow-anuradha/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Wed, 05 Mar 2025 06:43:02 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க]]></category>
		<category><![CDATA[நிறைவேற்று அதிகாரம் ஒழிப்பு]]></category>
		<category><![CDATA[மஹிந்த ராஜபக்ச]]></category>
		<category><![CDATA[மாதுலுவாவே சோபித தேரர்]]></category>
		<category><![CDATA[ஜே.வி.பி.]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=13268</guid>

					<description><![CDATA[<p>&#8216;நிறைவேற்று அதிகாரம் ஒழிப்பு&#8217; என்ற முழக்கம் கடந்த 1977ஆம் ஆண்டுமுதல் ஒவ்வொரு நாடாளுமன்றத்திலும் எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்படுகிறது. நிறைவேற்று அதிகாரம் ஒழிக்கப்பட வேண்டும் என நாட்டின் சிவில் அமைப்புகளும் ஏனைய தரப்புகளும் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றன. குறிப்பாக 1994 முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து ஜனாதிபதிகளும் தமது தேர்தல் பிரச்சாரத்தின் ஆயுதமாகவும் &#8216;நிறைவேற்று அதிகாரம் ஒழிப்பு&#8217; என்ற சொல்லை பயன்படுத்தி வருகின்றனர். 1994 இல் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இதற்காக ஜே.வி.பி உடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தார். [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/abolition-of-executive-power-opposition-parties-new-strategy-to-overthrow-anuradha/">&#8216;நிறைவேற்று அதிகாரம் ஒழிப்பு&#8217; &#8211; அநுரவை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் புதிய வியூகம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>&#8216;நிறைவேற்று அதிகாரம் ஒழிப்பு&#8217; என்ற முழக்கம் கடந்த 1977ஆம் ஆண்டுமுதல் ஒவ்வொரு நாடாளுமன்றத்திலும் எதிர்க்கட்சிகளால் முன்வைக்கப்படுகிறது.</p>
<p>நிறைவேற்று அதிகாரம் ஒழிக்கப்பட வேண்டும் என நாட்டின் சிவில் அமைப்புகளும் ஏனைய தரப்புகளும் பல ஆண்டுகளாக வலியுறுத்தி வருகின்றன.</p>
<p>குறிப்பாக 1994 முதல் தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து ஜனாதிபதிகளும் தமது தேர்தல் பிரச்சாரத்தின் ஆயுதமாகவும் &#8216;நிறைவேற்று அதிகாரம் ஒழிப்பு&#8217; என்ற சொல்லை பயன்படுத்தி வருகின்றனர்.</p>
<p><img fetchpriority="high" decoding="async" class="alignnone  wp-image-13282" src="https://oruvan.com/wp-content/uploads/2025/03/Ranil-Chandrika-Mahinda-Maithri-Gota-2023.06.04-1-1.jpg" alt="" width="1418" height="789" srcset="https://oruvan.com/wp-content/uploads/2025/03/Ranil-Chandrika-Mahinda-Maithri-Gota-2023.06.04-1-1.jpg 800w, https://oruvan.com/wp-content/uploads/2025/03/Ranil-Chandrika-Mahinda-Maithri-Gota-2023.06.04-1-1-400x223.jpg 400w, https://oruvan.com/wp-content/uploads/2025/03/Ranil-Chandrika-Mahinda-Maithri-Gota-2023.06.04-1-1-650x362.jpg 650w, https://oruvan.com/wp-content/uploads/2025/03/Ranil-Chandrika-Mahinda-Maithri-Gota-2023.06.04-1-1-250x139.jpg 