<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>ஐசிசி Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/%e0%ae%90%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%bf/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/ஐசிசி/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Mon, 26 Jan 2026 08:08:51 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>ஐசிசி Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/ஐசிசி/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>ஐசிசியின் முடிவை ஏற்றுக்கொள்வதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அறிவிப்பு</title>
		<link>https://oruvan.com/%e0%ae%90%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%af%88-%e0%ae%8f%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%8d/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 26 Jan 2026 08:08:51 +0000</pubDate>
				<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[Bangladesh Cricket]]></category>
		<category><![CDATA[icc]]></category>
		<category><![CDATA[T20 Wold Cup]]></category>
		<category><![CDATA[ஐசிசி]]></category>
		<category><![CDATA[பங்களாதேஷ் கிரிக்கெட் சபை]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=43854</guid>

					<description><![CDATA[<p>இருபதுக்கு இருபது உலகக் கிண்ணம் தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் பேரவை எடுத்துள்ள முடிவை ஏற்றுக்கொள்வதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. பங்களாதேஷ் அணிக்கு பதிலாக ஸ்கொட்லாந்து அணியை இணைத்துக்கொள்வதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை  அறிவித்திருந்த நிலையில்,  பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் அறிவிப்பு வெளியாகியுள்ளது. டாக்காவில் நடைபெற்ற பங்களாதேஷ் கிரிக்கெட் அதிகாரிகளின் கூட்டத்திற்குப் பின்னர் அந்நாட்டு கிரிக்கெட் சபையின் தலைவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார். பாதுகாப்புக் காரணங்களைக் காரணம் காட்டி, இருபதுக்கு இருபது  உலகக் கிண்ண தொடருக்கு இந்தியாவுக்கு [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/%e0%ae%90%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%af%88-%e0%ae%8f%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%8d/">ஐசிசியின் முடிவை ஏற்றுக்கொள்வதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>இருபதுக்கு இருபது உலகக் கிண்ணம் தொடர்பில் சர்வதேச கிரிக்கெட் பேரவை எடுத்துள்ள முடிவை ஏற்றுக்கொள்வதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.</p>
<p>பங்களாதேஷ் அணிக்கு பதிலாக ஸ்கொட்லாந்து அணியை இணைத்துக்கொள்வதாக சர்வதேச கிரிக்கெட் பேரவை  அறிவித்திருந்த நிலையில்,  பங்களாதேஷ் கிரிக்கெட் சபையின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.</p>
<p>டாக்காவில் நடைபெற்ற பங்களாதேஷ் கிரிக்கெட் அதிகாரிகளின் கூட்டத்திற்குப் பின்னர் அந்நாட்டு கிரிக்கெட் சபையின் தலைவர் இந்தக் கருத்துக்களைத் தெரிவித்தார்.</p>
<p>பாதுகாப்புக் காரணங்களைக் காரணம் காட்டி, இருபதுக்கு இருபது  உலகக் கிண்ண தொடருக்கு இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ள பங்களாதேஷ்  கிரிக்கெட் சபை மறுப்பு வெளியிட்டுள்ளது.</p>
<p>இதன்படி, இந்தியாவுக்கு வெளியே போட்டிகளில் விளையாடும் பங்களாதேஷின் கோரிக்கையை நிராகரித்து, போட்டி அட்டவணையை மாற்றப்போவதில்லை என்று சர்வதேச கிரிக்கெட்  பேரவை தெரிவித்துள்ளது.</p>
