<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>காங்கேசன்துறை Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/%e0%ae%95%e0%ae%be%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%87%e0%ae%9a%e0%ae%a9%e0%af%8d%e0%ae%a4%e0%af%81%e0%ae%b1%e0%af%88/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/காங்கேசன்துறை/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Sat, 07 Mar 2026 03:10:01 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>காங்கேசன்துறை Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/காங்கேசன்துறை/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>காங்கேசன்துறை &#8211; நாகப்பட்டினத்திற்கு இடையேயான பயணிகள் படகுச் சேவை மீண்டும் ஆரம்பம்</title>
		<link>https://oruvan.com/passenger-ferry-service-between-kankesanthurai-nagapattinam-resumes/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Sat, 07 Mar 2026 04:25:57 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[காங்கேசன்துறை]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=46262</guid>

					<description><![CDATA[<p>பருவகால மழை மற்றும் பராமரிப்புப் பணிகளுக்காக இடைநிறுத்தப்பட்டிருந்த காங்கேசன்துறை &#8211; நாகப்பட்டினத்திற்கு இடையேயான பயணிகள் படகுச் சேவையானது நேற்றுமுதல் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது. தமிழ்நாடு நாகப்பட்டினத்திலிருந்து நேற்று காலை 9.30 மணிக்கு 77 பயணிகளுடன் சிவகங்கை பயணிகள் படகானது காங்கேசன்துறை நோக்கிப் புறப்பட்டது. அது பிற்பகல் 2.00 மணியளவில் காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்தது. பின்னர் காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து 92 பயணிகளுடன் மாலை 3.00 மணிக்கு நாகப்பட்டினம் நோக்கிய பயணத்தை குறித்த படகு ஆரம்பித்தது. கடந்த ஒக்டோபர் மாதம் 28ஆம் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/passenger-ferry-service-between-kankesanthurai-nagapattinam-resumes/">காங்கேசன்துறை &#8211; நாகப்பட்டினத்திற்கு இடையேயான பயணிகள் படகுச் சேவை மீண்டும் ஆரம்பம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பருவகால மழை மற்றும் பராமரிப்புப் பணிகளுக்காக இடைநிறுத்தப்பட்டிருந்த காங்கேசன்துறை &#8211; நாகப்பட்டினத்திற்கு இடையேயான பயணிகள் படகுச் சேவையானது நேற்றுமுதல் மீண்டும் ஆரம்பமாகியுள்ளது.</p>
<p>தமிழ்நாடு நாகப்பட்டினத்திலிருந்து நேற்று காலை 9.30 மணிக்கு 77 பயணிகளுடன் சிவகங்கை பயணிகள் படகானது காங்கேசன்துறை நோக்கிப் புறப்பட்டது. அது பிற்பகல் 2.00 மணியளவில் காங்கேசன்துறை துறைமுகத்தை வந்தடைந்தது.</p>
<p>பின்னர் காங்கேசன்துறை துறைமுகத்திலிருந்து 92 பயணிகளுடன் மாலை 3.00 மணிக்கு நாகப்பட்டினம் நோக்கிய பயணத்தை குறித்த படகு ஆரம்பித்தது.</p>
<p>கடந்த ஒக்டோபர் மாதம் 28ஆம் திகதி பருவகால மழை மற்றும் பராமரிப்புப் பணிகளுக்காக இடைநிறுத்தப்பட்டிருந்த சிவகங்கை பயணிகள் படகானது சுமார் நான்கு மாதங்களின் பின்னர் சேவையை மீண்டும் ஆரம்பித்துள்ளது.</p>
<p>வாரத்தில் செவ்வாய்க்கிழமை தவிர்ந்த ஏனைய 6 நாட்களும் இச்சேவை இடம்பெறும் என்பதுடன், இருவழிப் பயணக் கட்டணமாக இலங்கை மதிப்பில் 28,500 ரூபா அறவிடப்படுகின்றது.</p>
<p>The post <a href="https://oruvan.com/passenger-ferry-service-between-kankesanthurai-nagapattinam-resumes/">காங்கேசன்துறை &#8211; நாகப்பட்டினத்திற்கு இடையேயான பயணிகள் படகுச் சேவை மீண்டும் ஆரம்பம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>யாழ்ப்பாணம் &#8211; தமிழக கப்பல் சேவை மீளவும் நாளை முதல் ஆரம்பம்</title>
