<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>காசா Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/%E0%AE%95%E0%AE%BE%E0%AE%9A%E0%AE%BE/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/காசா/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Wed, 26 Nov 2025 05:06:19 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>காசா Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/காசா/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>இஸ்ரேலின் தொடரும் தாக்குதல்களால் காசாவில் போர் நிறுத்தம் ஸ்தம்பிதம்</title>
		<link>https://oruvan.com/gaza-ceasefire-stalled-by-continued-israeli-attacks/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Wed, 26 Nov 2025 05:06:19 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[காசா]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=39251</guid>

					<description><![CDATA[<p>காசாவில் இஸ்ரேல் போர் நிறுத்தத்தை மீறி தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்களில் நேற்றும் (25) ஒரு பலஸ்தீனர் கொல்லப்பட்டதோடு அங்கு இஸ்ரேலியப் படை கட்டடங்களை தகர்க்கும் நடவடிக்கையை முன்னெடுத்துவரும் சூழலில் ஆறு வாரங்களுக்கு மேல் நீடிக்கும் இந்த போர் நிறுத்தம் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஒக்டோபர் 10 ஆம் திகதி போர் நிறுத்தம் அமுலுக்கு வந்தது தொடக்கம் இஸ்ரேல் அதனை தினசரி மீறி வருவதாக குற்றம்சாட்டப்படுறது. பரஸ்பரம் ஹமாஸ் அமைப்பு போர் நிறுத்தத்தை மீறுவதாக இஸ்ரேல் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/gaza-ceasefire-stalled-by-continued-israeli-attacks/">இஸ்ரேலின் தொடரும் தாக்குதல்களால் காசாவில் போர் நிறுத்தம் ஸ்தம்பிதம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>காசாவில் இஸ்ரேல் போர் நிறுத்தத்தை மீறி தொடர்ந்து நடத்தி வரும் தாக்குதல்களில் நேற்றும் (25) ஒரு பலஸ்தீனர் கொல்லப்பட்டதோடு அங்கு இஸ்ரேலியப் படை கட்டடங்களை தகர்க்கும் நடவடிக்கையை முன்னெடுத்துவரும் சூழலில் ஆறு வாரங்களுக்கு மேல் நீடிக்கும் இந்த போர் நிறுத்தம் பெரும் சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.</p>
<p>கடந்த ஒக்டோபர் 10 ஆம் திகதி போர் நிறுத்தம் அமுலுக்கு வந்தது தொடக்கம் இஸ்ரேல் அதனை தினசரி மீறி வருவதாக குற்றம்சாட்டப்படுறது. பரஸ்பரம் ஹமாஸ் அமைப்பு போர் நிறுத்தத்தை மீறுவதாக இஸ்ரேல் தரப்பு குற்றம்சாட்டி வருகிறது. இந்நிலையில் இந்த பலவீனமான போர் நிறுத்தம் நீடிப்பதில் சந்தேகங்கள் எழுந்துள்ளன.</p>
<p>இது தொடர்பில் எகிப்து தலைநகர் கெய்ரோவில் ஹமாஸ் பிரதிநிதிகள் எகிப்து அதிகாரிகளை சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளனர். காசாவுக்குள் நிலைகொண்டிருக்கும் இஸ்ரேலியப் படை போர் நிறுத்த உடன்படிக்கையில் எட்டப்பட்ட மஞ்சள் கோட்டு எல்லையையும் தாண்டி வான் மற்றும் பீரங்கி தாக்குதல்களை நடத்தி வருவதோடு தனது எல்லைக்குள் இருக்கும் கட்டங்களை தரைமட்டமாக்கி வருகிறது.</p>
<p>தெற்கு காசா நகரான கான் யூனிஸில் இஸ்ரேல் கட்டுப்பாட்டு மஞ்சள் கோட்டு பகுதிக்குள் இருக்கும் பானி சுஹைலாவில் நடத்தப்பட்ட தாக்குதலிலேயே நேற்று மேலும் ஒரு பலஸ்தீனர் கொல்லப்பட்டதாக அல் நாசர் மருத்துவ வளாகம் தெரிவித்துள்ளது. இஸ்ரேலின் தாக்குதல்களில் கடந்த திங்கட்கிழமையும் நான்கு பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>அதேபோன்று இஸ்ரேலிய துப்பாக்கி படகுகள் தெற்கு காசாவின் ரபா கடற்கரைப் பகுதிகள் மீது செல் குண்டுகளை வீசி இருப்பதோடு கான் யூனிஸ் நகர் மீது பீரங்கி குண்டு தாக்குதல்கள் இடம்பெற்றதாக பார்த்தவர்களை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.</p>
<p>முன்னதாக நேற்றுக் காலை காசா நகரின் ஷுஜையா பகுதியில் பல குடியிருப்புக் கட்டடங்களையும் இஸ்ரேலிய இராணுவம் குண்டு வைத்து தகர்த்துள்ளது. தெற்கு காசாவில் மஞ்சள் கோட்டு எல்லையைத் தாண்டி இஸ்ரேலிய பீரங்கி குண்டுகள் விழுந்திருப்பதாக பார்த்தவர்களை மேற்கோள்காட்டி ‘அனடொக்லு’ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. கடந்த திங்கட்கிழமை ஐ.நா. பாதுகாப்புச் சபையில் பேசிய ஐ.நாவுக்கான பலஸ்தீன தூதுவர் ரியாத் மன்சூர், ஒக்டோபர் 10 ஆம் திகதி போர் நிறுத்தம் எட்டப்பட்டது தொடக்கம் காசாவில் தினசரி இரு சிறுவர்கள் கொல்லப்படுவதாக தெரிவித்துள்ளார். கடந்த மாதம் தொடக்கம் இஸ்ரேலின் தாக்குதல்களில் 1,000 இற்கும் அதிகமான பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டு மற்றும் காயமடைந்திருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>கடந்த ஒக்டோபர் 10 ஆம் திகதி காசாவில் போர் நிறுத்தம் எட்டப்பட்ட பின்னர் ஹமாஸ் அமைப்பு உயிருடன் இருந்த அனைத்து இஸ்ரேலிய பணயக்கைதிகளையும் விடுவித்ததோடு அதற்கு பகரமாக இஸ்ரேலிய சிறையில் இருந்த மற்றும் இஸ்ரேல் தடுத்து வைத்திருந்த இரண்டாயிரத்துக்கும் அதிகமான பலஸ்தீனர்கள் விடுக்கப்பட்டனர்.</p>
