<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>சிறீதரன் எம்.பி Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%b1%e0%af%80%e0%ae%a4%e0%ae%b0%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%8e%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%aa%e0%ae%bf/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/சிறீதரன்-எம்-பி/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Fri, 13 Feb 2026 05:30:55 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>சிறீதரன் எம்.பி Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/சிறீதரன்-எம்-பி/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>இந்தியத் துணைத் தூதுவருடன் சிறீதரன் எம்.பி தலைமையிலான குழு சந்திப்பு</title>
		<link>https://oruvan.com/sridharan-mp-led-delegation-meets-with-indian-deputy-high-commissioner-discussion-on-fishermens-issues/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Fri, 13 Feb 2026 05:30:18 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[சிறீதரன் எம்.பி]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=45017</guid>

					<description><![CDATA[<p>இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையிலான குழுவினருக்கும், யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் சாய் முரளிக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது. குறித்த சந்திப்பில், இந்திய இழுவைமடிப் படகு மீனவர்களால் நயினாதீவு மீனவர்கள் எதிர்நோக்கும் இடர்பாடுகள் குறித்தும், அதனால் ஏற்படும் பொருளாதார இழப்புகள் பற்றியும் இந்திய துணைத் தூதுவருக்குத் தெரிவிக்கப்பட்டது. மேலும், இந்திய அரசின் நிதியுதவியுடன் நயினாதீவில் மேற்கொள்ளப்பட்டு வரும் சூரியகல மின் உற்பத்தித் திட்டம், அதனுடன் தொடர்புடைய வீதி அபிவிருத்தி, வங்களாவடி [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/sridharan-mp-led-delegation-meets-with-indian-deputy-high-commissioner-discussion-on-fishermens-issues/">இந்தியத் துணைத் தூதுவருடன் சிறீதரன் எம்.பி தலைமையிலான குழு சந்திப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தலைமையிலான குழுவினருக்கும், யாழ்ப்பாணத்திற்கான இந்திய துணைத் தூதுவர் சாய் முரளிக்கும் இடையிலான சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.</p>
<p>குறித்த சந்திப்பில், இந்திய இழுவைமடிப் படகு மீனவர்களால் நயினாதீவு மீனவர்கள் எதிர்நோக்கும் இடர்பாடுகள் குறித்தும், அதனால் ஏற்படும் பொருளாதார இழப்புகள் பற்றியும் இந்திய துணைத் தூதுவருக்குத் தெரிவிக்கப்பட்டது.</p>
<p>மேலும், இந்திய அரசின் நிதியுதவியுடன் நயினாதீவில் மேற்கொள்ளப்பட்டு வரும் சூரியகல மின் உற்பத்தித் திட்டம், அதனுடன் தொடர்புடைய வீதி அபிவிருத்தி, வங்களாவடி மற்றும் துறைமுக அபிவிருத்திகள் குறித்தும் விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.</p>
<p>​யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதுவர் அலுவலகத்தில் நடைபெற்ற இக்கலந்துரையாடலில், நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனுடன், வேலணை பிரதேச சபையின் தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார், உப தவிசாளர் கணபதிப்பிள்ளை வசந்தகுமாரன், பிரதேச சபை உறுப்பினர்கள் மற்றும் செல்லப்பா பார்த்தீபன், மங்களேஸ்வரன் கார்த்தீபன், நயினாதீவு கடற்தொழிலாளர் சங்க பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/sridharan-mp-led-delegation-meets-with-indian-deputy-high-commissioner-discussion-on-fishermens-issues/">இந்தியத் துணைத் தூதுவருடன் சிறீதரன் எம்.பி தலைமையிலான குழு சந்திப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சுவிஸ் தூதுவரை சந்தித்து கலந்துரையாடிய சிறீதரன் எம்.பி.</title>
