<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>கனடா Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/%e0%ae%95%e0%ae%a9%e0%ae%9f%e0%ae%be/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/கனடா/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Fri, 13 Mar 2026 10:59:12 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>கனடா Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/கனடா/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>கனடாவில், கடவுச்சீட்டு, புலம்பெயர்தல் ஆவணங்களுக்கான கட்டணம் அதிகரிப்பு</title>
		<link>https://oruvan.com/fees-for-passports-immigration-documents-increase-in-canada/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Fri, 13 Mar 2026 10:59:12 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[கனடா]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=46625</guid>

					<description><![CDATA[<p>கனடாவில், கடவுச்சீட்டு மற்றும் சில புலம்பெயர்தல் ஆவணங்களுக்கான கட்டணங்கள், இம்மாதம், மாதம் 31ஆம் திகதி முதல் உயர இருப்பதாக கனடா புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு தெரிவித்துள்ளது. கனடாவின் சேவை கட்டண சட்டத்தின்படி இந்த கட்டண உயர்வு அமுலுக்கு வருவதாக கனடா அரசு தெரிவித்துள்ளது. இதன் பிரகாரம் கனடாவில் வாழ்வோருக்கான கடவுச்சீட்டு கட்டணங்களைப் பொருத்தவரை, 10 ஆண்டுகள் பயன்படுத்தப்படக்கூடிய வகையிலான கடவுச்சீட்டுக்கான கட்டணம், பெரியவர்களுக்கு 160 டொலர்களிலிருந்து 163.50 டொலர்களாக உயர்வடையும். 5 ஆண்டுகள் பயன்படுத்தப்படக்கூடிய [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/fees-for-passports-immigration-documents-increase-in-canada/">கனடாவில், கடவுச்சீட்டு, புலம்பெயர்தல் ஆவணங்களுக்கான கட்டணம் அதிகரிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>கனடாவில், கடவுச்சீட்டு மற்றும் சில புலம்பெயர்தல் ஆவணங்களுக்கான கட்டணங்கள், இம்மாதம், மாதம் 31ஆம் திகதி முதல் உயர இருப்பதாக கனடா புலம்பெயர்தல், அகதிகள் மற்றும் குடியுரிமை அமைப்பு தெரிவித்துள்ளது.</p>
<p>கனடாவின் சேவை கட்டண சட்டத்தின்படி இந்த கட்டண உயர்வு அமுலுக்கு வருவதாக கனடா அரசு தெரிவித்துள்ளது.</p>
<p>இதன் பிரகாரம் கனடாவில் வாழ்வோருக்கான கடவுச்சீட்டு கட்டணங்களைப் பொருத்தவரை, 10 ஆண்டுகள் பயன்படுத்தப்படக்கூடிய வகையிலான கடவுச்சீட்டுக்கான கட்டணம், பெரியவர்களுக்கு 160 டொலர்களிலிருந்து 163.50 டொலர்களாக உயர்வடையும்.</p>
<p>5 ஆண்டுகள் பயன்படுத்தப்படக்கூடிய வகையிலான கடவுச்சீட்டுகளுக்கான கட்டணம், பெரியவர்களுக்கு 120 டொலர்களிலிருந்து 122.50 டொலர்களாக அதிகரிக்கும்.</p>
<p>சிறுவர்களுக்கான கடவுச்சீட்டு கட்டணம், 57 டொலர்களிலிருந்து 58.50 டொலர்களாகவும் கனடாவுக்கு வெளியே வாழ்பவர்களைப் பொருத்தவரை, 10 ஆண்டுகள் பயன்படுத்தப்படக்கூடிய வகையிலான கடவுச்சீட்டுக்கான கட்டணம், பெரியவர்களுக்கு 260 டொலர்களிலிருந்து 266.25 டொலர்களாகவும் உயர்வடையும் என அரசாங்கம் கூறியுள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/fees-for-passports-immigration-documents-increase-in-canada/">கனடாவில், கடவுச்சீட்டு, புலம்பெயர்தல் ஆவணங்களுக்கான கட்டணம் அதிகரிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>அமெரிக்க பயணங்கள் குறித்து கனடா விடுத்துள்ள அறிவிப்பு</title>