<p>இதில் உயிரிழந்த மூன்று பணயக்கைதிகளின் உடல்களை ஹமாஸ் இன்னும் இஸ்ரேலிடம் கையளிக்க வேண்டி இருப்பதோடு அவ்வாறான பணயக்கைதி ஒருவரின் உடன் கண்டுபிடிக்கப்பட்டிருப்பதாக காசாவில் இயங்கும் மற்றொரு போராட்டக் குழுவான இஸ்லாமிய ஜிஹாத் அமைப்பு கடந்த திங்கட்கிழமை குறிப்பிட்டிருந்தது.</p>
<p>எனினும் அந்த உடல் எப்போது கைளிக்கப்படும் என்பது குறித்து அந்த அமைப்பு உறுதி செய்யவில்லை.</p>
<p>எவ்வாறாயினும் இந்தப் போர் நிறுத்தம் அடுத்த கட்ட பேச்சுவார்த்தை இன்றி ஸ்தம்பித்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் 20 அம்ச திட்டத்தின்படியே இந்த போர் நிறுத்தம் அமுலுக்கு வந்தது. இதனையொட்டி காசாவில் இடைக்கால அரசு ஒன்றை அமைப்பது, மற்றும் அங்கு சர்வதேச படை ஒன்றை நிலைநிறுத்துவது தொடர்பிலான தீர்மானம் பாதுகாப்புச் சபையில் அண்மையில் நிறைவேற்றப்பட்டபோதும் இதற்கு ஹமாஸ் அமைப்பு எதிர்ப்பை வெளியிட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>போர் நிறுத்தத்தின் இரண்டாம் கட்டம் சிக்கலானது என்று ஹமாஸ் அமைப்பின் பேச்சாளர் ஹசம் கஸ்ஸாம் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>‘முற்றாக நிச்சயமற்ற சூழல் காணப்படுகிறது, அமெரிக்கா விரிவான திட்டத்தை முன்வைத்துள்ளது. அதில் எவ்வாறான படைகள் உள்ளன, அதன் பணி என்ன, அந்தப் படைகள் எங்கே நிலைகொள்ளப்போகின்றன என்பது பற்றி தெளிவின்றி காணப்படுகிறது’ என்று கெய்ரோ பேச்சவார்த்தை தொடர்பில் அறிந்த பலஸ்தீனர் அதிகாரி ஒருவர் ரோய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திற்கு தெரிவித்துள்ளார்.‘அரசியல் நோக்கு இல்லாமலும், காசாவில் உள்ள அனைத்து பலஸ்தீன பிரிவுகள் மற்றும் சக்திகளுடன் புரிதல் இல்லாமலும் நிலைநிறுத்தப்படும் எந்தவொரு படையும் நிலைமையை மேலும் சிக்கலாக்கும்’ என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/gaza-ceasefire-stalled-by-continued-israeli-attacks/">இஸ்ரேலின் தொடரும் தாக்குதல்களால் காசாவில் போர் நிறுத்தம் ஸ்தம்பிதம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>738 நாட்களுக்கு பின்னர் ஒன்று சேர்ந்த தம்பதி</title>
		<link>https://oruvan.com/couple-reunited-after-738-days/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Wed, 15 Oct 2025 06:28:09 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[காசா]]></category>
		<category><![CDATA[ஹமாஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=35453</guid>

					<description><![CDATA[<p>காசாவில் நீண்ட நாட்​களாக பிணைக் கை​தி​களாக வைக்​கப்​பட்​டிருந்​தவர்​கள் அண்​மை​யில் விடுவிக்​கப்​பட்​டனர். இதை தொடர்ந்து 738 நாட்​களுக்​குப் பிறகு இஸ்​ரேல் தம்​ப​தி​யினர் மீண்​டும் ஒன்று சேர்ந்​துள்​ளனர். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்​பின் முயற்​சி​யால் இரு தரப்​பினர் இடையே கடந்த 9-ம் திகதி அமைதி உடன்​பாடு ஏற்​பட்​டது. இதையடுத்து காசா​வில் 10-ம் திகதி போர் நிறுத்​தம் அமுலுக்கு வந்​தது. எகிப்​தில் நடை​பெற்ற அமைதி மாநாட்​டில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்​னிலை​யில் இந்த காசா அமைதி ஒப்​பந்​தம் உறு​தி​யானது. முன்​ன​தாக, [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/couple-reunited-after-738-days/">738 நாட்களுக்கு பின்னர் ஒன்று சேர்ந்த தம்பதி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>காசாவில் நீண்ட நாட்​களாக பிணைக் கை​தி​களாக வைக்​கப்​பட்​டிருந்​தவர்​கள் அண்​மை​யில் விடுவிக்​கப்​பட்​டனர். இதை தொடர்ந்து 738 நாட்​களுக்​குப் பிறகு இஸ்​ரேல் தம்​ப​தி​யினர் மீண்​டும் ஒன்று சேர்ந்​துள்​ளனர்.</p>
<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்​பின் முயற்​சி​யால் இரு தரப்​பினர் இடையே கடந்த 9-ம் திகதி அமைதி உடன்​பாடு ஏற்​பட்​டது.<br />
இதையடுத்து காசா​வில் 10-ம் திகதி போர் நிறுத்​தம் அமுலுக்கு வந்​தது.</p>
<p>எகிப்​தில் நடை​பெற்ற அமைதி மாநாட்​டில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் முன்​னிலை​யில் இந்த காசா அமைதி ஒப்​பந்​தம் உறு​தி​யானது. முன்​ன​தாக, ஹமாஸ் குழு​வின் பிடி​யில் இருந்த 20 இஸ்​ரேலிய பிணைக் கைதி​கள் விடு​தலை செய்​யப்​பட்​டனர். அதே​போல் இஸ்​ரேல் சிறை​களில் அடைக்​கப்​பட்​டிருந்த 154 பாலஸ்​தீனர்​களும் விடுவிக்​கப்​பட்​டனர்.</p>
<p>பிணைக் கைதி​கள் விடுவிக்​கப்​பட்​டதைத் தொடர்ந்து இஸ்​ரேல் நாட்​டைச் சேர்ந்த அவி​நாட்​டன் ஓர் என்​பவரும் விடுவிக்​கப்​பட்​டார். இவர் ஹமாஸ் தீவிர​வா​தி​கள் பிடித்து வைத்​திருந்த 20 இஸ்​ரேலியர்​களில் ஒரு​வர் ஆவார்.</p>
