<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>சிங்கப்பூர் Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%aa%e0%af%8d%e0%ae%aa%e0%af%82%e0%ae%b0%e0%af%8d/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/சிங்கப்பூர்/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Sun, 05 Oct 2025 07:02:06 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>சிங்கப்பூர் Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/சிங்கப்பூர்/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>இராஜதந்திர உறவுகளின் 35வது ஆண்டு நிறைவு &#8211; சீன, சிங்கப்பூர் ஜனாதிபதிகள் வாழ்த்து பரிமாற்றம்</title>
		<link>https://oruvan.com/35th-anniversary-of-diplomatic-relations-chinese-singaporean-presidents-exchange-greetings/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Sun, 05 Oct 2025 07:02:06 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[சிங்கப்பூர்]]></category>
		<category><![CDATA[சீனா]]></category>
		<category><![CDATA[தர்மன் சண்முகரத்தினம்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=34460</guid>

					<description><![CDATA[<p>இராஜதந்திர உறவுகளின் 35வது ஆண்டு நிறைவை முன்னிட்டு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் சிங்கப்பூர் ஜனாதிபதி தர்மன் சண்முகரத்தினம் ஆகியோர் வாழ்த்துக்களை பரிமாற்றிக்கொண்டுள்ளனர். சீனாவும் சிங்கப்பூரும் நட்புறவு மிக்க அண்டை நாடுகள் மற்றும் முக்கியமான ஒத்துழைப்பு பங்காளி என்பதைக் குறிப்பிட்ட சீன ஜனாதிபதி, இரு நாடுகளும் பரஸ்பர மரியாதை, நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பைக் கடைப்பிடித்து வருவதாகக் கூறினார். பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு பலனளிக்கும் வகையில் இருதரப்பு உறவு தொடர்ந்து மேம்படுத்தப்பட்டுள்ளது. மேலும் இரு தரப்பினரும் அந்தந்த [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/35th-anniversary-of-diplomatic-relations-chinese-singaporean-presidents-exchange-greetings/">இராஜதந்திர உறவுகளின் 35வது ஆண்டு நிறைவு &#8211; சீன, சிங்கப்பூர் ஜனாதிபதிகள் வாழ்த்து பரிமாற்றம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இராஜதந்திர உறவுகளின் 35வது ஆண்டு நிறைவை முன்னிட்டு சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மற்றும் சிங்கப்பூர் ஜனாதிபதி தர்மன் சண்முகரத்தினம் ஆகியோர் வாழ்த்துக்களை பரிமாற்றிக்கொண்டுள்ளனர்.</p>
<p>சீனாவும் சிங்கப்பூரும் நட்புறவு மிக்க அண்டை நாடுகள் மற்றும் முக்கியமான ஒத்துழைப்பு பங்காளி என்பதைக் குறிப்பிட்ட சீன ஜனாதிபதி, இரு நாடுகளும் பரஸ்பர மரியாதை, நம்பிக்கை மற்றும் ஒத்துழைப்பைக் கடைப்பிடித்து வருவதாகக் கூறினார்.</p>
<p>பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பு பலனளிக்கும் வகையில் இருதரப்பு உறவு தொடர்ந்து மேம்படுத்தப்பட்டுள்ளது.</p>
