<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>ஒருவன் செய்தி Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/%e0%ae%92%e0%ae%b0%e0%af%81%e0%ae%b5%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%9a%e0%af%86%e0%ae%af%e0%af%8d%e0%ae%a4%e0%ae%bf/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/ஒருவன்-செய்தி/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Fri, 07 Nov 2025 05:04:09 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>ஒருவன் செய்தி Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/ஒருவன்-செய்தி/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>ரெய்னா மற்றும் தவான் ஆகியோரின் சொத்துகள் முடக்கம்</title>
		<link>https://oruvan.com/assets-of-raina-and-dhawan-frozen/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Fri, 07 Nov 2025 05:04:09 +0000</pubDate>
				<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[#oruvan #news]]></category>
		<category><![CDATA[Dhawan]]></category>
		<category><![CDATA[Suresh Raina]]></category>
		<category><![CDATA[ஒருவன் செய்தி]]></category>
		<category><![CDATA[ஒருவன் செய்திகள்]]></category>
		<category><![CDATA[சுரேஷ் ரெய்னா]]></category>
		<category><![CDATA[ஷிகர் தவான்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=37563</guid>

					<description><![CDATA[<p>முன்னாள் இந்தியக் கிரிக்கெட் வீரர்கள் சுரேஷ் ரெய்னா மற்றும் ஷிகர் தவான் ஆகியோருக்குச் சொந்தமான 11.14 கோடி ரூபா மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது. கியூராகோவை (Curacao) தளமாகக் கொண்ட ஒன்லைன் சூதாட்ட தளமான 1xBet தொடர்பான சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை வழக்கில் அமலாக்க துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது இதன்படி, ஷிகர் தவானுக்குச் சொந்தமான 4.5 கோடி ரூபா மதிப்பிலான அசையாச் சொத்துக்களும், சுரேஷ் ரெய்னாவுடன் தொடர்புடைய 6.64 கோடி ரூபா மதிப்பிலான மியூச்சுவல் ஃபண்ட் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/assets-of-raina-and-dhawan-frozen/">ரெய்னா மற்றும் தவான் ஆகியோரின் சொத்துகள் முடக்கம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>முன்னாள் இந்தியக் கிரிக்கெட் வீரர்கள் சுரேஷ் ரெய்னா மற்றும் ஷிகர் தவான் ஆகியோருக்குச் சொந்தமான 11.14 கோடி ரூபா மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியுள்ளது.</p>
<p>கியூராகோவை (Curacao) தளமாகக் கொண்ட ஒன்லைன் சூதாட்ட தளமான 1xBet தொடர்பான சட்டவிரோதப் பணப் பரிவர்த்தனை வழக்கில் அமலாக்க துறை இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது</p>
<p>இதன்படி, ஷிகர் தவானுக்குச் சொந்தமான 4.5 கோடி ரூபா மதிப்பிலான அசையாச் சொத்துக்களும், சுரேஷ் ரெய்னாவுடன் தொடர்புடைய 6.64 கோடி ரூபா மதிப்பிலான மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகளும் அடங்கும்.</p>
<p>பந்தயத் தளத்துடன் தொடர்புடைய வெளிநாட்டு நிறுவனங்களுடன் இந்த வீரர்கள் விளம்பர ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளதாக அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.</p>
<p>ரெய்னா மற்றும் தவான் தவிர, யுவராஜ் சிங் மற்றும் ராபின் உத்தப்பாவிடமிருந்தும் இது தொடர்பாக வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.</p>
<p>பிரபல நடிகர் சோனு சூட், முன்னாள் எம்பி மிமி சக்ரவர்த்தி, பாலிவுட் நடிகை ஊர்வசி ரவுடேலா மற்றும் பெங்காலி நடிகர் அங்குஷ் ஹஸ்ரா ஆகியோரிடமிருந்தும் வாக்குமூலங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.</p>