<p>சுமார் 738 நாட்​கள் பிணைக் கைதி​யாக இருந்த இவர் நேற்று முன்​தினம் வீடு வந்து சேர்ந்​தார். அவரைப் பார்த்​ததும் அவரது மனைவி நோவா அர்​காமனி ஓடி வந்து கட்​டியணைத்​துக் கொண்​டார். கணவரை முத்​தமிட்டு வரவேற்​றார். சந்​தோஷத்​தில் அவர் வாய்​விட்டு அழு​தார்.</p>
<p>மனை​வியைப் பார்த்​ததும் கண்​ணீர் விட்டு அழு​தார் அவி​நாட்​டன் ஓர். அவி​நாட்​டனின் மனைவி நோவா அர்​காமனி​யும், பிணைக் கைதி​யாக பிடித்து வைக்​கப்​பட்​டிருந்​தார். இஸ்​ரேல் ராணுவத்​தினர் கடந்த ஆண்டு மேற்​கொண்ட முயற்​சி​யால் அவர் விடுவிக்​கப்​பட்​டார். 2 ஆண்​டு​களுக்​கும் மேலான பிரிவுக்​குப் பின்​னர் தம்​ப​தி​யர் ஒன்று சேர்ந்​ததற்கு நண்​பர்​கள் வரவேற்பு தெரி​வித்​துள்​ளனர்.</p>
<p>இரு​வரும் கட்​டியணைத்து வரவேற்ற வீடியோ, புகைப்​படங்​கள் தற்​போது சமூக வலை​தளங்​களில் வைரலாகி​யுள்​ளன.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/couple-reunited-after-738-days/">738 நாட்களுக்கு பின்னர் ஒன்று சேர்ந்த தம்பதி</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>காசாவிற்கு நிவாரணம் கொண்டு சென்ற குழுவினரை தடுத்து நிறுத்திய இஸ்ரேல்</title>
		<link>https://oruvan.com/israeli-navy-intercepts-40-boats-carrying-aid-to-gaza/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Fri, 03 Oct 2025 15:31:16 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[காசா]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=34298</guid>

					<description><![CDATA[<p>காசா முனையில் போர் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீன மக்களுக்காக நிவாரணப் பொருட்களைக் கொண்டு சென்ற சுவீடனின் இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் மற்றும் அவரது குழுவினரை இஸ்ரேல் கடற்படையினர் தடுத்து நிறுத்தி உள்ளனர். அவர்கள் அனைவரும் பத்திரமாக அஷோத் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், விரைவில் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது. கடந்த 2023ம் ஆண்டு ஒக்டோபர் 7 ஆம் திகதி, காசா முனையை நிர்வகிக்கும் ஹமாஸ் ஆயுதக் குழுவினர் இஸ்ரேலுக்குள் புகுந்து நடத்திய பயங்கரவாத [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/israeli-navy-intercepts-40-boats-carrying-aid-to-gaza/">காசாவிற்கு நிவாரணம் கொண்டு சென்ற குழுவினரை தடுத்து நிறுத்திய இஸ்ரேல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>காசா முனையில் போர் காரணமாக பாதிக்கப்பட்டுள்ள பாலஸ்தீன மக்களுக்காக நிவாரணப் பொருட்களைக் கொண்டு சென்ற சுவீடனின் இளம் சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க் மற்றும் அவரது குழுவினரை இஸ்ரேல் கடற்படையினர் தடுத்து நிறுத்தி உள்ளனர்.</p>
<p>அவர்கள் அனைவரும் பத்திரமாக அஷோத் துறைமுகத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளதாகவும், விரைவில் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் இஸ்ரேல் தெரிவித்துள்ளது.</p>
<p>கடந்த 2023ம் ஆண்டு ஒக்டோபர் 7 ஆம் திகதி, காசா முனையை நிர்வகிக்கும் ஹமாஸ் ஆயுதக் குழுவினர் இஸ்ரேலுக்குள் புகுந்து நடத்திய பயங்கரவாத தாக்குதலில் 1,139 இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். மேலும், 251 பேர் பணயக் கைதிகளாக காசாவுக்கு கடத்திச் செல்லப்பட்டனர்.</p>
<p>இதற்குப் பதிலடியாக, ஹமாஸ் அமைப்பினரை முழுமையாக அழிக்கும் வரை போர்நிறுத்தம் இல்லை என அறிவித்த இஸ்ரேல், காசா முனையில் தீவிர தாக்குதலை நடத்தி வருகிறது.</p>
<p>இஸ்ரேலின் இராணுவ நடவடிக்கைகளால் காசா முற்றிலும் நிலைகுலைந்துள்ளது. இதுவரை சுமார் 65 ஆயிரத்துக்கும் அதிகமான பாலஸ்தீன மக்கள் உயிரிழந்துள்ளனர்.</p>
<p>போரால் பாதிக்கப்பட்ட காசா மக்களுக்கு சர்வதேச நாடுகளில் இருந்து அனுப்பப்படும் நிவாரண உதவிகளை இஸ்ரேல் இராணுவம் தடுத்து நிறுத்துவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. இதனால் காசாவில் மோசமான பஞ்சம் ஏற்பட வாய்ப்புள்ளதாக அச்சம் நிலவுகிறது.</p>
<p>இந்தச் சூழ்நிலையில், சுவீடன் நாட்டைச் சேர்ந்த சுற்றுச்சூழல் ஆர்வலர் கிரேட்டா தன்பெர்க், அமெரிக்க நடிகை சூசன் சாரண்டன், மற்றும் பல்வேறு சமூக ஆர்வலர்கள் உள்பட நூற்றுக்கும் மேற்பட்டவர்கள், 40 படகுகளில் கடல்வழியாக நிவாரணப் பொருட்களை ஏற்றி காசாவை நோக்கிப் பயணித்தனர்.</p>
<p>அவர்கள் பயணித்த படகுகள், இஸ்ரேலின் கட்டுப்பாட்டில் உள்ள கடல் எல்லைக்குள் நுழைந்தபோது, இஸ்ரேல் கடற்படையினர் அங்கு விரைந்து சென்றனர். கிரேட்டா தன்பெர்க் மற்றும் அவரது குழுவினரைத் தடுத்து நிறுத்திய கடற்படையினர், அவர்கள் கொண்டு வந்த நிவாரணப் பொருட்களைப் பறிமுதல் செய்தனர்.</p>
