<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>உக்ரைன் Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/%e0%ae%89%e0%ae%95%e0%af%8d%e0%ae%b0%e0%af%88%e0%ae%a9%e0%af%8d/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/உக்ரைன்/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Sat, 05 Apr 2025 02:37:21 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>உக்ரைன் Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/உக்ரைன்/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>உக்ரைன் மீது ரஷியா நடத்திய தாக்குதலில் 16 பேர் பலி: ஜெலன்ஸ்கி கண்டனம்</title>
		<link>https://oruvan.com/zelensky-condemns-russias-attack-on-ukraine-killing-16-people/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Sat, 05 Apr 2025 05:15:59 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[உக்ரைன்]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=16908</guid>

					<description><![CDATA[<p>ரஷியா-உக்ரைன் இடையிலான போரை நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். அந்த வகையில் அமெரிக்கா முன்மொழிந்த 30 நாள் போர் நிறுத்தத்துக்கு ரஷியா, உக்ரைன் ஆகிய இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்தன. இதுதொடர்பாக ரஷியா-உக்ரைன் இடையே விரைவில் பேச்சுவார்த்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவை குறிவைத்து ரஷியா நேற்று சரமாரி டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்கள் உள்பட பல கட்டிடங்கள் சேதமடைந்தன. இந்த தாக்குதலில் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/zelensky-condemns-russias-attack-on-ukraine-killing-16-people/">உக்ரைன் மீது ரஷியா நடத்திய தாக்குதலில் 16 பேர் பலி: ஜெலன்ஸ்கி கண்டனம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ரஷியா-உக்ரைன் இடையிலான போரை நிறுத்த அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தீவிரம் காட்டி வருகிறார். அந்த வகையில் அமெரிக்கா முன்மொழிந்த 30 நாள் போர் நிறுத்தத்துக்கு ரஷியா, உக்ரைன் ஆகிய இரு நாடுகளும் சம்மதம் தெரிவித்தன.</p>
<p>இதுதொடர்பாக ரஷியா-உக்ரைன் இடையே விரைவில் பேச்சுவார்த்தை தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>
<p>இந்நிலையில், உக்ரைன் தலைநகர் கீவை குறிவைத்து ரஷியா நேற்று சரமாரி டிரோன் தாக்குதல் நடத்தியது. இதில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடங்கள் உள்பட பல கட்டிடங்கள் சேதமடைந்தன. இந்த தாக்குதலில் 6 குழந்தைகள் உள்பட 16 பேர் பலியாகினர். மேலும் 34 பேர் படுகாயம் அடைந்தனர்.</p>
<p>ரஷியாவின் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்துள்ள உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி, தாக்குதலில் பலியானோர் குடும்பத்தினருக்கு இரங்கல் தெரிவித்தார்.</p>
<p>&nbsp;</p>
<p>The post <a href="https://oruvan.com/zelensky-condemns-russias-attack-on-ukraine-killing-16-people/">உக்ரைன் மீது ரஷியா நடத்திய தாக்குதலில் 16 பேர் பலி: ஜெலன்ஸ்கி கண்டனம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>கசான் நகரம் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல்</title>
		<link>https://oruvan.com/drone-attack-on-the-city-of-kazan/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Sun, 22 Dec 2024 04:09:55 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[Russia]]></category>
		<category><![CDATA[ukrain russia war]]></category>
		<category><![CDATA[ukraine]]></category>
		<category><![CDATA[உக்ரைன்]]></category>
		<category><![CDATA[கசான்]]></category>
		<category><![CDATA[போர்]]></category>