<p>இந்தியாவில் இந்தத் தளம் சட்டவிரோதமானது என்று தெரிந்தும் வீரர்கள் இந்த ஒப்பந்தங்களில் ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.</p>
<p>சட்டவிரோத ஆன்லைன் பந்தய நடவடிக்கைகளைத் தீவிரமாகக் கண்காணித்து வரும் அமலாக்கத்துறை, இந்த பிராண்டை விளம்பரப்படுத்திய பிரபலங்களின் நெட்வொர்க்கை ஆய்வு செய்து வருகிறது.</p>
<p>இந்த விளம்பர ஒப்பந்தங்கள் மூலம் பெறப்பட்ட வருமானம், பணமோசடி செய்யப்பட்ட சொத்துக்களை வாங்குவதற்குப் பயன்படுத்தப்பட்டதா என்பதை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.</p>
<p>முடக்கப்பட்ட சொத்துக்கள் குறித்து அமலாக்கத்துறை விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>
<p>The post <a href="https://oruvan.com/assets-of-raina-and-dhawan-frozen/">ரெய்னா மற்றும் தவான் ஆகியோரின் சொத்துகள் முடக்கம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியாகியுள்ள விசேட அறிவிப்பு</title>
		<link>https://oruvan.com/special-announcement-regarding-school-holidays/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Thu, 06 Nov 2025 08:03:09 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[school]]></category>
		<category><![CDATA[உயர்தரப் பரீட்சை]]></category>
		<category><![CDATA[ஒருவன்]]></category>
		<category><![CDATA[ஒருவன் செய்தி]]></category>
		<category><![CDATA[ஒருவன் செய்திகள்]]></category>
		<category><![CDATA[பாடசாலை விடுமுறை]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=37501</guid>

					<description><![CDATA[<p>நாடு முழுவதும் உள்ள அரச பாடசாலைகளில் மூன்றாம் தவணையின் முதல் கட்டம் நாளை நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, டிசம்பர் ஏழாம் திகதி மீள கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனிடையே, க.பொ.த உயர்தரப் பரீட்சை எதிர்வரும் 10ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. டிசம்பர் ஐந்தாம் திகதி வரை பரீட்சைகள் இடம்பெறவுள்ளன. பரீட்சைகள் நிறைவடைந்த பின்னர் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் டிசம்பர் எட்டாம் திகதி முதல் டிசம்பர் 19ஆம் திகதி வரை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/special-announcement-regarding-school-holidays/">பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியாகியுள்ள விசேட அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>நாடு முழுவதும் உள்ள அரச பாடசாலைகளில் மூன்றாம் தவணையின் முதல் கட்டம் நாளை நிறைவடையவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இதன்படி, டிசம்பர் ஏழாம் திகதி மீள கல்வி நடவடிக்கைகள் ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இதனிடையே, க.பொ.த உயர்தரப் பரீட்சை எதிர்வரும் 10ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. டிசம்பர் ஐந்தாம் திகதி வரை பரீட்சைகள் இடம்பெறவுள்ளன.</p>
<p>பரீட்சைகள் நிறைவடைந்த பின்னர் மூன்றாம் தவணையின் இரண்டாம் கட்டம் டிசம்பர் எட்டாம் திகதி முதல் டிசம்பர் 19ஆம் திகதி வரை இடம்பெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இதன் பின்னர், ஆண்டின் இறுதி விடுமுறைக்காக பாடசாலைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து 2026 ஜனவரி முதலாம் திகதி புதிய கல்வியாண்டுக்காக பாடசாலைகள் ஆரம்பமாகும்.</p>
<p>தமிழ் மற்றும் சிங்கள பாடசாலைகளில் 2026 ஜனவரி முதலாம் திகதி முதலாம் தவணையின் முதற்கட்ட கல்வி செயற்பாடுகள் ஆரம்பமாகி பெப்ரவரி 13ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளன.</p>