250w, https://oruvan.com/wp-content/uploads/2025/03/Ranil-Chandrika-Mahinda-Maithri-Gota-2023.06.04-1-1-768x427.jpg 768w, https://oruvan.com/wp-content/uploads/2025/03/Ranil-Chandrika-Mahinda-Maithri-Gota-2023.06.04-1-1-150x83.jpg 150w, https://oruvan.com/wp-content/uploads/2025/03/Ranil-Chandrika-Mahinda-Maithri-Gota-2023.06.04-1-1-50x28.jpg 50w, https://oruvan.com/wp-content/uploads/2025/03/Ranil-Chandrika-Mahinda-Maithri-Gota-2023.06.04-1-1-100x56.jpg 100w, https://oruvan.com/wp-content/uploads/2025/03/Ranil-Chandrika-Mahinda-Maithri-Gota-2023.06.04-1-1-200x111.jpg 200w, https://oruvan.com/wp-content/uploads/2025/03/Ranil-Chandrika-Mahinda-Maithri-Gota-2023.06.04-1-1-300x167.jpg 300w, https://oruvan.com/wp-content/uploads/2025/03/Ranil-Chandrika-Mahinda-Maithri-Gota-2023.06.04-1-1-350x195.jpg 350w, https://oruvan.com/wp-content/uploads/2025/03/Ranil-Chandrika-Mahinda-Maithri-Gota-2023.06.04-1-1-450x250.jpg 450w, https://oruvan.com/wp-content/uploads/2025/03/Ranil-Chandrika-Mahinda-Maithri-Gota-2023.06.04-1-1-500x278.jpg 500w, https://oruvan.com/wp-content/uploads/2025/03/Ranil-Chandrika-Mahinda-Maithri-Gota-2023.06.04-1-1-550x306.jpg 550w" sizes="(max-width: 1418px) 100vw, 1418px" /></p>
<p>1994 இல் சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க இதற்காக ஜே.வி.பி உடன் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தார். இருப்பினும் அவரது 11 ஆண்டு கால ஆட்சியில் அவரால் அதை நிறைவேற்ற முடியவில்லை.</p>
<p>சந்திரிகாவால் ஜனாதிபதி கதிரைக்கு கொண்டுவரப்பட்ட மஹிந்த ராஜபக்சவும் &#8216;நிறைவேற்று அதிகாரம் ஒழிப்பு&#8217; என்ற வாக்குறுதியை வழங்கியை போதிலும், அவரது 10 ஆண்டு கால ஆட்சியில் அதனை செய்ய முடியவில்லை என்பதுடன், 18ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடாக நிறைவேற்று அதிகாரத்தை மேலும் பலப்படுத்திக்கொண்டார்.</p>
<p>2015 இல் அமரர் மாதுலுவாவே சோபித தேரர் தலைமையில் உருவாக்கப்பட்ட அரசியல் கூட்டணியின் பிரதான முழக்கமாக &#8216;நிறைவேற்று அதிகாரம் ஒழிப்பு&#8217; என்பதே இருந்தது.</p>
<p>நாடு முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மாதுலுவாவே சோபித தேரர், ​​நல்லாட்சி அரசாங்கத்தின் கீழ் நிறைவேற்று ஜனாதிபதி முறை நிச்சியமாக ஒழிக்கப்படும் என கூறினார். ஆனால், நல்லாட்சி அரசாங்கம் ஆட்சியில் நிறைவேற்று அதிகாரம் ஒழிக்கப்படவில்லை. மாறாக அதில் சில அதிகார குறைப்புகள் இடம்பெற்றன.</p>
<p>மைத்திரிபால சிறிசேனவுக்கு பின்னர் ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கோட்டாபய ராஜபக்ச, நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்தில் குறைக்கப்பட்ட அதிகாரங்களை 20ஆவது திருத்தச்சட்டத்தின் ஊடாக மீண்டும் இணைத்துக்கொண்டார். அதன் பின்னர் ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதியாக பணியாற்றிய காலப்பகுதியிலும், நிறைவேற்று ஜனாதிபதி முறையை ஒழிக்கப்படவில்லை. முன்னாள் ஜனாதிபதிகள் எவரும் இந்த விடயத்தில் நாட்டிற்கு அளித்த வாக்குறுதியை நிறைவேற்றவில்லை.</p>