		<link>https://oruvan.com/jaffna-tamil-nadu-ferry-service-to-resume-from-tomorrow/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 01 Jan 2025 08:31:15 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[ferry service]]></category>
		<category><![CDATA[Kankesanthurai]]></category>
		<category><![CDATA[Nagapattinam]]></category>
		<category><![CDATA[காங்கேசன்துறை]]></category>
		<category><![CDATA[யாழ்ப்பாணம்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=4853</guid>

					<description><![CDATA[<p>காங்கேசன்துறை மற்றும் தமிழகத்திற்கு இடையிலான கப்பல் சேவை நாளை (02) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. அண்மையில் வடகடலில் ஏற்பட்ட மோசமான காலநிலை காரணமாக நிறுத்தப்பட்ட தமிழகத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது. இந்த கப்பல்களை முன்னெடுக்கும் சிவகங்கை கப்பல் நிறுவனம் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது. கடந்த ஆண்டு (2024) தொடங்கிய கப்பல் சேவையானது ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வடகடலில் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக கப்பல் சேவை தற்காலிகமாக [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/jaffna-tamil-nadu-ferry-service-to-resume-from-tomorrow/">யாழ்ப்பாணம் &#8211; தமிழக கப்பல் சேவை மீளவும் நாளை முதல் ஆரம்பம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>காங்கேசன்துறை மற்றும் தமிழகத்திற்கு இடையிலான கப்பல் சேவை நாளை (02) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.</p>
<p>அண்மையில் வடகடலில் ஏற்பட்ட மோசமான காலநிலை காரணமாக நிறுத்தப்பட்ட தமிழகத்திற்கும் காங்கேசன்துறைக்கும் இடையிலான பயணிகள் கப்பல் சேவை மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளது.</p>
<p>இந்த கப்பல்களை முன்னெடுக்கும் சிவகங்கை கப்பல் நிறுவனம் இது தொடர்பான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.</p>
<p>கடந்த ஆண்டு (2024) தொடங்கிய கப்பல் சேவையானது ஒக்டோபர், நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில் வடகடலில் ஏற்பட்ட மோசமான வானிலை காரணமாக கப்பல் சேவை தற்காலிகமாக நிறுத்தப்பட்டிருந்தது.</p>
<p>இந்நிலையில், மீளவும் கப்பல் சேவை நாளை முன்னெடுக்கப்படவுள்ளது.</p>
<p>இதன்படி, இருக்கைகளை முன்பதிவு செய்ய கடந்த ஒரு வாரத்திற்கு முன்னர் பயணிகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதுடன், இந்தியாவின் நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறைக்கான பயணக் கட்டணமாக 35,000 ரூபா அறவிடப்படவுள்ளது.</p>
<p>ஞாயிற்றுக்கிழமை தவிர வாரத்தின் அனைத்து நாட்களிலும் பயணிகள் போக்குவரத்தை மேற்கொள்வதற்கு கப்பல் நிறுவனம் எதிர்பார்த்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.</p>
<p>The post <a href="https://oruvan.com/jaffna-tamil-nadu-ferry-service-to-resume-from-tomorrow/">யாழ்ப்பாணம் &#8211; தமிழக கப்பல் சேவை மீளவும் நாளை முதல் ஆரம்பம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பாலியல் உறவுக்கு அழைத்த பொலிஸ் அதிகாரி  &#8211; காங்கேசன்துறை பகுதியில் பதற்றம்</title>
		<link>https://oruvan.com/police-officer-invited-for-sexual-intercourse-tension-in-kankesanthurai-area/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Tue, 24 Dec 2024 10:03:56 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Kankesanturai]]></category>
		<category><![CDATA[காங்கேசன்துறை]]></category>
		<category><![CDATA[மனித உரிமை ஆணைக்குழு]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=3803</guid>