		<link>https://oruvan.com/canadas-announcement-regarding-us-travel/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Fri, 03 Oct 2025 11:07:10 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[கனடா]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=34275</guid>

					<description><![CDATA[<p>தமது நாட்டுப் பிரஜைகள் அமெரிக்காவிற்கு மேற்கொள்ளக்கூடிய பயணங்கள் தொடர்பில் கனடா புதிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. கனடா அரசாங்கத்தினால் அமெரிக்கா பயணம் தொடர்பான புதிய பயண அறிவுறுத்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், ‘X’ பாலினக் குறியீடு கொண்ட கனடியப் கடவுச்சீட்டு வைத்திருப்போர் அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளுக்குள் நுழையும்போது அல்லது இடைநிலையப் பயணத்தில் சிக்கல்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. தமது நாட்டுப் பிரஜைகள் அமெரிக்காவிற்கு மேற்கொள்ளக்கூடிய பயணங்கள் தொடர்பில் கனடா புதிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது. கனடா, தன்னை முழுமையாக [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/canadas-announcement-regarding-us-travel/">அமெரிக்க பயணங்கள் குறித்து கனடா விடுத்துள்ள அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>தமது நாட்டுப் பிரஜைகள் அமெரிக்காவிற்கு மேற்கொள்ளக்கூடிய பயணங்கள் தொடர்பில் கனடா புதிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.</p>
<p>கனடா அரசாங்கத்தினால் அமெரிக்கா பயணம் தொடர்பான புதிய பயண அறிவுறுத்தல் வெளியிடப்பட்டுள்ளது.</p>
<p>அதில், ‘X’ பாலினக் குறியீடு கொண்ட கனடியப் கடவுச்சீட்டு வைத்திருப்போர் அமெரிக்கா உள்ளிட்ட சில நாடுகளுக்குள் நுழையும்போது அல்லது இடைநிலையப் பயணத்தில் சிக்கல்கள் ஏற்படும் அபாயம் உள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது.</p>
<p>தமது நாட்டுப் பிரஜைகள் அமெரிக்காவிற்கு மேற்கொள்ளக்கூடிய பயணங்கள் தொடர்பில் கனடா புதிய அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.</p>
<p>கனடா, தன்னை முழுமையாக ஆண் அல்லது பெண் என அடையாளப்படுத்தாத இருமமிலி non-binary குடிமக்களுக்கு ‘X’ குறியீடு கொண்ட கடவுச்சீட்டுக்களை வழங்குகிறது.</p>
<p>ஆனால், பல நாடுகள் மற்றும் விமான நிறுவனங்கள் இன்னும் ‘X’ பாலின அடையாளத்தை அங்கீகரிக்காததால், பயணிகள் ‘ஆண்’ அல்லது ‘பெண்’ குறியீட்டை வழங்க வேண்டிய அவசியம் ஏற்படலாம் என அறிவுறுத்தலில் கூறப்பட்டுள்ளது.</p>
<p>பயணத்திற்கு முன், நீங்கள் செல்லும் நாட்டின் தூதரகம் அல்லது அதிகாரப்பூர்வ பிரதிநிதிகளிடம் தொடர்புகொண்டு தகவல் உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள்” என அறிவுறுத்தலில் வலியுறுத்தப்பட்டுள்ளது.</p>
<p>இந்த எச்சரிக்கை, இருமமிலி non-binary மற்றும் பாலினச் சார்பற்ற கடவுச்சீட்டு அடையாளங்களைப் பற்றிய உலகளாவிய குழப்பங்கள் அதிகரித்துவரும் நிலையில் வெளியாகியுள்ளது.</p>
<p>அமெரிக்காவில், டொனால்ட் ட்ரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்ற நாளே, கடவுச்சீட்டுக்களில் பாலினச் சார்பற்ற (‘X’) குறியீடுகளை நிறுத்தும் நிர்வாக உத்தரவை கையொப்பமிட்டார். இதன் பின்னர், அமெரிக்க வெளியுறவு துறை ‘X’ குறியீடு கொண்ட கடவுச்சீட்டுக்கள் வழங்குவதை நிறுத்தியது.</p>
