<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு Archives - Oruvan.com</title>
	<atom:link href="https://oruvan.com/tag/%e0%ae%87%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%af%88-%e0%ae%ae%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%a4-%e0%ae%89%e0%ae%b0%e0%ae%bf%e0%ae%ae%e0%af%88%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d-%e0%ae%86%e0%ae%a3%e0%af%88/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://oruvan.com/tag/இலங்கை-மனித-உரிமைகள்-ஆணை/</link>
	<description>Leading Tamil news website in Sri Lanka</description>
	<lastBuildDate>Wed, 05 Mar 2025 05:06:54 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=6.9.4</generator>

<image>
	<url>https://oruvan.com/wp-content/uploads/2025/12/cropped-Oruvan-512x512-1-32x32.png</url>
	<title>இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு Archives - Oruvan.com</title>
	<link>https://oruvan.com/tag/இலங்கை-மனித-உரிமைகள்-ஆணை/</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>மலையகத்தில் நடந்த முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை &#8211; அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை</title>
		<link>https://oruvan.com/seven-years-of-minor-error-in-human-rights-commission-report-on-violence-against-muslims-in-the-hills/</link>
		
		<dc:creator><![CDATA[Nishanthan Subramaniyam]]></dc:creator>
		<pubDate>Wed, 05 Mar 2025 05:00:50 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[சிறப்பு செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=13228</guid>

					<description><![CDATA[<p>கண்டி மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வாழும் முஸ்லிம்களை குறிவைத்து, அரச அனுசரணையுடன் சிங்கள பௌத்த குண்டர்களால்  ஏழு வருடங்களுக்கு முன்னர் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள் குறித்த விசாரணை அறிக்கையை வெளியிடுவதில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தொடர்ந்தும் தாமதப்படுத்துகிறது. இது தொடர்பான விசாரணை அறிக்கை அடுத்த சில மாதங்களில் வெளியிடப்படும் என கடந்த வருடத்தில் மாத்திரம் இரண்டு தடவைகள் ஆணைக்குழுவின் உயர் அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களிடமும் ஊடகங்களிடமும் தெரிவித்திருந்தனர். விசாரணை அறிக்கையில் சிறிய பிழை மலையக முஸ்லிம்களுக்கு எதிராக [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/seven-years-of-minor-error-in-human-rights-commission-report-on-violence-against-muslims-in-the-hills/">மலையகத்தில் நடந்த முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை &#8211; அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>கண்டி மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் வாழும் முஸ்லிம்களை குறிவைத்து, அரச அனுசரணையுடன் சிங்கள பௌத்த குண்டர்களால்  ஏழு வருடங்களுக்கு முன்னர் கட்டவிழ்த்துவிடப்பட்ட வன்முறைகள் குறித்த விசாரணை அறிக்கையை வெளியிடுவதில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தொடர்ந்தும் தாமதப்படுத்துகிறது.</p>