<p>பின்னர், கிரேட்டா தன்பெர்க் மற்றும் குழுவினர் அனைவரும் இஸ்ரேலில் உள்ள அஷோத் துறைமுகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அனைவரும் பாதுகாப்பாக இருப்பதாகவும், விரைவில் அவர்கள் அனைவரும் திருப்பி அனுப்பப்படுவார்கள் என்றும் இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/israeli-navy-intercepts-40-boats-carrying-aid-to-gaza/">காசாவிற்கு நிவாரணம் கொண்டு சென்ற குழுவினரை தடுத்து நிறுத்திய இஸ்ரேல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>காசாவில் பஞ்சம்: 5 லட்சம் பேர் பரிதவிப்பு</title>
		<link>https://oruvan.com/famine-in-gaza-500000-people-in-need/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Sat, 23 Aug 2025 02:13:46 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[காசா]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=30367</guid>

					<description><![CDATA[<p>மேற்கு ஆசியாவிலேயே முதல்முறையாக பாலஸ்தீனத்தின் காசாவில் கடும் உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது என ஐ.நா அறிவித்துள்ளது. சுமார் 5 லட்சம் பேர் அங்கு உணவு தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளதாக ஐ.நா அமைப்பின் வல்லுநர்கள் கூறியுள்ளனர். ” காசாவில் நிலவும் உணவு பஞ்சம் நிச்சயம் தடுக்கக்கூடிய ஒன்றுதான். இஸ்ரேலின் தடை உத்தரவு காரணமாக பாலஸ்தீனத்தின் அந்த பகுதிக்கு உணவு கொண்ட செல்ல முடியாத சூழல் நிலவுகிறது.” என்று ஐ.நா நிவாரண உதவி பிரிவின் தலைமை பொறுப்பில் உள்ள தாமஸ் தெரிவித்துள்ளார். [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/famine-in-gaza-500000-people-in-need/">காசாவில் பஞ்சம்: 5 லட்சம் பேர் பரிதவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>மேற்கு ஆசியாவிலேயே முதல்முறையாக பாலஸ்தீனத்தின் காசாவில் கடும் உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது என ஐ.நா அறிவித்துள்ளது.</p>
<p>சுமார் 5 லட்சம் பேர் அங்கு உணவு தட்டுப்பாட்டை எதிர்கொண்டுள்ளதாக ஐ.நா அமைப்பின் வல்லுநர்கள் கூறியுள்ளனர்.</p>
<p>” காசாவில் நிலவும் உணவு பஞ்சம் நிச்சயம் தடுக்கக்கூடிய ஒன்றுதான். இஸ்ரேலின் தடை உத்தரவு காரணமாக பாலஸ்தீனத்தின் அந்த பகுதிக்கு உணவு கொண்ட செல்ல முடியாத சூழல் நிலவுகிறது.” என்று ஐ.நா நிவாரண உதவி பிரிவின் தலைமை பொறுப்பில் உள்ள தாமஸ் தெரிவித்துள்ளார்.</p>
<p>இதை இஸ்ரேல் வெளியுறவு அமைச்சகம் திட்டவட்டமாக மறுத்துள்ளது.</p>
<p>மேலும், காசாவில் உணவு பஞ்சம் எதுவும் இல்லை என்று கூறியுள்ளது. காசாவில் பஞ்சம் என்பது ஹமாஸ் அமைப்பால் பரப்பப்பட்ட பொய்யின் அடிப்படையிலானது என பதிலடி கொடுத்துள்ளது.</p>
<p>கடந்த 15-ம் திகதி நிலவரப்படி காசா நகரில் உணவு பஞ்சம் ஏற்பட்டுள்ளது ஆதாரபூர்வமாக உறுதி செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது. வரும் செப்டம்பர் மாத இறுதியில் காசா முனையின் டெய்ர்-எல்-பலாஹ் மற்றும் கான் யூனிஸ் பகுதியிலும் இந்த நிலை ஏற்படும் என கூறப்பட்டுள்ளது.</p>
<p>காசாவில் தினசரி ஐந்தில் ஒரு வீட்டிலும், மூன்றில் ஒரு குழந்தையிடமும், ஒவ்வொரு பத்தாயிரம் பேரில் இருவர் என பசி காரணமாகவும், ஊட்டச்சத்து குறைபாடு காரணமாகவும் உயிரிழந்து வருகின்றனர் என ஐபிசி கூறியுள்ளது.</p>
<p>கடந்த 2023 அக்டோபரில் ஹமாஸ் அமைப்பினர் இஸ்ரேலில் நடத்திய தாக்குதலால் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் தரப்புக்கு இடையிலான மோதலை மிக தீவிரமாக்கியது.</p>
<p>அதற்கடுத்த இந்த 22 மாதத்தில் மட்டும் இஸ்ரேல் மேற்கொண்ட ராணுவ நடவடிக்கை காரணமாக பாலஸ்தீனத்தை சேர்ந்த சுமார் 62 ஆயிரத்து 192 பேர் உயிரிழந்துள்ளனர். அவர்களில் பெரும்பாலானோர் பொது மக்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/famine-in-gaza-500000-people-in-need/">காசாவில் பஞ்சம்: 5 லட்சம் பேர் பரிதவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>காசாவுக்கு பாராசூட்டில் ஐக்கிய அரபு அமீரகம் நிவாரணம்</title>
		<link>https://oruvan.com/uae-parachutes-aid-to-gaza/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Sat, 02 Aug 2025 10:46:07 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[காசா]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=28285</guid>