<p>மேலும், இறுதி முடிவை எடுக்க சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் ஒரு குறிப்பிட்ட நேரத்தை பங்களாதேஷ் தரப்பிற்கு வழங்கியது.</p>
<p>எவ்வாறாயினும், இந்தியாவில் விளையாட போவதில்லை என்ற நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை என்று பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அறிவித்திருந்தது.</p>
<p>இதன்படி, இந்த ஆண்டு இருபதுக்கு இருபது உலகக் கிண்ண தொடரில் இருந்து பங்களாதேஷ் அணியை நீக்கியதுடன் ஸ்காட்லாந்து அணியை இணைத்து சர்வதேச கிரிக்கெட் பேரவை அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/%e0%ae%90%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%9a%e0%ae%bf%e0%ae%af%e0%ae%bf%e0%ae%a9%e0%af%8d-%e0%ae%ae%e0%af%81%e0%ae%9f%e0%ae%bf%e0%ae%b5%e0%af%88-%e0%ae%8f%e0%ae%b1%e0%af%8d%e0%ae%b1%e0%af%81%e0%ae%95%e0%af%8d/">ஐசிசியின் முடிவை ஏற்றுக்கொள்வதாக பங்களாதேஷ் கிரிக்கெட் சபை அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண தொடர் &#8211; சுப்மன் கில் தலைவராக அறிமுகம்?</title>
		<link>https://oruvan.com/shubman-gill-to-make-captains-debut-against-new-zealand/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Fri, 28 Feb 2025 06:24:58 +0000</pubDate>
				<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[Cricket News]]></category>
		<category><![CDATA[icc]]></category>
		<category><![CDATA[ICC Champions Trophy]]></category>
		<category><![CDATA[Rohit Sharma]]></category>
		<category><![CDATA[Shubman Gill]]></category>
		<category><![CDATA[Sports News]]></category>
		<category><![CDATA[ஐசிசி]]></category>
		<category><![CDATA[ஐசிசி சம்பியன் கிண்ணம்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=12592</guid>

					<description><![CDATA[<p>ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் சுப்மன் கில் இந்திய அணியை வழிநடத்துவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன. நியூசிலாந்துக்கு எதிரான அடுத்த போட்டியில் இந்திய அணியின் தலைவர் ரோகித் சர்மா விளையாட மாட்டார் எனவும் இந்த சூழ்நிலையில், துணைத் தலைவரான கில் அணியை வழிநடத்துவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் நடந்து முடிந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ரோகித்தின் காலில் காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கில் சிறிது காலம் அணியை வழிநடத்தினார். பின்னர் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/shubman-gill-to-make-captains-debut-against-new-zealand/">ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண தொடர் &#8211; சுப்மன் கில் தலைவராக அறிமுகம்?</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண தொடரில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் சுப்மன் கில் இந்திய அணியை வழிநடத்துவார் என தகவல்கள் வெளியாகியுள்ளன.</p>
<p>நியூசிலாந்துக்கு எதிரான அடுத்த போட்டியில் இந்திய அணியின் தலைவர் ரோகித் சர்மா விளையாட மாட்டார் எனவும் இந்த சூழ்நிலையில், துணைத் தலைவரான கில் அணியை வழிநடத்துவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>அண்மையில் நடந்து முடிந்த பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் ரோகித்தின் காலில் காயம் ஏற்பட்டது. இதைத் தொடர்ந்து கில் சிறிது காலம் அணியை வழிநடத்தினார்.</p>