<p>மேலும் இரு தரப்பினரும் அந்தந்த நவீனமயமாக்கல் செயல்முறைகளில் கைகோர்த்து முன்னேறி, இரு நாட்டு மக்களுக்கும் உறுதியான நன்மைகளைத் தருகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>அரசியல் பரஸ்பர நம்பிக்கையை மேலும் ஆழப்படுத்தவும், உயர் மட்ட ஒத்துழைப்பை ஊக்குவிக்கவும், மக்களிடையேயான பரிமாற்றங்களை வலுப்படுத்தவும், பலதரப்பு வர்த்தக அமைப்பையும் சர்வதேச உறவுகளை நிர்வகிக்கும் அடிப்படை விதிமுறைகளையும் கூட்டாகப் பாதுகாக்கவும் சீனா தயாராக உள்ளது.</p>
<p>இதனால் சீனாவிற்கும் சிங்கப்பூருக்கும் இடையிலான அனைத்து வகையான உயர்தர கூட்டாண்மையை ஊக்குவிக்கவும், பிராந்திய மற்றும் உலகளாவிய அமைதி, செழிப்புக்கு இன்னும் அதிக பங்களிப்பை வழங்க முடியும் எனவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>இதனிடையே, 2023 ஆம் ஆண்டில், சிங்கப்பூர்-சீனா உறவுகள் முழுமையான உயர்தர கூட்டாண்மையாக உயர்த்தப்பட்டதாகவும், இரு அரசாங்கங்களுக்கிடையேயான ஒத்துழைப்பு தொடர்ந்து முன்னேறி வருவதாகவும், தொடர்ந்து புதிய அம்சங்களை ஒருங்கிணைத்து, தொலைநோக்கை வெளிப்படுத்துவதாகவும் சிங்கப்பூர் ஜனாதிபதி சண்முகரத்தினம் தெரிவித்துள்ளார்.</p>
<p>காலத்தின் கோரிக்கைகளுக்கு பதிலளிக்கும் விதமாக, இரு தரப்பினரும் புதிய பகுதிகளில் ஒத்துழைப்பை தீவிரமாக விரிவுபடுத்தியுள்ளனர், அதே நேரத்தில் இரு நாட்டு மக்களும் கலாச்சார உறவுகளை சீராக வலுப்படுத்தியுள்ளனர்.</p>
<p>இரு நாடுகளும் தொடர்ந்து நெருக்கமாக இணைந்து பணியாற்றும் என்றும், இருதரப்பு உறவை புதிய உயரத்திற்கு கொண்டுச் செல்லும் என்றும் ஜனாதிபதி சண்முகரத்தினம் உறுதியான நம்பிக்கையை வெளிப்படுத்தினார்.</p>
<p>இதனிடையே, சீனப் பிரதமர் லி கியாங் மற்றும் சிங்கப்பூர் பிரதமர் லாரன்ஸ் வோங் ஆகியோரும் குறித்த நாளில் தமது வாழ்த்துச் செய்திகளைப் பரிமாறிக் கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/35th-anniversary-of-diplomatic-relations-chinese-singaporean-presidents-exchange-greetings/">இராஜதந்திர உறவுகளின் 35வது ஆண்டு நிறைவு &#8211; சீன, சிங்கப்பூர் ஜனாதிபதிகள் வாழ்த்து பரிமாற்றம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>போதைப்பொருள் கடத்தல் &#8211; சிங்கப்பூரில் தமிழர் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்</title>
		<link>https://oruvan.com/drug-trafficking-tamil-man-executed-in-singapore/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Fri, 26 Sep 2025 04:12:44 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Singapore]]></category>
		<category><![CDATA[சிங்கப்பூர்]]></category>
		<category><![CDATA[தட்சிணாமூர்த்தி]]></category>
		<category><![CDATA[தட்சிணாமூர்த்தி காத்தையா]]></category>
		<category><![CDATA[மரண தண்டனை]]></category>
		<category><![CDATA[மரண தண்டனை நிறைவேற்றம்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=33592</guid>

					<description><![CDATA[<p>சிங்கப்பூரின், சாங்கி சிறையில் மரண தண்டனையை எதிர்நோக்கி வந்த மலேசியாவைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி காத்தையாவிற்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. அந்நாட்டின் மத்திய போதைப்பொருள் பிரிவு சி.என்.