		<link>https://oruvan.com/sridharan-mp-met-and-discussed-with-the-swiss-ambassador/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Fri, 17 Oct 2025 10:58:20 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[சிறீதரன் எம்.பி]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=35718</guid>

					<description><![CDATA[<p>இலங்கை மற்றும் மாலைதீவுக்கான சுவிட்சர்லாந்து நாட்டின் தூதுவர் ஸ்ரீ வோல்ற் (Siri Walt) மற்றும் சுவிஸ் தூதரகத்தின் முதல் செயலாளர் ஜஸ்ரின் பொய்யிலற் (Justine Boillat)ஆகியோரை இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். அண்மையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணை, சமகால அரசியல் நிலைமைகள், மக்களின் பொருளாதார நடவடிக்கைகள், பொறுப்புக்கூறல் நடவடிக்கையின் தொடர் செயற்பாடுகள் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன. [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/sridharan-mp-met-and-discussed-with-the-swiss-ambassador/">சுவிஸ் தூதுவரை சந்தித்து கலந்துரையாடிய சிறீதரன் எம்.பி.</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கை மற்றும் மாலைதீவுக்கான சுவிட்சர்லாந்து நாட்டின் தூதுவர் ஸ்ரீ வோல்ற் (Siri Walt) மற்றும் சுவிஸ் தூதரகத்தின் முதல் செயலாளர் ஜஸ்ரின் பொய்யிலற் (Justine Boillat)ஆகியோரை இலங்கை தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழுவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சிவஞானம் சிறீதரன் சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.</p>
<p>அண்மையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் அலுவலகம் ஜெனிவாவில் நிறைவேற்றப்பட்ட இலங்கை தொடர்பான பிரேரணை, சமகால அரசியல் நிலைமைகள், மக்களின் பொருளாதார நடவடிக்கைகள், பொறுப்புக்கூறல் நடவடிக்கையின் தொடர் செயற்பாடுகள் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.</p>
<p>இந்த சந்திப்பு நேற்றையதினம் கொழும்பு சுவிஸ் தூதரலாயத்தில் நடைபெற்றது.</p>
<p>The post <a href="https://oruvan.com/sridharan-mp-met-and-discussed-with-the-swiss-ambassador/">சுவிஸ் தூதுவரை சந்தித்து கலந்துரையாடிய சிறீதரன் எம்.பி.</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தமிழர் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிராக அழுத்தம் வழங்குங்கள்: ஆஸி. தூதுவரிடம் சிறீதரன் எம்.பி. கோரிக்கை</title>
		<link>https://oruvan.com/apply-pressure-against-aggression-against-tamils-sridharan-mp-requests-aussie-ambassador/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Thu, 29 May 2025 10:21:20 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[சிறீதரன் எம்.பி]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=21726</guid>