<p><img decoding="async" class="alignnone  wp-image-13285" src="https://oruvan.com/wp-content/uploads/2025/03/maithripala-sirisena-with-ranil-wickremasinghe.jpg" alt="" width="1363" height="914" srcset="https://oruvan.com/wp-content/uploads/2025/03/maithripala-sirisena-with-ranil-wickremasinghe.jpg 595w, https://oruvan.com/wp-content/uploads/2025/03/maithripala-sirisena-with-ranil-wickremasinghe-400x268.jpg 400w, https://oruvan.com/wp-content/uploads/2025/03/maithripala-sirisena-with-ranil-wickremasinghe-250x168.jpg 250w, https://oruvan.com/wp-content/uploads/2025/03/maithripala-sirisena-with-ranil-wickremasinghe-150x101.jpg 150w, https://oruvan.com/wp-content/uploads/2025/03/maithripala-sirisena-with-ranil-wickremasinghe-50x34.jpg 50w, https://oruvan.com/wp-content/uploads/2025/03/maithripala-sirisena-with-ranil-wickremasinghe-100x67.jpg 100w, https://oruvan.com/wp-content/uploads/2025/03/maithripala-sirisena-with-ranil-wickremasinghe-200x134.jpg 200w, https://oruvan.com/wp-content/uploads/2025/03/maithripala-sirisena-with-ranil-wickremasinghe-300x201.jpg 300w, https://oruvan.com/wp-content/uploads/2025/03/maithripala-sirisena-with-ranil-wickremasinghe-350x235.jpg 350w, https://oruvan.com/wp-content/uploads/2025/03/maithripala-sirisena-with-ranil-wickremasinghe-450x302.jpg 450w, https://oruvan.com/wp-content/uploads/2025/03/maithripala-sirisena-with-ranil-wickremasinghe-500x335.jpg 500w, https://oruvan.com/wp-content/uploads/2025/03/maithripala-sirisena-with-ranil-wickremasinghe-550x369.jpg 550w" sizes="(max-width: 1363px) 100vw, 1363px" /></p>
<p>2024 ஜனாதிபதித் தேர்தலில், ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவும் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதாகவே வாக்குறுதி அளித்திருந்தார். தெற்கிலும், வடக்கிலும் அநுர இந்த வாக்குறுதியை வழங்கியிரந்தார். இருப்பினும், தற்போது நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்புக்கான எந்த அறிகுறியும் அநுரவின் அரசாங்கத்தில் இல்லாவிட்டாலும், புதிய அரசியலமைப்பு உருவாக்கம் பற்றிய சில கருத்தாடல்கள் இடம்பெறுகின்றன.</p>
<p>2015ஆம் ஆண்டு மாதுலுவாவே சோபித தேரர் தலைமையில் உருவாக்கப்பட்ட அரசியல் கூட்டணியில் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதற்கான போராட்டங்களில் அநுரவும் மேடையேறிருந்தார். ஆனால், அதிகாரத்துக்கு வந்தப் பின்னர் அவரும் முன்னாள் ஜனாதிபதிகளை போன்று இந்த விடயத்தில் இதுவரை எவ்வித கருத்தையும் முன்வைக்கவில்லை.</p>
<p>புதிய அரசியலமைப்புக்கான நகர்வுகள் இடம்பெறுவதால் அதில் நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதற்கான கருத்தியலை உருவாக்க பரந்தப்பட்ட மக்கள் கவனத்தை ஈர்ப்பதற்கான முயற்சியை மேற்கொள்ள எதிர்க்கட்சிகள் திட்டங்களை வகுக்க ஆரம்பித்துள்ளன.</p>