<p>இது தொடர்பான விசாரணை அறிக்கை அடுத்த சில மாதங்களில் வெளியிடப்படும் என கடந்த வருடத்தில் மாத்திரம் இரண்டு தடவைகள் ஆணைக்குழுவின் உயர் அதிகாரிகள் பாதிக்கப்பட்டவர்களிடமும் ஊடகங்களிடமும் தெரிவித்திருந்தனர்.</p>
<p><b>விசாரணை அறிக்கையில் சிறிய பிழை<br />
</b><br />
மலையக முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைகளில் அரச அனுசரணையுடன் கூடிய அரசியல் கும்பல்களும் பாதுகாப்புப் படையினரும் ஈடுபட்டதாக நம்பத்தகுந்த தகவல்களின் அடிப்படையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் வெளியான &#8220;திகன முஸ்லிம்களுக்கு எதிரான கலவரம் நடந்து 6 வருடங்கள்: நீதி எங்கே?&#8221; என்ற ஆவணப்படத்தின் பின்னர், இது தொடர்பான அறிக்கை அடுத்த சில மாதங்களுக்குள் பகிரங்கப்படுத்தப்படும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் கலாநிதி கெஹான் குணதிலக்க ஊடகங்களுக்குத் தெரிவித்தார். பின்னர் டிசம்பரில், அந்த பகுதியின் ஊடகவியலாளர் எம்.ஐ.எம்.முசாதிக்கின் எழுத்துப்பூர்வ கேள்விக்கு பதிலளித்த ஆணைக்குழு அறிக்கை ஜனவரி 2025 இல் பகிரங்கப்படுத்தப்படும் எனக் கூறியது.</p>
<p><b>ஏழு வருடங்களாக மறைக்கப்படும் ஆதாரம்<br />
</b><br />
கண்டி மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் முஸ்லிம்களுக்கு எதிராக கட்டவிழ்த்து விடப்பட்ட வன்முறைச் சம்பவங்களை அடுத்து, அந்த ஆணைக்குழுவின் தலைவியாக இருந்த கலாநிதி தீபிகா உடகம தலைமையிலான உயர்மட்ட விசாரணைக் குழு, அப்பகுதி முஸ்லிம்கள் உட்பட பல்வேறு தரப்பினரையும் கண்டி அஞ்சல் அலுவலக வளாக கேட்போர் கூடத்திற்கு வரவழைத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயம் கிடைக்கும் எனக் கூறி சாட்சியங்களை பதிவு செய்திருந்தது.</p>
<p>அப்பகுதியில் உள்ள முஸ்லிம் மக்களை உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் தாக்கிய கும்பல், அவர்களின் வீடுகள் மற்றும் வணிக இடங்களை எரித்து சொத்துக்களை அழித்த கும்பல் தொடர்பாக எழுத்து, வாய்மொழி மற்றும் புகைப்படம் மற்றும் காணொளி ஆதாரங்கள் விசாரணையின் போது ஆணைக்குழுவில் சமர்ப்பிக்கப்பட்டதாக பாதிக்கப்பட்ட முஸ்லிம்கள் உட்பட இடைத்தரகர்கள் வலியுறுத்துகின்றனர். கலாநிதி தீபிகா உடகம பதவி வகித்த காலப்பகுதியில் மாத்திரம் விசாரணை அறிக்கை &#8220;விரைவில்&#8221; வெளியிடப்படும் என ஆணைக்குழு ஊடகங்களுக்கு பல சந்தர்ப்பங்களில் தெரிவித்திருந்தது.</p>
<p>பேராசிரியர் உடகமவிற்கு பின்னர் ஓய்வுபெற்ற நீதிபதி ரோஹினி மாரசிங்க ஆணைக்குழுவின் தலைவராக பதவியேற்றதுடன், தனது இரண்டு வருட பதவிக் காலத்திலும் உரிய விசாரணை அறிக்கையை பகிரங்கப்படுத்துவதில் ஏற்பட்ட தாமதம் குறித்து குறிப்பிட்ட விளக்கத்தை வழங்கவில்லை. உச்ச நீதிமன்றத்தின் தற்போதைய தலைவரான ஓய்வுபெற்ற நீதிபதி எல்.டி.பி.தெஹிதெனிய தலைமையில் அறிக்கை வெளியிடப்படுமென ஆணைக்குழுவின் சிரேஷ்ட அதிகாரிகள் தெரிவித்திருந்த போதிலும் இதுவரையில் அது நிறைவேற்றப்படவில்லை.</p>
<p><b>முஸ்லிம்களுக்கு இல்லாத உரிமைகள் ஏனையவர்களுக்கு<br />
</b><br />
