<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>சாந்த பண்டார Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/%e0%ae%9a%e0%ae%be%e0%ae%a8%e0%af%8d%e0%ae%a4-%e0%ae%aa%e0%ae%a3%e0%af%8d%e0%ae%9f%e0%ae%be%e0%ae%b0/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/சாந்த-பண்டார/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Fri, 19 Sep 2025 04:43:51 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>சாந்த பண்டார Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/சாந்த-பண்டார/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>30 வருடகால போரை முடித்த தலைவரே மஹிந்த: அவரை மக்கள் பாதுகாப்பார்கள்</title>
		<link>https://oruvan.com/mahinda-the-leader-who-ended-the-30-year-war-people-will-protect-him/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Fri, 19 Sep 2025 04:50:16 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[சாந்த பண்டார]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=32988</guid>

					<description><![CDATA[<p>” புலிகள் அமைப்பு ஆயுத ரீதியில் தோற்கடிக்கப்பட்டிருந்தாலும் பிரிவினைவாத சிந்தனை உடையோர் இன்னும் இருக்கின்றனர். எனவே, மஹிந்த ராஜபக்சவுக்கு பாதுகாப்பு ரீதியிலான பிரச்சினை உள்ளது.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர் முன்னாள் பிரதி அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார். மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். ” இலங்கையின் 5ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ச, அரசாங்க வதிவிடத்தில் இருந்து வெளியேறியமை தொடர்பில் பலரும் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/mahinda-the-leader-who-ended-the-30-year-war-people-will-protect-him/">30 வருடகால போரை முடித்த தலைவரே மஹிந்த: அவரை மக்கள் பாதுகாப்பார்கள்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>” புலிகள் அமைப்பு ஆயுத ரீதியில் தோற்கடிக்கப்பட்டிருந்தாலும் பிரிவினைவாத சிந்தனை உடையோர் இன்னும் இருக்கின்றனர். எனவே, மஹிந்த ராஜபக்சவுக்கு பாதுகாப்பு ரீதியிலான பிரச்சினை உள்ளது.” – என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் உறுப்பினர் முன்னாள் பிரதி அமைச்சர் சாந்த பண்டார தெரிவித்தார்.</p>
<p>மொட்டு கட்சி தலைமையகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார்.</p>
<p>” இலங்கையின் 5ஆவது நிறைவேற்று அதிகார ஜனாதிபதியான மஹிந்த ராஜபக்ச, அரசாங்க வதிவிடத்தில் இருந்து வெளியேறியமை தொடர்பில் பலரும் பலகோணங்களில் கருத்துகளை வெளியிடுகின்றனர்.</p>
<p>மஹிந்த ராஜபக்ச என்பவர் அரசியல்வாதி மட்டும் அல்லர், இந்நாட்டில் நிலவிய 30 வருடகால போரை முடிவுக்கு கொண்டுவந்த தலைவர் அவர். சர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணியாமல் நாட்டுக்காக தமது பொறுப்பை சரிவர நிறைவேற்றியவர்.” எனவும் அவர் குறிப்பிட்டார்.</p>
<p>மஹிந்தவுக்கு மூன்று மகன்மார் உள்ளனர், அவர்களால் மஹிந்த ராஜபக்சவை பார்த்துக்கொள்ள முடியாதா என சிலர் கேட்கின்றனர். தனது தந்தையை பார்த்துக்கொள்ளும் இயலுமை நாமலுக்கு உள்ளது. எனினும், பிரிவினைவாத போரை முடிவுக்கு கொண்டுவந்த அவருக்கு பாதுகாப்பு வழங்குவதில்தான் பிரச்சினை உள்ளது.</p>
<p>புலிகள் அமைப்பு ஆயுத ரீதியில் தோற்கடிக்கப்பட்டிருந்தாலும் பிரிவினைவாத சிந்தனை உடையோர் இன்னும் இருக்கின்றனர். இந்நாட்டை அராஜக நிலைக்கு கொண்டுசெல்ல முற்படுகின்றனர். அதனால்தான் அரகலய காலத்தில்கூட நிதி வாரி வழங்கப்பட்டது. அதன் மற்றுமொரு அங்கமாகவே மஹிந்த அநாதரவாக்கப்பட்டுள்ளார்.</p>
<p>மஹிந்த ராஜபக்ச மீண்டும் விஜேராம மாவத்தைக்கு வரமாட்டார். அவரை மக்கள் பார்த்துக்கொள்வார்கள். உலகில் நாட்டுக்கு சுதந்திரத்தை பெற்றுதந்த தலைவரை வேறு நாடுகள் இவ்வாறு செய்வதில்லை. தலைவர்களை பாதுகாப்பார்கள். அவர்கள் உயிரிழந்த பின்னர்கூட உடலம் பாதுகாக்கப்பட்டு, மரியாதை செலுத்தப்படும்.” -எனவும் மொட்டு கட்சி உறுப்பினர் சாந்த பண்டார குறிப்பிட்டார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/mahinda-the-leader-who-ended-the-30-year-war-people-will-protect-him/">30 வருடகால போரை முடித்த தலைவரே மஹிந்த: அவரை மக்கள் பாதுகாப்பார்கள்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