					<description><![CDATA[<p>காசா பகுதியில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக, விமானம் மூலம் நிவாரணப் பொருள்களை பாராசூட் உதவியுடன் ஐக்கிய அரபு அமீரகம் வீசியுள்ளது. இதுவரை சுமார் 4,000 டன் உணவு மற்றும் நிவாரணப் பொருள்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது தவிர, தரை மார்க்கமாக நிவாரணப் பொருள்களுடன் 41 லாரிகளும், மருந்துப் பொருள்களுடன் 12 லாரிகளும் காசா பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். சர்வதேச நாடுகளின் அழுத்தத்தையடுத்து, நிவாரணப் பொருள் விநியோகத்துக்கு இஸ்ரேல் அனுமதி அளித்துள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/uae-parachutes-aid-to-gaza/">காசாவுக்கு பாராசூட்டில் ஐக்கிய அரபு அமீரகம் நிவாரணம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>காசா பகுதியில் தொடர்ந்து ஐந்தாவது நாளாக, விமானம் மூலம் நிவாரணப் பொருள்களை பாராசூட் உதவியுடன் ஐக்கிய அரபு அமீரகம் வீசியுள்ளது.</p>
<p>இதுவரை சுமார் 4,000 டன் உணவு மற்றும் நிவாரணப் பொருள்கள் விநியோகிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p>
<p>இது தவிர, தரை மார்க்கமாக நிவாரணப் பொருள்களுடன் 41 லாரிகளும், மருந்துப் பொருள்களுடன் 12 லாரிகளும் காசா பகுதிக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.</p>
<p>சர்வதேச நாடுகளின் அழுத்தத்தையடுத்து, நிவாரணப் பொருள் விநியோகத்துக்கு இஸ்ரேல் அனுமதி அளித்துள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/uae-parachutes-aid-to-gaza/">காசாவுக்கு பாராசூட்டில் ஐக்கிய அரபு அமீரகம் நிவாரணம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பிரிட்டனின் முடிவு ஆபத்தானது: இஸ்ரேல் கடும் கண்டனம்</title>
		<link>https://oruvan.com/britains-decision-is-dangerous-israel-strongly-condemns/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Wed, 30 Jul 2025 05:57:11 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[காசா]]></category>
		<category><![CDATA[பிரதமர் பநெதன்யாகு]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=27943</guid>

					<description><![CDATA[<p>பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கப் போவதாக பிரிட்டன் அறிவித்துள்ளதற்கு இஸ்ரேல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்கள், அதன் பாதிப்புகள் இன்னமும் ஓயவில்லை. தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை கடந்து விட்டது. இந்நிலையில் பிரிட்டனின் முடிவுக்கு இஸ்ரேல் பிரதமர் பநெதன்யாகு கடும் கண்டனத்தையும், அதிருப்தியையும் வெளியிட்டு உள்ளார். ‘ பிரிட்டனின் இந்த முடிவு பிற்காலத்தில் அவர்களையே தாக்கக்கூடும். இஸ்ரேல் எல்லையில் ஜிகாதி நாடு இன்று உருவானால் நாளை அது பிரிட்டனுக்கு பெரும் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/britains-decision-is-dangerous-israel-strongly-condemns/">பிரிட்டனின் முடிவு ஆபத்தானது: இஸ்ரேல் கடும் கண்டனம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பாலஸ்தீனத்தை தனி நாடாக அங்கீகரிக்கப் போவதாக பிரிட்டன் அறிவித்துள்ளதற்கு இஸ்ரேல் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.</p>
<p>காசாவில் இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதல்கள், அதன் பாதிப்புகள் இன்னமும் ஓயவில்லை. தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 60 ஆயிரத்தை கடந்து விட்டது.</p>
<p>இந்நிலையில் பிரிட்டனின் முடிவுக்கு இஸ்ரேல் பிரதமர் பநெதன்யாகு கடும் கண்டனத்தையும், அதிருப்தியையும் வெளியிட்டு உள்ளார்.</p>
<p>‘ பிரிட்டனின் இந்த முடிவு பிற்காலத்தில் அவர்களையே தாக்கக்கூடும். இஸ்ரேல் எல்லையில் ஜிகாதி நாடு இன்று உருவானால் நாளை அது பிரிட்டனுக்கு பெரும் அச்சுறுத்தலாக அமையும்.</p>
<p>பாலஸ்தீனத்துக்கு ஆதரவான இந்த செயல் பாதிப்பை ஏற்படுத்தும். பயங்கரவாதிகளை சமாதானப்படுத்தும் உங்கள் நடவடிக்கை எப்போதும் தோல்விதான். அது உங்களுக்கும் தோல்வியை தரும். அது நடக்காது.” – என்றும் இஸ்ரேல் பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/britains-decision-is-dangerous-israel-strongly-condemns/">பிரிட்டனின் முடிவு ஆபத்தானது: இஸ்ரேல் கடும் கண்டனம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>காசாவில் பட்டினியை இனப்படுகொலை ஆயுதமாக பயன்படுத்தும் இஸ்ரேல்</title>
		<link>https://oruvan.com/israel-is-using-starvation-as-a-weapon-of-genocide-in-gaza/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Thu, 24 Jul 2025 13:03:52 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[காசா]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=27519</guid>