கண்டியில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பான மனித உரிமைகள் ஆணைக்குழுவின் விசாரணை அறிக்கை ஏழு வருடங்களாக வெளியிடப்படாமைக்கு ஆணைக்குழுவின் உயர் அதிகாரிகள் பல்வேறு காரணங்களைக் கூறியுள்ளனர். தொகுப்பு பிழைகளை சரிசெய்தல், மும்மொழிகளில் ஒருமுறை வெளியிடும் திட்டம், உரிய அறிக்கையை அவ்வப்போது தலைவர்கள் மற்றும் ஆணையர்கள் மீள்பரிசீலனை செய்தல் ஆகியவை அதில் முதன்மையானவை. ஆனால் கடந்த ஏழு ஆண்டுகளாக மனித உரிமைகள் ஆணைக்குழு பல்வேறு வகையான பல அறிக்கைகளை வெளியிட்டுள்ளது. அவற்றில் பெரும்பாலானவை வழக்கு ஆய்வுகள் மற்றும் கள விசாரணைகளை அடிப்படையாகக் கொண்டவை. ஆனால் அந்த அறிக்கைகள் எதனையும் பாதிக்காத பல தொழிநுட்ப, நிர்வாகச் சிக்கல்கள் மலையக முஸ்லிம்கள் மீதான வன்முறைத் தாக்குதல் தொடர்பான விசாரணை அறிக்கையை மாத்திரம் பாதித்தது என்பது ஆச்சரியமான நிலையாகும்.</p>
<p><b>பாதுகாப்புப் படையினரையும், உயர் அரசியல் தொடர்புகளையும் பாதுகாப்பதற்காக இந்த அறிக்கை மறைக்கப்படுகிறதா?<br />
</b><br />
2018 மார்ச்சில் பல நாட்களாக இடம்பெற்ற வன்முறைகள் அரசியல் அனுசரணை பெற்ற குண்டர்கள், மஹசோன் படையணி போன்ற சிங்கள இனவாத அமைப்புக்கள் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையின் பாதுகாப்பில் வெளிநாட்டில் இருந்து வரவழைக்கப்பட்ட ஒழுங்கமைக்கப்பட்ட நபர்களினால் மேற்கொள்ளப்பட்டது என்பது பின்னர் நாடாளுமன்றத்தில் ஆதாரங்களுடன் வெளிப்படுத்தப்பட்டது. வன்முறையைக் கட்டுப்படுத்துவதில் பொலிஸாரும் பாதுகாப்புப் படையினரும் முக்கியப் பங்காற்றவில்லை எனவும் நாடாளுமன்றக் குழு அறிக்கைகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.</p>
<p>முன்னாள் சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் 2019 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட &#8220;இலங்கையில் தேசிய மற்றும் மத சகவாழ்வை உறுதி செய்வதற்காக&#8221; என்ற நாடாளுமன்ற விசேட கூட்டறிக்கை அறிக்கை முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகள் பற்றி பின்வருமாறு கூறுகிறது.</p>
<p>“களுத்துறை, காலி, அம்பாறை மற்றும் கண்டி மாவட்டங்களில் அண்மைக்காலமாக இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில், பொலிஸ் திணைக்களம் சட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் மன்னிக்க முடியாத மந்தகதியை கடைப்பிடித்துள்ளதுடன், வன்முறைச் செயல்களில் ஈடுபட்டவர்களை சட்டமா அதிபர் திணைக்களம் தண்டிக்கத் தவறியுள்ளது.”</p>
<p><b>தாக்குதல்களுக்கு தலைமை தாங்கியவர்களுக்கு உயர் பதவிகள்<br />
</b><br />
அப்போது மத்திய மாகாணத்திற்குப் பொறுப்பாக இருந்த சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் எஸ்.எம். விக்ரமசிங்க, வன்முறைச் செயல்கள் மற்றும் தாக்குதல் நடத்துபவர்களைப் பாதுகாப்பது பற்றி முன்னரே அறிந்திருந்ததாக குற்றம் சாட்டப்பட்டார். பின்னர் பொதுமக்களின் முறைப்பாடுகள் மற்றும் குறைகளை விசாரிப்பதற்கான ஒம்புட்ஸ்மனாக நியமிக்கப்பட்டார். அதன் பின்னர், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச அவரை மார்ச் 31, 2022 மற்றும் மே 15 க்கு இடையில் நாட்டில் இடம்பெற்ற “தீ வைப்பு, கொள்ளை மற்றும் கொலை உட்பட அனைத்து வகையான சொத்து சேதங்கள் மற்றும் உயிர் சேதங்களை விசாரிக்கும் ஜனாதிபதி ஆணைக்குழுவின்&#8221; கண்டியில் முஸ்லிம்களுக்கு எதிரான தாக்குதலுக்கு தலைமை தாங்கியவர்களும், பௌத்த பிக்குகளும் இந்த தாக்குதலுக்கும் டி.ஐ.ஜிக்கும் தொடர்பு இருப்பதாக பகிரங்கமாக கூறி வந்த நிலையில் இந்த நியமனம் வழங்கப்பட்டது.</p>