		<category><![CDATA[யுத்தம்]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=3581</guid>

					<description><![CDATA[<p>ரஷ்யாவின் கசான் நகரம் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் கசான் நகரைச் சுற்றியுள்ள பல விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. மொஸ்கோவில் இருந்து சுமார் 800 கிமீ தொலைவில் உள்ள கசானில் உள்ள பல குடியிருப்பு வளாகங்கள் ஆளில்லா விமானங்களால் தாக்கப்பட்டதாக ரஷ்ய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது. நேற்று (21) காலை மூன்று ஆளில்லா விமானங்கள் மூலம் நகரம் தாக்கப்பட்டதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. கசானில் அதிகாரிகள் [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/drone-attack-on-the-city-of-kazan/">கசான் நகரம் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ரஷ்யாவின் கசான் நகரம் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.</p>
<p>இதனால் கசான் நகரைச் சுற்றியுள்ள பல விமான நிலையங்கள் மூடப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.</p>
<p>மொஸ்கோவில் இருந்து சுமார் 800 கிமீ தொலைவில் உள்ள கசானில் உள்ள பல குடியிருப்பு வளாகங்கள் ஆளில்லா விமானங்களால் தாக்கப்பட்டதாக ரஷ்ய அரசு ஊடகம் தெரிவித்துள்ளது.</p>
<p>நேற்று (21) காலை மூன்று ஆளில்லா விமானங்கள் மூலம் நகரம் தாக்கப்பட்டதாக அந்நாட்டின் பாதுகாப்பு அமைச்சு தெரிவித்துள்ளது. கசானில் அதிகாரிகள் தாக்கப்பட்ட கட்டிடங்களில் இருந்து மக்களை வெளியேற்றி வருகின்றனர்.</p>
<p>ட்ரோன் தாக்குதல்கள் உக்ரைனால் நடத்தப்பட்டதாக ரஷ்ய பாதுகாப்பு அமைச்சகம் கூறியது, ஆனால் உக்ரைன் அதிகாரிகள் இது குறித்து இதுவரை எந்த அறிக்கையும் வெளியிடவில்லை.</p>
<p>கசான் மேயர் அலுவலகம், ட்ரோன்கள் நகரத்தில் உள்ள குடியிருப்பு பகுதிகளை குறிவைத்ததாக தெரிவித்துள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/drone-attack-on-the-city-of-kazan/">கசான் நகரம் மீது ஆளில்லா விமானங்கள் மூலம் தாக்குதல்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ரஷ்யப் படைகளுடன் இணைந்து போரிட்ட வட கொரியப் படையினர் கொல்லப்பட்டனர்</title>
		<link>https://oruvan.com/north-korean-soldiers-killed-fighting-alongside-russian-forces/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Tue, 17 Dec 2024 10:22:33 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[முக்கிய செய்திகள்]]></category>
		<category><![CDATA[KYIV]]></category>
		<category><![CDATA[North Korea]]></category>
		<category><![CDATA[Pentagon]]></category>
		<category><![CDATA[Russia]]></category>
		<category><![CDATA[ukraine]]></category>
		<category><![CDATA[அமெரிக்கா]]></category>
		<category><![CDATA[உக்ரைன்]]></category>
		<category><![CDATA[ரஷ்ய உக்ரைன் போர்]]></category>
		<category><![CDATA[ரஷ்யப் படைகள்]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<category><![CDATA[வட கொரியா]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=2931</guid>

					<description><![CDATA[<p>ரஷ்யாவின் குர்ஸ்க் எல்லைப் பகுதியில் உக்ரேனியப் படைகளுக்கு எதிரான மோதலின் போது சில வட கொரிய துருப்புக்கள் கொல்லப்பட்டதாக உக்ரைனின் இராணுவ புலனாய்வு அமைப்பும் பென்டகனும் திங்களன்று அறிவித்துள்ளன. சுமார் மூன்று ஆண்டுகாலப் போரில் உதவுவதற்காக வட கொரியா ரஷ்யாவிற்கு 10,000 முதல் 12,000 துருப்புக்களை அனுப்பியதாக அமெரிக்காவும் உக்ரைனும் அண்மையில் அறிவித்திருந்தது. இந்நிலையில், மோதலில் வட கொரிய துருப்புகள் கொல்லப்பட்டுள்ளதாக முதல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. வார இறுதியில் உக்ரேனிய இராணுவத்துடனான மோதலின் போது சுமார் 30 [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/north-korean-soldiers-killed-fighting-alongside-russian-forces/">ரஷ்யப் படைகளுடன் இணைந்து போரிட்ட வட கொரியப் படையினர் கொல்லப்பட்டனர்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ரஷ்யாவின் குர்ஸ்க் எல்லைப் பகுதியில் உக்ரேனியப் படைகளுக்கு எதிரான மோதலின் போது சில வட கொரிய துருப்புக்கள் கொல்லப்பட்டதாக உக்ரைனின் இராணுவ புலனாய்வு அமைப்பும் பென்டகனும் திங்களன்று அறிவித்துள்ளன.</p>