					<description><![CDATA[<p>ஆட்சி மாற்றத்தின் பின்னும் இந்த நாட்டில் திட்டமிட்ட வகையில் நடைபெற்று வரும் இன, மத ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக சர்வதேச அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டியுள்ளதன் அவசியம் உணர்ந்து, ஆஸ்திரேலிய அரசின் தீர்மானங்களும், இராஜதந்திர அழுத்தங்களும் ஈழத்தமிழர் நலன் சார்ந்து வலுப் பெற வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன், இலங்கைக்கான ஆஸ்திரேலியத் தூதுவர் போல் ஸ்டீபன்ஸிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இலங்கைக்கான ஆஸ்திரேலியத் தூதுவருடன் நேற்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சந்திப்பின்போதே [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/apply-pressure-against-aggression-against-tamils-sridharan-mp-requests-aussie-ambassador/">தமிழர் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிராக அழுத்தம் வழங்குங்கள்: ஆஸி. தூதுவரிடம் சிறீதரன் எம்.பி. கோரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஆட்சி மாற்றத்தின் பின்னும் இந்த நாட்டில் திட்டமிட்ட வகையில் நடைபெற்று வரும் இன, மத ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக சர்வதேச அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டியுள்ளதன் அவசியம் உணர்ந்து, ஆஸ்திரேலிய அரசின் தீர்மானங்களும், இராஜதந்திர அழுத்தங்களும் ஈழத்தமிழர் நலன் சார்ந்து வலுப் பெற வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்றக் குழுத் தலைவருமான சிவஞானம் சிறீதரன், இலங்கைக்கான ஆஸ்திரேலியத் தூதுவர் போல் ஸ்டீபன்ஸிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.</p>
<p>இலங்கைக்கான ஆஸ்திரேலியத் தூதுவருடன் நேற்று யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற சந்திப்பின்போதே அவர் இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.</p>
<p>இந்தச் சந்திப்பின்போது, நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், அரசாங்க மாற்றம் மற்றும் ஜனாதிபதித் தேர்தல் முதல் உள்ளூராட்சி சபைத் தேர்தல் வரையிலான தற்போதைய தமிழ் அரசியல் குறித்து தூதுவரின் கவனத்துக்குக் கொண்டு வந்தார்.</p>
<p>வடக்கு மற்றும் கிழக்கு தொடர்பான காணிப் பிரச்சினைகள், வடக்கு மாகாணத்தில் சுமார் 6000 ஏக்கர் காணிகளை அரசு காணிகளாக அறிவிக்கும் சர்ச்சைக்குரிய வர்த்தமானி அறிவிப்பு, தமிழ் பேசும் மக்களுக்கு வடக்கு மற்றும் கிழக்கில் காணி, பொலிஸ் மற்றும் நிதி ஆகியவற்றில் மீளமுடியாத அதிகாரங்களைக் கொண்ட சமஷ்டி அடிப்படையில் அரசியல் தீர்வு போன்ற விடயங்கள் பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன், மேற்படி விடயங்கள் தொடர்பில் இலங்கை அரசுக்கு அழுத்தம் வழங்குமாறும் ஆஸ்திரேலியத் தூதுவரிடம் வலியுறுத்தினார்.</p>
<p>இந்தச் சந்திப்பில் ஆஸ்திரேலியத் தூதுவருடன் அவரது துணைவியார் கிரிட்டினா ஸ்டீபன்ஸ், திட்ட ஒத்துழைப்புக்கான முதல் செயலாளர் திருமதி ஜோ கிட், அரசியல்துறைக்கான இரண்டாவது செயலாளர் மேத்யூ லார்ட் மற்றும் மூத்த ஆராய்ச்சி அதிகாரி சில்வெஸ்டர் வொர்திங்டன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/apply-pressure-against-aggression-against-tamils-sridharan-mp-requests-aussie-ambassador/">தமிழர் மீதான ஆக்கிரமிப்புக்கு எதிராக அழுத்தம் வழங்குங்கள்: ஆஸி. தூதுவரிடம் சிறீதரன் எம்.பி. கோரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இந்திய மீனவர்களின் அத்துமீறல் குறித்து இரு நாட்டு அரசுகளுடனும் பேசவுள்ளேன்: சிறீதரன் எம்.பி. தெரிவிப்பு</title>
		<link>https://oruvan.com/i-will-speak-to-the-governments-of-both-countries-regarding-the-encroachment-of-indian-fishermen-sridharan-mp-statement/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Fri, 04 Apr 2025 08:40:02 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[சிறீதரன் எம்.பி]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=16856</guid>