<p>பெப்ரவரி 14 முதல் மார்ச் 2ஆம் திகதி வரை விடுமுறை வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>&nbsp;</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/special-announcement-regarding-school-holidays/">பாடசாலை விடுமுறை தொடர்பில் வெளியாகியுள்ள விசேட அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>சட்டமன்ற தேர்தலில் 100 வீதம் வெற்றி உறுதி!! விஜய் நம்பிக்கை</title>
		<link>https://oruvan.com/vijay-confident-of-100-victory-in-the-assembly-elections/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 05 Nov 2025 09:34:39 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[#oruvan #news]]></category>
		<category><![CDATA[My TVK]]></category>
		<category><![CDATA[tvk]]></category>
		<category><![CDATA[TVK Vijay]]></category>
		<category><![CDATA[ஒருவன்]]></category>
		<category><![CDATA[ஒருவன் செய்தி]]></category>
		<category><![CDATA[தவெக]]></category>
		<category><![CDATA[விஜய்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=37408</guid>

					<description><![CDATA[<p>அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு 100 வீத வெற்றி நிச்சயம் என அந்தக் கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார். சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் தவெக இடையே மட்டும் தான் போட்டி என்பதை மீளவும் கூறிக்கொள்வதாகவும் அவர் தெளிவுப்படுத்தியுள்ளார். தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொது குழு கூட்டம் மாமல்லபுரத்தில் இன்று காலை இடம்பெற்றது. கரூர் சம்பவம் நடந்து 38 நாட்களுக்கு பின், கட்சி நிர்வாகிகளுடன், பொதுக்குழு கூட்டத்தில் விஜய் கலந்துகொண்டார். [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/vijay-confident-of-100-victory-in-the-assembly-elections/">சட்டமன்ற தேர்தலில் 100 வீதம் வெற்றி உறுதி!! விஜய் நம்பிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகத்திற்கு 100 வீத வெற்றி நிச்சயம் என அந்தக் கட்சியின் தலைவர் விஜய் தெரிவித்துள்ளார்.</p>
<p>சட்டமன்ற தேர்தலில் திமுக மற்றும் தவெக இடையே மட்டும் தான் போட்டி என்பதை மீளவும் கூறிக்கொள்வதாகவும் அவர் தெளிவுப்படுத்தியுள்ளார்.</p>
<p>தமிழக வெற்றிக் கழகத்தின் சிறப்பு பொது குழு கூட்டம் மாமல்லபுரத்தில் இன்று காலை இடம்பெற்றது. கரூர் சம்பவம் நடந்து 38 நாட்களுக்கு பின், கட்சி நிர்வாகிகளுடன், பொதுக்குழு கூட்டத்தில் விஜய் கலந்துகொண்டார்.</p>
<p>இதில் 1400க்கும் மேற்பட்ட கட்சி நிர்வாகிகள் கலந்துகொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்போது உரையாற்றிய விஜய்,</p>
<p>கரூர் சம்பவத்தில் குடும்ப உறவுகளை இழந்ததால் சொல்ல முடியாத வேதனையில் இருந்தோம். பாதிக்கப்பட்ட குடும்பத்திற்காக அமைதி காத்திருந்தோம். எங்கள் கட்சிக்கு எதிராக வன்ம அரசியல் வலை பின்னப்பட்ட‌து.</p>
<p>கரூர் சம்பவம் குறித்து சட்டப்பேரவையில் முதலமைச்சர் வன்மத்துடன் பேசியிருக்கிறார். அதே சட்டப்பேரவையில் தவெகவுக்கு எதிரான உரைக்கு பதிலடி கொடுக்க விரும்புகிறேன்.</p>
<p>உச்ச நீதிமன்றில் திமுக அரசு திக்கித் திணறி நின்றது. கரூர் சம்பவம் குறித்து அதிகாரிகள் அவசர அவசரமாக செய்தியாளர் சந்திப்பை நடத்தினர். ஒரு நபர் ஆணையம் விசாரணை செய்திருந்தது.</p>
<p>இந்நிலையில், ஒருநபர் ஆணைத்தை அவமதிக்கும் வகையில் அதிகாரிகள் கருத்து வெளியிட்டிருந்தனர்.</p>
<p>கரூர் சம்பவத்தில் உண்மை நிலையை தெளிவுப்படுத்த வேண்டும் என கூறி, சட்ட ரீதியாகவும் சாமர்த்தியமாகவும் பேசுவதாக நினைத்து கொண்டு 50 வருட அரசியல் அனுபவம் உள்ள முதலமைச்சர் சட்டப்பேரவையில் உரையாற்றியது ஒரு வடிக்கட்டின பொய்.</p>
<p>இதை நான் சொல்லவில்லை. உச்ச நீதிமன்றம் சொல்லியிருக்கிறது. 2026ம் ஆண்டு திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள், புரிய வைப்பார்கள், மனிதாபிமானம், மாண்பு இல்லாமல் அரசியல் ஆதாயம் தேடுகிறார் முதலமைச்சர்.</p>