					<description><![CDATA[<p>காசாவில் பட்டினியை இனப்படுகொலை ஆயுதமாகப் பயன்படுத்துவதற்காக ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட சர்வதேச நாடுகள் மற்றும் அமைப்புகள் இஸ்ரேலை கண்டித்துள்ளன. காசாவில் கடந்த இரண்டு நாட்களில், 33 பேர் பட்டினியால் இறந்துள்ளனர். அவர்களில் 12 பேர் குழந்தைகள். இதன் மூலம், சமீபத்திய நாட்களில் பட்டினியால் இறந்தவர்களின் எண்ணிக்கை 80 குழந்தைகள் உட்பட 101 ஆக உயர்ந்துள்ளது. ஆயிரக்கணக்கானோர் மரணத்தின் விளிம்பில் இருப்பதாகவும் கள நிலவரங்கள் வெளியாகி வருகின்றன. உணவுக்காகக் காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/israel-is-using-starvation-as-a-weapon-of-genocide-in-gaza/">காசாவில் பட்டினியை இனப்படுகொலை ஆயுதமாக பயன்படுத்தும் இஸ்ரேல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>காசாவில் பட்டினியை இனப்படுகொலை ஆயுதமாகப் பயன்படுத்துவதற்காக ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட சர்வதேச நாடுகள் மற்றும் அமைப்புகள் இஸ்ரேலை கண்டித்துள்ளன.</p>
<p>காசாவில் கடந்த இரண்டு நாட்களில், 33 பேர் பட்டினியால் இறந்துள்ளனர். அவர்களில் 12 பேர் குழந்தைகள்.</p>
<p>இதன் மூலம், சமீபத்திய நாட்களில் பட்டினியால் இறந்தவர்களின் எண்ணிக்கை 80 குழந்தைகள் உட்பட 101 ஆக உயர்ந்துள்ளது.<br />
ஆயிரக்கணக்கானோர் மரணத்தின் விளிம்பில் இருப்பதாகவும் கள நிலவரங்கள் வெளியாகி வருகின்றன.</p>
<p>உணவுக்காகக் காத்திருந்தவர்கள் மீது இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 1,054 ஆக உயர்ந்துள்ளது.</p>
<p>காசாவிற்கு அவசர உதவி கோரி 111 உலகளாவிய அமைப்புகள் ஒன்றிணைந்துள்ளன.</p>
<p>எல்லைகளற்ற மருத்துவர்கள், ஆக்ஸ்பாம் இன்டர்நேஷனல் மற்றும் பொது மன்னிப்பு சபை போன்ற அமைப்புகள் களத்தில் உள்ளன.</p>
<p>காசாவிற்கு வெளியேயும் காசாவிற்குள்ளும் கிடங்குகளில் டன் கணக்கில் உணவு, சுத்தமான நீர், மருந்து மற்றும் எரிபொருள் குவிந்துள்ளன. மனிதாபிமான அமைப்புகள் இவற்றை விநியோகிப்பதை இஸ்ரேல் தடுக்கிறது.</p>
<p>காசா மனிதாபிமான அறக்கட்டளை என்ற பெயரில் இஸ்ரேல் அமைத்த உணவு விநியோக மையங்களை இஸ்ரேல் மரணப் பொறிகளாக மாற்றுவதாகவும் அந்த அமைப்புகள் குற்றம் சாட்டுகின்றன.</p>
<p>ஐரோப்பிய ஒன்றிய வெளியுறவுக் கொள்கைத் தலைவர் காஜா கல்லாஸ் கூறுகையில்,</p>
<p>‘ உணவு தேடி வரும் மக்களை குறிவைப்பதற்கு எந்த நியாயமும் இல்லை. உணவு விநியோக மையங்களில் கொலைகள் நிறுத்தப்பட வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.<br />
மேலும் இஸ்ரேல் பேச்சுவார்த்தைக்கு இணங்கி தங்கள் வார்த்தையை காப்பாற்றவில்லை என்றால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் எச்சரித்தார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/israel-is-using-starvation-as-a-weapon-of-genocide-in-gaza/">காசாவில் பட்டினியை இனப்படுகொலை ஆயுதமாக பயன்படுத்தும் இஸ்ரேல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>காசாவில் 14 ஆயிரம் சிறார்கள் உயிரிழக்கும் அபாயம்</title>
		<link>https://oruvan.com/14000-children-at-risk-of-death-in-gaza/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Wed, 21 May 2025 12:41:02 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[காசா]]></category>
		<category><![CDATA[பாலஸ்தீனம்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=20888</guid>

					<description><![CDATA[<p>பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழப்பு எண்ணிக்கை 53 ஆயிரத்து 587 ஆக அதிகரித்துள்ளது. காசாவில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து ஹமாஸ் போராளிகள் கடந்த 2023 அக்டோபரில் அந்நாட்டில் தாக்குதல் நடத்தினர். இதில் 1,200 பேர் வரை பலியாகினர். 200க்கும் மேற்பட்டோர் பணய கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர். இதற்கு பழிவாங்கும் வகையில் கடந்த 2 வருடங்களாக காசா உள்ளிட்ட பாலஸ்தீன நகரங்கள் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. காசாவில் உயிரிழந்தவர்களில் பெரும்பாண்யானோர் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/14000-children-at-risk-of-death-in-gaza/">காசாவில் 14 ஆயிரம் சிறார்கள் உயிரிழக்கும் அபாயம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பாலஸ்தீனம் மீது இஸ்ரேல் நடத்தி வரும் தாக்குதலில் உயிரிழப்பு எண்ணிக்கை 53 ஆயிரத்து 587 ஆக அதிகரித்துள்ளது.</p>
<p>காசாவில் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பை எதிர்த்து ஹமாஸ் போராளிகள் கடந்த 2023 அக்டோபரில் அந்நாட்டில் தாக்குதல் நடத்தினர். இதில் 1,200 பேர் வரை பலியாகினர். 200க்கும் மேற்பட்டோர் பணய கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டனர்.</p>
<p>இதற்கு பழிவாங்கும் வகையில் கடந்த 2 வருடங்களாக காசா உள்ளிட்ட பாலஸ்தீன நகரங்கள் மீது இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது.</p>
<p>காசாவில் உயிரிழந்தவர்களில் பெரும்பாண்யானோர் பெண்கள் மற்றும் குழந்தைகள் என்று ஐநா தரவுகள் தெரிவிக்கின்றன.</p>