					<description><![CDATA[<p>&#8220;ஈழத்தமிழர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் இந்திய மீனவர்களின் அத்துமீறல் குறித்து இலங்கை அரசுடனும், இந்திய அரசுடனும் பேசவுள்ளேன்.&#8221; &#8211; இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார். யாழ். நெடுந்தீவில் வைத்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே இந்த விடயத்தை அவர் கூறினார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது:- &#8220;இந்திய மீனவர்களின் அத்துமீறல் வருகை இதுவரையில் ஈழத்தமிழர்களின் பொருளாதாரத்தை அரைவாசி அழித்துவிட்டது. தமது பொருளாதாரத்தைப் பெருக்கிக்கொள்ள முடியாத நிலையிலும், இயல்பு வாழ்க்கையை இழந்த நிலையிலும் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/i-will-speak-to-the-governments-of-both-countries-regarding-the-encroachment-of-indian-fishermen-sridharan-mp-statement/">இந்திய மீனவர்களின் அத்துமீறல் குறித்து இரு நாட்டு அரசுகளுடனும் பேசவுள்ளேன்: சிறீதரன் எம்.பி. தெரிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>&#8220;ஈழத்தமிழர்களின் வாழ்வாதாரத்தை அழிக்கும் இந்திய மீனவர்களின் அத்துமீறல் குறித்து இலங்கை அரசுடனும், இந்திய அரசுடனும் பேசவுள்ளேன்.&#8221;</p>
<p>&#8211; இவ்வாறு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்தார்.</p>
<p>யாழ். நெடுந்தீவில் வைத்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே இந்த விடயத்தை அவர் கூறினார்.</p>
<p>இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்ததாவது:-</p>
<p>&#8220;இந்திய மீனவர்களின் அத்துமீறல் வருகை இதுவரையில் ஈழத்தமிழர்களின் பொருளாதாரத்தை அரைவாசி அழித்துவிட்டது. தமது பொருளாதாரத்தைப் பெருக்கிக்கொள்ள முடியாத நிலையிலும், இயல்பு வாழ்க்கையை இழந்த நிலையிலும் ஈழத்தமிழர்கள் இருக்கின்றார்கள்.</p>
<p>குறிப்பாக யுத்தம் முடிவடைந்த 15 ஆண்டுகளில் வடக்கு, கிழக்குத் தமிழர்களின் பொருளாதாரம் பெரியளவில் தற்போது அழிக்கப்பட்டிருக்கின்றது. இதற்கான அடிப்படைக் காரணமே இந்திய மீனவர்களின் அத்துமீறல் வருகைதான்.</p>
<p>அவரகளுடைய மீன்பிடிப் பொறிமுறைகளால் எமது பகுதி மக்களின் மீன்பிடி வலைகள் அறுந்துள்ளன. அத்துடன் உற்பத்திகள் முடக்கப்பட்டுள்ளன. இதனால் எமது பகுதி மீனவர்கள் பாதிக்கப்படுகின்றார்கள்.</p>
<p>குறிப்பாக புதிய அரசு பதவியேற்றதன் பின்னர் இந்திய மீனவர்களின் வருகையைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கைகளையும் மேற்கொள்ளாமல் மேலும் அவர்களது வாழ்வாதாரங்களை அழிக்கும் செயற்பாடுகளை அனுமதிக்கின்றது.</p>
<p>இது தொடர்பாக நெடுந்தீவு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள மீனவர்கள் பலர் என்னிடம் முறைப்பாடுகளைத் தெரிவித்துள்ளனர்.</p>
<p>குறிப்பாக, முன்பெல்லாம் வாரத்தில் ஓரிரு நாட்களில் மட்டுமே இந்திய மீனவர்கள் வருவார்கள். இடைப்பட்ட நாட்களில் எமது வாழ்வாதாரத்தைத் தேடிக்கொள்ளும் வாய்ப்பிருக்கின்றது. இப்பொழுது அதற்குக் கூட வழியில்லாமல் உணவுக்குக் கூட நாம் கஷ்டப்படுகின்றோம் என்று நெடுந்தீவு மீனவர்கள் முறையிட்டுள்ளனர்.</p>
<p>எனவே, இந்த விடயத்தை அரச தரப்பிடம் நான் எடுத்துரைப்பேன். இந்தியத் தரப்பிடம் எமது மக்களின் வாழ்வாதாரத்தைக் காப்பாற்றுவதற்கான வழிமுறைகள் குறித்து தீர்வு காண்பதற்கான அழுத்தம் கொடுத்து அவற்றை நடைமுறைப்படுத்தவுள்ளேன்.&#8221; &#8211; என்றார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/i-will-speak-to-the-governments-of-both-countries-regarding-the-encroachment-of-indian-fishermen-sridharan-mp-statement/">இந்திய மீனவர்களின் அத்துமீறல் குறித்து இரு நாட்டு அரசுகளுடனும் பேசவுள்ளேன்: சிறீதரன் எம்.பி. தெரிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