<p>சுமார் மூன்று ஆண்டுகாலப் போரில் உதவுவதற்காக வட கொரியா ரஷ்யாவிற்கு 10,000 முதல் 12,000 துருப்புக்களை அனுப்பியதாக அமெரிக்காவும் உக்ரைனும் அண்மையில் அறிவித்திருந்தது.</p>
<p>இந்நிலையில், மோதலில் வட கொரிய துருப்புகள் கொல்லப்பட்டுள்ளதாக முதல் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.</p>
<p>வார இறுதியில் உக்ரேனிய இராணுவத்துடனான மோதலின் போது சுமார் 30 வட கொரிய துருப்புக்கள் கொல்லப்பட்டனர் அல்லது காயமடைந்தனர் என உக்ரைனின் இராணுவ புலனாய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.</p>
<p>குர்ஸ்க்கில் உள்ள மூன்று கிராமங்களைச் சுற்றி இந்த உயிரிழப்புகள் பதிவாகியுள்ளன. இந்தப் பகுதியில் கடந்த நான்கு மாதங்களாக உக்ரேனிய ஊடுருவலைத் தடுக்க ரஷ்யா முயற்சித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>மேலும், மற்றொரு குர்ஸ்க் கிராமத்தைச் சுற்றி குறைந்தது மூன்று வட கொரிய வீரர்கள் காணாமல் போயுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.</p>
<p>வட கொரிய துருப்புக்கள் ரஷ்யாவின் போரின் &#8220;முன்னணியில்&#8221; இருப்பதாகவும், உக்ரைனுக்கு எதிரான &#8220;போர் நடவடிக்கைகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளதாகவும்&#8221; வெள்ளை மாளிகை தகவல்கள் தெரிவிக்கின்றன.</p>
<p>ரஷ்யாவின் சார்பாக வட கொரிய துருப்புக்கள் ஆதரவுப் பணிகளில் இருந்து நேரடிப் போராட்டத்திற்கு நகர்ந்துள்ளதாக உக்ரைன் அரசாங்கம் கூறியதைத் தொடர்ந்து, தேசிய பாதுகாப்பு செய்தித் தொடர்பாளர் ஜான் கிர்பி திங்களன்று இந்த மதிப்பீட்டை உறுதிப்படுத்தினார்.</p>
<p>வட கொரிய துருப்புக்கள் மோதலில் உயிரிழப்புகளை சந்தித்து வருவதாகவும், வட கொரியாவிற்கு வலுவான அமெரிக்க மற்றும் நட்பு நாடுகளின் பொருளாதாரத் தடைகள் பதிலிறுப்பை உறுதி செய்வதாகவும் கிர்பி தெரிவித்துள்ளார்.</p>
<p>இது குறித்து பென்டகன் பத்திரிகைச் செயலாளர் மேஜர் ஜெனரல் பாட் ரைடர் செய்தியாளர்களிடம் கூறுகையில், குர்ஸ்கில் நடந்த போரில் சில வட கொரிய துருப்புக்கள் உயிரிழந்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.</p>
<p>எனினும், கொல்லப்பட்ட அல்லது காயமடைந்தவர்களின் எண்ணிக்கையை அவர் வெளிப்படுத்தவில்லை.</p>
<p>வட கொரியத் ஜனாதிபதி கிம் ஜாங் உன், பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தத்தின் கீழ் ரஷ்யா தனது அண்டை நாடு மீது முழு அளவிலான படையெடுப்பிற்கு உறுதியான ஆதரவை உறுதியளித்துள்ளார்.</p>
<p>இந்தப் பின்னணியில் உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷ்யா சார்பில் போரிட வடகொரிய படைகள் ரஷ்யாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.</p>
<p>The post <a href="https://oruvan.com/north-korean-soldiers-killed-fighting-alongside-russian-forces/">ரஷ்யப் படைகளுடன் இணைந்து போரிட்ட வட கொரியப் படையினர் கொல்லப்பட்டனர்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>ரஷ்யாவுடன் பேச்சு நடத்த தயார் இல்லை &#8211; உக்ரைனின் முக்கிய அதிகாரி பகீர் அறிவிப்பு</title>
		<link>https://oruvan.com/not-ready-to-talk-with-russia-top-ukrainian-official-declares/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Fri, 13 Dec 2024 06:15:30 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[ஆண்ட்ரி யெர்மக்]]></category>
		<category><![CDATA[உக்ரைன்]]></category>