<p>பின்னர் ரோகித் விளையாட திரும்பினாலும், அவர் முழுமையாக உடல் தகுதி பெறவில்லை என்று கூறப்படுகிறது.</p>
<p>பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றிக்குப் பிறகு நடைபெற்ற பயிற்சி அமர்வுகளில் ரோகித் பங்கேற்கவில்லை. ரோகித் தனது பெரும்பாலான நேரத்தை பயிற்சியாளர் கம்பீருடன் போட்டி தொடர்பான விடயங்களைப் பற்றி விவாதித்ததாக கூறப்படுகின்றது.</p>
<p>இந்நிலையில், காயம் பெரியதாக இல்லாவிட்டாலும், நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் ரோகித்துக்கு ஓய்வு அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>சம்பியன்ஸ் கிண்ண அரையிறுதிக்கு நியூசிலாந்து மற்றும் இந்தியா ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டதால், இந்தப் போட்டி இரு அணிகளுக்கும் முக்கியமானதல்ல.</p>
<p>இந்த சூழ்நிலையில், அணி நிர்வாகம் ரோகித்துக்கு ஓய்வு அளித்து கில்லை தலைவராக நியமிக்கும் என்று இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/shubman-gill-to-make-captains-debut-against-new-zealand/">ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண தொடர் &#8211; சுப்மன் கில் தலைவராக அறிமுகம்?</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண ஆரம்ப நிகழ்வு &#8211; இந்திய தேசியக் கொடி தவறவிடப்பட்டதா?</title>
		<link>https://oruvan.com/icc-champions-trophy-opening-ceremony-was-the-indian-national-flag-missed/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 17 Feb 2025 06:43:14 +0000</pubDate>
				<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[Cricket News]]></category>
		<category><![CDATA[icc]]></category>
		<category><![CDATA[ICC Champions Trophy]]></category>
		<category><![CDATA[pakistan]]></category>
		<category><![CDATA[Sports News]]></category>
		<category><![CDATA[ஐசிசி]]></category>
		<category><![CDATA[ஐசிசி சம்பியன் கிண்ணம்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=10834</guid>

					<description><![CDATA[<p>ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண தொடருக்கான ஆரம்ப நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு லாகூரில் வெகு சிறப்பாக நடைபெற்றிருந்தது. இந்தியா பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்துள்ள நிலையில், இந்தியா விளையாடும் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (யுஏஇ) நடத்த முடிவுசெய்யப்பட்டுள்ளன. இந்நிலையில், லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் ஏழு நாட்டு அணிகளின் கொடிகளை கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது, இந்திய தேசியக் கொடி காட்சிப்படுத்தப்படவில்லை என்று ஒரு ட்வீட் பதிவில் தெரிவிக்கப்பட்டுளு்ளது. 1996 ஆம் ஆண்டுக்குப் பிறகு பாகிஸ்தான் ஒரு ஐசிசி நிகழ்வை [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/icc-champions-trophy-opening-ceremony-was-the-indian-national-flag-missed/">ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண ஆரம்ப நிகழ்வு &#8211; இந்திய தேசியக் கொடி தவறவிடப்பட்டதா?</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண தொடருக்கான ஆரம்ப நிகழ்வு நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு லாகூரில் வெகு சிறப்பாக நடைபெற்றிருந்தது.</p>
<p>இந்தியா பாகிஸ்தானுக்கு செல்ல மறுத்துள்ள நிலையில், இந்தியா விளையாடும் போட்டிகள் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் (யுஏஇ) நடத்த முடிவுசெய்யப்பட்டுள்ளன.</p>