<p>அதன் முதல் கட்டமாக  ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட தலைவர் கரு ஜெயசூரிய தலைமையிலான குழுவுக்கு நிறைவேற்று அதிகாரத்துக்கு எதிரான கருத்தியலை உருவாக்கும் பணி ஒப்படைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது. அவர்கள் இதற்கான ஆயத்தப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>
<p>அநுரகுமார திசாநாயக்க, நிறைவேற்று அதிகாரத்தை ஒழிப்பதற்கான எதிர்க்கட்சிகள் செயல்பாடுகளில் கடந்தகாலத்தில் தீவிரமாக இயங்கியவர் என்பதால் இந்தப் பிரச்சாரம் மக்கள் மத்தியில் பிரபல்யமாக அதிகளவான சாத்தியக்கூறுகள் இருப்பதாக எதிர்க்கட்சிகள் கருதுகின்றன.</p>
<p><img decoding="async" class="alignnone  wp-image-13286" src="https://oruvan.com/wp-content/uploads/2025/03/karu.jpg" alt="" width="1433" height="1003" srcset="https://oruvan.com/wp-content/uploads/2025/03/karu.jpg 810w, https://oruvan.com/wp-content/uploads/2025/03/karu-400x280.jpg 400w, https://oruvan.com/wp-content/uploads/2025/03/karu-650x455.jpg 650w, https://oruvan.com/wp-content/uploads/2025/03/karu-250x175.jpg 250w, https://oruvan.com/wp-content/uploads/2025/03/karu-768x538.jpg 768w, https://oruvan.com/wp-content/uploads/2025/03/karu-150x105.jpg 150w, https://oruvan.com/wp-content/uploads/2025/03/karu-50x35.jpg 50w, https://oruvan.com/wp-content/uploads/2025/03/karu-100x70.jpg 100w, https://oruvan.com/wp-content/uploads/2025/03/karu-200x140.jpg 200w, https://oruvan.com/wp-content/uploads/2025/03/karu-300x210.jpg 300w, https://oruvan.com/wp-content/uploads/2025/03/karu-350x245.jpg 350w, https://oruvan.com/wp-content/uploads/2025/03/karu-450x315.jpg 450w, https://oruvan.com/wp-content/uploads/2025/03/karu-500x350.jpg 500w, https://oruvan.com/wp-content/uploads/2025/03/karu-550x385.jpg 550w, https://oruvan.com/wp-content/uploads/2025/03/karu-800x560.jpg 800w" sizes="(max-width: 1433px) 100vw, 1433px" /></p>
<p>கருவை இயக்குவதன் பின்னணியில் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐ.தே.க இருப்பதாகவும் அதற்காக ஏனைய எதிர்க்கட்சிகளிடம் ஆதரவு கோரப்பட்டுள்ளதாகவும் தெரியவருகிறது.</p>
<p>அதன்படி, மீண்டும் ஒருமுறை கருவும் அவரது குழுவினரும், வெள்ளை ஆடை அணிந்து, நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்களை ஒழிப்பதற்காக கடந்த காலத்தில் அநுர ஏறிய ரயிலில் ஏற முன்வந்துள்ளதாக எதிர்க்கட்சிகளின் வட்டாரத்தில் பேசப்படுகிறது.</p>
<p>The post <a href="https://oruvan.com/abolition-of-executive-power-opposition-parties-new-strategy-to-overthrow-anuradha/">&#8216;நிறைவேற்று அதிகாரம் ஒழிப்பு&#8217; &#8211; அநுரவை கவிழ்க்க எதிர்க்கட்சிகள் புதிய வியூகம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>அநுரவின் இந்தியப் பயணம் &#8211; பூகோள அரசியலில் ஏற்படுத்தப்போகும் தாக்கம் என்ன?</title>