<p>கேள்வி கேட்க ஆளே இல்லாமல் போனதால் திமுக தலைமை இப்படி இருக்கிறது. இந்த இடையூறு அனைத்தும் தற்காலிகமே. மக்களோடு கைகோர்த்து மக்களுக்காக நிற்போம்.</p>
<p>அடுத்த ஆண்டு இடம்பெறவுள்ள தேர்தலில் இரு தரப்பினர்களுக்கு மட்டுமே போட்டி. 100 சதவீதம் வெற்றி நமக்கே” என்று விஜய் மேலும் தெரிவித்துள்ளார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/vijay-confident-of-100-victory-in-the-assembly-elections/">சட்டமன்ற தேர்தலில் 100 வீதம் வெற்றி உறுதி!! விஜய் நம்பிக்கை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மகிந்தவை பார்த்தது புத்தரை நேரில் கண்டதை போல் உணர்ந்தேன் &#8211; குமாரி முனசிங்க</title>
		<link>https://oruvan.com/seeing-mahinda-felt-like-seeing-buddha-in-person-kumari-munasinghe/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 22 Oct 2025 06:25:41 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[#Oruvan]]></category>
		<category><![CDATA[#oruvan #news]]></category>
		<category><![CDATA[Mahinda Rajapaksa]]></category>
		<category><![CDATA[ஒருவன் செய்தி]]></category>
		<category><![CDATA[ஒருவன் செய்திகள்]]></category>
		<category><![CDATA[குமாரி முனசிங்க]]></category>
		<category><![CDATA[மகிந்த ராஜபக்ச]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=36040</guid>

					<description><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பார்த்த போது, புத்தரை நேரில் கண்டதைப் போல் உணர்ந்ததாக மறைந்த நடிகரும் பாடகருமான ஜாக்சன் அந்தோனியின் மனைவி குமாரி முனசிங்க தெரிவித்துள்ளார். தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை நேரில் சந்தித்தப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார். முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை ரத்து செய்யும் சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட பின்னர், கொழும்பில் தங்கியிருந்த மகிந்த ராஜபக்ச கடந்த மாதம் 11ஆம் திகதி தனது [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/seeing-mahinda-felt-like-seeing-buddha-in-person-kumari-munasinghe/">மகிந்தவை பார்த்தது புத்தரை நேரில் கண்டதை போல் உணர்ந்தேன் &#8211; குமாரி முனசிங்க</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை பார்த்த போது, புத்தரை நேரில் கண்டதைப் போல் உணர்ந்ததாக மறைந்த நடிகரும் பாடகருமான ஜாக்சன் அந்தோனியின் மனைவி குமாரி முனசிங்க தெரிவித்துள்ளார்.</p>
<p>தங்காலையில் உள்ள கார்ல்டன் இல்லத்தில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை நேரில் சந்தித்தப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.</p>
<p>முன்னாள் ஜனாதிபதிகளின் சலுகைகளை ரத்து செய்யும் சட்டமூலம் நிறைவேற்றப்பட்ட பின்னர், கொழும்பில் தங்கியிருந்த மகிந்த ராஜபக்ச கடந்த மாதம் 11ஆம் திகதி தனது சொந்த ஊரான தங்காலைக்கு குடிபெயர்ந்தார்.</p>
<p>தங்காலை கார்ல்டன் இல்லத்தில் தங்கியிருக்கும் அவரை முன்னணி அரசியல் தலைவர்கள், இராஜந்திரிகள், வெளிநாட்டு தூதுவர்கள் மற்றும் பொது மக்கள் என பலரும் நாளாந்தம் சென்று பார்வையிட்டு நலம் விசாரித்து வருகின்றனர்.</p>
<p>இதன்படி, முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவை கலைஞர்கள் குழுவொன்று சந்தித்திருந்தது. இதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட குமாரி முனசிங்க இவ்வாறு கூறியிருந்தார்,</p>