<p>The post <a href="https://oruvan.com/seven-years-of-minor-error-in-human-rights-commission-report-on-violence-against-muslims-in-the-hills/">மலையகத்தில் நடந்த முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை &#8211; அறிக்கையில் ஏழு ஆண்டுகளாக சிறிய பிழை</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
		<item>
		<title>மியன்மார் அகதிகளை சந்திக்க அனுமதி கோரும் மனித உரிமைகள் ஆணைக்குழு &#8211; ஜனாதிபதிக்கு கடிதம்</title>
		<link>https://oruvan.com/human-rights-commission-requests-permission-to-meet-myanmar-refugees-letter-to-president/</link>
		
		<dc:creator><![CDATA[Mano Shangar]]></dc:creator>
		<pubDate>Sun, 29 Dec 2024 08:34:13 +0000</pubDate>
				<category><![CDATA[இலங்கை]]></category>
		<category><![CDATA[அகதிகள்]]></category>
		<category><![CDATA[அநுரகுமார]]></category>
		<category><![CDATA[இலங்கை செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை தமிழ் செய்திகள்]]></category>
		<category><![CDATA[இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு]]></category>
		<category><![CDATA[இலங்கை ஜனாதிபதி]]></category>
		<category><![CDATA[ஒருவன் செய்திகள்]]></category>
		<category><![CDATA[தமிழ் செய்திகள்]]></category>
		<category><![CDATA[புகலிட கோரிக்கையாளர்கள்]]></category>
		<category><![CDATA[மியான்மர்]]></category>
		<category><![CDATA[மியான்மர் அகதிகள்]]></category>
		<category><![CDATA[முல்லைத்தீவு]]></category>
		<category><![CDATA[ஜனாதிபதி அநுர]]></category>
		<guid isPermaLink="false">https://oruvan.com/?p=4454</guid>

					<description><![CDATA[<p>நாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மியன்மார் அகதிகளை சந்திக்க அனுமதி வழங்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது. மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் நீதிபதி எல். டி.பி.தெஹிதெனிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் எழுத்து மூலம் இது தொடர்பான கோரிக்கையை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அண்மையில் மியான்மரில் இருந்து படகில் வந்த 115 அகதிகள் முல்லைத்தீவு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டனர். கப்பலில் இருந்த 12 பணியாளர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர், மீதமுள்ளவர்கள் முல்லைத்தீவு [&#8230;]</p>
<p>The post <a href="https://oruvan.com/human-rights-commission-requests-permission-to-meet-myanmar-refugees-letter-to-president/">மியன்மார் அகதிகளை சந்திக்க அனுமதி கோரும் மனித உரிமைகள் ஆணைக்குழு &#8211; ஜனாதிபதிக்கு கடிதம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></description>
										<content:encoded><![CDATA[<p>நாட்டில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மியன்மார் அகதிகளை சந்திக்க அனுமதி வழங்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுத்துள்ளது.</p>
<p>மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவர் நீதிபதி எல். டி.பி.தெஹிதெனிய ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் எழுத்து மூலம் இது தொடர்பான கோரிக்கையை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.</p>