பி இதனை உறுதிப்படுத்தியது. இதன்படி, நேற்று வியாழக்கிழமை அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 39 வயதுடைய தட்சிணாமூர்த்தி, சிங்கப்பூருக்கு 44.96 கிராம் diamorphine-னை கடத்தியதாக கடந்த 2011ஆம் ஆண்டில் குற்றம் சாட்டப்பட்டு 2015ஆம் ஆண்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டது. அவர் தம்மீதான குற்றச்சாட்டு மற்றும் தண்டனையை மேல்முறையீடு செய்த வேளையில், [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/drug-trafficking-tamil-man-executed-in-singapore/">போதைப்பொருள் கடத்தல் &#8211; சிங்கப்பூரில் தமிழர் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>சிங்கப்பூரின், சாங்கி சிறையில் மரண தண்டனையை எதிர்நோக்கி வந்த மலேசியாவைச் சேர்ந்த தட்சிணாமூர்த்தி காத்தையாவிற்கு தூக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது.</p>
<p>அந்நாட்டின் மத்திய போதைப்பொருள் பிரிவு சி.என்.பி இதனை உறுதிப்படுத்தியது. இதன்படி, நேற்று வியாழக்கிழமை அவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>39 வயதுடைய தட்சிணாமூர்த்தி, சிங்கப்பூருக்கு 44.96 கிராம் diamorphine-னை கடத்தியதாக கடந்த 2011ஆம் ஆண்டில் குற்றம் சாட்டப்பட்டு 2015ஆம் ஆண்டில் மரண தண்டனை விதிக்கப்பட்டது.</p>
<p>அவர் தம்மீதான குற்றச்சாட்டு மற்றும் தண்டனையை மேல்முறையீடு செய்த வேளையில், கடந்த 2016ஆம் ஆண்டு பெப்ரவரி ஐந்தாம் திகதி மேல்முறையீட்டு நீதிமன்றம் அதை தள்ளுபடி செய்தது</p>
<p>அதைத் தொடர்ந்து, கடந்த 2022ஆம் ஆண்டு ஏப்ரல் 29ஆம் திகதியே தட்சிணாமூர்த்தி தூக்கிலிடப்பட்டிருக்க வேண்டும்.</p>
<p>ஆனால், நீதித்துறை சீராய்வு வழக்கு விசாரணையைத் தொடங்க அனுமதிக்கும் வகையில், மரணதண்டனை நிறைவேற்றுவதற்கு முன்னதாக அதற்கு இடைக்காலத் தடை விதிக்கப்பட்டது.</p>
<p>அத்துடன் மேல் முறையீட்டின் போது சட்ட ஆலோசகர் ஒருவரும் அவருக்கு நியமிக்கப்பட்டதாக, அறிக்கை ஒன்றில் சி.என்.பி கூறியிருந்தது.</p>
<p>மேலும், சிங்கப்பூர் ஜனாதிபதியிடம் தட்சிணாமூர்த்தி, கருணை மனு தாக்கல் செய்திருந்தபோதும் அது தோல்வியடைந்ததாக சி.என்.பி தெரிவித்தது.</p>
<p>இதேவேளை, எஸ். சாமிநாதன், ஆர்.லிங்கேஸ்வரன், பன்னீர் செல்வம் பரந்தாமன் ஆகிய மூன்று மலேசியர்களும் சிங்கப்பூர் சிறையில் மரண தண்டனையை எதிர்நோக்கி வருகின்றனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/drug-trafficking-tamil-man-executed-in-singapore/">போதைப்பொருள் கடத்தல் &#8211; சிங்கப்பூரில் தமிழர் ஒருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பாலஸ்தீனர்களுக்கு தனி நாட்டுக்கான உரிமை உள்ளது : சிங்கப்பூர் ஆதரவு &#8211; ஐ.நா டிரம்புக்கு கண்டனம்</title>
		<link>https://oruvan.com/palestinians-have-the-right-to-a-separate-state-singapore-supports-un-condemns-trump/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Fri, 07 Feb 2025 07:42:47 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[காஸா]]></category>
		<category><![CDATA[சிங்கப்பூர்]]></category>
		<category><![CDATA[டிரம்ப்]]></category>
		<category><![CDATA[பாலஸ்தீனர்கள்]]></category>
		<category><![CDATA[விவியன் பாலகிருஷ்ணன்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=9630</guid>