<p>&#8220;நான் மிகுந்த மகிழ்ச்சியுடன் இங்கு வந்தேன், இந்தப் பயணத்தில் அவர் மீண்டும் மீண்டும் வருவார் என்று காத்திருந்தேன். அவர் செய்த மற்றும் சொன்னவற்றின் நன்மைகளை உண்மையிலேயே சிந்திக்க நான் இங்கு வந்தேன். நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன்.</p>
<p>நாங்கள் உண்மையில் மகிந்தவை பார்த்தபோது, ​​எங்கள் இதயங்களில் இருந்த தீப்பிழம்புகள் அணைந்தன, புத்தரைக் கண்டது போல் நிம்மதி அடைந்தோம்.” என்றார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/seeing-mahinda-felt-like-seeing-buddha-in-person-kumari-munasinghe/">மகிந்தவை பார்த்தது புத்தரை நேரில் கண்டதை போல் உணர்ந்தேன் &#8211; குமாரி முனசிங்க</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>13 ஐ நடைமுறைப்படுத்த சிங்கள அரசியல் தலைவர்களை அமெரிக்க – இந்திய அரசுகள் வற்புறுத்துமா?</title>
		<link>https://oruvan.com/will-the-us-and-indian-governments-pressure-sinhala-political-leaders-to-implement-the-13/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Thu, 16 Oct 2025 04:47:14 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[இந்திய அரசாங்கம்]]></category>
		<category><![CDATA[இலங்கை அரசாங்கம்]]></category>
		<category><![CDATA[ஒருவன் செய்தி]]></category>
		<category><![CDATA[ஒருவன் செய்திகள்]]></category>
		<category><![CDATA[சிங்கள அரசாங்கம்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=35562</guid>

					<description><![CDATA[<p>*13 ஐ நடைமுறைப்படுத்திக் காண்பிக்குமாறு சிங்கள தலைவர்களை வல்லரசுகள் வற்புறுத்துமா? *நல்லிணக்கம் கொழும்பில் ஆரம்பிக்க வேண்டும்… *ஜெனிவாவின் மடைமாற்றல்! அ.நிக்ஸன்- இலங்கை ஒற்றையாட்சி நாடாளுமன்றத்தில் 1988 இல் அறுதிப் பெரும்பான்மையோடு நிறைவேற்றப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டிய பொறுப்பு இலங்கை அரசாங்கத்துக்கு உரியது. 13 ஐ தமிழர்கள் நிராகரிக்கின்றனர் என்பது வேறு. நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி மனட்சாட்சியுடன் நேர்மையாக இயங்கினால், இனப் பிரச்சினை விவகாரத்தை 24 மணி நேரத்துக்குள் தீர்க்க முடியும் என்ற ஒரு [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/will-the-us-and-indian-governments-pressure-sinhala-political-leaders-to-implement-the-13/">13 ஐ நடைமுறைப்படுத்த சிங்கள அரசியல் தலைவர்களை அமெரிக்க – இந்திய அரசுகள் வற்புறுத்துமா?</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p><strong>*13 ஐ நடைமுறைப்படுத்திக் காண்பிக்குமாறு சிங்கள தலைவர்களை வல்லரசுகள் வற்புறுத்துமா?</strong></p>
<p><strong>*நல்லிணக்கம் கொழும்பில் ஆரம்பிக்க வேண்டும்…</strong></p>
<p><strong>*ஜெனிவாவின் மடைமாற்றல்!</strong></p>
<p><strong>அ.நிக்ஸன்-</strong></p>
<p>இலங்கை ஒற்றையாட்சி நாடாளுமன்றத்தில் 1988 இல் அறுதிப் பெரும்பான்மையோடு நிறைவேற்றப்பட்ட 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்த வேண்டிய பொறுப்பு இலங்கை அரசாங்கத்துக்கு உரியது.</p>
<p>13 ஐ தமிழர்கள் நிராகரிக்கின்றனர் என்பது வேறு.</p>
<p>நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி மனட்சாட்சியுடன் நேர்மையாக இயங்கினால், இனப் பிரச்சினை விவகாரத்தை 24 மணி நேரத்துக்குள் தீர்க்க முடியும் என்ற ஒரு பொதுக் கருத்து உண்டு.</p>
<p>ஆனால் —</p>
<p>ஜேஆர் முதல் மகிந்த ரணில் வரையும் அதனை செய்யவில்லை.</p>
<p>சமாதான தேவை என்று மார்தட்டிக் கொண்டு வந்த சந்திரிகாவும் போரை நாடினார்.</p>
<p>இடதுசாரி – சோசலிசம் என்றெல்லாம் புனை கதை சொல்லி வந்த அநுர, இலங்கை அரசாங்கத்துக்குச் சாதகமான 60/1 ஜெனிவா தீர்மானத்தைக் கூட நிராகரித்துவிட்டார்…</p>
<p>ஆகவே ——</p>
<p>A) 13 ஐ நடைமுறைப்படுத்துவதற்கு தமிழ்த் தேசியக் கட்சிகள் ஒற்றுமைப்பட வேண்டும். அல்லது அவர்கள் ஒத்துழைக்கிறார்கள் இல்லை என்று ஏன் இலங்கை அரசாங்கம் கேட்க வேண்டும்?</p>