<p>மேலும், பிறப்புச் சான்றிதழில் குறிப்பிடப்பட்ட பாலினத்தைத் தவிர்த்து கடவுச்சீட்டுக்களில் பாலின மாற்றம் செய்வதற்கும் அனுமதி மறுக்கப்பட்டது.</p>
<p>கடந்த செப்டம்பரில், ட்ரம்ப் நிர்வாகம், கடவுச்சீட்டில் ஆண் அல்லது பெண் பாலின குறியீடு மட்டும் இருக்க வேண்டும் என்ற கொள்கையை அமல்படுத்துவதற்காக அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/canadas-announcement-regarding-us-travel/">அமெரிக்க பயணங்கள் குறித்து கனடா விடுத்துள்ள அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>கனடாவில் கிருஷ்ணர் கோவில் மீது தாக்குதல்</title>
		<link>https://oruvan.com/attack-on-krishna-temple-in-canada/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Sat, 05 Apr 2025 06:00:35 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[கனடா]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=16903</guid>

					<description><![CDATA[<p>கனடாவில் கிரேட்டர் டொராண்டோ பகுதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பிருந்தாவனம் கோவில் தாக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய மர்ம நபர்களை அந்நாட்டு போலீஸ் வலை வீசி தேடி வருகிறது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் நடந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆரய்ந்ததில் 2 நபர்கள் முதலில் அப்பகுதியில் இருந்த PUBக்கு சென்றதும் பின் அங்கிருந்து வெளிவந்து கோவிலின் முகப்பு பகுதியில் சேதம் ஏற்படுத்தியதும் தெரியவந்தது. அந்த நபர்கள் Hoodie அணிந்திருந்ததால் அவர்களை அடையாளம் காணுவதில் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/attack-on-krishna-temple-in-canada/">கனடாவில் கிருஷ்ணர் கோவில் மீது தாக்குதல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>கனடாவில் கிரேட்டர் டொராண்டோ பகுதியில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா பிருந்தாவனம் கோவில் தாக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்புடைய மர்ம நபர்களை அந்நாட்டு போலீஸ் வலை வீசி தேடி வருகிறது.</p>
<p>கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் நடந்ததாக கூறப்படும் சம்பவம் தொடர்பாக அருகில் இருந்த சிசிடிவி காட்சிகளை ஆரய்ந்ததில் 2 நபர்கள் முதலில் அப்பகுதியில் இருந்த PUBக்கு சென்றதும் பின் அங்கிருந்து வெளிவந்து கோவிலின் முகப்பு பகுதியில் சேதம் ஏற்படுத்தியதும் தெரியவந்தது.</p>
<p>அந்த நபர்கள் Hoodie அணிந்திருந்ததால் அவர்களை அடையாளம் காணுவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பான சந்தேகிக்கப்படும் நபர்களின் புகைப்படங்களை கனடா போலீஸ் தற்போது வெளியிட்டுள்ளது.</p>
<p>இந்துக்களுக்கு எதிரான வெறுப்பு மற்றும் காழ்ப்புணர்ச்சி கொண்டவர்களால், கனடாவில் இந்து வழிபாட்டு தலங்கள் மீதான தாக்குதல்கள் அதிகரித்து வருவதாக கனடா காவல்துறை தெரிவித்தது. மேலும் இந்த சம்பவத்துக்கு இந்து கனேடிய அறக்கட்டளையும் கண்டனம் தெரிவித்துள்ளது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/attack-on-krishna-temple-in-canada/">கனடாவில் கிருஷ்ணர் கோவில் மீது தாக்குதல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>கனடாவில் பொது தேர்தலை அறிவித்தார் பிரதமர்</title>