<p>இந்நிலையில், லாகூரில் உள்ள கடாபி மைதானத்தில் ஏழு நாட்டு அணிகளின் கொடிகளை கொண்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது, இந்திய தேசியக் கொடி காட்சிப்படுத்தப்படவில்லை என்று ஒரு ட்வீட் பதிவில் தெரிவிக்கப்பட்டுளு்ளது.</p>
<p>1996 ஆம் ஆண்டுக்குப் பிறகு பாகிஸ்தான் ஒரு ஐசிசி நிகழ்வை நடத்தும் முதல் முறையாக இந்தப் போட்டி நிகழ்வாகும், பாகிஸ்தான் கராச்சி, லாகூர் மற்றும் ராவல்பிண்டியில் போட்டிகள் இடம்பெறவுள்ளன.</p>
<p>பாகிஸ்தான் கிரிக்கெட் சபையின் (PCB) தலைவர் மொஹ்சின் நக்வி கூறுகையில், சம்பியன்ஸ் கிண்ண போட்டியை பாகிஸ்தான் நடத்துவது அந்நாட்டிற்கும் அதன் கிரிக்கெட் ரசிகர்களுக்கும் ஒரு &#8216;முக்கியமான சந்தர்ப்பம்&#8217; என்றார்.</p>
<p>&#8220;29 ஆண்டுகளுக்குப் பிறகு முதல் முறையாக ஐசிசி சம்பியன்ஸ் கிண்ணம் 2025 பாகிஸ்தானுக்குத் திரும்பும்,&#8221; என்று நக்வி நிகழ்வின் போது குறிப்பிட்டிருந்தார்.</p>
<p>பாகிஸ்தான் நியூசிலாந்து, இந்தியா மற்றும் வங்கதேசத்துடன் குழுவாகவும், மறுபுறத்தில் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாப்பிரிக்கா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் ஒரு குழுவிலும் இடம்பெற்றுள்ளனர்.</p>
<p>ஒவ்வொரு குழுவிலிருந்தும் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/icc-champions-trophy-opening-ceremony-was-the-indian-national-flag-missed/">ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண ஆரம்ப நிகழ்வு &#8211; இந்திய தேசியக் கொடி தவறவிடப்பட்டதா?</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி! கூடுதல் டிக்கெட்டுகள் விற்பனைக்கு</title>
		<link>https://oruvan.com/india-pakistan-clash-in-icc-champions-trophy-additional-tickets-on-sale/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Sun, 16 Feb 2025 07:14:16 +0000</pubDate>
				<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[Cricket News]]></category>
		<category><![CDATA[icc]]></category>
		<category><![CDATA[ICC Champions Trophy]]></category>
		<category><![CDATA[India vs Pakistan]]></category>
		<category><![CDATA[Sports News]]></category>
		<category><![CDATA[Team India]]></category>
		<category><![CDATA[ஐசிசி]]></category>
		<category><![CDATA[ஐசிசி சம்பியன் கிண்ணம்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=10710</guid>

					<description><![CDATA[<p>ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட்டுகளைப் பெறும் வாய்ப்பைத் தவறவிட்ட ரசிகர்களுக்கு மற்றொரு வாய்ப்பு கிடைத்துள்ளது. இதன்படி, சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐசிசி) கூடுதல் டிக்கெட்டுகளை வெளியிட்டுள்ளது. “ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயில் நடைபெறும் சம்பியன்ஸ் கிண்ண குழு நிலை இந்திய போட்டிகள் மற்றும் அரையிறுதி ஒன்றுக்கான கூடுதல் டிக்கெட்டுகள் இன்று விற்பனைக்கு வரும்” என்று ஐசிசி அறிக்கையில் தெரிவித்துள்ளது. “சம்பியன்ஸ் கிண்ண டிக்கெட்டுகளுக்கான தேவை அதிகமாக உள்ளது, [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/india-pakistan-clash-in-icc-champions-trophy-additional-tickets-on-sale/">இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி! கூடுதல் டிக்கெட்டுகள் விற்பனைக்கு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ஐசிசி சம்பியன்ஸ் கிண்ண தொடரில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிக்கான டிக்கெட்டுகளைப் பெறும் வாய்ப்பைத் தவறவிட்ட ரசிகர்களுக்கு மற்றொரு வாய்ப்பு கிடைத்துள்ளது.</p>