<p>B) அதனை இந்திய ஏன் நியாயப்படுத்த வேண்டும்?</p>
<p>அப்படியானால் —-</p>
<p>13 இல் இருந்து மிக முக்கியமான அதிகாரங்கள் மீளப் பெறப்பட்டபோது, தமிழ்த் தேசியக் கட்சிகளின் ஒத்துழைப்பு அல்லது அவர்களுடன் பேசப்பட்டதா?</p>
<p>இல்லையே?</p>
<p>1) ஒரரே இரவில் ஜனாதிபதியின் கையொப்பத்துடன் 13 இல் இருந்து 15 இற்கும் மேற்பட்ட அதிகாரங்கள் மீளப் பெறப்பட்டிருக்கிறதே?</p>
<p>2) அதைவிடவும் இருக்கின்ற அதிகாரங்களை இயங்க விடாமல் ஜனாதிபதியின் நிறைவேற்று அதிகாரம் தடுக்கிறதே?</p>
<p>இப் பின்னணியில் யதார்த்த அரசியல் பற்றிப் பேசும் சில போலியான முற்போக்குத் தமிழர்கள், 13 பற்றி தரும் விளக்கம் வேடிக்கையானது.</p>
<p>நூறு வருடங்களுக்கும் மேற்பட்ட இன முரண்பாட்டை முப்பது வருட ஆயுதப் போராட்டத்துடன் சமப்படுத்தி போர்க் குற்றங்கள் – மனித குலத்துக்கு எதிரான குற்றங்கள் என்று மாத்திரம் ஜெனீவா வரையறை செய்திருக்கிறது…</p>
<p>அது மாத்திரமல்ல —</p>
<p>ஒரு நாளில் அதுவும் ஒரு மணி நேர இடைவெளியில் நடைபெற்று முடிந்த உயிர்த்த ஞாயிறு தாக்குதலையும், முப்பது வருட ஆயுதப் போராட்டத்தையும் ஒரே தராசில் போட்டு, ஒட்டுமொத்தமாக தனி நபர் பொறுப்புக் கூறல் என்றும் ஜெனீவா வரையறை செய்வது தான் மாபெரும் அரசியல் வேடிக்கை…</p>
<p>உயிர்த்த ஞாயிறுத் தாக்குதல் பற்றிய விவகாரத்தை மற்றொரு நிகழ்ச்சி நிரலில் உட்புகுத்தி ஆராய முடியும். பொருத்தமான நிகழ்ச்சி நிரல் ஜெனிவாவில் உண்டு. ஆனால் அவ்வாறு செய்யாதது ஏன்?</p>
<p>அத்துடன் —-</p>
<p>ஒட்டுமொத்த இலங்கைத்தீவு மக்களின் மனித உரிமை மீறல் விவகாரம் எனவும், 2022 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பொருளாதார குற்றங்கள் எனவும், அதிகாரத் துஷ்பிரயோகம் – ஊழல் மோசடி எனவும், இனப் பிரச்சினை விவகாரம் சுருக்கப்பட்டுள்ளது.</p>
<p>இந்த மடைமாற்றங்கள் —</p>
<p>ஈழத்தமிழர்களின் ”சுயநிர்ணய உரிமை” ”இன அழிப்புக்கான சர்வதேச நீதி” ஆகியவற்றுக்கு எதிரான சதி அரசியல் என்று தானே பொருள் கொள்ள முடியும்?</p>
<p>புவிசார் அரசியல், குறிப்பாக இந்தோ – பசுபிக் பிராந்திய நலன் நோக்கில், அமெரிக்க – இந்திய அரசுகளை மையப்படுத்தியதாக ஐக்கிய நாடுகள் சபையின், இலங்கை குறித்த அணுகுமுறை உள்ளது.</p>
<p>ஆகவே —–</p>
<p>ஜெனிவாவுக்கும் அமெரிக்க – இந்திய அரசுகளுக்கும் இலங்கையில் நல்லிணக்கம் ஏற்பட வேண்டும் என விருப்பினால்—–</p>
<p>——-குறைந்த பட்சம் 13 ஐ நடைமுறைப்படுத்திக் காண்பிக்குமாறு சிங்கள தலைவர்களுக்கு கட்டளையிட முடியுமா?——</p>
<p>அரசியல் தீர்வுக்கான ஆரம்ப புள்ளியாக 13 ஐ கோருமாறு, 2009 இற்குப் பின்னரான சூழலில் பலவீனமாகவுள்ள தமிழர்களை மாத்திரம் ஏன் வலிந்து இழுக்கிறார்கள்?</p>
<p>The post <a href="https://oruvan.com/will-the-us-and-indian-governments-pressure-sinhala-political-leaders-to-implement-the-13/">13 ஐ நடைமுறைப்படுத்த சிங்கள அரசியல் தலைவர்களை அமெரிக்க – இந்திய அரசுகள் வற்புறுத்துமா?</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>தனிநபருக்கும் தீங்கு விளைவிக்காத வகையில் சுற்றுலா துறை ஊக்குவிக்கப்படும் – பிரதமர் நாடாளுமன்றில் விளக்கம்</title>
		<link>https://oruvan.com/tourism-sector-will-be-promoted-in-a-way-that-does-not-harm-the-individual-prime-minister-explains-in-parliament/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Wed, 08 Oct 2025 05:38:01 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[Harini Amarasuriya]]></category>
		<category><![CDATA[LGBTQIA+]]></category>
		<category><![CDATA[ஒருவன் செய்தி]]></category>