		<link>https://oruvan.com/sri-lankan-president-makes-india-the-destination-for-his-first-foreign-visit/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Thu, 12 Dec 2024 05:56:18 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[கட்டுரை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#srilanka]]></category>
		<category><![CDATA[anura]]></category>
		<category><![CDATA[Anura india visit]]></category>
		<category><![CDATA[anurakumara]]></category>
		<category><![CDATA[India]]></category>
		<category><![CDATA[modi]]></category>
		<category><![CDATA[Sri Lankan president makes India the destination for his first foreign visit]]></category>
		<category><![CDATA[Srilanka and India]]></category>
		<category><![CDATA[அநுரகுமார திஸாநாயக்க]]></category>
		<category><![CDATA[மோடி]]></category>
		<category><![CDATA[விஜித ஹேரத்]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க]]></category>
		<category><![CDATA[ஜே.வி.பி.]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=2126</guid>

					<description><![CDATA[<p>இந்திய அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது முதலாவது அதிகாரப்பூர்வ வெளிநாட்டு பயணத்தை எதிர்வரும் 15ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை புதுடில்லிக்கு மேற்கொள்ளவுள்ளார். ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தப் பயணத்தின் போது, ​​இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் மற்றும் ஏனைய உயர் அதிகாரிகளை சந்திக்க உள்ளார். அத்துடன், பல்வேறு துறையினரையும் ஜனாதிபதி சந்திக்க திட்டமிட்டுள்ளதுடன், இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் முதலீடுகளை ஈர்க்கும் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/sri-lankan-president-makes-india-the-destination-for-his-first-foreign-visit/">அநுரவின் இந்தியப் பயணம் &#8211; பூகோள அரசியலில் ஏற்படுத்தப்போகும் தாக்கம் என்ன?</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இந்திய அரசாங்கத்தின் அழைப்பை ஏற்று ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தனது முதலாவது அதிகாரப்பூர்வ வெளிநாட்டு பயணத்தை எதிர்வரும் 15ஆம் திகதி முதல் 17ஆம் திகதி வரை புதுடில்லிக்கு மேற்கொள்ளவுள்ளார்.</p>
<p>ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க இந்தப் பயணத்தின் போது, ​​இந்திய ஜனாதிபதி திரௌபதி முர்மு, பிரதமர் நரேந்திர மோடி, வெளிவிவகார அமைச்சர் சுப்ரமணியம் ஜெய்சங்கர் மற்றும் ஏனைய உயர் அதிகாரிகளை சந்திக்க உள்ளார். அத்துடன், பல்வேறு துறையினரையும் ஜனாதிபதி சந்திக்க திட்டமிட்டுள்ளதுடன், இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்தும் முதலீடுகளை ஈர்க்கும் சில சந்திப்புகளையும் அவர் நடத்த உள்ளார்.</p>