<p>இதன்படி, சர்வதேச கிரிக்கெட் பேரவை (ஐசிசி) கூடுதல் டிக்கெட்டுகளை வெளியிட்டுள்ளது.</p>
<p>“ஐக்கிய அரபு எமிரேட்ஸின் துபாயில் நடைபெறும் சம்பியன்ஸ் கிண்ண குழு நிலை இந்திய போட்டிகள் மற்றும் அரையிறுதி ஒன்றுக்கான கூடுதல் டிக்கெட்டுகள் இன்று விற்பனைக்கு வரும்” என்று ஐசிசி அறிக்கையில் தெரிவித்துள்ளது.</p>
<p>“சம்பியன்ஸ் கிண்ண டிக்கெட்டுகளுக்கான தேவை அதிகமாக உள்ளது, மேலும் இன்று (பெப்ரவரி 16) மதியம் 12 மணிக்கு விற்பனைக்கு வரும்போது ரசிகர்கள் வரையறுக்கப்பட்ட டிக்கெட்டுகளை வாங்க முடியும்.” என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இதன்படி, பெப்ரவரி 20 அன்று துபாயில் பங்களாதேஷ் மற்றும் இந்தியா இடையேயான தொடக்கப் போட்டி, பெப்ரவரி 23 அன்று பாகிஸ்தான் மற்றும் இந்தியா மோதும் போட்டி மற்றும் மார்ச் 2 அன்று நியூசிலாந்திற்கு எதிரான இந்தியாவின் இறுதி குழு நிலை போட்டிக்கான டிக்கெட்டுகளை ரசிகர்கள் வாங்க முடியும்.</p>
<p>இரண்டு வாரங்கள் நடைபெறும் இந்த பரபரப்பான போட்டியில், உலகின் முதல் எட்டு அணிகள் போட்டிகளில் பங்கேற்கவுள்ளன.</p>
<p>பெப்ரவரி 3 ஆம் திகதி விற்பனை தொடங்கிய ஒரு மணி நேரத்திற்குள் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதம் போட்டிக்கான டிக்கெட்டுகள் விற்றுத் தீர்ந்துவிட்டன.</p>
<p>இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டிகள் நீண்ட காலமாக மிகவும் விருவிருப்பாக இருந்து வருகின்றன, இந்தப் போட்டிகள் உலகளாவிய கவனத்தை ஈர்த்துள்ளன.</p>
<p>இங்கிலாந்துக்கு எதிரான ஒருநாள் சர்வதேச தொடரை வென்ற பிறகு உற்சாகத்தில் இருக்கும் இந்திய அணி, சனிக்கிழமை துபாய் சென்றுள்ளதுடன் சம்பியன்ஸ் கிண்ணத்திற்கு தயாராகி வருகிறமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/india-pakistan-clash-in-icc-champions-trophy-additional-tickets-on-sale/">இந்தியா-பாகிஸ்தான் அணிகள் மோதும் போட்டி! கூடுதல் டிக்கெட்டுகள் விற்பனைக்கு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>டெஸ்ட் கிரிக்கெட் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்படுமா?</title>
		<link>https://oruvan.com/test-cricket-to-be-split-into-two-divisions/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 06 Jan 2025 09:39:54 +0000</pubDate>
				<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[BCCI]]></category>
		<category><![CDATA[icc]]></category>
		<category><![CDATA[Test Cricket]]></category>
		<category><![CDATA[ஐசிசி]]></category>
		<category><![CDATA[பிசிசிஐ]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=5617</guid>

					<description><![CDATA[<p>டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை இரண்டாக பிரிப்பது குறித்து அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா மற்றும் சர்வதேச கிரிக்கெட் பேரவை ஆகியவற்றின் தலைவர்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நடவடிக்கை காரணமாக முன்னணி கிரிக்கெட் அணிகள் அடிக்கடி டெஸ்ட் தொடர்களில் விளையாடும் சூழல் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்மையில் நடந்து முடிந்த இந்திய &#8211; அவுஸ்திரேலிய அணிகள் மோதி போர்டர் &#8211; கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது. [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/test-cricket-to-be-split-into-two-divisions/">டெஸ்ட் கிரிக்கெட் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்படுமா?</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளை இரண்டாக பிரிப்பது குறித்து அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா மற்றும் சர்வதேச கிரிக்கெட் பேரவை ஆகியவற்றின் தலைவர்கள் இடையே பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.</p>