		<category><![CDATA[ஒருவன் செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஓரினச்சேர்க்கையாளர்]]></category>
		<category><![CDATA[பிரதமர்]]></category>
		<category><![CDATA[ஹரினி அமரசூரிய]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=34735</guid>

					<description><![CDATA[<p>சுற்றுலாத் துறையை மேம்படுத்துவது தொடர்பான நிலைப்பாடு குறித்து ஜனாதிபதியும் வெளியுறவு அமைச்சரும் அரசாங்கத்திற்கும் நிர்வாக அதிகாரிகளுக்கும் தெரிவித்துள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார். எந்தவொரு தனிநபருக்கும் தீங்கு விளைவிக்காத வகையில் சுற்றுலாவை செயல்படுத்துவது அரசாங்கத்தின் கொள்கை என்றும், சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதில் சிறப்புக் குழுக்கள் ஊக்குவிக்கப்படுவதில்லை என்றும் பிரதமர் கூறினார். சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக ஓரினச்சேர்க்கையாளர் சமூகத்தை ஊக்குவிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜெயவர்தன இன்று (08) நாடாளுமன்றத்தில் கேட்ட கேள்விக்கு [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/tourism-sector-will-be-promoted-in-a-way-that-does-not-harm-the-individual-prime-minister-explains-in-parliament/">தனிநபருக்கும் தீங்கு விளைவிக்காத வகையில் சுற்றுலா துறை ஊக்குவிக்கப்படும் – பிரதமர் நாடாளுமன்றில் விளக்கம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>சுற்றுலாத் துறையை மேம்படுத்துவது தொடர்பான நிலைப்பாடு குறித்து ஜனாதிபதியும் வெளியுறவு அமைச்சரும் அரசாங்கத்திற்கும் நிர்வாக அதிகாரிகளுக்கும் தெரிவித்துள்ளதாக பிரதமர் ஹரிணி அமரசூரிய தெரிவித்தார்.</p>
<p>எந்தவொரு தனிநபருக்கும் தீங்கு விளைவிக்காத வகையில் சுற்றுலாவை செயல்படுத்துவது அரசாங்கத்தின் கொள்கை என்றும், சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதில் சிறப்புக் குழுக்கள் ஊக்குவிக்கப்படுவதில்லை என்றும் பிரதமர் கூறினார்.</p>
<p>சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதற்காக ஓரினச்சேர்க்கையாளர் சமூகத்தை ஊக்குவிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து நாடாளுமன்ற உறுப்பினர் கவிந்த ஜெயவர்தன இன்று (08) நாடாளுமன்றத்தில் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே பிரதமர் இவ்வாறு தெரிவித்தார்.</p>
<p>சுற்றுலாத் துறையை மேம்படுத்துவதில் எந்தவொரு கட்சிக்கோ அல்லது குழுவுக்கோ எந்த சூழ்நிலையிலும் சிறப்பு ஊக்குவிப்பு வழங்கப்படாது என்று பிரதமர் மேலும் வலியுறுத்தினார்.</p>
<p>The post <a href="https://oruvan.com/tourism-sector-will-be-promoted-in-a-way-that-does-not-harm-the-individual-prime-minister-explains-in-parliament/">தனிநபருக்கும் தீங்கு விளைவிக்காத வகையில் சுற்றுலா துறை ஊக்குவிக்கப்படும் – பிரதமர் நாடாளுமன்றில் விளக்கம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>நாட்டின் பல பகுதிகளில் அடையாளம் தெரியாத சடலங்கள் பல மீட்பு</title>
		<link>https://oruvan.com/several-unidentified-bodies-recovered-in-several-parts-of-the-country/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Sun, 19 Jan 2025 03:32:04 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[#police]]></category>
		<category><![CDATA[death]]></category>
		<category><![CDATA[Investication]]></category>
		<category><![CDATA[இலங்கை தமிழ் செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஒருவன் செய்தி]]></category>
		<category><![CDATA[ஒருவன் செய்திகள்]]></category>
		<category><![CDATA[சடலங்கள் மீட்பு]]></category>
		<category><![CDATA[பொலிஸார்]]></category>
		<category><![CDATA[விசாரணை]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=7395</guid>