<p>கடந்த 11 வாரங்களாக காசாவுக்குள் எந்த உணவு மற்றும் உதவிப் பொருட்களையும் இஸ்ரேல் அனுமதிக்கவில்லை. இதனால் 14,000 குழந்தைகள் அடுத்த சில நாட்களில் உயிரிழக்கும் சூழல் உருவாகியுள்ளதாக ஐநா தெரிவித்தது.<br />
மேலும் காசாவை முழுமையாக கைப்பற்ற போவதாக இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அறிவித்தார்.</p>
<p>இதனை கண்டித்து கனடா, பிரான்ஸ், இங்கிலாந்து ஆகிய நட்பு நாடுகளும் கண்டனம் தெரிவித்தன. ஆனால் வெளியில் இருந்து எந்த அழுத்தத்தையும் ஏற்க போவதில்லை என நேதன்யாகு திட்டவட்டமாக தெரிவித்தார்.</p>
<p>இந்நிலையில் காசாவில் கடந்த 24 மணிநேரத்தில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 84 பேர் உயிரிழந்தனர். இதனால் மொத்த உயிரிழப்பு எண்ணிக்கை 53,587 ஆக அதிகரித்துள்ளது. மொத்தம் 1 லட்சத்து 21 ஆயிரத்து 688 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/14000-children-at-risk-of-death-in-gaza/">காசாவில் 14 ஆயிரம் சிறார்கள் உயிரிழக்கும் அபாயம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>அமெரிக்காவுடன் கலந்தாலோசித்து இஸ்ரேல் படுகொலை &#8211; காசாவில் பலி எண்ணிக்கை 244 ஆக உயர்வு</title>
		<link>https://oruvan.com/israel-massacres-in-consultation-with-the-us-death-toll-in-gaza-rises-to-244/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Tue, 18 Mar 2025 06:55:00 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Gaza]]></category>
		<category><![CDATA[Gaza Ceasefire Deal]]></category>
		<category><![CDATA[Gaza War]]></category>
		<category><![CDATA[இஸ்ரேல்]]></category>
		<category><![CDATA[இஸ்ரேல்- ஹமாஸ்]]></category>
		<category><![CDATA[காசா]]></category>
		<category><![CDATA[காஸா]]></category>
		<category><![CDATA[ஹமாஸ்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=14866</guid>

					<description><![CDATA[<p>அமெரிக்காவுடன் கலந்தாலோசித்த பின்னர், ஹமாஸுடனான இரண்டாவது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தை ஒரு முடிவை எட்டாததை அடுத்து, போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காசா மீது இஸ்ரேல் கடும் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது. வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஃபாக்ஸ் நியூஸிடம் இதனை தெரிவித்துள்ளார். காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் குறித்து டிரம்ப் நிர்வாகம் மற்றும் வெள்ளை மாளிகையுடன் ஆலோசனை நடத்தியதாக வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் தெரிவித்தார். ஜனாதிபதி டிரம்ப் தெளிவுபடுத்தியுள்ளபடி, ஹமாஸ், ஹவுத்திகள், [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/israel-massacres-in-consultation-with-the-us-death-toll-in-gaza-rises-to-244/">அமெரிக்காவுடன் கலந்தாலோசித்து இஸ்ரேல் படுகொலை &#8211; காசாவில் பலி எண்ணிக்கை 244 ஆக உயர்வு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>அமெரிக்காவுடன் கலந்தாலோசித்த பின்னர், ஹமாஸுடனான இரண்டாவது சுற்று அமைதிப் பேச்சுவார்த்தை ஒரு முடிவை எட்டாததை அடுத்து, போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி காசா மீது இஸ்ரேல் கடும் வான்வழித் தாக்குதலை நடத்தியுள்ளது.</p>
<p>வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஃபாக்ஸ் நியூஸிடம் இதனை தெரிவித்துள்ளார்.</p>
<p>காசா மீதான இஸ்ரேலின் தாக்குதல்கள் குறித்து டிரம்ப் நிர்வாகம் மற்றும் வெள்ளை மாளிகையுடன் ஆலோசனை நடத்தியதாக வெள்ளை மாளிகையின் பத்திரிகை செயலாளர் கரோலின் லீவிட் தெரிவித்தார்.</p>
<p>ஜனாதிபதி டிரம்ப் தெளிவுபடுத்தியுள்ளபடி, ஹமாஸ், ஹவுத்திகள், ஈரான் இஸ்ரேலை மட்டுமல்ல, அமெரிக்காவையும் மிரட்ட முயற்சித்துள்ளதாகவும் அதற்கான விலையைக் கொடுக்க நேரிடும் எனவும் லீவிட் குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>ஹமாஸ் அனைத்து பணயக்கைதிகளையும் விடுவிக்க வேண்டும் அல்லது காசா நரகமாக மாறும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் முன்பு கூறியிருந்தார்.</p>
<p>ஜனவரி 19 அன்று இஸ்ரேலுக்கும் ஹமாஸுக்கும் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்டதிலிருந்து, இன்று காலை, இஸ்ரேல் காசா மீது அதன் மிகவும் தீவிரமான தொடர் வான்வழித் தாக்குதல்களைத் தொடங்கியது.</p>
<p>ஜபாலியா, காசா நகரம், நுசைரத், டெய்ர் அல்-பலா மற்றும் கான் யூனிஸ் உள்ளிட்ட காசா பகுதியில் வடக்கிலிருந்து தெற்கு வரை பல்வேறு பகுதிகளை குறிவைத்து தொடர்ச்சியான வான்வழித் தாக்குதல்கள் நடத்தப்பட்டன.</p>