		<link>https://oruvan.com/prime-minister-mark-carney-announces-general-election-in-canada/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 24 Mar 2025 06:03:28 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[Canada]]></category>
		<category><![CDATA[Canadian Prime Minister]]></category>
		<category><![CDATA[Mark Carney]]></category>
		<category><![CDATA[கனடா]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=15628</guid>

					<description><![CDATA[<p>கனடாவில் பொது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஏப்ரல் 28ஆம் திகதி பொது தேர்தல் இடம்பெறும் என அந்நாட்டின் பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார். கனடாவின் பிரதமர் பதவியையும் ஆளும் லிபரல் கட்சியின் தலைமையையும் மார்க் கார்னி ஏற்றுக்கொண்ட பிறகு, நாட்டில் பொதுத் தேர்தலை அறிவித்துள்ளார். முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகிய பின்னர் பிரதமராக பதவியேற்ற இரண்டு வாரங்களுக்குப் பின்னர் மார்க் கார்னி தேர்தலை அறிவித்துள்ளார். அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/prime-minister-mark-carney-announces-general-election-in-canada/">கனடாவில் பொது தேர்தலை அறிவித்தார் பிரதமர்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>கனடாவில் பொது தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, ஏப்ரல் 28ஆம் திகதி பொது தேர்தல் இடம்பெறும் என அந்நாட்டின் பிரதமர் மார்க் கார்னி அறிவித்துள்ளார்.</p>
<p>கனடாவின் பிரதமர் பதவியையும் ஆளும் லிபரல் கட்சியின் தலைமையையும் மார்க் கார்னி ஏற்றுக்கொண்ட பிறகு, நாட்டில் பொதுத் தேர்தலை அறிவித்துள்ளார்.</p>
<p>முன்னாள் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ பதவி விலகிய பின்னர் பிரதமராக பதவியேற்ற இரண்டு வாரங்களுக்குப் பின்னர் மார்க் கார்னி தேர்தலை அறிவித்துள்ளார்.</p>
<p>அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்பின் நியாயமற்ற வர்த்தக நடைமுறைகள் மற்றும் இறையாண்மைக்கு ஏற்பட்டுள்ள அச்சுறுத்தல்கள் காரணமாக நாடு ஒரு &#8220;பெரிய நெருக்கடியை&#8221; சந்தித்து வருவதாக அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.</p>
<p>டிரம்பை எதிர்கொள்ளவும், அனைவருக்கும் வேலை செய்யும் ஒரு புதிய கனேடிய பொருளாதாரத்தை உருவாக்கவும் வலுவான மற்றும் நேர்மறையான மக்கள் ஆதரவு தேவை என்றும், மாற்றம் தேவை என்றும் கார்னி சுட்டிக்காட்டினார்.</p>
<p>இதற்கிடையில், பொதுத் தேர்தல் தொடர்பான கருத்துக் கணிப்புகளில் ஆளும் லிபரல் கட்சி முன்னிலை வகிக்கிறது.<br />
கனடாவை அமெரிக்காவுடன் இணைக்கும் டொனால்ட் டிரம்பின் நடவடிக்கையையும், கனடாவுக்கு எதிரான அதிகரித்த வரிகளையும் வாக்குகளாக மாற்றுவதே லிபரல் கட்சியின் குறிக்கோளாகும்.</p>
<p>ஜஸ்டின் ட்ரூடோவுக்குப் பின்னர் மார்ச் 14ஆம் திகதி கனடாவின் லிபரல் கட்சியின் தலைவராகவும், நாட்டின் பிரதமராகவும் மார்க் கார்னி தெரிவுசெய்யப்பட்டார்.</p>
<p>59 வயதான கார்னி, தனியார் துறையில் பணியாற்றிய பின்னர் 2003 இல் பொது சேவையில் நுழைந்தார். நாட்டின் பணவியல் கொள்கையை மேற்பார்வையிடும் கனடா வங்கியின் துணை ஆளுநராகவும் அவர் நியமிக்கப்பட்டார்.</p>