		<category><![CDATA[ரஷ்யா]]></category>
		<category><![CDATA[ஜெலென்ஸ்கி]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=2332</guid>

					<description><![CDATA[<p>ரஷ்யாவிடம் ஆயுதங்கள், பாதுகாப்பு உத்தரவாதங்கள் மற்றும் சர்வதேச அந்தஸ்து இல்லாதமையால் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தையை தொடங்க இன்னும் கீவ் தயாராக இல்லை என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் தலைமை அதிகாரி ஆண்ட்ரி யெர்மக் தெரிவித்துள்ளார். நேற்று வியாழக்கிழமை ரொய்டர்ஸுக்கு அவர் வழங்கியுள்ள செவ்வியில், உக்ரைனையை அழிக்கும் ரஷ்யாவுடன் பேச்சுகள் நடத்த உக்ரைன் தயாராக இல்லை என்றும் அவர் கூறியுள்ளார். என்றாலும், ஜேர்மன் எதிர்க்கட்சித் தலைவர் ஃபிரெட்ரிக் மெர்ஸுடனான சந்திப்பின் பின்னர் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி ஊடகங்களுக்கு கருத்து [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/not-ready-to-talk-with-russia-top-ukrainian-official-declares/">ரஷ்யாவுடன் பேச்சு நடத்த தயார் இல்லை &#8211; உக்ரைனின் முக்கிய அதிகாரி பகீர் அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>ரஷ்யாவிடம் ஆயுதங்கள், பாதுகாப்பு உத்தரவாதங்கள் மற்றும் சர்வதேச அந்தஸ்து இல்லாதமையால் ரஷ்யாவுடன் பேச்சுவார்த்தையை தொடங்க இன்னும் கீவ் தயாராக இல்லை என உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கியின் தலைமை அதிகாரி ஆண்ட்ரி யெர்மக் தெரிவித்துள்ளார்.</p>
<p>நேற்று வியாழக்கிழமை ரொய்டர்ஸுக்கு அவர் வழங்கியுள்ள செவ்வியில், உக்ரைனையை அழிக்கும் ரஷ்யாவுடன் பேச்சுகள் நடத்த உக்ரைன் தயாராக இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்.</p>
<p>என்றாலும், ஜேர்மன் எதிர்க்கட்சித் தலைவர் ஃபிரெட்ரிக் மெர்ஸுடனான சந்திப்பின் பின்னர் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி ஊடகங்களுக்கு கருத்து வெளியிடுகையில், உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டுவர விரும்புவதாகவும், தனது நாட்டை பலப்படுத்தவும், கிரெம்ளினை சமாதானத்தை நோக்கிச் செயல்படக் கட்டாயப்படுத்தவும் முயற்சிகள் தேவை என்றும் கூறினார்.</p>
<p>படையெடுப்பில் கைப்பற்றிய பிரதேசத்தை ரஷ்யா இன்னும் வைத்திருக்கும் நிலையில் இதுதொடர்பில் பேச்சுவார்த்தை நடத்தப்படலாம் என்றும் ஜெலென்ஸ்கி  கூறியுள்ளார்.</p>
<p>என்றாலும், நேட்டோவில் உக்ரைனை இணைக்கும் முயற்சியில் இருந்து பின்வாங்கப் போவதில்லை என அவர் கூறியுள்ளார்.</p>
<p>அமெரிக்காவில் ஏற்பட்டுள்ள ஆட்சிமாற்றமானது உக்ரைன் ரஷ்ய போரில் பல்வேறு மாற்றங்களை ஏற்படுத்தும் என சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.</p>
<p>குறிப்பாக அமெரிக்காவின் ஜனாதிபதியாக பொறுப்பேற்க உள்ள டொனாட்ல் ட்ரம்ப் போரை விரும்பவில்லை என தெளிவாக கூறியுள்ளதால் உக்ரைனை ரஷ்யாவுடன் இணக்கப்பாட்டை ஏற்படுத்திக்கொள்ளும் அழைப்பை விடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.</p>
<p>இதற்கு சாதகமான வகையில் கடந்த வாரம் பாரிஸில் கருத்து வெளியிட்ட ட்ரம்ப், போரை விரைவாக முடிவுக்கு கொண்டுவர விரும்புவதாக கூறினார். ட்ரம்பின் கருத்து எவ்வித கலந்துரையாடல்களும் இன்றி வெளியிடப்பட்ட அறிவிப்பாகும் என ஜெலென்ஸ்கி கூறியுள்ளார்.</p>
<p>2022ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் மொஸ்கோ, கிவ் மீது படையெடுப்பை ஆரம்பித்தது. இன்றுவரை இந்தப் போர் தொடர்ந்து இடம்பெறுவதுடன், உக்ரைனில் கைப்பற்றிய சில முக்கிய பகுதிகள் இன்னமும் ரஷ்யாவின் கட்டுப்பாட்டிலேயே உள்ளன.</p>
<p>The post <a href="https://oruvan.com/not-ready-to-talk-with-russia-top-ukrainian-official-declares/">ரஷ்யாவுடன் பேச்சு நடத்த தயார் இல்லை &#8211; உக்ரைனின் முக்கிய அதிகாரி பகீர் அறிவிப்பு</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