<p>இந்த நடவடிக்கை காரணமாக முன்னணி கிரிக்கெட் அணிகள் அடிக்கடி டெஸ்ட் தொடர்களில் விளையாடும் சூழல் ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>அண்மையில் நடந்து முடிந்த இந்திய &#8211; அவுஸ்திரேலிய அணிகள் மோதி போர்டர் &#8211; கவாஸ்கர் டெஸ்ட் தொடருக்கு கிடைத்த வரவேற்பை தொடர்ந்து இந்த முடிவெடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.</p>
<p>இந்த தொடர் முழுவதும் அதிகளவாக ரசிகர்கள் கூடியிருந்ததுடன், இதுவரை அதிகம் பார்க்கப்பட்ட டெஸ்ட் தொடராக மாறியுள்ளது என்றும் கூறப்படுகிறது.</p>
<p>தற்போது, ​​இந்தியா, அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகள் நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை ஒருவருக்கொருவர் இரண்டு முறை விளையாடுகின்றன.</p>
<p>ஆனால் டெஸ்ட் போட்டியை இரண்டு பிரிவுகளாகப் பிரிப்பது குறித்த பேச்சுவார்த்தை பலனளித்தால், இந்த எண்ணிக்கை மூன்று ஆண்டுகளுக்கு இரண்டு முறை விளையாடும் வாய்ப்பு கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இதன்படி, சர்வதேச கிரிக்கெட் பேரவையின் தலைவர் ஜெய் ஷா, கிரிக்கெட் அவுஸ்திரேலியா தலைவர் மைக் பெய்ர்ட் மற்றும் இங்கிலாந்து கிரிக்கெட்டின் தலைவர் ரிச்சர்ட் தாம்ப்சன் ஆகியோர் இது குறித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.</p>
<p>இந்த பேச்சுவார்த்தை இம்மாத இறுதிக்குள் நடைபெறும் என்று கூறப்படுகிறது. பேச்சுவார்த்தையில் டெஸ்ட் கிரிக்கெட்டை இரண்டாக பிரிப்பது பற்றி ஆலோசனை நடத்தப்படும் என்று தகவல் வெளியாகி உள்ளது.</p>
<p>ஒருவேளை இந்த திட்டம் ஏற்கப்படும் பட்சத்தில், தற்போது வரை திட்டமிடப்பட்டு இருக்கும் கிரிக்கெட் தொடர்கள் நிறைவு பெறும் வரை செயல்பாட்டுக்கு வராது என கூறப்படுகின்றது.</p>
<p>அந்த வகையில், 2027ஆம் ஆண்டு வரை பல்வேறு நாடுகள் விளையாடும் கிரிக்கெட் தொடர்களுக்கு திட்டமிடப்பட்டுள்ளன.</p>
<p>இதேஆண்டில் அவுஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து அணிகள் இடையே டெஸ்ட் போட்டியின் 150வது ஆண்டு நிறைவை கொண்டாடும் போட்டி நடைபெற இருக்கிறது.</p>
<p>உலகில் முன்னணியில் உள்ள அணிகள் அடிக்கடி டெஸ்ட் போட்டிகளில் விளையாட வேண்டும் என்று மூத்த கிரிக்கெட் வீரர்கள் பலரும் தொடர்ச்சியாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.</p>
<p>டெஸ்ட் கிரிக்கெட்டில் முதல்தர பட்டியலில் தென் ஆப்பிரிக்கா, அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, இலங்கை மற்றும் பாகிஸ்தான் அணிகள் இடம்பெற்றலம் என கூறப்படுகின்றது.</p>
<p>அதேபோல், மேற்கிந்திய தீவுகள், பங்களாதேஷ், அயர்லாந்து, ஆப்கானிஸ்தான் மற்றும் ஜிம்பாப்வே அணிகள் இரண்டாம்கட்ட பட்டியலில் இடம்பெற்று இருக்கலாம் என்று கூறப்படுகிறது.</p>
<p>முன்னதாக 2016 ஆம் ஆண்டு இதேபோன்ற திட்டத்தை கொண்டுவருவது தொடர்பான பேச்சுவார்த்தை எழுந்தது.</p>
<p>இத்தகைய திட்டம், எங்களுக்கு அநீதியை ஏற்படுத்தும் என்று சிறிய நாடுகளை சேர்ந்த அணிகள் முறையிட்டதால், இந்த திட்டம் பேச்சுவார்த்தை கட்டத்திலேயே நிறுத்தப்பட்டு விட்டது.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/test-cricket-to-be-split-into-two-divisions/">டெஸ்ட் கிரிக்கெட் இரண்டு பிரிவுகளாகப் பிரிக்கப்படுமா?</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ஷாகிப் அல் ஹசனுக்கு பந்து வீச தடை</title>