<p>உலகளாவிய நிதி நெருக்கடியின் போது, ​​2008 முதல் 2013 வரை கனடா வங்கியின் ஆளுநராக கார்னி பணியாற்றினார். பின்னர் 2013 முதல் 2020 வரை அவர் இங்கிலாந்து வங்கியின் ஆளுநராகவும் செயற்பட்டார்.</p>
<p>இங்கிலாந்து வங்கியின் ஆளுநராக நியமிக்கப்பட்ட முதல் பிரிட்டிஷ் அல்லாத நபர் கார்னி ஆவார் என்பதும் குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/prime-minister-mark-carney-announces-general-election-in-canada/">கனடாவில் பொது தேர்தலை அறிவித்தார் பிரதமர்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>கனடாவின் புதிய விசா விதிமுறையால் இந்தியர்களுக்கு அதிக பாதிப்பு</title>
		<link>https://oruvan.com/indians-are-most-affected-by-canadas-new-visa-rules/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Wed, 26 Feb 2025 07:11:59 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[கனடா]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=12198</guid>

					<description><![CDATA[<p>கனடாவில் வெளிநாட்டினர் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்த விசா விதிமுறைகளை அந்நாடு மாற்றியுள்ளது. புதிய விதிமுறைகள் படிக்கவும் வேலை செய்யவும் குடியேறவும் கனடா செல்லும் ஆயிரக்கணக்கானோரைப் பாதிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. கனடாவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள், ஊழியர்கள், புலம்பெயர்ந்தவர்களின் விசா தகுதியை எந்த நேரத்திலும் மாற்றுவதற்கான அதிகாரம் கனடா எல்லைப் படை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. குடிநுழைவு, அகதிகள் பாதுகாப்பு விதிமுறைகளில் செய்யப்பட்டுள்ள திருத்தங்களின்படி, மின்னணு விசா, தற்காலிக தங்கும் விசா உள்ளிட்டவற்றை மறுக்கவோ, நிராகரிக்கவோ கனடா எல்லைப் படைக்கு அதிகாரம் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/indians-are-most-affected-by-canadas-new-visa-rules/">கனடாவின் புதிய விசா விதிமுறையால் இந்தியர்களுக்கு அதிக பாதிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>கனடாவில் வெளிநாட்டினர் குடியேற்றத்தைக் கட்டுப்படுத்த விசா விதிமுறைகளை அந்நாடு மாற்றியுள்ளது.</p>
<p>புதிய விதிமுறைகள் படிக்கவும் வேலை செய்யவும் குடியேறவும் கனடா செல்லும் ஆயிரக்கணக்கானோரைப் பாதிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.</p>
<p>கனடாவில் படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள், ஊழியர்கள், புலம்பெயர்ந்தவர்களின் விசா தகுதியை எந்த நேரத்திலும் மாற்றுவதற்கான அதிகாரம் கனடா எல்லைப் படை அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.</p>
<p>குடிநுழைவு, அகதிகள் பாதுகாப்பு விதிமுறைகளில் செய்யப்பட்டுள்ள திருத்தங்களின்படி, மின்னணு விசா, தற்காலிக தங்கும் விசா உள்ளிட்டவற்றை மறுக்கவோ, நிராகரிக்கவோ கனடா எல்லைப் படைக்கு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.</p>
<p>அத்துடன், கனடாவில் உள்ள வெளிநாட்டவர் தங்களது விசா காலம் நிறைவடைந்த பிறகும் அவர் நாட்டைவிட்டு வெளியேற மாட்டார் என்று கனடா அதிகாரி நினைத்தால், அவரது விசா காலம் முடிவதற்கு முன்னரே விசாவை ரத்து செய்யவும் அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.</p>