					<description><![CDATA[<p>காங்கேசன்துறை பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பெண்ணொருவரை மதுபோதையில் பாலியல் உறவுக்கு அழைத்தமையனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அப்பகுதியிலுள்ள இளைஞர்களால் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் நையப்புடைக்கப்பட்டு காங்கேசன்துறை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது, காங்கேசன்துறை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவர் இன்று காலை மாவிட்டபுரம் தையலகத்தில் தைப்பதற்கு கொடுத்த சீருடையை எடுப்பதற்கு மது போதையில் சென்று தையலகத்தில் பணிபுரியும் பெண்களுடன் தன்னுடன் பாலியல் உறவுக்கு வருமாறு வற்புறுத்தியுள்ளார். தொடர்ந்து குறித்த [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/police-officer-invited-for-sexual-intercourse-tension-in-kankesanthurai-area/">பாலியல் உறவுக்கு அழைத்த பொலிஸ் அதிகாரி  &#8211; காங்கேசன்துறை பகுதியில் பதற்றம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>காங்கேசன்துறை பொலிஸ் நிலைய பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் பெண்ணொருவரை மதுபோதையில் பாலியல் உறவுக்கு அழைத்தமையனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.</p>
<p>இதனைத் தொடர்ந்து அப்பகுதியிலுள்ள இளைஞர்களால் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் நையப்புடைக்கப்பட்டு காங்கேசன்துறை பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டார். இது குறித்து மேலும் தெரியவருவதாவது,</p>
<p>காங்கேசன்துறை பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவர் இன்று காலை மாவிட்டபுரம் தையலகத்தில் தைப்பதற்கு கொடுத்த சீருடையை எடுப்பதற்கு மது போதையில் சென்று தையலகத்தில் பணிபுரியும் பெண்களுடன் தன்னுடன் பாலியல் உறவுக்கு வருமாறு வற்புறுத்தியுள்ளார்.</p>
<p>தொடர்ந்து குறித்த கடைக்கு வந்த இரு யுவதிகளிடமும் தன்னுடன் பாலியல் உறவுக்கு வருமாறு கொச்சைத் தமிழில் கேட்டுள்ளார்.</p>
<p>இதனால் ஆத்திரமடைந்த குறித்த பெண் தனது கணவருக்கு தொலைபேசியில் தெரிவித்த நிலையில், மாவிட்டபுரம் கந்தசுவாமி கோயில் குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் நையப்புடைக்கபட்டு பொதுமக்களால் முச்சக்கர வண்டி மூலம் பொலிஸ் நிலையத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளார்.</p>
<p>இந்நிலையில் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி குறித்த பெண்ணை விசாரிக்க முற்பட்ட போது தன்னிடம் கார் உள்ளதாகவும் நீங்கள் அழகாக உள்ளீர்கள் என்னுடன் பாலியல் இச்சைக்கு வருகிறாயா? என கேட்டு மதுபோதையில் கலகம் செய்ததாக அப்பெண் கூறினார்.</p>
<p>இதேவேளை பெண்ணின் உறவினர் தன்னிடம் காணொளியும் உள்ளதாக தெரிவித்தார். உடனே குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் குறித்த பெண்ணின் கணவன் மீது பொலிஸ் நிலையத்தில் வைத்து தாக்குதல் நடாத்தினார்.</p>
<p>உடனடியாக பொலிஸார் குறித்த உத்தியோகத்தரை தடுத்து நிறுத்திய நிலையில் பொறுப்பதிகாரி தனது அறையினுள் பாதிக்கப்பட்டவர்களை அழைத்து சமரசம் செய்யுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.</p>
<p>அதனை அடுத்து குறித்த விடயம் மனித உரிமை ஆணைக்குழுவிற்கு அறிவிக்கப்பட்டு பாரபட்சமற்ற விசாரணைகளை முன்னெடுக்க வேண்டும் என பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு யாழ். பிராந்திய மனித உரிமை ஆணைக்குழுவின் த.கனகராஜ் அறிவுறுத்தியுள்ளார்.</p>
<p>தற்போது இது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.</p>
<p>The post <a href="https://oruvan.com/police-officer-invited-for-sexual-intercourse-tension-in-kankesanthurai-area/">பாலியல் உறவுக்கு அழைத்த பொலிஸ் அதிகாரி  &#8211; காங்கேசன்துறை பகுதியில் பதற்றம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