<p><strong>இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான தீர்மானங்கள் இல்லை</strong></p>
<p>ஜனாதிபதியுடன் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் உட்பட உயர்மட்ட அரச குழுவொன்று புதுடில்லி செல்ல உள்ளது. இந்தப் பயணத்தில் இருநாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் சில ஒப்பந்தங்களும் கைச்சாத்திடப்பட உள்ளன.</p>
<p>அநுரகுமார திசாநாயக்க இந்திய விஸ்தரிப்புவாதத்தை பேசிய ஜே.வி.பியின் தலைவராக உள்ள போதிலும் இலங்கையின் அடுத்த மக்கள் தலைவராக உருவெடுக்க போகிறார் என்பதை புலனாய்வு தகவல்கள் ஊடாக உணர்ந்த புதுடில்லி கடந்த ஆண்டு அவரை புதுடில்லிக்கு அழைத்து சிவப்பு கம்பள வரவேற்பை அளித்தது.</p>
<p><img loading="lazy" decoding="async" class="alignnone size-full wp-image-2146" src="https://oruvan.com/wp-content/uploads/2024/12/SI-P19-18-02-Ckg-NEW-2.jpg" alt="" width="675" height="335" srcset="https://oruvan.com/wp-content/uploads/2024/12/SI-P19-18-02-Ckg-NEW-2.jpg 675w, https://oruvan.com/wp-content/uploads/2024/12/SI-P19-18-02-Ckg-NEW-2-400x199.jpg 400w, https://oruvan.com/wp-content/uploads/2024/12/SI-P19-18-02-Ckg-NEW-2-650x323.jpg 650w, https://oruvan.com/wp-content/uploads/2024/12/SI-P19-18-02-Ckg-NEW-2-250x124.jpg 250w, https://oruvan.com/wp-content/uploads/2024/12/SI-P19-18-02-Ckg-NEW-2-150x74.jpg 150w, https://oruvan.com/wp-content/uploads/2024/12/SI-P19-18-02-Ckg-NEW-2-50x25.jpg 50w, https://oruvan.com/wp-content/uploads/2024/12/SI-P19-18-02-Ckg-NEW-2-100x50.jpg 100w, https://oruvan.com/wp-content/uploads/2024/12/SI-P19-18-02-Ckg-NEW-2-200x99.jpg 200w, https://oruvan.com/wp-content/uploads/2024/12/SI-P19-18-02-Ckg-NEW-2-300x149.jpg 300w, https://oruvan.com/wp-content/uploads/2024/12/SI-P19-18-02-Ckg-NEW-2-350x174.jpg 350w, https://oruvan.com/wp-content/uploads/2024/12/SI-P19-18-02-Ckg-NEW-2-450x223.jpg 450w, https://oruvan.com/wp-content/uploads/2024/12/SI-P19-18-02-Ckg-NEW-2-500x248.jpg 500w, https://oruvan.com/wp-content/uploads/2024/12/SI-P19-18-02-Ckg-NEW-2-550x273.jpg 550w" sizes="auto, (max-width: 675px) 100vw, 675px" /></p>
<p>இந்தியா தொடர்பான ஜேவிபியின் வரலாற்று நிலைப்பாடு அநுரவின் இந்தப் பயணத்தின் பின்னர் சில மாற்றங்களுக்கு உள்ளானது என்பதுடன், இந்தியாவையை பகைத்துக்கொண்டு இலங்கையை அபிவிருத்திப் பாதைக்கு கொண்டுசெல்வது கடினம் என்பதையும் ஜனாதிபதி அநுர தலைமையிலான அரசியல் கூட்டணியான தேசிய மக்கள் சக்தி உணர்ந்ததுடன், பிராந்தியத்தில் இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படும் எந்தவொரு தீர்மானத்தையும் எதிர்காலத்தில் அமையும் தமது அரசாங்கம் எடுக்காதெனவும் தெரிவித்திருந்தார்.</p>
<p><strong>பேசுபொருளாகுமா கச்சத்தீவு</strong></p>