<p>வெளிநாட்டினருக்கு, குறிப்பாக இந்தியர்களுக்கு நிச்சயமற்ற தன்மை புதிய விதிமுறைகள் ஆயிரக்கணக்கான அனைத்துலக மாணவர்கள், ஊழியர்களுக்கு நிச்சயமற்ற நிலையை ஏற்படுத்தியுள்ளது.</p>
<p>இரு பிரிவுகளிலும் இந்திய நாட்டினர் மிகப்பெரிய அளவில் உள்ளனர். இந்திய மாணவர்கள் அதிகம் விரும்பும் இடங்களில் ஒன்றாக கனடா உள்ளது. தரவுகளின்படி, தற்போது கனடாவில் உயர்கல்வி படித்து வரும் இந்திய மாணவர்கள் எண்ணிக்கை 4.2 இலட்சத்துக்கும் அதிகம்.</p>
<p>தற்காலிக தங்கும் விசாவை பெற்று இந்தியாவைச் சேர்ந்த பலரும் கனடாவுக்கு சுற்றுலா செல்கிறார்கள். 2024 முதல் பாதியில் மட்டும் 3.6 லட்சம் இந்தியர்களுக்கு பயண விசா வழங்கப்பட்டுள்ளது.</p>
<p>மாணவர்கள், சட்டபூர்வக் குடியேறிகளின் விசாக்கள் ரத்து செய்யப்பட்டால், அவர்கள் குறிப்பிட்ட காலத்துக்குள் கனடாவைவிட்டு வெளியேற ஆணை வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>ஏற்கெனவே காலிஸ்தான் விவகாரத்தில் இந்தியா &#8211; கனடா இடையே பிரச்சினை நிலவி வரும் சூழலில், புதிய விசா விதிமுறைகளால் பாதிப்பு ஏற்படக்கூடும் என்ற அச்சம் இந்தியர்களிடையே நிலவுகிறது.</p>
<p>The post <a href="https://oruvan.com/indians-are-most-affected-by-canadas-new-visa-rules/">கனடாவின் புதிய விசா விதிமுறையால் இந்தியர்களுக்கு அதிக பாதிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இலங்கையில் மிக மோசமான மனித உரிமை மீறல்கள்: சர்வதேசத்திடம் யஸ்மின் சூகா வலியுறுத்து</title>
		<link>https://oruvan.com/former-state-minister-lohan-ratwatte-arrested-2/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Sat, 07 Dec 2024 02:12:18 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஆஸ்திரேலியா]]></category>
		<category><![CDATA[கனடா]]></category>
		<category><![CDATA[மனித உரிமை மீறல்கள்]]></category>
		<category><![CDATA[யஸ்மின் சூகா]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=1514</guid>

					<description><![CDATA[<p>இலங்கையில் மனித குலத்துக்கு எதிரான மிக மோசமான மீறல் குற்றங்களிலும், ஊழல் மோசடிகளிலும் ஈடுபட்ட அரச மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு எதிராகத் தடைகளையும், நுழைவு அனுமதித் தடையையும் விதிக்குமாறு வலியுறுத்தி அதனுடன் தொடர்புடைய 60 இற்கும் மேற்பட்ட கோரிக்கைகளையும், ஆவணங்களையும் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் அரசுகளுக்கும், ஐ.நா. சபைக்கும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்டம் அனுப்பி வைத்திருக்கின்றது. ஜொஹனஸ்பேர்க்கை தளமாகக் கொண்டு யஸ்மின் சூக்கா தலைமையில் இயங்கி வரும் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/former-state-minister-lohan-ratwatte-arrested-2/">இலங்கையில் மிக மோசமான மனித உரிமை மீறல்கள்: சர்வதேசத்திடம் யஸ்மின் சூகா வலியுறுத்து</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இலங்கையில் மனித குலத்துக்கு எதிரான மிக மோசமான மீறல் குற்றங்களிலும், ஊழல் மோசடிகளிலும் ஈடுபட்ட அரச மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு எதிராகத் தடைகளையும், நுழைவு அனுமதித் தடையையும் விதிக்குமாறு வலியுறுத்தி அதனுடன் தொடர்புடைய 60 இற்கும் மேற்பட்ட கோரிக்கைகளையும், ஆவணங்களையும் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் அரசுகளுக்கும், ஐ.நா. சபைக்கும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்டம் அனுப்பி வைத்திருக்கின்றது.</p>