		<link>https://oruvan.com/shakib-al-hasan-banned-from-bowling/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Mon, 16 Dec 2024 04:40:07 +0000</pubDate>
				<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[Cricket News]]></category>
		<category><![CDATA[icc]]></category>
		<category><![CDATA[Shakib Al Hasan]]></category>
		<category><![CDATA[ஐசிசி]]></category>
		<category><![CDATA[கிரிக்கெட் செய்திகள்]]></category>
		<category><![CDATA[விளையாட்டுச் செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஷாகிப் அல் ஹசன்]]></category>
		<category><![CDATA[බංග්ලාදේශ ක්‍රිකට් කණ්ඩායමේ]]></category>
		<category><![CDATA[ශකිබ් අල්-හසන්]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=2653</guid>

					<description><![CDATA[<p>பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் ஷாகிப் அல் ஹசன், சர்வதேச கிரிக்கெட் பேரவையால் அங்கீகரிக்கப்பட்ட உள்நாட்டு அல்லது வெளிநாட்டு போட்டிகளில் பந்துவீச தடை விதிக்கப்பட்டுள்ளது. அந்நாட்டு கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட் போட்டிகளில் பந்து வீசும் முறை விதிகளுக்கு மீறியதாக இருப்பதாக ஷாகிப் அல் ஹசன் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை செய்து அதற்கான சோதனையில் இங்கிலாந்து [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/shakib-al-hasan-banned-from-bowling/">ஷாகிப் அல் ஹசனுக்கு பந்து வீச தடை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் ஷாகிப் அல் ஹசன், சர்வதேச கிரிக்கெட் பேரவையால் அங்கீகரிக்கப்பட்ட உள்நாட்டு அல்லது வெளிநாட்டு போட்டிகளில் பந்துவீச தடை விதிக்கப்பட்டுள்ளது.</p>
<p>அந்நாட்டு கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற இங்கிலாந்து கவுண்டி கிரிக்கெட் போட்டிகளில் பந்து வீசும் முறை விதிகளுக்கு மீறியதாக இருப்பதாக ஷாகிப் அல் ஹசன் மீது குற்றச்சாட்டு எழுந்தது.</p>
<p>இந்த குற்றச்சாட்டு குறித்து விசாரணை செய்து அதற்கான சோதனையில் இங்கிலாந்து கிரிக்கெட் நிர்வாகம் ஈடுபட்ட நிலையில், பந்து வீசியதில் ஷாகிப் அல் ஹசன் விதிகளை மீறியது தெரியவந்தது.</p>
<p>இதனையடுத்து, அதற்கான நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதன்படி, ஷாகிப் அல் ஹசன் பந்து வீசுவதில் இருந்து இடைநீக்கம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.</p>
<p>இனிமேல், சர்வதேச கிரிக்கெட் பேரவையால் அங்கீகரிக்கப்பட்ட உள்நாட்டு அல்லது வெளிநாட்டு போட்டிகளில் பந்துவீச ஷாகிப் அல் ஹசனுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.</p>
<p>இதேவேளை, கடந்த சில மாதங்களுக்கு முன்பு டெஸ்ட் மற்றும் சர்வதேச டி20 போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக ஷாகிப் அல் ஹசன் அறிவித்திருந்தார்.</p>
<p>எனினும், தென்னாப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாட விருப்பம் தெரிவித்திருந்த போதிலும், அவரின் கோரிக்கை நிராகரிக்கப்பட்டிருந்தது.</p>
<p>தற்போது இலங்கையில் இடம்பெற்று வரும் லங்காடி10 தொடரில் இணைந்துள்ளார். கோல் மார்வெல்ஸ் அணிக்காக விளையாடி வரும் ஷாகிப், கடந்த இரண்டு போட்டிகளிலும் பந்து வீசவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/shakib-al-hasan-banned-from-bowling/">ஷாகிப் அல் ஹசனுக்கு பந்து வீச தடை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