					<description><![CDATA[<p>பாலஸ்தீனர்களுக்குச் சொந்த நாடு பெறும் உரிமை உள்ளதாக சிங்கப்பூர் தனது நீண்டநாள் கொள்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து அந்நாட்டு வெளியுறவு அமைச்சு நேற்று வெள்ளிக்கிழமை விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது. குறித்த அறிக்கையில், வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் பாலஸ்தீனர்கள் தங்களுக்கு என சொந்த நாடு ஒன்றைப் பெறும் உரிமை உள்ளதாக கடந்த பெப்ரவரி 4ஆம் திகதி நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்ததை கருத்தும் சுட்டப்பட்டுள்ளது. மத்திய கிழக்கில் நீண்ட நாட்களாக தொடரும் போருக்கு ஒட்டுமொத்தமான, நியாயமான, நிலைத்திருக்க கூடியதாக [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/palestinians-have-the-right-to-a-separate-state-singapore-supports-un-condemns-trump/">பாலஸ்தீனர்களுக்கு தனி நாட்டுக்கான உரிமை உள்ளது : சிங்கப்பூர் ஆதரவு &#8211; ஐ.நா டிரம்புக்கு கண்டனம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பாலஸ்தீனர்களுக்குச் சொந்த நாடு பெறும் உரிமை உள்ளதாக சிங்கப்பூர் தனது நீண்டநாள் கொள்கையை மீண்டும் வலியுறுத்தியுள்ளது.</p>
<p>இது குறித்து அந்நாட்டு வெளியுறவு அமைச்சு நேற்று வெள்ளிக்கிழமை விசேட அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.</p>
<p>குறித்த அறிக்கையில், வெளியுறவு அமைச்சர் விவியன் பாலகிருஷ்ணன் பாலஸ்தீனர்கள் தங்களுக்கு என சொந்த நாடு ஒன்றைப் பெறும் உரிமை உள்ளதாக கடந்த பெப்ரவரி 4ஆம் திகதி நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்ததை கருத்தும் சுட்டப்பட்டுள்ளது.</p>
<p>மத்திய கிழக்கில் நீண்ட நாட்களாக தொடரும் போருக்கு ஒட்டுமொத்தமான, நியாயமான, நிலைத்திருக்க கூடியதாக ஒரு தீர்வு ஏற்பட வேண்டும். அதற்கு பேச்சுவார்த்தை மூலம் இரு நாடுகள் உருவாவதுதான் ஒரே தீர்வு எனவும் குறித்த அறிக்கையில் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.</p>
<p>பாலஸ்தீன அமைப்பின் நிர்வாக, மறுசீரமைப்புத் திறனை மேம்படுத்த சிங்கப்பூர் தனது தொழில்நுட்ப உதவித் திட்டத்தின்கீழ் அந்த அமைப்புடன் செயல்படும் எனவும் சிங்கப்பூர் வெளியுறவு அமைச்சு கூறியுள்ளது.</p>
<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப், காஸாவில் உள்ள பாலஸ்தீனர்களை மற்ற நாடுகளில் மறுகுடியமர்த்தி, அந்தப் பகுதியை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவந்து அதை பிரான்சில் உள்ள ரிவியேரா போன்ற கடற்கரை சொகுசுத் தளமாக மாற்றத் திட்டமிட்டுள்ளதாகக் கூறியிருந்தார்.</p>
<p>டிரம்பின் இந்தக் கூற்று உலகத் தலைவர்களிடம் இருந்து கண்டனக் குரல்களை வரவழைத்தது. இது குறித்துப் பேசிய ஐநா தலைமைச் செயலாளர் அன்டோனியோ குட்டரஸ், இனப் பேரழிவைத் தவிர்க்குமாறும் பிரச்சினைத் தீர்ப்பதாக எண்ணி நிலைமையை மேலும் மோசமாக்க வேண்டாம் என்றும் டிரம்பை கேட்டுக்கொண்டார்.</p>
<p>“இரு நாட்டு கொள்கையை நாம் மீண்டும் உறுதிப்படுத்த வேண்டும்,” என்றும் அவர் அறிவுரை வழங்கினார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/palestinians-have-the-right-to-a-separate-state-singapore-supports-un-condemns-trump/">பாலஸ்தீனர்களுக்கு தனி நாட்டுக்கான உரிமை உள்ளது : சிங்கப்பூர் ஆதரவு &#8211; ஐ.நா டிரம்புக்கு கண்டனம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