<p>ஜொஹனஸ்பேர்க்கை தளமாகக் கொண்டு யஸ்மின் சூக்கா தலைமையில் இயங்கி வரும் சர்வதேச மனித உரிமைகள் அமைப்பான உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்டமானது இலங்கையின் அரச மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு எதிரான தடைகள் மற்றும் விஸா அனுமதி தடைகள் தொடர்பான 60 இற்கும் மேற்பட்ட கோரிக்கைகளைச் சமர்ப்பித்திருப்பதுடன் உலகளாவிய சட்ட வரம்பெல்லையின் பிரகாரம் வழக்குப் பதிவுகளையும் கோரியிருக்கின்றது.</p>
<p>மனித உரிமைகள் தினத்தையொட்டி (எதிர்வரும் 10 ஆம் திகதி) தயாரிக்கப்பட்டிருக்கும் இக்கோரிக்கைகள் மற்றும் ஆவணங்கள் அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா, கனடா, ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவற்றின் அரசுகளுக்கும் ஐக்கிய நாடுகள் சபைக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.</p>
<p>இவை இலங்கை இராணுவம், கடற்படை, விமானப்படை, பொலிஸ், புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், நீதிபதிகள், முன்னாள் அமைச்சர்கள் உள்ளிட்ட அரச அதிகாரிகள் உள்ளிட்ட தரப்பினருடன் தொடர்புடைய கடந்த கால மனித உரிமை மீறல்கள் மற்றும் குறிப்பிடத்தக்க ஊழல், மோசடிகள் என்பன பற்றியவையாக இருக்கின்றன.</p>
<p>உள்நாட்டுப் போரின்போதும், அதற்குப் பின்னருமான காலப்பகுதியில் இடம்பெற்ற சட்டவிரோத படுகொலைகள், வலிந்து காணாமல் ஆக்கப்படல்கள், பலவந்தமான கைதுகள் மற்றும் தடுத்து வைப்புக்கள், சித்திரவதைகள், பாலியல் வன்முறைகள் உள்ளிட்ட மனித குலத்துக்கு எதிரான மிக மோசமான மனித உரிமை மீறல்களும், நாட்டின் அரச கட்டமைப்புக்களில் ஆழமாக வேரூன்றியிருக்கும் பாரிய ஊழல்களும் இந்தக் குற்றங்களில் அடங்குகின்றன.</p>
<p>அதுமாத்திரமன்றி இந்த மனித உரிமை மீறல்கள் தொடர்பில் பொறுப்புக்கூறலை உறுதி செய்வதில் தடைகளை ஏற்படுத்தும் வகையிலான முறையற்ற தலையீடுகள், அதிகாரத் துஷ்பிரயோகங்கள் என்பனவும் இதில் உள்வாங்கப்பட்டுள்ளன.</p>
<p>இந்த நடவடிக்கை தொடர்பில் கருத்து வெளியிட்டிருக்கும் சர்வதேச உண்மை மற்றும் நீதிக்கான செயற்றிட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் யஸ்மின் சூக்கா,</p>
<p>&#8220;கடந்த கால மீறல்கள் தொடர்பில் இற்றைவரை பொறுப்புக்கூறல் உறுதிப்படுத்தப்படாத நிலையில், கடந்த கால மற்றும் சமகால குற்றங்களை ஆவணப்படுத்தி, அவற்றுக்கான சான்றுகளைப் பகுப்பாய்வு செய்து, உண்மையைக் கண்டறிவதற்கு ஏதுவான சகல வழிமுறைகளையும் உரியவாறு பயன்படுத்திக்கொள்வது இன்றியமையாததாகும்.</p>
<p>அதேவேளை, இலங்கையில் இடம்பெற்ற இறுதிக்கட்டப் போரின்போது போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக நம்பத்தகுந்த ஆதாரங்களின் அடிப்படையில் குற்றஞ்சாட்டப்பட்டிருக்கும் இலங்கை அதிகாரிகளுக்கு எதிராகப் பிரிட்டனின் தற்போதைய புதிய அரசு எதிர்வரும் 10 ஆம் திகதி சர்வதேச மனித உரிமைகள் தினத்தன்று தடைகளை விதிக்கும் என எதிர்பார்க்கின்றோம்.&#8221; &#8211; என்று தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/former-state-minister-lohan-ratwatte-arrested-2/">இலங்கையில் மிக மோசமான மனித உரிமை மீறல்கள்: சர்வதேசத்திடம் யஸ்மின் சூகா வலியுறுத்து</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