<p>பாரம்பரியமாக தேசியவாதத்தை பேசிய கட்சியான ஜே.வி.பி , இலங்கைத் தீவில் இந்திய செல்வாக்கை நீண்டகாலமாக எதிர்த்திருந்தது. 1987ஆம் ஆண்டு கிளர்ச்சியின் போது ஜே.வி.பி.யின் கடுமையான எதிர்ப்பு சர்வதேச ரீதியில் மிகவும் உச்சரிக்கப்பட்டது. வடக்கு கிழக்கில் தமிழர் சுயாட்சிக்காக உருவாகிய சில வாய்ப்புகளையும் ஜே.வி.பியின் கடுமையான எதிர்ப்பே இல்லாதொழித்தது.</p>
<p>பல தசாப்தங்களாக, ஜே.வி.பி இரு நாடுகளுக்கும் இடையில் வர்த்தகம் மற்றும் முதலீட்டை விரிவுபடுத்துவதை நோக்கமாகக் கொண்ட விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தம் (CEPA) போன்ற உடன்படிக்கைகளுக்கு எதிராக செயல்பட்டிருந்தது. 2008இல் &#8220;கச்சத்தீவை இந்தியாவிடம் ஒப்படைக்க ரகசிய திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதற்கு ஒருபோதும் அனுமதிக்க முடியாது.&#8221; என அநுரகுமார திசாநாயக்க நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.</p>
<p>தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வை வழங்க வேண்டும் என்பதையும் 13ஆவது திருத்தச்சட்டத்தை முழுமையாக அமுல்படுத்த வேண்டும் என்பதையும் இந்தியா தொடர்ந்து இலங்கையிடம் வலியுறுத்தி வருகிறது. கடந்த நாடாளுமன்றத் தேர்தலில் கச்சத்தீவு விவகாரம் இந்தியாவில் மிகவும் பேசுபொருளானதுடன், கச்சத்தீவை காங்கிரஸ்தான் இலங்கைக்கு வழங்கியது என பிரதமர் மோடி கூறியிருந்தார்.</p>
<p><strong>மோடி கூறப்போகும் செய்தி </strong></p>
<p>இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையிலான அரசியல் உறவுகள் கடந்த காலத்தில் வலுவாக இருந்த போதிலும் இந்திய விஸ்தரிப்பு வாதத்தை பேசிய கட்சியாக உள்ள ஜே.வி.பியின் தலைவர் ஒருவர் முதல் முறையாக இலங்கையின் அரச தலைவராக இந்திய அரச தலைவரை சந்திக்கிறார். இதனால் கடந்தகால வரலாறுகளும் அவை ஏற்படுத்தியுள்ள தாக்கங்களும் இந்த சந்திப்பு குறித்து சர்வதேசம் உற்றுநோக்கியுள்ளது.</p>
<p>கடந்த பல தசாப்தங்களாக இலங்கையின் அரசாங்கங்கள் செய்துகொண்டுள்ள இருதரப்பு ஒப்பந்தங்களின் அடுத்தகட்ட நகர்வு எவ்வாறு இருக்கிற போகிறது, இலங்கையில் அதிகரித்துவரும் சீனாவின் செல்வாக்கு தொடர்பில் மோடி அநுரவிடம் என்ன கூற போகிறார், இருநாட்டு பொருளாதார உறவுகள் எவ்வாறு வலுபெற போகிறது மற்றும் தமிழ் மக்களின் அரசியல் தீர்வு தொடர்பில் அநுரவிடம் மோடி கூற போகும் செய்தி என்ன என்பது தொடர்பில் பல்வேறு கருத்துகள் சர்வதேச மட்டத்தில் பேசுபொருளாக உள்ளது.</p>
<p>புதிய அரசியலமைப்பொன்று உருவாக்கப்பட்டாலும் அதில் 13ஆவது திருத்தச்சட்டம் உள்வாங்கப்பட வேண்டும் என்பது இந்தியாவின் நிலைப்பாடாக இருக்க என்பதே இந்திய அரசியல் ஆய்வாளர்களது கருத்தாகும். இதனை மோடி அநுரவிடம் உறுதியாக கூற உள்ளதாக இராஜதந்திர தகவல்கள் தெரிவிக்கின்றன.</p>
<p><strong>இருதரப்பு ஒப்பந்தங்கள் குறித்து ஆழமான பேச்சு</strong></p>
<p>இந்தியா தொடர்பில் அநுரகுமார திசாநாயக்க தனது தொனியை குறிப்பிடத்தக்க வகையில் மாற்றியுள்ளார் என்பதே அவரது பல கருத்துகள் எடுத்துரைக்கின்றன.  அதன் காரணமாகவே தனது முதல் வெளிநாட்டு பயணத்துக்காக அநுர இந்தியாவை தேர்ந்தெடுத்துள்ளார். ஆட்சி மாற்றத்தின் பின்னர் முதல் இராஜதந்திரியாக இலங்கை வந்திருந்த இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், இலங்கையின் பூகோள அரசியல் நகர்வுகள் இந்தியாவின் நலனுக்கு எதிராக அமையக் கூடாதென்ற செய்தியை தெரிவிக்கும் வகையில் இடம்பெற்றதாகும். வெளியுலகுக்கு அது சம்பிரதாயப்பூர்வமான அழைப்பை விடும் சந்திப்பாக காட்டப்பட்டாலும் அது இந்தியாவின் உள் எண்ண ஓட்டத்தின் நிகழ்ச்சி நிரலாகும்.</p>