<p>அண்மையில் மியான்மரில் இருந்து படகில் வந்த 115 அகதிகள் முல்லைத்தீவு கடற்பரப்பில் இலங்கை கடற்படையினரால் மீட்கப்பட்டனர்.</p>
<p>கப்பலில் இருந்த 12 பணியாளர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர், மீதமுள்ளவர்கள் முல்லைத்தீவு விமானப்படை தளத்தில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.</p>
<p>இந்த அகதிகளிடம் விசாரணை நடத்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் அதிகாரிகள் குழு கடந்த 26ஆம் திகதி முல்லைத்தீவு விமானப்படை முகாமுக்கு சென்றிருந்தனர்.</p>
<p>எவ்வாறாயினும், குடிவரவு கட்டுப்பாட்டு நாயகத்தின் அனுமதியின்றி அகதிகளை பார்வையிட அனுமதி வழங்க முடியாது என விமானப்படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.</p>
<p>அகதிகளை சந்திக்க எவருக்கும் அனுமதி வழங்கக்கூடாது என குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டு நாயகம் உத்தரவிட்டுள்ள நிலையில், இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவும் குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டு நாயகத்திடம் கோரிக்கை விடுத்திருந்தது.</p>
<p>ஆனால் குறித்த கோரிக்கைக்கு பதிலளித்த குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம், புகலிடக் கோரிக்கையாளர்களை அணுகுவதற்கு அனுமதி வழங்காமல் இருப்பது பொது பாதுகாப்பு மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சரே என தெரிவித்துள்ளது.</p>
<p>குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் உதவிக் கட்டுப்பாட்டாளர் ஒருவரினால் வாய்மொழியாக இது தொடர்பான அறிவித்தல் விடுக்கப்பட்டதாகவும், குடிவரவு குடியகழ்வுக் கட்டுப்பாட்டாளர் நாயகம் இது தொடர்பில் எழுத்துப்பூர்வமாகத் தெரிவிக்கவில்லை எனவும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது.</p>
<p>நீதிமன்ற உத்தரவின் மூலமோ அல்லது வேறு வகையிலோ தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் நலன்களை தொடர்ந்தும் பரிசோதிக்கும் அதிகாரம் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிற்கு வழங்கப்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.</p>
<p>முகாமில் உள்ள அகதிகளில் 40இற்கும் அதிகமானோர் சிறுவர்கள் எனவும் அவர்களில் பெரும்பாலானோர் கைக்குழந்தைகள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ள நிலையில் இது தொடர்பில் ஆராய வேண்டிய பொறுப்பு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் பொறுப்பாகும் என கடிதத்தில் சுட்டிக்காட்டுகின்றனர்.</p>
<p>எனவே, ஆணைக்குழுவின் அதிகாரிகள் தடையின்றி உரிய புகலிட கோரிக்கையாளர்களை சந்திப்பதற்கு வசதியாக தகுந்த உத்தரவுகளை பிறப்பிக்குமாறு முப்படைகளின் தளபதி மற்றும் பாதுகாப்பு அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதியிடம் கோரிக்கை விடுப்பதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தனது கடிதத்தில் தெரிவித்துள்ளது.</p>
<p>The post <a href="https://oruvan.com/human-rights-commission-requests-permission-to-meet-myanmar-refugees-letter-to-president/">மியன்மார் அகதிகளை சந்திக்க அனுமதி கோரும் மனித உரிமைகள் ஆணைக்குழு &#8211; ஜனாதிபதிக்கு கடிதம்</a> appeared first on <a href="https://oruvan.com">Oruvan.com</a>.</p>
]]></content:encoded>
					
		
		
			</item>
	</channel>
</rss>