					<description><![CDATA[<p>நாட்டின் பல பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட அடையாளம் தெரியாத சடலங்கள் குறித்து பொலிஸார் அறிக்கை வெளியிட்டுள்ளனர். இந்த சடலங்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். மில்லனிய பொலிஸ் பிரிவில் உள்ள ஹால்தோட்ட கால்வாயின் கரையில் அடையாளம் தெரியாத ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டதாக நேற்று மாலை அறிவிக்கப்பட்டுள்ளது. உடலின் மேல் பகுதி மட்டுமே எஞ்சியிருப்பதையும், எலும்புக்கூடு எச்சங்கள் மட்டுமே எஞ்சியிருப்பதையும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். சடலம் நீதவான் விசாரணைக்காக பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், மில்லனிய பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/several-unidentified-bodies-recovered-in-several-parts-of-the-country/">நாட்டின் பல பகுதிகளில் அடையாளம் தெரியாத சடலங்கள் பல மீட்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>நாட்டின் பல பகுதிகளில் கண்டெடுக்கப்பட்ட அடையாளம் தெரியாத சடலங்கள் குறித்து பொலிஸார் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.</p>
<p>இந்த சடலங்கள் நேற்று மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.</p>
<p>மில்லனிய பொலிஸ் பிரிவில் உள்ள ஹால்தோட்ட கால்வாயின் கரையில் அடையாளம் தெரியாத ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டதாக நேற்று மாலை அறிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>உடலின் மேல் பகுதி மட்டுமே எஞ்சியிருப்பதையும், எலும்புக்கூடு எச்சங்கள் மட்டுமே எஞ்சியிருப்பதையும் பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.</p>
<p>சடலம் நீதவான் விசாரணைக்காக பொலிஸ் பாதுகாப்பில் வைக்கப்பட்டுள்ளதுடன், மில்லனிய பொலிஸார் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>
<p>இதற்கிடையில், கிரியெல்ல பொலிஸ் பிரிவின் குருகம்மோதர பகுதியில் உள்ள களு ஆற்றில் ஒரு சடலம் கண்டெடுக்கப்பட்டதாக நேற்று மதியம் கிரியெல்ல nபாலிஸ் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.</p>
<p>அதன்படி, விசாரணையின் போது, ​​உடலில் எலும்புக்கூடு எச்சங்கள் மட்டுமே எஞ்சியிருப்பதும், தலை காணாமல் போனதும் உறுதிசெய்யப்பட்டுள்ளது. உயிரிழந்தவர் ஆண் என்பதையும் பொலிஸார் வெளிப்படுத்தியுள்ளனர்.</p>
<p>இறந்தவர் வெளிர் நீல நிற ஆடை அணிந்திருந்ததாக போலீசார் தெரிவித்தனர்.</p>
<p>சடலம் இரத்தினபுரி வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், கிரியெல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>
<p>மேலும், மட்டக்களப்பு பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சின்ன உப்போடி வாவியில் ஒரு பெண் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக மட்டக்களப்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.</p>
<p>அதன்படி, விசாரணையில் இறந்தவர் 60-70 வயதுக்குட்பட்ட பெண் என்பது தெரியவந்தது. அவர் வெள்ளை மற்றும் பச்சை கலந்த ஆடை அணிந்திருந்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.</p>
<p>சடலத்தின் அடையாளம் இன்னும் உறுதிப்படுத்தப்படவில்லை, மேலும் சடலம் தற்போது மட்டக்களப்பு மருத்துவமனையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.</p>
<p>சம்பவம் தொடர்பில் மட்டக்களப்பு பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.</p>
<p>The post <a href="https://oruvan.com/several-unidentified-bodies-recovered-in-several-parts-of-the-country/">நாட்டின் பல பகுதிகளில் அடையாளம் தெரியாத சடலங்கள் பல மீட்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