<p><img loading="lazy" decoding="async" class="alignnone size-full wp-image-2147" src="https://oruvan.com/wp-content/uploads/2024/12/s3.jpg" alt="" width="800" height="500" srcset="https://oruvan.com/wp-content/uploads/2024/12/s3.jpg 800w, https://oruvan.com/wp-content/uploads/2024/12/s3-400x250.jpg 400w, https://oruvan.com/wp-content/uploads/2024/12/s3-650x406.jpg 650w, https://oruvan.com/wp-content/uploads/2024/12/s3-250x156.jpg 250w, https://oruvan.com/wp-content/uploads/2024/12/s3-768x480.jpg 768w, https://oruvan.com/wp-content/uploads/2024/12/s3-150x94.jpg 150w, https://oruvan.com/wp-content/uploads/2024/12/s3-50x31.jpg 50w, https://oruvan.com/wp-content/uploads/2024/12/s3-100x63.jpg 100w, https://oruvan.com/wp-content/uploads/2024/12/s3-200x125.jpg 200w, https://oruvan.com/wp-content/uploads/2024/12/s3-300x188.jpg 300w, https://oruvan.com/wp-content/uploads/2024/12/s3-350x219.jpg 350w, https://oruvan.com/wp-content/uploads/2024/12/s3-450x281.jpg 450w, https://oruvan.com/wp-content/uploads/2024/12/s3-500x313.jpg 500w, https://oruvan.com/wp-content/uploads/2024/12/s3-550x344.jpg 550w" sizes="auto, (max-width: 800px) 100vw, 800px" /></p>
<p>பூகோள அரசியலில் இயக்கவியலை அநுர மறுத்துச் செயல்பட்டால் அது மகிந்த ராஜபக்ச அரசாங்கத்துக்கு ஏற்பட்ட நெருக்கடியான சூழலை மீண்டும் தமது அரசாங்கத்துக்கும் ஏற்படுத்தும் என்பதை அநுர அறிந்தவராக இருப்பார என்பதால் இந்தியாவின் கருத்துகளை அவர் புறக்கணித்து செயல்பட மாட்டார் என்றும் புதுடில்லி வழங்கப்போகும் சிவப்பு கம்பள வரவேற்புக்கு மரியாதையளிக்கும் நபராகவே அநுர எதிர்காலத்தில் செயல்படுவார் என்றும் சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.</p>
<p>மன்னாரில் முன்மொழியப்பட்ட காற்றாலை மின் நிலையம், இருநாடுகளையும் இணைக்கும் கடல்வழி பாலம், கேபிள் முறையில் மின்சாரப் பரிமாற்ற திட்டம் மற்றும் கடந்த அரசாங்கம் செய்துகொண்டுள்ள இருதரப்பு ஒப்பந்தங்கள் அநுரவின் இந்தப் பயணத்தில் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவையாக இருக்கும் என்பதுடன், இவை தொடர்பிலான ஆழமான பேச்சுகள் இடம்பெறும் என அரசாங்கத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.</p>
<p><strong>சுப்ரமணியம் நிஷாந்தன்</strong></p>
<p>The post <a href="https://oruvan.com/sri-lankan-president-makes-india-the-destination-for-his-first-foreign-visit/">அநுரவின் இந்தியப் பயணம் &#8211; பூகோள அரசியலில் ஏற்படுத்தப்போகும் தாக்கம் என்ன?</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