<p>உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 244 ஆக உயர்ந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. ரமழான் மாதத்தில் இஸ்ரேலின் கொடூரமான தாக்குதல்களில் கொல்லப்பட்டவர்களில் பல பெண்களும் குழந்தைகளும் அடங்குவர்.</p>
<p>இந்த தாக்குதலில் 200க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனர்.</p>
<p>காசா மக்களுக்கு எதிரான சியோனிச அழிப்புப் போரை மீண்டும் தொடங்குவதை எதிர்க்குமாறு அரபு மற்றும் இஸ்லாமிய நாடுகளின் மக்களையும், உலகின் சுதந்திர மக்களையும் ஹமாஸ் கேட்டுக் கொண்டது.</p>
<p>மீண்டும் போருக்குத் திரும்பும் நெதன்யாகுவின் முடிவு, போர்க் கைதிகளைப் பலியிட்டு அவர்களுக்கு மரண தண்டனை விதிக்கும் முடிவாகும். பேச்சுவார்த்தை மூலம் அடைய முடியாததை, எதிரி போர் மற்றும் அழிவு மூலம் அடைய முடியாது என்றும் ஹமாஸ் கூறியது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/israel-massacres-in-consultation-with-the-us-death-toll-in-gaza-rises-to-244/">அமெரிக்காவுடன் கலந்தாலோசித்து இஸ்ரேல் படுகொலை &#8211; காசாவில் பலி எண்ணிக்கை 244 ஆக உயர்வு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பிணைக்கைதிகளை விடுவிக்காவிட்டால் அமைதி ஒப்பந்தம் ரத்தாகும் &#8211; ஹமாசுக்கு டிரம்ப் எச்சரிக்கை</title>
		<link>https://oruvan.com/trump-warns-hamas-that-peace-deal-will-be-scrapped-if-hostages-are-not-released/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Tue, 11 Feb 2025 05:11:25 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[காசா]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=9993</guid>

					<description><![CDATA[<p>காசாவில் இருந்து வரும் சனிக்கிழமைக்குள் இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிக்காவிட்டால், அமைதி ஒப்பந்தம் ரத்தாகும் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் காசா உள்ளிட்ட பாலஸ்தீன பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையே, 2023, அக்., 7ல் போர் துவங்கியது. அமெரிக்கா, கத்தார், எகிப்து ஆகியவற்றின் மத்தியஸ்த முயற்சியால், போரை நிறுத்துவதற்கான ஒப்பந்தம் சமீபத்தில் கையெழுத்தானது. ஹமாஸ் பயங்கரவாதிகள் பிடித்துச்சென்ற பிணைக் கைதிகளை விடுவிக்கவும், அதற்காக இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனர்களை [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/trump-warns-hamas-that-peace-deal-will-be-scrapped-if-hostages-are-not-released/">பிணைக்கைதிகளை விடுவிக்காவிட்டால் அமைதி ஒப்பந்தம் ரத்தாகும் &#8211; ஹமாசுக்கு டிரம்ப் எச்சரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>காசாவில் இருந்து வரும் சனிக்கிழமைக்குள் இஸ்ரேலிய பிணைக் கைதிகளை விடுவிக்காவிட்டால், அமைதி ஒப்பந்தம் ரத்தாகும் என டிரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார்.</p>
<p>மேற்காசிய நாடான இஸ்ரேல் மற்றும் காசா உள்ளிட்ட பாலஸ்தீன பகுதிகளை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாதிகள் இடையே, 2023, அக்., 7ல் போர் துவங்கியது. அமெரிக்கா, கத்தார், எகிப்து ஆகியவற்றின் மத்தியஸ்த முயற்சியால், போரை நிறுத்துவதற்கான ஒப்பந்தம் சமீபத்தில் கையெழுத்தானது.</p>
<p>ஹமாஸ் பயங்கரவாதிகள் பிடித்துச்சென்ற பிணைக் கைதிகளை விடுவிக்கவும், அதற்காக இஸ்ரேல் சிறையில் உள்ள பாலஸ்தீனர்களை விடுவிக்கவும் முடிவு செய்யப்பட்டது. இதன்படி, பிணைக்கைதிகள் விடுவிக்கப்பட்டு வருகின்றனர்.</p>
<p>இந்நிலையில் டிரம்ப் கூறியுள்ளதாவது: அனைத்து இஸ்ரேலிய பிணைக்கைதிகளும் சனிக்கிழமை 12 மணி மணிக்குள் திரும்பி வராவிட்டால், அமைதி ஒப்பந்தத்தை ரத்து செய்வதற்கு இதுவே சரியான நேரம் என நான் கருதுவேன். அனைத்து இஸ்ரேலிய பிணைக்கைதிகளும் விடுவிக்கப்பட வேண்டும். கொஞ்சம் கொஞ்சமாகவோ அல்லது ஒன்று, இரண்டு, மூன்று&#8230; என விடுவிக்காமல், மொத்தமாக விடுவிக்கப்பட வேண்டும்.</p>
<p>அனைவரையும் திரும்ப பெற விரும்புகிறோம். நான் எனக்காக பேசுகிறேன். இதனை இஸ்ரேல் மீற முடியும். ஆனால், என்னை பொறுத்தவரை சனிக்கிழமை 12 மணிக்குள் அனைவரும் திரும்ப அனுப்பப்பட வேண்டும். இல்லாவிட்டால், அவர்கள் நரகத்தறி்கு செல்வார்கள். இந்த காலக்கெடு குறித்து இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹூவுடன் பேசுவேன். இவ்வாறு அவர் கூறினார். ஹமாசுக்கு எதிராக அமெரிக்க ராணுவம் களமிறங்குமா என்பதற்கு பதிலளிக்க டிரம்ப் மறுத்துவிட்டார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/trump-warns-hamas-that-peace-deal-will-be-scrapped-if-hostages-are-not-released/">பிணைக்கைதிகளை விடுவிக்காவிட்டால் அமைதி ஒப்பந்தம் ரத்தாகும் &#8211; ஹமாசுக்கு டிரம்ப் எச்சரிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
